Monday, April 11, 2016

SC recalls its controversial 2013 verdict on medical entrance

New Delhi: In a significant order, Supreme Court today recalled its controversial judgement scrapping single common entrance test (NEET) for admission to MBBS, BDS and PG courses in all medical colleges, saying it was delivered by a majority verdict without any discussion among members of the bench headed by then Chief Justice of India Altamas Kabir on the day of his retirement.

A five-judge Constitution Bench headed by Justice A R Dave were unanimous in saying that the July 18, 2013, 2:1 verdict of the three-judge bench, which had paved the way for private colleges to conduct their own examination, “needs reconsideration” as “the majority view has not taken into consideration some binding precedents”.

“Suffice it is to mention that the majority view has not taken into consideration some binding precedents and more particularly, we find that there was no discussion among the members of the Bench before pronouncement of the judgment,” the apex court said.

“We, therefore, allow these review petitions and recall the judgment dated July 18, 2013 and direct that the matters be heard afresh. The review petitions stand disposed of as allowed,” it said.

Justice Dave in the 2013 verdict had given a dissenting verdict, while Justice Vikramjit Sen (since retired) had shared the views and findings of then CJI Kabir on the National Eligibility-cum-Entrance Test (NEET).

The verdict, delivered on the day when CJI Kabir demitted office, had created a buzz in the apex court corridors as an advocate had posted on a social networking site about the outcome in advance.

Interestingly, Justice Dave then too in his dissenting judgement had said the three judges of the bench “had no discussion on the subject due to paucity of time” which is normally done.

Allowing the petitions seeking review of the controversial 2013 judgement, the bench also comprising justices A K Sikri, R K Agrawal, Adarsh Kumar Goel and R Banumathi ordered the petitions filed by Christian Medical College, Vellore and others, on which the verdict was delivered, “be heard afresh”.

