Monday, July 4, 2016

சுவாதியை வாயில் வெட்டுவதே எனது இலக்கு: ராம்குமார்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதியை கொன்ற கொலையாளி ராம்குமார் நெல்லை மருத்துவமனையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


 
 
இந்நிலையில் அவர் நெல்லை மருத்துவமனையில் இருந்த போது அவரிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது வாக்குமூலத்தில் சுவாதியை வாயில் வெட்டுவதே எனது இலக்கு. அதற்காக சொந்த ஊருக்கு வந்து வாழைத்தார் வெட்டும் அரிவாளை எடுத்துவந்ததாக கூறப்பட்டுள்ளது.
 
சுவாதியிடம் நான் பலமுறை எனது காதலை வெளிப்படுத்தினேன். ஆனல் அவர் அதனை நிராகரித்துவிட்டார். எனது நடை, உடை, பொருளாதாரம் போன்றவற்றை குறிப்பிட்டு என்னை மிகவும் இழிவுபடுத்தி பேசினார் சுவாதி.
 
இதனால் ஆத்திரமடைந்த நான் என்னை இழிவுபடுத்தி பேசிய சுவாதியின் வாயை வெட்ட வேண்டும் என முடிவெடுத்து திட்டமிட்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு சென்று சுவாதியின் பின்புறமாக நின்று அவரது வாயை வெட்ட அரிவாளை வீசினேன் அது தவறி அவரது கழுத்தில் பட்டது.
 
நான் சுவாதியை வெட்டியதும் அங்கிருந்த ரயில் பயணிகள் அலறினர். நான் அரிவாளுடன் இருந்ததால் யாரும் என் அருகில் வரவில்லை. இதனை பயன்படுத்தி சுவாதியை சரமாரியக வெட்டி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டேன் என ராம்குமார் தனது வாக்குமூலத்தில் கூறியதாக கூறப்படுகிறது.

எனது வீட்டிலும் சுவாதி கொலையை பற்றி பேசினார்கள்: ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிய ராம்குமார் கடந்த 2-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற அவர் மருத்துவமனையில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.


 
 
அதில், சுவாதி இறந்த செய்தியை தொலைக்காட்சி மூலமாகவே தெரிந்து கொண்டதாகவும், இங்கிருந்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றதாக கூறினார்.
 
மேலும், திடீரென நான் வீட்டுக்கு சென்றதும் வீட்டில் உள்ளவர்கள் ஏன் வந்தாய் என கேட்டார்கள். உடம்பு சரியில்லை என கூறியதால் எதுவும் சொல்லவில்லை. சுவாதியை கொலை செய்துவிட்டு வீடுக்கு சென்றதும் முதலில் பதற்றமாக இருந்தது.
 
எனது வீட்டில் உள்ளவர்களும் சுவாதி கொலை பற்றி பேசினார்கள், நானும் அவர்களுடன் சகஜமாக பேசினேன் என ராம்குமார் தனது வாக்குமூலத்தில் கூறியதாக தகவல்கள் வருகிறது.

சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

THE HINDU

சுவாதியை கொலை வழக்கில் கைதான ராம்குமாரை வரும் 18-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் 14-வது நீதிமன்றத்தின் பொறுப்பு மாஜிஸ்திரேட் கோபிநாத் ஆணையிட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி பெண் இன்ஜினீயர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, செங்கோட்டை அருகே தனது வீட்டில் பதுங்கியிருந்த ராம்குமார் என்ற இளைஞரை கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

போலீஸார் பிடிக்க முயன்ற போது, ராம்குமார் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். சுவாதி கொலை வழக்கு விசாரணை சென்னையில் நடைபெறுவதால் ராம்குமாரை இங்கு கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக, நெல்லை சென்ற சென்னை தனிப்படை போலீஸார், நீதிபதி மற்றும் டாக்டர்களின் அனுமதி பெற்று ராம்குமாரை சென்னை அழைத்துவந்தனர்.



