Friday, June 17, 2016

UGC approves new guidelines for Deemed universities..press trust of india


UGC approves new guidelines for Deemed universities

21:58 HRS IST

New Delhi, Jun 16 (PTI) The University Grants Commission (UGC) has approved new regulations for Deemed Universities as per which there will be no bar on the number of off-campus centres such institutions may set up, though quality has to be assured.

The new guidelines also gives a time bar of seven months for the UGC and HRD ministry to take for processing applications for setting up new centres.

According to the new guidelines for Deemed Universities which was announced today by HRD minister Smriti Irani at a Press Conference, it has also been decided that Universities will not be able to charge more than Rs 10,000 at the time of counselling.

"Capitation fee will not be allowed," she added.

There have been complaints of students being asked to pay full fees which they had to struggle to recover in case they did not want to join. The new guidelines, Irani said, encourages transparency and focus on quality.

She said there is no cap on the number of off-campus centres an institution may set up but quality has to be of the highest order.

She added that to encourage transparency, it has been decided that the visits of expert committees for inspection to such institutions will be videotaped and put on the website within 24 hours.

In another departure from the previous guidelines, the new guidelines allow the persons who establish a Deemed University to occupy the post of Chancellor or Pro Chancellor.

Deemed Universities have also been given more freedom in opening new departments related to core areas, for which they now don't have to immediately seek the permission of the regulator.

The new regulations also allow setting up of off-campus centres abroad but for that additional permission of the MHA and MEA would be needed.

When asked about the existing cases of unpermitted off-campus centres by some institutions, Irani said they may be looked at in the light of the new guidelines.

A statement released today said that after receiving them from the UGC, the HRD ministry has concurred with the recommendations for notification.

According to the timelines assigned for different stages for processing of applications - information seeking by UGC (2 months), submission of reports by the Expert committee (3 months) and approval and advice of UGC (1.5 months) and Government decision (2 months).

UGC nod to new guidelines for deemed universities Jun 17, 20..ASIAN AGE

UGC nod to new guidelines for deemed universities
Jun 17, 20

16 |
PTI |
New Delhi



The University Grants Commission (UGC) has approved new regulations for deemed universities as per which there will be no bar on the number of off-campus centres such institutions may set up, though quality has to be assured.

The new guidelines also gives a time bar of seven months for the UGC and HRD ministry to take a call on setting up new centres.

According to the new guidelines for deemed universities which was announced today by HRD minister Smriti Irani at a press conference, it has also been decided that universities will not be able to charge more than Rs 10,000 at the time of counselling.

“Capitation fee will not be allowed,” she added.

There have been complaints of students being asked to pay full fees which they had to struggle to recover in case they did not want to join. The new guidelines, Ms Irani said, encourages transparency and focus on quality.

New rules
No bar on the number of off-campus centres
Time bar of 7 months for UGC and HRD to take call onnew centres
Universities can’t charge more than `10,000 at the time of counselling
Capitation fee will not be allowed
Visits of expert committees for inspection to institutions will be videotaped and put on the website within 24 hours
Persons who establish a deemed university can occupy post of chancellor or pro chancellor
More freedom in opening new departments related to core areas
More freedom in opening new departments related to core areas
Off-campus centres abroad allowed with additional permission of MHA and MEA

குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு ஆயுள்; 12 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை

THE HINDU

குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும், 12 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும் சாகும் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மரண தண்டனை இல்லை:

குற்றவாளிகள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 69 பேரை உயிருடன் எரித்துக் கொன்று கொடுஞ்செயல் புரிந்துள்ளதால், அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் கொலைக் குற்றவாளிகள் 11 பேர் உட்பட யாருக்குமே மரண தண்டனை வழங்கப்படவில்லை.

வழக்கு பின்னணி:

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. அப்போது, குல்பர்க் சொசைட்டி குடியிருப்புக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கு ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. மொத்தம் 66 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் விசாரணை காலத்தில் 5 பேர் இறந்துவிட்டனர், ஒருவரைக் காணவில்லை. இவ்வழக்கில் கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், 36 பேர் விடுவிக்கப்பட்டனர். 24 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களில் 11 பேர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பலமுறை ஒத்திவைப்பு:

குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கின் தண்டனை விவரம் பலமுறை தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வழக்கில் கொலை குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனையும், 12 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Thursday, June 16, 2016

நிறைவடைந்தது புத்தகத் திருவிழா!