100 சதவீத வாக்குப்பதிவு சாத்தியமா... By வை. இராமச்சந்திரன்

எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, 2016 பேரவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், பேரணி, மனிதச்சங்கிலி என அரசியல் கட்சிகளையும் விஞ்சும் அளவுக்கு விழிப்புணர்வுப் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகளால் வாக்குப்பதிவு எத்தனை சதவீதம் உயரப் போகிறது என்பதை அறிந்துகொள்ள மே 16 வரை பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்.
நாள்தோறும் உச்சி வெயிலில் பேரணி, மனிதச் சங்கிலி, கடலில் இறங்கி விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நிற்பது, ஒற்றைக்காலில் நின்றுகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த முயலுவது என என்னென்னவோ செய்து வந்தாலும், அந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு செய்தியாக மட்டும் தான் இருக்குமேயொழிய, அது வாக்குப் பதிவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்பது படிக்காத பாமரனுக்குச் செய்ய வேண்டியது. அவர்கள் தான் விழிப்பாக இருந்து தங்கள் ஜனநாயகக் கடமையை சரியாகச் செய்து வருகின்றனரே.
அப்படியென்றால் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இவ்வளவு மேற்கொண்டும் வாக்குப்பதிவை அதிகரிக்க வழியே இல்லையா என்ற கேள்வி எழும்.
100% வாக்குப்பதிவு சாத்தியமே. அதற்கு மத்திய, மாநில அரசுகள், தேர்தல் ஆணையம், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், படித்த மேதாவிகள், மேல்தட்டு மக்கள் என அனைவரது ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
முதலில் வாக்குப்பதிவு குறைவதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் சுமார் 60 முதல் 70% வரை வாக்கு பதிவாகிறது என்றால் கட்சித் தொண்டர்கள் மற்றும் ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர் ஈடுபாட்டுடன் வந்து காத்திருந்து வாக்களிப்பதாலேயாகும்.
ஆனால், அரசின் அனைத்து சலுகைகளையும் பெறும் அரசு ஊழியர்கள், அரசின் கல்வி உதவித்தொகை உள்பட அனைத்து சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, நிறைய படித்துள்ள அறிவு ஜீவிகள், வரிசையில் வந்து நிற்பதையே கௌரவக் குறைச்சலாக கருதும் மேல்தட்டு மக்கள் போன்றோர் வாக்குப்பதிவு செய்வதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை என்பதாலேயே வாக்குப்பதிவு சதவீதம் குறையக் காரணமாகிறது.
வாக்களிக்க வரவே மாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டிருக்கும் இத்தகையோருக்குப் பாடம் புகட்ட வேண்டிய அவசியமும், அவசரமும் அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உண்டு. சில அமைதியான, அதிரடியான நடவடிக்கைகளும் எடுக்க வேண்டியது அவசியம்.
வாக்குப்பதிவு அதிகரிக்க வேண்டுமென்றால் முதலில் வாக்குப்பதிவு செய்யும் முறைகளை இன்னும் எளிமைப்படுத்த வேண்டும். வாக்களிக்க வர விரும்பாதவர்கள் சொல்லும் காரணங்களில் முக்கியமானது, வாக்குச்சாவடிகளில் வரிசையாக நின்று காத்திருந்து வாக்குப் பதிவு செய்வதை விரும்பாதது; எந்தக் கட்சி ஆண்டாலும் ஊழல் தானே விஞ்சுகிறது என அரசியல்வாதிகள் மீதான மிகப்பெரிய அதிருப்தி போன்றவையே முக்கிய காரணமாகும். இதை சரிசெய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.
வாக்குப் பதிவை எளிமைப்படுத்தும் வகையில், இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப செல்லிடப்பேசி, இணையதளம் வழியாக வாக்குப் பதிவு செய்யும் முறையைக் கொண்டு வரலாம். காலதாமதத்தைத் தவிர்த்தல், வெளியூரில் இருக்கும் வாக்காளர்களும் எளிதில் வாக்குப் பதிவு செய்ய ஏற்பாடு செய்தல், எக்கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களையும் கூட, நோட்டாவில் வாக்களிக்க வழி இருப்பதை உணர்த்துதல் போன்றவற்றை செய்ய வேண்டும்.
வாக்குப்பதிவு செய்தவுடன் யாருக்கு வாக்களித்தோம் என்ற விவரம் கிடைக்கும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், வருங்காலத்தில் வாக்களிக்கும் ஒவ்வொருவருக்கும் வாக்களித்ததற்கான ரசீது அல்லது சான்று வழங்க வேண்டும்.
18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும், அதற்கு பின்னர் பெறப்போகும் அனைத்து நலத் திட்டங்களுக்கும் இந்த சான்றுகளை கண்டிப்பாகப் பயன்படுத்தும் வகையில் அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
மத்திய அரசு வாக்களிக்காமல் இருப்பதை தேசக்குற்றமாக அறிவிக்க வேண்டும். வாக்களிக்காதவர்களுக்கு அதற்கான தண்டனையையும் கடுமையாக்க வேண்டும். வாக்களிக்காதவர்கள் அரசின் எந்த நலத்திட்டங்களும் பெறத் தகுதியில்லாதவராக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் 100 சதவீத வாக்குப் பதிவு என்பது சாத்தியமாகும்.

ஆட்சியாளர்கள் உணர்வார்களா?


