Saturday, October 1, 2016

அறிவியல் அறிவோம்: வயதாவதைத் தள்ளிப்போட முடியுமா?

த.வி.வெங்கடேஸ்வரன்

அண்ணன் வயதுடையவருடன் நடந்து செல்கையில், நம்மைப் பார்த்து “நீ தான் மூத்தவனா” என்று யாராவது கேட்டால் எப்படியிருக்கும்?

இந்த விஷயத்தை நுணுக்கமாக ஆராய்ந்திருக்கிறார் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த டியூக் பல்கலைக்கழகப் பேராசிரியர் டானியல் பெல்ஸ்கை. “உங்கள் வயதும், உடல் மூப்பும் ஒன்றல்ல! நீங்கள் பிறந்து 38 வயது ஆகியிருக்கலாம். ஆனால், உங்கள் உயிரியல் வயதானது ஏழெட்டு ஆண்டுகள் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம்” என்று அடித்துச் சொல்கிறது அந்த ஆய்வு.

ஆய்வு எப்படி நடத்தப்பட்டது என்று கேட்கிறீர்களா? நியுசிலாந்து நாட்டில் 1972 மற்றும் 1973-ல் பிறந்த ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொருவரின் உடலியக்க மாற்றமும் அளக்கப்பட்டது. இடையில் கொஞ்சப் பேர் இறந்துவிட்டாலும்கூட, ஆய்வு நிற்கவில்லை. பிஎம்ஐ எனப்படும் உடல் நிறை குறியீட்டெண், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு போன்ற பதினெட்டு உடலியக்க குறிகளைத் தொடர்ந்து அளந்து பதிவு செய்தனர். இப்படி அவர்களது 26 வயது, 32 வயது, 38 வயது என்று தொடர்ந்து சேகரிக்கப்பட்ட புள்ளியியல் விவரங்களைக் கொண்டு, மூப்படையும் வேகத்தைக் கணக்கிட்டனர். அதில், எல்லா மனிதர்களும் ஒரே சீராக மூப்படைவதில்லை என்று அறியப்பட்டது. சிலர் ஆண்டுக்கு 1.2 என்ற வேகத்தில் மூப்படைந்தனர். அதாவது, 38 வயதில் இவர்கள் நாற்பதரை வயதுக்காரர்கள் போல் மாறிவிட்டார்கள். சிலரின் மூப்பு வேகம் குறைவாக இருந்தது. அதாவது, 38 வயதிலும் 32 வயதுக்காரர்கள் போல் இருந்தார்கள்.

மூப்படைந்தவர்களை இளைஞர்களுடன் ஒப்பிட்டு, அவர்களது உடலியல் செயல்பாடுகளில் பல வேறுபாடுகளைக் கண்டறிந்துள்ளனர். அதாவது, நம் உடலின் எரிசக்தி நிலையம் போலச் செயல்பட்டுச் செல்களுக்கு உள்ளே இருந்து ஆற்றலை வழங்குகிற மைடோகாண்ட்ரியா (Mitochondrion) எனப்படும் இழைமணி மூப்படைந்தவர்களிடம் சிதைந்துபோய் விடுகிறது. இளைஞர்களிடம் வைக்கோலை முறுக்கியது போலக் காணப்படும் டிஎன்ஏ மூலக்கூறு இழைகள், மூப் படைந்தவர்களிடம் நைந்துபோன தென்னை நார் போலக் காணப்படுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தமானது வடிகட்டித்தான் அனுப்பப்படும். ஆனால், மூப்படைந்தவர் களுக்கோ இந்த வடிகட்டியில் கசிவு காணப்படுகிறது.

ஆனாலும், எதனால் தூண்டுதல் ஏற்பட்டு மூப்பு இயக்கம் செயல்படுகிறது என்பதை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எனவே, எப்படித் தலை நரைப்பதைத் தடுத்துவிட்டால், மூப்பின் வேகத்தைக் குறைக்க முடியாதோ அதைப்போல இந்த ஒவ்வொரு உடலியக்க செயல்பாட்டைச் சரி செய்வதன் மூலம் ஒருவரின் மூப்பைத் தள்ளிப்போட முடியாது என்று முடிவுக்கு வந்துள்ளனர் ஆய்வாளர்கள். ஆனாலும், இந்த ஆய்வு இளமையை நீட்டிக்க உதவும் என்றும் நம்புகிறார்கள்.

