Saturday, June 25, 2016

கனிகள் கனியட்டும்


By மு. செகசோதி

First Published : 27 May 2016 01:49 AM IST

பழம் ஓர் அற்புதமான இயற்கை உணவு. வெயிலில் வேக வைக்கப்படுகிறது. மழை, காற்று, பனி அனைத்தையும் பெற்றுக் கனிகிறது. கசப்பு, துவர்ப்பு, புளிப்பு ஆகிய சுவையுடைய காய்களை இனிப்புச் சுவையுடன் பழங்கள் தருகின்றன.
தென்றல் மெல்ல வீசுகிறது. மேற்கிலிருந்து வீசும் காற்றுக்கு ஏங்குகிறோம். இலைகள் அசைகின்றன. அப்போது மாம்பழங்கள் பொல பொல என உதிர்கின்றன. வைகாசி, ஆனி மாதங்களில் இது நடக்கும். மரத்திலேயே பழுத்த அந்தப் பழங்களின் சுவையே தனி.
பருவத்தால் அன்றிப் பழா என்பார் ஒளவையார். பழங்கள் பழுக்கும் வரை காத்திருக்க வேண்டும். வைகாசி மாதத்தில் வர வேண்டிய மாங்கனிகள் இப்போது கடைகளில் அழகு அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
அதன் இளமஞ்சள் அழகு யாரையும் கொள்ளை கொள்ளும். அறுத்துப் பார்த்தால் வெள்ளை வெள்ளையாய் இருக்கும். பிஞ்சுக் காய்கள் - கொட்டை முற்றாத அந்தக் காய்கள்- செயற்கை உரங்களால் பெரிய உருவங்களைப் பெற்றவை சாப்பிடுபவர் உடல் நலம் கெடுக்கும். குழந்தைகள் என்றால் பாதிப்பு மிகுதி.
கார்பைட் கற்கள் கொண்டு செயற்கை வண்ணத்தைப் பெறுகின்ற இந்த மாங்காய்கள் குறித்து செய்தி இதழ்களில் தொடர்ந்து படங்கள் வெளியிடப்பட்டு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டு வருகிறது. உணவுக் காப்பாளர் அவற்றைக் கைப்பற்றி அழித்ததாகச் செய்திகள் வருகின்றன. பழங்கள் என்ற பெயரில் விற்கப்படும் இவை உயிருக்கே ஆபத்தை விளைவிக்கின்றன.
கொடிய தண்டனை கொடுக்கப்பட்டால் அன்றிக் கடந்த இருபது ஆண்டுகளாகக் கையாளப்படும் இந்தக் குறுக்குவழி நிற்பதாக இல்லை. இப்போது காய்களை ஏற்றிவிடும் லாரிகளிலேயே கார்பைட் கற்கள் போடப்படுவதாகச் சொல்கிறார்கள்.
பழங்கள் சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய இயற்கையின் அற்புதம் பழங்கள். காயிலே புளிப்பதும், கனியிலே இனிப்பதும் அதன் அற்புதம். ஒருவருக்குக் குடல் சுத்தம் பெற்றால் நோய் இல்லை. குடல் சுத்தம், உடல் சுத்தம் என்பார்கள்.
மூல நோய் கொண்ட ஒருவர் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. நண்பர் ஒருவர் பழங்களைச் சாப்பிடச் சொன்னார். இவரும் கிடைக்கும் பழங்களை யெல்லாம் வேறு உணவைக் குறைத்துச் சாப்பிட்டார். முப்பது நாள்களில் மூல நோய் காணாமல் போய்விட்டது.
சர்க்கரை நோய் கொண்டவர்கள் தவிர மற்றவர்கள் பழங்களை வெறுக்கக் காரணம் இல்லை. குளிர்காலத்தில் ஒவ்வாத பழங்களைத் தவிர்க்கலாம். மா, பலா, வாழை என்ற முக்கனிகள் நம் நாட்டின் தனிச்சிறப்பு.
வாழைப்பழம், வேதியியல் திரவம் தெளிக்கப்பட்டுப் பழுக்க வைக்கிறார்களாம். அது அனுமதிக்கப் பட்ட திரவமா? அதன் அளவு என்ன? அத்தகைய பழங்களைச் சாப்பிட்டால் பாதிப்பு வருமா?
திராட்சைப் பழங்கள் பிஞ்சு தொடங்கிப் பழம் ஆகும் வரை பூச்சித் தாக்குதல் இல்லாமல் இருக்க நச்சுக் கொல்லிகளால் தொடர்ந்து மூழ்கடிக்கப்படுகின்றன. சப்போட்டா ஒரு சிறந்த பழம். அதைப் பிஞ்சிலேயே பழுக்க வைப்பதால் உள்ளே கருப்பு நிறமாக இருப்பதைக் காணலாம்.
வெள்ளரி பழுத்தவுடன் வெடித்துவிடும். அதன் தோல் எளிதாக உரித்து எடுத்துவிடலாம். எத்தனை நாள் ஆனாலும் வெடிக்காத வெள்ளரிப்பழம் மலைபோல் குவிக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தீர்களா? பப்பாளி ஏன் பழுப்பதில்லை? ஆப்பிள் மேல் மெழுகு தடவப் படுகிறதாம்.
காசு நிறைய இருக்கிறது. விலை கொடுக்கத் தயாராக இருக்கிறோம். எனினும், நல்ல பொருள் கிடைக்க வேண்டுமே? எலுமிச்சை, கொய்யா, ஆரஞ்சு, நெல்லி -இவற்றைப் பழுக்க வைக்கக் குறுக்கு வழிகள் தோன்றியதாகத் தெரியவில்லை.
பப்பாளி கண்ணுக்குச் சிறந்தது. ஏ விட்டமின் நிறைந்தது. நாவல்பழம் அரிய மருந்து. இவை எல்லாம் இயற்கையாய்க் கிடைத்தால்தான். வான் உயரத்தில் ஏணி போட்டு, பூச்சிக் கொல்லி தெளிக்கப்படாதது பனை ஒன்றுதான். அதனால் நுங்கு துணிந்து சாப்பிடலாம். கலப்படம் இல்லையெனில் பதனீர் நல்லது.
செக்கச் செவேர் என வெட்டி வைக்கப்பட்டுள்ள தர்ப்பூசணியைக் கண்டு வீட்டிற்கு வாங்கிச் சென்று அதை வெட்டிப் பார்க்க அது வெள்ளை நிறத்தில் இருந்தால் அந்த ஏமாற்றம் தாங்க முடியாது. சில நாள்கள் பொறுத்தால் காய்கள் கனிந்து விடும். அதுவரை காவல், பாதுகாப்புச் செலவு யார் தருவார்கள்?
வாழை வாழவும் வைக்கும், தாழவும் வைக்கும் என்பார்கள். பழுக்கும் வரை காத்திருந்தால் ஒரு சூறைக் காற்று வந்தால் சேதம் சொல்ல முடியாது. ஒரு பெரிய லாரியைத் தோப்பில் நிறுத்தினால் அந்த லாரியை நிரப்பப் பிஞ்சுகளும் தேவை. பழுத்த பழங்களைக் கொண்டு வந்தால் சேதம் ஆகிவிடும். இவையெல்லாம் விற்பவர்கள் சொல்லக்கூடும். ஓரளவு பழுத்த நிலையில் செங்காய்களைக் கொண்டு வரலாம். அவை சந்தைக்கு வரும்போது கனிந்துவிடும்.
இந்த நாட்டில் எந்தச் சட்டம் சரியாக அமலாக்கப்பட்டுள்ளது? இவ்வாறு காய்களை வெவ்வேறு வகையில் பழம்போல் காட்டச் செய்வது கலப்படச் சட்டத்திற்குப் பொருந்தாது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு பழத்தையும், சோதனை செய்து நமக்கு நீதி கிடைக்க எந்த அதிகாரி இருக்கிறார்?
எனவே விற்பனையாளர்களே.. சில்லரை பாருங்கள். ஆனால், எல்லோருடைய உடல் நலத்தையும் சிதற விடாதீர்கள். சற்றே பொறுமை கொள்ளுங்கள்.
வாங்குபவர்களே.. விற்பனையாளர்களைக் கேளுங்கள். எந்த முறையில் பழங்கள் பழுக்கின்றன என்று? செயற்கை முறையில், நச்சுப் பொருள்களால் உருவாக்கப்படும் போலிப் பொருள்களைப் புறக்கணியுங்கள். மாற்றம் விரைவில் வரும்.

