Tuesday, June 7, 2016

Gulf News

Bihar man, 53, gets MBBS degree after 21 years

Dr Kapildeo Chaudhary was admitted to the MBBS course in 1995

Patna: A 53-year-old medical student in Bihar has finally got his Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS) degree after 21 years of constant struggle.

The degree was awarded to Dr Kapidldeo Chaudhary, a Dalit student, by the Darbhanga Medical College (DMC) on Monday.

He is the oldest student in the medical college having taken more than two decades to finish his course. He was admitted to the MBBS course in 1995.

“Yes, Dr Chaudhary has been awarded the degree after he cleared the paper concerned in supplementary examination this year and finished his MBBS course,” DMC principal Dr R.K. Sinha told journalists.

The award of the degree follows frequent suicide threats which he had made earlier this year, frustrated at his constant failures to clear the final year examination.

He hogged the headlines this February when sent many messages to the cell phone of his department head Dr B.K. Singh who heads the department of medicine.

“Sir, now I am 52. Please pass me. I want to become a doctor. I wanted to become a doctor and serve the nation. Therefore, I should be awarded pass marks in the paper. Otherwise, I will commit suicide”, he wrote in one of his messages.

His second message too served the suicide threats: “Good morning Sir … I have seen you for 21 years. No meeting now. Now you will see my dead body.” The messages were sent between January 31 and February 15 this year.

The authorities reacted promptly registering a complaint against Dr Chaudhary sensing trouble after the Rohith Vemula case in the Hyderabad University. As the matter reached the police, Dr Chaudhary gave an undertaking to the authorities concerned saying he will not end his life.

According to Dr Chaudhary, his prolonged poor health turned out to be the “spoiler”, not allowing him to concentrate on studies.

Saturday, June 4, 2016

First non-stop flight between Singapore and San Francisco launched

First non-stop flight between Singapore and San Francisco launched
The United Airlines flight takes between 15 hours and 30 minutes and 16 hours and 20 mins – shaving up to four hours off the travel time between the two cities.
Posted 03 Jun 2016 14:03
Updated 03 Jun 2016 23:23

CHANNELNEWSASIA

SINGAPORE: The first non-stop flight connecting Singapore and San Francisco – and currently the only non-stop service between Singapore and the United States – took off from Changi Airport on Friday morning (Jun 3).

The United Airlines flight, which uses the Boeing 787 Dreamliner, takes between 15 hours and 30 minutes and 16 hours and 20 mins – shaving up to four hours off the travel time between the two cities.

The flights depart from Changi Airport at 8.45am daily and arrive at San Francisco International Airport at 9.15am the same day (local time). The westbound flight will depart San Francisco at 11.25pm (local time) daily and arrive in Singapore at 6.45am two days later.

Marcel Fuchs, the airline’s Vice-President of Atlantic and Pacific Sales, said that with 3,500 US companies registered in Singapore, there is strong demand for the flight.

“Many of the customers this morning were from IT companies and were congratulating us on starting this new daily non-stop service," he said.

- CNA/cy

எம்ஜிஆர் 100 | 79 - தொண்டருக்கும் தொண்டர்!


சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். உணவு பரிமாறுகிறார்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R.கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், அன்றாடப் பணிகளில் அவருக்கு உதவி புரியவும் பாதுகாப்புக்கும் உதவியாளர்களும் பாதுகாவலர்களும் உண்டு. எம்.ஜி.ஆர். எள் என்றால் எண்ணெயாய் நிற்கும் ஆற்றல் மிக்கவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட பணியாளர்களின் தேவைகளை, குடும்பத்துக்கான உதவிகளை முழுமையாக கவனித்து உதவி செய்வதற்கென்று ஒருவர் உண்டு. அவர் எம்.ஜி.ஆர்.!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஒரு முறை மாணவ, மாணவிகளின் கலாசார விழா. அதற்கு சிறப்பு விருந் தினராக எம்.ஜி.ஆரை அழைத்திருந்த னர். விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார். உடற்கூறுகள் பற்றி, தான் அறிந்து வைத்திருந்தவை குறித்து அருமையாக உரையாற்றினார். ‘இத்தனை பணிகளுக்கும் நடுவே, இதை எல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள இவருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?’ என்று பேச்சைக் கேட்டவர்கள் வியந்தனர்.