அப்புறம் என்ன, யார் இளமையாக இருப்பது என்று அண்ணன், தம்பிக்குள் நடக்கிற போட்டியில் அப்பாக்களும் பங்கேற்கும் காலம்தான் இனி!

- த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் விஞ்ஞானி. தொடர்புக்கு: tvv123@gmail.com

Health varsity awaits legal opinion on SC order

THRISSUR: The Kerala University of Health Sciencesis waiting for legal opinion on the implications of the reported order pronounced by the Supreme Court on Friday, extending the date of completion of the medical admission process to October 7 from September 30.

However, the university has announced its decision to extend the last date for completion of the admission process in the dental colleges to October 7 instead of September 30, as was announced earlier.

The officials said this was because the Dental Council of India has communicated to the University about the postponement of the admission completion date.

"In the case of admissions to the medical courses, the university website will be closed this midnight as we have not yet received any legal communication about the latest Supreme Court order. If we get any communication on Saturday on the reported Supreme Court decision extending the deadline for completion of the admission, we will reopen the website. Then the college authorities will be able to register the details of the latest list of students on the website, till October 7," the university official said.

HC orders disbursal of PF to Inspector not allowed to retire

THE HINDU

SPECIAL CORRESPONDENT

A Division Bench in the Madras High Court Bench here has dismissed a writ appeal preferred by Deputy Inspector General of Police, Tiruchi Range, challenging a single judge’s order to disburse provident fund and earned leave encashment amount to an Inspector of Police who was not allowed to retire from service in February 2007 pending departmental enquiry as well as criminal prosecution on charges of demanding and accepting a bribe of Rs.6,000.

A Division Bench of Justices M. Sathyanarayanan and V.M. Velumani dismissed the appeal on the ground that provident fund and encashment of earned leave were benefits to which the Inspector S.P. Selvaraj would be entitled to even if he was ultimately dismissed from service on being found guilty either in the departmental enquiry or the criminal proceedings.


The only two benefits to which he would not be entitled to, in such a case, were gratuity and pension.

