Friday, September 9, 2016

கேலக்ஸி நோட் 7 பயன்படுத்த ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள் தடை


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விமான நிறுவனங்கள், சாம்சங் கேலக்ஸி நோட் 7 ரக ஸ்மார்ட்ஃபோனை விமானப் பயணத்தின்போது பயன்படுத்தவோ, சார்ஜ் செய்யவோ தடை விதித்துள்ளன.

சாம்சங் நிறுவனம், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தனது கேலக்ஸி நோட் 7 ரக ஸ்மார்ட்ஃபோனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. எனினும், இந்த ரக ஸ்மார்ட்ஃபோன்கள் எளிதில் தீப்பற்றுவதாக உள்ளதென்றும், பேட்டரி சார்ஜ் செய்யும்போது, வெடிக்கவும் வாய்ப்புள்ளதாக, சாம்சங் நடத்திய தரக்கட்டுப்பாட்டு சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சர்வதேச சந்தையில் விநியோகிக்கப்பட்ட கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்ஃபோன்களை திரும்பிப் பெறவும் சாம்சங் முடிவு செய்துள்ளது.

இந்த தகவல் சர்வதேச ஸ்மார்ட்ஃபோன் வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கன்டாஸ், ஜெட் ஸ்டார், விர்ஜின் போன்ற விமான சேவை நிறுவனங்கள், தங்களது விமானங்களில் பயணிக்கும் நபர்கள் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்தவும், சார்ஜ் செய்யவும் தடை விதித்துள்ளன.

எளிதில் தீப்பற்றும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதோடு, தரம் குறைந்த பேட்டரியை பயன்படுத்தி கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரிக்கப்பட்டுள்ளதால், இம்முடிவை மேற்கொள்வதாக, அந்நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. சாம்சங் நிறுவனம், அவற்றை எப்போது திரும்பப் பெறும் என்று தெரியவில்லை என்றும், அதுவரை தடை விதிப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மாற்றம் ஏற்படுத்தும் தீர்ப்பு!

