Wednesday, September 7, 2016

மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணிக்காக ஆதார் எண் உள்ளவர்கள் மட்டும் விவரம் அளித்தால் போதும்: உணவுத்துறை அதிகாரி அறிவிப்பு

Return to frontpage

பொது விநியோக திட்டத்தில் மின் னணு குடும்ப அட்டை வழங்கும் பணிக்காக, ஆதார் எண் உள்ளவர் கள் மட்டும் விவரம் அளித்தால் போதுமானது என்று உணவுத்துறை அதிகாரி தெரிவித்தார். அனைவரது ஆதார் எண்ணையும் கேட்டு கட் டாயப்படுத்தக் கூடாது என கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ள தாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் 25,532 முழு நேரம், 9,154 பகுதி நேரம் என மொத்தம் 34,686 ரேசன் கடை கள் செயல்பட்டு வருகின்றன. இக் கடைகளின் மூலம், ஒரு கோடியே 91 லட்சத்து 53 ஆயிரத்து 352 அரிசி விருப்ப அட்டைகள் உட்பட 2 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரத்து 386 குடும்ப அட்டைகளுக்கு பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தற்போது புழக்கத் தில் உள்ள குடும்ப அட்டைகள் 2005-ம் ஆண்டு வழங்கப்பட்டவை. இவை கடந்த 2009-ம் ஆண்டே காலாவதியாகிவிட்டன. தொடர்ந்து 6 ஆண்டுகளாக உள்தாள் ஒட்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அட்டைகளுக்கு பதில் புதிய மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் திட்டம் முதல்வரால் அறிவிக்கப்பட்டு, அதற் கான பணிகள் நடந்து வருகின்றன. தேசிய மக்கள் தொகை பதிவின் விவரங்களை பெற்று முதல்கட்ட மாக அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பரிட்சார்த்த அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தமிழகம் முழு வதும் பொது விநியோக திட்டப் பணிகளை கணினிமயமாக்கும் பணிகள் நடக்கின்றன. இதை யொட்டியே, மின்னணு குடும்ப அட்டை வழங்க ஏதுவாக ஆதார் எண்களை உள்ளடக்கிய கணினி தொகுப்பு விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரேசன் கடை களுக்கு ‘பாயின்ட் ஆப் சேல்’ எனப் படும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இக்கருவியில், குடும்ப அட்டை தாரர்களின் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. இப் பணிகள் முடிந்ததும், பொதுவிநி யோகத் திட்ட பயனாளிகள் விவரத் தொகுப்பு உருவாக்கப்பட்டு, அதன் பின் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

இந்நிலையில், சில பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில், குடும்பத்தில் உள்ள அனைவரது ஆதார் விவரங்களை அளித்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும் என ஊழியர்கள் கூறுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக உணவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

மாவட்டம்தோறும் ‘பாயின்ட் ஆப் சேல்’ மின்னணு விவரப் பதிவு இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில இடங்களுக்கு வழங்கவேண்டி உள்ளது. இதில் பதிவாகும் விவரங்களை சேகரித்து, விவரத் தொகுப்பு தயாரிக்கப்படும். ரேசன் கடை ஊழியர்கள், குடும்ப அட்டைதாரர் அளிக்கும் ஆதார் விவரங்களை பதிவு செய்யலாம். 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஆதார் பதிவு இருக்காது. அவர் களுக்கு தேவையில்லை. அவர்கள் பெயர் விவரம் மட்டும் சேர்த் தால் போதுமானது. மேலும், அனைவரது ஆதார் எண் ணும் வேண்டும் என கட்டாயப் படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஆதார் எண் கிடைக்கும்போது, பொதுமக்கள் அதை ரேசன் கடை அலுவலரிடம் கொடுத்து சேர்த்துக் கொள்ளலாம். ஆதார் விவரங்கள் இணைக்கும் பணியை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதிய மின்னணு அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப் புரம், திருவண்ணாமலை மாவட் டங்களில் தற்போது ரேசன் கடை ஊழியர்களுக்கு ‘பாயின்ட் ஆப் சேல்’ இயந்திரங்கள் வழங்கப்பட்டு, பதிவு செய்வது தொடர்பான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பரங்கிமலை, சென்னை சைதாப்பேட்டை மண்டல பகுதிகளுக்கு நேற்று இயந்திரம் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திருச்சி, அரியலூர், பெரம் பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் படிப் படியாக இயந்திரங்கள் வழங்கப் பட்டு, ஆதார் இணைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
Keywords: மின்னணு குடும்ப அட்டை, ஆதார் எண் உள்ளவர்கள், விவரம் அளித்தால் போதும், உணவுத்துறை அதிகாரி அறிவிப்பு

Tuesday, September 6, 2016

குறள் இனிது: ‘சிக்’கெனப் பிடிச்சுக்கணும்!


