Saturday, March 12, 2016

Convicts did not mean to kill anyone'


TIMES OF INDIA
Three AIADMK men found guilty of burning to death three college girls in Dharmapuri on February 2, 2000 have escaped the noose with the Supreme Court reviewing its own order, and commuting their death penalty into imprisonment for life.

Moments after AIADMK supremo J Jayalalithaa was found guilty in the Pleasant Stay Hotel case and sentenced to one year imprisonment on February 2, 2000, a mob torched at Ilakkiyampatti a Tamil Nadu Agricultural University bus carrying 70 students returning from a field trip. Kokilavani of Namakkal, Hemalatha of Chennai and K Gayathri of Viruddhachalam were burned to death.


On February 15, 2007, a sessions court in Salem sentenced three AIAADMK men -Nedunchezhian, Muniyappan and Ravindran --to death. It also ordered 25 others to undergo seven years of im prisonment. While two others were acquitted of all charges, one accused had died during the pendency of the case. Madras high court up held the death penalty on De cember 6, 2007, and it was con firmed by the Supreme Court on August 30, 2010.


A renewed bid to get their sentences commuted was made when review petitions were filed on their behalf in the Supreme Court. On Fri day , a three judge bench com prising Justice Ranjan Gogoi Justice Arun Mishra and Jus tice Prafulla C Pant commut ed the death sentence into life term by reviewing its order delivered about five and half years ago. Last week witnessed argu ments by top senior counsel, who sought to invoke the doctrine of `diminished responsibility' saying the convicts, who were `victims of mob psychology , had no personal animosity against the victims. Counsel argued that the convicts did not mean to kill anyone but were actually looking to destroy government property .

MOB VIOLENCE - Bus burning case: Victims' kin upset with court verdict

TIMES OF INDIA

NAAKKAL/SALEM: The Supreme Court judgement commuting the death sentence of three convicts, who had torched a bus and burnt to death three college students 16 years ago, into life imprisonment on Friday, has left the kin of the deceased disappointed.

The apex court has said that the incident was triggered by mob frenzy and was not premeditated. "The same Supreme Court said in its previous judgement that the offence is extremely brutal, diabolical, grotesque and cruel. But now the [threejudge] bench has stated that the convicts did not know the victims and their crime did not deserve death penalty. This is purely ridiculous," said NP Veerasamy, father of Kokilavani, one of the deceased. "The judges will understand my pain only if they have lost a child in a riot," he added. After discussing the matter with his advocates, he plans to approach the Supreme Court at the earliest.

Poomozhi, president of Tamil Nadu Makkal Urimai Katchi, said the verdict would provide new opportunities to criminals.

"The Supreme Court said in its judgement that the convicts had no personal animosity towards their victims. Advocates may now try to commute the death penalty into a reduced sentence, based on this reasoning," he said.

On February 2, 2000, a TNAU bus carrying 44 students and 2 teachers was blocked and torched by a mob unhappy with the special court verdict in the Pleasant Stay case.Three students, Kokilavani, Gayathri and Hemalatha died in the incident.

Friday, March 11, 2016

எம்ஜிஆர் 100 | 19 - ஸ்ரீதருக்குச் செய்த உதவி!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
THE HINDU TAMIL
M.G.R. நடிப்பில் நீங்கள் ஏன் படம் எடுக்கக் கூடாது?.. இயக்குநர் ஸ்ரீதரிடம் அவரது நெருங்கிய நண்பரும் இந்தி நடிகருமான ராஜேந்திர குமார் கேட்ட கேள்வி இது. தமிழ் திரையுலகில் தனது வித்தியாசமான படங்களால் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஸ்ரீதர். தனது சொந்த நிறுவனமான சித்ராலயா பேனரில் திரைப்படங்களை தயாரித்தும் வந்தார். அவர் எடுத்த சில படங்கள் எதிர்பார்த்த அளவு போகாததால் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு ஆளானார். அந்த நேரத்தில் இந்தி நடிகர் ராஜேந்திர குமார், ஸ்ரீதருக்கு கொடுத்த ஆலோசனைதான் ஆரம்பத்தில் உள்ள கேள்வி.