உங்கள் ஆளுமைக்கேற்ற துறை எது?

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

கெரியர் கவுன்சலிங் மாணவர்களுக்கு மட்டுமா? நம் சூழலில் பெற்றோர்களுக்குத்தான் அதிகம் தேவைப் படுகிறது. இன்று மார்க் வாங்குவதும் சீட் பிடிப்பதும் பெற்றோர்களின் சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கிறது.

ஒரு ஆட்டோ ஓட்டுநர் பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்: “நிலத்தை அடமானம் வெச்சு பணம் வாங்கி இன்ஜினியரிங் சீட் வாங்கிட்டேன் சார் பையனுக்கு. மார்க் கம்மிங்கறதால செலவு ஆயிடுச்சு. முடிச்சான்னா பெரிய கம்பெனியில சேர்ந்து அப்புறம் இத மாதிரி பத்து மனை வாங்குவான்!”

அவரை குறை சொல்லவில்லை. அவருக்கு சிறந்ததாகத் தோன்றிய முடிவை எடுத்துள்ளார். மார்க் வாங்காத பையனுக்கு சீட் வாங்கித் தர முடியும். படிப்பை முடித்தாலும் நல்ல வேலை வாங்குவது கடினம் என்று அவர் உணர்ந்திருக்கவில்லை.

இரண்டு லட்சம் ரூபாய் புரட்டினால் வாழ்க்கை பிரகாசிக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தார். அவருடைய மகனின் அறிவுக்கும் ஆர்வத்துக்கும் திறமைக்கும் ஏற்ற வேலைகள் நிறைய உள்ளன என்றும் அதை அறிய ஆய்வுகள் உள்ளன என்றெல்லாம் அவர் அறிந்திருக்க நியாயமில்லை.

அவருக்கு மட்டுமல்ல, எல்லா பெற்றோர்களுக்கும் நிறைய கேள்விகள் உள்ளன. பெற்றோர்கள் அதிகம் கேட்ட கேள்விகள் என்றே அவற்றை தொகுக்கலாம்:

நல்ல மார்க் வாங்கினா அவனுக்கு அந்த சப்ஜெக்ட் பிடிச்சிருக்குன்னு தானே அர்த்தம்? அதை வச்சு கோர்ஸ் தீர்மானிக்கலாமா?

பிளஸ் டூ மார்க் என்பது ஒரு கூட்டு முயற்சி. அதனால்தான் பள்ளியில் சதம் வாங்கியவர்கள்கூட காலேஜுக்கு போனதும் அரியர்ஸ் வைக்கிறார்கள். மார்க்கை மீறி அவர் எவ்வளவு புரிந்து படித்தார் என்பதை வைத்துதான் அந்தப் பாடத்தின் மீதான விருப்பதை தீர்மானிக்க முடியும்.

