Friday, September 16, 2016

காவிரி பிரச்சினையில் முழு அடைப்பு: தமிழகம், புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; முக்கியத் தலைவர்கள் கைது

Return to frontpage

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியது.

சென்னையில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன. தனியார் பள்ளிகள் ஒருசில இயங்குகின்றன. கடைகள் பரவலாக அடைக்கப்பட்டுள்ளது. தனியார் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ளன. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர், கொருக்குப்பேட்டை, பேசின்பிரிட்ஜ் பகுதிகளில் ரயில் மறியல் நடைபெற்றதால் மின்சார ரயில்கள் தாமதமாகின.



சென்னை கொருக்குப்பேட்டையில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் | படம்: ரகு.

பொதுப் போக்குவரத்து பாதிக்காத வண்ணம் பாதுகாக்க மாநிலம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ரயில் மறியல், பேருந்து மறியலில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யும் வகையில் போலீஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பரவலாகக் கடைகள் மூடப்பட்டிருக்கிறன.

கர்நாடக அரசுக்கு சொந்தமான பள்ளிகள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவித்து சென்னை கோயம்பேட்டில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தனியார் பேருந்துகள் | படம்: ம.பிரபு.



கோயம்பேடு மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது | படம்:ம.பிரபு.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கைது:

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். காவேரி விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் காவேரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.



சென்னை அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்ட கனிமொழி | படம்:எல்.சீனிவாசன்.

இதேபோல் சென்னை அண்ணாசாலையில் கனிமொழி தலைமையில் திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கனிமொழி கைது செய்யப்பட்டார்.

திருமாவளவன் கைது:

சென்னை பேசின்பிர்ட்ஜ் அருகே ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கைது செய்யப்பட்டார். நவஜீவன் ரயிலை மறிக்க முயன்றபோது திருமாவளவனும் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.





திருச்சியில் கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ | படம்: எம்.மூர்த்தி

புதுச்சேரியில் இயல்பு நிலை பாதிப்பு:

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரியில் பந்த் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அங்கு அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. அரசுப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. தனியார் பேருந்துகளும் இயங்கவில்லை. ஆட்டோக்கள் பெரும்பாலும் ஓடவில்லை. பெட்ரோல் பங்குகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.



வெறிச்சோடி கிடக்கும் புதுச்சேரி | படம்: செ.ஞானப்பிரகாஷ்

புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக, பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடந்தது. அப்போது கர்நாடக மாநிலத்தில் அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்தும் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தட்டாஞ்சாவடி வழுதாவூர் சாலையில் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் கண்னாடி உடைக்கப்பட்டது.

கோவை நிலவரம்:

கோவை மாவட்டத்தில் பரவலாக பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் சில திறக்கப்படவில்லை. சில பள்ளிகளில் மாணவர்கள் வந்த பிறகு விடுமுறை என அறிவிக்கப்பட்டது. இதனால் பெற்றோர் சிரமத்துக்குள்ளாகினர். அரசுப் பள்ளிகளில் மாணவர் வருகைப் பதிவு மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆட்டோ ஓட்டுநர்க சங்கம் ஆதரவு தெரிவித்திருப்பதால் ஆட்டோக்கள் இயங்கவில்லை. காலை 11 மணி அளவில் கோவை ரயில்வே சந்திப்பில் ரயில் மறியல் நடத்த திட்டமிட்டுள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் காலை 10.30 மணிக்கு கோவை தெற்கு வட்டார ஆட்சியர் முன்னதாக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மதுரை:

மதுரையில் அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கினாலும் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. ஆட்டோக்கள் ஓடவில்லை. தனியார் பள்ளிகளும் ஒரு சில பள்ளிகள் மட்டுமே இயங்குகின்றன. கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருக்கிறது.

தேமுதிகவினர் உண்ணாவிரதம்:

தேமுதிக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பிரேமலதா தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.



சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரேமலதா, தேமுதிகவினர் | படம்:ம.பிரபு.

90 ஆயிரம் போலீஸார்:

மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டம், ரயில், சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதால், தமிழகம் முழுவதும் சுமார் 90 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முக்கிய இடங்களில் அதிரடிப் படையினரும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

படப்பிடிப்பு, காட்சிகள் ரத்து

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தென்னிந்திய நடிகர் சங்கம், பெப்சி, திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு திரைத்துறை அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள், பாடல் பதிவு, டப்பிங், எடிட்டிங் உட்பட அனைத்து பணிகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளில் காலை, மதியக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எதற்காக பந்த்?