உங்களால் உண்ணாவிரதம், மௌன விரதம் போல கைபேசியில்லா விரதம் இருக்க முடியுமா?

ஒரு 21 வயது பெண், அவரது கைபேசி மூன்று மாதங்களுக்குப் பறிக்கப்பட்டும் கவலைப்படவில்லை என்றால் நம்பமுடிகிறதா?

ஆமாங்க நம்ம ரியோ ஒலிம்பிக்ஸ் வெள்ளிப் பதக்க நாயகி சிந்து தானுங்க அது!

அப்பா ரமணா வாலிபால் விளையாடப் போனால், உடன் செல்லும் 8 வயது சிந்து மெதுவாக பாட்மிட்டன் அரங்கிற்கு நழுவி விடுவாராம்!

அர்ஜுனா விருது வாங்கிய விளையாட்டு வீரரான ரமணா, தன் மகளை விளையாட்டு வீராங்கனையாக்க விரும்பியதால் சிந்துவிற்கு பாட்மிட்டன் பயிற்சி பெற ஏற்பாடுகள் செய்தார். 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தொடங்கிய வெற்றி தொடர்கதையானது. படிப்படியாக உலகத் தர வரிசையில் 10வது இடத்திற்கு முன்னேறினார்!

அவரது 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் ஆட்டத்தைப் பார்த்த யாரும் அவருடைய விசிறியாகாமல் இருக்க முடியாது... சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட!

ஆட்டம்னா ஆட்டம், அப்படி ஒரு ஆட்டம்! அரை இறுதியில் எதிராளியை சும்மா அங்குமிங்கும் ஓட வைத்துத் திணறடித்ததைப் பார்க்கணுமே!

இறுதி ஆட்டத்தில் அவர் எதிர் கொண்டவர் தர வரிசையில் முதலிடத்தில் இருந்த அனுபவசாலியான கரோலினா !

ஆனால் நம்ம சிந்து அஞ்சாமல் எதிர் கொண்டார். முதல் ஆட்டத்தில் வெற்றியும் பெற்றார். பின் இரு ஆட்டங்களினால் தங்கம் தவறிப் போனாலும், தானே ஒரு தங்கமென நிரூபித்து விட்டார்.

இந்தத் தன்னிகரில்லாத வெற்றிக்குக் காரணம் என்ன? 5'11" உயரமா? 13 வருட உழைப்பா? கோபிசந்தின் உன்னதப் பயிற்சியா?

இவையெல்லாம் கிடைக்கப் பெற்ற மற்றவர்கள் பலர் இருந்தும் இவரால் மட்டும் இது சாத்தியமானது ஏன்?

சிந்துவின் சமீபத்திய பேட்டிகளைப் பாருங்க புரியும்! இனி உலகின் நம்பர் 1 ஆவதற்காக உழைப்பாராம்! 2020-ல் டோக்கியோவில் தங்கம் வெல்லணுமாம்!

இந்தப் பெண்ணுக்கு வேறு நினைவே இல்லைங்க! இந்த விளையாட்டு அவரை ஆட்கொண்டு விட்டதுங்க!

அப்புறம் கைபேசி என்ன, ஐஸ்கிரீம் என்ன, காலை 4 மணித் தூக்கம் என்ன, பயிற்சிக்கு 56 கிமீ தூரம் என்ன?

மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக்கின் கதையும் இதைப் போன்றது தான்! 10 வயதில் அவர் அதில் இறங்கிய பொழுது அவருடன் போட்டியிடப் பெண் வீரர்களைத் தேடணுமாம்!

அன்று தொடங்கிய வேட்கை 12 ஆண்டுகளாய்த் தொடர்ந்தது! ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வாங்கிக் கொடுத்துள்ளது!

விளையாட்டுத் தளமோ, வியாபாரக் களமோ அரிய வெற்றி பெறத் தேவை உள்ளுதல் எனும் இடைவிடாத எண்ணம்தான்!

திரும்பத் திரும்ப ஒரு செயலை எண்ண எண்ண அதற்கான வழிகள், திறன்கள் எல்லாம் வந்தமைந்து விடுமல்லவா?

ஒருவர் தான் செய்ய எண்ணியதையே எண்ணி எண்ணி அதற்கானவற்றிலேயே மனம் தோயப் பெறுவாராயின் அவர்தான் நினைத்ததை அடைவது எளிது என்கிறார் வள்ளுவர்.

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்

உள்ளியது உள்ளப் பெறின் (குறள்: 540)

somaiah.veerappan@gmail.com

Thursday, September 1, 2016

எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிறது!


உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்காக ஒரு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் மருத்துவக் கல்வி தொடர்பாக சரியான வழிகாட்டுதலை முன்வைத்து, அதில் காணப்படும் குறைகளை அகற்ற இந்தக் குழு முற்படும் என்கிற எதிர்பார்ப்பு இப்போது பொய்த்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான வழிகாட்டுதல் குழு, இந்திய மருத்துவ கவுன்சிலால் அனுமதி மறுக்கப்பட்ட 26 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மீதான தடையை அகற்ற உத்தரவிட்டிருக்கிறது. தமது வழிகாட்டுதல்களையும் ஆணைகளையும் மருத்துவ கவுன்சில் மதிப்பதில்லை என்றும் அதன் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியவை என்றும் கடிந்து கொண்டிருக்கிறது.

லோதா வழிகாட்டுதல் குழுவின் ஆத்திரத்திலும் கண்டனத்திலும் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்திய மருத்துவ கவுன்சில், சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும், அடிப்படை பயிற்றுவித்தல் வசதிகள் இல்லாமல் இருந்ததாலும், தகுதியுள்ள ஆசிரியர்கள் கிடையாது என்பதாலும் 86 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இப்போது, லோதா தலைமையிலான குழு, இந்திய மருத்துவ கவுன்சிலின் முடிவை நிறுத்தி வைத்து, அந்தப் பட்டியலில் உள்ள 26 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிபந்தனைகளுடன் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது.

வழிகாட்டுதல் குழுவின் கட்டளைப்படி இந்திய மருத்துவக் கவுன்சில் அந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி குறித்து மறு ஆய்வு செய்யவில்லை என்பது லோதா குழுவின் குற்றச்சாட்டு. அதற்கு, போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் அனுமதி மறுக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கி கொள்வதற்கான அனுமதியை வழங்குவது சரியான தீர்வு அல்ல.

86 மருத்துவக் கல்லூரிகளில் 26 கல்லூரிகளை எந்த அடிப்படையில் லோதா குழு தேர்வு செய்து அனுமதி வழங்குகிறது என்று பார்த்தால், அது அதைவிட விசித்திரமாக இருக்கிறது. நேரில் சென்று சோதனை நடத்தி இந்திய மருத்துவ கவுன்சில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று அனுமதி மறுத்த கல்லூரிகளுக்கு, அந்த மருத்துவக் கல்லூரிகளின் இணையதளத்தில் தரப்பட்டிருக்கும் விவரங்களையும், புகைப்படங்களையும், குறிப்புகளையும் அடிப்படையாக வைத்து, அனுமதி வழங்க முற்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

மருத்துவ கவுன்சிலின் சோதனை குறித்து லோதா குழு முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு, விடுமுறை நாள்களில் அந்தக் கல்லூரிகளில் சோதனை நடத்தப்பட்டன என்பது. கட்டடங்கள் சரியாகக் கட்டப்பட்டுள்ளனவா, பரிசோதனைச் சாலை வசதிகள் முறையாக இருக்கின்றனவா, அந்தக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் யார் எவர், அவர்களது கல்வித் தகுதி என்ன என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள, எந்த நாளில் பரிசோதனை நடத்தினால்தான் என்ன?

மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி என்பது நீண்டதொரு நடைமுறையைக் கொண்டது. கட்டமைப்பு வசதி, யார் நிறுவுகிறார்கள், யார் நடத்தப்போகிறார்கள், உள்கட்டமைப்பு வசதிகள் என்னென்ன, பாடத்திட்டங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கின்றன, அதன் ஆசிரியர் குழுவில் யார் யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று பல அடுக்குப் பிரச்னைகளை ஆய்வு செய்துதான் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இது குறித்தெல்லாம் லோதா குழு, ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று நேரடியாக சோதனை நடத்தி, இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி மறுத்தலை மறுபரிசீலனை செய்து ரத்து செய்திருந்தால் அது நியாயமான முடிவாக இருந்திருக்கும்.

86 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி மறுத்திருக்கும் இந்திய மருத்துவ கவுன்சில், முதற்கட்ட சோதனையில் குறைபாடுகள் காணப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு எதற்காக அனுமதி அளித்தது என்பதுதான் லோதா குழு எழுப்பி இருக்கும் விசித்திரமான கேள்வி. அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைபாடுகள் இருந்தால் அதைத் தட்டிக் கேட்கவும், குறைகளை மாற்றவும் வழியுண்டு. தனியார் மருத்துவக் கல்லூரிகள் அப்படியா என்கிற அடிப்படைக் கேள்வியைக்கூட ஏன் லோதா குழு யோசிக்கவில்லை?

இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடுகளில் பல குறைகள் இருக்கின்றன. அதைக் களைவதற்காகத்தான் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி லோதா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குறைகளைச் சுட்டிக்காட்டி நீக்க லோதா குழுவுக்கு அதிகாரம் உண்டுதான். ஆனால், மருத்துவக் கல்லூரியின் தரம், மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு போன்றவற்றை சட்டம் படித்தவர்கள் நிர்ணயிக்க முடியாது. நீதிபதிகள் நியமனத்தை மருத்துவர்களும், கல்வியாளர்களும், அரசியல்வாதிகளும் நிர்ணயிப்பது போன்ற விபரீதமாகத்தான் அது அமையும்.

இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடுகளில் பல குறைபாடுகள் இருக்கின்றன. அந்தக் குறைபாடுகளை அகற்ற லோதா குழு என்ன செய்தது, என்ன பரிந்துரைக்கிறது என்றால் எதுவுமே கிடையாது. குறைபாடுகளும், ஊழல் குற்றச்சாட்டுகளும் நிறைந்த இந்திய மருத்துவ கவுன்சிலே, கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை என்று அனுமதி மறுத்திருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீதிபதி லோதா தலைமையிலான குழு அனுமதி வழங்குகிறது என்பதே, அந்தக் குழுவின் முடிவுகள் குறித்து நம்மை சந்தேகப்பட வைக்கிறது.

மாற்றாக ஓர் அமைப்பு உருவாக்கப்படும்வரை, இதுபோன்ற பிரச்னைகளில் இந்திய மருத்துவ கவுன்சிலை அகற்றி நிறுத்திவிட்டு, முடிவெடுப்பது புத்திசாலித்தனம் ஆகாது!

தலையாட்டி பொம்மைகள்!


அலுவலகங்களில் சிலர், தமது வேலையினை திருத்தமாகச் செய்வர். தானுண்டு - தம் வேலையுண்டு என்றிருப்பர். பிறர் பற்றி பேசாது - குறை கூறாது இருப்பர். குறிப்பாக, அவர்களது மேலாளருக்கு கூழைக் கும்பிடு போடமாட்டார். அதனால், அவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்காது.

வேறு சிலர், வேலை செய்வது இல்லையெனினும், தங்களது மேலதிகாரியின் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பார்கள். அவர்கள் தேவையை அறிந்து பூர்த்தி செய்வர். குறிப்பாக, அவர்களை புகழ்ந்து பேசுவதை ஒரு கலையாகப் பயின்று, அவர்களை மயக்கிவைத்திருப்பார்கள்.

இன்னும் சிலர், மேலதிகாரிகள் சொல்வதற்கெல்லாம் சரி என்று தலை ஆட்டுவார்கள்.. ஆமாம் போடுவார்கள்..

இப்படிப்பட்டவர்களுக்கும், சில மேலதிகாரியிடம் நல்ல பெயர் கிடைக்கும். அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி, நல்லெண்ணத்தை சம்பாதிப்பார்கள். பதவி உயர்வு, சலுகைகள், ஊதிய உயர்வு, சுலபமான வேலை என இன்னும் பலவித சலுகைகளை பெறுவர்.

இவர்கள் சுயநலமிகள், முகஸ்துதி செய்யும் துதிபாடிகள், "ஆமாம்சாமி'கள் எனப்படுவர். சில இடங்களில், இந்தத் துதிபாடல் விஸ்வரூபம் எடுக்கும். ஓர் அடிவருடி பலன் பெறுவதைப் பார்த்து, இன்னொருவர் அதனைப் பார்த்து இன்னொருவர் என, பொய் புகழுரை கூறுவோர் கூட்டமும் அதிகரிக்கும். துதிபாடுவோர் கூட்டம் பெருகி, திறமைசாலிகள் வலுவிழக்கும் சூழல் ஏற்படும்.

அதன் விளைவு, ஒருவரை ஒருவர் விஞ்ச எத்தனிப்பர். இத்தகைய முகஸ்துதி செய்யும் ஆமாம்சாமிக் கூட்டம், விளைச்சல் நிலத்தில், நல்ல பயிருக்குள் இருக்கும் களையைப் போன்றது.

ஒரு நிறுவனத்தில் மலிந்து கிடக்கும் துதிபாடிகள், ஆமாம்சாமிகள் ஏற்படுத்தும் அடிவருடித்தனம் என்பது நிர்வாகத்துக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு சிலர் பலன் பெறுவர் - பலர் பாரபட்சமாக நடத்தப்படுவர்.

வேலைக்கும் திறமைக்கும் பலன் இன்றி, தெரிந்தவர் - மேலதிகாரியைச் சுற்றியிருக்கும் கூட்டம் பலன்பெறும். பல ஊழியர்களுக்கு பெரும் வெறுப்பு, மனத்தளர்ச்சி தோன்றவும் காரணமாக அமையும். திறமைசாலிகள் பிற நிறுவனங்களில் வேலை தேடும் நிலையை ஏற்படுத்தும்.

சிறிய அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமன்றி, பெரிய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள்கூட இத்தகைய பிரச்னைகளை சந்திப்பதுண்டு. ஆனால், அவர்கள் இந்த பிரச்னைகளே, தலையெடுக்காத வண்ணம் சரியான முறையில் அணுகுவார்கள் அல்லது இத்தகைய களைகளைக் களைந்து விடுவர்.