நெல்லையில் இருந்து ஆம்புலன்ஸில் சென்னை கொண்டுவரப்பட்ட அவர் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையிலேயே விசாரணை...

இந்நிலையில், இன்று காலை எழும்பூர் குற்றவியல் 14-வது நீதிமன்றத்தின் பொறுப்பு மாஜிஸ்திரேட் கோபிநாத், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து ராம்குமாரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்குப் பின் ராம்குமாரை வரும் 18-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார்.

நலமாக இருக்கிறார்:

ராம்குமாரை சோதித்த சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் காது.மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் ராம்குமார் உடல் நலன் தேறி வருவதாகக் கூறினார். காயம் ஆறி வருவதாகவும் கூறினார்.

ஸ்வாதி கொலை: சந்தேக நபர் ராம்குமாருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்


ஸ்வாதி கொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமாரை தமிழக காவல்துறையினர் இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராம்குமாரை, அந்த வளாகத்திலேயே சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்பாக ஆஜர்படுத்தினர்.

அதன்பின்னர் ராம்குமாருக்கு வரும் 18 ஆம் தேதி வரை, அதாவது 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.

அதுவரையிலும் ராயப்பேட்டை மருத்துவமனையிலேயே, காவல்துறையினரின் காவலுடன் ராம்குமாருக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1 ஆம் தேதி இரவு திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள டி.மீனாட்சிபுரம் பகுதியில் இருந்த ராம்குமாரை தமிழகக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது நடவடிக்கையின் போது, ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் தானாகவே தனது கழுத்தை அறுத்துக்கொள்ள முயற்சித்ததாக தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமுற்றிருந்த ராம்குமாருக்கு உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்த காவல்துறை, தொடர்ந்து விரிவான சிகிச்சையை அளிக்க பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அறுவை சிகிச்சை பெற்ற ராம்குமாரின் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் கூறிய பிறகு, காவல்துறையினரின் கேள்விகளுக்கு ராம்குமார் பதிலளித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்போது சிகிச்சை பெற்று வந்த பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையிலேயே திருநெல்வேலி முதலாவது நீதித்துறை நீதிமன்ற நீதிபதி எம்.ராமதாஸ் முன்பாகவும் ராம்குமார் ஆஜர்படுத்தப்பட்டார்.

அந்த சமயத்தில் நீதிபதி ராமதாஸ் அளித்த உத்தரவை அடுத்தே இன்று சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்பாகவும் ராம்குமார் ஆஜர்படுத்தபட்டிருந்தார்.

Thursday, June 30, 2016

எம்ஜிஆர் 100 | 97 - பொய்க்காலில் அல்ல, புகழ்க்காலில் நிற்கும் உயரம்!

எம்.ஜி.ஆருடன் ஜப்பான் டாக்டர் கானு.

M.G.R. திரையுலகில் நடிகர்கள், நடிகைகள், கவிஞர்கள் பலரையும் அறிமுகப்படுத்தியுள்ளார். தனது படங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவார். அவரது படங்கள் மூலம் அறிமுகமான எல்லோருமே திறமை மிக்கவர்களாக விளங்கினர். அப்படி அறிமுகமான கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர், முறையாகத் தமிழ் கற்று, பல சிறந்த பாடல்களை எழுதியுள்ள புலவர் புலமைப்பித்தன்!

படிக்கும் காலத்திலிருந்தே திராவிட இயக்கத்தின் தொண்டராக வாழ்க் கையைத் தொடங்கியவர் புலமைப் பித்தன். கோவையில் அரசியல் விரோ தத்தால் கொல்லப்பட்ட திமுக தொண்டர் ஒருவரின் குடும்பத்துக்கு நிதி வழங்க எம்.ஜி.ஆர். வந்தபோதுதான் புலமைப் பித்தன் அவரிடம் முதன்முதலில் பேசி னார். வசூலான தொகை போதாது என்று கருதிய எம்.ஜி.ஆர்., தனது சொந்தப் பணத்தில் இருந்து கணிசமான தொகையை இறந்தவரின் குடும்பத்துக்கு வழங் கியது புலமைப் பித்தனின் மனதில் இன்னும் பசுமையாக உள்ளது.