‘‘மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவராக தொழில் செய்பவர்கள் சேவை மனப்பான்மையோடு குறிப்பாக, ஏழைகளுக்கும் கிராமப்புற மக்களுக்கும் பணியாற்ற வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். வேண்டுகோள் விடுத்து விட்டு, தனக்கே உரிய அடக்கத்தோடு சொன்னார்… ‘‘மருத்துவம் படிக்காத என்னை சிறப்பு விருந்தினராக ஏன் அழைத்தார்கள்? என்று தெரியவில்லை. ஒரு காரணம் மட்டும் புரிகிறது. என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்புதான் அது. அந்த அன்புள்ளத்தோடு எதிர் காலத்தில் நீங்கள் சமூகத்துக்கு பணி யாற்ற வேண்டும்’’ என்று பலத்த கர கோஷத்துக்கிடையே பேசி முடித்தார்.

எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்து ஒரு கூடை நிறைய ஆப்பிள் பழங்களை மாணவர்கள் அவருக்கு அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்டு படப்பிடிப் பில் கலந்து கொள்வதற்காக வாஹினி ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கு, தன் காரில் இருந்த ஆப்பிள் கூடையை எடுத்து வரச் சொல்லி, படப்பிடிப்பு தளத்தில் இருந்த எல்லா பணியாளர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கச் செய்தார். மருத் துவக் கல்லூரி விழாவில் அன்பைப் பற்றி பேசிய எம்.ஜி.ஆருடைய அன்புள்ளத்தின் வெளிப்பாடு இது.

தென்ஆற்காடு மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் எம்.ஜி.ஆர். சென்றார். வழியில் பல இடங்களில் மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு, நிகழ்ச்சிக்கு தாமதமாகவே சென்றார். அவசரப் பணிகள் காரணமாக, குறித்த நேரத்துக்குள் அவர் சென்னை திரும்பி யாக வேண்டும். நிகழ்ச்சியை முடித் துக் கொண்டு காரில் ஏறிப் புறப்படும் முன் உதவியாளர்களைப் பார்த்து, ‘‘சாப்பிட்டீர்களா?’’ என்று கேட்டார். எல் லோரும் ஒரே குரலில் ‘‘சாப்பிட்டு விட்டோம்’’ என்றனர்.

காரின் சக்கரங்கள் சென்னையை நோக்கி சுழலத் தொடங்கின. நகரத் தைக் கடந்து சாலையில் கார் வேகமாகச் செல்கிறது. திடீரென, ‘‘காரை ஓரமாக நிறுத்து’’ என்று எம்.ஜி.ஆரின் குரல் கடுமையாக ஒலிக் கிறது. ‘ஏன்?’ என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தாலும், எம்.ஜி.ஆர். சொன்னதைச் செய்தே பழக்கப் பட்ட உதவியாளர் கள் காரணம் கேட்க வில்லை. என்றாலும், அவரது குரலில் இருந்த கடுமை அவர்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது. சாலையோரமாக கார் நின்றது.

உதவியாளர்களைப் பார்த்து உரிமை கலந்த கோபத்தோடு, ‘‘உங்கள் வாடிய முகங்களைப் பார்த்தாலே நீங்கள் எல்லோரும் சாப்பிடவில்லை என்று தெரிகிறது. நான் விரைவில் சென்னை திரும்ப வேண்டும் என்பதற் காக, என்னிடம் சாப்பிட்டதாக சொல்லி யிருக்கிறீர்கள். ஏன் பொய் சொல்கிறீர் கள்?’’ என்று இரைந்தார். குட்டு வெளிப்பட்டதில் அந்த உண்மையான பணியாளர்கள் ஊமைகளாய் நின்றனர்.

அவர்களது நிலைமையை எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டார். அவரது குரலில் இருந்த தந்தையின் கண்டிப்பு, இப்போது தாயின் கருணையாய் சுரந்தது. ‘‘இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் கள் என்னை வரவேற்று உபசரிக்கும் ஆர்வத்தில் உங்களை கவனித்திருக்க முடியாது. நான் புறப்படத் தாமத மாகிவிடும் என்பதற் காக சாப்பிட்டுவிட்ட தாக நீங்கள் பொய் சொன்னால் எனக் குத் தெரியாதா? நான் சந்தேகப் பட்டுதான் அங்கிருந்தவர் களிடம் இட்லி களை பொட்டலங் களாக கட்டச்சொல்லி வாங்கி வந்தேன். மர நிழலில் போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்’’ என்று சொல்லி, தான் கொண்டுவந்த பார்சலை எடுத்து உதவியாளர்களிடம் கொடுத்தார்.

