Thursday, June 16, 2016

‘அப்பா நீங்க ஏன் அம்மாவுடன் சேரக்கூடாது’’: விவாகரத்து பெற்ற தம்பதியின் குழந்தை கேட்ட கேள்வியால் அதிர்ந்த நீதிமன்றம்

THE HINDU

மேற்குவங்கத்தில் விவகாரத்து பெற்ற தம்பதியின் 6 வயது குழந்தை நீதிமன்ற வளாகத்தில் எழுப்பிய கேள்வி சுற்றியிருந்த அனைவரது உள்ளத்தையும் கணக்க வைத்தது.

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியை சேர்ந்த தம்பதி கடந்த 2005-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவன் மீதுள்ள பாசத்தால் அவர் சார்ந்த இஸ்லாம் மதத்துக்கே மனைவியும் மாறினார். இவர்களுக்கு 2010-ல் பெண் குழந்தையும், 2012-ல் ஆண் குழந்தையும் பிறந்தது. அதே சமயம் திடீரென கணவன் மீதான சந்தேகத்தால் அவரிடம் இருந்து பிரிந்த மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டில் தஞ்சமடைந்தார். மீண்டும் மனைவியுடன் வாழ்வதற்காக கணவன் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதையடுத்து, குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டு, சிலிகுரி மாவட்ட நீதி மன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்தார். மனைவி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் பெண் குழந்தை தந்தையிடமும், ஆண் குழந்தை தாயிடமும் வளர தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனைவி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷிதா மகாத்ரே மற்றும் ராகேஷ் திவாரி அடங்கிய அமர்வு, இரு குழந்தைகளும் தாயின் பாது காப்பில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டு, கோடைக் கால விடு முறைக்கு பின் வழக்கு விசார ணையை ஒத்திவைத்தது.

அதன் அடிப்படையில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது கணவர் சார்பில் ஆஜரான வழக்க றிஞர், ‘‘தாயிடம் வசிக்க பெண் குழந்தைக்கு பிடிக்கவில்லை. எனவே இரு குழந்தைகளையும் தந்தையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என வாதாடினார். அதை ஏற்காத நீதிபதிகள் அடுத்த உத்தரவு வரும் வரை, இடைக்காலமாக தாயிடமே குழந்தைகள் வளர வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே வந்த 6 வயது பெண் குழந்தை தனது தந்தையிடம், ‘அப்பா நீங்க ஏன் அம்மா கூட சேர்ந்து இருக்கக் கூடாது? உங்களோட இருக்க எனக்கு பிடிக்கும்னு ஏன் நீதி மன்றத்துல சொல்லல?’ என அந்த பிஞ்சுக் குழந்தை கேள்வி எழுப்பி யது.

அருகில் இருந்த 4 வயது ஆண் குழந்தையும் அப்பாவுடன் செல்ல வேண்டும் என அழுதது. விவாகரத்து பெற்ற தம்பதியின் குழந்தைகள் பாசத்துக்காக ஏங்கி அழுத இந்த காட்சிகள் கொல்கத்தா நீதிமன்ற வளாகத்தில் இருந்த ஒவ்வொருவரையும் மிகுந்த வேதனைப்படுத்தியது.

தனது விடைத்தாளை தானே திருத்தி 100 / 100 மதிப்பெண் போட்ட மாணவன்: விளக்கம் கேட்டு ஆசிரியர்களுக்கு கல்வித் துறை நோட்டீஸ்



குஜராத் மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவன், தனது விடைத்தாளை தானே திருத்தி, நூற்றுக்கு நூறு மதிப்பெண் களைப் போட்டுக் கொண்டு அதனை, தேர்வு கண்காணிப் பாளரிடம் கொடுத்துள்ளார்.

ஹர்ஷத் சர்வய்யா என்ற மாணவன் பிளஸ் 2 தேர்வில், பொரு ளியல் பாடத்துக்கான தேர்வை எழுதினார். தேர்வு எழுதும் அறை யிலேயே, தனது விடைத்தாளை சிவப்பு நிற மையால் திருத்தி, அதற்கு மதிப்பெண்களைப் போட்டுக் கொண்டார். பின்னர் அதனை, தேர்வு கண்காணிப் பாளரிடம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, குஜராத் மேல்நிலை மற்றும் உயர்நிலைக் கல்வி வாரியம், காவல் துறையில் புகார் அளித்துள்ளது. இதற்கு முன் இதுபோன்று நிகழ்ந்ததில்லை என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்வித் துறை செயலாளர் (தேர்வு) ஜி.டி. படேல் கூறியதாவது:

