Friday, May 27, 2016

மருத்துவ நுழைவுத்தேர்வு சட்டத்தை ரத்து செய்ய முடியாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: மருத்துவ நுழைவுத்தேர்வு சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து மத்திய அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்குத் தொடரப்பட்டது. .
மருத்துவ படிப்புகளில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதி, நுழைவுத் தேர்வில் (என்இஇடி) இருந்து மாநில அரசுகளுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்திருந்தார். இந்த அவசரச் சட்டத்துக்கு எதிராக ஆனந்த்ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று நடத்தப்பட்டது. விசாரணையில், மருத்துவ நுழைவுத்தேர்வை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. சில மாநிலங்களுக்கு தற்கலிகமாக மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, இடைக்கால உத்தரவை பிறப்பித்தால் குழப்பங்கள் நேரிடலாம். எனவே மருத்துவ நுழைவுத்தேர்வு சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகிழ்ச்சியும் கவலையும்!


By ஆசிரியர்

First Published : 26 May 2016 01:49 AM IST

தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதில் 93.6% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டும் வேளையில், இந்த முடிவுகள் காட்டும் உண்மைகள் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கவலையையும் அளிக்கின்றன. அந்தக் கவலைகளில் முதலிடம்பெறுவது தமிழ் வழிக் கல்வி மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதே.
அரசுப் பள்ளி மாணவர்களில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களின் தரவரிசையில் தமிழ்நாடு முழுமைக்கும் 10 பேர் மட்டுமே இடம்பெறுகிறார்கள். இந்த பத்து பேரிலும்கூட, ஐந்து பேர் தமிழ் வழியில் பயின்றவர்கள்.
தமிழை முதல் மொழிப் பாடமாகப் படித்து மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் (அதாவது 499, 498, 497 மதிப்பெண்கள் பெற்றவர்கள்) 276 பேர். ஆனாலும் இவர்களில் அனைத்துப் பாடங்களையும் தமிழ்வழியில் படித்தவர்கள் 4 பேர் மட்டுமே. ஜீவஸ்ரீ (498, தேனி), மரியா மெடோனா (497, நெல்லை),
எம். தரணி (497, கரூர்), லின்சி செரினா (497, மயிலம்பாறை, விழுப்புரம் மாவட்டம்) ஆகியோர் மட்டுமே தமிழ்வழியில் படித்து சிறப்பான தேர்ச்சி காட்டியவர்கள். இந்த 4 மாணவர்களையும் தமிழ் உலகம் பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.
தமிழ்வழியில் பயின்று மாநில அளவில் தரவரிசையில் இடம்பெற்றுள்ள இந்த 9 மாணவர்களும் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அரசுப் பள்ளியில் பயின்று தரவரிசையில் இடம்பெற்ற, ஆங்கிலவழியில் பயின்ற மாணவர்கள் 5 பேரும் அரசுப் பள்ளிகளைப் பெருமைப்படுத்தியுள்ளனர். இந்த 14 பேருக்கும் தினமணியின் சிறப்பு வாழ்த்துகள், பாராட்டுகள்.
சமச்சீர் கல்வி அமலில் உள்ள நிலையில், ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே பாடத்திட்டம்தான் கற்பிக்கப்படுகின்றன. இருப்பினும், அரசுப் பள்ளிகள் தொடர்ந்து பின்தங்குவது, அவற்றின் மீதான மக்களின் நம்பகத்தன்மையைக் குறைத்துக்கொண்டே வருகிறது. தனியார் பள்ளிகள் இந்த அவநம்பிக்கையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. கட்டணம், நன்கொடை என்று வசூல் வேட்டை நடத்துகின்றன.