ஆனால் ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆரிடம் செல்ல தயக்கம். காரணம், ஏற்கெனவே எம்.ஜி.ஆர் நடிக்க ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற பெயரில் படப்பிடிப்பை தொடங்கினார். கருப்பு வெள்ளை படமான அதில், சில காட்சிகள் படமாக்கப்பட்டு ஸ்டில்களும் வெளியாயின. அந்த நேரத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை யும் வண்ணப்படமாக தயாரிப்பதாக இருந்தார். விளம்பரமும் வெளிவந்தது. ‘புதுமுக நடிகர்களை போட்டு கலரில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை எடுக்கும் ஸ்ரீதர், உங்களை வைத்து கருப்பு வெள்ளையில் படம் எடுக்கிறாரே?’என்று எம்.ஜி.ஆரிடம் சிலர் திரித்துக் கூறினர். படமும் வளராமல் நின்று போனது. (பின்னர் இதே பெயரில் ஜெய்சங்கர் நடித்த படம் ஒன்று வெளியானது) அதுபற்றி எம்.ஜி.ஆரிடம் விளக்கம் தராதது தனது தவறுதான் என்று பின்னர் ஸ்ரீதர் வருந்தினார்.

‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் தொகையாக ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு ரூ.25,000 அளித்தார் ஸ்ரீதர். படம் நின்று விட்ட நிலையில், சில காட்சிகள் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட தொகையாக நினைத்து அந்த பணத்தை ஸ்ரீதரும் கேட்கவில்லை.

ஏற்கெனவே, எம்.ஜி.ஆருடன் இணைந்து செய்வதாக இருந்த படம் நின்று போன நிலையில், மீண்டும் அவரை அணுகுவதா? என்று யோசித் தார். இருந்தாலும் நண்பர் ராஜேந்திரகுமாரின் ஆலோசனையை ஏற்றார். இயக்குநர் பி.வாசுவின் தந்தையும், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஒப்பனையாளருமான பீதாம்பரம் மூலம் எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆரும் மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் ஸ்ரீதர் படத்தில் நடிக்க சம்மதித்தார். எம்.ஜி.ஆரின் உயர்ந்த பண்புக்கும் எப்படி எல்லாம் சிந்தித்து மற்றவர்களை கவுரவப்படுத்துகிறார் என்பதற்கும் ஒரு உதாரணம்... அப்போது ஸ்ரீதருக்கு ஏற்பட்ட நெருக்கடியை எம்.ஜி.ஆர். அறிந்தே இருந்தார். ஸ்ரீதராகத்தான் விரும்பி தனது படத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்துள்ளார். எம்.ஜி.ஆர். நினைத்தால் ‘ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கலாம்.

ஆனால், ஒப்பனையாளர் பீதாம்பரத்திடம் எம்.ஜி.ஆர். கூறியதுதான் அவரது உயர்ந்த உள்ளத்தை வெளிப்படுத்தும். ‘‘ஸ்ரீதர் பெரிய இயக்குநர். திடீரென்று என்னை வந்து சந்தித்து பேசினால், நெருக்கடியில் இருந்து மீள எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் போய் பார்த்தார் என்று செய்திகள் வெளியாகும். நான் போய் ஸ்ரீதரை பார்ப்பதும் சரியாக இருக்காது. அதனால், இருவருக்கும் பொதுவாக நம்பியார் வீட்டில் மதிய உணவுக்கு ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள். அங்கு சந்தித்து பேசி புதிய படம் பற்றி முடிவு செய்யலாம்’’ என்று பீதாம்பரம் மூலம் சொல்லி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.

இதைக் கேட்டு சிலிர்த்துப் போனார் ஸ்ரீதர். இருந்தாலும் எம்.ஜி.ஆர். வீட்டில் நான் அவரை சந்திப்பதுதான் முறை என்று கூறி, மறுநாளே ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் சந்தித்துப் பேசினார்.

வழக்கம் போல எம்.ஜி.ஆரின் உணவு உபசரிப்புக்கு பிறகு தன் நிலைமையை சொல்லி நீங்கள் எனக்கு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அதற்கு சம்மதம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.