ஐ.க்யூ. டெஸ்ட் வேண்டுமா?

பிளஸ் டூ தாண்டியவருக்கு அடிப்படை ஐ.க்யூ. நிச்சயமாக இருக்கும். ஆகையால் கெரியர் கவுன்சலிங்கில் அதை சோதிக்க வேண்டியதில்லை.

ஆப்டிடியூட் டெஸ்ட் பயிற்சி எடுத்தால் உதவுமா?

ஒருவருடைய இயல்பு நிலை தெரிய எந்த பயிற்சியும் எடுக்கக் கூடாது. தவிர ஆப்டிடியூட் டெஸ்ட் பயிற்சியை நுழைவுத்தேர்வு பயிற்சியுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம். முன் தயாரிப்பின்றி உளவியல் சோதனை எடுக்கும்போதுதான் சரியாக இயல்பு நிலையைக் கண்டறிய முடியும்.

ஆர்வங்கள் மாறி மாறி வருகிறதே? எதை தீர்மானமாக எடுத்துக்கொள்வது?

எந்த வகை துறைகளில் ஆர்வம் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க உளவியல் சோதனை அவசியம். ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத வேலைகள் என்று நீங்கள் நினைபவற்றில்கூட ஒரு தொடர்பை இதன் மூலம் அறிவீர்கள். இது உங்கள் பிள்ளையின் துறைத் தேடலுக்கு அவசியம்.

வலைத்தளங்களில் உள்ள உளவியல் சோதனைகளை எடுக்கலாமா?

பல வலைத்தளங்களில் உளவியல் சோதனைகள் உள்ளன. அவற்றின் நம்பகத்தன்மையை ஆராயத் தெரிய வேண்டும். இலவசமாக அல்லது குறைந்த கட்டணம் என்பதற்காக அவற்றை மேற்கொள்ள வேண்டாம். தவிர நேர்காணலின்போது கிடைக்கும் உள்ளுணர்வு சார்ந்த தகவல் (intuitive data) மிக அவசிய மானது. அதனால் நேர்முக ஆய்வுதான் சிறந்தது.

இந்த ஆய்வுகள் கிடைத்தால் நாங்களே சோதித்துக்கொள்ள முடியாதா?

இன்று ஆய்வுகளை நகலெடுப்பது பெரிய விஷய மல்ல. ஆனால் நீங்கள் ஆலோசனைக்கு செல்லும் நபர் கல்வி அல்லது தொழில் உளவியல் துறையில் அனுபவம் வாய்ந்தவரா என்பதுதான் முக்கியம்.

எந்த கோர்ஸ் சிறந்தது என்று சொல்லமுடியுமா?

அது ஆய்வின் நோக்கமே அல்ல. எந்த துறைகள் உகந்தவை என்று மட்டும்தான் சொல்ல வேண்டும். அதற்கான காரணங்களையும் சொல்ல வேண்டும்.

ஆளுமைக்கேற்ற துறையைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால், ஆளுமை வாழ்க்கை தோறும் மாறுவதில்லையா?

மாறும்; வளரும். ஆனால் துறையைத் தேர்வுசெய்ய ஆளுமை வடிவத்தகவல்கள் போதும். பணி சார்ந்த ஆளுமைத் தேவைகள் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும். காலப்போக்கில், ஆளுமையும் மாறும். தொழில்களும் மாறும். வேலைகளும் மாறும், அதனால்தான் மாறிக்கொண்டே இருக்கும் இயல்பைப் புரிந்துகொண்டு ஆலோசனை செய்வது முக்கியம்.

எந்தெந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை வைத்துத் தயார் செய்ய முடியுமா?

வருங்கால வாய்ப்புகள் பற்றி ஆருடம் சொல்வது எல்லா காலத்திலும் பலிக்காது. தவிர, அவை நமக்கு எந்த அளவுக்கு ஏதுவானது என்று பார்க்க வேண்டும். அடுத்த சுழற்சியில் வேறு துறைகளில் வாய்ப்புகள் வரலாம். அப்போது அதற்குத் தாவ முடியுமா? அதனால் துறைக்கான தேர்வை வெளிலிருந்து தேடாமல், உள்ளேயிருந்து தேடுதல் உத்தமம்.

எந்த வயதில் கெரியர் கவுன்சலிங் கொடுக்கலாம்?

14 வயதில். ஒன்பதாவது படிக்கையில் தொடங்குதல் நல்லது. அதை பள்ளியிலேயே செய்வது நல்லது. எந்த நேர நெருக்கடியும் இல்லாமல், எல்லா துறைகள் பற்றியும் விரிவான பார்வைகளுடன், பதற்றமில்லாமல் ஆய்வுகள் நடத்தி, ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு செயல் திட்டம் அமைத்து கொடுப்பது நன்று.

போட்டி அதிகமாக இருக்கிறதே, இதெல்லாம் செய்தால் கண்டிப்பாக நல்ல எதிர்காலம் உண்டா?

இங்கு பற்றாக்குறையும் பதற்றமும் செயற்கையாக உருவாக்கப்பட்டவை. இது ஒரு சந்தை உத்தியும்கூட. இதில் பலியாகாமல் துணிவுடன் முடிவெடுக்க வேண்டும். வாழ்க்கையில் படிப்பு முக்கியம். படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. தவிர படிப்பு மட்டுமே வேலை, வசதி, வெற்றி போன்றவற்றை உறுதி செய்வதும் இல்லை. எல்லோருக்குமான வாய்ப்புகள் இங்கு உள்ளன. பதற்றப்படாமல் பிள்ளைகளுக்கு உதவுங்கள். நம் பிள்ளைகளுக்கு துறைத் தேர்வை விட முக்கியமாகப் புகட்ட வேண்டுயது ஒன்று உள்ளது: தன்னம்பிக்கை!