எம்.ஜி.ஆர். நடித்த ‘குடியிருந்த கோயில்’ படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ‘நான் யார், நான் யார், நீ யார்?... ’ என்ற கருத் தாழம் மிக்க அவரது முதல் பாடலே சூப்பர் ஹிட்டாக அமைந்தது. ‘அடிமைப் பெண்’ படத்தில் ‘ஆயிரம் நிலவே வா...’, ‘இதயக்கனி’ படத்தில், ‘நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற...’, ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில், ‘நாளை உலகை ஆளவேண்டும்...’ உட்பட பல பாடல்களை புலமைப்பித்தன் எழுதி இருக் கிறார்.

‘‘திரைத்துறையிலும் அரசியல் துறை யிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அள வுக்கு இமயமாய் எம்.ஜி.ஆர். உயர்ந்தது பொய்க் காலில் வந்த உயரமல்ல; புகழ்க் காலில் நிற்கும் உயரம். எவ்வளவோ பேருக்கு அவர் உதவிகள் செய்திருக்கிறார். அதை எல்லாம் பட்டியல் போடுவது முடியாத காரியம்’’ என்று கூறும் புலமைப்பித்தனுக்கு சொந்த அனுபவமே உண்டு.

கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையம் கிராமத்தில் புலமைப் பித்தனின் குடும்பத்துக்கு சொந்தமான வீட்டை அவரது தந்தையும் அண்ணன் கள் இருவரும் சேர்ந்து 1967-ம் ஆண்டு அடமானம் வைத்து பணம் வாங்கினர். அடுத்த ஆண்டே அவரது தந்தை இறந்து போனார். 1971-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதிக்குள் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கத் தவறினால், கடன் கொடுத்தவருக்கே வீடு சொந்தமாகிவிடும்.

அப்போது, படங்களில் புலமைப் பித்தன் ஒருசில பாடல்கள் எழுதிக் கொண் டிருந்த காலம். பேர் இருந்த அளவுக்கு பணம் இல்லை. பல நாட்கள் தயக்கத் துக்குப் பின் ஒருநாள், வாஹினி ஸ்டுடி யோவில் படப்பிடிப்பு முடிந்து ஒப்பனை அறைக்குச் சென்ற எம்.ஜி.ஆருடன் கூடவே புலமைப்பித்தனும் சென்றார். அவர் ஏதோ சொல்ல நினைப்பதை குறிப்பால் உணர்ந்தார் எம்.ஜி.ஆர்.!

யாரையும், எதையும் உடனடியாக புரிந்து கொள்ளும் திறனும், கூர்ந்த கவ னிப்பும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த வரம். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட அவரது கூர்மைத் திறன் குறைய வில்லை. தனக்கு சிகிச்சை அளித்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டாக்டர் கானு என்பவருக்கு தங்கத்தில் சிறிய யானை சிலையை பரிசளிக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.

அதற்காக, சென்னையில் உள்ள நகைக் கடை ஒன்றில் தங்கத்தில் சிறிய யானை சிலை செய்யப்பட்டு எம்.ஜி.ஆரின் பார்வைக்கு அனுப்பப்பட் டது. அதை கவனித்துவிட்டு யானையின் தும்பிக்கையும் வாலும் ஏறக்குறைய ஒரே அளவில் இருப்பதாகவும் வாலை இன்னும் சற்று சன்னமாக மாற்றும் படியும் எம்.ஜி.ஆர். கூறினார். நகைக் கடையினர் ஆச்சரியத்தில் மூழ்கினர்! அந்த அளவுக்கு எதையும் கூர்மையாக, உடனே கிரகித்துவிடுவார்.