நம் நாடு எதிர்நோக்கியுள்ள பல பிரச்னைகளும் தேர்தல் காலங்களில் பின்நோக்கித் தள்ளப்படும் பழக்கம் உருவாகியுள்ளது. நமது மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறவும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையவும், அடிப்படைத் தேவைகள் என்ன என்ற விவாதத்தில் எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்டது கல்வி வளர்ச்சியே. ஆனால், சமீபகாலத்தில் கல்வி வளர்ச்சி மற்றும் தரம் கவனிக்காமல் விடப்பட்டு நமது நாட்டின் பெயர் கெட்டுப்போய் உள்ளது.
1985-ஆம் ஆண்டு நான் அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. வகுப்பில் சேர்ந்தபோது, எனது ஆசிரியர்களில் ஒருவரான லேர்ரி ஃப்ரெஞ்ச், "இந்தியாவில் மெட்ராஸ் யுனிவர்சிட்டி எனக்குத் தெரிந்த ஒன்று' எனக் கூறினார். அதற்குக் காரணம் என்ன என்று அவரிடம் மாணவர்கள் வினவியபோது, "அந்த பல்கலைக்கழகத்திலிருந்து இங்கே வந்து படிக்கும் மாணவர்கள் அசாத்தியமான கல்வித்திறனை வெளிப்படுத்துவார்கள்' எனக் கூறினார்.
இதைவிடவும் பெருமையாக, அன்றைய சூழலில் சக மாணவர்களுடன் விவாதித்தபோது ஒருவர் கூறினார்: "இந்தியாவிலிருந்து வந்த மாணவர்கள் அமெரிக்க பிரஜைகளாகி மிக உயர்ந்த நிலைமையில் இருக்க அந்த நாட்டின் தலைசிறந்த கல்வித் தரமே காரணம். மனிதனை முதன்முதலாக நிலவில் காலடி வைக்கும் திட்டத்தில் மூன்று விண்வெளி விஞ்ஞானிகள் தலைமை ஏற்று நடத்தினார்கள். அதில் இரண்டு பேர் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்து உயர் கல்வி பெற்று, பின் அமெரிக்க பிரஜைகளானவர்கள்'.
இப்படி நமக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருந்த நம் நாட்டின் உயர் கல்வித்துறை, இன்றைய நிலைமையில் எப்படி உள்ளது என்பதை நாம் உற்று நோக்க வேண்டியுள்ளது. உலகின் தலைசிறந்த 50 பல்கலைக்கழகங்களில் 4 சீனாவில் உள்ளன என்றும் அந்த 50-இல் ஒன்றுகூட இந்தியாவில் கிடையாது என்பதும் இந்த ஆண்டின் நிலைமை.
தரவரிசைப் பட்டியலில் 200 சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றே ஒன்றுதான் இந்தியாவில் உள்ளது. அது பாம்பே ஐ.ஐ.டி எனும் உயர் கல்வி நிலையம்! இதே பல்கலைக்கழகம் 2009-ஆம் ஆண்டில் 163-ஆம் நிலைமையிலிருந்தது. இன்றைய நிலையில் அது 24 இடங்கள் கீழே தள்ளப்பட்டு 187-ஆம் நிலைக்குத் தாழ்ந்துள்ளது.
நம் நாட்டில் பள்ளிப் படிப்பை முடித்த 9 மாணவ, மாணவியருள் ஒரே ஒருவர்தான் கல்லூரியில் உயர்கல்விக்காக சேர்கிறார். அதாவது, 11% பள்ளி மாணவர்களே கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அமெரிக்காவில் இது 83%.
உயர்கல்வியை முடித்த மாணவர்களின் தரம் பற்றிய ஆய்வை நடத்தியவர்களின் கூற்றுப்படி, கலைக்கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களில் 10-இல் ஒருவரும், பொறியியல் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களில் நான்கில் ஒருவரும்தான் வேலைக்கு எடுத்துக்கொள்ளும் திறமையைக் கொண்டவர்கள். நம் நாட்டில் இயங்கும் கல்லூரிகளில் 90 சதவீதமும், பல்கலைக்கழகங்களில் 70 சதவீதமும் நடுத்தர மற்றும் தரமற்ற கல்வி நிலையங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளன.
2014-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 677 பல்கலைக்கழகங்களும், 37,204 கல்லூரிகளும் இருக்கின்றன. மிக அதிகமான அளவில் உத்தரப் பிரதேசத்தில் 59 பல்கலைக்கழகங்கள், தமிழ்நாட்டில் 56 மற்றும் ஆந்திரத்தில் 47 பல்கலைக்கழகங்கள் உள்ளன.