அந்நிறுவனங்கள், பொறுப்பான பதவிகளுக்கான நபர்களை தேர்வு செய்யும்போதே துதிபாடுதலும், ஆமாம்சாமி போடுதலும் தங்கள் நிறுவனத்தில் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதனை தெளிவுபடுத்தி விடுவார்கள்.

உதாரணமாக, புதிதாக வேலைக்கு நேர்முகம் மற்றும் எழுத்துத் தேர்வுகள் நடத்தும்போது, அந்த விண்ணப்பதாரர்களின் மனப்பாங்கு மற்றும் அணுகுமுறை ஆகியவற்றைக் கண்டுபிடித்து வடிகட்டிவிடுவார்கள்.

மேலும், நிறுவனத்தில் தவறுகள் நிகழும்போது, அவற்றை செய்தவர்கள் தங்கள் மேல் அதிகாரியாக இருந்தால்கூட, சுட்டிக்காட்டத் தயங்காதவர்களா என்று தேர்வின்போது சோதிப்பதும் வழக்கம்.

இதன்மூலம், நிறுவனத்தில் திறமைக்கு மட்டுமே மதிப்பு என்பதனை தெளிவுபடுத்திவிடுவார்கள். ஒரு பிரபல இந்திய நிறுவனம், தனது விளம்பரத்தில் தங்கள் உயர் அதிகாரியிடம் முடியாது என்று சொல்லக்கூடிய துணிவு மிக்கவர்கள் மட்டுமே எங்கள் நிறுவனத்துக்கு தேவை (we need people who can say NO to their boss)என்று குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

சில பன்னாட்டு நிறுவனங்களில், பலரும் பங்கு பெரும் கூட்டங்களிலும் - கருத்து பரிமாற்றங்களிலும், விளக்கம் கேட்பது, எதிர்கேள்விகள் அல்லது மாற்றுக் கருத்துகளை தெரிவிப்பது என்பவை ஊக்குவிக்கப்படும். அது அந்த நிறுவனத்தின் கலாசாரமாக இருப்பது தெரியவரும்.

அதனால், வயதிலும் அனுபவத்திலும் குறைந்தவர்கள்கூட தமது மாற்றுக் கருத்துகளை துணிந்து வெளியிடுவர், கேள்விகள் கேட்பர். மூத்த நிர்வாகிகள் அந்த எதிர் கேள்விகளில் நியாயம் இருந்தால், அதனை ஏற்றுக் கொள்ளுவர். இல்லாதுபோனால், அதற்குரிய விளக்கம் கொடுத்து மறுத்து விடுவர்.

இதன்மூலம் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்துக்கான சூழலை ஏற்படுத்துவார்கள் (ஏதேனும் ஒரு அரசியல் கட்சியின் பொதுகுழுவில் இப்படி ஒரு உறுப்பினர் கேள்வி கேட்பதையோ அல்லது அதற்கு தலைவர்கள் பதில் கூறுவதையோ நினைத்துப் பார்க்க முடியுமா?).

ஆக, சிறந்த தொழில்முறை நிறுவனங்கள், இத்தகைய அடிவருடித்தனத்தை கட்டுபடுத்த, துதிபாடிகளையும் ஆமாம்சாமிகளையும் தொலைதூரத்தில் வைக்க, தங்களது செயல்முறை அமைப்புகளில் போதுமான தடை மற்றும் கட்டுப்பாடுகளை (Checks and balances)ஏற்படுத்திக் கொள்ளுகின்றன.

இத்தகைய முகஸ்துதி செய்வோரையும், ஆமாம்சாமிகளையும் அவர்களது அடிவருடித்தனத்தையும் ஊக்கப் படுத்துவது என்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

உதாரணமாக, ஒரு செயல் எப்படி செய்யப்படுகிறது என்பதற்கு மாறாக, யார் செய்தார் என்று கவனிக்கப்பட்டு அந்த அடிப்படையில் முடிவெடுக்கப்படும். அதேபோல, ஒரு ஆலோசனை எப்படிப்பட்டது என்பதற்கு மாறாக அதனை யார் வழங்கினார்கள் என்பது முன்னிறுத்தப்படும்.

நிர்வாகத் தலைவரை சுற்றி ஒரு திரை உருவாகும். அதனை தாண்டி நுழைவது என்பது எளிதாக இருக்காது. அங்கு குறைந்தபட்ச தகுதியே துதிபாடுதல் என்ற அவல நிலை ஏற்படும். தவிரவும் அந்த தலைவர்களுக்கு சரியான, மெய்யான செய்திகள்கூட சென்று சேராது.

அதற்கு மாறாக, அவர் விரும்பும் அல்லது மகிழும் செய்திகள் மட்டுமே சென்று சேரும் நிலை தோன்றும். அத்தகைய நிலை அவர்களை தவறான முடிவுகள் எடுக்க வைக்கும் (நெருக்கடி நிலையின்போது அன்றைய பிரதமரை, அவரை மகிழச் செய்யும் செய்திகள் மட்டுமே சென்றடைந்தன. ஏனைய செய்திகள் தவிர்க்கப்பட்டன என சொல்லப்பட்டது).