தன்னுடன் உள்ளே வந்த புலமைப் பித்தனைப் பார்த்து சிரித்தபடியே, ‘‘என்ன?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். தனது வீடு அடமானத்தில் இருப்பதை யும் குறிப்பிட்ட தேதிக்குள் பணம் கொடுக் கத் தவறினால் பூர்விக வீடு கையை விட்டுப் போய்விடும் என்பதையும் ஒருவழியாக திக்கித் திணறிக் கூறினார் புலமைப்பித்தன்!

‘‘நான் பணம் தருகிறேன்’’ அடுத்த விநாடி பதில் வந்தது எம்.ஜி.ஆரிடம் இருந்து! ‘‘இல்லண்ணே, நீங்க எனக்கு பாட்டு மட்டும் கூடுதலாக கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றார் புலமைப் பித்தன். ‘‘பாட்டும் தரேன், பணமும் தரேன். ஏன் நான் பணம் தரக்கூடாதா? உங்கள் கடமையில் எனக்குப் பங்கில்லையா? என்னை ஏன் நீங்க வேறாக நினைக் கணும்?’’ என்று அன்புடன் கடிந்து கொண்டார் எம்.ஜி.ஆர்.!

பின்னர், அவர் கொடுத்த பணத்தில் வீட்டை மீட்டு, அதற்கான பத்திரத்துடன் சென்னை திரும்பி படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரை புலமைப்பித்தன் சந் தித்தார். பத்திரத்தை அவர் காலடியில் வைத்து வணங்கக் குனிந்த புலமைப்பித்த னின் தோள்களை ஆதர வாகப் பற்றி எம்.ஜி.ஆர். அணைத்துக் கொண் டார். தன் பெற்றோர் வாழ்ந்த நினைவுச் சின் னத்தையும், இழக்க இருந்த கவுரவத்தையும் மீட்ட நிம்மதியில் புலமைப்பித்தன் கண்கலங்க நின்றார்!

அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது, ஆரம்ப காலத்தில் இருந்தே உடன் இருந்தவர்களில் புலமைப்பித்தனும் ஒருவர். எம்.ஜி.ஆர். முதல்வரான பின்னர், 1977-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி சட்டமேலவை உறுப்பினராக புலமைப்பித்தனை நியமித்தார். பின்னர், சட்டமேலவை துணைத் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

‘‘தன்னைப் போற்றியவருக்கு மட்டு மல்ல; தூற்றுவோருக்கும் தயங்காமல் உதவி செய்யும் பொன்மனம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே சொந்தமானது’’ என்று நன்றியோடு நினைவுகூரும் புலமைப்பித்தனை, 1984-ம் ஆண்டு தமிழக அரசின் அரசவைக் கவிஞராக முதல்வர் எம்.ஜி.ஆர். நியமித்தார். பதவி யேற்பு நிகழ்ச்சியின்போது, புலமைப் பித்தன் பாடிய கவிதையில் எம்.ஜி.ஆரை வாழ்த்தி வரும் வரிகள் இவை...

‘‘குழந்தையின் பல் பட்ட இடத்தில்

பால் மட்டும் சுரக்கும்

அன்னை இதயம் அவனது இதயம்!’’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம்


ஒருமுறை எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கூட்டத்தில் பெண்களும் ஏராளமாகத் திரண்டனர். கூட்டத்தில் பேசி முடித்த பின், ‘‘ஆண்களுக்குத் தனியாக ஒரு விஷயம் சொல்லப்போகிறேன். பெண்கள் எல்லோரும் வெளியேறுங்கள்’’ என்றார். பெண்கள் அனைவரும் வெளியேறியபின், ‘‘இப்போது ஆண்களும் அமைதியாக வெளியேறலாம்’’ என்றார். புரியாமல் நின்ற கூட்டத்தைப் பார்த்து, ‘‘பெண்கள் நெரிசலில் சிக்கி அவதிப்படக் கூடாது என்பதற்குத்தான் அப்படிச் சொன்னேன்’’ என்று சிரித்தபடி எம்.ஜி.ஆர். கூறியதும், அவரது சமயோசிதத்தை ரசித்தபடி மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கூட்டத்தினர் கலைந்தனர்!

