Thursday, April 14, 2016

விரைவில் விற்பனைக்கு வருகிறது குறைந்த விலை 4-ஜி ஸ்மார்ட்போன்

தினமணி

விரைவில் விற்பனைக்கு வருகிறது குறைந்த விலை 4-ஜி ஸ்மார்ட்போன்

விரைவில், ஆண்டு இறுதிக்குள் ரூ.3 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் 4-ஜி ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனா, தைவான், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 4-ஜி தொழில்நுட்பமும், 4-ஜி ஸ்மார்ட் போன்களும் பரவலாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இதனால் அங்குள்ள செல்பேசி தயாரிப்பு நிறுவனங்களால் குறைந்த விலைக்கு கருவிகளை உற்பத்தி செய்ய முடிகிறது.

இதையடுத்து இந்தியாவில் 4-ஜி சேவையை விரிவுபடுத்துவதில் ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட செல்பேசி சேவை வழங்கும் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதனால் வாடிக்கையாளர்களிடம் 4-ஜி  ஸ்மார்ட்போன்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு சந்தையை பிடிக்கும் நோக்கில் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் போன்களின் விலையை குறைத்து வருகின்றன.

இந்த வாரத்தில் சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான பிகாம் சலுகைகள் உள்பட ரூ.3,999க்கு 4-ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.8 ஆயிரத்துக்கு சந்தையில் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் ஆண்களை சந்தேகப்பட காரணங்கள்

பெண்கள் ஆண்களை சந்தேகப்பட காரணங்கள்

மாலைமலர்

பதிவு: ஏப்ரல் 13, 2016 13:03

ஆண்கள் கேட்கும், செய்யும் விஷயங்களை கூட பெண்கள் சில சமயங்களில் தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்கிறார்கள்.

பெண்கள் சில சமயங்களில் ஆண்களை பற்றி தவறாகவும் நினைப்பதுண்டு. ஆண்கள் கேட்கும், செய்யும் விஷயங்களை கூட பெண்கள் சில சமயங்களில் தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்கிறார்கள்.

* நண்பர்களுடன் வெளியே சென்றால் ஆண்கள் மதுவருந்த தான் செல்கிறார்கள் என்ற எண்ணம். ஆண்கள் எப்போதும் பெண்கள் முன்பு எளிதாக புலம்பவோ, கலங்கவோ மாட்டார்கள், நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்கள்.

* எதையாவது பற்றி ஆண்கள் ஆழ்ந்து சிந்தனை செய்தால், தட்டிக்கழிக்க முயற்சி செய்கிறார்கள் என்று கருதுவது. ஆண்கள் எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ய முற்படுவதில்லை என்பதை பெண்கள் பெருமளவில் புரிந்துக் கொள்ள மாட்டார்கள்.

* ஷாப்பிங் செல்ல அழைத்து ஆண்கள் வர மறுத்தால், தங்கள் மீது அன்பு குறைந்துவிட்டது, நாட்டம் இல்லை என்று எண்ணுவது. காலை முதல் மாலை வரை கணினி முன்பு உட்கார்ந்து அலுத்து போய் வருபவனை மாலை வெளியே அழைத்தால் அவன் வர மறுப்பது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பதால் தான். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் சில சமயங்களில் பெண்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள்

* அலுவலகத்தில் இருந்து நேர தாமதமாக வந்தால், நண்பர்களுடன் அரட்டையடித்துவிட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் பெண்களின் மனதில் சந்தேகம் எழுகிறது. டார்கெட், டேட்லைன் போன்றவை பற்றி பெண்களுக்கு பெரிதாய் தெரிவதில்லை என்பதால் தான் இந்த எண்ணங்கள் எழுகின்றன.

* வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் போதெல்லாம் ஆண்கள் தப்புத்தண்டா செய்வார்களோ என்ற எண்ணம் சில பெண்களுக்கு எழுவது இயல்பு. சில ஆண்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதற்காக மொத்தமாக எல்லா ஆண்களையும் குறை சொல்ல கூடாது.

