Thursday, May 19, 2016

32 வருடங்களுக்கு பிறகு.. தொடர்ந்து 2வது முறை ஆட்சியை பிடித்து அதிமுக சாதனை Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/after-3-decade-aiadmk-win-continuously-tamilnadu-254076.html

சென்னை: 1984ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக 2வது முறையாக அதிமுக அரியணை ஏறுகிறது. தமிழகத்தில் இப்படி ஒரு கட்சி 1984க்கு பிறகு தொடர்ச்சியாக அரியணை ஏறுவது இதுதான் முதல்முறை.

 1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எம்ஜிஆர் தலைமையிலான, அதிமுக 144 தொகுதிகளிலும், கருணாநிதி தலைமையிலான திமுக 48 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்து சென்று அதிமுகவை தொடங்கிய இந்த, முதல் தேர்தலிலேயே அக்கட்சி வெற்றிவாகை சூடியது. இரு கட்சிகளுக்கும் முறையே, 33.52 மற்றும் 24,89 சதவீத வாக்குகள் கிடைத்தன. எம்ஜிஆர் அருப்புக்கோட்டை தொகுதியிலும், கருணாநிதி அண்ணாநகர் தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

 1980ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக 162 தொகுதிகளிலும், கருணாநிதி தலைமையிலான திமுக 69 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதிமுகவுக்கு கிடைத்த வாக்குகள் 48.92 சதவீதம், அதிமுகவுக்கு கிடைத்த வாக்குகள் 44.43 சதவீதம். மதுரை மேற்கு தொகுதியில் எம்ஜிஆரும், அண்ணா நகர் தொகுதியில் கருணாநிதியும் வெற்றி பெற்றனர்.

 1984ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுகவும், கருணாநிதி தலைமையில் திமுகவும் மோதின. இதில் அதிமுக 195 தொகுதிகளை வென்று அசத்தியது. திமுக 34 தொகுதிகளை மட்டுமே வென்றது. கருணாநிதி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எம்.ஜி.ஆர், ஆண்டிப்பட்டியில் அமோக வெற்றி பெற்றார். அதிமுகவுக்கு வந்த வாக்கு சதவீதம், 53.87 சதவீதமாகும். திமுகவுக்கு 37 சதவீத வாக்குகள் கிடைத்தன. முந்தைய தேர்தலைவிட வாக்கு சதவீதம் அதிமுகவுக்கு உயரவே செய்தது. ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் இல்லை என்பதை அது காண்பித்தது. 

இப்படி ஹாட்ரிக் வெற்றியை சுவைத்த அதிமுக, எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு 1989ல் நடந்த தேர்தலில் பிளவுபட்டு ஜெ அணி, ஜா அணி என பிரிந்து மோதியது. இதில் திமுக எளிதில் வென்று, கருணாநிதி முதல்வரானார். ஆனால் ஆட்சி கலைப்புக்கு பிறகு, 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெற்றது. ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரான இந்த தேர்தலில் அதிமுக 224 தொகுதிகளை வென்று அசத்தியது. திமுக வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஜெயலலிதா பர்கூர் தொகுதியிலும், கருணாநிதி துறைமுகம் தொகுதியிலும் வெற்றி பெற்றனர். ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு நடைபெற்ற தேர்தல் என்பதால் மக்கள் திமுக மீது இந்த அளவுக்கு வெறுப்பை காட்டினர்.

 இதன்பிறகு 1996ல் திமுக 221 தொகுதிகளில் வென்று பழி தீர்த்தது. அதிமுகவுக்கு 8 இடங்கள்தான் கிடைத்தன. பர்கூரில் ஜெயலலிதா தோற்றார். சேப்பாக்கத்தில் கருணாநிதி வென்றார். சொத்துக்குவிப்பு, ஆடம்பர திருமணம் போன்றவை ஜெயலலிதாவுக்கு வரலாறு காணாத அடியை பெற்றுக்கொடுத்தது. 

