Thursday, March 31, 2016

பிஹாரில் நாளை முதல் மதுவிலக்கு: மது அருந்துவோருக்கும் 10 வருட தண்டணை

ஆர்.ஷபிமுன்னா

THE HINDU TAMIL

பிஹாரில் நாளை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முதற்கட்டமாக பகுதியளவு மதுவிலக்கு அமலுக்கு வருகிறது. இதற்காக அதன் மீது கடுமையான சட்டங்கள் இம் மாநில சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளன. இச் சட்டத்தின்படி பொது இடங்களில் மது அருந்துவோருக்கு 10 வருடம் வரையும், வீடுகளில் அருந்தி விட்டு பொதுமக்களுக்கு தொந்தரவு அளிப்போருக்கு 5 வருடங்கள் வரையும் சிறைதண்டனை விதிக்கப்படும்.

நிதிஷ்குமார் முதல் அமைச்சராக இருக்கும் பிஹார் மாநில சட்டப்பேரவையில் நேற்று மதுவிலக்கு அமல்படுத்தும் சட்ட மசோதா 2016 நிறைவேற்றப்பட்டது. அனைத்து உறுப்பினர்களாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா பிஹார் மாநிலம் முழுவதிலும் ஒருபகுதி மதுவிலக்கு அமல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக ஏப்ரல் 1 முதல் உள்நாட்டு மதுபான வகைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அயல்நாட்டு மதுபானங்கள் அரசு கடைகளில் மட்டுமே கிடைக்கும் என்றும் பிஹார் அரசு தெரிவித்துள்ளது.

இந்த சட்டம், காவல்துறை அராஜகத்திற்கு வழி வகுக்கும் என எதிர்கட்சியான பாரதிய ஜனதாவில் சில உறுப்பினர்கள் மட்டும் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். எனினும், மற்ற அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி ஆராவரத்துடன் அளித்த ஆதரவிற்கு பின் அமைதியாகி விட்டனர்.

இதன் மீது சட்டப்பேரவையில் நீண்ட உரையாற்றிய முதல் அமைச்சர் நிதிஷ்குமார், மதுவால் அதிகமாக பாதிக்கப்படும் ஏழை குடும்பங்களை காப்பது தம் அரசின் தலயாய கடமை எனக் குறிப்பிட்டார். கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்களுக்கு மரணதண்டனை அளிக்கும் சட்டத்தில் அதை அருந்தி பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு அரசு நிவாரண நிதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதில், நிரந்தர உடல் பாதிப்பு அடைவோருக்கும் உதவித்தொகை அளிப்பதுடன் போதை தடுப்பு மறுவாழ்வு மையங்களும் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்காக, அரசு மருத்துவர்களுக்கு பெங்களூரில் உள்ள ‘நிம்ஹான்ஸ்’ மருத்துவமனையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 47-ன்படி மதுவிலக்கை அமல்படுத்துவது ஒரு மாநில அரசின் கடமையாகும் எனவும் நிதிஷ் தெரிவித்தார். இறுதியில் அவர், ‘மது குடிக்க மாட்டோம், மற்றவர்களை குடிக்க வைக்கவும் மாட்டோம்’ என அறிவித்தார்.

பிஹாரின் மதுவிலக்கு சட்டத்தின்படி, கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்களுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை அளிக்கப்படும். பொது இடங்களில் மது அருந்தி சிக்குவோருக்கு 5 முதல் 10 வருடம் வரையும், தமது வீடுகளில் குடித்து விட்டு பொதுமக்களுக்கு தொந்தரவு அளிப்போருக்கு ஐந்து வருடம் வரையும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மது கடத்தலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கும் 7 வருடம் சிறையில் தள்ளப்படுவர்.

மருந்து உபயோகத்திற்கு எனும் பெயரில் மது விற்பனை செய்வோருக்கு 7 வருடம் வரையும், சிறைத்தண்டனை உண்டு. ஹோமியோபதி மருந்துகள் தயாரிப்பாளர்களுக்கும் 100 மில்லிக்கும் அதிகமாக மது விற்பனை கிடையாது எனவும், இவற்றை தீவிரமாகக் கண்காணிக்க கூடுதலான சோதனை சாவடிகள் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்துடன், மதுவின் மீதான சட்டவிரோத விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

எனவே, பிஹாரின் பகுதி விலக்கு அமலில் வெளிநாட்டு மதுவகைகள் மட்டும் விற்பனைக்கு கிடைக்கும். இதுவும் தனியார் விற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது, பிஹார் அரசின் மதுகடைகளில் மட்டும் கிடைக்கும். இதுவும் வரும் காலங்களில் தடை செய்யப்பட்டு முழுமையான மதுவிலகு அமல்படுத்தப்படும்.

