Friday, September 16, 2016



தி.மலை கிராமத்தில் தொடக்கப் பள்ளிக்காக ரூ.30 லட்சம் மதிப்பு நிலத்தை கொடுத்த தலைமை ஆசிரியர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட துளுவ புஷ்பகிரி கிராமத்தில் அரசு நிதி உதவிபெறும் தொடக்கப் பள்ளி உள்ளது.

35 ஆண்டுகளுக்கு முன்பு, அரசிடம் இந்தப் பள்ளியை ஒப்படைத்தது நிர்வாகம். அதன் பிறகு, பள்ளிக் கல்வித் துறையின் நேரடி கண்காணிப்பில் இயங்குகி றது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 48 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்களை வழி நடத்தும் பணியில் 2 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, இடவசதி தடையாக இருந்தது. அங்குள்ள தனக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை பள்ளிக்கு எழுதிக் கொடுத்தார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி. சந்தை மதிப்பில் தற்போது அந்த இடம் ரூ.30 லட்சமாகும்.

சில தடைகளைத் தாண்டி, பள்ளிக் கட்டிடம் எழுந்துள்ளது. கொடிக் கம்பம் அருகே திருவள்ளுவர் சிலை நிறுவப்படுகிறது. மாநில நிதிக் குழுத் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு சுற்றுச் சுவரை கட்டிக் கொடுத்துள் ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட் சித் துறை. பள்ளிக் கட்டிடம் கட்டும் பணியை கட்டிடக் குழு மேற் பார்வை செய்து வருகிறது.

இது குறித்து கட்டிடக் குழுவில் உள்ளவர்கள் கூறும்போது, “கல்வி ஆர்வலர்களின் நிதி உதவியால் சுமார் ரூ.12 லட்சம் வரை செலவிடப் பட்டு பணி நடைபெற்றது. மேலும், ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. அந்த நிதிக்காக காத்திருக்கிறோம். நவீன கணினி வழிக் கல்வி, யோகாசனம் மற்றும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செயதுள்ளோம். எங்கள் இலக்கு நிறைவேற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி கூறும்போது, “அந்தப் பள்ளியில் படித்தவன் நான். ஆரம்பக் கல்வியை தொடங்கி, ஆசிரியராக உயர்ந்து நிற்கிறேன். அதற்கு அடித்தளமிட்டது, நான் படித்த இந்தப் பள்ளியாகும். அந்த பள்ளிக்கு இடம் தேவைப்படுகிறது என்பதை அறிந்தேன். சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயிலவேண்டும் என்ற நோக்கத்தில், எனது 20 சென்ட் நிலத்தை எழுதித் கொடுத்துள்ளேன் ” என்றார்.

வருவாய் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கும் இந்த காலத்தில், ஏழை மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளிக்காக 30 லட்சம் மதிப்புள்ள தனது நிலத்தை தானமாக கொடுத்த தலைமை ஆசிரியர் கோவிந்தசாமியின் நடவடிக்கையை அனைத்துத் தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.

சேலத்தில் அலங்கோலமாய் சுற்றிய மனநலம் பாதித்த பெண்: மனிதநேயத்தை கட்டிக்காத்த போலீஸார்


சேலம், புதிய பேருந்து நிலையம் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த பெண், நேற்று காலையில் இருந்து மாலை வரை அலங்கோல ஆடையுடன் சுற்றித் திரிந்து வந்தார். அவர் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் வரை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மசூதி வாயிலில் பிச்சை எடுத்து வந்தார்.

திடீரென அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பகுதிக்கு வருவதில்லை. இந்நிலையில் நேற்று காலை அலங்கோலமான ஆடையுடன் அந்த பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். தள்ளுவண்டி கடைக்காரர்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் அப்பெண்ணுக்கு ஆடை கொடுத்தனர். ஆனால், அவர் ஆடைகளை வாங்கி ரோட்டில் வீசியுள்ளார்.இதுகுறித்து அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்தும், அவர்கள் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அந்த பெண்ணை அழைத்து செல்ல வரவில்லை. எனவே, அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேறு வழியின்றி அலங்கோலமாய் சாலையில் அலைந்த பெண்ணை பலரும் வேடிக்கை பொருளாய் பார்த்து சென்றதை சகிக்க முடியாமல், தள்ளுவண்டி கீழே மறைவிடத்தில் அமர வைத்தனர். மதியம் முதல் தள்ளுவண்டியின் கீழே முடங்கியிருந்த அப்பெண் குறித்து, பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அவர் இரண்டு போலீஸாரை சம்பவ இடத்துக்கு ஆடை, பழங்களுடன் அனுப்பி வைத்தார். போலீஸார் ஆடை அணிய அந்த பெண்ணை வற்புறுத்தியும், அவர் அதை முதலில் வீசி எரிந்தார்.