கட்டுரையாளர், உளவியலாளர் மற்றும் ஆலோசகர்,
தொடர்புக்கு: Gemba.karthikeyan@gmail.com

தொழில் ரகசியம்: பிராண்டுக்கு பொருந்தாத பிரபலங்கள்

Return to frontpage

பொது இடங்களில் சினிமா நட்சத்திரம், டிவி ஸ்டார், விளையாட்டு வீரர்களை பார்த்துவிட்டால் கை கால் பரபரத்து, வேர்த்து விறுவிறுத்து, எண்ணம் கிறுகிறுத்து, மனம் துடிதுடித்து பித்தம் தலைக்கேறி சாமி வந்து அவர் அருகே ஓடிச்சென்று கை கொடுத்து கொடுத்த கையை அவரே வைத்துக்கொள்ளக் கூடாதா என்று ஏங்கி அவர் கிளம்பி தலை மறையும் வரை பக்தி பரவசத்தில் பைத்தியக்காரன் போல் பலர் நிற்கிறார்கள் என்பதென்னவோ வாஸ்தவம் தான்.

இது நம் இனத்தின் தலையெழுத்து, இந்த சமுதாயத்தின் சாபக்கேடு ஒழிந்து போய் தொலையட்டும் என்று பார்த்தால் இந்த பைத்தியக்கார பக்தியை பாத்தி கட்டி சாகுபடி செய்ய ஒரு விளம்பர கூட்டம் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்து வருகிறார்கள். பிரபலம் என்றால் பைத்தியமாய் அவர் பின்னால் தொடரும் மக்களை விளம்பரத்தில் நடிக்க வைத்து அந்த பிரபலம் கொண்டே கவர் செய்து பொருளை விற்கமுடியும் என்று நினைக்கிறார்கள்.

பிரபலத்தை விளம்பரத்தில் பயன்படுத்தும்போது மக்கள் மனதை கவர்கிறது என்பது உண்மை தான். ஆனால் அதில் தான் வில்லங்கமே!

மக்களின் கண்கள் பிரபலத்தையே பார்க்கிறது. மனம் அவரிடத்தில்தான் லயிக்கிறது. விளம்பரத்திலுள்ள பிராண்ட் கண்ணிற்கு தெரிவதில்லை. தெரிந்தாலும் பெரும்பாலான சமயங்களில் மக்கள் மனதில் நிற்பது பிரபலம் தானே ஒழிய பிராண்ட் அல்ல.

முதலில் ஒன்றை தெளிவாக்குகிறேன். பிரபலங்கள் மீது எனக்கு பிராப்ளம் இல்லை. அவர்களை பயன்படுத்தினால் பிராண்ட் பிய்த்துக் கொண்டு பறக்கும் என்று நம்பி பிராண்டை விட்டு பிரபலங்களை விளம்பரம் செய்வது தப்பாட்டம் என்கிறேன்.

பிரபலம் பிரபலத்துவம் பெற்றது ஒரு காரணத்திற்காக. அவர் பிரபலத்திற்கு உங்கள் பிராண்ட் உதவுகிறது என்றால் தாராளமாக அந்த பிரபலத்தை விளம்பரத்தில் பயன்படுத்துங்கள். நடிகைகளின் பிரபலத்திற்கு காரணம் அவர்கள் கவர்ச்சியான அழகு. அப்பேற் பட்ட நடிகைகளின் அழகு சோப் என்று ‘லக்ஸ்’ கூறும் போது மனதை கவர்கிறது. பிரபலத்துவத்திற்கு காரணம் இந்த சோப் என்றால் கவர்ச்சியான அழகு பெற விரும்பும் பெண்கள் லக்ஸ் பயன் படுத்தலாம் என்று நம்பி வாங்குவார்கள். வாங்குகிறார்கள். இன்றல்ல, நேற்றல்ல. 1956ல் ‘லீலா சிட்னிஸ்’ என்ற நடிகையை லக்ஸ் தன் விளம்பரத்தில் பிள்ளையார் சுழி போட்டு பயன்படுத்தத் துவங்கியது முதல்!

இந்த பிரபலம் பயன்படுத்தமாட்டார் என்று மக்கள் நினைக்கும் பொருளை அவர் கொண்டு விளம்பரம் செய்யும் போது விளம்பரத்தோடு பிராண்டும் புஸ்வானமாகிறது. ‘சச்சின் டெண்டுல் கரை வைத்து ‘விக்டர்’ மோட்டார் பைக் ஒரு முறை விளம்பரம் செய்தார்கள். சச்சின் பைக் ஓட்டி பார்த்திருக்கிறீர்களா? தலையில் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு கிரிக்கெட் ஆடப் போவாரே ஒழிய பைக்கை உதைத்து கிரவுண்டிற்கு போவாரா? இந்த விளம்பரம் மனதில் எப்படி ஒட்டும்?

ஆனால் ‘டிவிஎஸ் ஸ்டார்’ ‘மஹேந்திர சிங் தோனி’யை கொண்டு விளம்பரம் செய்யும் போது அது கண்ணில் சட்டென்று பட்டு மனதில் பட்டென்று ஒட்டுகிறது. ஏனெனில் சிறு குழந்தைக்கும் தெரியும் தோனிக்கு பைக் என்றால் கொள்ளை பிரியம் என்று. அவர் சொன்னால் ஸ்டார் நன்றாகத்தான் இருக்கும் என்று நம்ப முடிகிறது. அவரே ஓட்டுகிறார் என்றால் வாங்கத் தோன்றுகிறது.