எம்ஜிஆர் 100 | 32 - எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர்!

எம்ஜிஆர் 100 | 32 - எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
எம்.ஜி.ஆர். எதிலும் எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர். நெருக்கடியான கட்டங்கள் ஏற்படும்போது தனக்கு நம்பிக்கையானவர்களின் துணை கொண்டு அதை எளிதாகக் கடந்து விடுவார். அதுபோன்ற சமயங்களில் அவருக்கு தோள்கொடுக்க ராஜவிசுவாசிகள் இருப்பார்கள் என்று வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஒருமுறை குறிப்பிட்டார். அப்படிப்பட்ட ராஜவிசுவாசிகளில் முக்கியமானவர் ஆர்.எம். வீரப்பன்.

1953-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தின் நிர்வாகியாக ஆர்.எம்.வீரப்பன் பொறுப்பேற்றுக் கொண்டார். விரைவிலேயே அவரது செயல்பாடுகள் எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போனது. எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தின் முதல் நாடகம் ‘இடிந்த கோயில்’. திமுக சார்பில் நடந்த கல்லக்குடி போராட்ட நிதிக்காக, 1953-ம் ஆண்டு அக்டோபர் முதல் வாரம் இடிந்த கோயில் நாடகம் திருச்சியில் அரங்கேறி மக்களின் வரவேற்பை பெற்றது.

அப்போதைய சூழலில் திமுக மீது நாத்திகக் கட்சி என்ற முத்திரை பலமாக விழுந்திருந்தது. அந்த நேரத்தில் ‘இடிந்த கோயில்’ என்ற பெயரில் நாடகம் போட்டால் கடவுள் மறுப்பு நாடகம் என்று மக்கள் கருத வாய்ப்பு ஏற்படும் என்றும் நாடகத்தின் கருத்துக்கள் இன்னும் அதிக மக்களை அடைய நாடகத்தின் பெயரை ‘இன்பக் கனவு’ என மாற்றலாம் என்றும் எம்.ஜி.ஆருக்கு யோசனை சொன்னார் வீரப்பன். அது நியாயமாக இருக்கவே, ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

அந்தக் காலத்திலேயே மேடை நாடகத்தில் புதிய உத்திகளை எம்.ஜி.ஆர். கையாண்டார். நாடகத்தில் கனவுக் காட்சி வரும். சாட்டின் படுதா ஒன்றின் மீது சிவப்பு, பச்சை வண்ணங்களில் ஒளிவெள்ளம் பாய்ச்சி அந்தப் படுதாவை லேசாக ஆட்டும்போது அலை அலையாக வண்ணக் கலவையில் தோன்றும் கனவுக் காட்சி கைதட்டல் பெறும்.

அந்தச் சமயத்தில் ‘மலைக்கள்ளன்’ படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் ஆனார். படத்துக்கு திரைக்கதை வசனம் எழுத கருணாநிதியை ஏற்பாடு செய்தார். படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். நாடக மன்ற நிர்வாகியாக இருந்த வீரப்பன், அவரது படங்கள் தொடர்பான வேலைகளையும் கவனித்துக் கொண்டார்.

குலேபகாவலி, மதுரைவீரன் போன்ற வெற்றிப்படங்கள் மூலம் எம்.ஜி.ஆர். திரையுலகில் உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ‘நாடோடி மன்னன்’ படம் தயாரிக்க முடிவு செய்தார். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும் பங்குதாரர்கள். பின்னர், சிறிது காலம் கழித்து அந்நிறுவனம் ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனமாக மாற்றப்பட்டது. அதில் ஆர்.எம்.வீரப்பனையும் பங்குதாரராக சேர்த்ததுடன் அவரை நிர்வாக இயக்குநராகவும் நியமித்தார் எம்.ஜி.ஆர்.!

‘நாடோடி மன்னன்’ படம் வளர்ந்தது. படத்துக்கான தயாரிப்பு செலவுகள் எகிறிக் கொண்டே இருந்தன. செலவு களை சமாளிக்க ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் கடன் கேட்க முடிவு செய் தார் வீரப்பன். அப்போது, ஏவி.எம். நிறுவனத்தின் ஆடிட்டர் சீனிவாசன், ‘‘கடன் தருவோம். ஆனால், எம்.ஜி.ஆர். கையெழுத்து போட வேண்டும்’’ என்று கூறிவிட்டார். கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போடக் கூடாது, ஏதும் சிக்கல்கள் வந்தால் அவர் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் வீரப்பன்.