அந்த மாணவன் தனது புவியியல் மற்றும் பொருளியல் ஆகிய இரண்டு பாடங்களுக்கான தேர்வில் தனக்குத்தானே மதிப்பெண் போட்டுக் கொண் டுள்ளார். புவியியல் தேர்வுத் தாளை திருத்திய ஆசிரியைகள் முறைகேட்டைக் கண்டுபிடித்து விட்டனர். அதில் அவர் 34 மதிப் பெண்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால், பொருளியல் தாளை திருத்திய ஆசிரியர்கள் இந்த தவறைக் கண்டுபிடிக்கவில்லை. சந்தேகம் வராமல் இருக்க அந்த மாணவன் முதல் பக்கத்தில் ஒட்டுமொத்த மதிப்பெண் கூட்டலை எழுதவில்லை. ஆசிரியர்கள் மதிப்பெண்களைக் கூட்டி, நூற்றுக்கு நூறு என முதல்பக்கத்தில் எழுதி விட்டனர். தனித்தனியாக ஏழு ஆசிரியர்களும் ஒவ்வொரு விடையையும் மதிப்பீடு செய்து, கையொப்பமிட்டிருந்தால் அதனைக் கண்டறிந்திருக்க முடியும். இது தீவிரமான தவறு. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மாணவன் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரு தேர்வுகளை எழுத முடியாமல் அவர் நீக்கப்படுவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹர்ஷத்தின் தேர்வு முடிவுகள் தயார் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், கல்வி வாரியத்தின் கணினி மென்பொருளில் தேர்வு முடிவுகளைப் பார்த்தபோது மதிப்பெண்களில் அதிக ஏற்றத்தாழ்வு தெரியவந்தது. அப்போது அவர் மாட்டிக் கொண்டார்.

பொருளியலில் சதமடித்த அவர், குஜராத்தி (13), ஆங்கிலம் (12), சம்ஸ்கிருதம் (4), சமூகவியல் (20), உளவியல் (5), புவியியல் (35) என மிகக் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
Keywords: தனது விடைத்தாள், தானே திருத்தியது, 100 / 100 மதிப்பெண் போட்ட மாணவன், கல்வித் துறை நோட்டீஸ், ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்பு

எம்ஜிஆர் 100 | 87 - பெண்களை தெய்வமாக மதித்தவர்!

அரசு விழா ஒன்றில் ஏழைப் பெண்ணுக்கு தையல் மெஷின் வழங்குகிறார் எம்.ஜி.ஆர்.

M.G.R. பெண்களை தெய்வமாக மதிப்பவர். பொதுக்கூட்டங்களில் பேசும்போது, ‘‘என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தாய்மார்களே…’ என்று குறிப்பிட்டுவிட்டுத்தான் பேசத் தொடங்குவார். கூட்டங்களில் அவரை நாடி உதவி கோரும் பெண்களுக்கு உதவிகள் செய்வதுடன், பெண்களின் பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை செலுத்துவார்.

நாகை மாவட்டம் மாயவரத்தில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட ஒரு பொதுக்கூட்டம். அவரது ஆட்சியில்தான் 1982ம் ஆண்டு மாயவரத்தின் பெயர் மயிலாடுதுறை என்று மாற்றப்பட்டது. இந்த சம்பவம் நடக்கும்போது அந்த ஊர் மாயவரம் என்றுதான் அழைக்கப்பட்டது. எம்.ஜி.ஆரைப் பார்த்து உதவி கோர, இரண்டு இளம் பெண்கள் மிகுந்த சிரமத்துடன் மேடை அருகே வந்து காத்திருந்தனர். அவர்கள் இரட்டையர்கள். ஒரே மாதிரி தோற்றம் கொண்டவர்கள். இதில் கொடுமை என்னவென்றால், இருவரும் ஒரே மாதிரி குறை உடைய மாற்றுத் திறனாளிகள்.

இரு பெண்களுக்கும் கால் ஊனம். கைகளை ஊன்றி தவழ்ந்தபடியே, மேடை அருகே வந்துவிட்டனர். மக்களின் வாழ்த்துக்களை ஏற்றவாறு, கையசைத்த படியே மேடைக்கு எம்.ஜி.ஆர். வந்தார். கூட்டம் முண்டியடித்து மேடை அருகே வர முயற்சித்தது. அந்த நெரிசலில் இரு பெண்களும் சிக்கிக் கொண்டனர். இதை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். உதவியாளர்களிடம் சொல்லி அவர்களை அழைத்துவரச் சொன்னார். அந்தப் பெண்கள் இருவரும் எம்.ஜி.ஆரிடம், ‘‘ஐயா, உங்களிடம் உதவி கோர வந்திருக்கிறோம்’’ என்றனர். அவர்களை மேடையின் ஓரத்தில் காத்திருக்கச் சொன்னார்.

கூட்டத்தில் பேசி முடித்ததும் அந்த சகோதரிகளை எம்.ஜி.ஆர். அழைத்தார். அவர்களது நிலைகண்டு பரிதாபப்பட்டு, ‘‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? சொல்லுங்கள்’’ என்றார். அந்தப் பெண்கள், ‘‘ஐயா, வறுமையால் கஷ்டப்படுகிறோம். எங்களுக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தால் நாங்க தொழில் செஞ்சு பிழைச்சுக்குவோம். அதுக்கு உதவி பண்ணுங்க’’ என்று கெஞ்சும் குரலில் கேட்டனர். உடனே, இரண்டு தையல் மெஷின்களை எம்.ஜி.ஆர். வாங்கி வரச் சொன்னார்.

தன்னிடம் உதவி கோருபவர்கள் தெளிவாகச் சொல்லாவிட்டாலும் அவர்களது தேவை என்ன என்பதை சரியாகப் புரிந்துகொண்டு உதவுபவர் எம்.ஜி.ஆர்.! தையல் மெஷின்கள் வாங்கி வருமாறு சொன்ன மறுவிநாடி ஓடோடிச் சென்ற உதவியாளர்களை அழைத்து, ‘‘காலில் தைக்கும் மெஷின் இல்லை. கையில் தைக்கும் மெஷின்’’ என்று தெளிவாகச் சொல்லி அனுப்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டு புது தையல் மெஷின்கள் காரில் வந்து இறங்கின. அதுவரை காத்திருந்து தன் கையாலேயே அந்தப் பெண்களுக்கு தையல் மெஷின்களை எம்.ஜி.ஆர். வழங்கினார்.

