Wednesday, March 30, 2016

எம்ஜிஆர் 100 | 31 - சந்திரபாபு நட்பு

‘புதுமைப்பித்தன்’ படத்தில் எம்.ஜி.ஆர். , சந்திரபாபு.


தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


M.G.R. எல்லாருக்கும் உதவும் நல்ல உள்ளம் கொண்டவர். என்றாலும், சில நேரங்களில் சிலரால் அவர் தவறாக புரிந்து கொள்ளப்பட்டார். தன்னைப் பற்றி வரும் தவறான செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் அவர் விளக்கம் அளிக்க மாட்டார். மக்கள் தன்னை தவறாக நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை மட்டுமல்ல; விளக்கம் அளிப்பதன் மூலம் யாருடைய பெயரும் கெடக் கூடாது என்ற எண்ணம் எம்.ஜி.ஆருக்கு.

நடிகர் சந்திரபாபு பன்முகத் திறமை வாய்ந்த கலைஞர். நடிப்பு, நடனம், இசை என்று பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். எப்போதும் வெளிநாட்டவர்போல கோட்டும் சூட்டும் அணிந்து மிடுக்காகக் காட்சி தருவார். ‘குலேபகாவலி’ படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் நட்பு மலர்ந்தது. படப்பிடிப்பில் ஒருநாள் சந்திரபாபுவின் கைகளைப் பற்றிக் கொண்டு ‘‘இனி நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர்’’ என்று நெகிழ்ந்துபோய் எம்.ஜி.ஆர். கூறினார்.

அப்போதைய எம்.ஜி.ஆரின் படங்களில் சந்திரபாபுவும் கட்டாயம் இடம் பெறுவார். தனது சொந்த தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ படத்திலும் அவருக்கு எம்.ஜி.ஆர். வாய்ப்பளித்தார். அப்படத்தில் முட்டைகளை குடித்து விட்டு, பிறகு வாயிலிருந்து கோழிக் குஞ்சை அவர் வெளியே எடுக்கும் காட்சியில் சிரிக்காதவர் இருக்க முடியுமா?

கோழிக்குஞ்சு தொண்டையை பிறாண்டும் அபாயம் இருக்கிறது என்று எம்.ஜி.ஆர். தடுத்தும் கேட்காமல் அந்தக் காட்சியில் பிடிவாதமாக அர்ப்பணிப் போடு நடித்தவர் சந்திரபாபு. படத்தின் தயாரிப்பாளருமான எம்.ஜி.ஆர் கவலை அடையும் அளவுக்கு சில நேரங்களில் அவரின் வேடிக்கை விளையாட்டுக்கள் சென்றுவிடும். ‘நாடோடி மன்னன்’ படப் பிடிப்பின்போது ஒருநாள் எம்.ஜி.ஆர். எச்சரித்தும் கேட்காமல் ஒரு முரட்டுக் குதிரை மீது ஏறி கீழே விழுந்து மயக்க மடைந்துவிட்டார். நல்லவேளையாக, பெரிய காயம் எதுவும் இல்லை.

‘‘எண்ணங்கள் ஏப்பங்கள் அல்ல, அப்படியே வெளியே விடுவதற்கு’’ என்று நயமான உவமையை பேரறிஞர் அண்ணா சொல்வது உண்டு. சந்திரபாபு தனது எண்ணங்களை அப்படியே வெளியே விடக்கூடியவர். கேலியும், கிண்டலும், அலட்சியமும் அவருடைய நகைச்சுவை போலவே உடன் பிறந்தவை. எல்லாரையும் கிண்டல் செய்யும் ஜாலி பேர்வழி. எம்.ஜி.ஆரைப் பற்றியும் அவருடைய நடிப்பைப் பற்றியும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்வார் சந்திரபாபு.

இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி தன்னால் கிண்டல் செய்யப் படும் எம்.ஜி.ஆரை வைத்தே ஜூபிளி பிக்சர்ஸ் கோவிந்தராஜூடன் சேர்ந்து ஒரு படம் எடுக்க அவர் முடிவு செய்தது சுவாரஸ்யமான முரண். படத்தின் இயக்குநரும் சந்திரபாபுதான். கதாநாயகி அவரது தோழி சாவித்திரி. படத்தின் கதையை சந்திரபாபு சொல்ல எம்.ஜி.ஆருக்கும் பிடித்துப் போனது. ‘‘எனக்கு நிறைய படங்கள் ‘கமிட்’ ஆகியிருக்கு.கொஞ்சம் பொறுமையா இருங்க. நானே நடிச்சுத் தரேன்’’ என்று எம்.ஜி.ஆர். உறுதியளித்தார். ‘‘இருந்தாலும் என் பொறுமைக்கும் எல்லை இருக்கு இல்லியா?’’ என்று சந்திரபாபு துரிதப்படுத்தினார்.



பரணி ஸ்டுடியோவில் பூஜை போடப்பட்டு இரண்டு நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. எம்.ஜி.ஆரை வைத்தே படம் எடுக்கும்போதும் அவரைப் பற்றிய விமர்சனங்களை சந்திரபாபு நிறுத்தவில்லை. அந்த நேரத்தில், எம்.ஜி.ஆருக்கும் பல படங்களின் படப்பிடிப்பு. உடனடியாக, சந்திரபாபுவுக்கு கால்ஷீட் தரமுடியாத நிலை. ஒரு படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரிடமே கேட்டார் சந்திரபாபு. கால்ஷீ்ட் விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளும் தனது அண்ணன் சக்ரபாணியை பார்க்குமாறு எம்.ஜி.ஆர். சொன்னார். பொதுவாக கலைஞர்கள் உணர்ச்சிமயமானவர்கள். சந்திரபாபு என்ற பெரும் கலைஞனைப் பற்றி கேட்கவே வேண்டாம். எம்.ஜி.ஆரின் கால்ஷீட் தொடர்பாக சக்ரபாணியுடன் பேசும்போது இருவருக்கும் இடையே வார்த்தைகள் தடித்தன. நிலைமை ரசாபாசமானது. ‘‘நான் நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கி விட்டேன். நண்பர்கள் என்னைத் தடுத்திருக்காவிட்டால் ஒன்று நாற்காலி உடைந்திருக்கும். இல்லை…’’ என்று சந்திரபாபு பதிவு செய்திருக்கிறார்.அதோடு, படமும் நின்றுபோனது.

அதன் பிறகும் சந்திரபாபுவை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த எம்.ஜி.ஆர். ‘‘என்ன பாபு சார்?’’ என்று நலம் விசாரித்தார். படத்துக்கு ‘மாடிவீட்டு ஏழை’ என்று பெயர் வைத்த ராசியோ என்னவோ, சந்திரபாபுவுக்கு கஷ்டகாலம் ஏற்பட்டது. தனது பழைய நண்பர் கஷ்டப்படுவதைப் பொறுக்காத எம்.ஜி.ஆர்., ‘பறக்கும் பாவை’, ‘கண்ணன் என் காதலன்’, தனது சொந்தப் படமான ‘அடிமைப் பெண்’ ஆகிய படங்களில் சந்திரபாபுவுக்கு நடிக்க வாய்ப்புகள் அளித்தார். ‘அடிமைப் பெண்’ படத்தில் நடிக்க அவருக்கு கணிசமான தொகை யையும் ஊதியமாக அளித்தார்.

பி.யு.சின்னப்பா நடித்த ‘கண்ணகி’ படத்தில் கண்ணகியாக நடித்த கண்ணாம்பா பேசும் அனல்தெறிக்கும் வசனங்கள் 60-ஐக் கடந்த பலருக்கு இன்னும் காதுகளில் ரீங்காரமிடும். கண்ணாம்பாவின் கணவர் கே.பி.நாகபூஷணம். எம்.ஜி.ஆர். நடித்த ‘தாலிபாக்கியம்’ படத்தை தயாரித்து இயக்கினார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற இடத்தில் நடந்தது. படப்பிடிப்புக் குழுவினர் மைசூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். திடீரென, நாகபூஷணம் பதறியபடி எம்.ஜி.ஆரை சந்தித்து, ‘‘தயாரிப்பு செலவுக்காக கொண்டு வந்திருந்த 3 லட்ச ரூபாய் தொலைந்து விட்டது. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு திரும்ப வேண்டியதுதான்’’ என்று கலங்கினார். 1966-ம் ஆண்டில் ரூ.3 லட்சம் மிகப்பெரிய தொகை.