இந்தத் தலைவர்களது போக்கில் நமது காரியங்கள் எதுவும் தவறாக அமையாது. நாம் சொல்லுவது செய்வது எல்லாமே சரியானவை என்ற ஒரு எண்ணம் கட்டிப் போட்டுவிடும். மேலும், இவர்களது நிறுவனத்தில் திறமையைவிட, அடிவருடித்தனம் முக்கியத் தகுதியாக கருதப்படும். முடிவில் இது நிறுவனத்தை சரிவுக்கு இட்டுச் செல்லும்.

இத்தகைய முகஸ்துதி செய்வோர், ஆமாம்சாமிகள், மத ஸ்தாபனங்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், ஏன் நம்மை சுற்றியுள்ள குடும்பங்களில்கூட இருப்பதைக் காணலாம்.

பெரு நிறுவனங்கள், ஆமாம்சாமிகள் மற்றும் முகஸ்துதி செய்வோர் ஏற்படுத்தும் பிரச்னைகளை தவிர்க்கவும் - ஒருவேளை அத்தகைய களை வளர்ந்தால், களையெடுக்கவும் வழி வகை செய்யும்போது, அரசியலிலோ பெரும்பாலான கட்சிகள், முனைந்து இவற்றை ஊக்கு

விப்பதை நாம் வருத்தத்தோடு காண நேருகிறது.

அங்கு புகழ்ந்துரைத்தல், துதிபாடுதல் முக்கியமாகி, துதி பாடாதவர்கள் தலைமையின் நல்லெண்ணத்தை பெற முடியாத நிலையினை காணலாம். பல கட்சிகளில் துதிபாடிகள், அடிவருடிகள் மட்டுமே பட்டம், பதவி, சலுகைகள் பெறுவார்கள்.

இந்த ஆமாம்சாமிகளும் துதிபாடிகளும் தாமே தம்மை தாழ்த்திக் கொள்ளுபவர்கள். சிறு பலன்களுக்காக, தங்களது சுய கெளரவத்தை இழப்பவர்கள். இத்தகைய துதிபாடல்களுக்கு, இவர்கள் விரும்பிய பலன் கிடைக்கும்போது அதுவே இவர்களது பழக்கமாக மாறுகிறது. சில கட்சிகளில் தலைமை இதனை ஊக்குவிக்கும்போது இது கலாசாரமாக மாறும் அபாயம் ஏற்படுகிறது. தனிமனித வழிபாடு முழுமை பெறுகிறது.

இத்தகையோர் நிறைந்திருக்கும் கட்சிகளில், தவறுகளை, குற்றம் குறைகளை சுட்டிக் காட்டுவது என்பது அவர்களது தலைமையை குறை கூறுவதாக கருதப்படும். தலைவர்கள் புகழுக்கும், வழிபாட்டுக்கும் மயங்கினால், சில காலம் கழித்து அவர்கள் சுயநலமிகளுக்கு மட்டுமே தலைவராக இருக்க முடியும். இதன் காரணமாக, அவர்களது முடிவுகள், செயல்கள் பெரும்பாலும் தவறாகவே அமையும்.

இது குறித்து, வெற்றியை இழந்த அரசியல் கட்சியினர் அதிகம் சிந்திக்க வேண்டும். தோல்விக்கான காரணங்களை கண்டறியாது, அந்த சூழலில்கூட தலைமையின் மனத்தை குளிர்விக்க துதிபாடுவோர், உண்மையில் மாற்றார்களைவிட அதிக தீங்கு விளைவிப்பவர்கள்.

ஆம், ஆபத்து நிறைந்தவர்கள் ஆமாம்சாமிகளும் துதிபாடிகளும்.

இந்த இடத்தில், டாக்டர் அம்பேத்கர், அரசியல்சட்ட நிர்ணய சபையில் பேசியதை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்:

"இந்திய அரசியலில் தனிமனித வழிபாடு என்பது உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இருக்கிறது. சமயத் துறையில் பக்தி என்பது, பக்தர்களின் உய்வுக்கு காரணமாக அமையக்கூடும். ஆனால் அரசியலில் பக்தி என்பது, சரிவுக்கும் சர்வாதிகாரத்துக்கும் வழி வகுக்கும்' என்றார்.

அவரது வார்த்தைகள் இன்றைக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்குப் பொருந்துவது பெரும் வியப்பளிக்கிறது!



கட்டுரையாளர்:

பொறியாளர் (ஓய்வு).

இரா. கதிரவன்

Wednesday, August 31, 2016

MCI's unique 'ID'ea to curb faculty duplication


NEW INDIAN EXPRESS 

COIMBATORE: In a bid to prevent doctors from appearing as faculty in multiple medical institutions, the Medical Council of India (MCI) has decided to assign unique IDs for doctors across the country. The move is part of the MCI’s e-governance initiative.