இதே போல் ‘ஃபியட் பாலியோ’ டெண்டுல்கரைக் கொண்டு செய்த விளம் பரமும் எடுபடவில்லை. டெண்டுல்கர் ‘ஆடி’, ‘பிஎம்டபிள்யூ’, ‘பெராரி’ போன்ற விலையுர்ந்த கார்கள் வைத்திருப்பவர்; அவர் அதில் பயணிப்பாரா இல்லை தன் ஆடி காருக்கு மாதம் பெட்ரோல் செலவுக்கு ஆகும் விலை கொண்ட பாலியோவில் போவாரா? பாலியோ போலியோ வந்தது போல் இளைக்காமல் வேறு என்ன செய்யும்!

பிரபலம் பிராண்டிற்கு கிரெடிபிலிடி சேர்க்கவேண்டும். அப்பொழுதுதான் பிரபலத்துவம் பிராண்டிற்கு பயன்படும். பழம்பெரும் நடிகை மனோரமா சமையல் சமாச்சார பிராண்ட் பற்றிச் சொன்னால் கேட்போமா? இல்லை ஒரு இளம் நடிகை சொன்னால் கேட்போமா? அந்த இளம் நடிகைக்கு சமையல் அறை எங்கிருக்கும், எப்படியிருக்கும் என்று தெரியுமா என்றுதானே கேட்போம்!

பிரபலங்களை உபயோகிப்பதில் இன்னொரு பிராப்ளம் அவர்கள் நடத்தை. பிராண்டோடு பிரபலத்தை பின்னிப் பிணைந்து பத்து வருடம் விளம்பரப்படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் பின் அவர் ஒரு வேண்டத்தகாத வழக்கில் மாட்டுகிறார் என்றால் அவரோடு சேர்ந்து உங்கள் பிராண்டும் அல்லவா உள்ளே போக வேண்டியிருக்கும்?

இதெல்லாம் நடக்காது என்கிறீர்களா? ‘Accenture’ என்ற நிறுவனம் உலகமெங்கும் பல காலம் ‘டைகர் வுட்ஸ்’ என்ற கோல்ப் பிரபலத்தை கொண்டு விளம்பரம் செய்து வந்தது. இவர் ஒரு பலான மேட்டரில் மாட்டி சந்தி சிரிக்க அவரோடு நிறுவனம் பெயரும் சிக்கி அதிலிருந்து மீண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ‘கெண்ட்’ வாட்டர் பியூரிஃபையர் தன் விளம்பரத்தில் உபயோகித்த கிரிக்கெட் பிரபலம் மேட்ச் ஃபிக்சிங் வழக்கில் சிக்கி சின்னாபின்னப்பட நிறுவனம் அதிலிருந்து தப்பித்து தங்களை பியூரிஃபை செய்ய வேண்டியிருந்தது!

அனைவரையும் போல் பிரபலங் களுக்கும் ஆளுமை உண்டு. அந்த ஆளுமை பிராண்டிற்கு பொருந்துகிறதா என்று பார்த்து தேர்ந்தெடுப்பது அவசியம். பிரபலம் பார்க்க அழகாக இருக்கிறார் என்பதற்காக அவரை வைத்து சிமெண்ட் விளம்பரம் எடுத்தால் எப்படி எடுபடும்? அப்படி செய்து பட்டுக்கொண்ட சிமெண்ட் பிராண்ட் ஞாபகம் இருக்கிறதா?

உங்கள் பிராண்டை வாடிக்கையாளர் எதற்கு வாங்கவேண்டும், மற்றவர்கள் அளிக்காத எந்த பயனை நீங்கள் தருகிறீர்கள் என்பதை குறிக்கும் பிராண்ட் பொசிஷனிங்தான் பிரதானம். அதை செய்யாமல் பிரபலத்தை கொண்டு பிராண்டை விளம்பரம் செய்தால் வாடிக்கையாளர் வாங்கிவிடுவார் என்று நினைப்பது மடத்தனம்.

வேஷ்டி தடுக்கி யாராவது விழுவதை பார்த்திருப்பீர்கள். வேஷ்டி விளம்பரங்களே தடுக்கி விழுவதை டீவியில் தினமும் பார்க்கலாம். எதற்கு தன் வேஷ்டியை வாங்கவேண்டும், மற்ற பிராண்டுகளுக்கும் தங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்லாமல் நாலு படம் நடித்த பாவத்திற்காக ஒரு நடிகரைப் பிடித்து அவருக்கு வேஷ்டியை வலுக்கட்டாயமாக கட்டி பத்தாதற்கு கூட ஒரு பத்து பேரை வேஷ்டியோட ஆட வைத்தால் மக்கள் வாங்கிவிடுவார்களா?

இப்பிரபலங்கள் திரைப்படத்தில் வேஷ்டி கட்டியே நாம் பார்ப்பதில்லை. அவர்களுக்கு ஃப்ரீயாக ஒரு வேஷ்டி தருவதே ஜாஸ்தி, எதற்கு கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து தோல்வியை விலைக்கு வாங்கிக்கொண்டு.

அதை விடுங்கள். எந்த வேஷ்டி விளம்பரத்தில் எந்த பிரபலம் வருகிறார் என்றாவது உங்களால் யூகிக்க முடிகிறதா?