By ஆசிரியர் | Last Updated on : 09th September 2016 01:30 AM | அ+அ அ- |


காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த 24 மணி நேரத்தில், அது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஏற்கெனவே 2013-இல், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கொலை, வன்புணர்வுக் குற்றங்கள் போன்றவற்றிற்கு எந்தவித விசாரணையும் இல்லாமல் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதைக் கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்திருந்தது.
சாமானிய மக்கள் நலன் கருதும், வெளிப்படைத்தன்மை
யுடைய நீதி மற்றும் சட்ட நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதுதான், அரசு ஊழியர்கள் தங்களது பணிகளை எந்தவித விருப்பு வெறுப்பின்றியும், உள்நோக்கமோ லாபமோ கருதாமலும் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தும். மக்களின் கோரிக்கையோ, குறையோஉடனடியாக சட்டப்படி தீர்வு காணப்படும்போது மட்டும்தான்,மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதும், அரசு நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கை ஏற்படும்.
எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும், பதிவான 24 மணி நேரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்போது, பாதிக்கப்பட்ட நபர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும், உடனடியாக முதல் தகவல் அறிக்கையின் நகலைப் பெற முடியும். சாதாரணமாக, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வது எவ்வளவு சிரமமோ, அதே அளவு சிரமத்தை சாமானிய மக்கள் அதன் நகலைப் பெறுவதற்கும் அனுபவித்தாக வேண்டும். காவல் நிலையங்களில் பணம் கையூட்டுக் கொடுக்கப்படாமல் முதல் தகவல் அறிக்கையின் நகலைப் பெறுவது என்பது எளிதானதல்ல.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி முதல் தகவல் அறிக்கை இணையதளத்தில் உடனடியாகப் பதிவேற்றம் செய்யப்படுமானால், குற்றம் சாட்டப்பட்டவர் அதன் நகலைப் பெற்று வழக்குரைஞரின் உதவியுடன் பிணையில் வெளியில் வர முடியும். பாதிக்கப்பட்டவர்களும், தங்களது குற்றச்சாட்டு பதிவாகி இருக்கிறது என்று ஆறுதல் அடைய முடியும்.
உச்சநீதிமன்றம், இணையதளப் பதிவேற்றம் செய்வதற்கு சில விதிமுறைகளையும், விதிவிலக்குகளையும் அளித்திருக்கிறது. பயங்கரவாதம், ஊடுருவல், தீவிரவாதச் செயல்கள், பாலியல்
குற்றங்கள், தனிநபர் உரிமையையோ, சுதந்திரத்தையோ பாதிக்கும் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும் அவை இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யப்பட வேண்டியதில்லை என்று விதிவிலக்கு அளித்திருக்கிறது. அதேநேரத்தில், பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று தீர்மானிக்கும் முடிவை, காவல் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) நிலையிலுள்ள அதிகாரிகளுக்குக் கீழே உள்ளவர்கள் எடுக்கமுடியாது. அதாவது, காவல் நிலைய அதிகாரிகள், எந்தவொரு முதல் தகவல் அறிக்கையையும் பதிவேற்றம் செய்யாமல் தவிர்த்துவிட முடியாது.
பெரும்பாலான வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையைக் காவல் துறையினர் தாக்கல் செய்யாமல் காலத்தைக் கடத்துவதற்குப் பல தரப்புகளிலிருந்தும் அழுத்தம் தரப்படுவது வழக்கமாகவே இருந்து வருகிறது. ஆட்சியில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள், காவல் துறை மேலதிகாரிகள், செல்வாக்கான தலைவர்கள் என்று முக்கியமான வழக்குகளில், சாமானியர்கள் புகார் அளித்தாலும் அதை சட்டை செய்யாமலும், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யாமலும் காவல் துறையினர் தவிர்ப்பது இன்றும்கூட தொடரத்தான் செய்கிறது.