பின்னர் வேறுவழியின்றி மனிதநேயத்தை கட்டிக்காக்கும் பொறுப்பை உணர்ந்து போலீஸார் அப்பெண்ணுக்கு ஆடை அணிவித்து, பெண்கள் பாதுகாப்பு மையத்துக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால், அவர் வர மறுத்த நிலையில், அங்கிருந்தவர்களிடம் போலீஸார் அவரை பார்த்துக் கொள்ளும்படியும், உரிய முறையில் அவரை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றனர்.

சேலம், பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் வின்சென்ட் மற்றும் போலீஸாரின் இந்த நடவடிக்கையை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

காற்றினிலே வரும் கீதம்... - எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு!


இசையைச் சுவாசித்தவர். இசையில் தியானித்தவர். இசையொடு இரண்டற இணைந்தவர். தன் இசையைக் கேட்கும் ஒவ்வொருவரையும் புனிதப் பயணம் அழைத்துச்சென்று ஆலயங்களைத் தரிசிக்கவைத்தவர். காஞ்சி காமாட்சியையும், மதுரை மீனாட்சியையும் கண்முன் கொண்டுவரும் திறன், எம்.எஸ். அவர்களின் பாடல்களுக்கு உள்ளது. இத்தகைய பெருமைமிக்க இசை அரசி எம்.எஸ்.அம்மாவிற்கு, இன்றோடு(செப்.16) 100 வயது ஆகிறது. இந்த ஆண்டு, எம்.எஸ்.ஸின் நூற்றாண்டு ஆகும். இந்த இசை அரசியை பற்றி சில செய்திகள் இங்கே……..

17 வயதில் இருந்தே:

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மதுரையில் சங்கீத உலகின் அதிசயங்களில் ஒருவராகப் பிறந்தார். செம்மங்குடி சீனிவாச ஐயரிடம் கர்நாடக இசையையும், பண்டிதர் நாராயண ராவ் வியாஸிடம் இந்துஸ்தானியையும் கற்றுக்கொண்ட இவர், தனது 17வது வயதிலேயே இசைத் துறையில் இனிய குரலைப் பதிய வைத்தார்.

தரணி ஆண்ட எம்.எஸ்.:

கல்யாணக் கச்சேரி என்றால் ஒரு மாதிரி, கோயில் கச்சேரி என்றால் ஒரு மாதிரி, சபா கச்சேரி என்றால் வேறு மாதிரி என்ற பாகுபடுகளை தன் வாழ்நாளில் என்றுமே வைத்துக் கொண்டதில்லை எம்.எஸ்.அவர்கள். ‘பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’ என்று சொல்வார்கள். அவ்வகையில், பரணியில் பிறந்த இந்த இசையரசி தரணியை ஆளத்தான் செய்தார். சங்கீத உலகின் முடிசூடா மகாராணியாக திகழ்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும், திரைப்படத்துக்குமான உறவு இன்றைய இளைய சமுதாயம் அதிகம் அறிந்திராத ஒன்று. திரைப்படங்களில் ஆயிரம் பேர் பாடியிருக்கலாம். ஆனால் திரையில் ஒலித்த தெய்வீகக் குரல் எம்.எஸ்.சுப்புலட்சுமியினுடையது. சங்கீத சாம்ராஜ்யத்துக்கு திரையுலகம் விட்டுக் கொடுத்த பொக்கிஷம் எம்.எஸ்.சுப்புலட்சுமி. திரையுலகில் அவரது பங்கு மிக குறைவானதாக இருக்கலாம். ஆனால் நிறைவானது. இன்று வரை எம்.எஸ்.சின் உயரம் யாராலும் தொட முடியாத உயரமாகவே உள்ளது.