இந்தியாவின் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் மொத்தம் 2 கோடியே 96 லட்சத்து, 29,022 மாணவ, மாணவியர் பயிலுகிறார்கள். இதில் 1 கோடியே 60 லட்சம் பேர் ஆண்கள், 1 கோடியே 36 லட்சம் பேர் பெண்கள்.
இந்த எண்ணிக்கைகள் ஒருபுறமிருக்க, இவர்கள் கற்கும் கல்வியின் தரம் பற்றி நாம் ஆராய்ந்தால் அது மிகவும் கீழ்மட்டமாக உள்ளது தெரியவரும். பிரிட்டிஷ் அரசாங்கம் விட்டுச் சென்றதுதான் நமது அடிப்படை கல்வி அமைப்பு. ஆங்கில அரசுக்குத் தேவையான அலுவலக உதவியாளர்களைத் தயார் செய்வதே அன்றைய கல்வி நிலையங்களின் தலையான வேலையாயிருந்தது.
நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது 26 பல்கலைக்கழகங்களும், 695 கல்லூரிகளும் இருந்தன. அந்த எண்ணிக்கை வளர்ந்து இன்றைக்கு 30 மடங்கு உயர்ந்த நிலையிலும் 19.4 % மாணவ, மாணவியரே கல்லூரியில் உயர் கல்வி கற்கின்றனர்.
உயர் கல்வி நிலையங்கள் பல்கிப் பெருகுவது ஒருவித வளர்ச்சி என்றபோதிலும், அவற்றின் தரம் வளராத நிலைமையிலேயே உள்ளது.
ஆராய்ச்சி செய்து தேறி வந்தவர்களே கல்லூரி ஆசிரியர்களாக மேலைநாடுகளில் இருக்க முடிந்தது. இந்தியாவில் பட்டப்படிப்பு படித்து முடித்தவர்களே கல்லூரி ஆசிரியர்களாக இருந்தனர். இதன் விளைவாக தரமான கல்வி போதிக்கப்பட முடியவில்லை.
நம் நாட்டின் கல்லூரிகளில் பாடத் திட்டங்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மாற்றியமைக்கப்படும். ஆனால், மேலைநாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் புதிய பாடத்திட்டங்கள் உருவாகும். ஆராய்ச்சிகளில் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி அவை புதிய பாடத் திட்டங்களில் புகுத்தப்படும்.
இந்த நடைமுறைக்கு மிக முக்கியமான தேவை கல்வியில் உச்ச நிலையை அடைந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் நடைமுறையே. நான் அமெரிக்காவில் சென்று படிக்கும்போது தான் அங்கே கல்லூரிகளின் உயர் தரத்திற்கு காரணமான பேராசிரியர்களின் ஒப்புயர்வான நடைமுறையைக் காண முடிந்தது. வகுப்பு ஆரம்பிக்கும் முதல் நாள் எல்லா மாணவனுக்கும் பாடத்திட்டத்தை வழங்கி, தனது வகுப்பில் குறிப்பிட்ட நாளில் எந்த பாடம் நடத்தப்படும் என்ற அட்டவணையையும் ஆசிரியர் வழங்கி விடுவார்.
குறிப்பிட்ட ஒரு வகுப்பில் நடத்தப்படும் பாடத்தை கவனித்து புரிந்துகொள்ளும் வகையில் தயாராக வரவேண்டும். அதற்கு எந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்றும் ஆசிரியர் கூறிவிடுவார். வகுப்பு ஆரம்பிக்கும்போதே மாணவர்கள் தான் குறிப்பிட்ட பாடப் புத்தகத்தை படித்துவிட்டுத்தான் வந்திருக்கிறார்களா என்பதை பல குறுக்கீடு கேள்விகளைக் கேட்டு தெரிந்து கொள்வார் ஆசிரியர்.
கல்லூரிகளில் பாடம் ஆரம்பித்த சில நாள்களிலேயே எந்த அளவு சரியாக கடின உழைப்புடன் கல்வி கற்க வேண்டும் என்ற நிலைமை எல்லா மாணவர்களுக்கும் எளிதாக புரிந்துவிடும். அதை செய்ய முடியாத மாணவர்கள் கல்லூரி படிப்பை விட்டு விடுவார்கள். சர்வசாதாரணமாக கல்லூரியிலிருந்து விலகி ஒரு சாதாரண வேலையில் சேர்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் கலாசார கட்டமைப்பு அங்கே இருந்ததை நான் கண்கூடாகக் காண முடிந்தது.
ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல கண்டுபிடிப்புகளை செய்து முடிக்கும் ஆசிரியர்கள், தங்கள் ஆசிரியர் தொழிலை மிகவும் நேசத்துடன் செய்வதையும் அங்கே காண முடிந்தது. அதிக சம்பளத்துடன் ஒரு தனியார் நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்த ஒருவர், அந்த பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, கல்லூரி ஆசிரியர் பதவிக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