ம் வாழ்க்கையையே அழிக்கவல்லதா புனைவு ஆபாசப் படம்?

கோப்புப் படம்

ஓர் அநியாய மரணத்துக்குப் பின்பான போராட்டங்கள் என்பது தமிழகத்துக்கு ஒன்றும் புதிதல்ல. அதேநேரம் அப்படியான போராட்டங்களை அடக்குவது அல்லது நீர்த்துப்போவச் செய்வது என்பது அதிகார மையங்களுக்கு ஒன்றும் சிரமமான காரியமும் அல்ல. வெற்றுச் சமாதானங்கள் வீசப்படும், நாங்கள் மட்டும் என்ன செய்யமுடியும் என்பார்கள், மெலிதான மிரட்டல் தொனி வெளிப்படும், இவ்வளவு ஏன் அடித்து விரட்டியும் கூட போராட்டம் ஒடுக்கப்படும்.

இதில் சேலம் வினுபிரியா தற்கொலை வழக்கில் வேறுமாதிரியான ஒரு முன்னுதாரணமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தம் துறையினர் செய்த தவறுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டு பிரச்சினையை தற்காலிகமான முடித்து வைத்திருக்கிறார். குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் பணி நீக்கம் மற்றும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்திருக்கிறார்.

எந்தவித சமாளிப்பும், திசை திருப்பல்களும், அவதூறுகளும், மிரட்டல்களுமின்றி பகிரங்க மன்னிப்பு கேட்கும் அளவுக்கு அதிகாரி இறங்கி வந்திருப்பது என்பது நமக்கு புதுமையானதுதான். ஆனால் காக்கிச் சட்டைகள் இப்படியான மன்னிப்புக் கோரல்களை எப்போதோ துவங்கியிருந்திருந்தால் இன்னும் சில மாற்றங்களை நாம் அனுபவிக்கத் தவறியிருக்க மாட்டோம்.

இந்த மன்னிப்புக் கோரலுக்குப் பின்னால் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும் செயல்பாடின்மை, ஊழல், பாரபட்சம் என்பது நபர்களுக்குத் தகுந்த மாதிரி ஒவ்வொருமுறையும் தன்னை தகவமைத்திருக்கின்றன என்பதற்கு ஆயிரம் உதாரணங்கள் இங்குண்டு. பாடகி ஒருவருக்கு எதிராக ஆபாசமாக இணையத்தில் பேசியதாக, வழக்குப் பதிந்து விரைந்து பிடித்து, கைது செய்த காவல்துறை, அதற்கு நிகராக, வேறு எந்த இணையக்குற்றங்களிலும் இதுவரை செயல்பட்டதாக நான் அறிந்திருக்கவேயில்லை.

இந்த மன்னிப்பு கோரலுக்குப் பின்னால் மாவட்டக் காவல்துறை, மிக வேகமாகச் சாட்டையைச் சுழற்றும் உண்மையான குற்றவாளி விரைந்து பிடிக்கப்படலாம், தவறு செய்த காவல்துறையினர் தண்டிக்கப்படலாம். இவை மட்டுமே தன் உயிரை மாய்த்துக் கொண்ட பெண்ணுக்கு, பெண்ணை இழந்த பெற்றோருக்கு போதுமா என்ற கேள்வியெழும் முன்...