ஏற்கனவே கிடைத்த அனுபவத்தால் எம்.ஜி.ஆரிடம் மனம் திறந்து பேசினார் ஸ்ரீதர். ‘‘என் மீது பொறாமை கொண்டவர்கள் நமக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக என்னைப் பற்றி உங்களிடம் என்ன சொன்னாலும் நீங்கள் நம்ப வேண்டாம். என்னிடமே நேரடியாக விளக்கம் கேளுங்கள்’’ என்று எம்.ஜி.ஆரிடம் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அவரது நிலைமையை உணர்ந்து மற்ற படங்களை விட ஸ்ரீதர் படத்துக்கு முன்னுரிமை அளித்து 3 மாதங்களில் நடித்துக் கொடுப்பதாக உறுதியளித்த எம்.ஜி.ஆர்., ஸ்ரீதரே எதிர்பார்க்காத ஒன்றை செய்தார்.

அவ்வாறு, தான் உறுதி அளித்ததை கடிதமாக எழுதிக் கொடுத்து கையெழுத்து போட்டு ஸ்ரீதரிடம் கொடுத்தார். ‘‘இது நீங்கள் பைனான்ஸ் பெறுவதற்கு உதவும்’’ என்றார். எந்தக் கோணங்களில் எல்லாம் சிந்தித்து செயல்படுகிறார் என்று ஸ்ரீதர் வியந்துபோனார். ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆர். கடிதம் கொடுத்திருப்பதை அறிந்து, கிரஸென்ட் மூவிஸ் நிறுவனத்தார் அவரை சந்தித்து படத்துக்கு பைனான்ஸ் செய்ததுடன், பல ஏரியாக்களின் விநியோக உரிமையையும் வாங்கிக் கொண்டு அட்வான்ஸ் தொகையை அளித்தனர். இப்படி உருவான படம்தான் எம்.ஜி.ஆர்.-ஸ்ரீதர் கூட்டணியில் உருவாகி வெள்ளி விழா கொண்டாடிய ‘உரிமைக்குரல்’ திரைப்படம்.

அந்தப் படத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆருக்கு சம்பளமாக குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன்வந்தார் ஸ்ரீதர். அப்போது ஸ்ரீதருக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி. ஏற்கனவே ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக தனக்கு அட்வான்ஸாக கொடுத்த ரூ.25,000-த்தை எம்.ஜி.ஆர். கழித்துக் கொள்ளச் சொன்னார். ஸ்ரீதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

அதுதான் எம்.ஜி.ஆர்.

- தொடரும்...

படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்

தெலுங்கில் நாகேஸ்வர ராவ் நடித்த ‘தசரா புல்லோடு’ படம்தான் சிறிய மாற்றங்களுடன் எம்.ஜி.ஆர். நடிக்க ‘உரிமைக்குரல்’ ஆனது. படத்தில் ஆந்திர பாணியில் பஞ்சகச்சம் போல எம்.ஜி.ஆர். அணிந்திருந்த வித்தியாசமான வேட்டி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

‘நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு...’ பாடலுக்கு எம்.ஜி.ஆர். அட்டகாசமாக ஸ்டெப் போட்டு ஆடியபோது, தியேட்டரில் ரசிகர்களும் உற்சாகமாக ஆடினர். 12 திரையரங்குகளில் படம் 100 நாட்கள் ஓடியது. மதுரை, நெல்லை ஆகிய ஊர்களில் வெள்ளிவிழா கொண்டாடிய ‘உரிமைக்குரல்’, 1974-ம் ஆண்டின் அதிக வசூல் பெற்ற மகத்தான வெற்றிப்படம்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக சிறையில் இருக்கும் கைதிகள் ஓட்டு போட ஏற்பாடு: ராஜேஷ் லக்கானி

Logo

சென்னை, மார்ச். 11–
தமிழக சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.
இதற்காக வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் கமிஷன் சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெசப்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் இன்று மாணவ – மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி பேசியதாவது:–
தேர்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை. தமிழக சட்டசபைக்கு மே 16–ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
அன்றைய தினம் முதல் பணியாக நீங்கள் ஓட்டுப்போட செல்ல வேண்டும். அதன்பிறகு மற்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய தேர்தல் கமிஷன் முழு முயற்சி செய்து வருகிறது.
இந்த தேர்தலில் முதல் முறையாக சிறையில் இருக்கும் கைதிகள் ஓட்டுப்போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் தபால் மூலம் தங்கள் ஓட்டை பதிவு செய்யலாம். தமிழ்நாடு முழுவதும் 13 ஆயிரம் சிறைக்கைதிகள் உள்ளனர்.
அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக அரசு ஊழியர்கள் செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க. சார்பில் தேர்தல் தொடர்பான புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