- எப்போதும் சந்தேக கண்ணுடன் பெண்கள் ஆண்களை பார்ப்பதால் தான் ஆண்கள் சில விஷயங்களை பெண்களிடம் சொல்லாமல் மறைக்கிறார்கள். மேலும் பொய் சொல்லவும் செய்கிறார்கள். இதனால் தான் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

படித்தேன் உங்களிடம் பகிர்கிறேன்

படித்தேன் உங்களிடம் பகிர்கிறேன்

நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன்..
விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையை சுற்றி அமர்ந்தார்கள்.. நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்..
எந்த எல்லைக்கு பணி நிமித்தமாக செல்கிறீர்கள்..?
ஆக்ராவுக்கு ..அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின்பு எல்லையில் பாதுகாப்பு பணி ...
ஒரு மணி நேரம் சென்றிருக்கும்.. அப்பொழுது ஒரு அறிவிப்பு.. மதிய உணவு தயார்..
சரி உணவு வாங்கலாம் என்று நான் என் பர்ஸை எடுக்க...பின்னால் ராணுவ வீரர்களின் பேச்சை கேட்டேன்..
நீ சாப்பாடு வாங்கலையா?
இல்லை ..விலை அதிகம்..என்னால் அவ்வளவு காசு செலவழிக்க முடியாது.. மூன்று மணி நேரம் போனால் டெல்லி..அங்கு இறங்கி உண்ணலாம் ..விலை குறைவு..
ஆமாம்..உண்மை..
இதை கேட்ட பொழுது.... மனம் வலித்தது..
விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த விமான பணிப்பெண்ணிடம் சென்று, பதினைந்து உணவுக்கான காசை கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுக்க சொன்னேன்..
அந்த பணிப்பெண் என் கைகளை பிடித்தாள்.. கண்களில் கண்ணீர்.. இது கார்க்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்து என்றாள்..
நான் உண்டு முடித்து, கை கழவ சென்றேன்.. அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தி, நீங்கள் செய்தததை நான் பார்த்தேன்.. இந்தாருங்கள்..என் பங்கு ரூபாய் 500 என்று என்னிடம் கொடுத்தார்..
நான் என் இருக்கைக்கு திரும்பினேன்..
சற்று நேரத்தில் விமான கேப்டன் என்னிடம் வந்து , என் கைகளை பிடித்து குலுக்கி, நான் முன்பு ஏர் போர்ஸ் பைலட்டாக இருந்தேன்..ஒரு நாள் எனக்கும் ஒருவர் உணவு வாங்கி கொடுத்தார். இது ஒரு கருணை செயல்..
மிக்க சந்தோஷம்.. உங்களை போன்றவர்களை தாங்கி இந்த விமானம் பயணிப்பது..என்று சொல்லி சென்றார்.
ஒரே கைதட்டல் விமானத்துக்குள் விண்ணுக்கு எட்டும் வரை..
முன்னால் இருந்த ஒரு 18 வயது இளைஞன் என்னிடம் கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயை திணித்தான்..
விமானம் வந்து நின்றது..நான் இறங்கினேன்.. இறங்கும் பொழுது ஒருவர் என் சட்டை பையில் சில நோட்டுக்கற்றைகளை திணித்தார்...
இறங்கி நடந்தேன்.. அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச்செல்லும் இராணுவ வண்டிக்காக காத்திருந்தார்கள்..
அவர்கள் அருகில் சென்றேன்.. நான் செலவழித்த பணத்தை விட, இப்பொழுது என்னிடம் அதிக பணம்..
ஒரு தூண்டுதல்..பலரின் வேண்டுதலை நிறைவேற்றியது போல்..
அனைத்து பணத்தையும் அவர்களிடம் கொடுத்தேன்.. போகும் வழியில் நன்றாக சாப்படுங்கள்.. கடவுள் உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும்..
காரில் ஏறி அமர்ந்தேன்.. ஒரு ஆத்ம திருப்தி..
இவர்கள் எல்லைகளை பாதுகாத்துக்கொண்டு.. உயிரினை துச்சமாக மதித்து எப்படி நம்மை காக்கிறார்கள்.. இவர்களுக்கு நான் கொடுத்தது ஒன்றுமில்லை...இதை புரியாத ஒரு பெரும் கூட்டம் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
வெறும் பொழுது போக்கு அம்சங்களை தரும் சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றி கொண்டாடி, கோடி கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம், ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் மற்றும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கோடி கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம், இந்த இராணுவ வீரர்களை நினைத்துக்கூட பார்ப்பதில்லை என்ற வேதனை என்னை தாக்கியது...படித்ததில் மனம் வலித்தது- Velan

ஆங்கிலம் அறிவோமே - 105: அன்புள்ள ரூபாய்!