கடன் பெறுவதற்காக, படத்தின் இலங்கை ஏரியா விநியோக ஒப்பந்தத்தை ஈடாக காண்பித்திருந்தனர். அதில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டிருந்தார். ‘‘விநியோக உரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும்போது கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போடவேண்டும்’’ என்று ஆடிட்டரும் பிடிவாதமாக இருந்தார். நாட்கள் ஓடின. பணம் இல்லையென்றால் படப்பிடிப்பு நடத்த ஃபிலிம் வாங்க முடியாத நிலை.

திடீரென யோசனை தோன்ற மீண்டும் சீனிவாசனிடம் சென்றார் வீரப்பன். ‘‘இலங்கை விநியோக ஒப்பந்தம் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெயரில் போடப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் பிறகு ‘எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்று ஆனபிறகு, அதன் நிர்வாக இயக்குநர் நான்தான். என் பெயரில்தான் கடிதத் தொடர்புகள் நடக்கிறது. எனவே கடன் பத்திரத்தில் நான் கையெழுத்திட்டால் போதும்.’’ என்று கூறி ஆதாரங்களை காட்டினார் வீரப்பன்.

சட்டபூர்வமாக அவரது வாதத்தை மறுக்க முடியாத நிலையில், கடன் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆரை கையெழுத்து போடவிடாமல் கடன் பெற்றுவிட்டார் வீரப்பன்.

‘எம்.ஜி.ஆர். படங்கள் நகரங்களில் ஓடாது. கிராமங்களில்தான் ஓடும்’ என்ற தவறான கருத்து இருந்தது. இதை மாற்ற வேண்டுமானால் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்பட விநியோகத்திலும் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 1961-ல் எம்.ஜி.ஆர் நடித்த ‘திருடாதே’ படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை அந்நிறுவனம் பெற்றது. அப்போதெல்லாம், சென்னையில் எம்.ஜி.ஆர். படங்களுக்கு முதல்தர திரையரங்குகள் கிடைக்காது.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிர்வாகியாக இருந்த வீரப்பன் துணிந்து முடிவு எடுத்தார். அண்ணா சாலையில் பழைய படங்களை வெளியிட்டு வந்த பிளாசா, மற்றும் பாரத், மகாலட்சுமி ஆகிய பழைய திரையரங்குகளில் ‘திருடாதே’ படம் திரையிடப்பட்டது. புதிய விளம்பர உத்திகளையும் வீரப்பன் வகுத்தார். மூன்று தியேட்டர்களிலும் படம் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி பெற்றது. அதன் பிறகு எம்.ஜி.ஆர். படங்களை திரையிடுவதில் சென்னையின் முக்கிய தியேட்டர் அதிபர்கள் ஆர்வம் காட்டினர். ‘திருடாதே’ படம் பட்டி தொட்டிகளிலும் ஓடி வசூலை வாரிக்குவித்தது. ராஜா ராணிக் கதைகளுக்குத்தான் எம்.ஜி.ஆர். பொருத்தமானவர் என்ற கருத்தையும் ‘திருடாதே’ தகர்த்தது.

எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் சத்யா மூவிஸ் பட நிறுவத்தை தொடங்கிய ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த முதல் வெற்றிப்படம் ‘தெய்வத்தாய்.’ அதிலிருந்து ‘இதயக்கனி’ வரை சத்யா மூவீஸின் 6 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

எம்.ஜி.ஆரிடம் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வீரப்பன், அவருக்கே சம்பளம் கொடுப்பவராக மாறினார். சமயங்களில் வீரப்பனை எம்.ஜி.ஆர். ‘‘என்ன முதலாளி?’’ என்று ஜாலியாக அழைப்பது வழக்கம்.

முதல்வராகி தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்ட பிறகும், கடைசி வரை தனது ‘கணக்குப் பிள்ளை’யான ஆர்.எம். வீரப்பனுக்கு மாத சம்பளமாக 500 ரூபாய் கொடுப்பதை எம்.ஜி.ஆர். நிறுத்தவேயில்லை.

- தொடரும்...

‘இதயக்கனி’ படத்துக்கு மற்ற எம்.ஜி.ஆர். படங்களுக்கு இல்லாத சிறப்பு உண்டு. ரஷ்யாவில் நடைபெற்ற தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள ‘இதயக்கனி’ தேர்வு செய்யப்பட்டது. வெளிநாட்டு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்.படம் என்ற பெருமையைப் பெற்றது ‘இதயக்கனி’.

படங்கள் உதவி: ஞானம்

எம்ஜிஆர் 100 | 33 - குண்டு பாய்ந்ததால் பாதிக்கப்பட்ட குரல்வளம்!

எம்ஜிஆர் 100 | 33 - குண்டு பாய்ந்ததால் பாதிக்கப்பட்ட குரல்வளம்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

மீனவ நண்பன்’ படத்தில் குமரனாக எம்.ஜி.ஆர்.! படத்திலும் எம்.ஜி.ஆர். பெயர் குமரன்தான்.