2006-ஆம் ஆண்டு தில்லியை அடுத்த நொய்டாவிலுள்ள நிதாரி என்கிற இடத்தில் பல ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகள் காணாமல் போவது வழக்கமாக இருந்தது. அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் அளித்த புகார்களைக் காவல் துறையினர் சட்டையே செய்யவில்லை. தனது மகள் பிங்கி மாயமாய் மறைந்ததைத் தொடர்ந்து ஜதின் சர்க்கார் என்பவர் நிதாரி கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளியான மோனிந்தர் சிங் பாந்தர் மீது குற்றப்புகார் அளித்தார். அதையும் காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டது.
குற்றவாளியான மோனிந்தர் சிங் பாந்தருக்கு சாதகமாக வாக்குமூலம் அளிக்கத் தன்னை மத்தியப் புலனாய்வுத் துறை வற்புறுத்துவதாகவும் தனக்குப் பாதுகாப்புத் தரும்படியும் காவல் துறையிடம் முறையிட்ட ஜதின் சர்க்கார், மேற்கு வங்காளத்திலுள்ள குர்ஷிதா
பாதில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அவரது மனைவி வந்தனா சர்க்கார் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டபோதுதான் "ஏன் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை' என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதைத் தொடர்ந்துதான் 2013-இல் ஐந்து பேர் கொண்ட உச்ச
நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதைக் கட்டாயமாக்கியதுடன், அப்படிப் பதிவு செய்யாமல் தவிர்க்கும் காவல் துறை அதிகாரிகள்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டவும் வழிகோலியது. இப்போது நீதிபதிகள் தீபக் மிஸ்ராவும், சி. நாகப்பனும் இன்னும் ஒருபடி மேலே போய், முதல் தகவல் அறிக்கைகள் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதற்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.
வருகிற நவம்பர் 15-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் இந்த உத்தரவு, காவல் நிலைய செயல்பாடுகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடும் என்று எதிர்பார்க்கலாம். அதற்கு, மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தியாக வேண்டும். கையூட்டு வாங்காத காவல் நிலையங்கள் உருவாகும்போது மட்டும்தான், இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியும், அனைவருக்கும் நீதியும் உறுதிப்படுத்தப்படும்!
vikatan.com
மாண்புமிகு மனைவிகளின் 8 குணங்கள்!#8PointCheckList




உங்களது என்னவரை இன்னமும் இருக்கமா பிடிச்சு வைச்சுக்கத்தான் இந்த எட்டு பாயிண்ட்ஸ். லெட்ஸ் ஸ்டார்ட்.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்‘ஹிஸ்டாரிக்கல் படம் வேண்டாம்!’ 

8. டிரீம்ல இருந்து வெளியே வாங்க :

எல்லாருக்குமே தனக்கு அமையப்போகும் கணவரை பற்றி ஒரு ட்ரீம் இருந்திருக்கும். 'அலைபாயுதே' மாதவன் மாதிரி லவ் இருக்கணும். ஆர்யா மாதிரி சேட்டை பண்ணனும்னு பல கனவுகள் திருமணத்திற்கு முன் இருந்திருக்கும். ஆனால், 'நான் நினைச்சு வைச்ச டிரீம் ஹஸ்பன்ட் இவர் இல்லை'னு உடனே அப்சட் ஆகாதீங்க. இவரை உங்க டிரீம் கணவராக மாற்ற முயற்சி செய்யுங்க. அவருடைய குறைகளைச் சொல்லி காமிச்சுட்டே இருக்காதீங்க. இனி இவர்தான் உங்க சூப்பர் மேன் அப்படின்னு நீங்க முதல்ல நம்பணும். அதுதான் திருமணத்திற்கான அஸ்திவாரம்.


7. வெல்கம் பண்ணுங்க :

அவர் வேலை முடித்து வீட்டுக்கு வந்தால், சிரிச்ச முகத்தோட வெல்கம் பண்ணுங்க. அவர் வந்தது கூட தெரியாம சீரியல் பார்த்துட்டே இருக்கறது, பக்கத்து விட்டு அம்மா கூட சாட்டிங் பண்ணுறது, மொபைல் வைச்சுகிட்டு சோசியல் மீடியாவுல சுத்திப் பார்த்துட்டே அவரை பார்க்காம விட்டுடாதீங்க. உங்க என்னவர் இதுக்கு எல்லாம் ரியாக்ட் செய்யாமல் இருந்தாலும், மனசுக்குள்ள 'நமக்கு இவ எவ்வளவுதான் முக்கியத்துவம் கொடுக்கறாபோல'னு நினைச்சு பார்க்க சாத்தியம் அதிகம். நீங்களும் வொர்க்கிங் வுமனா இருந்தா, அவர்கிட்ட உங்க அலுவலக விஷயங்களை ஷேர் பண்ணுங்க.