The council has written to the deans of medical colleges across the country in this regard.

While unique IDs will be provided to all doctors, its primary use is to prevent doctors appearing as faculty in multiple medical colleges, sometimes in different states, to meet the council mandate on the number of faculty.

“This will help rein in duplication of faculty members. Currently, doctors register themselves under their respective State Medical Councils. Their registration number would be accompanied by a State code. If a doctor decides to permanently move to another State, they would have to remove their name from the existing list and register themselves with the medical council of the state to which they are relocating,” said Edwin Joe, dean of the Coimbatore Medical College Hospital.

Besides, the MCI has also decided to monitor the attendance of faculty members of medical colleges across the country through its e-governance initiative.

The menace of multiple affiliations of faculty members is not confined to MCI alone. Recently, the All India Council for Technical Education (AICTE) had found out that more than 50,000 duplicate faculty were enlisted with it.

Following this, it had allotted unique ID numbers to nearly three lakh faculty across the country so that engineering colleges couldn’t ‘share’ faculty members to meet official norms.

Unique IDs prepared based on Aadhaar card details of faculty members were used to monitor their progress.

The council will also roll out an online platform that offers application tracking feature and a repository of certificates, to reduce the cost incurred by applicants to avail the services by offering e-payment options and reducing the need to travel.

The MCI’s e-governance initiative would also provide for a unified database and improved grievance redressal system, work flow-based processing as well as enhanced and user-friendly document management.

காலையில் தூய்மைப் பணி; மாலையில் கலைப் பணி- தவில் இசையில் அசத்தும் துப்புரவுத் தொழிலாளர்




ஒய்.ஆண்டனி செல்வராஜ்

Return to frontpage

ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும். அதைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தவர்கள் அத்துறைகளில் பிரகாசிக்கின்றனர். வாய்ப்பு கிடைக்காதவர்கள் அவற்றை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். சிலர் விரும்பிய துறை கிடைக்காவிட்டாலும் கிடைத்த பணியை ஈடுபாட்டுடன் செய்கின்றனர்.

அப்படி ஒரு அற்புதமான கலைஞர்தான் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரியும் இளங்கோவன் (45). மதுரை வடபழஞ்சி யைச் சேர்ந்த இவர் சிறந்த தவில் வித்வானாகவும் இருக்கிறார். காலை நேரங்களில் மதுரை வீதி களில் குவியும் குப்பை, தேங்கும் சாக்கடை நீரை அப்புறப்படுத்தும் துப்புரவு தொழிலாளியாக இருக்கும் இளங்கோவன், மாலையில் நெற்றி யில் சந்தனப் பொட்டு, பட்டு வேட்டி, சட்டை சகிதமாக தவில் வித்வானாக மாறிவிடுகிறார். கோயில் திருவிழாக்கள், திருமண விழாக்களில் நடைபெறும் இசைக் கச்சேரிகளில் இவரது தவில் வாசிப்புக்கு ரசிகர்கள் அதிகம்.

விடுமுறை நாட்களில் மும்பை, கேரளம், திருச்செந்தூர், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நடை பெறும் இசைக் கச்சேரிகள், திருமணம், கோயில் விழாக்களுக்கு இவர் சென்று வருகிறார். தவில் வாசிப்பில் ஒரு துப்புரவுத் தொழிலாளி சாதித்து வருவது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து இளங்கோவன் கூறியது: எனது தந்தையும், அவரது தந்தையும தவில் வித்வான்தான். நான் 4-வது தலைமுறையாக தவில் வாசிக்கிறேன். என்னைப்போல எனது தந்தையும் துப்புரவுத் தொழி லாளியாக இருந்தே காலமாகி விட்டார். என்னுடன் பிறந்த தம்பி கள் இருவரும் அப்போது சிறியவர் கள். குடும்ப பாரம் காரணமாக எனது தவில் வித்வான் ஆசையை மூட்டை கட்டிவிட்டு குடும்ப கஷ்டத்துக்காக வும், அப்பா இறந்ததால் அரசு வேலை கைவிட்டு போய்விடக் கூடாது என்பதற்காகவும் வாரிசு அடிப்படையில் துப்புரவு வேலையில் சேர்ந்தேன்.

தவில் வித்வானாக ஆசைப்பட்ட என்னால் ஆரம்ப காலத்தில் துப்புரவுப் பணியில் முழு ஈடுபாட்டு டன் பணிபுரிய முடியவில்லை. தவில் வாசிப்பதையும் விட முடிய வில்லை. இதனால், மன அமைதிக் காக மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், தவில் வாசிக்க ஆரம்பித்தேன். அதில் எனக்கு ஒரு மனநிறைவு கிடைத்தது. துப்புரவு பணியிலும் மரியாதை, பிடிப்பு ஏற்படத் தொடங்கியது. தற்போது வேலை நாட்களில் வேலைக்கு சரியாக போயிடுவேன். விடுமுறை நாட்களில் கச்சேரிக்கு செல்கிறேன்.