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் வன்முறை வெடித்தது. பெங்களூரு உட்பட பல இடங்களிலும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நூற்றுக் கணக்கான வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. தமிழர்களின் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. தமிழர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர்.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் 16-ம் தேதி (இன்று) முழு அடைப்பு, சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அழைப்பு விடுத்தனர். இப்போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, மதிமுக, பாமக, தமாகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மமக, விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

பெங்களூரு ஏன் எரிகிறது?



காவிரி வெறும் நீர்ப் பிரச்சினை மட்டும் இல்லை; ஒரு சமூகவியல் பிரச்சினையும்கூட

அவர்கள் படையாய்க் கிளம்பினார்கள். உடல் மண்ணுக்கு, உயிர் காவிரிக்கு என்ற கோஷம் இல்லை அது. எமக்கு மிஞ்சித்தான் தான தர்மம் என்கிற கோஷமாக கன்னட அமைப்புகள், விவசாயிகள் எழுப்பிய கோபக் குரலாகத்தான் ஆரம்பித்தது அது. எங்களுக்கே குடிக்க நீர் இல்லை, விவசாயத்துக்கு இல்லை எனும்போது தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் காவிரி நீரை 15 நாட்களுக்கு (செப். 5-லிருந்து செப்.20 வரை) விநாடிக்கு 15,000 கன அடி நீர் விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எப்படிச் சொன்னது என்கிற அதிர்ச்சியும் கோபமும் கலந்த எதிர்ப்பாகத்தான் முதலில் இருந்தது. காவிரி நதி நீர்ப் பங்கீடு தீர்பாணையத்தின் வாதமே கர்நாடகத்துக்குப் பாதகமானது, தமிழ்நாட்டுக்குப் பட்சமானது என்கிற அவர்களது/ மற்றும் கர்நாடக அரசுகளின் நிலைப்பாட்டில் 40 வருஷங்களுக்கு மேலாக மாறுதல் இல்லை.

நீர் என்பது உணர்வுபூர்வமான விஷயம். வெறுப்பைக் கக்கும் அபாயம் அதனுடன் பிணைந்திருப்பது. ‘தமிழனுக்கு ஒரு சொட்டு நீர் கிடையாது’ என்கிற வட்டாள் நாகராஜின் வாக்கியம் வெறியேற்றுவது. ஆனால், கன்னட அமைப்புகளே திகைக்கும் வகையில் பிரச்சினை சென்ற வாரம் கைமாறி, தீயாய்ப் பரவி, மாநிலத்தை, அதன் கௌரவத்தைப் பொசுக்கிற்று. ஊரடங்குச் சட்டம் போடும் அளவுக்குத் தகவல் தொழில்நுட்பத் தலை நகரமான பெங்களூரு ரணகளமாகிப் பற்றி எரிந்தது. தொலைக்காட்சிப் பதிவுகளைப் பார்க்கும்போது காட்சிகள் காஷ்மீர் பள்ளத் தாக்கில் நடக்கும் கலவரத்தைவிட மோச மானதாக வயிற்றைக் கலக்கிற்று. 40 வாக னங்களுக்கு மேல் தீக்கு இரையாகிப்போனது நம்ப முடியாத அராஜகமாகத் தோன்றிற்று. அவர்களை அடக்க நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் மரணமடைந்தார்கள். அவர்கள் அப்பாவிகள் என்று செய்தித்தாள் சொல்கிறது.

மீள முடியாத துக்கம்

கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு அதிர்ச்சியிலிருந்தும் துக்கத்திலிருந்தும் மீள முடியவில்லை. இப்படிப்பட்ட அராஜகங்களும் குண்டாயிசமும் நான் வளர்ந்த காலத்தில் நடந்ததில்லை. தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையே இருக்கும் காவிரிப் பிரச்சினை நூறு ஆண்டுகள் பழசு. மழை பொய்க்காத காலங்களில் கபினியில் கரைபுரண்டு வழிந்தோடும் உபரி நீரை கர்நாடகம் தாராளமாகத் தமிழ்நாட்டுக்கு அனுப்பும். மேட்டூர் அணை நிரம்பும். விவசாயிகள் மனம் குளிர்வார்கள். மழை பொய்த்துப் போனால், திரும்ப முளைக்கும் இரு மாநிலங்களுக்குமான தகராறு. ஆனால், இப்போது நாம் காண நேர்ந்தது வெட்கக்கேடான அராஜகம், அட்டூழியம்.