அதைப் பெற்றுக்கொண்ட சகோதரி கள் இருவரும் கண்ணீருடன், ‘‘ஐயா, நீங்க தெய்வம்யா’’ என்றனர். அவர்களது கண்ணீரைத் துடைத்த எம்.ஜி.ஆர்., ‘‘நான் மனுஷன்தாம்மா; தெய்வம் இல்லே. இந்த நிலைமையிலும் உழைச்சுப் பிழைக்கணும்னு நினைக்கிற நீங்க நல்லா இருக்கணும்!’’ என்று சொல்லி வாழ்த்திவிட்டு, அவர்களுக்கு தலா ரூ.2,000 அன்பளிப்பாகக் கொடுத்தார்!

திமுகவில் எம்.ஜி.ஆர். இருந்த காலம். அவரது நெருங்கிய நண்பரும் படத் தயாரிப்பாளருமான சாண்டோ சின்னப்பா தேவரின் இல்லத் திருமணம் கோவையில் நடைபெற்றது. அதில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசளித்துவிட்டு வந்தார். பின்னர், ஒரு கூட்டத்திலும் கலந்துகொண்டார். பேசிக் கொண்டிருக்கும்போதே, திடீரென தனது உதவியாளர்களைப் பார்த்தார். கூட்டத்தில் குறிப்பிட்ட இடத்தைப் பார்த்துவிட்டு, உதவியாளர்களை மீண்டும் பார்த்தார். எம்.ஜி.ஆருடைய பார்வையின் பொருள் அவர்களுக்குப் புரியும். சத்தம் போடாமல் கூட்டத்தில் மக்களோடு கலந்த உதவியாளர்கள், குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றனர். அங்கிருந்த ஒரு வாலிபரைப் பிடித்தனர். அங்கேயே அந்த வாலிபரை நிறுத்தி வைக்குமாறு எம்.ஜி.ஆர். சைகை செய்தார்.

கூட்டம் முடிந்த பின், அந்த வாலிபரை உதவியாளர்கள் அழைத்து வந்தனர். ‘‘கூட்டத்திலே வந்து அசிங்கமா பண்றே? உன்னோடு அக்கா, தங்கைகள் பிறக்கலையா?’’ என்று கேட்டவாறே வாலிபரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார் எம்.ஜி.ஆர்.! பொறி கலங்கிப் போய் நின்ற வாலிபரிடம் ‘‘இனிமேல் இப்படி நடப்பியா?’’ என்று ஆத்திரம் பொங்கக் கேட்டார். ‘‘சத்தியமா இனி இப்படி நடந்துக்க மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்க’’ என்று கெஞ்சிய வாலிபரிடம், ‘‘இனிமே என் கூட்டம் எங்கு நடந்தாலும் உன்னை நான் பார்க்கக் கூடாது. ஓடு இங்கிருந்து…’’ என்று விரட்டினார். விட்டால் போதும் என்று வாலிபர் ஓடி மறைந்தார்.

விஷயம் என்னவென்றால், கூட்டத் தில் அந்த வாலிபர் தன் அருகே நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் பார்வை யிலிருந்துதான் எதுவும் தப்பாதே. அதை கவனித்துவிட்டு அந்த வாலிபரை பிடிக்கச் சொல்லி புத்தி புகட்டியிருக்கிறார்!

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்து 1967-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றிபெற்ற படம் ‘காவல்காரன்’. அதில் எம்.ஜி.ஆருக்கு ரகசிய போலீஸ் அதிகாரி பாத்திரம். அவரது பணி குறித்து யாருக்கும் தெரியாது. அவரது நடவடிக்கைகள் ஊகிக்க முடியாதபடி இருப்பதைக் கண்டு ஜெயலலிதா, ‘‘ஆமா, நீங்க யாரு?’’ என்று கேட்பார். அப்போது, எம்.ஜி.ஆர். தனக்கே உரிய ஸ்டைலில் பாடி நடிக்கும் அருமையான பாடல் இது...

‘அடங்கொப்புரானே சத்தியமா

நான் காவல்காரன்

நீ ஒப்புக் கொள்ள மறுத்தாலும்

நான் காவல்காரன்!’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

புகழஞ்சலி: வெற்றிகளைக் குவித்த ஏ.சி.திருலோகச்சந்தர்!

ஏ.சி.திருலோகச்சந்தர்

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தரின் மறைவையொட்டி, மூத்த பத்திரிகையாளரும், சமூக வலைத்தள கருத்தாளருமான ஏழுமலை வெங்கடேசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவிட்டுள்ளார்.

'ஏ.சி.திருலோகச்சந்தர் - வெற்றிகளை குவித்தவர்' என்ற தலைப்பில் அவர் இட்ட பதிவில் இடம்பெற்ற வியத்தகு தகவல்கள்:

* கல்லூரியில் படிக்கும்போது சக நண்பனின் தந்தை அறிமுகம் கிடைக்கிறது. அவர் வேறு யாருமல்ல, பல ஆண்டுகளாக சினிமா உலகில் கோலோச்சிவரும் பத்மநாப ஐயர். அவரிடம் உதவி இயக்குநராக சேருகிறார் ஏ.சி.திருலோகச்சந்தர். 1952ல் வெளியாகும் அந்த படம் எம்ஜிஆர் நடித்த 'குமாரி'யில் பணிபுரிகிறார். இதேபோல இன்னொரு ஜாம்பவான் இயக்குநர் கே.ராம்நாத்திடமும் உதவி இயக்குநர் வேலை.