பிரபலத்தை பயன்படுத்துவதில் இன்னொரு வயிற்றெரிச்சல் உண்டு. பல பிரபலங்கள் வந்தாரை வாழ வைத்து நானும் வக்கனையாய் வாழ்கிறேன் என்று சகட்டு மேனிக்கு விளம்பரப் படங்களில் நடித்துத் தள்ளுவார்கள். டீவி போட்டாலே இவர்கள் தோன்றும் விளம்பரங்கள் தான். இந்த மட்டும் டீவியை அணைத்தால் இவர்கள் வருவதில்லை என்று வேண்டுமானால் திருப்திபடலாம். ஓவர் எக்ஸ்போஸ்ட் ஆன பிரபலம் எப்படி உங்கள் பிராண்டை தனியாக தெரியவைக்கப் போகிறார்?

பிரபலங்கள் பிராண்டிற்கு வெறும் பெட்ரோமேக்ஸ் வெளிச்சம் போல. பிராண்டை வெளிச்சம் போட்டு காட்டி வாடிக்கையாளரை வாங்க வைப்பது அதன் ஆதார பொசிஷனிங். அது தரும் வேல்யூ, அது அளிக்கும் பயன்கள். அந்த வெளிச்சம் தான் பிராண்டை பளிச்சென்று தெரிய வைக்கும். அதன் தன்மையை புரிய வைக்கும். வாடிக்கையாளரை வாங்க வைக்கும்.

இத்தனை சொல்லியும் பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமா!

தொடர்புக்கு : satheeshkrishnamurthy@gmail.com

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் வெட்டிக்கொலை தப்பி ஓடிய மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு


சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் மர்ம ஆசாமியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர்

சென்னை சூளைமேடு, தெற்கு கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தான கோபால கிருஷ்ணன். மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகள் சுவாதி (வயது 24). செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள இன்போசிஸ் சாப்ட்வேர் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

இவர் தினமும் காலையில் அலுவலகம் செல்ல, நுங்கம்பாக்கத்தில் இருந்து பரனூருக்கு மின்சார ரெயிலில் சென்று வருவது வழக்கம்.

பட்டாக்கத்தியால் வெட்டு

அதேபோல், நேற்று அவர் அலுவலகத்துக்கு செல்வதற்காக காலை 6.45 மணிக்கு செல்லும் மின்சார ரெயிலில் ஏற வீட்டில் இருந்து தன்னுடைய தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு வந்தார்.

6.35 மணிக்கு ரெயில் நிலையதிற்குள் நுழைந்த அவர், மின்சார ரெயிலில் உள்ள பெண்கள் பெட்டியில் ஏறுவதற்கு வசதியாக ரெயில் நிலையத்தின் நடுப்பகுதிக்கு பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவர் பின்னால் வேகமாக வந்த மர்ம ஆசாமி ஒருவர் கூர்மையான பட்டாக்கத்தியால் சுவாதியை சரமாரியாக வெட்டினார். இதில், அவரது வாய், தலை, கழுத்து ஆகிய 6 இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

துடி, துடிக்க உயிர் இழந்தார்

திடீர் தாக்குதலில் நிலைதடுமாறிய சுவாதி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவரது குரல்வலையில் வெட்டு விழுந்ததால் அவரால் அய்யோ... அம்மா... என்று சத்தம்கூட போட முடியாமல், துடி, துடித்து உயிர் இழந்தார்.

காலை நேரம் என்பதால், ரெயில் நிலையத்தில் பயணிகள் நடமாட்டம் குறைவாக இருந்தது. ஒரு சிலர் மட்டும் ஆங்காங்கே நின்றதால், இந்த பயங்கரத்தை யாரும் நேரில் பார்க்கவில்லை.

சுவாதியின் உயிர் அடங்கியதை உறுதி செய்துகொண்ட மர்ம ஆசாமி ரத்தம் சொட்ட... சொட்ட... பட்டாக்கத்தியுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

காலை 6.45 மணிக்கு சுவாதி ஏறுவதற்காக காத்திருந்த மின்சாரம் ரெயிலும் வந்து நின்றது. ரெயிலில் இருந்த பயணிகள் சுவாதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலை அடுத்து, எழும்பூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். அங்கு நின்ற பயணிகளிடமும், கடைக்காரர்களிடமும் விசாரணை நடத்தினார்கள்.

இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த சுவாதியின் கைப்பையில் இருந்த அடையாள அட்டையை போலீசார் எடுத்துப்பார்த்தனர். அதன் பிறகுதான் அவரது பெயர் சுவாதி என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த அடையாள அட்டையில் இருந்த அவருடைய தந்தையின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர்.

மோப்பநாய்

அவரிடம் பேசிய போலீசார், முதலில் நடந்த உண்மையை கூறவில்லை. மாறாக, உங்கள் மகள் ரெயிலில் அடிபட்டு கிடக்கிறார் என்று கூறி அழைத்துள்ளனர். பதற்றத்துடன் ரெயில் நிலையத்துக்கு ஓடி வந்த சந்தான கோபாலகிருஷ்ணன், ரத்த வெள்ளத்தில் கிடந்த மகளின் பரிதாப காட்சியை பார்த்து அழுது துடித்தார்.

அதே நேரத்தில், சுவாதியை கொன்ற மர்ம ஆசாமியை பிடிக்க ரெயில்வே போலீசுக்கு சொந்தமான ‘ஜாக்’ என்ற மோப்பநாயும், மாநகர போலீசுக்கு சொந்தமான ‘அலெக்ஸ்’ என்ற மோப்பநாயும் சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டன.