அதை ஊதிப் பெரிதாக்குவது அரசியல் மட்டுமல்ல, பெங்களூருவின் பொருளாதார வரை படத்தை அலைக்கழிக்கும் சமூகவியல் காரணங்களும்தான். வன்முறை என்பது கடந்த 30 ஆண்டுகளாகத்தான். ஒரு சிறு பொறியைக் காரணம் காட்டி வெடிக்க ஆரம்பிப்பது. தமிழ்நாட்டுப் பேருந்துகளை சுட்டுப் பொசுக்கியவர்களுக்கும் காவிரிப் பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை என்பதுதான் இதில் இருக்கும் நகை முரண். தலைக்குத் தலை அம்பலமாக சட்டத்தைக் கைக்குள் எடுத்து ராட்சச வெறியுடன் அலைந்தவர்கள் எல்லாம் கன்னட இளைஞர்கள். விவசாயம் பொய்த்துப்போன கிராமப் பகுதிகளிலிருந்து வேலை தேடித் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமான பெங்களூருவுக்கு வந்தவர்கள். ஆட்டோ ஓட்டிகள், பெட்ரோல் பங்கில் வேலை செய்பவர்கள், வேலை கிடைக்காமல் அலைபவர்கள். 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த பெங்களூரு இல்லை இப்போது. எங்கள் குடும்பம் ஐந்து தலைமுறைகளாக கர்நாடகத்தில் வசிக்கிறது. என்னுடைய தாயும் அவருடன் பிறந்தவர்களும் கன்னடம்தான் படித்தார்கள். என்னுடைய பாட்டி பிசிபேளா ஹுளிஅன்னாவையும் ஒப்பட்டுவையும் செய்து, யுகாதியை, கன்னட வருடப் பிறப்பைக் கொண்டாடுவார். தமிழரும் கன்னடியரும் வெகு இணக்கமாக இருந்த காலம். தமிழர்கள் கன்னட சமூகத்துடன் ஒன்றியிருந்த காலம்.

முகம் மாறிய கன்னடம்

இப்போது இருக்கும் பெங்களூரு தகவல் தொழில்நுடபத் தலைமுறைக்கும் கன்னடி யருக்குமே ஒட்டு உறவு இல்லை. தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி கன்னட முகத்தையே மாற்றிவிட்டது. பூங்காவிலும் மால்களிலும் திரையரங்குகளிலும் கன்னட மொழி காதில் படுவதில்லை. அவர்களுக்கு விளங்காத ஆங்கிலமும் இந்தியும்தான் ஒலிக்கிறது. வறண்ட கிராமங்களிலிருந்து வேலை தேடி பெங்களூரு வந்து வேலை கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்கள் எல்லா வேலைவாய்ப்புகளையும் வெளி மாநிலத்தவர் அபகரித்துவிட்டதாகக் கருத ஆரம்பித்துவிட்டார்கள். தங்கள் வயதொத்த வாலிபர்கள், யுவதிகள் மாதத்துக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் சம்பளம் வாங்குவதாகக் கேள்விப்படுகிறார்கள். பெங்களூருவின் நிலத்தையெல்லாம் வெளியூர் ஆட்கள் வாங்கி, அடுக்குமாடி கட்டுகிறார்கள். தகவல் தொழில்நுடப இளைஞர்கள் வேலைக்குச் சேர்ந்த ஓர் ஆண்டுக்குள் ஃப்ளாட் வாங்கு கிறார்கள். கப்பல் போல வாகனம் வைத்துக் கொள்கிறார்கள். அவர்களது வருகையால் அடுக்குமாடிகள் பெருகிவிட்டன. நிலம், நீர் வறண்டுவிட்டது. குடிசைப் பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்கும்போது, பணம் உள்ளவர்களுக்கு டாங்கரில் நீர் செல்கிறது.

