Monday, June 27, 2016

புதிய வீடியோ ஆதாரம் சிக்கியது: 8 நிமிடத்தில் சுவாதியை தீர்த்து கட்டி தப்பி ஓடிய கொலையாளி இன்னும் 4 நாட்களில் கைது செய்துவிடுவோம் என போலீசார் தகவல்

சென்னை,

8 நிமிடத்தில் சுவாதியை தீர்த்து கட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய குற்றவாளியை இன்னும் 4 நாட்களில் கைது செய்துவிடுவோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுவாதி

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த 24–ந் தேதி காலையில் கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் சுவாதியை மர்ம ஆசாமி ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். அவர் யார்? எதற்காக சுவாதியை கொலை செய்தார்? என்பது தொடர்ந்து மர்மமாகவே நீடித்து வருகிறது.

ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லாததால், கொலையாளியை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை. ஆனால் அதே சமயம், ரெயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை அன்று (24–ந் தேதி) மாலையிலேயே போலீசார் வெளியிட்டனர்.

அதன்பின்னர், பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கிய ரெயில்வே போலீசார், அந்த குற்றவாளிக்கும், சுவாதிக்கும் என்ன சம்பந்தம்? என்பது குறித்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய வீடியோ காட்சி

இந்த நிலையில், நேற்று இந்த கொலை சம்பவம் தொடர்பாக புதிய வீடியோ காட்சி ஆதாரத்தை போலீசார் அதிகாரபூர்வமாக வெளியிட்டனர். அந்த காட்சியில் இடம்பெற்றிருக்கும் நபரும், கடந்த 24–ந் தேதி போலீசார் வெளியிட்ட சந்தேகப்படக்கூடிய நபரின் உருவப்படமும் ஒத்துப்போகிறது.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் வந்த சந்தேகப்படக்கூடிய மர்மநபரின் உருவப்படத்தை தனியாக எடுத்து அதை பெரிதாக்கி அவரை அடையாளம் தெரிகிற வகையில் படத்தை போலீசார் தயார் செய்து விட்டதாகவும், இன்னும் 4 நாட்களில் அவனை பிடித்துவிடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

6.35 மணிக்கு...

சுவாதியை கொலை செய்த குற்றவாளி இவர் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் நேற்று கிடைத்த வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றது. நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையில் காலை 6.32 மணிக்கு குற்றவாளி என்று சந்தேகப்படக்கூடிய அந்த நபர் தலையை கீழே குனிந்தபடி நடந்து வருகிறார்.

சுவாதியை அவருடைய தந்தை ரெயில் நிலையத்தில் இறக்கிவிட்ட நேரம் காலை 6.35 மணி, இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் அந்த கொலையாளி ரெயில் நிலையத்துக்குள் சென்றிருக்க வேண்டும். சுவாதி 6.35 மணிக்கு ரெயில் நிலையத்துக்குள் வந்ததும், தான் எப்போதும் ஏறும் பெண்கள் பெட்டியின் அருகே உட்கார சென்றுள்ளார்.

சுவாதி அந்த இடத்தில் தான் உட்காருவார் என்று ஏற்கனவே வேவு பார்த்து வைத்திருந்த குற்றவாளி, அதே இடத்தில் அரிவாளுடன் காத்து கொண்டு இருந்துள்ளார்.

கொலையாளி ஓட்டம்

கொலையாளி ஏற்கனவே திட்டம் தீட்டியது போல் அதே இடத்தில் உட்கார வந்த சுவாதியை, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு கொலையாளி சரமாரியாக வெட்டி இருக்கிறார். ரத்தம் பீறிட்டு வர கீழே விழுந்த சுவாதி துடி துடிக்க உயிரிழந்தை உறுதியும் செய்துள்ளார்.

பின்னர், ரெயில் நிலையத்துக்குள் பயணிகள் அதிகம் வரத்தொடங்கி இருக்கின்றனர். மேலும், அதே நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றும் வேகமாக வந்துள்ளது. இதை பார்த்த கொலையாளி, தன்னை யாராவது அடையாளம் கண்டுவிடுவார்களோ? என்ற அச்சத்தில் அங்கிருந்து ஓட தொடங்குகிறார்.

சுமார் 8 நிமிடத்தில்...