இங்கே உள்ளது போன்ற தேர்வு முறை கிடையாது. வகுப்பிலேயே ஆசிரியர் கேள்வித்தாள்களை வழங்கி பதிலளிக்க வைப்பார். ஒரு மாணவனை குறிப்பிட்ட பாடத்தை கற்கச் செய்வது முதல் அவனை தேர்வு எழுதச் செய்து மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சி பெறச் செய்து உயர் வகுப்பிற்கு அனுப்புவது வரை குறிப்பிட்ட ஆசிரியரின் வேலை என்ற கட்டமைப்பில் உயர் கல்வி அங்கே கற்பிக்கப்படுகிறது.
கடைசியாக ஓர் உதாரணம். எம்.பி.ஏ. பட்டம் பெற கடைசி ஆண்டுக்கான பாடத் திட்டத்தில் ஓர் அம்சம் கூட்டுப்பயிற்சி எனப்படும். வகுப்பில் மாணவ, மாணவியரைப் பல குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தொழில் பிரச்னையைக் கொடுப்பார் ஆசிரியர். பல தொழில்சாலைகளுக்கும், வியாபார நிலையங்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க ஆலோசகர்களை அணுகும் நடைமுறை அமெரிக்காவில் உண்டு.
பல ஆலோசனைகளை எம்.பி.ஏ. பட்டப்படிப்பு உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் வழங்குவதுண்டு.
இதுபோல் வரும் பிரச்னைகளில் பலவற்றைத் தொகுத்து, குறிப்பிட்ட தொழில்சாலைகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் மாணவர் குழுக்களுக்கு தீர்வு கண்டுபிடிக்க பேராசிரியர்கள் கொடுப்பார்கள்.
குறிப்பிட்ட பிரச்னையைப் பெற்றுக்கொண்ட மாணவர் குழு தங்களுக்குள் அந்த பிரச்னையை விவாதித்து சரியான வழிமுறைகளை ஆராய்ந்து பிரச்னையை தீர்ப்பது எப்படி என்ற பதிலை அளிக்க வேண்டும். அதை குறிப்பிட்ட ஒரு நாளில் வகுப்பின் எல்லா மாணவர்கள் மத்தியிலும் வாதம் செய்து சரியான விடையை பேராசிரியர் முன் அளிக்க வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட குழுவின் ஒவ்வொரு மாணவனுக்கும் தகுந்த மதிப்பெண்களை ஆசிரியர் வழங்குவார். இதில் பாடப் புத்தகத்தில் கற்கும் விவரங்களுக்கும் அப்பாற்பட்ட மாணவர்களின் திறமை வெளிப்படும் என்பது அந்த பாடத்திட்டத்தின் கணிப்பு.
இதைப்போலவே எல்லா மாணவர்களுக்கும், "வீட்டிற்கு எடுத்துச்செல்லும் (டேக் ஹோம்) பரீட்சை' என்ற ஒரு திட்டம். கேள்வித்தாள் மாணவனுக்கு அளிக்கப்பட்டு ஒரு வாரத்தில் பதில் எழுதி வரவேண்டும். எந்த பாடப் புத்தகத்தையும் பார்த்து விடை கண்டுபிடிக்கலாம். நூலகத்திற்குச் சென்று பல புத்தகங்களையும் புரட்டிப் பார்த்து விடை தயார் செய்யப்படும். இதன் மூலம் நிறைய புதிய விவரங்களைக் கற்கும் நிலைமை மாணவர்களுக்கு உருவாகும்.
இதுபோன்ற நடைமுறை நான் மாணவனாக இருந்த 1984-86ஆம் ஆண்டுகளில் இருந்த நிலைமை. இன்றைய நிலைமையில் மடிக்கணினிகளின் மூலம் பாடங்களைக் கற்பிக்கும் முறை சர்வசாதாரணமாக அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், பல ஐரோப்பிய நாடுகளிலும், சிங்கப்பூர், ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலும் உருவாகிவிட்டன!
இதை எல்லாம் புரிந்துகொண்ட நம்மில் பலருக்கும் நமது நாட்டின் உயர் கல்வி நிலையங்களில் உள்ள ஊழல், அரசியல் மற்றும் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரங்கள் மிகுந்த கவலையை அளிப்பது வியப்பல்ல. இந்த மோசமான சூழ்நிலையை உடனடியாக சரிசெய்து நம் நாட்டில் கல்வி அறிவைப் பெருக்கி அதனால் உருவாகும் மாணவர்களின் அறிவு வளத்தை உபயோகித்து நமது பொருளாதாரத்தையும், சமூக முன்னேற்றத்தையும் பெரிதாக்குவது போர்க்கால அவசரம் என்பதை நம் நாட்டின் ஆட்சியாளர்கள் உணருவார்களா? என்ற கேள்வி எழுகிறது.