உறுதுணையாக இருந்த கணவர்:

ஒருமுறை மும்பைக்கு கச்சேரி செய்ய சென்றபோது ரெயிலில் அறிமுகமானார் இளைஞர் சதாசிவம். எம்.எஸ்.ஸின் தீவிர ரசிகர். அவரின் திறமைகளை மேலும் வெளிக்கொண்டுவர வேண்டும், அவ்வாறு செய்து அவரது புகழை உச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினார். பின்னாளில் இசை அரசியை திருமணம் செய்துகொண்டார். சங்கீதத்திலும், சமூகத்திலும் தன் மனைவி சிறப்பு எய்த வேண்டும் என்ற ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர். தனது இசை பயணத்தை மேலும் செப்பனிட தன் கணவரும் வரப்போகிறார் என்பதை எண்ணிப் பூரித்துவிட்டார் எம்.எஸ். அதன் பின் அவர் பாடாத பாட்டும் இல்லை, செல்லாத நாடும் இல்லை, வாங்காத விருதும் இல்லை எனுமளவு புகழ்க்கொடி நாட்டினார். தான் பாடிச் சம்பாதித்த பணத்தின் பெரும் பகுதியை சமூக காரியங்களுக்கு அள்ளிக் கொடுத்தார். தெய்வீக பணிகளுக்கு வாரிக் கொடுத்தார்.

மீரா ஏற்படுத்திய அழகிய தாக்கம்:

திரு.கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள், கிருஷ்ணனை நினைத்து நினைத்து உருகும் பக்த மீராவின் கதையை எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கத்தில் உருவாக்கினார். இசை அரசியை திரையுலகம் வியந்து போற்றியது. எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையில் எம்.எஸ். பாடிய பாடல்களோடு மீராவாக எம்.எஸ்.அம்மாவை பார்க்கும் போது இது படமா அல்லது மீராவே உயிர்த்தெழுந்து வந்தாரா என நினைக்கும் அளவுக்கு இருக்கும். எம்.எஸ். அவர்களின் வாழ்வில், இந்த பக்த மீரா ஒரு மைல்கல்லாக இருந்துள்ளாள். சரோஜினி நாயுடு அவர்கள் படத்தை பார்த்து விட்டு, ‘இந்தியாவின் இசைக்குயில்’ என்ற பட்டத்தை வழங்கினார். அன்றைய பிரதமர் நேரு அவர்கள் கூறும் போது, “இந்த இசை அரசிக்கு முன்னால் நான் சாதாரண பிரதம மந்திரியே” என்றார்.

இசை சமூகத்துக்கு ரொம்பவே அவசியம்:

இன்றைய இளைஞர் சமுதாயம் நல்ல சங்கீதத்தால் மேன்மை அடைய வேண்டும் என்று எண்ணிய அம்மா அவர்கள், “தாய்மார்கள் அடுத்த தலைமுறையினருக்கு நல்ல ரசனை உணர்வை ஊட்டினால், நாட்டில் சங்கீதம் பெருகும், அதாவது பக்தி பெருகும், நாட்டு மக்களுக்கும் நல்வாழ்வு கிடைக்கும்” என்றார். இசை பெருகுவதன் மூலம் மக்களின் நலமும் நாட்டின் நலமும் பெருகும் என்பதை உளமார நம்பியவர். சுமார் 40வருடங்களுக்கு முன்னர் எம்.எஸ். அவர்கள் கூறிய கருத்துக்கள் யாவும் இன்றளவும் ஏற்புடையதாகவே இருக்கின்றது.

‘இது நூற்றாண்டல்ல, இசை ஆண்டு’ :

இசையும், இறை பணியும், வள்ளல் குணமுமாய், இந்திய பெண்களின் அடையாளமாய் வாழ்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004ம் ஆண்டு டிசம்பர் 12ந் தேதி மறைந்தார். உலகையே தன் இசையால் வென்ற இவரின் இன்று தொடங்கும் அவரது நூற்றாண்டை இசை ஆண்டாக தமிழகம் கொண்டாடட்டும்.
Posted Date : 10:10 (16/09/2016)
Last updated : 10:10 (16/09/2016)




ரூ.500-க்கு 600 GB - ரிலையன்ஸ் ஜியோவின் இரண்டாவது அதிரடி?!


vikatan.com

கடந்த செப்டம்பர் 01, 2016 அன்று தான், ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி ஆஃபர்கள்ளை அறிவித்து, மற்ற நிறுவனங்கள் தொழில் இருக்கலாமா வேண்டாமா என்கிற ரேஞ்சில்நடுங்க வைத்தது.