சுவாதியை 2–வது நடைமேடையில் வைத்து கொலை செய்யும் அந்த மர்மஆசாமி, 6.43 மணிக்கு முதலாவது நடைமேடையில் வெட்ட பயன்படுத்திய அரிவாளை கையில் வைத்து கொண்டு ஓடுகிறார். மொத்தத்தில் கொலையாளி சுமார் 8 நிமிடத்தில் சுவாதியை தீர்த்துக்கட்டிவிட்டு அங்கிருந்து சென்று இருக்கிறார்.

கொலைக்கு பயன்படுத்திய அந்த அரிவாளை நுங்கம்பாக்கம்–கோடம்பாக்கம் இடையே தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் வைத்து விட்டு, அதன் அருகே இருந்த சுற்றுச்சுவரை தாவி குதித்து தப்பி சென்று இருக்கிறார்.

4 நாட்களில் பிடித்துவிடுவோம்

தற்போது அந்த வீடியோ காட்சியில் பதிவான அந்த நபர் தான் இந்த கொலையை செய்துள்ளார் என்பது இந்த வீடியோ மூலம் தெளிவாக தெரிகிறது. வீடியோ காட்சியில் பதிவான அந்த நபரின் உருவப்படத்தை பெரிதாக்கி, அதில் முகம் தெளிவாக தெரியும் அளவுக்கு தயார் செய்து வருகிறோம்.

அந்த படத்தை வைத்து குற்றவாளியை இன்னும் 4 நாட்களில் பிடித்துவிடுவோம். அவன் வெளிநாடுகளுக்கோ அல்லது வெளியூருக்கோ செல்லவில்லை. தான் செய்த சம்பவத்தை நினைத்து பயந்து சென்னைக்குள் தான் சுற்றிக்கொண்டு இருக்கிறான்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட சுவாதிக்கு சொந்த ஊர் ஸ்ரீரங்கம் என்பதால், திருச்சி ரெயில்வே போலீசார் நேற்று சென்னை நுங்கம்பாக்கம், சூளைமேட்டில் உள்ள சுவாதியின் வீட்டில் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் துக்கம் விசாரித்து விட்டு, அவர்களிடம் விசாரணையும் நடத்தினர்.

சுவாதி கொலை: சென்னை போலீஸ் கமிஷனர் அவசர ஆலோசனை



சென்னை

பெண் என்ஜினீயர் சுவாதி கொலை தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அவசர ஆலோசனை நடத்தினார்.

கமிஷனர் அவசர ஆலோசனை

சென்னை நகரில் அரங்கேறி வரும் தொடர் கொலை சம்பவங்களை அடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் நேற்று போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அவரச ஆலோசனை நடத்தினார்.

இதில், சென்னை நகரில் கொலை, கொள்ளை சம்பவங்கள், குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் பத்திரிகையாளர்களையும் அழைத்து கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது சென்னை நகரில் குற்ற சம்பவங்களை ஒடுக்குவதற்கு மேற் கொண்டுள்ள நடவடிக்கைகளையும், மேற்கொள்ள நடவடிக்கைகள் குறித்தும் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சென்னை நகரில் நடந்துள்ள கொலை சம்பவங்களில் கூலிப்படைக்கு எந்தவித தொடர்பு இல்லை. சொந்த விறுப்பு, வெறுப்பு சம்பவங்களால் தான் கொலைகள் அரங்கேறி உள்ளன. கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இரவு ரோந்து தீவிரம்

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜீனியர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ரெயில்வே போலீசாருக்கு உதவியாக சென்னை நகர போலீசாரும் விசாரணையில் இறங்கி உள்ளனர். சம்பந்தப்பட்ட குற்றவாளி விரைவில் சிக்குவான் என்ற நம்பிக்கை உள்ளது.

சென்னை நகரில் குற்றச்செயல்களை முற்றிலும் ஒடுக்கும் வகையில் இரவு ரோந்து பணி மேலும் தீவிரப்படுத்தப்படும். சாலைகளில் மட்டுமின்றி சந்து, முடுக்குகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டவுடன், மதுகுடிப்பவர்கள் கலைந்து சென்று விட வேண்டும். கடையின் வெளியே கூட்டமாக நின்று பேசக் கூடாது. இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் சேஷசாயி, சங்கர், நுண்ணறிவுப்பிரிவு ஐ.ஜி. வரதராஜீ உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் அருகில் இருந்தனர்.