அவரைத் தேற்றி ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர்., தனது அண்ணன் சக்ரபாணியின் மைத்துனர் குஞ்சப்பன் மூலம் சென்னையில் இருந்து ரூ.3 லட்சம் கொண்டுவரச் சொல்லி உதவினார். அதோடு மட்டுமல்ல, ‘‘இந்தப் பணத்தை நீங்கள் திருப்பித் தரவேண்டாம்’’ என்றும் சொல்லிவிட்டார். எம்.ஜி.ஆரை பார்த்து கண்களில் கண்ணீருடன் கைகூப்பி நின்றார் நாகபூஷணம்.

‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆர். சொல்வார்… ‘‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் அதிகம். நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை.’’

தொப்பி ரகசியம்

‘அடிமைப் பெண்’ படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர். ராஜஸ்தான் சென்றபோது, அந்த மாநில முதல்வராக இருந்த மோகன்லால் சுகாதியா, எம்.ஜி.ஆருக்கு விருந்தளித்து கவுரவித்தார். அப்போது அவர் பரிசளித்த புசுபுசுவென்ற வெள்ளைத் தொப்பி, எம்.ஜி.ஆருக்கு அழகாக பொருந்தியது. அதிலிருந்துதான் எம்.ஜி.ஆருக்கு தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது.

படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்

- தொடரும்...

High Court acquits ‘depressed’ engineer who killed his son

High Court acquits ‘depressed’ engineer who killed his son


THE HINDU

An engineer who poisoned his five-year-old son to death out of “severe depression” developed after a road accident in which he lost his pregnant wife has been acquitted by the Madras High Court.

In its order acquitting the young engineer – A. Steepen – who was convicted and sentenced to life by a Sessions Court, a Division Bench of Justices M. Jaichandren and S. Nagamuthu said, “It is not every homicide which is made is punishable under the Indian Penal Code. It is only a culpable homicide which is punishable.”

Delivering the order, Justice Nagamuthu said the “unblessed son of a poor family, educated by his poor parents, on becoming an engineer, secured a decent job and lived a life with full of joy and jubilation,” (he) would not have imagined that a “severe blow to his life was fast approaching to make a complete topsy-turvy.”

Steepen was living with his wife and a five-year-old son at West Mambalam, Chennai. On October 20, 2008 he visited his ailing father in a village near Vellore. On his way back to Chennai the next day, Steepen’s car met with an accident in which his wife, then pregnant, died on the spot. Steepen and his son sustained serious injuries and were admitted in a private hospital. The entire medical expenses was taken care by his friends and his landlord, as none of his relatives including in-laws offered any help. Subsequently, his wife’s body was cremated by her parents in the absence of Steepen.

Thereafter, the life of Steepen became difficult. “Everyday went on with extreme grief and agonies; he struggled to make the ends meet and manage the medical expenses as he lost his job due to complete immobility.” Due to this, he developed a “kind of depression”.

On July 8, 2009 Steepen lost his mind “out of depression” and gave sleeping pills to his son, took him to his father-in-law’s house and hanged himself. leaving behind a suicide note. However, he was rescued and admitted to a hospital. Steepen was treated for “severe mental depression” in the Government Royapettah Hospital in the convict ward for about a month and was discharged on August 1, 2009. Meanwhile, a charge-sheet was filed against Steepen on October 10, 2009 and he was later convicted for murder. The Additional Sessions Judge, Fast Track Court IV, Chennai sentenced him to life imprisonment based on the evidence of 19 witnesses, 27 documents and 12 material evidences. Steepen preferred an appeal against the conviction.

Perusing the records, the Bench observed that the culpability as defined under Section 299 of IPC should be established by the prosecution. “A person, who is of unsound mind, cannot have any intention or knowledge in terms of IPC … a person who does not know the consequences of the act that he does, cannot be attributed either with intention or knowledge as is required by IPC,” the judges said.








Hence the court acquitted him of all charges.