இந்த ஒரு அறிவிப்பால சுமார் 20,000 கோடி ரூபாய் வரை மற்ற டெலிகம்யூனிகேஷன் நிறுவன பங்குகள் விலை சரிந்தன. இப்போது வரை அந்த அதிர்ச்சியில் இருந்து மற்ற நிறுவனங்கள் மீண்டதா என்று தெரியவில்லை. அதற்குள் ஜப்பான் மீது இரண்டாவது அணு குண்டை வீசியது போல, அடுத்த ஆஃபர் குண்டுகளை பொழியத் தொடங்கி இருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ.


பயன்படுத்தும் இணையத்தின் வேகம், பயன்படுத்தும் அளவு, விலை ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு பல திட்டங்களை அறிவித்து அலறவிட்டிருக்கிறது. இந்த அணு குண்டை 3 வகையாக பிரிக்கலாம்.


1. விலையை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் திட்டங்கள் :
உதாரணமாக 500 ரூபாய் செலுத்தினால், 600 ஜிபி நெட்டை, 15 எம்.பி.பி.எஸ் வேகத்தில், அடுத்த 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இது போல மற்ற திட்டங்களை கீழே பாருங்களேன்.
இப்படி 500 ரூபாயில் தொடங்கும் திட்டம் அதிகபட்சமாக 1000 ரூபாய் வரை இருக்கிறது.




2. Mbps அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் :
இந்த திட்டத்தில் 50 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்றால், 2000 ஜிபி இணையத்தை, 1500 ரூபாய் செலுத்தி, அடுத்த 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வகையான திட்டங்களில் எம்பிபிஎஸ் வேகம் அதிகரிக்க அதிகரிக்க இணைய டேட்டா அளவு குறையும், விலையும் அதிகரிக்கும். ஆனால் வேலிடிட்டி நாட்கள் குறையாது.




3. வால்யூம்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் :
இதில் நாள் ஒன்றுக்கு பயன்படுத்தும் டேட்டாக்களை ஜிபியில் கணக்கிட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கிறன. நாள் ஒன்றுக்கு 5 ஜிபி தொடங்கி 60 ஜிபி வரை திட்டங்கள் இருக்கின்றன. இதில் ஒரு குறை என்ன என்றால் எவ்வளவு வேகத்தில் இணையம் கிடைக்கும் என்பதை சொல்லவில்லை. அதே போல் விலையும் சற்று புரியாத வகையிலேயே இருக்கிறது.



மிக முக்கியமான விஷயம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் எந்த அதிகாரிகளாலும் இதுவரை இந்த தகவல்கள் உறுதிபடுத்தப்பட வில்லை. ஆனால் இந்த அளவுக்கு இணையத்தில் புதிய அணு குண்டுகளை கட்டாயமாக வீசும் என்பதை மட்டும் அனலிஸ்டுகளும், டெலிகம்யூனிகேஷன் வல்லுநர்களும் கணித்திருக்கிறார்கள்.

அப்புறம் என்ன, சும்மாவே யூடிப்ல படம் பாப்போம், இனிமே ஒன்லி ஹெச்டி தானே. வாங் போய் படம் பாப்போம் பாஸ்.

கலந்து பேசுங்கள்


காவிரி விவகாரம் உருவாக்கிய பதற்றம் குறைய ஆரம்பித்திருப்பது ஆறுதல் அளித்தாலும், இப்பிரச்சினையின் அதிர்வுகள் அடங்குவதற்கு இன்னும் காலம் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. கன்னட அமைப்புகள் அரங்கேற்றிய வன்முறையின் அதிர்வலைகள் இம்முறை அமெரிக்கா வரை எதிரொலித்திருக்கின்றன. தன்னுடைய குடிமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. இதற்கு முன்பு எப்படியோ அப்படியே மீண்டும் தமிழர்கள் இயல்பான சூழலுக்குத் திரும்புவார்கள்; கன்னடர் - தமிழர் உறவு மீண்டும் இயல்பான நிலைக்குத் திரும்பும் என்றெல்லாம் பெங்களூருவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தாலும், நடந்த நிகழ்வுகளை யோசிக்கையில், சில விஷயங்களை நாம் பேச வேண்டும் என்று தோன்றுகிறது.

பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு, கொள்ளேகால், ஷிமோகா, பத்ராவதி என்று கர்நாடக மாநிலம் முழுவதும் சுமார் ஒரு கோடித் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கர்நாடகத்தில் குடியேறியவர்கள். மைசூரு மகாராஜாக்கள் காலத்திலேயே, திவான்களாகத் திகழ்ந்த தமிழர்களும் உண்டு. கர்நாடகத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் உறுதுணையாகத் தமிழர்கள் நின்ற வரலாறு உண்டு. கல்வி, வணிகம், திரைத் துறை என்று சகல துறைகளிலும் தமிழர்களுக்குப் பங்கிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், அங்கு வெறியுணர்வு தூண்டப்பட்டு பதற்றச் சூழல் ஏற்படும்போது தமிழகத்தில் நடக்கும் சிறு சிறு சம்பவங்களும் இன்னொரு முனையில் சக தமிழர்களின் வாழ்வுக்கே துன்பத்தை விளைவிக்கும்.

கர்நாடகம் அளவுக்குத் தமிழகத்தில் வன்முறைகள் இல்லை. இயல்பாகவே நம் மக்கள் அமைதி காத்தார்கள் என்பதோடு, தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததும் இதற்கு முக்கியமான காரணம். அதேபோல, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. ஆனால், இப்படியான விஷயங்கள் மாற்றுத்தரப்பின் காதுகளை எட்டுவது முக்கியம். தமிழக முதல்வர் இந்தத் தருணத்தில் பேசியிருக்க வேண்டும். கர்நாடகத் தரப்பை நோக்கி அல்ல; தமிழக மக்களை நோக்கியே அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு, அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்திருக்கலாம். அது பதற்றங்களைக் குறைக்கவும் நல்லெண்ணங்களை விதைக்கவும் வழிவகுக்கும். மேலும், பிரச்சினை இவ்வளவு தூரம் சென்ற பிறகும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கூட்டாதது சரியான போக்கல்ல.

ஒருபக்கம் காவிரியில் நம்முடைய உரிமைகளை நிலைநாட்ட சட்டரீதியிலும் அரசியல்ரீதியிலுமான நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம். மறுபக்கம் இனிவரும் காலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறையை நம்மளவில் எதிர்கொள்ள என்ன மாதிரியான தீர்வுகளை நோக்கி நாம் நகரப்போகிறோம் என்று விவாதிப்பதும் முக்கியம். ஊர் கூடித் தேர் இழுக்கும் வேலை இது. முதல்வர்தான் ஊரைக் கூட்ட வேண்டும்!

போதும் "பாரா'முகம்!


DINAMANI

ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் தமிழகத்தைச் சேர்ந்த தங்கவேலுமாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று பதக்கப் பட்டியலைத் தொடங்கி வைக்க, தொடர்ந்து தற்போது ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா தங்கம் வென்றுள்ளார்.

இவர்களுடன் இந்திய வீரர்கள் தீபா மாலிக் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், வருண் சிங் பதி உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளனர்.
பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதமர், அமைச்சர்கள் என்று பலரும் வாழ்த்துகள் தெரிவித்தாலும்கூட, ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற சிந்துவுக்கும், வெண்கலம் வென்ற சாக்ஷிமாலிக்குக்கும் கிடைத்த பரிசு மழை போன்று பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்குக் குவியவில்லை. வாழ்த்துகளும்கூடக் குறைவுதான். நல்லவேளையாக, தங்கவேலு மாரியப்பன் தங்கம் வென்றவுடனேயே தமிழக முதல்வர் ரூ.2 கோடியைபரிசாக அறிவித்து இந்தக் குறையை ஈடு செய்தார்.
பதக்கம் வென்ற ஒலிம்பிக் வீரர்களுக்குக் கிடைக்கும் பரிசும் பாராட்டும் பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு இந்தியாவில் கிடைக்கவில்லை என்றால் அதற்குக் காரணம், ஒலிம்பிக் போட்டியுடன் நாம்விளையாட்டு மனநிலையிலிருந்து விலகி விடுவதும், பாரா ஒலிம்பிக் என்பது ஏதோ சிலரின் மனத்திருப்திக்காக நடத்தப்படும் விளையாட்டு என்று கருதுவதும்தான். இந்த எண்ணம் மாற வேண்டும்.