* இப்படி காலம் ஓடிக்கொண்டிருந்தபோதுதான் இயக்குநர் ஜோசப் தளியத், தான் இயக்கும் 'விஜயபுரி வீரன்' படத்தில் உதவி இயக்குநர் என்பதோடு திரைக்கதை அமைக்கும் வாய்ப்பையும் அளிக்கிறார். ஆங்கில படங்களை பார்த்து அதன் தாக்கத்தில் விதவிதமான காட்சிகளையும் கதைகளையும் மனதில் வடிவமைப்பதில் ஏசிடி படு கில்லாடி.

* சி.எல்.ஆனந்தன் (நடிகை டிஸ்கோ சாந்தியின் தந்தை) கதாநாயகனாக நடித்து 1960-ல் வெளியான 'விஜயபுரி வீரன்' படம் மெகா ஹிட். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் எஸ்.ஏ.அசோகனுக்கும் ஏவிஎம் நிறுவனத்திடம் நல்ல நட்புண்டு. அதன் அடிப்படையில் ஏ.சி.டி திறமை பற்றி மெய்யப்ப செட்டியாரிடம் சொல்கிறார். இப்படித்தான் ஏவிஎம் என்ற தாய்வீட்டில் நுழைகிறார் ஏ.சி.டி.

* 1962ல் சி.எல்.ஆனந்தனை கதாநாயகனாகவும் நடிகை சச்சுவை கதாநாயகியாகவும் வைத்து ஏவிஎம்முக்காக வீத்திருமகனை இயக்குகிறார் ஏசிடி. ரோஜா மலரே ராஜகுமாரி மற்றும் வெத்திலை போட்ட பத்தினி பொண்ணு ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் அலறின. படம் படு ஹிட். இன்னொரு பக்கம் ஏசிடி கொடுத்த கதைதான் ஏவிஎம்மில் தயாரான சிவாஜி, ஜெமினி நடித்து நட்பின் பெருமையை சொன்ன 'பார்த்தால் பசி தீரும்' படம். குழந்தை நட்சத்திரத்திலேயே கமல் இரட்டை வேடத்தில் கலக்கிய படம் இது.

* 1963ல் ஏசிடி-ஏவிஎம் காம்பினேஷனில் 'நானும் ஒரு பெண்' படம். சிறந்த படம், தேசிய விருது உட்பட பல விருதுகளை குவித்தது. சிவக்குமாரை முதன் முதலில் 'காக்கும் கரங்கள்' (1965) என்ற படம் மூலம் திரையில் அறிமுகப்படுத்தியதும் ஏசிடிதான்.ஏவிஎம் முதன் முதலில் வண்ணப்படம் தயாரிக்க விரும்பியதும் அந்த வாய்ப்பு அப்போதைய வசூல் சக்ரவர்த்தியான எம்ஜிஆருக்கே போனது. அதற்குமுன் வெளியான நாகிரெட்டியின் 'எங்க வீட்டு பிள்ளை' செய்து கொடுத்த வசூல் அப்படி..

* எம்ஜிஆரை வித்தியாசமான பாணியில் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்து, ஏசிடியே இயக்கவேண்டும் என்று அடம்பிடித்தவர் நடிகர் அசோகன்தான். ஏசிடி இயக்கி 1966ல் வெளியான 'அன்பே வா', 50 ஆண்டுகளாகியும் இன்றும் ரசிகர்களை சுண்டியிழுக்கிறது என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமோ?

* இதேபோல ஏசிடி- ஏவிஎம் கூட்டணியில் ஜெமினி நடித்த 'ராமு' படமும் சிவாஜி நடித்த 'பாபு' படமும் ஹிட்டாகி பல மொழிகளில் தாண்டவம் போட்டது தனிக்கதை. நடிகர் ரவிச்சந்திரனையும் காஞ்சனாவையும் வைத்து கலர்ஃபுல்லாக ஆனால் திகிலோடு மிரட்டிய ஏசிடியின் இன்னொரு பிளாக் பஸ்டர் படம் 'அதே கண்கள்'. ஏசிடி இயக்கத்தில் மைல் கல் படம் என்றால் 'இரு மலர்கள்' (1967) படத்தை சொல்லவேண்டும். சிவாஜி, பத்மினி ஆகிய இருவரையும் அசால்ட்டாக சாந்தி என்ற பாத்திரத்தில் துவம்சம் செய்திருப்பார் கே.ஆர். விஜயா.

* இங்கே இன்னொரு சுவையான விஷயம் என்ன வென்றால் 1967-ல் சிவாஜியை வைத்து ஏசி திருலோகச்சந்தர் இயக்கிய 'இரு மலர்கள்' படம்.. ரிலீசுக்கு ஏற்பாடு ஆகிவிட்டது.. அதே நாளில் ஜாம்பவான் ஸ்ரீதர், சிவாஜி நடித்த 'ஊட்டி வரை உறவு' படத்தை வெளியிடுகிறார். ஆனால் என்ன ஆச்சர்யம். ஒரு கதாநாயகனின் இரண்டு படங்களுமே நூறு நாட்களை கடந்தன.