ஆங்கிலம் அறிவோமே - 105: அன்புள்ள ரூபாய்!

ஜி.எஸ்.எஸ்

கேக்கின் ஒரு சிறு பகுதி வேண்டுமென்றால் Piece of cake என்கிறோம். வெண்ணெய் அல்லது பாலாடைக் கட்டியில் ஒரு சிறு பகுதியைக் குறிக்க a piece of cheese எனலாமா?

கூடாது. ஆங்கிலத்தில் அததற்கென்று சில வார்த்தைகள் உண்டு. அவற்றை அறிந்துகொண்டு பயன்படுத்துவதே சாலச் சிறந்தது என்பது என் piece of advice.

# A sliver of cheese

# A serving of meat

# A bar of soap

# A tube of tooth paste

# A container of shampoo

# A bottle of perfume

# A glass of water

# A bowl of rice

# A can of soup

# A dash of salt

# A sheet of cardboard

# A lump of clay

Rhythm என்ற வார்த்தையின் சிறப்பு என்ன? இது ஒரு வாசகரின் கேள்வி. “இது கூடவா தெரியாது?’’ என்றபடி சீரின் சிறப்பையும் தாளத்தின் மாண்பையும் பக்கம் பக்கமாக எடுத்து ரைக்க கவிஞர்களும் இசை ஆர்வலர்களும் தயாராகக் கூடும். ஆனால், இந்தப் பகுதிக்கான கேள்வி என்று பார்க்கும்போது Vowels எதுவுமே இல்லாத வார்த்தை அது என்பதே பதிலாக இருக்க வாய்ப்பு உண்டு. குறைந்தது நான்கு எழுத்துகள் கொண்ட, vowels இல்லாத ஆங்கில வார்த்தை எதுவும் எனக்கு நினைவுக்கு வரவில்லை. உங்களுக்கு வருகிறதா?

Facetious, subcontinenta# இந்த இரண்டு வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் a,e,i,o,u ஆகிய ஐந்து vowels-ம் உள்ளன. என்றாலும் வேறொரு விதத்தில் இவை நேரெதிரானவை. எப்படி என்பதை யோசியுங்களேன்.

Asian, Asiatic ஆகிய இரண்டு சொற்களும் ஒரே பொருள் கொண்டவையா என்பது ஒரு வாசகரின் கேள்வி. ஆசியாவைச் சேர்ந்தவர் அல்லது ஆசிய ஆகிய இரண்டு அர்த்தங்களிலும் இரண்டு வார்த்தைகளுமே மாறி மாறிப் பயன்படுத்தப்படுகின்றன. என்றாலும் Asiatic என்பது கொஞ்சம் தரக்குறைவான பயன்பாடு என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.

தவிர இந்தியா அல்லது இலங்கையைச் சேர்ந்த ஒருவர் வேறு நாட்டில் வசிக்கும்போது அவரை Asian என்று குறிப்பிடும் பழக்கமும் அதிகமாகிவருவதை பிரிட்டிஷ் நாளிதழ்களில் காண முடிகிறது. The Asian Community of London. The Asians of South Africa.

Indispensable என்ற வார்த்தைக் கும், dispensary என்ற வார்த்தைக்கும் என்ன தொடர்பு என்பதை அறிய விரும்புகிறார் ஒரு வாசகர்.

Dispense என்றால் பலருக்கும் ஒன்றைப் பகிர்ந்து அளிப்பது என்று அர்த்தம். The soldiers went round dispensing rifles.

மருந்துகள் அளிக்கப்படும் அறையை dispensary என்கிறார்கள். The doctor went to dispensary from the out-patient ward. This Medica# Centre is equipped with a dispensary having al# main medicines.