கோபத்தின் வடிகாலா அராஜகம்?

பெங்களூருவின் ஒரு பகுதி அக்னிகுண்ட மாக மாறிவருவதைச் சமூகவியலாளர்கள் கவலையுடன் கவனித்துவருகிறார்கள். கன்னட நடிகர் ராஜ்குமார் இறந்த அன்றும் மறுநாளும் இப்படித்தான் ஒரு வெறியாட்டம் நடந்தது. துக்கம் கோபமாக, வெறியாக உருப்பெற்றது. பன்னாட்டு நிறுவனங்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. தமிழ்நாட்டு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. நான் அப்போதுதான் சென்னையிலிருந்து அங்கு குடிபெயர்ந்திருந்தேன். தமிழ்நாட்டு பதிவுஎண் உடைய என்னுடைய காரை காரேஜில் மூடி வைக்க வேண்டியிருந்தது.

இந்த வெறியர்களுக்கு எந்த உணர்வு பூர்வமான விஷயமும், அவர்களது உள்ளார்ந்த கோபத்துக்கு வடிகாலாகிவிடுவதுதான் சோகம். இது வெறும் நீர்ப் பிரச்சினை இல்லை. ஒரு சமூகவியல் பிரச்சினை. அதன் தீவிரத்தை உணராமல் கன்னட அமைப்பு களும் அரசுகளும் அரசியல் செய்தால் கர்நாடகத்துக்கு மட்டுமல்ல நாட்டுக்கே ஆபத்து. ஜனநாயகப் பண்புகளுக்கு ஆபத்து!

- வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்,
குப்பைகளைத் தொட்டியில் போடுவதற்காக காரில் கொண்டு செல்கிறார் தாயுமானசாமி. | படங்கள்; எஸ்.கிருஷ்ணமூர்த்தி.



காரில் சென்று குப்பை அகற்றும் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி: 81 வயதிலும் சோர்வடையாமல் சேவை- மனநிறைவு கிடைப்பதாக பெருமிதம்

குப்பைக்கூளம் இல்லாத சுத்தமான சுற்றுப்புறத்தில் வாழ்வது இன்று அரிதாகிவிட்டது. பொருளாதா ரத்தை அடிப்படையாகக் கொண்ட இன்றைய இயந்திர வாழ்க்கையில் நிற்க நேரமில்லாமல் ஓடும் மனிதர்கள், சுற்றுப்புறத்தையும், குப்பையையும் கண்டுகொள்வது இல்லை. அக்கறை காட்டுவதும் இல்லை. குப்பை அள்ளுவது நமக்கான வேலை இல்லை என கடந்து செல்கின்றனர். சுத்தம் என்பது, ஒருவர் அணியும் ஆடையில் இல்லை. அவரின் வீடு, சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வதிலேயே இருக் கிறது என்கிறார் மதுரை எல்லீஸ் நகர் வசந்தம் குடியிருப்பைச் சேர்ந்த 81 வயது ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி தாயுமானசாமி.

எல்லோரையும்போல் இவர் சுற்றுப்புறத்தில் கிடக்கும் குப்பை யைக் கண்டு ஒதுங்கிச் செல்ல வில்லை. தினமும் காலையில் துப் புரவுத் தொழிலாளராக மாறிவிடு கிறார். கையில் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு அவர் வசிக்கும் வசந்தம் குடியிருப்பில் துப்புரவுத் தொழிலாளர் போல் குப்பையை அகற்றுகிறார். அடைப்பு ஏற்பட்ட சாக்கடைக் கால்வாய்களில் கையை விட்டுச் சரி செய்கிறார். பாதாளச் சாக்கடையில் குச்சிகளை விட்டு, தடையின்றிக் கழிவு நீர் செல்ல வைக்கிறார். அன்றாடம் இந்த வேலைகள் முடிந்ததும் சேகரித்த குப்பையை, ஒரு வாளியில் கொட்டி காரில் எடுத்துக்கொண்டு குடியிருப்பின் மூலையில் இருக்கும், குப்பைத் தொட்டியில் கொட்டுகிறார்.