இதன்பிறகு, 2001 சட்டசபை தேர்தலில் அதிமுக 196 இடங்களிலும், திமுக 37 தொகுதிகளிலும் வென்றது. 2006 சட்டசபை தேர்தலில் திமுக 163 தொகுதிகளிலும், அதிமுக 69 தொகுதிகளிலும் வென்றது. 2011ல் நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 31 தொகுதிகளில் மட்டும் வென்றது. இப்போது மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்துள்ளது. 1984ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக 2வது முறையாக அதிமுக அரியணை ஏறுகிறது. தமிழகத்தில் இப்படி ஒரு கட்சி 1984க்கு பிறகு தொடர்ச்சியாக அரியணை ஏறுவது இதுதான் முதல்முறை. 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/after-3-decade-aiadmk-win-continuously-tamilnadu-254076.html

அன்புமணியாகிய நான்: தேர்தல் முடிவு குறித்து அன்புமணியின் குமுறல்

Logo

இந்நிலையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு நாங்கள் ஆட்சியை பிடிப்போம். அன்புமணி ராமதாஸ் முதல்வராக பதவி ஏற்பார் என கூறிவந்த பாமக 5 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளன. இதில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் பின்னடைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்த பின்னடைவு குறித்து கருத்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ், மக்கள் ஊழலுக்கும் மோசமான நிர்வாகத்திற்கும் ஆதரவாக வக்களித்திருப்பது துரதிருஷ்டவசமானது என்றார்.
 
மேலும், நாங்கள் இலவசத்தை நம்பவில்லை. இலவசங்களை அறிவிக்கவில்லை! மாநில தொழில் வளர்ச்சிக்கும், மக்கள் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை அறிவித்து எங்கள் பிரசாரத்தை முன்னெடுத்து சென்றோம். இளைஞர் நலனுக்கு தனி முக்கியத்துவம் கொடுத்தோம்.
 
ஐம்பது வருடங்கள் பின் தங்கியிருந்த தமிழ்நாட்டை ஐந்து வருடங்களில் முன்னுக்கு கொண்டு வரும் யதார்த்தமான சாத்தியம் உள்ள திட்டங்களை முன்நிறுத்தி இருந்தோம். ஆனால், மக்கள் தந்த இந்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என்றார் அன்புமணி ராமதாஸ்.
 

கடும் பின்னடைவால் வெறிச்சோடியது தேமுதிக அலுவலகம்


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணி எந்த ஒரு தொகுதியிலும் முன்னணி பெறவில்லை. இதனால் தேமுதிக அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதல் சுற்று நிலவரப்படி தேமுதிக 2.3% வாக்குகள் பெற்றிருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. மேலும், வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி பின் தங்கியே இருந்ததால் தேமுதிகவின் தேர்தல் அலுவலகம் வெறிச்சோடியே காணப்படுகிறது.

முன்னதாக, தமிழகம் முழுவதும் இறுதி நிலவரப்படி 232 தொகுதிகளிலும் 74.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர்.

பிற்பகலுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

சென்னையில் 16-ல் 11 தொகுதிகளில் அதிமுக பின்னடைவு


சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக 11 தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மதியம் 1 மணி நிலவரப்படி அதிமுக 122 தொகுதிகளிலும் திமுக 94 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக, திமுக தலா 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் சென்னை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அது சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் மதியம் 1.30 மணி நிலவரப்படி சென்னையில் 16 தொகுதிகளில் 5 தொகுதிகளில் மட்டுமே அதிமுக முன்னிலை வகிக்கிறது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 27484 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் 16964 வாக்குகள் பெற்றுள்ளார்.

மைலாப்பூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் ஆர்.நட்ராஜ் 11778 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் கராத்தே எஸ்.தியாகராஜன் 9067 வாக்குகள் பெற்றுள்ளார்.

விருகம்பாகக்ம் தொகுதியில், அதிமுக வேட்பாளர் வி.என்.ரவி 19365 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் கே.தனசேகரன் 18310 வாக்குகள் பெற்றுள்ளார்.

தியாகராய நகரில், அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணன் 20507 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.கனிமொழி 20314 வாக்குகள் பெற்றுள்ளார்.

ராயபுரம் தொகுதியில், அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார் 17434 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் டாக்டர் ஆர்.அம்னோகர் 13374 வாக்குகள் பெற்றுள்ளார்.

இந்த தொகுதிகள் தவிர மற்ற 11 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் - திமுக கூட்டணி

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 15 இடங்களிலும் திமுக 2 இடங்களிலும் வென்று பெருமான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் 8 இடங்களில் மட்டும் வென்றது.