M.G.R. உழைப்புக்கு அஞ்சாதவர். எடுத்துக் கொண்ட காரியத்துக்காக தன்னை வருத்திக் கொள்ளவும் தயங்காதவர். சினிமா ஆனாலும் சரி, அரசியல் என்றாலும் சரி, தன் முழு உழைப்பையும் திறனையும் அவர் வெளிப்படுத்துவார்.

1967-ம் ஆண்டுக்கு முன் வந்த படங் களில் எம்.ஜி.ஆரின் குரல் கணீ ரென வெண்கல மணி போல ஒலிக் கும். துப்பாக்கிச் சூடு சம்பவத் துக்கு பின் தொண்டையில் குண்டு பாய்ந்ததால் அவரது குரல்வளம் பாதிக்கப்பட்டது. படங்களில் வேறு யாரையா வது ‘டப்பிங்’ கொடுக்கச் செய்யலாம் என்ற யோசனை களை எம்.ஜி.ஆர். நிராகரித்து விட்டார். சொந்தக் குரலில் பேசி நடிக்கவே அவர் விரும்பினார். அவர் குரல் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று அதை ரசிகர்களும் மக்களும் ஏற்றுக் கொண்டனர்.

‘காவல்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆர். பேசும் வசனங்கள் இரண்டு, மூன்று முறை ஒலிப்பதிவு செய்யப்பட்டன. ஒரு காட்சி முடிந்ததும் அதற்கான வசனங் களை எம்.ஜி.ஆர். மீண்டும் பேசி ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்படி ஒலிப்பதிவு செய்யப்பட்ட வசனங்களை எடிட்டிங்கின்போது காட்சிகளோடு ஒருங்கிணைப்பது மிகவும் கடினம். எம்.ஜி.ஆர். தனக்கே உரிய தொழில் நுட்ப சாதுர்யத்தோடு பலமுறை பதிவு செய்யப்பட்ட வசனங்களில் எந் தெந்த வார்த்தைகள் சரியாக ஒலிக் கிறதோ அவற்றை அங்கிருந்து ஒரு வார்த்தை, இங்கிருந்து ஒரு வார்த்தை என்று எடுத்து ஒன்று சேர்த்து காட்சிகளோடு ஒருங் கிணைத்து தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே அற்புதமாக எடிட் செய்தார்.

பாதிக்கப்பட்ட பேச்சு திறனை மீண்டும் பெற எம்.ஜி.ஆர். விடாமுயற்சியுடன் செயல்பட்டார். ‘ஸ்பீச் தெரபிஸ்ட்’ எனப்படும் பேச்சு பயிற்சி அளிக்கும் நிபுணர்களை வரவழைத்து பயிற்சிகள் எடுத்துக் கொண்டார். நரம்பியல் நிபுணர் டாக்டர் பி.ராமமூர்த்தி, குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோரின் ஆலோசனையின்படி, நள் ளிரவில் உதவியாளர்களுடன் கடற்கரை சென்று தண்ணீர் படும்படி அமர்ந்து உரக்கப் பேசி பயிற்சி மேற்கொண்டார்.

‘‘நானும் சாமி என்பவரும் எம்.ஜி.ஆரு டன் நள்ளிரவில் கடற்கரைக்குச் செல் வோம். அலை வந்து மோதும் இடத்தில் அவர் அமர்ந்துகொள்ள நாங்கள் அவரை பிடித்துக் கொள்வோம். அவர் உரக்க பேசி பயிற்சி மேற்கொள்வார்’’ என்று நெகிழ்கிறார் எம்.ஜி.ஆரின் மெய்க்காவலர் கே.பி.ராமகிருஷ்ணன். மாதக்கணக்கில் எடுத்துக் கொண்ட பயிற்சி களால் பெரும் அளவில் பேச்சுத் திறனை எம்.ஜி.ஆர். மீண்டும் பெற்றார். தொண்டையில் குண்டு பாய்ந்ததால் பழைய குரலில் பேச முடியாமல் கட்டைத் தொண்டையில் ஒலித்த எம்.ஜி.ஆரின் குரலும் கம்பீரமாகவே இருந்தது.

‘உரிமைக்குரல்’ படத்தின் வெற்றிக் குப் பின் எம்.ஜி.ஆரும்ஸ்ரீதரும் இணைந்த மற்றொரு வெற்றிப் படம் ‘மீனவ நண்பன்.’ இந்தப் படத்தை கரு.சடையப்ப செட்டியார் தயாரித்தார். இயக்கம்ஸ்ரீதர். படத்தில் கிளை மாக்ஸ் காட்சி எடுக்கப்படாத நிலையில், பெங்களூரில் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இருந்தபோது தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக சென்னை திரும்பிவிட்டார். தேர்தல் வியூகங்கள் வகுப்பதிலும் பிரச்சாரத் திலும் அவர் தீவிரமாகிவிட்டதால் ‘மீனவ நண்பன்’ கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்படவில்லை. தேர்தலில் ஆட்சி யைப் பிடித்து எம்.ஜி.ஆர். முதல்வராகி விட்டால், படத்தின் கதி என்ன? என்றுஸ்ரீதரும் படக் குழுவினரும் கவலையோடு இருந்தனர்.