பழனியில் 10-ஆம் வகுப்பு படித்துவிட்டு டாக்டரான போலி ஆசாமிகள் கைது

மக்களை நோய்களில் இருந்து காப்பாற்றும் மருத்துவ துறையில் நுழைந்த இரு போலி மருத்துவர்கள் பழனியில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு டாக்டர் என ஏமாற்றி வந்தவர்கள்.


 
 
பழனி, காவலர்பட்டியில் 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு, கோவையில் ஒரு தனியார் மெடிக்கல் அசோசியேசனில் டிப்ளமோ மட்டும் முடித்த செந்தில் என்பவர் தான் டாக்டர் என மக்களை ஏமாற்றி வந்துள்ளார்.
 
ஊசி போடுவது, வலி நிவாரண மாத்திரைகள் வழங்குவது மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட மாத்திரைகளையும் பரிந்துரை செய்து வந்துள்ளார்.
 
இதே போல் பழனி, நரிக்கல்பட்டியில் சுருளியாண்டி என்பவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வாளராக பணி புரிந்து வருபவர். ஆனால் இவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.
 
இவர்கள் மீது அதிருப்தியடைந்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஊரக நலப்பணி துறை நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து இவர்கள் மீது விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் ரவிக்கலாவுக்கு ஊரக நலப்பணிகள் துறை உத்தரவு பிறப்பித்தது.
 
இணை இயக்குனர் ரவிக்கலா நடத்திய அதிரடி சோதனையில் 2 பேரும் போலி டாக்டர்கள் என தெரியவர அவர்கள் கைது செய்யப்பட்ட்டு, அவர்களிடம் இருந்த கல்விச் சான்றுகள், மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

தேமுதிகவின் தனித்து போட்டி முடிவு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து.

தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போடியிடும் என நேற்று நடைபெற்ற அக்கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் விஜயகாந்த் தெரிவித்தார். விஜயகாந்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளது.


 
 
பல்வேறு கட்சிகள் விஜயகாந்த் தன் பக்கம் வர வேண்டும் என கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது. நீண்டு நெடும் போராட்டத்துக்கு பின் விஜயகாந்த் நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
வைகோ: தேமுதிக தனித்து போட்டியிடும் என்று மகளிர் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்துக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழக அரசியலில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சியும் ஆட்சிக்கு வர கூடாது என்ற தேமுதிகவின் நிலைப்பாடு தமிழக அரசியலில் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும் என்றார் மதிமுக பொதுச்செயலாளார் வைகோ.
 
அன்புமணி: தேமுதிக இதற்குமுன் பலமுறை மக்களுடன் தான் கூட்டணி, வேறு யாருடனும் கிடையாது என்று கூறி பின்னர் கூட்டணி வைத்தனர். கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாநாட்டில் தனியாக போட்டியிடுவதாக கூறினார்.
 
ஆனால் பின்னர் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்தார் விஜயகாந்த். தனித்து போட்டியிடுவதாக தற்போது கூறிய இந்த முடிவில் விஜயகாந்த் உறுதியாக இருப்பாரா என்பது தான் எனது கேள்வி என்று தெரிவித்துள்ளார் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்.
 
தமிழிசை: தனித்து போட்டியிடுவோம் என்று விஜயகாந்த் அறிவித்தது அவர்களின் விருப்பம். அதே சமயத்தில் ஒரு விதத்தில் வரவேற்கத்தக்கது. ஏனென்றால் அவர்கள் ஊழல் கட்சிகளின் சாயல் இல்லாமல் நிற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
 
எங்கள் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்திருந்தால் மகிழ்ந்து இருப்போம். அதே வேளையில் திமுக கூட்டணியில் இணைவார்கள் என்ற யூகங்களை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டு ஊழல் கூட்டணிகளில் சேராமல் இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி என்றார்.
 