படம்: எம்.மூர்த்தி

7,00,000+ வாசகர்கள் | 10,00,000+ தலைப்புகள் | ரூ.10,00,00,000+ விற்பனை

புதிய தாள்களின் வாசனையுடன் வந்திறங்கிய புத்தகங்களுடன் நடந்த புத்தகக் காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. தென்னிந் தியப் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், சென்னைத் தீவுத் திடலில் ஜூன் 1 தொடங்கி 13 நாட்கள் நடந்த 39-வது புத்தகக் காட்சி பதிப்பாளர்கள், வாசகர்கள், வணிகர்கள் என்று பலதரப்பினருக்கும் பலன் தந்தது என்றே சொல்ல வேண்டும்.

சுமார் இரண்டு லட்சம் சதுர அடிப் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான புத்தகக் காட்சியில் 700க்கும் மேற்பட்ட பதிப்பாளர் களுடன் ஊடகங்களும் பங்கேற்றன. ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் 5 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்களும், கல்வி தொடர்பான குறுந்தகடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நான்கு ஏ.டி.எம்-கள், மருத்துவ உதவிக்காக 108 ஆம்புலன்ஸ் வசதி, விசாலமான வாகன நிறுத்தம் ஆகிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. புத்தகக் காட்சியின் அரங்குகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்குத் தனிச் செயலி போன்ற புதுமைகளும் இடம்பெற்றன. இந்த அறிவுலகக் கொண்டாட்டத்துக்குச் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்திருந்தனர்; முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கூட்டம், விற்பனை இரண்டுமே 60%-70% அளவுக்கே இருந்தது என்றாலும் சென்னைக்கு இந்தக் கோடைப் புத்தகக் காட்சி புதிது.

“வழக்கத்துக்கு மாறாக ஜூன் மாதம் நடத்தப்பட்டது, தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டது, கடும் வெயில் போன்ற பல தடைகளையும் எதிர்கொண்டே இந்தப் புத்தகக் காட்சி நடந்தது. எனினும், தடைகளைப் பெருமளவில் தாண்டியிருக்கிறோம். குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் வந்திருந்தார்கள். இளைஞர்கள் கூட்டமும் அதிகம். வழக்கமாக நட்சத்திரப் பேச்சாளர்களை வைத்துதான் நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த முறை புத்தகம், கலாச்சாரம் தொடர்பான விவாத நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்திருந்தோம். திரண்ட கூட்டம் ஏமாற்றவில்லை. தீவுத் திடலில் பேருந்துகள் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முக்கியமான ஆங்கிலப் பதிப்பகங்களுக்குக் குறைந்த வாடகையில் அரங்குகளை ஒதுக்கியிருந்தோம். கன்னடம், இந்தி போன்ற மொழி அரங்குகளுக்கும் குறைந்த வாடகைதான். இந்த முறை ‘மின் நூல்’ பதிப்பகங்களுக்கு முதல் முறையாக அரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதேபோல், அயலகத் தமிழ் எழுத்தாளர்களுக்கான சிறப்பு அரங்காக சிங்கப்பூர் அரங்கு அமைந்தது. சில குறைகள் இருந்தாலும், மொத்தத்தில் திருப்திகரமாகவே இருந்தது புத்தகத் திருவிழா!” என்று தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன் குறிப்பிட்டார்.

ஒரு அறிவுலகத் திருவிழா நடத்துவதற்கான வாய்ப்பையும் யோசனையையும் நமக்கு இந்தப் புத்தகக் காட்சி சுட்டிக்காட்டியிருக்கிறது என்பது கூடுதல் விசேஷம்!

ஆகாஷ்வாணி: இந்திய வானின் அசரீரி!

தங்க.ஜெய்சக்திவேல்

THE HINDU
இன்று உலகின் மிக முக்கிய ஊடகமாகச் செயல்பட்டுவருகிறது அகில இந்திய வானொலி

‘ஆகாஷ்வாணி! செய்திகள் வாசிப்பது…’ என்று கனத்த மெளனத்தை உடைத்துக்கொண்டு ஒலிக்கும் குரலுடன் தொடங்கும் வானொலிச் செய்திகளைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு, ஒலியுலகின் பொற்காலமான ‘அகில இந்திய வானொலி’யின் நாட்கள் என்றென்றும் நினைவில் இருக்கும். இன்றைக்கு, 418 நிலையங்களைக் கொண்டு உலகின் மிக முக்கிய ஊடகமாக செயல்பட்டுவருகிறது அகில இந்திய வானொலி. உலகின் மிகப் பெரிய பல்வேறு மொழி ஒலிபரப்புகளைக் கொண்ட ஒரே வானொலி எனும் தனித்த பெருமையும் உண்டு.