தாங்கள் உடல் ஊனமுற்றவர்கள் அல்ல, மாற்றுத்திறனாளிகள் என்பதை இதுபோன்று அவர்கள் பலமுறை நிரூபித்த பிறகும்கூட நமது மனநிலையில் மாற்றம் ஏற்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
தங்கவேலு மாரியப்பன் தனது ஐந்தாவது வயதில் பேருந்து விபத்தில் வலது முழங்காலை இழந்தவர். தீபா மாலிக், தனது தண்டுவடத்தில் வந்த கட்டியால் இடுப்புக்கு கீழ் பகுதிசெயல்பட முடியாதநிலைக்குத் தள்ளப்பட்டவர். தேவேந்திர ஜஜாரியா ஒரு விபத்தில் சிறுவயதிலேயே கைகளை அகற்ற வேண்டிய நிலைக்கு ஆளானவர். வருண் சிங் பதி போலியோ நோயால் ஒரு காலின் செயல்
குன்றிப் போனவர். ஆனால் இவர்கள் அனைவருமே மனம் தள
ராமல் தங்களை ஏதாவது ஒருவகையில் சாதனையாளராக நிலை
நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற வெறியுடன் போராடியவர்கள்.
இவர்களுக்குக் கிடைத்துள்ள வெற்றி வெறும் விளையாட்டுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல. தளராத மன உறுதிக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றி. இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்குமுன்மாதிரிகள். ஒலிம்பிக் வீரர்களுக்கு இணையாக இவர்களுக்கும் பாராட்டும் பரிசு மழையும் குவிய வேண்டும்.
இரண்டாம் உலகப்போரில் ஊனமடைந்தவர்களுக்கு வாழ்க்கையில் புது நம்பிக்கையை ஏற்படுத்த, 1948-இல் மிகச் சிறு அளவில் தொடங்கப்பட்டதுதான் பாரா ஒலிம்பிக். லுட்விக் கட்மேன் என்கிறநரம்பியல் மருத்துவர், தனது ஸ்டோக் மேண்டாவில்லே மருத்துவ
மனையில், இரண்டாம் உலகப்போரில் முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்ட 16 நோயாளிகளுக்காக, விளையாட்டுப் போட்டி ஒன்றை நடத்தினார். ஒலிம்பிக் பந்தயம் நடைபெறும் அதே நேரத்தில்இந்தப் பந்தயமும் நடத்தப்பட்டது. அப்படித் தொடங்கியதுதான் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் பந்தயம்.
அன்றைய தேதியில் பாரா ஒலிம்பிக் என்கிற பெயர் சூட்டப்படவில்லை. 1964-இல்தான் இந்தப் பெயர் அதிகாரபூர்வமாக பயன்
படுத்தப்பட்டது. 1988 "சியோல்' ஒலிம்பிக் பந்தயத்தின்போது, அதேபோல பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடத்தும் வழக்கம் தொடங்கியது. ஒலிம்பிக் பந்தயம் போலவே இதிலும் தொடக்க, நிறைவுவிழாக்கள் நடத்தும் வழக்கமும் ஆரம்பித்தது.
1989-இல் சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. 1992-இல் நடந்த "பார்சிலோனா' ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து இந்த கமிட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் இணைந்து செயல்படத் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடே பாரா ஒலிம்பிக் போட்டியையும் நடத்த வேண்டும் என்ற புதிய

நடைமுறை 2008-க்கு பிறகே தீர்மானிக்கப்பட்டு, ஒலிம்பிக் போட்டி நடைபெறும் அதே வளாகத்தில், ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
ரியோ டி ஜெனீரோவில், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற அப்துல் லத்தீப் பாகா, ஒலிம்பிக்கில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற மாத்யூ சென்ட்ரோவிட்ஸ் எடுத்துக்கொண்டநேரத்தைக் காட்டிலும் 1.7 விநாடி குறைவாக, அதாவது 3 நிமிடம் 48.29 விநாடியில் ஓடி சாதனை நிகழ்த்தியிருப்பதைப் பார்க்கும்போது, இவர்களது சாதனையின் வீரியம் அளவிட முடியாதது என்பதை உணரமுடிகிறது.
ஒலிம்பிக் போட்டிக்கு 118 வீரர்களை அனுப்பி வைத்த நாம், பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வெறும் 19 வீரர்களை மட்டுமே அனுப்பினோம். அவர்கள் இரண்டு தங்கப் பதக்கங்களையும்,வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்திருக்கிறார்கள்.
பாரா ஒலிம்பிக் போட்டியிலும் அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகளை அனுப்பும் நிலை அடுத்த ஒலிம்பிக் போட்டியின்போது உருவாக வேண்டும். ஒவ்வொரு மாநிலமும்மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகளில் தனிப்பயிற்சி அளித்து, அகில இந்திய அளவில் போட்டியிடும் திறன் இருப்பின், அவர்களை ஊக்கப்படுத்தி, அந்த விளையாட்டில் அவர்கள் தனிக்கவனம்

செலுத்த அவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவினால், இந்தியாவுக்கு பாரா ஒலிம்பிக் போட்டிகளில் மேலும் அதிகமான பதக்கங்கள் கிடைக்கக் கூடும்.