நெகிழ்ந்துபோன உதவியாளர்கள், எம்.ஜி.ஆரிடம் இருந்து பார்சலை வாங்கிக் கொண்டு ஜமுக்காளத்தை விரித்து அமர்ந்து சாப்பிடத் தொடங் கினர். நெய் மணக்கும் காரமான மிளகாய்ப் பொடி தடவிய இட்லி அவர்களுக்கு அமிர்தமாய் இனித்தது. சீக்கிரம் புறப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இட்லிகளை விழுங் கியவர்களில் ஒருவருக்கு விக்கல். எம்.ஜி.ஆரிடம் இருந்து பார்சலை வாங்கிவந்த அவசரத்தில் தண் ணீரை எடுத்துவர அவர்கள் மறந்து விட்டனர்.

அப்போது, தண்ணீர் வைத்திருந்த ஜாடியையும் டம்ளர்களையும் ஏந்தியபடி இரு கரங்கள் நீள்கின்றன. உதவியாளர்கள் நிமிர்ந்து பார்த்தால், எம்.ஜி.ஆரேதான்! எல்லோருக்கும் டம்ளர்களில் பொறுமையாக தண்ணீரை ஊற்றி வைக்கிறார். அவரை உப சரிக்க லட்சோப லட்சம் பேர் காத்திருக்கும்போது, அந்த மாமனிதர் தங்களுக்கு பசியாற உணவு தந்து, தாகம் தீர்க்க தண்ணீரும் கொடுத்து பணி செய்வதைக் கண்ட உதவியாளர்களின் கண்கள் பனித்தன.

எம்.ஜி.ஆர். தலைவர் மட்டுமல்ல; தொண்டருக்கும் தொண்டர்!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்


ஜூபிடர் நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டுடியோவை எம்.ஜி.ஆர். வாங்கி அதற்கு தனது தாயாரின் பெயரை சூட்டி ‘சத்யா ஸ்டுடியோ’ ஆக்கினார். தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய ஸ்டுடியோவில் தொழிலாளர்களை பங்குதாரர்களாக்கி, லாபத்தை அவர்களுக்கு பகிர்ந்து அளித்த முதலாளி… இல்லை, இல்லை, முதலாளி என்ற பெயரில் வாழ்ந்த தொழிலாளி எம்.ஜி.ஆர்.!

சூர்யா செய்தது சரியா?


ஓங்கி அறைஞ்சா ஒன்றரை டன் வெயிட்றா.. பார்க்கிறியா?’ என்று பப்ளிக்கிலும் நிரூபித்து விட்டார் சூர்யா. இதற்குக் காரணம், ஒரு பெண்மணி காரில் போட்ட சடர்ன் பிரேக். பெண்களுக்கு ஒரு பிரச்னை என்றால், சினிமாவில்தான் ஹீரோ பொங்கி எழுவார்கள். ஆனால் நிஜத்திலும் ஒரு ஹீரோ, பெண்ணுக்காகக் களம் இறங்கி, அநியாயத்தைத் தட்டிக் கேட்டதுதான் வெயிலைத் தாண்டியும் செம ஹாட்!

நடந்தது என்ன?

பாரிமுனையைச் சேர்ந்த பிரேம்குமார், ஜாலியாக அடையார் பாலத்துக்குக் கீழே தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென சடர்ன் பிரேக் அடிக்க, நிலைகுலைந்து போன பிரேம்குமார், தடாலென அந்த காரின் பின்புறம் இடித்துவிட... ‘தம்பி, ஒழுங்கா வண்டி ஓட்டமாட்டியா?’ என்று காரிலிருந்து இறங்கிய பெண்மணியும், ‘ஹலோ மேடம், நீங்க ஒழுங்கா பிரேக் போடுங்க!’ என்று பிரேம்குமாரும் நடுரோட்டில் வாக்குவாதம் செய்ய... பின்னால் செம டிராஃபிக்.

இந்த காருக்குப் பின்னால், சூர்யாவின் ஆடி A8. சண்டை முற்றிக் கொண்டே போக, ‘இனிமே சார்ஜ் எடுத்தாதான் சரியா வரும்’ என்று முடிவெடுத்து காரிலிருந்து இறங்கிய சூர்யா, ‘‘பொண்ணுங்ககிட்ட எப்படிப் பேசணும்னு தெரியாது’’ என்று பிரேம்குமாரின் கன்னத்தில் ‘சிங்கம்’ பாணியில் அறைவிட, ‘‘வாந்தி வர்ற அளவுக்கு ஓங்கி அடிச்சுட்டார் சூர்யா. என் உயிருக்குப் பாதுகாப்பு வேணும்!’’ என்று பாரிமுனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து, இப்போது அதை வாபஸும் வாங்கி விட்டார்.