நியாயமான உயர்வு!

First Published : 08 April 2016 12:21 AM IST

இந்தியத் தொழில்நுட்ப கல்லூரிகளில் (ஐ.ஐ.டி.) வரும் கல்வியாண்டு முதல், இளநிலை பட்டப் படிப்புகளுக்கான கட்டணம் சுமார் இரண்டரை மடங்கு உயர்த்தப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு ரூ.90 ஆயிரமாக இருக்கும் கல்விக் கட்டணம், வரும் கல்வியாண்டில் ரூ.2 லட்சமாக உயர்கிறது.
 இப்போதெல்லாம் ஐ.ஐ.டி. மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில்தான் அரசியல் நடைபெறுகிறது என்பதால், இந்த கல்விக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் இருக்கும். எனினும், இந்தக் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்பதே அனைவரும் அறிந்த உண்மை.
 கல்வி நிறுவன பராமரிப்பு மற்றும் பேராசிரியர்களின் ஊதியம், வருகைப் பேராசிரியர்களின் சன்மானம் எல்லாமும் உயர்ந்துகொண்டே போகிறபோது, கல்விக் கட்டணம் மட்டும் உயர்த்தப்படாமல் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அர்த்தமற்றது.
 தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கல்விக் கட்டணமாக ரூ.70,000 மற்றும் இதர கட்டணங்களும் சேர்த்து ரூ.1.10 லட்சம் வரை ஆண்டுதோறும் செலுத்துகின்றனர். தனியார் பல்கலைக்கழகங்களைப் பொருத்தவரை கல்விக் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.1.35 லட்சமாக இருக்கிறது. இவர்களுடைய இதர கட்டணங்களைச் சேர்த்தால் குறைந்தது ரூ.1.75 லட்சம் வரை செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், இந்தியாவிலேயே மிகவும் தரமான கல்வியை அளிக்கும் ஐ.ஐ.டி. போன்ற நிறுவனங்களில் கல்விக் கட்டணம் உயர்த்தப்படுவதில் தவறு இல்லை.
 மேலும், ஐ.ஐ.டி.களில் படித்துப் பட்டம் பெறும் மாணவர்கள் வளாக நேர்காணலில் வேலை கிடைக்கப் பெறுகிறார்கள். இவர்களின் சம்பளம் குறைந்தபட்சம் ரூ.12 லட்சம் முதலாக ரூ.2 கோடி வரை. ஆகவே, இந்த அளவுக்கு சம்பளம் பெறக்கூடிய மாணவர்கள் இந்தக் கல்வி நிறுவனத்தில் நான்கு ஆண்டுகளில் ரூ.8 லட்சம் செலுத்துவது பெரும் பிரச்னையான விவகாரம் அல்ல.
 மேலும், இந்தக் கல்விக் கட்டணம் தொடர்பாக இக் குழு எடுத்துள்ள முடிவு, அனைத்து கல்லூரிகளிலும், அனைத்து வகை படிப்புகளுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டிய தேவை இன்றுள்ளது. கல்விக் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.2 லட்சமாக உயர்த்தியுள்ள குழுவின் மற்ற பரிந்துரைகள் வருமாறு:
 1. ஒவ்வொரு மாணவருக்கும் வட்டியில்லாத கல்விக் கடன் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் (ஒவ்வொரு ஐ.ஐ.டி.யிலும் உள்ள வங்கிக் கிளை இதனைச் செய்யும்).
 2. ஐ.ஐ.டி.யில் சேரும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்கள் அனைவரும் கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