புதுச்சேரியில் உள்ள 4 பிராந்தியங்களான புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் 30 தொகுதிகள் உள்ளன.

காங்கிரஸ் கட்சியானது காமராஜ்நகர், லாஸ்பேட், நெல்லித்தோப்பு, ஏம்பலம், ஏனாம், அரியாங்குப்பம், வில்லியனூர், நெட்டப்பாக்கம் , ராஜ்பவன், மணவெளி திருநள்ளாறு, காலாப்பட்டு, பாகூர், ஊசுடு, உழவர்கரை ஆகிய 15 தொகுதிகளில் வென்றது. கூட்டணியான திமுக உருளையன்பேட்டை, நிரவி டி.ஆர். பட்டிணம் ஆகிய இரு தொகுதிகளில் வென்றது.

என்.ஆர்.காங்கிரஸ் இந்திராநகர், கதிர்காமம், காரைக்கால் வடக்கு, மங்களம், மண்ணாடிப்பட்டு, நெடுங்காடு, தட்டாஞ்சாவடி, திருபுவனை ஆகிய 8 தொகுதிகளில் வென்றுள்ளது.

அதிமுக உப்பளம், முத்தியால்பேட் முதலியார்பேட்டை மற்றும் காரைக்கால் தெற்கு ஆகிய 4 தொகுதிகளில் வென்றது. மாஹேயில் மக்கள் நலக்கூட்டணி ஆதரவு சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

புதுச்சேரியில் 16 தொகுதிகள் வெற்றி பெற்று இருந்தால் ஆட்சியமைக்கலாம். இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 17 இடங்களை வென்றதால் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

அமைச்சர்கள் தோல்வி

ஆளுங்கட்சி அமைச்சர்களில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு, கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன், உள்ளாட்சித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவா ஆகிய அனைவரும் தோல்வியடைந்தனர். சபாநாயகர் சபாபதி, அரசு கொறடா நேரு, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர் பாலன் என முக்கியமானவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.

மக்களால்தான் வரலாற்றுச் சிறப்பு சாத்தியமானது: ஜெயலலிதா வெற்றிப் பேச்சு


2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, தமிழக மக்களாலேயே சாத்தியமானதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை அதிமுக தொண்டர்கள், கட்சி பிரமுகர்கள், பல்வேறு துறை சார்ந்தவர்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அவர் பேசியதாவது:

தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 1984-ம் ஆண்டுக்குப் பிறகு இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்சி சாத்தியமாகியுள்ளது. எனது நெஞ்சத்தின் அடித்தளத்தில் எழுகின்ற நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வார்த்தை, தமிழ் அகராதியில் இல்லை.

இத்தேர்தலில் பெரிய கூட்டணி இல்லாதபோதிலும் ஆண்டவனையும் மக்களையும் கூட்டணியாகக் கொண்டு களம் கண்டேன். மக்கள் என்னைக் கைவிடவில்லை. தமிழக மக்கள் மீது அளவற்ற நம்பிக்கை வைத்துள்ளேன். அந்த நம்பிக்கையை மக்கள் வீண்போகச் செய்யவில்லை.

மக்களால் நான், மக்களுக்காக நான் என்பதே எனது தாரக மந்திரம். இதே தாரக மந்திரத்தின் அடிப்படையில் இனியும் தொடர்ந்து செயல்படுவேன். எனது வாழ்க்கையை தமிழக மக்களுக்கு அர்ப்பணித்துள்ளேன். என்றென்றும் மக்கள் தொண்டில் என் வாழ்வை அர்ப்பணிப்பேன். இத்தருணத்தில் அதிமுகவின் அமோக வெற்றிக்கு உழைத்த கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜனநாயகம் படுதோல்வி; பணநாயகம் பெரும் வெற்றி: ராமதாஸ்