இந்தியாவில் வானொலி சேவை 1923-லேயே தொடங்கப்பட்டது. எனினும், ‘அகில இந்திய வானொலி’ என்ற பெயர் வைக்கப்பட்டது 1936 ஜூன் 8-ல்தான். அந்தப் பெயரை வைத்தவர் அகில இந்திய வானொலியின் முதல் இயக்குநரான லையனல் பீல்டன். அதன்படி, அகில இந்திய வானொலி தொடங்கப்பட்டதன் 80-ம் ஆண்டு இது. அதற்கு முன்னர் ‘இந்தியன் ஸ்டேட் ப்ராட்காஸ்டிங் சர்வீஸ்’ என்றே அது அழைக்கப்பட்டது. அகில இந்திய வானொலியின் லச்சினையை உருவாக்கியதும் லையனல் பீல்டன்தான். அப்போதைய வைஸ்ராய் கொடுத்த 2,50,000 ரூபாயை வைத்துக்கொண்டு, தனது முழு உழைப்பையும் பயன்படுத்தி, அகில இந்திய வானொலியை வளர்த்தெடுத்தவர் அவர்.

ஹிட்லரும் செய்திகளும்

இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பின்னர், வானொலியின் முக்கியத்துவத்தைப் பலரும் புரிந்துகொண்டனர். ஹிட்லர் தன்னுடைய பரப்புரைக்கு வானொலியைத் திறமையாகப் பயன்படுத்தியதன் விளைவாக உலக நாடுகளின் கவனம் வானொலியின் பக்கம் குவிந்தது. குறிப்பாக, சிற்றலை வானொலிகளின் பணி அளப்பரியது.

உலக அளவில் ஏற்பட்ட இந்தப் போக்குகள் அகில இந்திய வானொலியிலும் தாக்கம் செலுத்தின. உள்நாட்டு மொழிகள் தவிர, வெளிநாட்டு மொழிகளிலும் ஒலிபரப்பியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. செய்தி அறிக்கை முதலில் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு, பின்னர் இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. இன்றும் அதே நடைமுறைதான் தொடர்கிறது. பீல்டன் செய்தி அறிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். முதல் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய சார்லஸ் பார்ன்ஸ் அவரது கனவுகளைப் பூர்த்திசெய்தார்.

1936 முதல் செய்திச் சுருக்கம் ஒலிபரப்பானது. தேசிய மற்றும் வெளிநாட்டு சேவைக்குத் தேவை ஏற்பட்டது. அதற்காக, சக்திவாய்ந்த ஒலிபரப்பிகள் அமைக்கப்பட்டன. நாள் ஒன்றுக்கு 27 செய்தி அறிக்கைகள் அன்றைய காலகட்டத்தில் ஒலிபரப்பப்பட்டன.

1962, 1965 மற்றும் 1971 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்ற போர்கள், இந்தியா முழுவதும் உள்ள நேயர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தன. கள நிலவரங்களை நாட்டின் மூலைமுடுக்குகளுக்குக் கொண்டுசென்ற ஒரே ஊடகமாக வானொலி மட்டுமே அப்போது இருந்தது. அந்தச் சமயத்தில் அகில இந்திய வானொலியைக் கேட்கும் நேயர்கள் கணிசமாக உயர்ந்தனர்.

காந்தியின் குரல்

மகாத்மா காந்தி அகில இந்திய வானொலிக்கு ஒரு முறைதான் வந்துள்ளார். அதன் பின்னணி சோகமானது. தேசப் பிரிவினையின்போது இரு தரப்பிலும் நிகழ்ந்த கலவரங்கள் காந்தியைக் கலங்கச் செய்துவிட்டன. கலவரங்களை அடக்க காந்திக்குக் கிடைத்த வழிகளில் ஒன்றுதான் வானொலி உரை. 1947 நவம்பர் 12-ல் நாட்டு மக்களுடன் காந்தி முதலும் கடைசியுமாக உரையாற்றினார். எனினும், வெவ்வேறு நிகழ்ச்சிகளில் அவர் ஆற்றிய உரைகளை அகில இந்திய வானொலி ஒலிபரப்பிவருவது குறிப்பிடத் தக்கது.