 3. குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் மூன்றில் இரண்டு பங்கு கட்டணக் கழிவு தரப்படும்.
 ஐ.ஐ.டி. கல்விக் கட்டணக் குழு எடுத்துள்ள இந்த முடிவு பல தரப்பு மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதேபோன்ற நிபந்தனைகளை அனைத்துக் கல்லூரிகளும் பின்பற்றுமேயானால், அனைவரும் உயர் கல்வி படிப்பதில் தடைஏதும் இருக்காது; பெற்றோர்களுக்கும் நிதிச்சுமை இருக்காது.
 உயர் கல்வி படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பிணை இல்லாமல் கல்விக் கடன் வழங்கவும், அவர்கள் அந்தக் கடனை அடைக்கும் வரை அவர்களது கல்விச் சான்றுகள் வங்கியுடன் பிணைக்கப்பட்ட ஆவணமாக நீடிக்க வேண்டும் என்பதுமான ஒரேயொரு நிபந்தனையானது, தற்போது வங்கிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான கல்விக் கடன் பிரச்னைக்கு எளிய தீர்வாக அமையும்.
 இப்போது வங்கிகள் கல்விக் கடன் அளிக்கத் தயங்கக் காரணம், இந்த மாணவர்கள் கல்விக் கடனை செலுத்த வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருப்பதும், இந்தக் கடனை அரசு தள்ளுபடி செய்துவிடும் என்ற எண்ணமும்தான். கல்விச் சான்றிதழ்கள் பிணைக்கப்பட்ட ஆவணமாக மாறும்போது, அவர்கள் நிச்சயமாக இந்தக் கடனை அடைக்க முற்படுவர். மேலும், இது மாணவர்களின் முழு உழைப்பு சார்ந்ததாக அமையும். பெற்றோர் இது குறித்து கவலைப்பட வேண்டிய தேவை இருக்காது.
 ஐ.ஐ.டி. கல்விக் குழுமம் செய்திருப்பதைப் போல, குடும்ப ஊதியம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மூன்றில் இரண்டு பங்காகக் குறைப்பது குறித்து அனைத்து கல்வி நிறுவனங்களும் முடிவெடுப்பது சமூகப் பயன் சார்ந்ததாக இருக்கும். இன்று பெரும்பாலானோர் தனியார் கல்வி நிறுவனங்களில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கின்றனர். அனைவரும் அதிக சம்பளம் வாங்குவோர் அல்லர். அவரவர் சம்பளத்துக்கு ஏற்ப, குழந்தைகளின் கல்விக் கட்டணமும் அமைக்கப்பட்டால், அந்தக் குடும்பங்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடும்.
 ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற அரசுக் கல்லூரிகளுக்கு மட்டுமே அல்லாமல், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இதேபோன்ற நிபந்தனைகளுடன் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட அரசு முயல வேண்டும். குறிப்பாக, மருத்துவக் கல்லூரிகளில் இவ்வாறான, குடும்பத் தலைவரின் மாத ஊதியத்துக்கு ஏற்ப கல்விக் கட்டணத்தைக் குறைக்கும் போக்கு, அமல்படுத்தப்பட வேண்டும்.
 உயர்கல்வி பயிலும் அனைவருக்கும் கல்விக் கடன், அவரவர் குடும்ப வருமானத்துக்கு ஏற்ப சலுகையுடன் கல்விக் கட்டணம் - இந்த இரண்டும் இன்றைய கல்விமுறையின் கட்டாயங்கள். இதை சாத்தியமாக்கும் அரசுக்கு வாழையடி வாழையென அந்த மாணவர்கள் நன்றி சொல்வார்கள்.