இப்பணியை ஏதோ ஒருநாள், இரண்டு நாள் இவர் செய்ய வில்லை. ஓய்வு பெற்ற 1994-ம் ஆண்டு முதல் செய்து வருகிறார். கடந்த சில வாரங்களாக அவரால் சரியாக நடக்க முடியவில்லை என்றாலும், வீட்டில் முடங்கிவிடாமல் வாக்கர் வைத்துக்கொண்டு வழக்கம் போல் குப்பையை அப்புறப்படுத்தி அவர் வசிக்கும் வசந்தம் குடியிருப்பை வசந்தமாக வைத்து வருகிறார்.

இதுகுறித்து தாயுமானசாமி கூறியதாவது: “எனது தாயார் ஆசிரியராக இருந்தவர். இருந் தாலும் விடுமுறை நாட்களில் வயலில் போய் களை எடுப்பார், நாற்று நடுவார். அவரே குப்பையைக் கொண்டு போய் குப்பைக் கிடங்கில் கொட்டுவார். அவரிடம் கற்றுக்கொண்டதுதான் இந்தப் பழக்கம். எங்கள் குடியிருப்புப் பகுதியில் மொத்தம் 107 வீடுகள் இருக்கின்றன. துப்புரவுத் தொழிலாளர்கள் ஒழுங்காக வராததால் தெருக் களில் குப்பை தேங்கும். மாநக ராட்சியில் புகார் செய்தேன். குப்பையை அகற்ற யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல் நானே குப்பையை அகற்றத் தொடங்கினேன். இதில் ஒரு மனநிறைவு கிடைத்ததால் தொடர்ந்து செய்கிறேன். இதற்காக மற்றவர்களின் நன்றியை, பாராட்டை எதிர்பார்ப்பதில்லை.

நான் குப்பையை அகற்றி, காரில் கொண்டுபோய் கொட்டுவதைப் பார்த்து சிலர், இவருக்கு ஏன் இந்த தேவையில்லா வேலை என சொல்வார்கள். எதிரே வரு பவர்களில் சிலர் வெட்கப்பட்டு ஒதுங்கிப் போவார்கள். சிலர், மனம் திருந்தி குப்பையைக் கீழே கொட்டத் தயங்கி அவர்களும் என்னைப் போல் குப்பைத் தொட்டியில் போடத் தொடங்கிவிட்டார்கள். இந்த மனமாற்றம்தான் தேவை. உடனடியாக இது நடக்காது. மெதுவாகவே நடக்கும். அவரவர் வேலைகளைச் சரியாக செய்தாலே சுற்றுப்புறம் தானாகவே சுத்தமாகிவிடும். குப்பையைத் தினமும் அகற்றுவதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. என்னுடைய வயது, முதுமைதான் தடுக்கிறது'' என்றார்.
Admission supervisory committee cancelled the admissions in three medical colleges in Kerala

TIMES OF INDIA

THIRUVANATHAPURAM: Admission supervisory committee for professional colleges in Kerala headed by Justice J M James has cancelled the MBBS admissions in three self-financing medical colleges for lack of transparency in selection of candidates.

The colleges that suffered the heat of the committee areKannur medical college, Karuna medical College and Mount Zion medical college. According to an order issued by the committee here on Thursday, the MBBS admissions carried out by these colleges for 2016-17 academic year stand cancelled for flouting all transparency norms. The colleges have failed to provide flawless online facility for admission and did not furnish full details of the candidates they have admitted to the colleges. However, these colleges can admit students, if they activate their online admission facility and complete the admission procedures transparently by September 19.

The committee had earlier set September 13 as the dead line for colleges to publish the list of candidates applied and selected for the MBBS admission to each of the colleges. Upon inspecting the website of the colleges, the committee has come to the conclusion that the above said three medical colleges have flouted all transparency norms, while three other colleges did not furnish their admission details fully.

Following this, principals of Travancore medical college, P K Das medical college and Sree Gokulam Medical collegs have been asked to furnish all the admission details on today itself ie, September 15, for avoiding further action by the commission.

MBBS admissions to 3 private SFMCs cancelled



The New Indian Express


THIRUVANANTHAPURAM: The Admission Supervisory Committee for Professional Colleges in Kerala headed by Justice J M James on Thursday cancelled the admission to MBBS seats in three private self- financing medical colleges (SFMCs).

Karuna Medical College, Kannur Medical College and Mount Zion Medical College are the three colleges which face action for lack of transparency in candidate selection.