 இதற்கிடையில் காரில் சடர்ன் பிரேக் பிடித்த புஷ்பா கிருஷ்ணசாமி என்ற அந்தப் பெண்மணி, ட்விட்டரில் சூர்யாவுக்கு நன்றி தெரிவிக்க... பதிலுக்கு சூர்யாவும், ‘உங்கள் தைரியத்துக்குப் பாராட்டுகள்’ என்று மாறி மாறி நன்றி தெரிவித்துக் கொண்டிருக்க, ‘சூர்யா மனித உரிமையை மீறி சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு’ என்றும்... ‘அவர் பெண்களுக்காகச் செய்த இந்தச் செயல் சரியே’ என்றும் ‘Savedwoman’ என்ற பெயரில் ஹேஷ்டேக் உருவாக்கி நெட்டிசன்கள் பிஸியாகிவிட்டார்கள்.

கூலாக முடிய வேண்டிய பிரச்னை, வெயில் நேரம் என்பதாலோ என்னவோ செம ஹாட் ஆகிவிட்டது. ''இருந்தாலும் நடிகர் சூர்யா, அந்தப் பெண்ணுக்கு உதவும் நோக்கில் தட்டிக் கேட்டது சரிதான். ஆனால், பிரேம்குமாரைக் கை நீட்டி அடித்தது தவறு!'' என்கிறார் பிரபல மனநல நிபுணர், மருத்துவர் அபிலாஷா,  ‘‘வெயிலோ, மழையோ - நடுரோட்டில் ஏற்படும் எந்தப் பிரச்னையையும் ஈஸியாகக் கையாளலாம்!’' என்றும் சொல்கிறார் அவர். 


பெண்கள்/ஆண்கள் - வெளியே கிளம்பும்போதும், வாகனம் ஓட்டும்போதும் கவனிக்க வேண்டியவை என்னென்ன? 

1. முதலில் நாம் பொறுமை இழப்பது சிக்னல்களில்தான். சிக்னலில் நிற்கும்போது, ஆரஞ்சு விளக்கு எரியும் முன்பே ஆக்ஸிலரேட்டரை முறுக்குவதில் உற்சாகமாக இருக்கும் நாம், சிக்னலில் சிவப்பு விளக்கு எரிய ஆரம்பிக்கும்போது பிரேக் பிடிப்பதற்கு யோசிக்க மறுக்கிறோம். சட்டத்துக்குக் கட்டுப்படுவது ரெண்டாவது விஷயம் - முதலில் மனசாட்சிக்குக் கொஞ்சம் இடம் கொடுங்க பாஸ்!

2. கிளம்பும்போது, எப்போதுமே கால்மணி நேரம் அல்லது அரைமணி நேரம் முன்கூட்டியே கிளம்பிப் பாருங்களேன். ஆச்சரியமாக சிக்னலில் நின்றாலும், சிக்கலாக ஃபீல் செய்யமாட்டீர்கள். வெயில் காலத்தில் பொதுவாகவே எல்லோருக்கும் கோபமும், எரிச்சலும் இருக்கும். இந்த நேரத்தில் விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போகமாட்டார்கள்.

3. ‘நான் நல்லா ஓட்டுறேனா? ஏதாவது தப்பு இருக்கா?’ என்று உங்கள் டிரைவிங் ஸ்டைல் பற்றி, உறவினர்கள் அல்லது எக்ஸ்பெர்ட்டுகள் யாரிடமாவது மனம் திறந்து கேளுங்கள். இதிலெல்லாம் ஈகோ பார்க்காதீர்கள். 

4. எப்போதுமே கிளம்பும்போது பசியுடன் கிளம்பாதீர்கள். வெறும் வயிற்றுக்காரர்களுக்கு வெயில் நேரத்தில் டென்ஷன் வயிறைத் தாண்டி தலை உச்சிக்கு ஏறும். கூடவே, எப்போதும் ஒரு வாட்டர் பாட்டிலை வைத்திருங்கள். தண்ணீர் குடிக்கும்போது கோபம் தணியும் வாய்ப்பிருக்கிறது. யாராவது இடித்துவிட்டால், நம்மையும் மீறி வாக்குவாதம் முற்றும்போது நிறுத்திக் கொண்டு, 'இன்ஸூரன்ஸ்' கிளைம் செய்து கொள்ளலாம் என்கிற ரீதியில் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வரப் பாருங்கள். 