1977-ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர். தமிழகம் முழு வதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர். முதல்வராக பதவியேற்பதற்கான நாளும் குறிக் கப்பட்டு விட்டது. அதற்கு பத்து நாட்களுக்கு முன் இயக்குநர்ஸ்ரீதரை எம்.ஜி.ஆர். அழைத்தார்.

‘‘மீனவ நண்பன் படத்தை முடிக்க இன்னும் எத்தனை நாள் தேவைப்படும்?’’ என்றுஸ்ரீதரிடம் எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘இரண்டு நாட்கள் ஒதுக்கினால் போதும். முடித்து விடலாம்’’ என்றுஸ்ரீதர் பதிலளித்ததும் உடனே, படப்பிடிப்புக்கு தேதி கொடுத்து ஏற்பாடு செய்யச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

சொன்னபடி, குறிப்பிட்ட தேதியில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். எடுக்க வேண்டிய காட்சி குறித்துஸ்ரீதருடன் ஆலோசித்தார்.

கிளைமாக்ஸில் புயல் வீசும் கொந்தளிக்கும் கடலில் மோட்டார் படகில் வில்லன் நம்பியாரை விரட்டிச் சென்று பிடித்து, படகில் கொட்டும் மழையில் அவருடன் எம்.ஜி.ஆர். சண்டையிட வேண்டும். அவர் நடிக்கத் தயாரானபோது,ஸ்ரீதர் குறுக்கிட்டு, ‘‘அண்ணே, மழை மட்டும் இப்ப வேண்டாம். படகு சேஸ், சண்டை மட்டும் எடுக்கலாம். தேவைப்பட்டால் புயல், இடி, மின்னலுடன் நிறுத்திக் கொள்ளலாம்’’ என்றார்.

‘‘ஏன்?’’, காட்சியில் திடீர் மாற்றம் குறித்து புரியாமல் கேட்டார் எம்.ஜி.ஆர்.

‘‘இன்னும் ஒரு வாரத்தில் முதல்வ ராக பதவியேற்கப் போகிறீர்கள். இந்த நேரத்தில் தண்ணீரில் நீண்ட நேரம் நனைந்து சளி, காய்ச்சல் வந்து விட்டால் என்னாவது?’’ என்று தனது கவலையை பதிலாக்கினார்ஸ்ரீதர்.

எதையும் முழு அர்ப்பணிப்போடு செய்யும் எம்.ஜி.ஆர். கேட்கவில்லை. ‘‘எனக்கு ஒன்றும் ஆகாது. மழையும் இருக்கட்டும். அப்போதுதான் இயல்பாக இருக்கும். காட்சிக்கு எஃபெக்ட்டும் கூடும்’’ என்று சொல்லிவிட்டு, மழையில் நனைந்தபடியே நம்பியாருடன் சண்டை போடும் காட்சியில் நடித்து முடித் தார்.

சில நாட்களில் தமிழகத்தின் முதல் வராக பொறுப்பேற்கப் போகிறவர், எனக்கு பதிலாக ‘டூப்’ போட்டு எடுத் துக் கொள்ளுங்கள் என்று சொல்லி யிருக்கலாம். இயக்குநரே வேண்டாம் என்று சொல்லியும் மழையில் நனைந்த படி நடித்துக் கொடுத்துவிட்டுச் சென் றார் என்றால், எம்.ஜி.ஆருக்கு கிடைத்த வெற்றியின் விளைச்சலுக்கு அவர் பாய்ச்சிய உழைப்பின் வியர்வை பிரமிக்கச் செய்யும்.

தோட்டாவுக்கு டாட்டா காட்டிய தேக்குமர தேகம் கொண்ட எம்.ஜி.ஆருக்கு அவர் சொன்னது போலவே, மழையில் நனைந்ததால் சளியோ, காய்ச்சலோ வரவில்லை.

படங்கள் உதவி : ஞானம்

எம்.ஜி.ஆர். நடித்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படம் 1959-ம் ஆண்டு திருவண்ணாமலை கிருஷ்ணா திரையரங்கில் மறுவெளியீடு செய்யப்பட்டது. டிஜிட்டல், சினிமாஸ்கோப் போன்ற நவீன உத்திகள் இல்லாமல் தினசரி மூன்று காட்சிகளாக மறுவெளியீட்டில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது ‘நாடோடி மன்னன்.’