The James Committee also found that three more colleges-- Travancore Medical College, P K DAS Medical College and Sree Gokulam Medical colleges-- had not furnished the admission details fully. These colleges have been asked to furnish the details on September 15 itself.

According to the order of the Committee, the MBBS admissions carried out by Karuna, Kannur and Mount Zion Medical colleges stand cancelled for flouting all norms and compromising the entire admission procedure.

The medical colleges have been directed to call only online applications, the last date being September 19. The Committee stated that the medical colleges have compromised the entire admission procedure by not complying with the directives issued.


Besides, the colleges also flouted various judgments of the High Court and the Supreme Court.

These are constitutional violations and outright rejection of statutory provisions as well, it said. In the case of Sree Gokulam, PK DAS and Travancore Medical Colleges, the committee said that all the required information was not available.

The principals of these colleges have been directed to ensure that all information were made available on their websites, failing which actions as per provisions of Act XIX of 2006 will be resorted to.

The Committee has asked the respective colleges to furnish details of the total individual online applications received by them for admissions to MBBS for 2016-17 fiscal, total list of eligible applicants, complete list of rejected candidates from online applications with reasons for rejection, list of eligible candidates for admission under management and NRI quota prepared strictly based on NEET rank list.

Tuesday, September 13, 2016

உடலைக் காக்கும் உணவு விதிகள்

பரபரப்பான வாழ்க்கையில் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும் செல்கள் வளர்ச்சியடைவதற்கும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவே காரணமாகிறது. அந்த உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனம்கொள்ள வேண்டியது அவசியம். ஆரோக்கியமான இயற்கை உணவுகளைத் தேர்வுசெய்தல், உடலில் சேர்ந்துள்ள அதீத கொழுப்பைக் குறைக்கும் வழிகள், சாப்பிட்ட பிறகு செய்யக் கூடாத விஷயங்கள் உள்ளிட்ட பொதுவான உணவு விதிகள் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள்

இயற்கை வைத்தியத்தில் தாதுஉப்புகள் அதிகம் உள்ள இளங்கீரைகள், புதிதாய்ப் பறித்த இளங்காய்கறிகள், பழங்கள் போன்றவை முதல் தரமான உணவுகளாகும்.


புரதப் பொருட்கள், மாவுப் பொருட்கள், சர்க்கரைப் பொருட்கள், கொழுப்புப் பொருட்கள் உள்ள தானியங்கள், பயிறுகள், கிழங்குகள், பருப்புகள் ஆகியவை இரண்டாம் தரமான உணவுகள். இந்த இரண்டையுமே நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.







சத்தான உணவைவிட ஜீரணிக்கும் உணவே உன்னத உணவு. நோயை உண்டாக்காமல் ஜீரணிக்கக்கூடிய உணவையே உட்கொள்ள வேண்டும்.

உங்கள் உடலைப் பற்றிய புரிதல் அவசியம்.வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்கள் பற்றி தெரிந்துவைத்திருத்தல் அவசியம்.நோய் இருப்பின், அதன் தீவிரம், நோயின் வகை, தவிர்க்க வேண்டிய உணவுகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பழங்கள், காய்கறிகள், கீரைகள், தேங்காய், முளைகட்டிய தானியங்கள், முளைகட்டிய பயறுகள் ஆகியவை உடலுக்கு ஏற்ற உணவுகள்.



தினமும் காலை உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளுக்குத் தேவையான முழு சக்தியையும் காலை உணவே அளிக்கிறது. எந்தக் காரணம்கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

இரவு மிகக்குறைந்த அளவே சாப்பிட வேண்டும். இரவு முடிந்தவரை அரிசி சாப்பாடைத் தவிர்த்து, கோதுமை, ரவை, ராகி, சிறுதானியங்கள் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. இதனால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.





சாப்பாட்டுக்கு இடையே தண்ணீர் குடிக்கக் கூடாது. இதனால், வயிற்றில் சுரக்கும் ஜீரண அமிலத்தின் செயல்திறன் குறையும். செரிமானம் தாமதப்படும்.

அதிகமான அல்லது குறைவான கலோரிகள் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். நமது அன்றாட வாழ்வில் நாம் செய்யும் வேலைகளைப் பொறுத்து நமது உடலுக்குத் தேவையான கலோரிகள் பயன்படுத்தப்படும். பாலினம், வயது, உடல் எடை, பரம்பரை, செரிமானமாகும் நேரம், தினசரி செய்யும் வேலை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட கலோரிகள் தேவைப்படும்.