5. எப்போ பார்த்தாலும் ஸ்ட்ரெஸ்ஸிலேயே இருக்காதீர்கள். ‘ச்சே... சீக்கிரம் போய் ஆகணுமே’ என்று கடுப்பாகாமல், என்ஜாய் பண்ணி டிரைவிங் செய்யுங்கள். ‘வாவ்... அதுக்குள்ள வந்துடுச்சா!’ என்று ஆச்சரியப்படுவீர்கள்.

6. பெரும்பான்மையான விபத்துகளுக்குக் காரணம் - கவனக்குறைவும், பொறுமையின்மையும்தான். ‘எப்படியாவது ஓவர்டேக் பண்ணிடணும்’ என்று அவசரப்படாதீர்கள். எப்போதும் இடது பக்கம் ஓவர்டேக் செய்யாதீர்கள். தேவையானால் மட்டும் ஹார்ன் அடியுங்கள்.

7. யாராவது உங்களை ஓவர்டேக் செய்தால், கோபப்படாதீர்கள். முக்கியமாக குழந்தைகளுடன் வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அவர்கள் முன்பு தேவையில்லாமல் சண்டை போடாதீர்கள். உங்களுடைய குழந்தையுடன் எதிர்காலம் முக்கியம்!

8. கிளம்பும்போது வாகனத்தைத் துடைப்பதோடு மட்டும் நிறுத்தாமல் - டயர் பிரஷர், பெட்ரோல், பிரேக் என்று எல்லாவற்றையும் செக் செய்துவிட்டுக் கிளம்புங்கள்.

9. எப்போதும் ரிஸர்விலேயே பைக்கை/காரை ஓட்டாதீர்கள். இது முக்கியமான நேரங்களில் டென்ஷனுக்கு வழிவகுக்கும். உங்களை நடுரோட்டில் வண்டி தள்ளவும் வைத்துவிடும்.

10. ஒருவர் விபத்தாகி விழுந்துவிட்டால்,  தாண்டிப் போகாமல் அவருக்கு மனிதாபிமானத்துடன் உதவுங்கள். பிரச்சனைகளை அப்புறம் டீல் செய்யலாம். 

(கொசுறு: போகும் பாதையை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டுக் கிளம்புங்கள். ‘தடால் தடால்’ என சடர்ன் பிரேக் போடாதீர்கள். திரும்பவும் கட்டுரையின் முதல் பாராவைப் படியுங்கள்!)

- தமிழ்
 

விஜயபாஸ்கருக்கு 'செக்' வைத்த கார்டன்! -வைரமுத்துவைத் தேடி வந்த வாரியப் பதவி

சட்டப் பேரவைத் தேர்தலில் தோற்றதில் இருந்து, சென்னை பக்கமே வராத புதுக்கோட்டை மா.செ வைரமுத்துவுக்கு வீட்டுவசதி வாரியத் தலைவர் பதவியைக் கொடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 'அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான முதல் அதிரடி இது' என்கின்றனர் புதுக்கோட்டை அ.தி.மு.கவினர். 

அ.தி.மு.க அரசின் அமைச்சரவை பதவியேற்றதும், ‘வாரியத் தலைவர் பதவி யாருக்குக் கிடைக்கப் போகிறது?’ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. நேற்று முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் உள்ளிட்ட சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால், சம்பந்தமே இல்லாமல் வீட்டு வசதி வாரியத்திற்கு மட்டும், திருமயம் தொகுதியில் தோற்ற வைரமுத்துவை நியமித்தது அ.தி.மு.கவினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வேறு எந்த வாரியத்திற்கும் தலைவர் பதவி நிரப்பப்படவில்லை. இத்தனைக்கும் தேர்தலில் தோற்ற நாளில் இருந்தே புதுக்கோட்டைக்குள் முடங்கிக் கிடந்தார் வைரமுத்து.
நேற்று கார்டனில் இருந்து அவருக்கு திடீர் அழைப்பு. கை, கால் உதறலோடுதான் கார்டனுக்குள் நுழைந்தார் வைரமுத்து. அதற்குள் புதுக்கோட்டை மாவட்டம் முழுக்கவே, ' மீண்டும் விஜயபாஸ்கருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கப்போகிறது. வைரமுத்து பதவியைப் பிடுங்கி அனுப்பப் போகிறார் அம்மா' என்ற தகவல் தீயாய் பரவியது. சில மணி நேரங்களில், ‘ வீட்டு வசதி வாரியத் தலைவராக வைரமுத்து நியமனம் செய்யப்பட்டத் தகவல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக, அதிர்ந்து போய்விட்டார் விஜயபாஸ்கர்’ என்கின்றனர் புதுக்கோட்டை அ.தி.மு.கவினர். 

இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி தொகுதிகளில் அ.தி.மு.க தோல்வி அடைந்தது. இதற்கு முழுக் காரணமே அமைச்சர் விஜயபாஸ்கர் மீது முத்தரையர் சமூகத்தினரின் கொந்தளிப்புதான்.  ‘ அமைச்சர் ஜாதியைச் சொல்லித் திட்டினார்’ எனப் புகார் கூறிய சொக்கலிங்கம், புதுக்கோட்டையில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 22,973 வாக்குகள் வாங்கினார். முத்தரையர் வாக்குகளை வெகுவாகப் பிரித்தார் சொக்கலிங்கம். இதற்கு முழுக் காரணமே விஜயபாஸ்கரின் செயல்பாடுகள்தான். இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.கவின் கார்த்திக் தொண்டைமான் தோல்வி அடைந்தார்.
இதை முன்கூட்டியே உணர்ந்துதான், முத்தரையர் சமூகம் அதிகளவில் இல்லாத விராலிமலையில் போட்டியிட்டு வென்றார் விஜயபாஸ்கர். தேர்தலில், திருமயம் தொகுதியில் போட்டியிட்ட வைரமுத்து, வெறும் 766 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.கவின் ரகுபதியிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். ‘ வெற்றி பெற்றால் கட்டாயம் அமைச்சர் பதவி வாங்கிவிடுவார்’ என்பதால், அவரைத் தோற்கடிக்க அனைத்து உள்ளடி வேலைகளையும் செய்தார் விஜயபாஸ்கர். இதைப் பற்றி கார்டனின் கவனத்திற்கு முழு விவரங்களுடன் அறிக்கை அனுப்பினார் வைரமுத்து. மேலிடமும் தீவிர விசாரணை நடத்தியது. மீண்டும் அமைச்சராக விஜயபாஸ்கர் வந்ததுமே, ‘ மா.செ பதவியை வாங்கிவிடுவேன்’ என சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குள், வைரமுத்துவுக்கு திடீர் பதவி கொடுத்து, விஜயபாஸ்கருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது கார்டன்" என்றார் அவர். 
“ அது மட்டுமல்ல. புதுக்கோட்டை மாவட்டத்தில், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நேரடியாக மாவட்டச் செயலாளர் பதவிக்கு வந்தவர் வைரமுத்து. பல ஆண்டுகளாக கார்டனின் குட்புக்கில் இருப்பவர். கடந்த ஆட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து கொண்டு விஜயபாஸ்கர் செய்த சில வேலைகளால் மிகுந்த அதிருப்தியில் இருந்தார் சின்னம்மா. மணல் விவகாரம் உள்பட குவாரி விஷயங்களில் விஜயபாஸ்கரின் அதீத வளர்ச்சி, கட்சிக்காரர்களை அதிர வைத்தது. எந்தக் கட்சிக்காரரையும் தன் பக்கத்தில் வைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.
 முத்தரையர் சமூகத்தினரின் கடும் அதிருப்தியால்தான் கழக வேட்பாளர்கள் இங்கு தோல்வியைத் தழுவினர். இதையும் தாண்டி விஜயபாஸ்கருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இப்போது புதுக்கோட்டை என்றாலே வைரமுத்து மட்டும்தான் என்று சொல்லும் அளவுக்கு மாவட்டச் செயலாளர் பதவியோடு வாரியத் தலைவர் பதவியையும் கொடுத்துவிட்டார் அம்மா. இனி படிப்படியாக விஜயபாஸ்கர் கட்டம் கட்டப்படுவார்” என்கிறார் புதுக்கோட்டை அ.தி.மு.க சீனியர் ஒருவர். 