அந்தச் சூழ்நிலையில்தான் வானொலியின் முக்கியத்துவத்தை அறிந்து ஆறு நிலையங்களை 25 நிலையங்களாக உயர்த்தியது அரசு. அடுத்த 25 வருடங்களில் அகில இந்திய வானொலி 86 நிலையங்களைத் தொடங்கி சாதனை படைத்தது. இன்றைக்கு அகில இந்திய வானொலி 91 பேச்சு வழக்கு மொழிகளில் ஒலிபரப்பிவருகிறது. இது உலகின் எந்த நாட்டின் பொதுத்துறை வானொலியும் செய்யாத ஒரு சாதனை.

திரையிசைக்குத் ‘தடா’

நேருவின் அமைச்சரவையில் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த பி.வி.கேஸ்கர் பாரம்பரிய இசையை மட்டுமே வானொலியில் ஒலிபரப்ப வேண்டும் என்று கறார் காட்டினார். திரையிசைக்கு வாய்ப்பே தரப்படவில்லை. அந்தக் காலகட்டத்தில் திரையிசையை மட்டுமே வைத்து ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்திருந்தது இலங்கை வானொலி. எனவே, நேயர்கள் அகில இந்திய வானொலியில் செய்திகளை மட்டும் கேட்டுவிட்டு, இலங்கை வானொலியின் பக்கம் சென்றுவிடுவது வழக்கமாக இருந்தது. சுதாரித்துக்கொண்ட அகில இந்திய வானொலி, திரையிசைக்கு உரிய முக்கியத்துவம் தரத் தொடங்கியது.

1957-ல் திரை இசையை மையப்படுத்தி விளம்பரதாரர்களைக் கவர்வதற்காக அகில இந்திய வானொலியால் தொடங்கப்பட்டதுதான் ‘விவிதபாரதி’. அதில் ஒலிபரப்பான ‘ஹவா மகால்’, ‘சைய கீத்’, ‘சங்கீத் சரிதா’, ‘சர்கம்’ மற்றும் ‘பர்மைஸ் கீத்’ போன்ற நிகழ்ச்சிகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.

அப்போதெல்லாம், இன்று போல் நினைத்த மாத்திரத்தில் வேறு ஒரு ஊடகத்தை நேயர்கள் மாற்றிக்கொள்ள முடியாது. எனினும், பலரது வீடுகளில் சிற்றலை வானொலிப் பெட்டி இருந்ததால், பெரும்பாலானோர், அகில இந்திய வானொலிகளின் செய்திகளை வெளிநாட்டு வானொலிகளின் செய்திகளோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டனர். இதனால், செய்தி அறிக்கைகள் தயாரிப்பு, அவற்றை வாசிப்பவர்களின் உச்சரிப்பு ஆகியவற்றில் பெரும் சவால்கள் எழுந்தன. எனினும், இதுபோன்ற சவால்கள்தான் அகில இந்திய வானொலியின் வளர்ச்சிக்கு உரமாக அமைந்தன.

மறக்க முடியாத குரல்கள்

வானொலி அறிவிப்பாளர்களான சச்தேவ் சிங் மற்றும் மெல்வில் டி மெல்லோ ஆகியோரின் கம்பீரக் குரல்கள் மறக்க முடியாதவை. சுதந்திர தினம் மற்றும் குடியரசுத் தினங்களில் அவர்கள் தந்த நேரடி வர்ணனை பெரும் வரவேற்பைப் பெற்றது. விளையாட்டு வர்ணனையாளர்களான பியர்சன் சுரிதா, சுரேஷ் சரய்யா, ஏ.எஃப்.எஸ். தல்யார்கான், ரவி சதுர்வேதி, ஆனந்த் ராவ் மற்றும் பெர்ரி சர்வாதிகாரி ஆகியோரின் நேரடி வர்ணனைகள் நேயர்களை அந்தந்த விளையாட்டு அரங்கங்களுக்கே கொண்டுசென்றன எனலாம். சுராஜித் சென், லோதிகா ரத்னம், தேவகி நந்தன் பாண்டே, மற்றும் வினோத் காஷ்யப், தமிழ் செய்தி வாசிப்பாளர்களான சாம்பசிவம், ராமமூர்த்தி, பூர்ணம் விஸ்வநாதன் சரோஜ் நாராயண் சாமி, விஜயம் ராஜாராம் என்று தங்களது பங்களிப்புகளால் அகில இந்திய வானொலிக்குப் பெருமை சேர்த்தவர்களின் பட்டியல் மிக நீண்டது!