கொழுப்பைக் கரைக்க சில வழிமுறைகள்

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்தாலே. உடல் எடை வெகுவாகக் குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு, சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் ஆகியவை உதவுகின்றன. இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். இதனால், விரைவிலேயே உடலில் உள்ள கொழுப்புக் குறைந்து, உடல் அழகான வடிவம்பெறும். சுரைக்காய் வயிற்றுச்சதையைக் குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால், சுரைக்காயை வாரத்துக்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வாழைத்தண்டு சாறு பருகலாம். அரும்கம்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.

காலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும்.

உணவருந்திய பிறகு செய்யக் கூடாத செயல்கள்

சாப்பிட்டதும், ரத்த ஓட்டம் நமது வயிற்றுப் பகுதிக்குத் தான் செல்ல வேண்டும். சாப்பிட்டவுடன் வெந்நீரில் குளிப்பதால் சூடான, உடலைக் குளிரிச்சியாக்க, ரத்த ஓட்டம் கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும். இதனால், வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உணவு சரியாகச் செரிக்க முடியாமல் போய்விடும். எனவே, குளித்து அரை மணி நேரம் கழித்துச் சாப்பிடலாம் அல்லது சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிநேரம் கழித்துக் குளிக்கலாம்.

சாப்பிடும்போதோ சாப்பிடும் முன்போ பழங்கள் சாப்பிடக் கூடாது. வயிற்றில் வாயுவை உருவாக்கும். சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களைச் சாப்பிடுவது நல்லது.

சாப்பிட்டதும் தேநீர் குடிக்கக் கூடாது. தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது, உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து, உணவு செரிப்பதைச் சிக்கலாக்கிவிடும்.

சாப்பிட்டதும் புகை பிடிக்கக் கூடாது. 'உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்குச் சமமான விளைவை ஏற்படுத்தும்' என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

சாப்பிட்டதும் இடுப்பு பெல்ட்டைத் தளர்த்தக் கூடாது. தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்ட பிறகு இடுப்பில் உள்ள பெல்ட்டை தளர்த்திவிடுவார்கள். இதனால், சாப்பிட்ட உணவு உடனடியாகக் குடலுக்கு சென்று விழுவதால், சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.

சாப்பிட்டதும் நடக்கக் கூடாது. சாப்பிட்ட உடனே நடந்தால், உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால், உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால், சாப்பிட்டும், சத்துகள் நம் உடலில் சேராது.

சாப்பிட்டதும் தூங்கக் கூடாது. சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் உருவாக வழிவகுக்கும்.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

Dailyhunt

வெற்றி வேண்டுமா? இந்த 5 மந்திரங்களை மறக்கவேண்டாம்! #MorningMotivation


தன்னம்பிக்கை, சுய முயற்சி, முறையான பயிற்சி, பணியில் ஒழுக்கம் இந்த நான்கும் இருந்தால் நிச்சயம் எந்தவொரு விஷயமும் சாத்தியமானதே. நம் வாழ்க்கைக்கான ரோல் மாடல்களை இணையத்தில் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை, நம் ஊரில், நம் அருகில் எவ்வளவோ பேர் உதாரண புருஷனாக வாழ்ந்துகாட்டியிருக்கிறார்கள். ஆனால் நாம் மட்டும் தான் சின்ன சின்ன தோல்விகளை கூட சந்திக்க திராணியில்லாமல் முடங்கிப்போய் விடுகிறோம். சோர்வை விட்டொழித்து மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, நீங்கள் விரும்பிய விஷயத்தை அடைய ஐந்து மந்திரங்களை மனதில் பதிய வையுங்கள்.