தனித்தனியாக நின்று அவரவர் பலங்களை நிரூபிப்பது ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலையே. கூட்டணி அமைக்க வேண்டும் என்று நினைத்தது வாக்குகள் பிரிந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, மேலும் இந்த தேர்தல் பல சவால்களை சந்திக்க இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை.
 
ஜி.கே. வாசன்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் நலன் சார்ந்து, தன் இயக்கம் நலன் சார்ந்து தனித்து போட்டி என்ற இறுதி முடிவை சட்டமன்ற தேர்தலுக்காக அறிவித்து இருக்கிறார் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

விஜயகாந்த் தனித்து களமிறங்க என்ன காரணம்: பரபரப்பு பின்னணி தகவல்கள்

வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தனித்து நின்று தேர்தலை சந்திக்கும் என நேற்று அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


 
 
திமுக, பாஜக, மக்கள் நல கூட்டணி என பல கட்சிகள் விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என தவியாய் தவித்து வந்தன. விஜயகாந்த், திமுக அல்லது பாஜக கூட்டணிக்கு கட்டாயம் போவார் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக திமுக பக்கம் தான் போவார் என அதிகம் பேசப்பட்டது.
 
ஆனால் அவர் யாருடனும் போகாமல் தனித்து களமிறங்குவோம் என விஜயகாந்த் அறிவித்தது திமுக தரப்பை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் ஏன் தனித்து நின்று தேர்தலை சந்திப்போம் என அறிவித்தார் என பல தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் வலம் வருகின்றன.
 
தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நடத்தப்பட்ட நேர்கணலின் போது அவர்களிடம் யாருடன் கூட்டணி வைக்கலாம் என கேட்கப்பட்டதாம். அதில் ஒருசிலர் திமுக உடன் கூட்டணி வைக்கலாம் என்றனர். பலர் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என கூறியுள்ளனர்.
 
திமுக, தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தேமுதிக சார்பில் முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட்டது, துணை முதலமைச்சர் பதவி, ஆட்சியில் பங்கு, முக்கிய சில இலாக்காக்கள் போன்றவை. ஆனால் திமுக தரப்பு எதற்கும் இறங்கி வரவில்லை. தேமுதிக தரப்பில் முதலில் கேட்கப்பட்ட 104 தொகுதிகளில் 55 தொகுதிக்குதான் திமுக சம்மதித்தது. இது தேமுதிக தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தேமுதிகவின் முக்கியமான எந்த நிபந்தனைக்குமே திமுக தரப்பு இறங்கி வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் கடந்த தேர்தலில் வடிவேலுவை களமிறக்கி விஜயகாந்தை கிண்டல் செய்ததையும், அதனை சன் தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப ஒளிபரப்பி விஜயகாந்தை அவமான படுத்தியதை பிரேமலதா இன்னமும் மறக்கவில்லையாம்.
 
கடந்த காலங்களில் விஜயகாந்துக்கு எதிராக திமுக செய்தவற்றை தேமுதிக தரப்பு இன்னமும் மறக்கவில்லை என கூறப்படுகிறது. திமுக உடன் கூட்டணி அமைக்க முதல் தடையாக இருந்தது பிரேமலதா தானாம். அவர் தான் திமுக கூட்டணியை தவிர்க்க பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
ஆனால் பாஜக தரப்பிடமும் பல கோரிக்கைகளை வைத்துள்ளது தேமுதிக தரப்பு. 150 சீட்டுகள், ராஜ்யசபா எம்.பி., பிரேமலதாவுக்கு பொறுப்பு, முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்க வேண்டும் போன்றவை அந்த கோரிக்கைகள். ஆனால் பாஜக தரப்பு இதனை ஏற்கவில்லையாம்.
 
மேலும் பாஜக உடன் கூட்டணி வைத்து அது தோல்வியில் முடிந்தால் கட்சி காணாமல் போய்விடும். திமுகவை எந்த காலத்திலும் நம்ப முடியாது என்பது பிரேமலதாவின் கருத்து. எனவே தான் தனித்து போட்டியிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்ற அதிரடி முடிவை தேமுதிக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/the-reason-behind-of-the-dmdk-election-alliance-issue-116031100020_1.html

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...