இன்று தனியார் பண்பலை வானொலிகள் பல வந்துவிட்டாலும் அகில இந்திய வானொலியின் சேவைகள் என்றும் தனித்து நிற்கின்றன. மணிப்பூர் மாநிலத்தில் அகில இந்திய வானொலி செய்துவரும் சேவை ஓர் உதாரணம். இன்றும் அந்தப் பகுதிகளில் வாழும் 30 லட்சம் மக்களுக்காக 30 வெவ்வேறு பேச்சுவழக்கு மொழிகளில் தனது சேவையைச் செய்துவருகிறது.

சரி, ‘ஆகாஷ்வாணி’ என்ற பெயர் எப்போது வைக்கப்பட்டது? 1938-ல் ரவீந்திரநாத் தாகூர் அகில இந்திய வானொலிக்கு அந்தப் பெயரை வைத்தார். அதற்கு முன்னதாகவே அதே பெயரில் மைசூர் மகாராஜா ஒரு தனியார் வானொலியை நடத்திவந்தார். ஆனால், தாகூரின் வழியாக இந்தியா முழுவதும் சென்றடைந்த ஆகாஷ்வாணி எனும் பெயர் தேசத்தின் பெருமைகளுள் ஒன்றாக உயர்ந்ததுதான் வரலாறு!

- தங்க.ஜெய்சக்திவேல், உதவிப் பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம், தொடர்புக்கு: ardicdxclub@yahoo.co.in

‘அப்பா நீங்க ஏன் அம்மாவுடன் சேரக்கூடாது’’: விவாகரத்து பெற்ற தம்பதியின் குழந்தை கேட்ட கேள்வியால் அதிர்ந்த நீதிமன்றம்

THE HINDU

மேற்குவங்கத்தில் விவகாரத்து பெற்ற தம்பதியின் 6 வயது குழந்தை நீதிமன்ற வளாகத்தில் எழுப்பிய கேள்வி சுற்றியிருந்த அனைவரது உள்ளத்தையும் கணக்க வைத்தது.

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியை சேர்ந்த தம்பதி கடந்த 2005-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவன் மீதுள்ள பாசத்தால் அவர் சார்ந்த இஸ்லாம் மதத்துக்கே மனைவியும் மாறினார். இவர்களுக்கு 2010-ல் பெண் குழந்தையும், 2012-ல் ஆண் குழந்தையும் பிறந்தது. அதே சமயம் திடீரென கணவன் மீதான சந்தேகத்தால் அவரிடம் இருந்து பிரிந்த மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டில் தஞ்சமடைந்தார். மீண்டும் மனைவியுடன் வாழ்வதற்காக கணவன் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதையடுத்து, குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டு, சிலிகுரி மாவட்ட நீதி மன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்தார். மனைவி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் பெண் குழந்தை தந்தையிடமும், ஆண் குழந்தை தாயிடமும் வளர தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனைவி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷிதா மகாத்ரே மற்றும் ராகேஷ் திவாரி அடங்கிய அமர்வு, இரு குழந்தைகளும் தாயின் பாது காப்பில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டு, கோடைக் கால விடு முறைக்கு பின் வழக்கு விசார ணையை ஒத்திவைத்தது.

அதன் அடிப்படையில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது கணவர் சார்பில் ஆஜரான வழக்க றிஞர், ‘‘தாயிடம் வசிக்க பெண் குழந்தைக்கு பிடிக்கவில்லை. எனவே இரு குழந்தைகளையும் தந்தையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என வாதாடினார். அதை ஏற்காத நீதிபதிகள் அடுத்த உத்தரவு வரும் வரை, இடைக்காலமாக தாயிடமே குழந்தைகள் வளர வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே வந்த 6 வயது பெண் குழந்தை தனது தந்தையிடம், ‘அப்பா நீங்க ஏன் அம்மா கூட சேர்ந்து இருக்கக் கூடாது? உங்களோட இருக்க எனக்கு பிடிக்கும்னு ஏன் நீதி மன்றத்துல சொல்லல?’ என அந்த பிஞ்சுக் குழந்தை கேள்வி எழுப்பி யது.