6. பிடிச்சு இருக்குன்னா செய்ங்க :

'நீ ஜிமிக்கி போட்டா பிடிக்கும்', 'தலையில பூ வைச்சா பிடிக்கும்', 'நீ சுடிதார் போட்டால் பிடிக்கும்'னு சொல்லி இருந்தால், அவருக்காக அதை செய்ங்க. எப்படியும் நாம கேட்கிறத அவர் செய்யணும்னு நாமளும் எதிர்பார்ப்போம் இல்ல.


5. வாவ்... வாட் ஏ சர்ப்ரைஸ் :

பெரும்பாலும் பெண்கள் ஏதாவது ஸ்பெஷல் டே அனைக்குதான் கிப்ட் கொடுக்கணும்னு நினைச்சுட்டு இருப்பாங்க. அப்படி இல்லாமல் எல்லா நாட்களுமே ஸ்பெஷல்தான் நினைச்சுகிட்டு அவர் எதிர்பார்க்காத நேரத்தில் சர்ப்ரைஸ் செய்யுங்கள். அவருக்கு பிடிச்ச உணவு, புதுசாக ஒரு டிரஸ், ஷூ என அவரது தேவைக்கு ஏற்ப அதனை கொடுங்கள். அவரை சர்ப்ரைஸாக அவுட்டிங் கூப்பிட்டு போங்க. லைக் 'ஐ' பட கிளைமேக்ஸ்ல எமி, விக்ரமை கூட்டிட்டுப்போன இடம் மாதிரி.

4. டிஷ்யூம் டிஷ்யூம் சண்டை :

எந்த ரிலேசனாக இருந்தாலும் டிஷ்யூம் டிஷ்யூம் சண்டை வருவது இயல்புதான். அதுவும் கணவன் மனைவிக்குள்ள சண்டை வரலைன்னா எப்படி? இந்த குட்டி சண்டைகள் தான் இன்னமும் உங்களது 'என்னவரை' புரிஞ்சுகொள்ள உதவும். 'ராஜா ராணி' படத்துல நயன்தாராவும், ஆர்யாவும் எப்படி சண்டை போடுவாங்க. ஆனா, கிளைமேக்ஸ்ல பிரிவு வரும்போதுதான்.. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுப்பாங்க. முக்கியமா, சண்டை போடும்போது 'நம்ம ரெண்டு பேருக்கும் சரி வராது. பிரிஞ்சுடலாம். டைவர்ஸ் வாங்கலாம்'னு சொல்லவே சொல்லாதீங்க. வார்த்தைகளுக்கு உயிர் உண்டு.

3. பெஸ்ட் ப்ரெண்டாக இருக்கணும் :

பெஸ்ட் பாட்னராக இருக்கணும்ன்னா முதல்ல பெஸ்ட் ப்ரெண்ஸாக இருக்கணும். உங்க கடந்த கால வாழ்க்கை, எதிர்கால கனவுனு எல்லாத்தையும் ஒரு ப்ரெண்ட் மாதிரி அவர்கிட்ட ஷேர் பண்ணுங்க. அவர்கிட்டயும் கேளுங்க... அவர் கடந்த காலத்துல காதல் இருந்தால் அதையும் கேளுங்க. 'சில்லுனு ஒரு காதல் மாதிரி' அவரோட காலேஜ் டைரியை படிச்சுத்தான் தெரிஞ்சுக்கணும்னு கிடையாது. அப்ப, ஏதாவது லவ் பண்ணி இருக்கார்னு சொன்னால் தாம்தூம்னு குதிக்காமல், உங்களிடம் அவர் எதையும் மறைக்கவில்லை என்று பெருமைபட்டு கொள்ளுங்கள். கல்யாணம் ஆகி 10 வருஷத்துக்கும் மேல ஆச்சு? 'இனி அவரோட லவ் ஸ்டோரி கேட்டு தெரிஞ்சுகிட்டு என்ன பண்ணப்போறோம்?'னு எல்லாம் அலுத்துகாதீங்க. காதல் எப்போதுமே சுவாரசியம்தான்.

2. இன்னொரு பாதி நீங்கதான் :

அவரது தேவைகள் அனைத்துமே உங்களை சார்ந்துதான் இருக்கும். இதை முழுமையாக செய்யுங்கள். தூய்மையான சுற்றுச்சூழல், குழந்தைகளை பொறுப்பு உள்ளவர்களாக வளர்ப்பது, நல்ல உணவு, செக்ஸ், பிரச்னைகள் வந்தால் சேர்ந்து சமாளிக்க கை கோர்த்து நிற்பதுனு என உங்களைச் சுற்றிதான் அவர் இயங்கி ஆக வேண்டும். அதனால், இதனை மனதில் வைத்து நடந்துகொள்ளுங்கள். உண்மையாகவே அவரது இன்னோரு பாதி நீங்கள் தான்.