Thursday, September 29, 2016

காலம் மாறிவிட்டது

By வாதூலன் | Last Updated on : 29th September 2016 01:00 AM | அ+அ அ- |

ஆறு மாதம் முன்பு, என் உறவினரின் பேரன் திருமணம் நடந்தது. இந்தச் சுப நிகழ்வையொட்டி, எல்லாரையும் சந்தித்துப் பேசலாமென்று நினைத்திருந்தேன். ஆனால், குறிப்பிட்ட நாளன்று உடல்நலக் குறைவால், அந்தத் திருமணத்துக்குப் போக முடியவில்லை.
அன்பளிப்பாக ரூ.500 அனுப்பி வைத்தேன். இரண்டு நாள் கழித்து போனில் பேசினேன். "உங்கள் செக் கிடைத்தது. நீங்கள் எல்லாரும் வருவீர்கள் என்று ரொம்ப எதிர்பார்த்தேன்' என்று உளமாரச் சொன்னது, எனக்குத் திருப்தியாக இருந்தது.
ஆனால் அந்தக் காசோலை கணக்கில் பற்று ஆகவேயில்லை. மூன்று மாதக் காலக் கெடு நெருங்கிக் கொண்டிருந்தது.
உறவுக்காரப் பெண்மணியிடம் விசாரித்தபோது, "பையனிடம் கொடுத்தேன். இப்போது அவன் வீட்டிலில்லை, போன வாரம்தான் அவர்கள் இலங்கையிலிருந்து வந்தார்கள்!' என்றார். குரலில் அலுப்பு தொனித்த மாதிரி இருந்தது.
ஒரு வழியாகக் காலாவதி தேதிக்கு மூன்று நாள் முன் காசோலை பற்று ஆகியது. கிரிக்கெட் பந்தயத்து ஆட்டக்காரர் கோட்டைக் கடைசி நிமிடத்தில் தொடுவது போல.
இதேபோல வேறொரு நிகழ்ச்சி. என் நெருங்கிய பள்ளி நண்பனின் தம்பி இல்லத்தில் ஒரு விழா. அதற்கான அழைப்பிதழ் வந்த அன்றே, போக இயலாதென்று புரிந்துவிட்டது. ஏனெனில் வேறு ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம். வழக்கம்போல, கடிதத்துடன் காசோலையும் அனுப்பினேன்.
விழா முடிந்த மறுநாள் அவனே தொலைபேசியில் பேசினான். "என்ன? வராமலே இருந்து விட்டீர்கள்? பழைய எம்.ஸிடி. ஸ்கூல் சினேகிதர்களை பார்த்திருக்கலாமே? எழும்பூர் "ப்ரெண்ட்ஸ்' நிறைய பேர் வந்திருந்தார்கள்' என்று சொல்லிக் கொண்டே போனவன், பேச்சோடு பேச்சாகக் காசோலை கிடைத்த விஷயத்தையும் தெரிவித்தான்.
ஆனால், இங்கு என்ன ஆயிற்றென்றால், காசோலை பற்று ஆகவே இல்லை. அதாவது வங்கியில் சேர்க்கப்படவேயில்லை! என் மனக்குறையை நண்பனிடம் புலம்பித் தீர்த்தேன்.
"உன் தம்பி அடிக்கடி அமெரிக்கா போய் விட்டு வருகிறவன். என், 500 ரூபாய் அற்பமாகத் தோன்றியிருக்கும்! அதனால்தான்' என்று கூறினேன். நண்பன் என்னைச் சமாதானம் செய்தான். "சே! அப்படி நினைக்காதே. சோம்பேறித்தனமாயிருக்கும். நீ தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது' என்று தம்பிக்குப் பரிந்து பேசினான்.
அலுவலக நண்பனிடம் ஏதோ சந்தர்ப்பம் வரும்போது இதைப் பகிர்ந்து கொண்டேன். அவனுடைய பார்வை கொஞ்சம் வேறு விதமாக இருந்தது.
"அன்பளிப்பாகச் செக்கோ, பொருளோ தந்துவிட்டால், அதோடு நம் பங்கு முடிந்துவிட்டது. அதை எப்படிப் பயன்படுத்துகிறார்களென்று கவனிப்பது நம் வேலை இல்லை!' என்றான்.
முற்றிலும் உண்மைதான். ஆனால் என் சினேகிதனின் தம்பி காசோலையை ஒரு பொருட்டாகவே கருதவில்லையே? அலட்சியமாக இருந்ததால்தானே சாவகாசமாய் வங்கியை அணுகியிருக்கிறான். "இதே செக் 50 டாலராயிருந்தால் இது போலிருந்திருப்பானா?' என்ற கேள்வியும் என்னுள் எழாமலில்லை.
என் மனைவி ஆறுதலாகச் சொன்னாள், "இப்போதெல்லாம் கல்யாணமானவுடன் மணமக்கள் வெளிநாட்டுக்கு தேனிலவுக்காக போகிறார்கள். கிரகப்பிரவேசம் செய்தால், புது வீட்டுக்கு பர்னிச்சர் வாங்க அலைகிறார்கள்! அந்த நாள் மாதிரியா?' என்று ஏக்கப் பெருமூச்சுவிட்டாள்.
அதன் அர்த்தம் எனக்குப் புரிந்தது. 40 வருடம் முன்பு புதுமனை புகுவிழா கொண்டாடியபோது, என் சித்தி அளித்த "மில்க் குக்க'ரை ரொம்ப வருடம் பயன்படுத்தி வந்தோம்.
இன்று காலம் மிகவும் மாறிவிட்டது. எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும், பளபளக்கும் விளக்குகள், வண்ணமயமான அலங்காரங்கள், விடியோ வெளிச்சம் போன்றவை நீக்கமற நிறைந்திருக்கின்றன.
நிதானமான கனிவான விசாரிப்புக்குப் பதில், அவசர கை குலுக்கல்கள்; தம்பதிகளை மனமாரப் பாராட்டுவதற்குப் பதில் அவர்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது. இடையிடையே வரும் செல்லிடப்பேசி அழைப்புகள்.
பரிசுப் பொருள்கள் மேடையில் ஒரு மூலையில் குவிகின்றன. காசோலையோ வேறு உறையோ பெறுகிறவர்கள் விரைவாகக் குறித்துக் கொள்கிறார்கள்.
ஆக சகல மதிப்பீடுகளும் மாறிவிட்டன. இது குடும்பத்தில் மாத்திரமல்ல. அரசியல், திரைப்படம், விளையாட்டு போன்ற பிற துறைகளிலும்தான்.
ஒரு சின்ன உதாரணம். சில நாள் முன்பு பிரபல ஆங்கில நாளேட்டில், கிரிக்கெட் ஆட்டக்காரர் ஸி.டி. கோபிநாத் (86 வயது), 1952-இல் தாங்கள் முதன் முதலாக இங்கிலாந்தை வெற்றி கொண்டதை நினைவுகூர்ந்த கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.
"வெற்றி பெற்றவுடன் மாற்றுக் கட்சியிடம் கைகுலுக்கி விட்டு ஓட்டலுக்குத் திரும்பி விட்டோம். மேலே குதிப்பது, கீழே புரள்வது போன்ற செய்கைகள் இல்லை.
"விருந்து உண்டா?' என்று யாரோ கேட்டார்கள். அன்று, எங்களிடமும் சரி, வாரியத்திடமும் சரி அதற்குச் செலவு செய்ய தொகை இல்லை!' என்று கூறியிருக்கிறார். அந்த வெற்றியில் கோபிநாத்துக்கு முக்கிய பங்களிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன், 33 ஆண்டுகளுக்கு பின், கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பை வென்றபோது, பெரும் ஆர்ப்பாட்டம் இருக்கவில்லை.
இன்று, கணினியும், நவீன ஊடக வசதிகளும் அனைவரது வாழ்க்கையையும் ஒரு புரட்டு புரட்டியிருக்கிறது. "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்' என்ற குறள் ஓரளவுக்குப் பொருந்தும்தான்.
வயதானவர்கள் சில தன்மைகளை அனுசரித்துச் சகித்துக் கொள்ளும் பக்குவம் பெற வேண்டியதுதான். அதேபோல், இளைஞர்களும் பழைய உயர் பண்புகளையும் நல் மதிப்பீடுகளையும் பேணிப் போற்றக் கற்றுக்கொள்வது உசிதம்.