ஆங்கிலவழி பயிலும் மாணவர்களே அதிக மதிப்பெண் பெற முடியும் என்கிற தோற்றம் மறைந்தபாடில்லை. ஆகவே, தனியார் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர் படையெடுக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்தாலும் அந்த மாணவர்களால் ஒரு கடிதம்கூடப் பிழையின்றி ஆங்கிலத்தில் எழுத முடிவதில்லை என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. பிறகு ஏன் இவ்வளவு பணத்தைக் கொட்டி, தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்?
அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் அர்ப்பணிப்பு இல்லை என்ற வழக்கமான குற்றச்சாட்டுகளைவிட மிக முக்கியமாக அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு அரசுப் பள்ளிகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இல்லை என்பதுதான். "தனியார் பள்ளியில் சேர்த்தாலும்கூட நாங்கள் எங்கள் குழந்தைகளைத் தனிவகுப்புகளுக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது. தனியார் பள்ளிகளில் படிப்பதால் மட்டுமே அவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுவிடுவதில்லை. பிறகும் ஏன் இலவச கல்வி தரும் அரசுப் பள்ளிகளைத் தவிர்க்கிறோம் என்றால், அரசுப் பள்ளி வளாகங்கள் சுகாதாரமாக இல்லை என்பதால்தான் என்பதுதான் அவர்கள் பரவலாகக் கூறும் காரணம்.
அரசுப் பள்ளிகளில் நல்ல கழிவறைகள், குடிநீர் வசதியைக்கூட குழந்தைகளுக்கு உறுதிப்படுத்துவதில்லை. கழிவறைகளில் தண்ணீர் கிடையாது. கதவுகளும்கூட இருப்பதில்லை. அப்படி இருந்தால் குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை எப்படி பெற்றோர்கள் அனுப்புவார்கள்? தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிகம்தான். ஆனால் கொஞ்சம் சுமாரான, அன்றாடம் சுத்தம் செய்யப்படுகின்ற கழிவறைகள் உள்ளன. பள்ளிக்கு வராவிட்டால், தொலைபேசியில் தகவல் கொடுக்கிறார்கள். முடிந்த வரை விசாரிக்கிறார்கள். இதையெல்லாம் அரசுப் பள்ளிகளில் எதிர்பார்க்க முடியாது. இதனை சரி செய்தாலும் போதும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.
அனைத்து மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் பள்ளிகளும் தமிழ்வழிக் கல்விக்கான வகுப்புகளை, ஆங்கிலவழி வகுப்புகளுக்கு இணையாக நடத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அப்படிச் செய்தால் தமிழ்வழிக் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். தாய்மொழியில் படிப்பதும், கூடவே ஆங்கில அறிவைப் பெறுவதும்தான் சிறந்த கல்வி முறையாக, மேம்படுத்தும் கல்வியாக அமையும்.
ஜெர்மனி, இத்தாலி, சீனா, ஜப்பான், ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் எல்லாம் தாய்மொழியில்தான் அடிப்படைப் பள்ளிக் கல்வி கற்பிக்கப்படுகிறது. உயர்நிலை அல்லது கல்லூரி அளவில்தான் அங்கே தேவைப்படுவோருக்கு ஆங்கில வழிக் கல்வி அளிக்கப்படுகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இங்கேயும் அந்த நடைமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டது.
அதேபோல, அரசுப் பள்ளிகள் அனைத்தையும் தூய்மையாக, கட்டுப்பாடு மிக்கதாக மாற்ற வேண்டும். உள்ளூர் அமைப்புகள், நிறுவனங்களுடன் இணைந்து அரசுப் பள்ளியை மேம்படுத்தலாம். மாவட்டந்தோறும் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து நடத்த அனுமதிக்கப்படலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, அரசுப் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு அதிகரித்தாக வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். அப்படிச் செய்யாதவர்களை ஆசிரியர்களாகப் பணியாற்றத் தகுதியற்றவர்களாக அரசு அறிவிக்க வேண்டும்.
இதையெல்லாம் செய்யாமல் போனால், விரைவிலேயே அரசுப் பள்ளிகளில் சேர யாருமே முன்வராமல் இயல்பாகவே மூடு விழா நடக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை!