- தொடரும்...

Wednesday, March 30, 2016

NGGOA takes exception to DoPT order on purchase of air tickets

NGGOA takes exception to DoPT order on purchase of air tickets

Port Blair
16 Mar 2016

The Department of Personnel & Training recently has issued a series of orders making it compulsory for the government employees to purchase air tickets from concerned Airlines or a few approved travel agents while availing LTC. In this regard, the General Secretary of the Non-Gazetted Govt. Officers’ Association in a letter addressed to the Secretary, Department of Personnel & Training, Ministry of Personnel Public Grievances & Pension, Govt. of India has brought to the notice that around 24 thousand government employees & workers under Andaman and Nicobar Administration posted at various department/offices located in these islands are put to untold difficulties due to such orders. Expressing concern, Shri T.S.Sreekumar informed about the remoteness of these islands and poor internet connectivity which makes the booking of tickets online, more difficult and challenging especially for those who are posted in outer islands away from Port Blair. Many of the employees & workers posted outside at far-flung islands are required to come to Port Blair in advance to book their tickets by availing leave and spending money. The General Secretary has requested the Secretary, DoPT for an urgent intervention, in reviewing the existing instructions on purchase of air tickets for government employees serving in Andaman and Nicobar Islands, as a special case, considering the remoteness and poor internet connectivity in these islands.

A copy of the said letter sent to the Chief Secretary, A & N Administration by the General Secretary with the request to take up the matter with the DoPT, Govt. of India. In another copy sent to the Director of Accounts & Budget, the Association has requested him to continue the previous practice of passing LTC/AFSP bills purchased from private travel agents until a decision had been taken on the said issue by Govt. of India.

NTRUHS convocations tomorrow

NTRUHS convocations tomorrow

எம்ஜிஆர் 100 | 31 - சந்திரபாபு நட்பு

‘புதுமைப்பித்தன்’ படத்தில் எம்.ஜி.ஆர். , சந்திரபாபு.


தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


M.G.R. எல்லாருக்கும் உதவும் நல்ல உள்ளம் கொண்டவர். என்றாலும், சில நேரங்களில் சிலரால் அவர் தவறாக புரிந்து கொள்ளப்பட்டார். தன்னைப் பற்றி வரும் தவறான செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் அவர் விளக்கம் அளிக்க மாட்டார். மக்கள் தன்னை தவறாக நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை மட்டுமல்ல; விளக்கம் அளிப்பதன் மூலம் யாருடைய பெயரும் கெடக் கூடாது என்ற எண்ணம் எம்.ஜி.ஆருக்கு.

நடிகர் சந்திரபாபு பன்முகத் திறமை வாய்ந்த கலைஞர். நடிப்பு, நடனம், இசை என்று பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். எப்போதும் வெளிநாட்டவர்போல கோட்டும் சூட்டும் அணிந்து மிடுக்காகக் காட்சி தருவார். ‘குலேபகாவலி’ படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் நட்பு மலர்ந்தது. படப்பிடிப்பில் ஒருநாள் சந்திரபாபுவின் கைகளைப் பற்றிக் கொண்டு ‘‘இனி நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர்’’ என்று நெகிழ்ந்துபோய் எம்.ஜி.ஆர். கூறினார்.

அப்போதைய எம்.ஜி.ஆரின் படங்களில் சந்திரபாபுவும் கட்டாயம் இடம் பெறுவார். தனது சொந்த தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ படத்திலும் அவருக்கு எம்.ஜி.ஆர். வாய்ப்பளித்தார். அப்படத்தில் முட்டைகளை குடித்து விட்டு, பிறகு வாயிலிருந்து கோழிக் குஞ்சை அவர் வெளியே எடுக்கும் காட்சியில் சிரிக்காதவர் இருக்க முடியுமா?

கோழிக்குஞ்சு தொண்டையை பிறாண்டும் அபாயம் இருக்கிறது என்று எம்.ஜி.ஆர். தடுத்தும் கேட்காமல் அந்தக் காட்சியில் பிடிவாதமாக அர்ப்பணிப் போடு நடித்தவர் சந்திரபாபு. படத்தின் தயாரிப்பாளருமான எம்.ஜி.ஆர் கவலை அடையும் அளவுக்கு சில நேரங்களில் அவரின் வேடிக்கை விளையாட்டுக்கள் சென்றுவிடும். ‘நாடோடி மன்னன்’ படப் பிடிப்பின்போது ஒருநாள் எம்.ஜி.ஆர். எச்சரித்தும் கேட்காமல் ஒரு முரட்டுக் குதிரை மீது ஏறி கீழே விழுந்து மயக்க மடைந்துவிட்டார். நல்லவேளையாக, பெரிய காயம் எதுவும் இல்லை.