1. இடர்பாடுகள் தான் வாய்ப்புகள் : -

எதைச் செய்தால் வெற்றி கிடைக்கும் என கண்டுபிடிப்பதை விட, எதைச் செய்தால் வெற்றி கிடைக்காது என அறிவது புத்திசாலித்தனம். மின்சாரம் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த எடிசன் கிட்டத்தட்ட பத்தாயிரம் முறை தோல்விகளை சந்தித்தாராம். அவரது நண்பர் ஒரு நாள் அவரைச் சந்தித்தார். ஏனப்பா ? இவ்வளவு முயற்சி எதற்கு? எல்லாமே வீண் தானே, அதற்கு உருப்படியாக வேறு எதாவது செய்யலாமே என அட்வைஸ் செய்ய, " என்ன செய்தால் மின்சாரம் வரும் என்பதை மட்டும் தான் இன்னும் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் இந்த பத்தாயிரம் மாதிரிகளில் நிச்சயம் மின்சாரம் வராது என கண்டுபிடித்திருக்கிறேன். ஆக நான் பத்தாயிரம் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறேன்" என்றாராம் எடிசன். அது தான் ஆட்டிடியூட். தோல்வி என்பதன் அர்த்தத்தை வெற்றிக்கு தவறான வழியை கண்டறிந்துள்ளோம் என புரிந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான்.


2. என் இலக்கை நானே தீர்மானிப்பேன் :-

உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு உயரத்தை எட்ட வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். வெற்றியோ, தோல்வியோ எல்லாத்துக்கும் நீங்கள் தான் பொறுப்பு. சாக்கு போக்கு சொல்வதை விட்டுவிட்டு உங்கள் இலக்கை தீர்மானித்து அதற்கான கதை, திரைக்கதை எல்லாம் பக்காவாக தயார் செய்து உங்களை நேர்மையாக இயக்குங்கள்; உங்கள் வாழ்க்கை நிச்சயம் வெற்றி அடையும்.


3. நல்ல எண்ணங்களே நனவாகும் ; -

எண்ணம் போல்தான் வாழ்வு என்பதை முன்னோர்களை பல விதங்களில் சொல்லியிருக்கிறார்கள். அது நிஜம். பாசிட்டிவ் மைண்ட்செட் தான் 'ஸ்பீடு' ஊக்க மருந்து. பல சமயங்களில் பாசிட்டிவ் மைண்ட்செட்டில் எக்கச்சக்க சாதனைகளை பலர் புரிந்திருக்கிறார்கள். எனவே உங்களை தயவு செய்து நம்புங்கள். நீங்கள் வெற்றி தேவதையின் கைகளில் தவழத் தகுதியானவர் என்பதை நினைவில் வையுங்கள்.

4. நேரமே வரம் : -

'நன்றே செய் அதை இன்றே செய்' இதையும் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிவிட்டு சென்றது தான். நல்ல விஷயங்களை செய்ய எப்போதும் நேரம், காலம் பார்க்காதீர்கள். எந்தவொரு முடிவையும் விரைவாக எடுத்துச் செயல்படுங்கள். ஒரு விஷயத்தை புதிதாக முயற்சித்து தோல்வியடைந்தால் கூட பரவாயில்லை, முயற்சிக்காமல் வெறுமனே தரையை தேய்க்க வேண்டாம். இந்த உலகத்தில் எதையும் யார் வேண்டுமானாலும் வாங்கி விட முடியம், ஆனால் நேரம் மட்டும் தான் சாதி, மதம், பணக்காரன், ஏழை என பாகுபாடு இல்லாமல் எல்லாருக்கும் சமமாக இருக்கிறது.நேரத்தை சரியாக பயன்படுத்துபவனே வெற்றியாளன் ஆகிறான்.


5. எதையும் கவனமாக தேர்ந்தெடுங்கள் :-

எந்தவொரு விஷயத்தையும் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் தேவை. நம்மால் தான் எதுவும் சாத்தியமே என நடுக்கடலில் குதிப்பதோ, பத்தாவது பெயிலாகி விட்டு மருத்துவ கல்லூரி வாசலில் நிற்பது போன்ற அபத்தங்களை செய்துவிடக் கூடாது. நீங்கள் எதுவாக விரும்பினாலும், அதன் பின் உள்ள சாதக பாதக அம்சங்களை ஆராய வேண்டும். வெற்றிக்கான வழியை பக்காவாக ஸ்க்ரிப்ட் செய்ய வேண்டும். அதன் பின் தான் களத்தில் இறங்க வேண்டும். இப்போது, இந்த ஐந்து விஷயங்களை ஒன்ஸ்மோர் படியுங்கள்.

- பு.விவேக் ஆனந்த்

NEWS TODAY 23.12.2025