மரத்துப் போயிற்றா மனிதம்?

By தி. இராசகோபாலன்  |   Last Updated on : 29th September 2016 01:01 AM  |

அடிமைப்பட்டிருந்த இந்தியாவில் வாழ்வதற்குத் தான் வழி தெரியவில்லை. ஆனால், விடுதலை பெற்ற நாட்டில் சாவதற்கும் வழி தெரியவில்லையே? சாரிசாரியாகச் செல்லுகின்ற எறும்புகளில் ஒரு எறும்பு செத்துப் போய்விட்டால், மற்ற எறும்புகள் செத்த எறும்பை எடுத்துக்கொண்டு செல்கின்றன. காக்கைக் கூட்டத்தில் ஒரு காக்கை மின்சாரக் கம்பியில் அடிபட்டு விழுந்தால், உடனே மற்ற காக்கைகள் எல்லாம் கரைந்து கூடி, அடிபட்ட காக்கையை உயிர்ப்பிக்க முயலுகின்றன.
ஆனால், ஒடிஸா மாநிலத்தில் ஆதிவாசி ஒருவருடைய மனைவி மருத்துவமனையில் மாண்டால், அவரே தன் தோளில் தூக்கிப் போக வேண்டியிருக்கிறது.
அண்மையில் கான்பூரிலும் நபரங்காபூரிலும் மருத்துவமனைகளில் செத்த பிணங்களுக்கு வாகன வசதி செய்து தரப்படாமல், உரியவர்களே தோளிலும், சைக்கிளிலும் தூக்கிக்கொண்டு போன நிகழ்ச்சிகள், மனித வர்க்கத்தின் மேல் படிந்த கரும்புள்ளிகள் எனலாம்.
"கத்தும் பறவை கனிமரத்தில் வந்து, ஒற்றுமை காட்டிடுதே - தலைப்பித்தம் பிடித்தொரு கூட்டம் தனித்தனி பேதம் வளர்த்திடுதே' எனும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடிய பாடல், சாகாவரம் பெற்றதாகும்.
கான்பூரில் தரித்திரத்தோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் ஏழைத் தொழிலாளி, சுனில்குமார். அவருடைய 12 வயது மகன் அம்ஷ பிறவி நோயாளி. 26.08.2016 அன்று அம்ஷ உயிருக்குப் போராடும் நிலைமை ஏற்படவே, சுனில்குமார் அவனைக் கான்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்.
அங்கிருந்த அரசு ஊழியர்கள் நிலைமையின் விபரீதத்தை உணராமல், அடுத்திருந்த குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துப் போகும்படி பணித்தனர். குழந்தைள் நல மருத்துவமனையில் உடனடி சிகிச்சை தராமையால், அச்சிறுவன் அங்கேயே இறக்க நேர்ந்தது. அக்குழந்தையை எடுத்துச் செல்ல ஆம்புலன்சும் தர மறுத்தனர். அதனால், அம்மகனை அத்தந்தை தம் தோளில் சுமந்துகொண்டே வீடு சென்றிருக்கின்றார்.
ஊடகங்களில் செய்தி பரவிவிடவே, மாநிலமே அதிர்வலைகளைச் சந்தித்தது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், அம்மருத்துவமனையின் தலைமை அதிகாரியை இடைநீக்கம் செய்தார். என்றாலும், மனிதம் மரத்துவிட்டதே!
மரித்த உடலை எப்படி மதிப்பது என்பதை உலகிற்குச் சொல்லிக் கொடுத்த நாடு, நம் நாடு. இராவணன் மாண்டவுடன், இராமபிரான் வீடணனை அழைத்து, "வீடணா! "நீ என் தம்பிதான் என்றாலும் வன்மத்தை விட்டுவிட்டு, விதி நூல்களில் என்னென்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அவற்றின்படி போர்க்களத்தில் மாண்டு கிடக்கின்ற உன் அண்ணனாகிய இராவணனுக்கு ஈமக்கடன்களைச் செய்வாயாக' எனக் கட்டளையிடுகிறான். வான்மீகியும், "பகைமைகள் மரணத்தை முடிவாக உடையன' என வீடணனை நோக்கி மொழிகிறார்.