சம்பவ இடத்தை நோட்டமிட்ட மோப்பநாய்கள், அங்கிருந்த ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் வழியாக நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு வரை சென்று பின்னர் அங்கே நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. எனவே, அதுவரை நடந்து வந்த கொலையாளி அங்கிருந்து வாகனம் ஒன்றில் ஏறி தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

கழுத்து, தாடை, மண்டையில் வெட்டு

இதைத்தொடர்ந்து சென்னை எழும்பூர் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுவாதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல கூறினார்.

சுவாதி உடல் கிடந்த பிளாட்பாரத்தில் ரத்தம் உறைந்த நிலையில் காணப்பட்டது. அவருடைய கழுத்து, தாடை, மண்டை ஆகியவற்றில் வெட்டுக்காயம் ஆழமாக பதிந்திருந்ததால், முகமே முற்றிலும் சிதைந்து காணப்பட்டது. வாயில் இருந்த பற்கள் உடைந்து நடைமேடையில் சிதறிக்கிடந்தன.

சிதறிக்கிடந்த பற்கள், அவருடைய செருப்பு, கைப்பை ஆகியவற்றை தடயங்களாக போலீசார் எடுத்து சென்றனர். சுவாதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்து அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

டிராவல் பேக்குடன் வந்த நபர்

கொலை நடந்த இடத்தில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினார்கள். பொதுவாக நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் பயணிகள் அதிகம் வந்து செல்லும் முக்கிய இடமாக விளங்குகிறது. மேலும், ரெயில் நிலையத்தை ஒட்டி பிரபலமான லயோலா கல்லூரியும், பல்வேறு தனியார் நிறுவனங்களும் உள்ளன.

இதனால், எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் இந்த ரெயில் நிலையத்தில், இப்படி ஒரு பயங்கர சம்பவம் நடந்திருப்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையாளி பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கொலையாளி பச்சை நிற சட்டை மற்றும் கருப்பு நிற ‘பேண்ட்’ அணிந்து இருந்ததாகவும், கையில் ‘டிராவல் பேக்’ வைத்திருந்ததாகவும், தப்பியோடியதை நேரில் பார்த்த பயணிகள் சிலர் தெரிவித்தனர்.

மர்ம ஆசாமி யார்? எதற்காக சுவாதியை கொலை செய்தார்? சுவாதிக்கும், அந்த ஆசாமிக்கும் என்ன தொடர்பு? என்று பல்வேறு கோணங்களில் விசாரணையில் இறங்கிய போலீசார், முதலில் அவருடைய தந்தை சந்தான கோபாலகிருஷ்ணனிடம் விசாரித்தனர்.

கால் டாக்சி டிரைவர்

அப்போது, அவர் போலீசாரிடம் சில தகவல்களை தெரிவித்தார். அதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் கால் டாக்சி நிறுவனம் ஒன்றில் கார் ‘புக்கிங்’ செய்து சுவாதி பயணம் செய்துள்ளார். கார் ஓட்டிய டிரைவர் அவரிடம் கூடுதல் வாடகை கேட்டதால், அவரை பற்றி கால் டாக்சி நிறுவனத்தில் சுவாதி புகார் செய்தார். இதனால் கார் டிரைவரின் வேலை பறிபோனது. அதனால், அந்த கோபத்தில் இதுபோன்ற செயலில் கார் டிரைவர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

இதை ஒரு துருப்பு சீட்டாக எடுத்துக்கொண்ட போலீசார் குறிப்பிட்ட கார் டிரைவரை தேடிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த டிரைவர் கட்டணம் அதிகம் கேட்டதால், எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது உண்மை தான். ஆனால் அதன்பிறகு, அவரை (சுவாதியை) நான் பார்க்கவே இல்லை என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

செல்போன் காணவில்லை

அதைத் தொடர்ந்து, வெவ்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இதுகுறித்து ரெயில்வே போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

கால் டாக்சி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இந்த கொலைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். அடுத்தகட்ட விசாரணையை நோக்கி முன்நகர்ந்து கொண்டு இருக்கிறோம்.

நகை மற்றும் பணத்துக்காக சுவாதியை மர்மநபர் கொலை செய்திருப்பாரா? என்று நாங்கள் பார்த்த போது அவர் அணிந்திருந்த நகையும், பணமும் கொள்ளை போகவில்லை. எனவே கொலைகாரன் நகை மற்றும் பணத்துக்காக இந்த கொலையை செய்யவில்லை.

இந்த கொலை சம்பவத்தில் சுவாதியின் செல்போன் மட்டும் காணாமல் போய் உள்ளது. நாங்களும் அவர் இறந்து கிடந்த பகுதிக்கு அருகில் தேடிப்பார்த்துவிட்டோம். செல்போன் கிடைக்கவில்லை.

எனவே முக்கிய தடயமாக இருக்கும் அந்த செல்போனை கொலையாளி எடுத்து சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது.

காதல் விவகாரமா?

அடுத்ததாக, நாங்கள் சுவாதியின் நெருங்கிய நண்பர்கள், அலுவலகத்தில் பணிபுரிபவர்களிடம் விசாரணை தொடங்கி இருக்கிறோம். சுவாதி பயன்படுத்திய செல்போன் எண்ணுக்கு கடைசியாக யார்? யாரெல்லாம்? தொடர்பு கொண்டு பேசினார்களோ? அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இதற்கிடையில் எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. சுவாதி ஏற்கனவே ஒருவரை காதலித்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பினால் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது என்றும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சுவாதிக்கு, அவருடைய காதலர் போன் செய்து மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவருகிறது.