ஒட்டுமொத்தப் பெற்றோர்களிடமும் கொஞ்சம் உரையாட வேண்டியிருக்கிறது. ஒருவகையில் இந்த உரையாடல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருந்தால், அதற்காக நானும் முன்பாகவே பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அந்தப் பெண்ணின் பெற்றோர்களை மட்டுமே குறை சொல்லும் நோக்கம் என்னிடமில்லை. ஒரு தந்தையாக நானே என்னை இதில் பொருத்தி அந்த உரையாடலை நிகழ்த்த வேண்டியும் உள்ளது.

ஒரு பெண்ணை அடி பணிய வைக்க, தோற்கடிக்க, பழிவாங்க குலைக்கச்செய்ய அவளின் பெண்மை மீது தாக்குதல் நடத்தினால் போதும் என வக்கிரம் மிகுந்த, கோழைத்தனமான ஆண்கள் நினைப்பதை மறுக்கவே முடியாது.

ஆண் மட்டுமல்ல, பெண்களும் கூட பெண்களை அவ்வாறு மிரட்டியதைக் கேள்விப்பட்டதுண்டு. நான் முப்பது ஃபேக் ஐடி வச்சிருக்கேன், அதிலிருந்து உன் படத்தை மார்ஃபிங் செய்து போட்டு சாவடிப்பேன் என சவால்விட்ட ஒரு பெண் குறித்து அறிந்தபோது பேச்சு மூச்சற்றுப்போனேன். ஆகா, ஆணோ பெண்ணோ இன்னொரு பெண்ணை ஆபாசமாகச் சித்தரிப்பதன் மூலம் வீழ்த்த முடியும், அழிக்க முடியும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

இந்த நிலையில் வினுபிரியா எழுதியதென இணையத்தில் வெளியான கடிதத்தில் இருக்கும் வரிகள் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய சூழலில், செயல்படாத சைபர் கிரைம் போலீஸாரை மற்றும் குற்றவாளியைப் பிடித்து தண்டித்துவிடுதல் மட்டுமே ஒட்டுமொத்தத் தீர்வாகுமா?

''என்னோட லைஃப் போனதுக்கப்புறம் நான் வாழ்ந்து என்ன பண்ணப்போறேன்'' என்ற ஒரு பெண்ணின் மனநிலைக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறோம். ஒரு பெண்ணின் படம் மார்பிங் செய்யப்பட்டோ அல்லது உண்மையாகவோ ஆபாசமாக வெளிவந்துவிட்டால், அத்தோடு வாழ்க்கையே போய்விட்டது என்ற தீர்ப்பை அந்த 22 வயது பெண்ணுக்கு வழங்கியது யார்? மேம்போக்காக, படிச்ச புள்ள இப்படி அவசரப்பட்டு முடிவெடுக்கலாமா எனக் கேள்வி கேட்கும் முன், ஒரு படத்தின் மூலம் வாழ்க்கையை அழித்துவிடமுடியும் என்ற மனநிலையை யார் புகட்டியது? அப்படியான அறியாமை மனநிலையில் இருக்கும் அவர்களுக்கு சொல்லும் நியாயமான விளக்கங்கள் என்ன?.

''சத்தியமா சொல்றேன் என் போட்டோவை நான் யாருக்கும் அனுப்பல. நம்புங்க'' எனும் வினுபிரியாவின் ஆயாசமான குரல் மரண ஓலமாய் எதிரொலிக்கிறது. 'ஊசி இடம் கொடுக்காம நூல் எப்படி நுழையும்?' என்ற ஒரு அல்பமான சந்தேகத்தை மட்டுமே முன்னிறுத்தி பெண்ணின் பாலியல் குறித்த எல்லா நிகழ்வுகளிலும் எளியதொரு வாதமாக முன் வைக்கப்படுகிறது. ''நீ அனுப்பாம அவனுக்கு எப்படிக் கிடைச்சுது?'' என பெற்றோரோ, உறவினரோ, காவல் துறையோ திரும்பத் திரும்பக் கேட்டிருந்தால் மட்டுமே, தோற்றுப்போன மனநிலையில், இப்படியான ஒரு அழுகுரல் வரிகள் வந்திருக்கக்கூடும்.