Dispense என்பதற்கு இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. குறிப்பிட்ட ஒன்று இல்லாமலேயே செயல்படுவது அல்லது ஒன்றை விட்டுவிடுவது. Let us dispense with the formalities. இந்த அர்த்தத்தின் அடிப்படையில்தான் indispensable என்ற வார்த்தை உருவாகியிருக்கிறது. I am indispensable in this office என்றால் நான் இந்த அலுவலகத்தில் தவிர்க்க முடியாதவன் (அதாவது நான் இல்லாமல் இந்த அலுவலகம் இல்லை) என்று அர்த்தம். Water and air are indispensable for life.

இந்தப் பகுதியில் முன்பு குறிப்பிட்ட இரு வார்த்தைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு இதுதான். Facetious என்ற வார்த்தையில் ஐந்து vowels-ம் (a,e,i,o,u என்று) ஏறு வரிசையில் உள்ளன. Subcontinenta# என்ற வார்த்தையில் (u,o,i,e,a என்று) இறங்கு வரிசையில் உள்ளன.

# Rupee is dearer என்றால் என்ன அர்த்தம்?

Dear என்பது அன்பைக் குறிக்க மட்டுமல்ல. அதிக விலை மதிப்பு கொண்டது என்ற அர்த்தமும் அதற்கு உண்டு.

# பசுத்தோல் போர்த்திய புலி என்ப தற்குச் சமமான ஆங்கிலப் பழமொழி உண்டா?

A wolf in lamb’s clothing.

# Megalopolis என்றால் என்ன?

மிகுந்த மக்கள்தொகை கொண்ட ஒரு நகரம் தொடர்ந்து வளர்ச்சி யடைந்து, விரிவடைவது. (இதன் காரண மாகப் புறநகர்க ளெல்லாம் நகரின் பகுதிகளாகிவிட வாய்ப்பு உண்டு).

நீங்க எப்படி மனம் ஒத்த தம்பதியாக இருக்கீங்க?

எங்களிடையே peace இருப்பதற்குக் காரணம் நாங்க ஒருத்தருக்கொருத்தர் piece of advice-னு எதையும் கொடுத்துக்காததுதான்

Straight என்றால் உங்களுக்குத் தெரியும். Draw a straight line என்றால் ஒரு நேர்கோட்டினை வரைவீர்கள். He is a straight forward person என்றால் நேர்மையான மனிதர்.

Strait என்றால்? தமிழ்நாட்டையும், இலங்கை வட மாகாணத்தில் இருக்கும் மன்னார் பகுதியையும் இணைக்கும் பாலம் என்று Palk ஜலசந்தியைக் குறிப்பிடுவார்கள். ஆக, strait என்றால் ஜலசந்தி என்பது உங்களுக்குத் தெரிந்துவிட்டது. Strait என்பது இரு கடல்களையோ இரு பிரம்மாண்டமான நீர்ப்பரப்பையோ இணைக்கும் குறுகலான பகுதி.

Strait என்பதற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. சங்கடமான அல்லது கடினமான ஒரு சூழலைக் குறிக்கவும் strait என்ற வார்த்தை பயன்படுகிறது. Recession left him in severe financia# straits. பிரெஞ்ச் மொழியில் estreit என்றால் குறுகலான, டைட்டான என்று அர்த்தம்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

எம்ஜிஆர் 100 | 42 - ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


M.G.R.மீது மக்கள் அன்பை பொழிந்து தங்கள் குடும்பத்தில் ஒருவராக அவரை நினைத்ததற்கு வெறும் சினிமாக் கவர்ச்சி மட்டுமே காரணமல்ல; அதையும் தாண்டிய அவரது மனிதநேய செயல்பாடுகள்தான் காரணம். இதற்கு ஏராளமான ஆதாரங்கள்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘பரிசு’ படம் 1963-ம் ஆண்டு வெளியாகி 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படம். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாக நடிகை சாவித்திரி நடித்திருந்தார். படத்தின் கதையை எழுதிய கே.பி. கொட்டாரக்கரா, படத்தின் இயக்குநர் டி.யோகானந்த் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். ‘பரிசு’ படத்தின் சில காட் சிகள் தேக்கடியில் படமாக்கப்பட்டன.

தேக்கடியில் நடந்த படப்பிடிப்பின் போது ஒருநாள் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென வேகமாக வந்து எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார். அவரது இரு பெண் குழந்தைகளும் பரிதாபமாக அருகே நின்றன. அவரை எழுந்திருக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்., ‘‘என்ன விஷயம்?” என்று விசாரித்தார்.