* 1970-ல் சிவாஜியை வைத்து ஏசிடியின் 'எங்கிருந்தோ வந்தாள்' படம் ரிலீசுக்கு ஏற்பாடு ஆகிவிட்டது.. சோதனையாக டி.ஆர். ராமண்ணா சிவாஜியை வைத்து 'சொர்க்கம்' படத்தை அதே நாளில் ரிலீஸ் செய்கிறார். இரண்டு படங்களுமே 100 நாட்கள்.

* 1975ல் சிவாஜியை வைத்து ஏசிடி, 'டாக்டர் சிவா' படம் இயக்கி வெளியிடும் அதே நாளில் ஸ்ரீதர் மீண்டும் சிவாஜி கதாநாயகனாக நடித்த 'வைர நெஞ்சம்' படத்தை வெளியிடுகிறார். இம்முறையும் ஸ்ரீதர் படத்தோடு ஏசிடியின் படமும் 100 நாட்களை கடந்து வெற்றிக்கொடி நாட்டுகின்றன. ஒரு கதாநாயகனை வைத்து படம் இயக்கி அதே கதாநாயகனின் இன்னொரு படத்துடன் ஒரே நாளில் மோதி மூன்று முறை வெற்றிகண்டவர் ஏ.சி.திருலோகச்சந்தர்..

* 'பாரதவிலாஸ்', 'அவன்தான் மனிதன்', 'பத்ரகாளி', இலங்கையின் நாயகி மாலினி பொன்சேகாவை சிவாஜியுடன் ஜோடிபோட்டு சஸ்பென்ஸ் படமாக எடுத்த 'பைலட் பிரேம்நாத்', ரஜினியுடன் 'வணக்கத்துக்குரிய காதலியே', நதியாவுடன் சிவாஜி கலக்கிய 'அன்புள்ள அப்பா' என ஏசி திருலோகச்சந்தரின் இயக்குநர் பயணம் பெரியது என்பதைவிட வெற்றிகரமானது.

* 'பாவமன்னிப்பு' படத்தில் சிவாஜி முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டு கோரமான முகம் வெளிப்படும் காட்சியை உந்துதலாக வைத்து உருவாக்கப்பட்ட படம்தான் 'தெய்வமகன்' (1969). சிவாஜி தந்தை, மகன்கள் என மூன்று வேடங்களில் நடிப்பில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி அசத்திய படம். எல்லாவற்றையும் விட ஆஸ்கார் விருதுக்காக முதன் முதலில் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட படம், ஏசி திருலோகச்சந்தர் இயக்கிய தெய்வமகன்தான்.

தமிழ் சினிமாவின் சாதனையாளர்களில் ஒருவரான உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வைக்கிறோம் ஏ..சி.திருலோகச்சந்தர் அவர்களே.



ஏழுமலை வெங்கடேசன் |அவரின் ஃபேஸ்புக் பக்க இணைப்பு: Elumalai Venaktesan

புதிய மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடம் கோரும் 80 விண்ணப்பங்கள் நிராகரிப்பு


நாடு முழுவதிலும் புதிய மருத்து வக் கல்லூரிகள் மற்றும் கூடுதல் மருத்துவ இடங்களுக்கு அனுமதி கேட்டு இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்.சி.ஐ) இந்த ஆண்டு வந்த விண்ணப்பங்களில் 80 கோரிக்கைகள் நிராகரிக்கப் பட்டன.

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளை கண்காணித்து வழிநடத்தவும், புதிய கல்லூரி களுக்கு அனுமதி அளிக்கவும் இந்திய மருத்துவ கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கவுன்சிலிடம் வரும் 2016-17-ம் கல்வியாண்டுக்கு கூடுதல் இடங்களுக்கு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி கேட்டி ருந்தன. இதையடுத்து அந்த மருத்துவக் கல்லூரிகளில் அடிப் படை கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் உள்ளனவா என எம்.சி.ஐ. குழு நேரில் சென்று ஆய்வு செய்தது. இதில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு 47 மருத்துவக் கல்லூரிகளின் கோரிக்கை நிரா கரிக்கப்பட்டுள்ளது. இத்தகவல், மத்திய சுகாதார அமைச்சக வட்டாரம் மூலமாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் மத்திய சுகாதார அமைச்சக அதி காரிகள் மேலும் கூறும்போது, “இந்த மருத்துவக் கல்லூரிகளில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட சேர்க்கை அனுமதியின்படி பேரா சிரியர்கள் எண்ணிக்கை பதிவேடு களில் மட்டுமே இருப்பது தெரிய வந்தது. இந்தப் பேராசிரியர்கள் தங்கள் பெயரை மட்டும் அக்கல்லூரிகளில் பதிவு செய்து விட்டு தனியாக மருத்துவமனை நடத்தியும் பணியாற்றியும் வரு கின்றனர். எனவே அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் பேராசிரியர்கள் விவரம் மற்றும் அவர்களின் தகுதிகளை கேட்டு எம்.சி.ஐ கடிதம் எழுதியுள்ளது. இதை ஆராய்ந்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்” என்றனர்.

புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கூடுதல் இடங்களுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்ட பட்டியலில் தமிழகம் முதலி டத்தில் உள்ளது. இதையடுத்து மேற்கு வங்கம், பிஹார் ஆகிய மாநிலங்கள் முறையே இரண் டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. இவை தவிர ஆந்திரா, கர்நாடகா, தெலங் கானா, உ.பி., கேரளா ஆகிய மாநிலங்களின் விண்ணப் பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. அடிப்படை கட்டமைப்பு வசதி களை பூர்த்தி செய்த பின் 2017-18-ம் கல்வியாண்டில் மீண்டும் விண்ணப்பிக்குமாறு இக்கல்லூரி களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் 380 மருத்து வக் கல்லூரிகளில் சுமார் 50,000 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். என்றாலும் இந்த எண்ணிக்கை போதாது என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கேட்டு அதிக விண்ணப்பங்கள் வந்திருந்தன. இவற்றில் 33 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தாக தெரிய வந்துள்ளது.

Tuesday, June 14, 2016

முகநூல்: சில வியத்தகு தகவல் குறிப்புகள்!

THE HINDU

மனிதனின் உற்ற நண்பனாக தற்போது பேஸ்புக் எனும் முகநூல் மாறிவிட்டது. சந்தோஷம், துக்கம், கருத்து, விமர்சனம் என அனைத்தையும் வெளிப்படுத்தும் விதமாக பேஸ்புக் இன்று உலக மக்களிடையே மாறிவிட்டது.

சொல்லப்போனால் ஒரு சமூக புரட்சியை பேஸ்புக் செய்துள்ளது எனக் கூறலாம். முடங்கி கிடந்த ஒரு சமூகத்தை பொதுத் தளத்திற்கு கொண்டு வந்ததில் பேஸ்புக்கின் பங்கு மிகப் பெரியது. இந்திய தொழில்நுட்ப இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.

சின்னதாக ஒரு கல்லூரிக்குள் ஆரம்பிக்கப்பட்ட சமூக வலைதளம் இன்று தகவல் தொழில்நுட்பத்தில் அடுத்தக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய பேஸ்புக் பற்றிய சில தகவல்கள்…

2003-ம் ஆண்டு

மார்க் ஜூகர்பெர்க் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த போது பேஸ்மாஸ் என்று அழைக்கப்பட்ட பேஸ்புக் இணையதளத்தை உருவாக்கினார்.

காப்புரிமை, தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றில் தலையிடுவதாக இந்த தளத்தினை ஹார்வேர்டு பல்கலைக்கழக நிர்வாகம் மூடியது. மேலும் ஜூகர்பெர்க் மீது நடவடிக்கை எடுத்தது.

2004-ம் ஆண்டு

பிப்ரவரி 4-ம் தேதி `தி பேஸ்புக்’ என்ற வலைதளத்தை தொடங்கினார். தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 1,500 பயனாளிகள் உறுப்பினராக இணைந்தனர்.

2006-ம் ஆண்டு

13 வயதுக்கு மேல் உள்ள அனைத்து நபர்களும் பேஸ்புக்கில் உறுப்பினராக இணையலாம் என்று நிறுவனம் அறிவித்தது.

2012-ம் ஆண்டு

மே மாதம் பொதுப் பங்கு வெளியீட்டினை பேஸ்புக் மேற்கொண்டது. இதன் மூலம் 1,600 கோடி டாலர் திரட்டியது. அமெரிக்க சரித்திரத்தில் இது மூன்றாவது பெரிய பங்கு வெளியீடாக அமைந்தது.

பேஸ்புக்கின் முகப்பு பக்கத்தில் முதன் முதலில் வைக்கப்பட்ட படம் அல் பாஸினோ. இவர் ஹாலிவுட் நடிகர்.

2014-ம் ஆண்டு வாட்ஸ் அப் அப்ளிகேஷனை 22 பில்லியன் டாலர் மதிப்புக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியது.

பேஸ்புக் மட்டுமல்லாது இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், பிரைவேட் கோர், அக்குலஸ் விஆர் போன்ற சேவைகளையும் வழங்கி வருகிறது.

நீங்கள் உங்களுடைய முகநூல் நண்பர்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் பிளாக் செய்ய முடியும். ஆனால் மார்க் ஜூகர்பெர்க்கை பிளாக் செய்ய முடியாது.

சமீபத்தில் மார்க் ஜூகர்பெர்க் அறிவித்த அறிவிப்பு ஒன்று எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. மார்க் ஜூகர்பெர்க் பேஸ்புக்கின் 99 சதவீத பங்குகளை தனது தொண்டு நிறுவனத்திற்கு அளித்துவிட்டார். இதன் மதிப்பு 45 பில்லியன் டாலர்.

கடந்த வருடம் பேஸ்புக் நிறுவனம் மார்க் ஜூகர்பெர்க் பாதுகாப்புக்காக செலவிட்ட தொகை 28 கோடி ரூபாய்

மார்க் ஜூகர்பெர்க்கின் ஆண்டு சம்பளம் ஒரு டாலர் ஆனால் நிறுவனங்கள் வழங்கும் பிற சலுகைகள் பிற படிகள் 2014-ம் ஆண்டு நிலவரப்படி 6,10,454 டாலர்

மார்க் ஜூகர்பெர்க் இந்தியாவை ஞானத்தின் கோயில் என்று வர்ணித்தார்.

பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களில்... 66% ஆண்கள் 76% பெண்கள்

# மார்ச் 31ம் தேதி வரை பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 165 கோடி

# 140 மொழிகளில் பேஸ்புக் சேவைகள் மற்றும் தகவல்களை பெற முடியும்

# இன்று சர்வதேச அளவில் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களில் 8.7 சதவீதம் பேர் போலியான கணக்கு வைத்திருப்பவர்கள்.