சிங்கப்பூரில் விமானம் தீபிடித்து எரிந்தது 'மரணத்தில் இருந்து தப்பினோம்' பயணிகள் அதிர்ச்சி

logo

சிங்கப்பூர்,

பதிவு செய்த நாள்:
திங்கள் , ஜூன் 27,2016, 9:27 AM IS


சிங்கப்பூரில் அவசரமாக தரையிறங்கிய விமானம் தீ பிடித்து எரிந்தது. விமானத்தில் பயணித்து விமானிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.  
'மரணத்தில் இருந்து தப்பினோம்' என்று பயணிகள் அதிர்ச்சியுடன் கூறிஉள்ளனர். 

சிங்கப்பூரில் இருந்து மிலனுக்கு புறப்பட்ட போயிங் 777-300ER ரக விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. எச்சரிக்கை செய்து கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டு, உடனடியாக விமானம் விமானநிலையத்திற்கு திரும்பியது. விமானம் அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து தரையிறக்கப்பட்டனர். அப்போது விமான எஞ்ஜின் தீ பிடித்து எரிந்தது. இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்டு உள்ள செய்தியில்,”விமானத்தின் வலது எஞ்ஜினில் தீ பிடித்தது, உடனடியாக காலை 6:50 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமானத்தில் பயணம் செய்த 222 பயணிகள் மற்றும் 19 பணியாளர்களுக்கு எந்தஒரு காயமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள், “மரணத்தில் இருந்து உயிர்தப்பினோம்,’ என்று அதிர்ச்சியுடன் கூறிஉள்ளனர். 

பயணிகள் உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து விமான நிலையத்திற்கு பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர். பயணிகள் மாற்று விமானம் மூலம் மிலன் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறிஉள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு முழுவதும் ஒத்துழைப்பு அளிப்பதாக கூறிஉள்ளது. விமானம் தீ பிடித்து எரிந்த சம்பவத்தை பயணிகள் சில படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். 

“நான் மரணத்தில் இருந்து உயிர் பிழைத்தேன்!!! சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் 3 மணி நேரங்களாக ஆயில் கசிவு ஏற்பட்டு உள்ளது, உடனடியாக சிங்கப்பூர் திரும்பியது. சாங்கி விமானநிலையம் திரும்பியதும் எஞ்ஜின் தீபிடித்து எரிந்தது,” லீ பீ யீ என்பவர் தனது பேஸ்புக் பகுதியில் வீடியோவுடன் தகவல் வெளியிட்டு உள்ளார். இதற்கிடையே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒரு மணிநேரம் 45 நிமிடம் பயணித்த பின்னர் திரும்பியது என்று கூறிஉள்ளது. 

Can’t withdraw resignation once it is accepted, says court

THE HINDU

In a contractual master-servant relationship, no employee can assert a right to withdraw his resignation, especially after it had been accepted by the competent authority, on any ground, much less the ground of having tendered the resignation in frustration and under depression, the Madras High Court has ruled.

A Division Bench of the High Court gave the ruling while dismissing a writ petition filed by a lower court employee who claimed to have resigned from the post of office assistant because he was made to perform domestic chores such as cleaning toilets even on holidays at the residence of a Chief Judicial Magistrate.

Writing the judgment, Justice M. Venugopal said: “The term ‘resignation’ means the act of giving up or relinquishing office. A resignation must be unconditional and one with the intent to operate as such... In law, an employee has no locus poenitentiae (right to withdraw) to withdraw an offer of resignation after it was accepted.

He also pointed out that the resignation letter submitted by the writ petitioner on January 31, 2014 states that he was resigning due to family problems. “Now, at this distant point of time, it is not open to him to take an altogether different stand that he had tendered the resignation under depression and frustration,” the judge added.

In his affidavit, the writ petitioner M. Saliq Ahmed (name changed) stated that he submitted his first resignation letter on June 6, 2013, as he could not bear the ill-treatment meted out to him by judicial officers and their family members who forced him to run errands and do menial jobs at their residence despite being designated as office assistant.

However, that resignation was not accepted and a short period of absence after submitting the letter was treated as leave on loss of pay. Subsequently, he was posted at the court of another judicial magistrate who meted out a similar treatment. The petitioner tendered his resignation again in 2014 and it was accepted immediately.