1. உதாரணமாக இருங்க :

உங்களது கணவருக்கு ஏதாவது கெட்ட பழக்கங்கள் இருந்தால், அவரிடம் தொடர்ந்து சண்டையிட்டு 'உடனே நீங்க விட்டு ஆகணும். திருந்தியே ஆகணும்னு வெறுப்பாக்காதீங்க. அவரை கொஞ்சம் கொஞ்சமாக பாசிட்டிவாக மாற்ற முயற்சி செய்யுங்கள். கெட்ட பழக்கங்களால் உங்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால், நீங்கள் என்ன ஆவீர்கள் என்பதை உணர்த்துங்க. அவருக்கு ஓர் உதாரணமாக இருங்க. அவரது குடும்பத்தினரிடம் 'பேமிலிக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கறார். நல்லா பார்த்துக்கிறார்'னு சொல்லுங்க. உங்க கணவர் கெட்டிக்காரர் தான் கண்டிப்பா உங்களை புரிஞ்சுப்பார்.


- ஹேமா
எல்லிஸ்

மறக்கப்பட்ட நடிகர்கள் 10: டி.எஸ்.துரைராஜ் - நண்பனின் பாதையில் நகைச்சுவை விருந்து!

ஆர்.சி.ஜெயந்தன்

 எல்லிஸ்  ஆர். டங்கன் இயக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த ‘சகுந்தலை’ 1940-ல் வெளியானது. சகுந்தலையாக நடித்த எம்.எஸ்.எஸ், துஷ்யந்தனாக நடித்த ஜி.என். பாலசுப்ரமணியம் ஆகிய நட்சத்திரங்களின் வசீகரத்தோடு, விறுவிறுப்பான திரைக்கதை, மேக்கிங், எடிட்டிங், டங்கனின் இயக்கம், கல்கி சதாசிவத்தின் தயாரிப்பு எனப் பல காரணங்கள் இந்தப் படத்தின் வெற்றியின் பின்னால் இருந்தன. இவை தவிர இன்னுமொரு முக்கியக் காரணமும் உண்டு. அது பாமர ரசிகர்களை திரையரங்களுக்கு வரவழைத்த கலைவாணர் என்.எஸ்.கே. டி.எஸ்.துரைராஜ் ஜோடியின் “அடிப்பியோ… ங்கொப்பன் மவனே… சிங்கம்டா…” என்ற எவர்க்ரீன் காமெடி.
கடலையொட்டிய நதியின் முகத்துவாரத்தில் இரண்டு தூண்டில்களைப் போட்டுவிட்டு மீனுக்காகக் காத்திருக்கிறார்கள் மீனவ நண்பர்களான என்.எஸ்.கே.யும் துரைராஜூம். இந்த இடைவெளியில் கடலோடி மக்களின் அன்றாடப் பாடுகளை இருவரும் லாவணியாகப் பாடி முடிக்க, மீன் சிக்கிவிடுகிறது. தூண்டில் மீன் யாருக்குச் சொந்தம் என்பதில் சண்டை. மீனைத் தூக்கிக்கொண்டு துரைராஜ் ஓட, அவரைத் துரத்திப்பிடிக்கும் என்.எஸ்.கே. அடிக்கக் கையை ஓங்குகிறார். அப்போது துரைராஜ் “ அடிப்பியோ… ங்கொப்பன் மவனே சிங்கம்டா” என்று வீரமாக மீசையை முறுக்குவார்.
இப்படிச் சொன்னதும் நிஜமாகவே என்.எஸ்.கே. அவரை அடிக்க, அடியை வாங்கிக்கொண்டு அதே வசனத்தைச் சுருதி குறைத்து முனகியபடியே மீண்டும் கூறி துரைராஜ் மீசையை முறுக்குவார். இப்போது மீண்டும் என்.எஸ்.கே. அடிக்க, ஒரு கட்டத்தில் அழுதுகொண்டே அந்த வசனத்தை மட்டும் விட்டுவிடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு துரைராஜ் கெத்து காட்டுவார். இப்படிப் பல படங்களில் தொடர்ந்த இந்த நகைச்சுவை ஜோடியின் அட்டகாசத்தை ரசிகர்கள் அன்று விழுந்து விழுந்து சிரித்து ரசித்தார்கள்.
பல தலைமுறைகளுக்குப் பிறகு கவுண்டமணியிடம் செந்தில் வாங்கிய அடி, ‘வின்னர்’ படத்தில் தொடங்கி ‘போக்கிரி’ வரை ‘கைப்புள்ள’ வடிவேலு வாங்கிய அடி என எல்லாவற்றுக்குமே இந்த ஜோடி போட்டுக்கொடுத்த ‘அடி’தான் அஸ்திவாரம். அடிப்பதும் ஆபாச வசனமும்தான் நகைச்சுவை என்று புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் அன்று என்.எஸ்.கே.- துரைராஜ் ஜோடியின் நகைச்சுவையில் யாரையும் பழித்துரைக்காத தூய்மை இருந்தது.
ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே. இல்லாத வெற்றிடத்தில் தனித்து நின்று தனது நகைச்சுவைப் பாதையை டி.எஸ்.துரைராஜ் அமைத்துக்கொண்டாலும் தனது நண்பர் என்.எஸ்.கே.யின் பாதையிலிருந்து விலகிவிடாமல் அவரது பாணியை இறுகப் பிடித்துக்கொண்டார். நடிப்பதிலும் பாடுவதிலும் அள்ளிக் கொடுப்பதிலும் கூட அவர் என்.எஸ்.கே.யின் இன்னொரு பிரதியாகவே சுமார் 20 ஆண்டுகள் தமிழ்த் திரையில் வலம்வந்தார்.
என்.எஸ்.கே.யின் நண்பர்
தஞ்சையை அடுத்த பட்டுக்கோட்டைதான் டி.எஸ். துரைராஜின் சொந்த ஊர். ஒரு பொற்கொல்லர் குடும்பத்தில் ராஜா நாயுடு நாகலட்சுமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். துரைராஜுக்குப் படிப்பு ஏறவில்லை. இதனால் பள்ளியிலிருந்து நின்றுவிட்டார். திருமணமாகிச் சென்ற அக்காவுக்கு உதவியாக இருக்கட்டும் என்று மதுரைக்கு அனுப்பிவைத்தனர். தமிழ் நாடகக் கலையின் தாய்வீடாக இருந்த மதுரையில் அன்று சிறுவர்களை மட்டுமே நடிகர்களாகக் கொண்டு இயங்கிய தமிழ் நாடகக் குழுக்கள் புகழ்பெற்று விளங்கிய காலம்.
சிறுவயது முதலே நக்கலும் நையாண்டியுமாகப் பேசும் துரைராஜுக்கு இட்டுக்கட்டிப் பாட்டுப் பாடும் திறனும் இருந்தது. இதைக் கண்ட அவரது மைத்துனர், எம். கந்தசாமி முதலியார் நடத்திவந்த ’மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’யில் சேர்த்துவிட்டார். 13 வயதில் நாடக கம்பெனியில் சேர்ந்த அவர், அங்கு வந்து சேர்ந்த எம்.ஜி. சக்கரபாணி, எம்.ஜி.ராமச்சந்திரன், காளி. என். ரத்னம், என்.எஸ்.கே. ஆகியோருக்கு நண்பர் ஆனார்.