A tragic story that made judges rethink homicide

A tragic story that made judges rethink homicide

TIMES OF INDIA

CHENNAI: Road accidents are but a mere data for government, but how a mishap could ruin people's lives and wreck families is best explained by this tragic story of A Steepen.

Born into a poor family and completed engineering course with great difficulty, Steepen landed a decent job and fell in love with Sangeetha. Fortunately, both the families supported their relationship and they got married soonafter. They were blessed with a child.

A fraction of a moment on October 22, 2008, when Steepen's car dashed against a roadside tree, changed his life upside down, forever.

Rushing back to his office in Chennai after visiting ailing father in Vellore district, Steepen's car hit a roadside tree, killing his young wife on the spot and leaving himself and his five year old son badly injured. Steepen was crippled by serious injuries and could not move around without crutches, and, consequently, lost his job as well. By the time he recovered, all the jewellery and cash kept at his home in Chennai had been cleaned out by his in-laws who demanded more 'refund' of the expenses incurred after Sangeetha's death.

With medical bills and debts mounting and family struggling to meet even basic needs of the child, depression set in. Less than a year after the accident - on July 8, 2009, to be precise - Steepen gave 'some unidentified poison' to his son and he himself attempted suicide by hanging. The child died, whereas Steepen survived, only to face murder charge. He was convicted for murder, and sentenced to undergo imprisonment for life in June 2010.

It was when the criminal appeal against his conviction was taken up for hearing by a bench of Justice M Jaichandren and Justice S Nagamuthu, that all these details tumbled out. His counsel and chairman of Bar Council of Tamil Nadu and Puducherry D Selvam narrated the tragic sequence of events, and pointed out that Steepen was under immense stress and depression and hence he did not deserve life imprisonment.

To test his claim, the bench summoned two psychiatrists - Dr Ranjani and Dr Mythili - who treated Steepen to the court and re-examined their earlier statements. Their reply was that Steepen suffered from a major depressive disorder, and said they had even warned hospital staff to keep a close vigil on the patient as there was every likelihood that he might attempt to commit suicide due to the illness.

Convinced that the circumstances were peculiar and Steepen had a grave mood disorder during commission of the crime, the judges said: "It is not every homicide which is made punishable under IPC. It is only culpable homicide which is punishable...Fundamentally what is required is that the accused should have had the intention or knowledge which are traceable to the cognitive faculty of the accused. A person, who is of unsound mind, who does not know the consequences of the act that he does, cannot be attributed with either intention or knowledge as required under Section 299 IPC."

So saying, the bench set aside Steepen's conviction and ordered his immediate release.

சோகத்தால் மனவேதனை: மகனை கொன்ற தந்தைக்கு விடுதலை

DINAMALAR

சென்னை:'அடுத்தடுத்த சோகத்தால் பாதிக்கப்பட்டு, மனவேதனைக்கு ஆளான தந்தை, தன் மகனுக்கு துாக்க மாத்திரை கொடுத்தது, கொலை குற்றம் ஆகாது' என, சென்னை உயர் நீதிமன்றம், பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், தந்தைக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் ரத்து செய்தது.சென்னை, மேற்கு மாம்பலத்தில் வசித்து வருபவர், ஸ்டீபன். தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய இவர், சங்கீதா என்பவரை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு, ஐந்து வயதில், ஒரு ஆண் குழந்தை இருந்தது.

வேலுார் அருகில், ஸ்டீபனின் பெற்றோர் வசித்து வருகின்றனர். தந்தைக்கு உடல் நலம் சரியில்லை என தகவல் கேள்விப்பட்டு, மனைவி, மகனுடன், வேலுார் புறப்பட்டு சென்றார். அதன்பின், பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரவே, உடனடியாக, மனைவி, மகனுடன் சென்னை புறப்பட்டார்.காரில் வரும்போது, மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்தில், மனைவி சங்கீதா இறந்தார். ஸ்டீபனுக்கு, இரண்டு கால்களிலும் எலும்பு முறிந்தது.

வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில், ஸ்டீபன் சேர்க்கப்பட்டார். மகனுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. 2008, அக்டோபரில், சம்பவம் நடந்தது.