‘‘எண்ணங்கள் ஏப்பங்கள் அல்ல, அப்படியே வெளியே விடுவதற்கு’’ என்று நயமான உவமையை பேரறிஞர் அண்ணா சொல்வது உண்டு. சந்திரபாபு தனது எண்ணங்களை அப்படியே வெளியே விடக்கூடியவர். கேலியும், கிண்டலும், அலட்சியமும் அவருடைய நகைச்சுவை போலவே உடன் பிறந்தவை. எல்லாரையும் கிண்டல் செய்யும் ஜாலி பேர்வழி. எம்.ஜி.ஆரைப் பற்றியும் அவருடைய நடிப்பைப் பற்றியும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்வார் சந்திரபாபு.

இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி தன்னால் கிண்டல் செய்யப் படும் எம்.ஜி.ஆரை வைத்தே ஜூபிளி பிக்சர்ஸ் கோவிந்தராஜூடன் சேர்ந்து ஒரு படம் எடுக்க அவர் முடிவு செய்தது சுவாரஸ்யமான முரண். படத்தின் இயக்குநரும் சந்திரபாபுதான். கதாநாயகி அவரது தோழி சாவித்திரி. படத்தின் கதையை சந்திரபாபு சொல்ல எம்.ஜி.ஆருக்கும் பிடித்துப் போனது. ‘‘எனக்கு நிறைய படங்கள் ‘கமிட்’ ஆகியிருக்கு.கொஞ்சம் பொறுமையா இருங்க. நானே நடிச்சுத் தரேன்’’ என்று எம்.ஜி.ஆர். உறுதியளித்தார். ‘‘இருந்தாலும் என் பொறுமைக்கும் எல்லை இருக்கு இல்லியா?’’ என்று சந்திரபாபு துரிதப்படுத்தினார்.



பரணி ஸ்டுடியோவில் பூஜை போடப்பட்டு இரண்டு நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. எம்.ஜி.ஆரை வைத்தே படம் எடுக்கும்போதும் அவரைப் பற்றிய விமர்சனங்களை சந்திரபாபு நிறுத்தவில்லை. அந்த நேரத்தில், எம்.ஜி.ஆருக்கும் பல படங்களின் படப்பிடிப்பு. உடனடியாக, சந்திரபாபுவுக்கு கால்ஷீட் தரமுடியாத நிலை. ஒரு படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரிடமே கேட்டார் சந்திரபாபு. கால்ஷீ்ட் விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளும் தனது அண்ணன் சக்ரபாணியை பார்க்குமாறு எம்.ஜி.ஆர். சொன்னார். பொதுவாக கலைஞர்கள் உணர்ச்சிமயமானவர்கள். சந்திரபாபு என்ற பெரும் கலைஞனைப் பற்றி கேட்கவே வேண்டாம். எம்.ஜி.ஆரின் கால்ஷீட் தொடர்பாக சக்ரபாணியுடன் பேசும்போது இருவருக்கும் இடையே வார்த்தைகள் தடித்தன. நிலைமை ரசாபாசமானது. ‘‘நான் நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கி விட்டேன். நண்பர்கள் என்னைத் தடுத்திருக்காவிட்டால் ஒன்று நாற்காலி உடைந்திருக்கும். இல்லை…’’ என்று சந்திரபாபு பதிவு செய்திருக்கிறார்.அதோடு, படமும் நின்றுபோனது.

அதன் பிறகும் சந்திரபாபுவை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த எம்.ஜி.ஆர். ‘‘என்ன பாபு சார்?’’ என்று நலம் விசாரித்தார். படத்துக்கு ‘மாடிவீட்டு ஏழை’ என்று பெயர் வைத்த ராசியோ என்னவோ, சந்திரபாபுவுக்கு கஷ்டகாலம் ஏற்பட்டது. தனது பழைய நண்பர் கஷ்டப்படுவதைப் பொறுக்காத எம்.ஜி.ஆர்., ‘பறக்கும் பாவை’, ‘கண்ணன் என் காதலன்’, தனது சொந்தப் படமான ‘அடிமைப் பெண்’ ஆகிய படங்களில் சந்திரபாபுவுக்கு நடிக்க வாய்ப்புகள் அளித்தார். ‘அடிமைப் பெண்’ படத்தில் நடிக்க அவருக்கு கணிசமான தொகை யையும் ஊதியமாக அளித்தார்.