Petitioner submitted his resignation twice alleging ill-treatment by officers and their families

RGUHS squad member quits

RGUHS squad member quits

Published: 26th June 2016 04:40 AM
Last Updated: 26th June 2016 04:40 AM
  
BENGALURU: The inquiry committee constituted by the Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) in the reported malpractice case at a prime dental college in the city, had allegedly threatened the squad member who busted the mass copying racket.
Dr Kiran Kumar flying mentioned this in his message to the RGUHS vice chancellor. “I have been appointed as flying squad by RGUHS. On June 21, I have found irregularities and malpractice in Dayananda Sagar College with evidence. But I was told that I am removed from squad before I could submit my report. After media intervened, I am told I can continue as the flying squad, But now I am made to sit in GDC Bengaluru and instructed not to go to any college. I am confused whether I am flying squad or sitting squad...”
“I am instructed by the inquiry committee to inform the media that no malpractice is happening, they are filing false report favouring the college. I have no proper access to meet you personally too.” Kumar also tendered his resignation to the role as squad member. “I am now not willing to continue as a part of flying squad and kindly relieve me of the duties,” he said.
RGUHS V-C Dr KS Ravindranath said, “The inquiry committee had submitted its report and as per the report, he himself agreed that his understanding was wrong and there were no such things. I am not here to protect the interests or any college or person. If it was proved to be a centre with irregularities, I would have cancelled the exam centre immediately,” he said.

MD aspirant duped of 60 lakh with college seat promise

PUNE: Three youths have been booked for duping an MBBS graduate of Rs 60 lakh by promising him a seat in a master's course at a Pimpri-based private medical college.

The MBBS graduate, Piyush Singh (28), who hails from Uttar Pradesh, has lodged a complaint with the Pimpri police on Saturday.

The three accused were friends with Singh.

Singh told police that one of the suspects was his senior in college in Pimpri. After obtaining an MBBS degree, Singh wanted to pursue MS orthopaedic course in the same college. The three accused told Singh that they had good "connections" in the administration of the private college and could secure a seat for him.


Since January 2015, the youths met Singh in different hotels in Pimpri and Chinchwad several times to discuss the admissions process. Singh paid them Rs 60 lakh. But the accused failed to secure a seat for him.


Realising that he had been cheated, Singh lodged a police complaint.


On June 4, a Mumbai-based MBBS doctor, Shayna Patel (26), had approached the Bund Garden police against her two friends, who pursued MBBS course with her, but duped her of Rs 52 lakh by promising a seat in the same private college in Pimpri.


Patel's two friends were also her classmates during the MBBS course.
Stay updated on the go with Times of India News App. Click here to download it for your device.

      Saturday, June 25, 2016

      ஒவ்வொரு ஆண் பிள்ளைக்கும் வீட்டிலேயே நல்லொழுக்கம் கற்பிக்கப்பட்டால்.. ஏன் சாகிறார்கள் சுவாதிகள்?


      ONE INDIA TAMIL

      சென்னை: சென்னை ரயில் நிலையத்தில் காலை வேளையில் ஐடி பெண் ஊழியர் கொல்லப்பட்ட சம்பவம் பலரையும் பதைபதைக்கச் செய்திருக்கிறது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, உலகம் முழுவதும் எங்கெங்கோ நடைபெறும் இத்தகைய பெண்களுக்கு எதிரான பலாத்காரம், கொலைகளுக்கு இது ஒரு உதாரணம் தான். சுவாதிக் கொலை செய்யப்பட்ட விதம் நம் நெஞ்சைப் பிசைகிறது. ஆனால், இங்கே நாம் யோசிக்க வேண்டிய முக்கிய விசயம், இத்தகைய கொடூரக் கொலைக் குற்றவாளிகள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல.

      முக்கியக் கேள்வி...

      நம் சக மனிதர்களாய் யாருக்கோ மகனாய், சகோதரனாய், கணவனாய், தகப்பனாய், நல்ல நண்பனாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான். பின் இவர்களுக்குள் இத்தகைய கொடூர எண்ணம் எப்படி முளைக்கிறது என்பது தான் நாம் இங்கே முக்கியமாய் ஆராய வேண்டியது.

      நல்ல வளர்ப்பு... ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே..' இந்த பாடல் வரிகளில் குறிப்பிட்டுள்ளது போல், நல்ல குடிமகனை உருவாக்குவது அன்னையின் கைகளில் மட்டும் இல்லை, குடும்பம் மற்றும் சமுதாயத்தின் கைகளிலும் உள்ளது. வாழ்வதற்கான உரிமை..