ரூ.2.5 லட்சம்:விபத்துக்கு பின், சங்கீதாவின் உடல், சென்னை கொண்டு வரப்பட்டு, கணவன் இல்லாமலே இறுதி சடங்கு நடந்தது. அப்போது, ஸ்டீபன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை செலவு, 2.5 லட்சம் ரூபாய் ஆனது.சிகிச்சை முடிந்து, சென்னை திரும்பிய ஸ்டீபனுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. பீரோவில் இருந்த, 50 சவரன் நகையை காணவில்லை. விசாரித்தபோது, மாமனார் எடுத்து சென்றது தெரியவந்தது. மகளின் இறுதி சடங்குக்கு, 80 ஆயிரம் ரூபாய் செலவானதாகவும், அந்த பணத்தை தரும்படி, மருமகனிடம் கேட்டார்.

வேலையும் இல்லாமல், குடும்ப செலவுக்கும், சிகிச்சைக்கும் கையில் பணமும் இல்லாமல், ஸ்டீபன் தவித்தார்; வாழ்க்கையில், விரக்தி ஏற்பட்டது. மகனுக்கு, துாக்க

மாத்திரைகளை கொடுத்தார்.


மேற்கு மாம்பலத்தில் வசிக்கும், மாமனார் வீட்டுக்கு, மகனுடன் சென்றார். அங்கு, மாமியார் மட்டும் இருந்தார். வீட்டுக்குள் சென்று, கதவை பூட்டி கொண்டார்; துாக்கு மாட்டினார்; எடை தாங்காமல், கம்பி அறுந்து கீழே விழுந்தார். துாக்க மாத்திரை சாப்பிட்ட, மகன் இறந்தான். இது, 2009 ஜூலையில் நடந்தது.மாமியாரின் அலறல் கேட்டு, அருகில் இருந்தவர்கள் வந்தனர்; கதவை உடைத்து உள்ளே சென்றனர். இருவரையும், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மகன், இறந்து விட்டான்; சிகிச்சையினால், ஸ்டீபன் உயிர் பிழைத்தார்.


இதையடுத்து, ஸ்டீபன் மீது, கொலை வழக்கு மற்றும் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த, சென்னை, விரைவு நீதிமன்றம், ஸ்டீபனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தார். மனுவை, நீதிபதிகள் ஜெய்சந்திரன், நாகமுத்து அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. ஸ்டீபன் தரப்பில், வழக்கறிஞர் டி.செல்வம், அரசு தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் மகாராஜா ஆஜராகினர்.


குற்றமாகாது:மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

சிகிச்சை அளித்த டாக்டரின் விளக்கம் மற்றும் அவரது கருத்தில் இருந்து, 'ஸ்டீபன், சுய கட்டுப்பாட்டில் இல்லை; அவரது செயலால் ஏற்படும் விளைவுகள் பற்றி, அவர் அறிந்திருக்கவில்லை' என்பது தெரிகிறது.மருத்துவ சாட்சியத்தை பார்க்கும்போது, சம்பவம் நடக்கும் போது, ஸ்டீபனின் மனநிலை சரியில்லாமல் இருந்தது தெளிவாகிறது. எனவே, அவரது செயல், கொலை குற்றமாகாது. விடுதலை பெற, ஸ்டீபனுக்கு உரிமை உள்ளது. தண்டனையில் இருந்து, ஸ்டீபனை விடுதலை செய்கிறோம். இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

Tuesday, March 29, 2016

செல்போன் மூலம் ரயில் டிக்கெட் ரத்து செய்யும் வசதி

செல்போன் மூலம் ரயில் டிக்கெட் ரத்து செய்யும் வசதி


ரயில்கள் புறப்படும் முன்பு முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டுமென்றால் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும். இணையதளம் மூலம் முன்பதிவு செய்திருந்தால், அவர்கள் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் பணம் வந்துவிடும். ஆனால், கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் மீண்டும் கவுன்ட்டருக்கு சென்று விண்ணப்பித்து பணத்தை திருப்பப் பெற வேண்டும். இந்த நிலைதான் தற்போது இருக்கிறது.