Thursday, May 26, 2016

State governments can either conduct their own exams or opt for NEET

State governments can either conduct their own exams or opt for NEET


All private colleges will now come under the ambit of National Eligibility cum Entrance Test (NEET), the Centre said on Tuesday. However, in a major relief to parents and students, while considering the state governments' concerns over state-level examinations already conducted in regional languages and different syllabi from All India Pre-Medical Test, the Centre has given state governments the option to either conduct their own exams or opt for NEET to fill undergraduate seats.

For PG courses though, the exam will be held under NEET for 2017-18 session in December this year. The declaration came after President Pranab Mukherjee on Tuesday gave his assent to the ordinance on NEET.

"NEET is being implemented from the current year itself for UG admissions in all private institutions in respect of their seats. The first phase was conducted on May 1 and the second phase shall be held on July 24. Only state government seats in government medical colleges and state government seats in private institutions will have exemption if the concerned state government so chooses in the current year," said JP Nadda, Union health minister.

"The management quota seats shall be filled by the respective private colleges, associations of colleges and/or private universities, deemed universities through the NEET UG-2016 examination only, in all the states even for this year. From next year, starting with PG examination in December 2016, NEET will fully apply without any exemption," he added.

"The states that have deferred the exams are West Bengal, Chhattisgarh, Assam and Andhra Pradesh. PG exams in December 2016 will be a complete NEET," said Nadda.

"The states had not effectively put forth their views in the right perspective before the Supreme Court. In order to provide them relief, we brought this Ordinance," he said.

The medical fraternity has raised concerns over exorbitant fees expected to be charged by private colleges with the implementation of NEET. "As private colleges have hinted at an increase in fees, there has to be strict regulation in this regard on the state level and there should be a cap on fees in private colleges," said Dr AK Chandna, member, Dental Council of India (DCI).

நுழைவுத்தேர்வு அவசர சட்டத்திற்கு எதிராக மனு



DINAMALAR

புதுடில்லி : மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆனந்த்ராய் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழல் விவகாரத்தை வெளிக் கொண்டு வந்தவர் இந்த ஆனந்த்ராய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனுவை விரைந்து விசாரிக்க கோரி இவர் நாளை சுப்ரீம் கோர்ட்டில் முறையிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வரி செலுத்தாத கோடீஸ்வரர்கள் பெயர்கள் வெளியிடப்படும்: வருமான வரித் துறை தகவல்

ஒரு கோடிக்கு மேல் வரி நிலுவை களை செலுத்தாமல் உள்ள கோடீஸ்வரர்கள் பற்றிய விவரங் களை வெளியிட வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது. ஒரு கோடி மற்றும் அதற்கும் அதிகமாக வரு மான வரி செலுத்தாமல் உள்ளவர் கள் குறித்த விவரங்களை அறி விக்க நடப்பாண்டு தொடக்கத்தி லேயே வருமான வரித்துறை முடிவெடுத்துள்ளது.
வரி செலுத்த தவறியவர்கள் குறித்த விவரங்களை தேசிய அளவில் நாளிதழ்களில் வெளியிடும் நடைமுறையை கடந்த ஆண்டிலிலேயே வருமான வரித்துறை தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டில் வரி நிலுவை வைத்திருந்த 67 நபர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் நிலுவை வைத்துள்ளவர்களின் முகவரி, பான் எண், நிறுவனங்கள் என்றால் பங்குதாரர்கள் விவரம் போன்ற விவரங்கள் வெளியிடப்படும்.
இதற்கு முன்னதாக வரி நிலுவை செலுத்த தவறியவர்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதில் கட்டுப்பாடுகள் இருந்தன. ரூ.20 கோடி முதல் ரூ. 30 கோடி வரி நிலுவை வைத்துள்ளவர்கள் விவரம் மட்டுமே வெளிவரும். ஆனால் புதிய விதிமுறைகள்படி ரூ.1 கோடிக்கும் அதிகமாகவும், ரூ.1 கோடி நிலுவை வைத்துள்ள வர்களது பெயர்களும் வெளியிடப்பட உள்ளது.
இது `நேம் அண்ட் ஷேம்’ என்கிற திட்டத்தின் கீழ் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 2016-17 நிதியாண்டின் மார்ச் 31 தேதி வரை 1 கோடிக்கும் அதிகமாக வரி நிலுவை செலுத்தத் தவறியவர்கள் பெயர் கள் வெளியிடப்படும். குறிப்பாக அடுத்த ஆண்டு ஜூலை 31க்கு முன்னதாக வெளியிடப்படும் என்று வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்த தையல் தொழிலாளியின் மகள் அரசியலில் ஈடுபட விருப்பம்