''அப்பா அம்மாவே என்ன நம்பாதப்போ நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம், அவங்களே என்னப்பத்தி கேவலமாக பேசுறாங்க'' இந்த வரிகளோடு, வினுபிரியா எழுதி கடைசியாக அடித்துவிடப்பட்டிருக்கும் வரிக்குள் என்ன இருக்கும் என்ற யோசனையும்தான் மிகக்கடுமையாக மிரட்டுகிறது.

''உனக்கெதிராக கோழைத்தனமாக, வக்கிரத்தோடு ஏவிவிடப்படும் தாக்குதலின்போது, ஊரும் உலகமும் உனக்கு எதிராக நின்றாலும், ஒரு தாயாக, தந்தையாக நான் உன் பக்கம் நிற்கிறேன்'' எனத் தரும் உறுதி, நம்பிக்கை, உத்திரவாதம் தானே அடித்து வீழ்த்தப்பட்ட அந்தப் பெண்ணை மீட்டெடுக்கும்.

காவல்துறையினரின் அலைக்கழிப்பு, செயலின்மை, லஞ்சம் வாங்கிய கொடூரத்தனம் மட்டுமே அந்த பெண்ணின் சுய கொலைக்கு காரணமென நாம் இந்தத் தற்கொலையைக் கடந்துபோவதென்றால், காவல்துறை கண்காணிப்பாளர் கேட்ட பகிரங்க மன்னிப்போடு திருப்தியடைந்துவிடுவதுதான் சரியெனப்படுகிறது.

மகளை இழந்து நிற்கும் பெற்றோர்கள் முன் விரல் சுட்டி, நீங்க ஏன் இப்படிச் செய்தீர்கள், ஏன் இப்படிச் செய்யவில்லை எனக் கேட்பது இந்தச் சூழலில் எந்த வகையிலும் நியாயமான செயலாகாது.

கோழைகள், வக்கிரம் மிகுந்தவர்கள் பெண்களை வீழ்த்த இதுபோன்ற ஆயுதங்களை, ஒரு குற்றத்தின் தண்டனைக்குப் பின்பு இனி முன்னெடுக்க மாட்டார்கள் என்றெல்லாம் முடிவெடுத்துவிட முடியாது. ஒரு அதிகாரியின் பகிரங்க மன்னிப்போடு, தவறிழைத்த காவல்துறையினர் பாவமன்னிப்பு பெற்று, தங்களை உணர்ந்து புனிதர்களாக மாறிவிடுவார்கள் என்றும் நம்பிவிட முடியாது.

ஆனால், வினுபிரியாவின் இந்தக் கடிதம், வினுப்பிரியாவை ஒத்த பெண்களுக்கு, ஒரு சித்தரிக்கப்படும் ஆபாசப் படம் மட்டுமே உங்கள் வாழ்க்கையை அழித்துவிடுவதாக நம்புகிறீர்களா என்பதையும், வினுபிரியாவின் பெற்றோர், உறவினர், தொடர்புடைய அதிகாரிகளை ஊசி - நூல் என்று சந்தேகித்து, அவர்களைக் காயப்படுத்தி, அவமானப்படுத்தினால் பிரச்சனை தீர்ந்துவிடும் என நம்புகிறீர்களா எனும் மிகப்பெரிய கேள்விகளைத் தான் காற்றில் விதைத்துள்ளது.

இனி எஞ்சியுள்ளவர்கள் தீர்மானிக்க வேண்டியது எது வாழ்க்கை, எது அவமானம், எது தவறு என்பதைத்தான். வினுபிரியாக்கள் தற்கொலை செய்துகொள்வதை நிறுத்தும்வரை, பெற்றோரும் உற்றாரும் வினுபிரியாக்களோடு உரத்து உடன் நிற்கும் வரை, வக்கிரம் மிகுந்த கோழைகளும், ஊழல் அதிகாரிகளும் ஒடுங்கிவிடுவார்கள் என நம்பாதீர்கள்.