Soumya's rapist, 'beggar' Govindachamy had an expensive lawyer who charged lakhs

The lawyer told TNM that he has earned more than 15 lakhs in the case.

Dhanya Rajendran | Thursday, September 15, 2016 - 14:31

When 30-year -old Govindachamy alias Charly was first arrested on charges of raping and murdering 23-year-old Soumya, he was described as a mentally unbalanced beggar, and then a petty thief. However, the case soon took a surprising turn, when high-profile criminal lawyer, BA Aloor, appeared along with two other lawyers to defend Govindachamy. Aloor also represented Govindachamy in the Supreme Court, part of a team of four lawyers that got his sentence commuted from a death sentence to seven years’ imprisonment.

While Govindachamy or any other accused is free to hire any lawyer of their choice, what is apparent is that the case took a turn in the Supreme Court that most people had not expected. The prosecution was not able to prove the murder charge.

Twenty-three-year-old Soumya who worked as a salesgirl, was returning home by Ernakulam-Shoranur passenger train on February 1, 2011. Govindachami went to the ladies’ compartment where she was, robbed and attacked her. Soumya’s body was found in the forests near Vallathol railway station.

Read: Soumya case: Why the SC was unconvinced that Govindachamy murdered her

Originally convicted of rape and murder and awarded the death sentence by a Thrissur Fast Track Court, Govindachamy appealed the case in the Kerala High Court and the Supreme Court. While the HC upheld the sentence, the SC commuted the death term for murder charge to seven years’ imprisonment. The court on Thursday upheld life sentence in the rape case and said it was not convinced that Govindachamy had murdered Soumya.

Aloor, originally named Biju Antony, is a criminal lawyer based in Mumbai, and has appeared in a string of high-profile cases during his career. How could Govindachamy, a petty thief and a ‘beggar’ afford a lawyer like Aloor?

“How is that anyone’s concern? I charge Rs 5 lakh per criminal case and my duty is only to represent my client. Since I have represented him in three courts, the charges have exceeded Rs 15 lakhs, but that is not of anyone's concern,” Aloor told The News Minute after the SC judgment came.

When asked who approached him to represent Govindachamy, he was elusive. “There are certain people who wanted to help him. People who have been accused along with him in other cases who had approached me. The ‘mafia connection’ is a media creation,” he says.

When asked why the media should not be concerned that a petty criminal could afford a good lawyer and crush a case, Aloor retorted, “When crores were spent for Achutanandan in the Supreme Court, did the media question that? Why question this now?”

Aloor says the verdict clearly shows the prosecution had manufactured the case against his client. “This was a pre-decided case. People in Kerala were angry and wanted a scapegoat. The forensic evidence was completely fabricated in the case and that is why the prosecution could not prove the case,” he said.

Among the clients he has represented are Devinder Singh alias Bunty Chor, reported to have committed 500 burglaries across the country. He is currently representing the men arrested for murdering rationalist and thinker Narendra Dabholkar.

At the time he was representing Govindachamy in the Kerala High Court, Aloor was also fighting another high profile rape and murder,representing one of the men accused in the death of Nayana Poojari, a software engineer, in Pune.

Most recently, Aloor caused a minor stir when it was reported that the lawyer will reportedly represent Ameerul Islam in the Jisha rape and murder case. Previously, Aloor had also claimed that he would represent Ajmal Kasab, convicted and hanged for the 2008 terror attacks in Mumbai.

When Aloor’s appearance on behalf of Govindachamy gained media attention, the lawyer reportedly created more controversy when he revealed that he had appeared in the case after being engaged by “a network of criminals from Tamil Nadu with links to the Mumbai underground activities.”

Govindachamy was arrested in February 2011, and as per the apex court verdict, he will have to serve only 16 more months in prison for the Soumya case. He will be release in 2022 as he is simultaneously serving sentences in cases of robbery and assaulting a jail convict. Though the man had almost eight cases against him in Tamil Nadu, he was known as Charley Thomas in TN police records.

NEWS TODAY 23.12.2025