உயிரற்றவர்களின் உடலை மதிக்க வேண்டும், மரியாதை செய்ய வேண்டும் என அழுத்தமாக வற்புறுத்த நினைத்த ஈட்டுரையாசிரியர் நம்பிள்ளை ஓர் அற்புதம் செய்தார்.
இராவணன் அண்ணன் இல்லை இராமன்தான் அண்ணன் என்பதை வீடணன் "களவியல் அரக்கன் பின்னோ தோன்றிய கடன்மை தீர்ந்தது' (பாடல்: கம்பன், 6506) எனும் வாக்குமூலத்தின் மூலம் புலப்படுத்துகின்றான். இராவணன் அண்ணன் இல்லை என்றாகிவிட்டபிறகு எப்படி ஈமக்கடன் செய்வது எனத் தயங்குகின்றான் வீடணன்.
"வீடணா, இராவணனுக்குக் கைங்கர்யத்தை நீ செய்கிறாயா அல்லது நான் செய்யட்டுமா நீ என் தம்பி இவன் உன் அண்ணன் ஆகவே இவன் எனக்கும் உறவினன் ஆவான்' எனச் சொல்லி இராமபிரான் எழுந்தபோது, பதறிப்போன வீடணன் நீர்க்கடனை நிறைவேற்ற எழுந்தானாம். இது நம்பிள்ளையின் ஈட்டுரை.
இவர்கள் எல்லாம் மனிதம் உரத்துப் போன மாமனிதர்கள்; மரத்துப்போன மனிதர்கள் அல்லர்.
இராமாயணத்தைப் போலவே மகாபாரதமும் நீத்தார்க் கடனாற்றுவதை நேர்த்தியாக எடுத்துரைக்கின்றது. பத்தாம் நாள் போரின்போது, பீஷ்மருக்கு இவ்வுலக வாழ்வை நீக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து, வில்லைக் கீழே போடுகிறார்.
அர்ச்சுனனுடைய அம்புகள் ஒன்றன்மேல் ஒன்றாக அவர்மேல் தைக்கவே, "அர்ச்சுனா என்னுடல் மண்மகள் மீது படக்கூடாது. அதனால் சரப்படுக்கை அமைத்து, அதன்மேல் கிடத்துவாய் மேலும் இது தட்சணாயணம் உத்தராயணத்தில்தான் நான் மோட்சத்திற்குச் செல்ல வேண்டும்' எனப் பணிக்கின்றார்.
பீஷ்மர் பகைவர்களின் கூடாரத்தைப் சேர்ந்தவர் என்றாலும், அர்ச்சுனன் ஆச்சாரியன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுச் சரப்படுக்கை (அம்புப் படுக்கை) அமைக்கிறான். சரப்படுக்கையில் நினைவற்று இருக்கும் உடலைப் பஞ்சபாண்டவர்கள் மாற்றி மாற்றிக் காவல் காக்கின்றனர்.
அந்நேரத்தில் பீஷ்மர் "விஷ்ணு சகஸ்ரநாம'த்தை வாய்விட்டு ஓதத் தொடங்குகிறார். அதனை கண்ணன் சரப்படுக்கைக்குக் கீழே கைகட்டி அமர்ந்து கேட்கத் தொடங்குகிறான். கண்ணன் அமர்ந்தவுடன் தருமன் உட்பட அனைவரும் கீழே அமர்ந்து செவிமடுக்கின்றனர்.
இதனால், உயிர்நீத்துக் கொண்டிருக்கும் உடலை, நம் மூதாதையர் மதிக்கக் கற்றதோடு, துதிக்கவும் கற்றவர் என்பது வெளிப்படுகின்றது.
இந்திய மரபினரைப் போலவே அயல்மரபினரும்கூட புகழுடம்புகளை மதித்தவர்கள்தாம்.
ஒருமுறை நபிகள் நாயகம் தம் சீடர்களோடு திண்ணையில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அவ்வழியே ஒரு யூதருடைய இறுதி யாத்திரை போய்க் கொண்டிருக்கிறது. அதனைக் கண்ட நபிகள் நாயகம் எழுந்து நின்று, தலை குனிந்து மெளனம் கடைப்பிடிக்கின்றார்.
அந்த ஊர்வலம் கடந்தவுடன் சீடர்கள், "பெருமானே அது நம்முடைய ஜென்மப் பகைவன் யூதனுடைய பிணமாயிற்றே அதற்கு எதற்கு மரியாதை' என்றனர். அதற்குப் பெருமானார், "பிணத்தையே மதிக்கத் தெரியாத நீங்கள் எப்படி மனிதனை மதிக்கப் போகிறீர்கள்' எனக் கடிந்து கொள்கிறார்.