பிறகு, கலைவாணருடன் நெருங்கி நட்புகொண்டார். அவருடன் அதிக நாடகங்களில் நடித்தார். என்.எஸ்.கே.யுடன் துரைராஜும் சென்னைக்கு வர மாடர்ன் தியேட்டரில் கம்பெனி நடிகர்கள் ஆனார்கள். ஆனால் அடையாளம் பெறும் அளவுக்கு வேடங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ’மேனகா’ படத்தில் கலைவாணருக்கே சினிமாவில் நடிக்கும் முதல் வாய்ப்பு கிடைத்தது; என்றாலும் நண்பன் துரைராஜுக்காகவும் தொடர்ந்து முயன்றுவந்தார் கலைவாணர். ராஜா சாண்டோ இயக்கத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்துத் தயாரித்த ‘திருநீலகண்டர்’(1939) படத்தில் முதல் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தார் கலைவாணர்.
மிகப் பெரிய வெற்றிபெற்ற அந்தப் படத்தில் என்.எஸ். கிருஷ்ணனும் துரைராஜும் எரிந்த கட்சி எரியாத கட்சியாகப் பங்கு கொண்ட ‘லாவணி’ கச்சேரி மிகப் பெரிய ஹிட்டடித்தது. டி.எஸ். துரைராஜ் லாவணிப் பாடல் மூலம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டுவரும் கலைவாணரிடம் ‘அந்தக் கணபதிக்கு தொந்தி பெருத்த விதத்தைச் சபையிலே எடுத்துக் கூறு, கூறு!’ என்று துரைராஜ் வில்லங்கமான கேள்வியைக் கேட்க, அதற்குப் பதில் தர முடியாமல் திணறுவார் கலைவாணர். கடைசியில் வேறு வழியில்லாமல் ‘கொழுக்கட்டை தின்றதினால் அண்ணே அண்ணே! தொந்தி பெருத்தது அண்ணே அண்ணே’ என்று கூறி சமாளிப்பார்.
இந்தப் படத்துக்கு முன்பே வாசன் வெளியிட்ட 1939-ல் ‘சிரிக்காதே' என்ற முழு நீள நகைச்சுவை படத்திலும் அதே ஆண்டில் வெளியான ‘ரம்பையின் காதல்’ படத்திலும் டி.எஸ். துரைராஜ் நடித்திருந்தாலும் ‘திருநீலகண்டர்’, ‘சகுந்தலை’ படங்களுக்குப் பிறகு என்.எஸ்.கே. துரைராஜ் ஜோடி மிகவும் பிரபலமானது. இந்த நேரத்தில் பட்டுக்கோட்டையிலிருந்து தன்னைத் தேடி வந்த சுந்தரம் என்ற இளம் கவிஞனை ‘சக்தி நாடக சபா’வில் சேர்த்துவிட்டார் துரைராஜ். பிறகு ‘கலியுகம்’ என்ற தனது நாடகத்தில் அவரை நடிகராக்கி அழகுபார்த்தார். அவர்தான் பின்னாட்களில் பாட்டுக் கோட்டையாக உயர்ந்து நின்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
கைதும் தனிமையும்
கலைவாணர் இருந்தால் துரைராஜ் அந்தப் படத்தில் இருப்பார் என்ற நிலையை ‘லட்சுமி காந்தன்’ கொலைவழக்கு மாற்றியது. அந்த வழக்கில் கைதாகி 30 மாதங்கள் பாகவதருடன் கலைவாணர் சிறையில் இருக்க வேறு வழியில்லாமல் தனித்து நடிக்கத் தொடங்கினார் டி.எஸ். துரைராஜ். பாகவதர் சிறை சென்ற பிறகு எம்.ஜி.ஆரும் நாயகனாக எழுந்துவந்தார். எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெமினி கணேசன் என அந்நாளின் முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ்பெற்ற டி.எஸ். துரைராஜ், தனது நண்பரின் வழியில் பலருக்கும் உதவும் உள்ளம் கொண்டவராக விளங்கினார்.
ஒல்லியான உடல்வாகுடன் திரையில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் பருத்த தோற்றத்துக்கு மாறிய துரைராஜ், தனது தோற்றத்துக்கு ஏற்ற நகைச்சுவை நடிப்புடன் குணசித்திர நடிகர், குறும்பு செய்யும் வில்லன் எனப் பல வேடங்களில் நடித்துப் பல பரிமாணங்களில் கவர்ந்தார். நகைச்சுவை நடிகர்களில் அதிகம் பொருளீட்டியவர் என புகழப்படும் துரைராஜ், சென்னையில் ராயப்பேட்டையில் பெசன்ட் சாலையில் மிகப் பெரிய மாளிகையைக் கட்டி வசித்தார். விலை உயர்ந்த கார்களை வைத்திருந்தார். விரல்களில் வைர மோதிரம் அணிந்தும் வலம் வந்தார்.
குதிரையின் வேகம்
புகழின் உச்சியில் இருந்தவருக்குக் குதிரைப் பந்தயம் மீது தீவிர வேட்கை உருவானது. திரை நடிப்பு, நாடக வருவாய் ஆகிவற்றின் மூலம் சம்பாதித்ததில் பெரும் பகுதியைக் குதிரைப் பந்தயங்களில் பணயம் வைத்தார். உயர்தரப் பந்தயக் குதிரைகளை வாங்கிப் பந்தயங்களில் ஓட விட்டார். ஆனால், குதிரைப் பந்தயம் அவரது திரைவாழ்வின் வேகத்தையும் செல்வத்தையும் குறைத்தது. இழந்த பொருளை மீட்க, பட நிறுவனம் தொடங்கிச் சில படங்களைத் தயாரிக்கவும் இயக்கவும் செய்தார். சாவித்திரி தங்கையாகவும் தான் அண்ணாகவும் நடித்து 1958-ல் வெளியான ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’ படத்தைத் தயாரித்து இயக்கினார் துரைராஜ்.
அந்தப் படத்தில் தங்கைக்கு அறிவுரை சொல்லும்விதமாக ‘புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே, தங்கச்சி கண்ணே சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே’ என்று திருச்சி லோகனாதன் குரலில் இவர் பாடுவதுபோல் அமைந்த பாடல் இன்றும் தமிழகத்தில் டி.எஸ். துரைராஜை நினைவுபடுத்தும் விதத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