Sunday, April 10, 2016

More patients leave hosps against medical advice

TNN | 

Chennai: Early this month, standing outside the intensive care unit where her husband Ganesan R, battling a heart disease, lay, a teary-eyed Gayatri made a painful decision.

Against the advice of doctors, she signed the papers, booked an ambulance and took her 65-year-old husband home. He lived for just a couple of days after that but when his family was by his side he breathed his last. "It was painful but we held his hands and bade goodbye," recalls the 62-year-old home maker. The family estimates it would have saved at least 1 lakh it planned to borrow for his stay in hospital.

An increasing number of seriously ill people have been leaving hospital either because they can't afford treatment or because they want to be with their loved ones at the end.

A study by doctors at Apollo Hospitals showed that at least 15% of severely-ill patients leave ICU against medical advice. A team led by critical care expert N Ramakrishnan found that 100 of 600 patients leave the critical care unit of a corporate hospital. A month later, the doctors confirmed that 53% of the patients died and the status of 21% was unknown. "Nearly one-fourth of the patients were alive after one month although we don't know the quality of their lives. Understanding the outcomes of these patients will help refine care at CCUs," said Dr Ramakrishnan.

Doctors say the bigger the hospital, the greater the discharge rate. "Tertiary care is expensive and ICU rent alone can go up to 15,000. This is besides the medicines, consultation and procedure fee. There are patients who have spent lakhs of money to see their kin die," said geriatrician Dr VS Natarajan.

But discharge against medical advice isn't always easy. As happened when Suchiammal V, 70, was discharged on request from her family. "It got messy. She was breathless all the time. It was tough to watch a loved one suffer for nearly three weeks. When she left, we were drenched in guilt," said A Victor, her son, who works in an automobile factory.

More importantly, it becomes difficult to get a death certificate from a doctor if the end comes at home. While the Ganeshans were lucky to have a doctor as a neighbour, businessman S Rathinavelu of Valasaravakkam said it took nearly five hours to get death certificate for his 70-year-old mother, who died at home of stomach cancer. "We paid nearly 1,000 to get a certificate. We picked up the doctor from his clinic in Porur and dropped him back," said Rathinavelu.

Although the overall numbers represent only a fraction of hospital patients, most doctors feel the increase in early discharges is more likely an indicator of the intense pressures, including economic and social, patients may face.

Don't Make Do With Guest Lecturers

Published: 10th April 2016 03:08 AM
Last Updated: 10th April 2016 03:14 AM
CHENNAI: Appalled by the practice of the Dr. Ambedkar Law University engaging guest lecturers, Madras High Court has directed the varsity to give up the practice.
“We are appalled by the contention raised in the counter affidavit, inasmuch as the University seems to be running on the strength of guest lecturers. This is not the way a University can function. Every subject should be taught by a full time professor or lecturer,” a division bench of Justices R Sudhakar and S Vadyanathan has said.
The bench was allowing a writ appeal from PRL Rajavenkatesan, seeking to quash an order of a single Judge dated August 5, 2013, refusing to appoint him as an assistant professor in environmental law.
“A Guest Lecturer is only a supplement and cannot be a primary mode of imparting education. We find the attitude of the university, namely that having guest lecturers belies the need to appoint regular faculty, affronting the  system of education and is an abdication of its role as an educational institution,” the bench said.
After noting that though the appellant had secured the highest marks in environmental law, he had not been selected.
The bench directed the University to redo the selection process in respect of Environmental Law by appointing an appropriate Committee and complete the said process within four weeks on the basis of the records already available.

Husband Not Guilty of Having Physical Relation With Wife: Court

Published: 10th April 2016 10:11 AM
Last Updated: 10th April 2016 10:11 AM
NEW DELHI: A husband cannot be held guilty of establishing physical relations with his wife, a Delhi court has said while acquitting a man charged with alleged kidnap and rape of a minor girl.     
Additional Sessions Judge Gautam Manan acquitted the man, a resident of Jahangirpuri in north Delhi, noting that the prosecution failed to prove the charges against him.           
"Accused, being the legally wedded husband of the girl, cannot be held guilty of establishing physical relations with his wife which as per the deposition of the prosecutrix are consensual," the judge said.            
The court observed that the victim categorically stated that she went away with him voluntarily.           
"In view of the material on record, it appears that prosecutrix was willing and consenting party and it seems that everything has happened with her will," it said.   
According to the prosecution, a complaint was lodged by the alleged victim's mother claiming that her 14-year-old daughter was kidnapped by the accused on July 15, 2014.     
The girl, who was missing for almost a year, was produced at the police station a year later by her mother and the accused was arrested for the alleged offences of rape and kidnapping under IPC besides the offence of aggravated sexual assault under Protection of Children from Sexual Offences (POCSO) Act.            
The girl, however, informed the court that she was a major and eloped with the man as she was in love with him.       
The court also noted that the girl had even provided an affidavit to support her claims.   
"Stand of the prosecution that the prosecutrix was a minor is not established by the documents relied upon by them," the judge said.     
During the trial, the accused had denied the allegations and claimed innocence.          
The judge, while acquitting him, observed that there was no evidence on record that the girl was enticed by him in any manner to go with him.  

NEWS TODAY 25.12.2025