மக்களுக்கு சிகிச்சையளிக்கும் நல்வாழ்வுத்துறையின் அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கருக்கு, கார்டன் அளித்த இந்த ‘திடீர்’ சிகிச்சையை அதிசயத்தோடு கவனிக்கிறார்கள் புதுக்கோட்டை அ.தி.மு.கவினர். 

ஆ.விஜயானந்த்

 

பாரிவேந்தருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் தலைமறைவு... மதன் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை: எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து பாரிவேந்தர், அவரது மகன் ரவி ஆகியோருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் தான் மதன் தலைமறைவாகி உள்ளார் என்று அவரது தாயார் தங்கம் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு தனியார் கல்லூரிகளுக்கு பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு 'சீட்' வாங்கிக்கொடுக்கும் ஏஜென்ட் வேலையைச் செய்துவந்தவர் மதன். கடந்த 20 ஆண்டுகளாக இதே வேலையில் ஈடுபட்டதால் தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் நிறையத் தொடர்புகளை வளர்த்துக் கொண்டார்.

மேலும் திரைத்துறையிலும் கால்பதிக்க எண்ணி, கடந்த 2011 ம் ஆண்டு 'வேந்தர் மூவிஸ்' என்ற  சினிமா கம்பெனியைத் தொடங்கினார். அதிலும் கிடுகிடு வளர்ச்சியை எட்டி,  தமிழகத்தின் முன்னணி பட நிறுவன அதிபரானார். மதன் தனது நிறுவன பெயரில் வெளியான சில திரைப்பட விழாக்களுக்கு, எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் அதிபரும், ஐ.ஜே.கே. கட்சியின் நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர் (எ) டி.ஆர்.பச்சமுத்துவை சிறப்பு விருந்தினராக பங்கேற்க வைத்துள்ளார். இதனால் வேந்தர் மூவிஸ் பாரிவேந்தருக்கு சொந்தமானது என்று  பேச்சு அடிபட்டது.

ஆனால், "வேந்தர் மூவிஸ் நிறுவனம் எனது சொந்த நிறுவனம் ஆகும். பாரிவேந்தர் மீது நான் கொண்டுள்ள பற்றும் பாசமும் மரியாதையின் காரணமாகவே எனது நிறுவனத்திற்கு  வேந்தர் மூவீஸ் என பெயர் வைத்துள்ளேன். இந்த நிறுவனத்திற்கும் பாரிவேந்தருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மதன் விளக்கமளித்து அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளியும் வைத்தார்.

இந்நிலையில், கடந்த 29ம் தேதி தனக்கு நிறைய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவற்றை பாரிவேந்தர் தீர்த்து வைக்கவேண்டும் என்றும் கூறி, 'காசியில் கங்கையில் சமாதி அடையப் போகிறேன்' என்று வேந்தர் மூவிஸ் லெட்டர் பேடில் கடிதம் எழுதி, வாட்ஸ் அப்பில் பரப்பிவிட்டுத் தலைமறைவானார் மதன். இதை தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், காணாமல் போன மதனைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு அவரின் இரண்டு மனைவிகளும், தாயாரும் புகார் மனு அளித்தனர். போலீசாரும் அவரைக் கண்டுபிடிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். ஆனால், மதன் பற்றிய உறுதியான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. 

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மதனின் தாயார் தங்கம், ''வேந்தர் மூவிஸ் மதன் கடந்த பல ஆண்டுகளாக எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டிருந்தார். அதற்காக பெறப்படும் பணத்தை முறையாக பாரிவேந்தரிடம் அளித்தும் வந்துள்ளார். மதன் காணாமல் போனது குறித்த காரணம் எதுவும் எங்களுக்கு தெரியவில்லை. பச்சமுத்து பாரிவேந்தர், அவரது மகன் ரவி, மதன் ஆகிய மூன்று பேருக்கிடையே ஏற்பட்ட பனிபூசல் ஆகியோருடன் ஏற்பட்ட மனக்கசப்பால்தான் மதன் தலைமறைவாகி இருக்க வேண்டும்.