வங்கிப் பணியில் ரோபாடிக்ஸ் சாஃப்ட்வேர்: ஐசிஐசிஐ-யில் அறிமுகம்


இந்தியாவில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தனது வங்கிச் செயல்பாட்டில் ரோபாடிக்ஸ் உபயோகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் இத்தகைய சாஃப்ட்வேர் ரோபாடிக்ஸ் தொழில் நுட்பத்தைப் பின்பற்றியுள்ள மிகச் சில வங்கிகளுள் ஒன்றாக ஐசிஐசிஐ வங்கி திகழ்கிறது.

10 லட்சத்திற்கும் மேலான வங்கி பரிவர்த்தனைகளை 200 ரோபாடிக்ஸ் மேற்கொள்வதாக வங்கி தெரிவித்துள்ளது. வங்கி யின் மொத்த செயல்பாடுகளில் 20 சதவீதம் ரோபாடிக்ஸ் மூலம் நிறைவேற்றப்படுவதாக வங்கி தெரிவித்துள்ளது.

இத்தகைய ரோபாடிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்து வதால் வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும் நேரம் 60% வரை சேமிக்கப்படுவதாக வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கொச்சார் தெரிவித்துள்ளார்.

சில்லரை வணிகம், அந்நியச் செலாவணி, கருவூலம் மற்றும் மனிதவளம் உள்ளிட்ட துறைகளில் இந்த ரோபாடிக்ஸ் சேவை பயன் படுத்தப்படுகிறது. இந்த நிதி யாண்டு இறுதியில் ரோபாடிக்ஸ் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த வங்கி திட்டமிட்டுள்ளதாக சாந்தா கொச்சார் தெரிவித்துள்ளார்.

Thursday, September 8, 2016

குடும்ப அமைதியைக் குலைத்த ஸ்மார்ட் போன்.. கூலிப்படை வைத்து மனைவியைத் தீர்த்துக் கட்டிய கணவர்
ஜான்சி, உ.பி.: 5 காசுக்காக கொலை நடந்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் உ.பி மாநிலம் ஜான்சியில் ஒரு ஸ்மார்ட் போன் லாக் "கோட்" எண்ணை மறைத்ததற்காக தனது மனைவியை ஆளை வைத்து போட்டுத் தள்ளிவிட்டார் ஒரு கணவர். பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணின் பெயர் பூனம் வர்மா. ஆகஸ்ட் 29ம் தேதி இந்தக் கொலை நடந்துள்ளது. இவரைக் கொலை செய்தது கணவர் வினீத் குமார் திவாகர் ஏவிய அவரது நண்பர்கள். நடந்தது இதுதான்...! திவாகருக்கு தனது மனைவியின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் வந்துள்ளது. அவர் அடிக்கடி செல்போனில் பேசி வருவதும், செல்போனை கையிலேயே வைத்திருப்பதும் அவரை குழப்பியது. இதையடுத்து சம்பவத்தன்று மனைவியின் ஸ்மார்ட் போனை எடுத்து அதில் உள்ளதைப் பார்க்க முயன்றார் திவாகர். ஆனால் போனை லாக் செய்திருந்தார் பூனம். இதையடுத்து அன்லாக் செய்வதற்காக லாக் கோட் எண்ணைக் கேட்டுள்ளார் திவாகர். ஆனால் அது என் போன், எனது பெர்சனல், லாக் கோடைச் சொல்ல முடியாது என்று கூறி மறுத்துள்ளார் பூனம். இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்போதைக்கு அமைதியாகி விட்டார் திவாகர். அடுத்த நாள் அவர் கான்பூர் போய் விட்டார். அங்கிருந்து தனது மனைவிக்குப் போன் செய்து எனது நண்பர்கள் இருவர் வருவர். அவர்களிடம் எனது பெர்சனல் கம்ப்யூட்டரை கொடுத்து அனுப்பு என்று கூறியுள்ளார். அதன்படி அன்று இரவு திவாகரின் நண்பர்கள் லட்சுமண் மற்றும் கமல் ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் வீட்டுக்குள் புகுந்து பூனமை அவரது பெட்ரூமில் வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். பின்னர் நகை, பணத்தை எடுத்துக் கொண்டும், அந்த அறையை சூறையாடி விட்டும், திருட்டும், கொலையும் நடந்தது போல செட்டப் செய்து விட்டு போய் விட்டனர். இந்தக் கொலைக்காக அவர்கள் இருவருக்கும் பணம் கொடுத்துள்ளார் திவாகர். அடுத்த நாள் காலை கண் விழித்தெழுந்த பூனத்தின் 4 வயதுக் குழந்தை தனது தாயார் இறந்து கிடந்ததைப் பார்த்து கதறி அழுதுள்ளது. குழந்தையின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தோர் வந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வினீத் குமார் திவாகரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சிக்கினார். விசாரணையின்போது அவர் கூறுகையில் ஸ்மார்ட் போன்தான் எல்லாவற்றுக்கும் காரணம். அது இல்லாதவரை எனது மனைவி நன்றாகத்தான் இருந்தார். அது வந்த பிறகு மாறி விட்டார். தனது போனில் ரகசியங்களை அவர் பாதுகாத்து வந்தார். அதை அறிய முயன்றபோதுதான் இந்த விபரீதமே நடந்தது என்றார் திவாகர்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/husband-kills-wife-as-she-hides-the-smartphone-lock-code-262231.html

மாடிப்படியும் பாடம் சொல்லும்

குள.சண்முகசுந்தரம்

எப்படா மணியடிக்கும் புத்தகப் பையைத் தூக்கிக்கிட்டு வீட்டுக்கு ஓடலாம் என்றுதான் மாணவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஆசிரியர் பா.சத்தியவேலிடம் படிக்கும் மாணவர்களிடம், “நேரம் ஆகிருச்சு கிளம்புங்கப்பா” என்று சொல்லித்தான் வீட்டுக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது.

மைதானத்தில் மாவு கணக்கு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள பொன்பத்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் சத்தியவேல். இவர் தனது மாணவர்களுக்கு மூன்று விதமாகப் பாடம் கற்பிக்கிறார்.