பி.யு.சின்னப்பா நடித்த ‘கண்ணகி’ படத்தில் கண்ணகியாக நடித்த கண்ணாம்பா பேசும் அனல்தெறிக்கும் வசனங்கள் 60-ஐக் கடந்த பலருக்கு இன்னும் காதுகளில் ரீங்காரமிடும். கண்ணாம்பாவின் கணவர் கே.பி.நாகபூஷணம். எம்.ஜி.ஆர். நடித்த ‘தாலிபாக்கியம்’ படத்தை தயாரித்து இயக்கினார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற இடத்தில் நடந்தது. படப்பிடிப்புக் குழுவினர் மைசூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். திடீரென, நாகபூஷணம் பதறியபடி எம்.ஜி.ஆரை சந்தித்து, ‘‘தயாரிப்பு செலவுக்காக கொண்டு வந்திருந்த 3 லட்ச ரூபாய் தொலைந்து விட்டது. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு திரும்ப வேண்டியதுதான்’’ என்று கலங்கினார். 1966-ம் ஆண்டில் ரூ.3 லட்சம் மிகப்பெரிய தொகை.

அவரைத் தேற்றி ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர்., தனது அண்ணன் சக்ரபாணியின் மைத்துனர் குஞ்சப்பன் மூலம் சென்னையில் இருந்து ரூ.3 லட்சம் கொண்டுவரச் சொல்லி உதவினார். அதோடு மட்டுமல்ல, ‘‘இந்தப் பணத்தை நீங்கள் திருப்பித் தரவேண்டாம்’’ என்றும் சொல்லிவிட்டார். எம்.ஜி.ஆரை பார்த்து கண்களில் கண்ணீருடன் கைகூப்பி நின்றார் நாகபூஷணம்.

‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆர். சொல்வார்… ‘‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் அதிகம். நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை.’’

தொப்பி ரகசியம்

‘அடிமைப் பெண்’ படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர். ராஜஸ்தான் சென்றபோது, அந்த மாநில முதல்வராக இருந்த மோகன்லால் சுகாதியா, எம்.ஜி.ஆருக்கு விருந்தளித்து கவுரவித்தார். அப்போது அவர் பரிசளித்த புசுபுசுவென்ற வெள்ளைத் தொப்பி, எம்.ஜி.ஆருக்கு அழகாக பொருந்தியது. அதிலிருந்துதான் எம்.ஜி.ஆருக்கு தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது.

படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்

- தொடரும்...

High Court acquits ‘depressed’ engineer who killed his son

High Court acquits ‘depressed’ engineer who killed his son


THE HINDU

An engineer who poisoned his five-year-old son to death out of “severe depression” developed after a road accident in which he lost his pregnant wife has been acquitted by the Madras High Court.

In its order acquitting the young engineer – A. Steepen – who was convicted and sentenced to life by a Sessions Court, a Division Bench of Justices M. Jaichandren and S. Nagamuthu said, “It is not every homicide which is made is punishable under the Indian Penal Code. It is only a culpable homicide which is punishable.”

Delivering the order, Justice Nagamuthu said the “unblessed son of a poor family, educated by his poor parents, on becoming an engineer, secured a decent job and lived a life with full of joy and jubilation,” (he) would not have imagined that a “severe blow to his life was fast approaching to make a complete topsy-turvy.”

Steepen was living with his wife and a five-year-old son at West Mambalam, Chennai. On October 20, 2008 he visited his ailing father in a village near Vellore. On his way back to Chennai the next day, Steepen’s car met with an accident in which his wife, then pregnant, died on the spot. Steepen and his son sustained serious injuries and were admitted in a private hospital. The entire medical expenses was taken care by his friends and his landlord, as none of his relatives including in-laws offered any help. Subsequently, his wife’s body was cremated by her parents in the absence of Steepen.

Thereafter, the life of Steepen became difficult. “Everyday went on with extreme grief and agonies; he struggled to make the ends meet and manage the medical expenses as he lost his job due to complete immobility.” Due to this, he developed a “kind of depression”.

On July 8, 2009 Steepen lost his mind “out of depression” and gave sleeping pills to his son, took him to his father-in-law’s house and hanged himself. leaving behind a suicide note. However, he was rescued and admitted to a hospital. Steepen was treated for “severe mental depression” in the Government Royapettah Hospital in the convict ward for about a month and was discharged on August 1, 2009. Meanwhile, a charge-sheet was filed against Steepen on October 10, 2009 and he was later convicted for murder. The Additional Sessions Judge, Fast Track Court IV, Chennai sentenced him to life imprisonment based on the evidence of 19 witnesses, 27 documents and 12 material evidences. Steepen preferred an appeal against the conviction.

Perusing the records, the Bench observed that the culpability as defined under Section 299 of IPC should be established by the prosecution. “A person, who is of unsound mind, cannot have any intention or knowledge in terms of IPC … a person who does not know the consequences of the act that he does, cannot be attributed either with intention or knowledge as is required by IPC,” the judges said.








Hence the court acquitted him of all charges.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...