# சீனா உட்பட மொத்தம் 13 நாடுகளில் பேஸ்புக் செயல்பாடுகள் முடக்கிவைக்கப் பட்டுள்ளன. இந்த தடையால் சீனாவில் மட்டும் 9.5 கோடி பயன்பாட்டாளர்களை பேஸ்புக் நிறுவனம் இழந்துள்ளது.

# ஒரு நாளைக்கு 30 கோடி புகைப்படங்கள் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

# அமெரிக்கர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் பேஸ்புக்கில் செலவிடுகின்றனர்.

# ஒரு நாளைக்கு 6 லட்சம் முறை பேஸ்புக் கணக்கை திருட்டு தனமாக நுழைவதற்கு முயற்சி செய்யப்படுகிறது.

# ஒரு நாளைக்கு 18 லட்சம் மக்கள் பேஸ்புக்கில் லைக் இடுகின்றனர்.

# 2016-ம் ஆண்டு மார்ச் 31 தேதி வரை பேஸ்புக் நிறுவனத்தில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 13,598

# ஒவ்வொரு நொடிக்கும் ஐந்து புதிய பேஸ்புக் கணக்குகள் துவங்கப்படுகின்றன.

# 2015-ம் ஆண்டு நிலவரப்படி பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த வருமானம் 1,792.8 கோடி டாலர், நிகர வருமானம் 368.8 கோடி டாலர்.

# பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த சொத்துமதிப்பு 4,940.7 கோடி டாலர்

கிராஃபிக்ஸ்: தே.ராஜவேல்

எம்ஜிஆர் 100 | 85 - 'அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி'

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

எம்ஜிஆர் 100 | 85 - 'அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி'



M.G.R. நடித்த ஆரம்ப கால படங்களில் நம்பியாருக்கும் முன்னதாக வில்லன் வேடங்களில் நடித்தவர் அவர். ‘ஹா...ஹா... ஹா..’ என்ற அதிரடி சிரிப்பிலேயே கலங்கடித்தவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்தான் முதன்முதலாக இந்த இடிச்சிரிப்பை அவர் வெளிப்படுத்தினார். அதற்கு கிடைத்த பலத்த வரவேற்பால், பின்னர், அதுவே அவரது தனி முத்திரை ஆனது. அந்த சிரிப்புக்கு சொந்தக்காரர் பி.எஸ்.வீரப்பா.

1939-ம் ஆண்டு வெளியான ‘மணிமேகலை’ என்ற படத் தில் வீரப்பா அறிமுகமானார். 1946-ம் ஆண்டு ஜூபிடர் பிக்சர்ஸின் ‘ முருகன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித் திருந்தார். அந்தப் படத்தில் வீரப்பாவும் நடித்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு இறுதிவரை நீடித்தது. எம்.ஜி.ஆரின் கடைசி படமான ‘மது ரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ உட்பட பல படங்களில் வீரப்பா நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘நாம்’ படத்தை ஜூபிடர் பிக்சர்ஸுடன் சேர்ந்து மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தில் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் பங்குதாரர்களாக இருந்தனர். படத்துக்கு திரைக்கதை, வசனம் கருணாநிதி. படத் தில் வரும் வில்லன் பாத் திரத்துக்கு வீரப்பாவை எம்.ஜி.ஆர். சிபாரிசு செய்தார். ‘நாம்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு முற்போக் கான இளைஞர் வேடம். படத்தில் எம்.ஜி.ஆரின் வீட் டுக்கு வீரப்பா தீ வைத்துவிடுவார். இதில் எம்.ஜி.ஆரின் முகம் உருக்குலைந்து விடும். முகம் பாதிக்கப்பட்டாலும் கண்கள் தெரியும். தீயில் வெந்த முகத் தோடு இரவில் நடமாடும் அவரைப் பார்த்து பேய் நடமாடுவதாக ஊரில் வதந்தி பரவும். எம்.ஜி.ஆரின் அழகான முகத்தை பார்க்கவே ரசிகர்கள் விரும்பு வார்கள் என்பதை இந்தப் படம் உணர்த்தியது. படம் நல்ல கதை யம்சத்துடன் எம்.ஜி.ஆரின் சிறப்பான நடிப்போடு அமைந்திருந்தாலும் அவரை வெந்துபோன முகத்தோடு பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை.

வீரப்பாவின் தமிழ் உச்சரிப்பும் ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசும் பாங்கும் மக்களைக் கவர்ந்தன. எம்.ஜி.ஆர். நடித்து 1957-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்ற ‘மகாதேவி’ படத்தில் ‘‘அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி’’ என்ற வீரப்பாவின் வசனம் இன்றளவும் பிரபலம். அந்தப் படத்தில் வீரப்பாவின் பெயர் கருணாகரன். சந்தர்ப்பவசத்தால், வீரப்பாவின் விருப்பத்துக்கு மாறாக, இளவரசியாக வரும் நடிகை எம்.என்.ராஜத்தை அவருக்கு கட்டாய மாக திருமணம் செய்துவைத்து விடுவார் கள். திருமணம் முடிந்து வீரப்பாவை ‘‘அத்தான்...’’ என்று எம்.என்.ராஜம் அழைப்பார். ஆத்திரத்தை அடக்கியபடி வேதனை கலந்த சிரிப்போடு வேண்டா வெறுப்பாக, ‘‘அப்படிச் சொல்... சத்தான இந்த வார்த்தையிலே கருணாகரன் செத்தான்’’ என்று வீரப்பா கூறும்போது தியேட்டரில் எழும் சிரிப்பலை அடங்க சில நிமிடங்கள் பிடிக்கும்.