இந்தப் பிரச்னைக்கு குறித்து பாரிவேந்தரிடம் நாங்கள் பலமுறை பேச முயற்சி செய்தும், அதற்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை. ரவி சாரை பார்க்க முயன்றபோதும் அவர்கள் எங்களை உள்ளே விடவில்லை. அவரின் குடும்பத்தினரை பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் முடியாமல் தோல்வியடைந்துள்ளோம். இதற்கு மேல் நாங்கள் என்ன செய்ய முடியும்.  பாரிவேந்தரை கடவுளாக நினைத்து பூஜித்து வந்த எனது மகன், எஸ்.ஆர்.எம். குழுமத்திலிருந்தும், ஐ.ஜே.கே. கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டது ஏன்? என்பது பற்றியும் எங்களுக்கு தெரியவில்லை" என்றார்.

இதனிடையே, காணாமல் போன மதனை தேடி கண்டுபிடிக்க 2 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். அவர்கள், சென்னை மற்றும் வாரணாசியில் மதன் குறித்து விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்
.

இந்த கேள்விக்கு மட்டும் பா.ஜ.க.வினர் பதில் சொன்னால் போதும்! -அப்படி என்ன கேள்வி கேட்கிறார் கருணாநிதி

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு எப்படி முன்கூட்டியே தெரிந்தது என்று கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 93-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று மாலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்புரை வழங்கி பேசும்போது, ''இந்த விழாவில் என்னை பாராட்டவும், நான் இன்னும் சில காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்தவும் நீங்கள் இங்கு கூடியதை பார்க்கும்போது, பிற்போக்கு தன்மையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இத்தனை ஆண்டுகள் இன்னும் வாழ வேண்டுமா என்ற கேள்வி என்னை துளைக்கிறது. நீங்கள் அனைவரும் அண்ணா சொன்னதை போல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் கழகத்தை நடத்த நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

கவிஞர் வைரமுத்து கூறியதைப்போல, தி.மு.க. ஆட்சியில் கை ரிக்‌ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்‌ஷா வழங்கினோம். பிச்சைக்காரர்களுக்கு கூட மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை நிறைவேற்றினோம். குடிசைகளை எல்லாம் கோபுரங்களாக ஆக்கினோம். எந்த புது நோக்கமானாலும் அதை நிறைவேற்றும் சாத்தியமான ஆட்சியாக தி.மு.க. இருந்தது. அதை வீழ்த்த இன்று ஏதோதோ சூழ்ச்சிகள் செய்கிறார்கள். அது எந்த அளவுக்கு போய் இருக்கிறது.
நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், தேர்தல் முடிவு நாள் அன்று பிரதமர் நரேந்திர மோடியே காலை 10 மணிக்கு ஜெயலலிதாவுக்கு வாழ்த்து செல்கிறார் என்றால், தேர்தல் முடிவு எப்படி முன்கூட்டியே தெரிந்தது. இதை வெளிப்படையாக, பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். இதற்கு, டெல்லியில் உள்ள மோடியின் கட்சிக்காரர்கள் விளக்க வேண்டும். அதற்கு முன்பே ஓட்டை எண்ணிப்பார்த்துவிட்டார்களா?. இந்த கேள்விக்கு மாத்திரம் அவர்கள் பதில் சொன்னால் போதும்.

ரூ.570 கோடி வங்கியில் இருந்து பணம் மாற்றப்பட்டது. இந்த கேள்விகளுக்கு பதில் என்ன?. மத்திய அரசுக்கு மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பு என்ன?. ஒரு போராட்டத்தை நடத்த எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். மத்தியில் உள்ள மோடி அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்லவில்லை என்றால், குற்றத்தை ஒப்புக்கொண்டதாகிவிடும். தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டது.
ஒத்திவைப்பு என்றால் குறிப்பிட்ட தேதியில் அந்த தேர்தல் நடக்கும் என்று பொருள். அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து தான் ரத்து செய்திருக்கிறார்கள். அதை எண்ணிப்பார்த்து உண்மையை உணர்த்த வேண்டும். இதை கட்டளையாக எடுத்துக்கொள்ளாமல், அறிவிப்பாக எடுத்துக்கொண்டு நாம் அத்தனை பேரும் ஒன்றுகூடி தேர்தலை ஏன் நடத்தவில்லை என்று கேட்க வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

நமக்கு நாமே என்ற உறுதியோடு அந்த தேர்தலை சந்திக்க வேண்டும். ஜனநாயகம் இப்படி சீரழிந்த நிலையில் உள்ளது. ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள சீரழிந்த நிலையை, மூடிமறைக்க நினைக்கும் இந்த செயலை, தி.மு.க.வை ஒழிக்க நடக்கும் இந்த திரைமறைவு வேலையை செய்யும் தேர்தல் ஆணையத்திற்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...