இரண்டாம் உலகப் போரின்போது, இங்கிலாந்தில் இனம் தெரியாதவன் இறந்து கிடந்தால்கூட ஆங்கிலேயர்கள் அவ்வுடலைச் சகல மரியாதைகளோடு, "பெயர் தெரியாத வீரனுக்கு' என்று மலர்வளையம் வைத்து அடக்கம் செய்தனர்.
ஆனால், நம்முடைய புண்ணிய பாரதத்தில், ஒடிஸாவில் இரண்டு ஏழை இளைஞர்கள் இறந்துபோன தங்கள் குடும்பத்துப் பெண்ணை மருத்துவமனையிலிருந்து பருயமுண்டா கிராமத்திற்கு ஏற்றிக் கொண்டு போக ஆம்புலன்ஸ் வசதி கேட்டிருக்கின்றனர்.
அதற்கென விதிக்கப்பட்ட தொகையினைக் கேட்டு, ஏதுமில்லாத அந்த ஏழை இளைஞர்கள், சைக்கிளில் அவ்வுடலைக் கிடத்தி, 30 கி.மீட்டர் தொலைவுக்கு எடுத்துக்கொண்டு போயிருக்கின்றனர்.
இத்தனைக்கும் அம்மாநில முதல்வர் 'மஹாபிரயாணா' எனும் பெயரில் 40 ஆம்புலன்ஸ் வேன்களை வாங்கி, பெரிய மருத்துவமனைகளில் நிறுத்தியிருக்கிறார்.
இதயத்தை முள்ளின் முனையில் நிறுத்தக்கூடிய ஒரு கொடூரம், அதே ஒடிஸா மாநிலத்தின், நெடுவழிச்சாலையில் நிகழ்ந்தேறியிருக்கிறது.
ஒடிஸா மாநிலத்தில் கலாஹண்டி மாவட்டம், மெல்காரா கிராமத்தில் தனா மஜி எனும் ஆதிவாசி வாழ்ந்து வருகிறார். அவருடைய மனைவி அமாங்தீ ஒரு காசநோயாளி.
காசநோயால் கடும் பாதிப்புக்குள்ளான தம் மனைவியை 60 கி.மீ. தொலைவிலுள்ள பவானி பட்னா மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார், தனா மஜி. அன்று இரவு அமாங்தீ, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்துவிட்டார்.
கலாஹண்டி மாவட்டம் வறண்ட பூமியில்லை என்றாலும், வாங்கும் சக்தியில்லாத காரணத்தால், அங்குள்ள பழங்குடியினர் கடந்த இருபதாண்டுகளாகப் பசி, பட்டினியில் மடிந்து வருகின்றனர்.
அத்தகைய பழங்குடியினத்தைச் சேர்ந்த தனா மஜி கையில் காசு கிடையாது. தம்மனைவியை 60 கி.மீ. தொலைவுக்கு எடுத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் வேண்டியிருக்கிறார். ஆனால், செக்யூரிட்டிகளும், ஆண் செவிலியரும் அவ்வசதியை மறுத்ததோடு, இரவோடு இரவாகப் பிணத்தை அப்புறப்படுத்தும்படியும் கட்டாயப்படுத்தியிருக்கின்றனர்.
வேறு வழி தெரியாத அந்த ஏழை அபலை, மனைவியின் உடலை ஒரு லுங்கியில் சுற்றி எடுத்துக்கொண்டு, தம்முடைய 12 வயது மகள் சானடெய் மன்கி பின்தொடர தம் கிராமத்தை நோக்கி இரவோடு இரவாக நடக்கத் தொடங்கிவிட்டார்.
அப்படி அவர் நடந்து 16 கி.மீட்டரைத் தாண்டிய பின், அந்த வட்டாரத்தைச் சேர்ந்த பத்திரிகை நிருபர்கள் அவரைப் பார்க்க நேர்ந்தது. அவர்கள் அதனை சட்டப்பேரவை உறுப்பினர் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றனர். அவர் உடனடியாக ஓர் ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்து, மெல்காரா கிராமத்திற்குப் பயணப்பட ஏற்பாடு செய்திருக்கிறார்.
மறுநாள் அச்சோகக் காட்சியைப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன. என்றாலும், செக்யூரிட்டிகளுக்கும் மருத்துவமனைச் சிப்பந்திகளுக்கும் மனிதநேயம் எங்கே போயிற்று? மரத்துப் போயிற்றா மனிதம்?