ஒருமுறை சென்றால் 2 ஆயிரம் ரூபாய், 3 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். துப்புரவு வேலைக்கு செல்கிறபோது தவில் வித்வான் என்பதை மறந்துவிடுவேன்.

அந்த வேலைக்கு தகுந்தாற்போல் செல்வேன். கச்சேரிகளுக்கு செல்லும்போது அதற்கு தகுந்தாற்போல் மாறி விடுவேன் என்றார்.

கூடுதல் பொறுப்பு இருக்கிறது

இளங்கோவன் மேலும் கூறும்போது, "நான் தவில் வித்வான் என்பது ஆரம்பத்தில் என்னுடன் பணிபுரிகிறவர்களுக்கு தெரியாது. ஒருமுறை என்னுடைய துப்புரவு ஆய்வாளர், எனது தவில் கச்சேரியை உள்ளூர் கேபிள் டிவியில் பார்த்துள்ளார். சக ஊழியர்களிடம் என்னைப் பற்றி விசாரித்ததாக கேள்விப்பட்டேன். அவர் திட்டுவாரோ என்ற பயத்துடன் மறுநாள் வேலைக்குச் சென்றேன். ஆனால், அவரோ என்னைப் பார்த்து பிரமித்து, உனக்குள்ளே இவ்வளவு திறமையா, எங்களிடம் சொல்லாமல் மறைத்துவிட்டாயே என உரிமையோடு கண்டித்தார். சக தொழிலாளர்கள் முன்னிலையில் என்னை அழைத்துப் பாராட்டினார்.

அன்று முதல் துப்புரவு தொழில் மீது கூடுதல் மதிப்பும், பொறுப்பும் ஏற்படத் தொடங்கியது. இந்த தவில் வாசிப்பு தொழிலில் 6 மாதம் வேலை கிடைக்கும், மற்ற 6 மாதங்கள் சும்மா இருக்க வேண்டும். எனக்கு அரசு வேலை இருப்பதால் பிரச்சினை இல்லை. மற்ற கலைஞர்கள் நிலையோ பரிதாபம்.

குடும்ப கஷ்டத்துக்காக மோதிரம், சங்கிலி, தோடு, தவில், நாதஸ்வரம் உள்ளிட்டவற்றை அடகு வைப்பார்கள். மீண்டும் வருமானம் வந்ததும் திருப்புவார்கள். மனைவி, குழந்தை என நான் ஒரு குறுகிய குடும்ப வட்டத்துக்குள் இருப்பதால் என்னால் துப்புரவு வேலையை உதறிவிட்டு முழு நேரமும் தவில் வாசிப்பில் இறங்க தயக்கமாக உள்ளது" என்றார்.

நாயைக் காயப்படுத்திய மாணவர்களுக்கு லட்சங்களில் அபராதம்!

vikatan.com

சென்னை: மாடியில் இருந்து நாயைத் தூக்கி எறிந்து கொடுமைப்படுத்திய மருத்துவ மாணவர்கள் இருவருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம்,நான்காவது மாடியில் இருந்து நாயைத் தூக்கி வீசும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. வீடியோவை பார்த்த அனைவரும் அந்தச் சம்பவத்தைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்புகளைப் பதிவிட்டு இருந்தனர். அதனையடுத்து விலங்குகள் நல ஆர்வலர்கள் நாயைத் தூக்கி எறிந்து அதனை செல்போனில் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என்றும் அவர்களுக்கு உரிய தண்டனைக் கிடைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி, விலங்குகள் நல ஆர்வலர் ஆண்டனி கிளமெண்ட் ரூபன் சென்னை குன்றத்தூர் போலீசில் புகார் செய்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் குன்றத்தூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து மாடியில் இருந்து நாயை தூக்கி வீசியவர்கள் யார்? சம்பவம் நடந்த இடம் எது? என்பது குறித்து உடனடியாக விசாரணை செய்தனர்.

அதில்,மாடியில் இருந்து நாயை தூக்கி வீசியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கவுதம் சுதர்சன், என்றும், அந்தக்காட்சியை செல்போனில் வீடியோ எடுத்தவர் அவரின் நண்பர் ஆசிஸ்பால் என்பதும் தெரியவந்தது. இருவரும் குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு படித்து வருபவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து, அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மருத்துவ மாணவர்களைக் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்த நிலையில் மாணவர்களின் பெற்றோரே போலீஸில் ஒப்படைத்தனர்.பின்னர் மருத்துவ மாணவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்பதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீன் பெற்றனர். இதற்கிடையே அவர்கள் படித்த கல்லூரியில் இருந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவ மாணவர்கள் இருவருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

NEWS TODAY 23.12.2025