      . பெண் என்பவள் தன்னைப் போன்ற ரத்தமும், சதையும் சேர்ந்து உருவாக்கப்பட்ட சக மனுஷி, தன்னைப் போலவே அவளுக்கும் வாழ்வதற்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது என்பதை இத்தகைய ஆண்கள் உணர வேண்டும். ஏமாற்றம்... இதற்காக அனைத்து ஆண்களையும் நாம் குற்றம் சாட்ட முடியாது. ஆனால், ஏமாற்றப்படும் போது அல்லது அதிக கோபப்படும்போது, ஆண்களே பெரும்பாலும் பெண்களை உடல் அளவில் இம்சிக்க முடிவு செய்கின்றனர். காரணம் உடல் அளவில் ஆணைவிட பெண் பலகீனமானவள் என்ற எண்ணம். பழி வாங்கும் நடவடிக்கை... இதன்காரணமாகவே ஒரு பெண்ணை பழிவாங்க அவர்கள் கையில் எடுக்கும் முக்கிய ஆயுதங்களாக பலாத்காரம், ஆசிட் வீசுதல், கொலை போன்றவை அமைந்து விடுகின்றன.

      தன்னை ஏமாற்றிய ஆணை பழிவாங்கியதாக பெண்கள் மீது குற்றச்சாட்டுகள் குறைவே. ஆனால் ஆண் அதிரடியாக கத்தியைக் கையில் எடுக்கிறான். வஞ்சம்.. தன்னை ஏமாற்றிய அல்லது நிராகரித்த பெண்ணை வஞ்சம் தீர்க்கிறான். ஆணுக்கு பெண் இளைத்தவளில்லை என பெண்கள் ஒருபுறம் முன்னேறிக் கொண்டிருக்க, யாருக்கும் பயப்படாமல் அது பொது இடமாகக்கூட இருந்தாலும் பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்யத் துணிகிறான்.

      உயிரின் வலி... மாதவிலக்கு, பிரசவம் என பல்வேறு வலிகளை, நிலைகளைக் கடப்பதாலேயோ என்னவோ பெண்ணுக்கு புரியும் உயிரின் வலி இங்கு கொலைகார ஆண்களுக்குப் புரிவதில்லை. அதிலும், தன் ஒருதலைக் காதலை நிராகரித்தாள் என்ற காரணத்திற்காகக் கூட பெண்களை கொல்கிறார்கள் என்பது மிகவும் வேதனையானது. தனது எதிர்கால வாழ்க்கைத் துணையை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை கூடவா ஒரு பெண்ணுக்குக் கூடாது. ஷாக் தரும் வாக்குமூலம்... பலாத்காரம் செய்தபோது எங்களை எதிர்க்காமல் இருந்திருந்தால் கொலை செய்திருக்க மாட்டோம் என்ற பலாத்கார குற்றவாளியின் பேச்சு ரொம்பவே அதிர்ச்சி அளிக்கிறது. அப்படியானால் ஒரு பெண் தன்மீதான மற்றவர்களின் முடிவுக்கு எப்போதுமே அடிபணிந்து போக வேண்டும் என்ற மனப்போக்கு தான் இன்றைய சமூகத்தில் இலை மறை காயாக உள்ளதா?

      புரிதல் வேண்டும்... இனி வரும் காலங்களில் இத்தகைய குற்றங்களைக் களைவதற்காக மந்திரச்சாவி நம் வீடுகளில் தான் உள்ளது. ஆம், பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் எனச் சொல்வது போல, வீடுகளில் ஆண்களுக்கும் பெண்களைப் பற்றிய புரிதலை வளர்க்க வேண்டும். சிறு வயதிலிருந்தே மகன்களுக்கு பெற்றோர் பெண்களை மதிக்கும் குணத்தைக் கற்றுத் தர வேண்டும். அதுதான் அந்த சிறுவன், ஆணாக மாறும்போது பெண்களை மதிக்கும் நிலை உருவாக முக்கிய அடிப்படையாக அமையும்.

      ரத்ததானம்.. மாதந்தோறும் ஆண் பிள்ளைகளையும் ரத்ததானம் செய்ய வைக்க பெற்றோர் பழக்கலாம். இதன்மூலம் ரத்தம் மற்றும் உயிரின் விலை அவர்களுக்குப் புரியும். அன்பால் வளரும் சமூகம் நிச்சயம் வன்முறைகளுக்கு துணை போகாது என நம்பலாம்.


      Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/parents-should-teach-good-habits-their-children-256824.html

      NEWS TODAY 21.12.2025