அந்தப் பெண்ணின் பெயர் தேவகி. ‘‘என் கணவருக்கு குடிப் பழக்கம் உண்டு. வனத்துறையில் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு சரியாக போவதில்லை. ஒரு நாள் குடித்துவிட்டு சென்ற என் கணவர் காட்டு யானை தாக்கி இறந்துவிட்டார். அரசு நிர்வாகம் நஷ்ட ஈடோ, கருணைத் தொகையோ தரவில்லை. எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆரிடம் அழுதவாறே முறையிட்டார் தேவகி.

அதோடு, ‘‘இரண்டு பெண் குழந்தை களை வைத்துக் கொண்டு தனியாக இருக்கும் என் குடிசைக்கு இரவு நேரங் களில் சிலர் தவறான நோக்கத்தோடு வந்து வாசலில் நின்று கலாட்டா செய் கிறார்கள்’’ என்று சொல்லிக் கதறினார். எம்.ஜி.ஆரின் கண்கள் கலங்கிவிட்டன.

தேவகியிடம் எம்.ஜி.ஆர்., ‘‘அழா தேம்மா. உன் கணவர் பணியாற்றிய வனத்துறையில் உனக்குத் தெரிந்த அதிகாரி யாராவது இருந்தால் நான் கூப்பிடுவதாக சொல்லி நாளை அழைத்து வா. உன் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இருந்து உனக்குத் தெரிந்த டீச்சரையும் கூட்டிக் கொண்டு வா’’ என்று சொல்லி அனுப்பினார்.

அதேபோல, வனத்துறை அதிகாரி ஒருவரையும் தன் பிள்ளைகள் படிக் கும் பள்ளியில் இருந்து டீச்சர் ஒரு வரையும் மறுநாள் படப்பிடிப்பு நடக் கும் இடத்துக்கு தேவகி அழைத்து வந் தார். அவரது அதிர்ஷ்டமோ என் னவோ, அந்த வனத்துறை அதிகாரி எம்.ஜி.ஆரின் ரசிகர். எம்.ஜி.ஆரை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் இருந்து மீளவே அவருக்கு வெகுநேரம் பிடித் தது. அவரிடம் எம்.ஜி.ஆர். விசாரித்தார்.

‘‘பலமுறை எச்சரித்தும் குடிப் பழக்கத்தால் தேவகியின் கணவர் சரியாக பணிக்கு வருவதில்லை. அவரது சாவுக்குக் கூட குடிதான் காரணம். தெளிவாக இருந்திருந்தால் யானையிடம் இருந்து தப்பித்து இருக்கலாம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் வனத்துறை அதிகாரி கூறினார்.

அவரிடம் எம்.ஜி.ஆர்., ‘‘அது இருக்கட்டும். இப்போது இவர்கள் நிலை ரொம்ப பரிதாபமாக உள்ளது. உங்கள் அலுவலக விதிமுறைகள்படி இவர்களுக்கு அதிகபட்சமாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்ய நடவடிக்கை எடுங்கள். இது சம்பந்த மாக உயர் அதிகாரிகள் யாரிடமாவது பேச வேண்டும் என்றாலும் நானே பேசுகிறேன்’’ என்றார்.

அந்த அதிகாரியும், ‘‘நீங்கள் இவ் வளவு தூரம் சொல்லும்போது நான் முடிந்தவரை உதவுகிறேன்’’ என்றார்.

மேலும், ‘‘இப்போது குடிசையில் இருக்கும் இவர்கள் கவுரவமாக தங்கும் வகையில் வாடகைக்கு சிறிய வீட்டை இவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா?’’ என்றும் வனத்துறை அதிகாரியிடம் கேட்ட எம்.ஜி.ஆர்., அதோடு நிற்கவில்லை. ‘‘தேவகிக்கு ஏதாவது வேலை வாங்கித் தர முடியுமா?’ என்றும் கேட்டார்.

எம்.ஜி.ஆரே கேட்கும்போது அதுவும் அவரது ரசிகரான அதிகாரி மறுப்பாரா? இரண்டுக்கும் ஒப்புக் கொண்டார். வீடு ஏற்பாடு செய்து தருவதுடன் தனக் குத் தெரிந்த ஒரு வீட்டில் தேவகியை வீட்டு வேலை செய்ய சேர்த்து விடுவதாகவும் கூறினார்.