ஈரோடு கதிர் - எழுத்தாளர், அவரது வலைதளம் http://maaruthal.blogspot.in/

தொடர்புக்கு kathir7@gmail.com

Wednesday, June 29, 2016

எறும்புக்குக் கூட தொந்தரவு கொடுக்காத இளகிய மனம் படைத்த சுவாதி.. அந்தணர் முன்னேற்றக் கழகம் இரங்கல்

எறும்புக்குக் கூட தொந்தரவு கொடுக்காத இளகிய மனம் படைத்த சுவாதி.. அந்தணர் முன்னேற்றக் கழகம் இரங்கல் By: Sutha

 Published: Wednesday, June 29, 2016, 13:48 [IST]

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/amk-s-condoles-the-murder-swathy-257051.html

சென்னை: எறும்புக்குக் கூட தொந்தரவு கொடுக்காத இளகிய மனம் படைத்தவர் சுவாதி என்று அந்தணர் முன்னேற்றக் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தணர் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: இன்று அந்தணர் முன்னேற்ற கழக சார்பாக ,இறைவனடி சேர்ந்த செல்வி சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது சித்தப்பா கோவிந்தராஜன் மற்றும் குடும்ப உறவுகளை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க அந்தணர் முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி தலைவர் பாலாஜி ஷர்மா, மாநில ஆன்மீக அணி செயலாளர் இராமசந்திர குருக்கள், தென்சென்னை இளைஞரணி தலைவர் சண்முகம் குருக்கள், தென்சென்னை அமைப்பு செயலாளர் மணிகண்டன் குருக்கள், காஞ்சி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஐயர், மாநில ஊடகதுறை செயலாளர் வெங்கட்ராமன் ஐயர் ஆகியோர் சென்றனர். 1. ஒரு அப்பாவி தெய்வநம்பிக்கையுள்ள பிராமண பெண் ,அடையாளம் தெரியாத ஒரு கயவனால் அநியாயமாக கொலை செய்யப்பட்டிருக்கிறாள். 2. தினமும் காலையில் சுவாமியிடம் உலக மக்கள் அனைவரும் நலமாக வாழ பிரார்த்தனை செய்யும் பெண்,சம்பவம் நடந்த அந்த வெள்ளியன்று கூட கிளம்பும் சமயம் வீட்டு வாசலில் கூட்டமாக சென்ற பத்து எறும்பை கூட தொந்தரவு செய்யாத ஒரு இளகிய மனம் படைத்த பெண். 3. மறைந்த செல்வி சுவாதியின் மரணத்தை ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பேசி அந்த குடும்பத்தின் நிம்மதியை தயவு செய்து கெடுத்து விடாதீர்கள். 4. முகநூல், வாட்ஸ்அப் மற்றும் ஊடகங்கள் அந்த பெண்ணின் மரணத்தை பற்றி தேவையில்லாத விமர்சனம் மூலம் கொச்சைப்படுத்தாதீர்கள். 5. அவரது நடத்தையை உண்மை விவரம் தெரியாமல் களங்கப்படுத்தாதீர்கள். 6. தினமும் சுந்தரகாண்டம் பாராயணம் செய்த பெண்ணுக்கு அவப்பெயரை உண்டாக்காதீர்கள். 7. காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். 8. தமிழக அரசே எம்குலப் பெண்களுக்கு தேவையான பாதுகாப்புக்களை செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 9. ரயில்வே நிலையங்களில் சிசிடிவி பொறுத்த வேண்டும். இதுபோன்ற கொலைகள் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று மனவேதனையுடன் தெரிவித்து கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/amk-s-condoles-the-murder-swathy-257051.html

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...