படங்களில் வாள் வீச்சில் எம்.ஜி.ஆருக்கு ஈடு கொடுத்து வீரப்பா சண்டையிடுவார். எம்.ஜி.ஆரிடம் உள்ள ஒரு விசேஷ குணம், எந்த பாத்திரத்தில் எந்தக் காட்சியில் நடித்தாலும் சரி, சுற்றிலும் நடப்பவற்றில் ஒரு கண் வைத்திருப்பார். ‘ஜெனோவா’ படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆருக் கும் வீரப்பாவுக்கும் ஆக் ரோஷமான வாள் சண்டை. இந்தக் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளத்தில் உருண்டுவிழ இருந்த வீரப்பாவை எம்.ஜி.ஆர். பிடித்து இழுத்து சரியான நேரத்தில் காப்பாற்றியதால் அவர் உயிர் பிழைத்தார். இதை வீரப்பா பலமுறை நன்றி யோடு கூறியுள்ளார்.

‘விக்கிரமாதித்தன்’ படத்தில் வீரப் பாவை கொல்ல வரும் கூட்டத் திடம் இருந்து அவரை எம்.ஜி.ஆர். காப்பாற்றுவார். அதற்கு நன்றி தெரிவித்துவிட்டு எம்.ஜி.ஆரைப் பற்றி வீரப்பா விசாரிப்பார். விவரங்களைத் தெரிந்து கொண்டபின், அவர் சொல் லும் வார்த்தைகளால் தியேட்டரில் எழும் கரவொலியால் காது கிழியும். எம்.ஜி.ஆர். பற்றி வீரப்பா சொல் வார்... ‘‘உலகத்துக்குத் தேவையான மனிதர்!’’

அந்த வசனத்தை உறுதிப்படுத்துவது போல மட்டுமல்ல; தன்னை அவமதிப்ப வர்களை எம்.ஜி.ஆர். எப்படி தண்டிப்பார் என்பதற்கும் ஒரு சுவையான சம்பவம். அவர் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த காலங்களில் ஜூபிடர் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்த மான நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம்.

ஒரு காட்சியில் நடித்து முடித்து விட்டு அடுத்த ‘ஷாட்’டுக்கு கூப்பிடும் வரை வெளியே உட்கார்ந்திருப்பார். எங்காவது சென்றால், தேடும்போது ஆள் இல்லாவிட்டால் வாய்ப்புகள் போய்விடும் என்பதால் இடத்தைவிட்டு நகரமாட்டார். ஒருநாள் அப்படி உட் கார்ந்திருந்தபோது, அந்த ஸ்டுடியோ வில் பணியாற்றிய அப்பன் என்ற பெயர் கொண்ட பணியாளர் ஒருவர், ஒரு கூஜாவையும் டம்ளரையும் எடுத்துக் கொண்டு சென்றார். எம்.ஜி.ஆருக்கு கடுமையான தாகம். பணியாளர் அப்பனைப் பார்த்து, ‘‘அண்ணே, குடிக்க கொஞ்சம் தண்ணி’’ என்று கேட்டார். அதற்கு அப்பன் எரிச்சலுடன், ‘‘இருய்யா, பெரிய நடிகர்களுக்கு ஜூஸ் கொண்டுபோறேன். நீ வேற’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன் பின்னரும் எம்.ஜி.ஆருக்கு அவர் தண்ணீர் கொண்டுவரவில்லை.

சில ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் கதாநாயகனாக உயர்ந்ததோடு, அதே நெப்டியூன் ஸ்டுடியோவையே விலைக்கு வாங்கி அதற்கு தன் தாயின் பெயரை வைத்தார். எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுக் காமல் அலட்சியப்படுத்திய பணியாளர் அப்பன், அதே ஸ்டுடியோவில்தான் பணியாற்றி வந்தார். அவ ருக்கு இப்போது எம்.ஜி.ஆர். முதலாளி!

ஸ்டுடியோவில் அப்பனைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அவரை அருகில் அழைத் தார். பழைய சம்பவங்கள் மனதில் ஓட, ‘வேலை போச்சு’ என்ற நினைப் புடன் கண்கலங்கியபடியே கும்பிட்ட வாறு எம்.ஜி.ஆரிடம் வந்தார் அப்பன். ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘இரு நூறு ரூபாய்’’ பலவீனமான குரலில் அப்பனிடம் இருந்து பதில் வந்தது.

‘‘இந்த மாதம் முதல் உங்களுக்கு நானூறு ரூபாய் சம்பளம்’’ என்று அப்பனின் தோள்களைத் தட்டி புன்முறுவலுடன் கூறிய எம்.ஜி.ஆரின் கால்களில் விழுந்து அழுதார் அப்பன். அவரைத் தூக்கி அணைத்தபடி தேற்றினார் எம்.ஜி.ஆர்.!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்




எம்.ஜி.ஆர். நடித்த ‘ஆனந்த ஜோதி’ படத்தை பி.எஸ்.வீரப்பா தயாரித்தார். நடிகை தேவிகா எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் இது. படத்தில் தேவிகாவின் தம்பியாக பள்ளிச் சிறுவனாக கமல்ஹாசன் நடித்திருப்பார்.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...