Wednesday, September 28, 2016


NEET: Supreme Court orders combined counselling in Maharashtra

The court also said the admissions already made would not get affected


NEET: Supreme Court orders combined counselling in Maharashtra

The court also said the admissions already made would not get affected

In a major relief to the students, the Supreme Court today ordered for combined counselling for all unfilled medical seats in Maharashtra.

The court also said the admissions already made would not get affected. Thousands of medical students, who cleared National Eligibility-cum-Entrance Test (NEET) this year, have already got seats in various colleges.

The apex court also said the admission process have to be completed by October 7.

With this decision, confusion over admission to private and deemed universities in the state is cleared. The deemed universities argued the state government is violating their fundamental right to administer their own institutions and hold individual counselling for students.

As per reports, 85 per cent of seats was already filled.

In another case, the apex court refused to interfere in any admissions already made by the medical colleges in Kerala
மணமான பெண் வீட்டுக்கு பெற்றோர் போகலாமா?

புதுடில்லி: திருமணமான பெண் குடியிருக்கும் கணவரின் வீட்டுக்கு, அந்தப் பெண்ணின் பெற்றோர் செல்ல முடியுமா என்பது குறித்து, டில்லி கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், டில்லி செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, விகாஸ் தல் அளித்த தீர்ப்பு: கணவன் மற்றும் அவருடைய குடும்பத்தாருடன் இந்தப் பெண்ணுக்கு பிரச்னை உள்ளது; அதே நேரத்தில், அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். 'பெண்ணின் பெற்றோர், எங்கள் வீட்டுக்கு வரக் கூடாது' என, கணவர் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக விசாரித்த கீழ் கோர்ட், 'திருமணமான பெண்ணின் பெற்றோர், கணவர் வீட்டிற்கு வர உரிமை இல்லை' என, கூறியுள்ளது. இந்த தீர்ப்பை ஏற்க முடியாது. மனிதன் ஒரு சமூக விலங்கு; உறவுகளோடு சேர்ந்து, இணக்கமாக வாழ வேண்டும். திருமணமான பெண் தங்கியிருக்கும் வீட்டுக்கு, அவளது பெற்றோர் செல்வதற்கு தடை விதிக்க முடியாது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...