அருகில் இருந்த 4 வயது ஆண் குழந்தையும் அப்பாவுடன் செல்ல வேண்டும் என அழுதது. விவாகரத்து பெற்ற தம்பதியின் குழந்தைகள் பாசத்துக்காக ஏங்கி அழுத இந்த காட்சிகள் கொல்கத்தா நீதிமன்ற வளாகத்தில் இருந்த ஒவ்வொருவரையும் மிகுந்த வேதனைப்படுத்தியது.

தனது விடைத்தாளை தானே திருத்தி 100 / 100 மதிப்பெண் போட்ட மாணவன்: விளக்கம் கேட்டு ஆசிரியர்களுக்கு கல்வித் துறை நோட்டீஸ்



குஜராத் மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவன், தனது விடைத்தாளை தானே திருத்தி, நூற்றுக்கு நூறு மதிப்பெண் களைப் போட்டுக் கொண்டு அதனை, தேர்வு கண்காணிப் பாளரிடம் கொடுத்துள்ளார்.

ஹர்ஷத் சர்வய்யா என்ற மாணவன் பிளஸ் 2 தேர்வில், பொரு ளியல் பாடத்துக்கான தேர்வை எழுதினார். தேர்வு எழுதும் அறை யிலேயே, தனது விடைத்தாளை சிவப்பு நிற மையால் திருத்தி, அதற்கு மதிப்பெண்களைப் போட்டுக் கொண்டார். பின்னர் அதனை, தேர்வு கண்காணிப் பாளரிடம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, குஜராத் மேல்நிலை மற்றும் உயர்நிலைக் கல்வி வாரியம், காவல் துறையில் புகார் அளித்துள்ளது. இதற்கு முன் இதுபோன்று நிகழ்ந்ததில்லை என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்வித் துறை செயலாளர் (தேர்வு) ஜி.டி. படேல் கூறியதாவது:

அந்த மாணவன் தனது புவியியல் மற்றும் பொருளியல் ஆகிய இரண்டு பாடங்களுக்கான தேர்வில் தனக்குத்தானே மதிப்பெண் போட்டுக் கொண் டுள்ளார். புவியியல் தேர்வுத் தாளை திருத்திய ஆசிரியைகள் முறைகேட்டைக் கண்டுபிடித்து விட்டனர். அதில் அவர் 34 மதிப் பெண்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால், பொருளியல் தாளை திருத்திய ஆசிரியர்கள் இந்த தவறைக் கண்டுபிடிக்கவில்லை. சந்தேகம் வராமல் இருக்க அந்த மாணவன் முதல் பக்கத்தில் ஒட்டுமொத்த மதிப்பெண் கூட்டலை எழுதவில்லை. ஆசிரியர்கள் மதிப்பெண்களைக் கூட்டி, நூற்றுக்கு நூறு என முதல்பக்கத்தில் எழுதி விட்டனர். தனித்தனியாக ஏழு ஆசிரியர்களும் ஒவ்வொரு விடையையும் மதிப்பீடு செய்து, கையொப்பமிட்டிருந்தால் அதனைக் கண்டறிந்திருக்க முடியும். இது தீவிரமான தவறு. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மாணவன் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரு தேர்வுகளை எழுத முடியாமல் அவர் நீக்கப்படுவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹர்ஷத்தின் தேர்வு முடிவுகள் தயார் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், கல்வி வாரியத்தின் கணினி மென்பொருளில் தேர்வு முடிவுகளைப் பார்த்தபோது மதிப்பெண்களில் அதிக ஏற்றத்தாழ்வு தெரியவந்தது. அப்போது அவர் மாட்டிக் கொண்டார்.

பொருளியலில் சதமடித்த அவர், குஜராத்தி (13), ஆங்கிலம் (12), சம்ஸ்கிருதம் (4), சமூகவியல் (20), உளவியல் (5), புவியியல் (35) என மிகக் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
Keywords: தனது விடைத்தாள், தானே திருத்தியது, 100 / 100 மதிப்பெண் போட்ட மாணவன், கல்வித் துறை நோட்டீஸ், ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்பு

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...