Return to frontpage

தமிழகத் தேர்தலில் ஜனநாயகம் படுதோல்வி அடைந்திருக்கிறது; பணநாயகம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் எது நடக்கக் கூடாது என நினைத்தார்களோ, துரதிருஷ்டவசமாக அது தான் நடந்திருக்கிறது. தமிழகத் தேர்தலில் ஜனநாயகம் படுதோல்வி அடைந்திருக்கிறது; பணநாயகம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளுக்கு எதிரான பாமகவின் தர்ம யுத்தம் இன்னும் முடிவடையவில்லை. இந்த தேர்தலில் பாமகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப்பேரவைத் தேர்தலில் இரு திராவிடக் கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பணத்தை வாரி இறைத்தன. ஊழலும், ஊழலும் கை கோர்த்தன என்று கூறும் வகையில் அனைத்து இடங்களிலும் நம்மைத் தவிர வேறு எவரும் வெற்றி பெற்று விடக்கூடாது என்று திமுகவும், அதிமுகவும் ஒப்பந்தம் செய்து கொண்டு ஓட்டுக்கு ரூ.500 முதல் ரூ.1000, ரூ.2000, ரூ.5000 வரை பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கின.

தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான கொள்கைகளையும், செயல்திட்டங்களையும் உருவாக்கி முன்னேற்றத்திற்கான ஆவணத்தை பாமக முன்வைத்தது. ஆனால், தமிழகம் முன்னேறிவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள அதிமுகவும், திமுகவும், பாமக முன்வைத்த வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கான கொள்கைகளையும், திட்டங்களையும் பண பலத்தை பயன்படுத்தியும், தேர்தல் ஆணையம் ஊடகங்கள் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தும் வீழ்த்தியிருக்கின்றன.

எப்படியும் ஜெயலலிதாவை வெற்றி பெற வைத்துவிட வேண்டும் என்ற வெறியுடன் பணியாற்றிய தேர்தல் அதிகாரிகளும் இதற்கு துணை போயிருக்கின்றனர். இதன்மூலம் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை இரு கட்சிகளும் திட்டமிட்டு தடுத்திருக்கின்றன. எனினும், நமது பயணம் தொய்வின்றி, புதிய உத்வேகத்துடன் தொடரும். இறுதியில் வெற்றி நமக்கே. அதுவரை நமது மக்கள் பணி தொடரும்.

தமிழ்நாட்டில் படித்தவர்கள், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை விரும்பியவர்கள், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆசைப்பட்டவர்கள் என தமிழகத்தில் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்த விரும்பிய அனைவரும் இந்த சதி மற்றும் சூழ்ச்சிக்கு இரையாகி பாமகவுக்கு சாதகமான தீர்ப்பை அளிக்க தவறி விட்டனர். எனினும் இது முடிவல்ல. பாமகவின் தர்மயுத்தம் தொடரும். திராவிடக் கட்சிகளை வீழ்த்தி புதிய வரலாறு படைக்கப் படும். கடந்த ஓராண்டிற்கும் மேலாக பாமக வலியுறுத்தி வரும் ‘புதியதோர் தமிழகம்’ அமைக்கப்படும்.

உலகமே அதிர்ந்த, உலக அரங்கில் இந்தியாவை வெட்கித் தலைகுனிய வைத்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்த கட்சியும், ரூ.66.65 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டவர் தலைமையிலான கட்சியும் தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. அந்தக் கட்சிகள் தான் இப்போது முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன என்பது தமிழகத்திற்கு பெரும் அவமானமாகும்.

ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல இக்கட்சிகளுக்கு கொள்கைகளோ, தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்ற விருப்பமோ சிறிதும் இல்லை. 5 ஆண்டுகள் தொடர்ந்து ஊழல் செய்ய வேண்டும். ஊழல் மூலம் குவித்த பணத்தில் ஒரு பகுதியை மக்களிடம் வீசி அவர்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம். அவர்களின் இந்த அணுகுமுறையால் தான் இந்த தேர்தலில் பணநாயகம் வென்றிருக்கிறது; ஜனநாயகம் படுதோல்வி அடைந்திருக்கிறது. விரைவில் நீதிமன்றத்திலும், அதைத்தொடர்ந்து மக்கள் மன்றத்திலும் இந்த இரு கட்சிகளும் தண்டிக்கப்படுவது உறுதி. அப்போது தான் குனிந்த தமிழகம் தலைநிமிரும்.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான திமுகவையும், அதிமுகவையும் அகற்றும் காலம் தான் நமது பொற்காலம் என்று காமராஜர் கூறினார். அதை நிறைவேற்றி தமிழகத்தில் பொற்காலத்தை ஏற்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்த இலக்கை நோக்கிய பாமகவின் பயணம் தொய்வின்றி, புதிய உத்வேகத்துடன் தொடரும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...