ஒரு வேளை காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்குமோ? என்று 3 தனிப்படைகள் அமைத்து எங்களுடைய விசாரணையை துரிதப்படுத்தி இருக்கிறோம். கொலையாளியை விரைவில் பிடித்துவிடுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கத்தி கைப்பற்றப்பட்டது

போலீஸ் அதிகாரிகள் கூறிய தகவலை உறுதி செய்யும் வகையில், கொலை செய்யப்பட்டு கிடந்த சுவாதியின் உடலை பார்த்து அழுத அவருடைய தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், ‘‘எவ்வளவு நாள் தான் என்னால் உன்னை பாதுகாக்க முடியும்’’ என்று கூறியபடி கதறி அழுதார். இதனால், இது காதல் விவகாரத்தால் நடந்த கொலையாக தான் இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், சுவாதியின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் கூறும்போது, பெரும்பாலும் அவரது வீட்டில் சண்டை சச்சரவு எப்போதும் இருக்கும் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில், நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ‘டிராவல் பேக்’கில் ரத்தக்கறையுடன் கத்தி ஒன்றை கைப்பற்றினார்கள். சுவாதியை கொல்ல மர்ம ஆசாமி இந்த கத்தியை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவத்தால் நேற்று காலை பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடுமையான நடவடிக்கை

இந்த சம்பவம் குறித்து சுவாதியின் சித்தப்பா கோவிந்தராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுவாதி மிகவும் அன்பானவள். அமைதியாக இருப்பாள். அவளுக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சம்பவத்தை கேட்டதும் நாங்கள் அதிர்ந்துபோனோம். கொலை செய்த மர்மநபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

விரைவில் அவனை போலீசார் பிடிக்க வேண்டும். சட்டத்தின் முன் அந்த நபரை நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Dec.31 last date to apply for OCI cards

Logo
The Indian government has decided to extend the last date for applying for conversion of Person of Indian Origin (PIO) cards to Overseas Citizens of India (OCI) cards.
Indian External Affairs Minister Sushma Swaraj has said the last date has been extended from June 30 to December 31.
The process will be done free of cost, according to the Indian embassy statement.
The Indian Prime Minister Narendra Modi had announced that the PIO and OCI cards will be merged.
Earlier, the Indian government had extended the deadline from March 31 to June 30 this year.

Deadline extended for conversion of PIO cards to OCI, says Indian minister June 21, 2016 | 9:35 AM By Staff Reporter

Deadline extended for conversion of PIO cards to OCI, says Indian minister
June 21, 2016 | 9:35 AM
 
By Staff Reporter
Times of Oman

Muscat: The final date for applying to convert a Person of Indian Origin (PIO) card to an Overseas Citizens of India (OCI) card has been extended from June 30 to December 31, the Indian External Affairs minister said.

"I feel that the conversion will not be completed by June 30, so we have decided to extend the last date to December 31," External Affairs Minister Sushma Swaraj said.

The government had earlier granted an extension from March 31 to June 30 this year.

"There will be no charge for conversion during this period. So I suggest to those who are seeking to convert their PIO cards to OCI cards, use this timeline. I want this conversion to be completed by December 31," she said.

Prime Minister Narendra Modi had announced that the PIO and OCI cards will be merged and the Indian diaspora will benefit.

Officials said that the simultaneous existence of PIO and OCI cards leads to confusion among people of Indian origin living abroad.

UGC tweaks regulation on collaboration between Indian and foreignuniversities



Eucational institutions looking to partner with universities abroad for undergraduate and postgraduate programmes can now approach the University Grants Commission (UGC) directly for permission, as per the amended regulation for collaboration between Indian and foreign institutions.

Earlier, under the UGC (Promotion and Maintenance of Standards of Academic Collaborations between Indian and Foreign Educational Institutes) Regulations 2012, only foreign universities were allowed to apply for academic collaboration with Indian counterparts. The higher education regulator tweaked the rules on Wednesday to make only Indian universities and colleges eligible for permission.

HRD Minister Smriti Irani attributed the change to the poor response from foreign universities. The UGC has not received even a single proposal for partnership from foreign institutions under the old regulation, she informed reporters on Wednesday. "Since they are not familiar with our rules and regulations, it seems they find the process very cumbersome. Hence the poor response. So, it was decided that onus of seeking permission should be on the Indian partner," a senior ministry official told The Indian Express.

Under the amended regulation, only local institutions which have secured the highest accreditation grade from National Assessment and Accreditation Council (NAC) are eligible for academic partnership. Similarly, the partnering university abroad should have also secured the best grade from the accreditation agency in its home country.

It is now mandatory for Indian institutions entering into a twinning arrangement to send their students to study at the offshore university for at least two semesters in case of an undergraduate programme and one semester in a postgraduate programme. Although the regulations do not allow the collaborating partners to offer a joint degree, the degree awarded by the Indian university at the end of the programme will also bear the name and insignia of the foreign university. The transcripts carrying the credits earned in India and abroad will have to be signed jointly by both institutions.

Indian educational institutions which already have a collaborative arrangement will have to apply for permission within six months of the new regulations being notified. These institutions have a year’s time to secure 'A' grade from NAAC. The regulations will be notified soon.

Irani further added that under the new rules, all applications received by the UGC will be acknowledged within a month and processed in two months. The applications will be judged based on the infrastructural facilities, student-faculty ratio, course fee and curriculum of the Indian and foreign partner. A committee consisting of experts, including a representative of the Association of Indian Universities (AIU) look into the grading of foreign universities, will vet all collaboration proposals.

NEWS TODAY 21.12.2025