இந்நிலையில், கவுன்ட்டர்களில் டிக்கெட் பெறும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு செல்போன் மூலம் 139 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு டிக்கெட் ரத்து செய்யும் புதிய திட்டம் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்துக்கான மென்பொருள் தயாரிக்கும் பணிகள் முடிந்துள் ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கவுன்ட்டர்களில் டிக்கெட் பெறுவோர் அதை ரத்து செய்ய வசதியாக இத்திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இதன்மூலம் பயணிகளின் வீண் அலைச்சலை தவிர்க்க முடியும். உடனடியாக செல்போன் மூலம் ரத்து செய்வதால், திரும்பப் பெறும் கட்டணமும் பெரிய அளவில் இழப்பில்லாமல் கிடைக்க வாய்ப்புள்ளது. 139 எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசி முழுவிவரங்களையும் அளித்த பின்னர், உங்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஒன் டைம் பாஸ்வோர்டு) வரும். இதை உறுதி செய்த பின்னர், டிக்கெட் ரத்தாகும். பயணிகள் காலம் தாமதிக்காமல் அதே தினத்திலேயே அருகில் உள்ள கவுன்ட்டருக்கு சென்று, பணத்தை பெற்றுக்கொள்ளலாம்’’ என்றனர்.

குறள் இனிது: அன்பு கொண்டா, ஆற்றல் கண்டா..? சோம.வீரப்பன்

குறள் இனிது: அன்பு கொண்டா, ஆற்றல் கண்டா..? சோம.வீரப்பன்

எனது நண்பர் ஒருவர் ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் மனிதவளத் துறையின் மேலாளர். நேர்மையானவர், திறமையானவர். சமீபத்தில் அவரது தூரத்து உறவுப் பையன் குமார் (இந்தப் பெயர் பிடிச்சிருக்கா..) அவரிடம் வேலை கேட்டு வந்தார். வயது 23, படிப்பு பிளஸ்டூ. நிறையப் பேசினார். வெட்டிப் பேச்சென்பது சட்டெனப் புரிந்துவிட்டது. 4 ஆண்டுகளில் 5 வேலைகள் மாறியிருந்தார். நண்பருக்கு தர்மசங்கடம். தனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லிப் பார்த்தார். முதலில் சம்மதிப்பவர்கள் குமாரைப் பார்த்ததும் பயந்து மறுத்து விடுவார்கள். வேறு வழியின்றி தனது அலுவலகத்திலேயே எடுபிடி வேலைக்கு வைத்துக் கொண்டார். குமார் எதையும் ஒழுங்காய்ச் செய்யாவிட்டாலும் நண்பரின் பதவி காரணமாக மற்றவர்கள் சகித்துக்கொண்டனர்.
ஆறு மாதம் கழித்து டெஸ்பாட்ச் பகுதியில் ஓர் எழுத்தர் வேலை காலியாய் இருப்பது தெரிந்ததும் குமார் நம் நண்பரை நச்சரிக்கத் தொடங்கிவிட்டார். நண்பருக்கு ‘நாம் இந்த நிறுவனத்திற்கு எவ்வளவோ உழைத்திருக்கிறோம். நமக்கு வேண்டிய ஒருவருக்கு உதவினால் தப்பில்லை' என்கிற எண்ணம் வந்து விட்டது. அலுவலகத்தில் பலரையும் சரிக்கட்டி அந்த வேலையை குமாருக்கே வாங்கிக் கொடுத்து விட்டார். ஆனால் குமார் குமாரராகவே இருந்தார். பின்னே என்ன? பிச்சைக்காரனை ராஜமுழி முழிக்கச் சொன்ன கதைதான்! அவ்வேலைக்கு வேண்டிய சுறுசுறுப்போ, மற்றவர்களிடம் வேலை வாங்கும் சாமர்த்தியமோ குமாரிடம் சுத்தமாக இல்லை! ஆவணங்கள் போய்ச் சேர தாமதமாயிற்று. பல புகார்கள் குவிந்தன.
ஆனால், கொடுமை என்னவென்றால், குமார் என்ன தவறு செய்தாலும் எல்லோருக்கும் உடனே நம்ம நண்பர் ஞாபகம் தான் வரும்! அவர்கள் குமாரைக் கண்டிப்பதை விட்டுவிட்டு நம்ம நண்பரையே சாட ஆரம்பித்து விட்டனர்! அவருக்கு நிறுவனத்தில் இருந்த மதிப்பும் மரியாதையும் போயின!
அறிய வேண்டியவற்றை அறியாதவரை அன்புடமை காரணமாக தேர்ந்தெடுப்பது எல்லா மடமையான விளைவுகளையும் உண்டாக்கும் என்கிறது குறள். உங்கள் அனுபவத்திலும் பார்த்திருப்பீர்கள். பணியமர்த்து வதற்கான, பதவி உயர்விற்கான நேர்முகத் தேர்வுகள் நடத்துபவர்களுக்குப் பல சிபாரிசுகள் வரும். கைதூக்கி விடுங்கள் என்பார்கள். ஐயா, இது என்ன தர்மகாரியமா? கொஞ்சமும் தகுதியற்றவனைத் தேர்ந்தெடுக்கலாமா? நிறுவனம் என்னவாகும்? கள்ளிச் செடியையா நடுவது?
தொழிலில் வெற்றி பெற்ற வளர்ச்சியடைந்த குடும்பங்களிலும் இதே கதை தான். எனக்குத் தெரிந்த ஒருவர் கோடிக்கணக்கில் வர்த்தகம் புரிந்து வந்தார். தனது மகனை பள்ளிப்படிப்பிற்கே ஸ்விட்சர்லாந்து அனுப்பி இருந்தார். மகன் இந்தியா திரும்பியவுடன் அவரிடம் எல்லாப் பொறுப்புக்களையும் கொடுத்தார். ஆனால் மகனுக்கோ இங்கிருந்தது ஒன்றும் பிடிபடவில்லை. அண்ணே, பிள்ளைகளை முதலாளி ஆக்குவது வேறு; நிறுவனத்தை நடத்தச்சொல்வது வேறு!
கார் ஓட்டப்பழகிக் கொண்டிருப்பவனிடம் போய் நாம் பயணிக்கும் பெரிய பஸ்ஸைக் கொடுக்கலாமா? அது அவனுக்கும் நமக்கும்கூட ஆபத்தானதாயிற்றே! அலுவலகப் பணிகள் ஆற்றலைப் பார்த்து கொடுக்கப்படவேண்டியவை. அங்கு பச்சாதாபமோ பாசமோ பார்ப்பது காலப்போக்கில் எல்லோருக்கும் தீங்காய் முடியும்!

காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்

பேதமை எல்லாம் தரும் (குறள் 507)

- somaiah.veerappan@gmail.com

Bleak future for retired staff


Bleak future for retired staff

R. SRIKANTH


There has been a delay in disbursal of pension and other retirement benefits to them

Thousands of former employees of the eight transport corporations in the State no longer have the pleasure of a ‘happy’ retired life, as they are staring at an uncertain financial future. The reason is delayed payment of pension and other retirement benefits.

The delayed payment of commuted pension, dearness allowance arrears and in certain cases the pension amount itself is driving employees to take desperate measures. More than 8,000 retired employees are running from pillar to post to get their pension benefits.

M. Natarajan, who worked as a driver for Tirunelveli Transport Corporation at Kovilpatti depot, distressed at having to wait for several months to get the commuted pension amount, committed suicide.

The family members of R. Jayaraman, who worked as a driver in the Metropolitan Transport Corporation (MTC) at Basin Bridge depot, were not able to save him, because of lack of funds.

Mr. Balakrishnan said except for employees of MTC and State Express Transport Corporation (SETC) the other six transport corporations — Madurai, Villupuram, Kumbakkonam, Salem, Tirunelveli and Coimbatore — have been defaulting on various retirement benefits.

Arumugam Nainar, secretary, Tamil Nadu State Transport Employees Federation, said what was disheartening was the manner in which the commuted pension (one-third amount of the total pension amount paid in advance) entitled to an employee at the time of retirement was yet to be paid, but that ‘recovery’ was being carried out.

At present the commuted pension has been proposed to be paid in 24 monthly instalments, literally making a mockery of the commutation of pension system, he also added.

NEWS TODAY 08.06.2026