தேவகியைப் பார்த்து, ‘‘என்னம்மா? வீட்டு வேலை செய்ய உனக்கு சம் மதமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். தேவகியும் சம்மதித்தார்.

பின்னர், அவரது பிள்ளைகள் படிக் கும் பள்ளியின் டீச்சரை அழைத்து, எஸ்.எஸ்.எல்.சி. வரை இரண்டு பிள்ளை களும் படிப்பதற்கான செலவுகளை எம்.ஜி.ஆர். விசாரித்தார். தயாரிப்பாளர் கொட்டாரக்கராவிடம் தனியாகப் பேசி கணிசமான ஒரு தொகையை வாங்கினார். அதை தனது சம்பளத்தில் கழித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, அந்தத் தொகையை அப்படியே தேவகியிடம் எம்.ஜி.ஆர். கொடுத்தார்.

ஒருவாரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு அந்த வனத்துறை அதிகாரி வந்தார். உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டதாகவும் அரசு மூலம் தேவகிக்கு நஷ்ட ஈடாக ரூ.27 ஆயிரம் கிடைக்கும் என்றும் இன்னும் ஒரு மாதத்தில் அந்தப் பணம் கிடைத்துவிடும் எனவும் கூறினார். இதைக் கேட்டு எம்.ஜி.ஆர். மிகவும் மகிழ்ச்சி அடைந் தார். 1963-ம் ஆண்டில் ரூ.27 ஆயிரம் என்பது பெரிய தொகை.

இப்போதும் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து அழுதார் தேவகி. இந்த முறை அவரது கண்களில் இருந்து வந்தது, நன்றிப் பெருக்கால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீர்!

- தொடரும்...

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஆதரவற்ற பெண் களுக்கு திருமண நிதி உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் வழங் கும் திட்டம் ஆகியவற்றை செயல் படுத்தியதோடு, ஆதரவற்ற விதவை தாய்மார்களின் பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங் கவும் உத்தரவிட்டார்.

Wednesday, April 13, 2016

Entrance test to fill PG medical seats in November


The Health Ministry will hold the National Eligibility-cum-Entrance Test (NEET) for postgraduate medical admissions in November this year.

The ministry is also considering postponing entrance exams for undergraduate courses — the All India Pre-Medical Test — scheduled for May 1, by two months. The move comes a day after the Supreme Court approved a pan-Indian, common medical entrance exam.

The modalities are being worked out for entrance exams for undergraduate courses.

Reacting to the decision, sources in the Health Department in Tamil Nadu, a State that has opposed NEET, said they would have to approach the court again.

Nursing college regains recognition from council

TOI
Jaipur: After 14 years, Sawai Man Singh (SMS) nursing college regained recognition of Indian Nursing Council (INC). Similarly, after a long gap of 53 years, the number of seats in the nursing college has increased from 60 to 100 for general nurse midwifery (GNM) course in the college.

It has come as a big relief for students studying the college as they will get a chance to work in hospitals across the world. Soon after the declaration, the nursing college erupted in joy and witnessed celebrations from students and faculty members.

"Since the nursing college was not recognised earlier, the students who passed out from the college, were not getting jobs in hospitals outside the state. But now, as the INC has granted recognition to the college, they will be able to work outside the state anywhere in the world," Jogendra Sharma, principal, SMS nursing college, said.

The college was established some 53 years ago. Earlier, it had the recognition by INC but 14 years ago, the INC withdrew it due to certain reasons related to college for reportedly not fulfilling norms of INC.

Over the past few years, the college had witnessed sporadic protests of the students demanding recognition from the INC as it was affecting their career.

Sharma said that as the INC granted recognition, not only it will help the students in getting jobs but also help generate more seats. "At present, there are only 60 seats for general nurse midwifery (GNM). Now, after recognition, it has increased to 100 seats. This will also help the Sawai Man Singh hospital which is facing shortage of nursing staff," Sharma said.

Recently, the health department spent over Rs 25 lakh in the nursing college to improve the facility and to ensure that the norms of INC are fulfilled for granting the recognition. Not only GNM course was recognised but the INC also recognised BSc nursing course in the college.

NEWS TODAY 07.07.2026