முதலாவது - விளையாட்டு முறை கணிதம். பெரும்பாலும் இந்த வகுப்பு மைதானத்தில்தான் நடைபெறும். உதாரணமாக கிராஃப் போட வேண்டுமென்றால் கோல மாவைக் கொண்டு மாணவர்களே ‘ஒய்’ அச்சு, ‘எக்ஸ்’ அச்சு போடுவார்கள். அதன் பிறகு ஒவ்வொரு புள்ளிகளும் குறிக்கப்பட்டு மாணவர்கள் புள்ளிக்கு ஒருவராக நிற்பார்கள். அவர்கள் கையில் கயிறு, நூலைக் கொடுத்து பிடிக்கச் சொல்லி அதன்மூலம் அட்டகாசமாக கிராஃப்பை வடிவமைத்துக் காட்டுவார் சத்தியவேல்.

ஆடைகளை வைத்து ஆஃபர் கணக்கு

இதேபோல், எண் கோடு வரைதல் உள்ளிட்ட பாடங்களையும் எளிமையாக படிக்க வைக்கிறார். அடுத்தது - செயல்வழிக் கல்வி. மாணவர்கள் வீட்டிலிருந்து ஏதாவது புத்தாடைகளை எடுத்துவந்து வரிசையாக வைப்பார்கள். அதன் ஒவ்வொன்றின் விலையும் தனித்தனியாக எழுதி வைக்கப்படும். அதற்குக் கீழே 10 சதவீதம் 5 சதவீதம் தள்ளுபடி என எழுதப்பட்டிருக்கும். 5 சதவீதம் தள்ளுபடி என்றால் அது எவ்வளவு ரூபாய்? அதுபோக அந்தத் துணியின் விலை எவ்வளவு? இதுபோன்ற விஷயங்களை மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

வங்கிகளை வைத்து வட்டிக் கணக்கு

சிலநேரம், மாணவர்கள் வீட்டிலிருந்து எடுத்து வரும் காய் - கனிகளுக்கு ஒரு விலை நிர்ணயம் செய்து, ஒருவர் இன்னொருவருக்கு அதை விற்பனை செய்ய வைத்து கொள்முதல் விலை, விற்பனை விலை, லாபம், நட்டம் இவை அனைத்தையும் மிகச் சரியாக கணக்கிட வைக்கிறார். இதேபோல் மாணவர்களைப் பிரபல வங்கிகளின் மேலாளர்கள்போல் உட்கார வைத்து அவர்களிடம் வீட்டுக் கடன் உள்ளிட்டவற்றை மற்ற மாணவர்களைக் கேட்க வைக்கிறார். மேலாளர்கள் தங்கள் வங்கியின் வீட்டுக் கடனுக்கான வட்டிவிகிதம் கால நிர்ணயம் இதையெல்லாம் சொல்வார்கள். அதை வைத்து வட்டி கணக்கிட்டு எந்த வங்கியின் வட்டி விகிதம் சாதகமானது என்பதை மற்ற மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

மூன்றாவது - கணினி வழிக் கணிதம். கணினியில் கேம்ஸ் விளையாட்டை விரும்பாத பிள்ளைகள் அரிது. அந்த கேம்ஸ்களோடு எஜுகேஷன் சாஃப்ட்வேர்களைச் சேர்த்து கணக்கு, ஆங்கிலம், சமூக அறிவியல் பாடங்களை மாணவர்களை தன் விருப்பத்தில் படிக்க வைக்கிறார்.

மாடிப்படியும் பாடம் சொல்லும்

“எனது வகுப்பில் மாணவர்கள் படிப்பு பயமில்லாமல் சுதந்திரமாக இருக்கிறார்கள். அதனால்தான் வகுப்பு முடிந்தாலும் அவர்களுக்கு வீட்டுக்குப் போக மனம் வருவதில்லை. வாய்ப்பாடு, ஆங்கிலப் பாடல்கள், வெண்பாக்கள், உள்ளிட்டவைகளை மாணவர்களைக் கொண்டே பாடவைத்து வீடியோக்களாக்கி வைத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட பாடம் நடத்தும்போதும் உணவு இடைவேளையின்போதும் அந்த வீடியோ காட்சிகள் பவர் பாயிண்ட் மூலம் ஒளிபரப்பப்படும்.



6,7,8 வகுப்புகள் மாடியில் உள்ளன. இவர்களுக்காக மாடி படிகளில் தினமும் சில சொற்களோ எண்களோ எழுதி வைக்கப்படும் 6,7,8 வகுப்பு மாணவர்கள் தினமும் கட்டாயம் 8 முறை மாடிப்படியில் ஏறி இறங்க வேண்டும். அப்படி இறங்கும்போது படிகளில் இருக்கும் வாசகங்களை படித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இறுதி வகுப்பில் அந்தச் சொற்களை சம்பந்தப்படுத்தி நடத்தப்படும் வினாடி வினாவுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதால் மாணவர்கள் மாடிப்படி பாடத்தைக் கட்டாயம் உள்வாங்கி வைத்திருப்பார்கள். இப்படித்தான் விளையாட்டுப் போக்காய் போய்க்கொண்டிருக்கிறது எங்களது பயிற்று முறை” என்று தன்னுடைய சுவாரசியமான கற்பிக்கும் முறையை மிக எளிமையாகச் சொல்கிறார் சத்தியவேல்.

தொடர்புக்கு: 86086 75422

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...