எஸ்எஸ்எல்சி தேர்வில், அரசுப் பள்ளியில் தமிழை முதல் பாடமாகக் கொண்டு படித்தவர்களில் பொள்ளாச்சி அருகே கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி என்.ஜனனி, 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவரது மதிப்பெண்: தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்- 100, சமூக அறிவியல் 100. ஒட்டுமொத்தமாக மதிப்பெண் அடிப்படையில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
என்.ஜனனி கூறியதாவது: எனது சாதனைக்கு பெற்றோர், ஆசிரியர்கள், தலைமையாசிரியை என அனைவருக்கும் பங்கு உண்டு. என்னுடைய தந்தை நாரயண சாமி, தாய் சுமதி. தந்தை தையல் தொழில் செய்து வருகிறார்.
பள்ளியில் சிறப்பு வகுப்பு கற்பிக்கப்பட்டது. இதனால் மாநில அளவில் முதலிடம் பிடிக்க முடிந்தது. மேல்நிலை வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவு எடுத்து படிக்க உள்ளேன். ஐஏஎஸ் தேர்வு எழுதி ஆட்சியராக பணியாற்ற வேண்டும். மேலும் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறேன் என்றார்.
கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஸ்வேதா, வேலூர் சோளிங்கர் திருமதி எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நேகா கவுசர் ஆகியோர் 500-க்கு 496 மதிப்பெண் எடுத்து 2-ம் இடம் பெற்றனர்.
ஈரோடு சவக்காட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ஹரிணி, புதுக்கோட்டை கொத்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.பவ தாரணி, புதுக்கோட்டை ராணி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி நிஷாத் ரஹீமாமா, கரூர் மலைக்கோவிலூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் ஆர்.சந்திர சேகர், திருவண்ணாமலை பெருங் காட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.மேகலா, திருவண்ணாமலை இரும்பேடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி என்.தீபா, சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கேத்ரீன் அமலா ராக்கினி ஆகியோர் 500-க்கு 495 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜெயலலிதா வீட்டு கிரகப்பிரவேசம்

முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்ல’ கிரகப்பிரவேச பத்திரிகை.

தமிழக முதல்வராக ஜெயலலிதா 6-வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில், 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அவரது போயஸ் தோட்ட இல்லத்தின் கிரகப்பிரவேசம் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ கிரகப்பிரவேசம் 44 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1972-ம் ஆண்டு மே 15-ம் தேதி நடந்துள்ளது.

கிரகப்பிரவேச அழைப்பிதழ் மிக எளிமையாகவும், அதே நேரம் மிகுந்த ரசனையுடனும் வடிவமைக் கப்பட்டுள்ளது.

கைவினைத் திறன்மிக்க இரு கதவுகள் திறந்தவுடன் அழைப்பு வாசகங்கள் அமைந்திருக் குமாறு உள்ள இந்த பத்திரிகையை, பம்பாய் வாகில் நிறுவனம் வடி வமைத்திருந்தது.

முகவரி விளக்கம்

கிரகப்பிரவேசத்துக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் இடம் தேடி அலையக்கூடாது என்பதற்காக, ‘ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு பின்புறம் - ரயில்வே தேர்வாணைய அலுவலகத்துக்கு அருகில் - கதீட்ரல் சாலை’ என மிக விளக்கமாக இதில் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரகப்பிரவேசத்தை முன்னிட்டு மாலை விருந்தின்போது பிரபல இசைக்கலைஞர் சிட்டி பாபுவின் வீணைக் கச்சேரி நடப்பதாகவும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NEWS TODAY 21.12.2025