Saturday, October 1, 2016


HC orders disbursal of PF to Inspector not allowed to retire

THE HINDU

SPECIAL CORRESPONDENT

A Division Bench in the Madras High Court Bench here has dismissed a writ appeal preferred by Deputy Inspector General of Police, Tiruchi Range, challenging a single judge’s order to disburse provident fund and earned leave encashment amount to an Inspector of Police who was not allowed to retire from service in February 2007 pending departmental enquiry as well as criminal prosecution on charges of demanding and accepting a bribe of Rs.6,000.

A Division Bench of Justices M. Sathyanarayanan and V.M. Velumani dismissed the appeal on the ground that provident fund and encashment of earned leave were benefits to which the Inspector S.P. Selvaraj would be entitled to even if he was ultimately dismissed from service on being found guilty either in the departmental enquiry or the criminal proceedings.


The only two benefits to which he would not be entitled to, in such a case, were gratuity and pension.

Thursday, September 29, 2016

காலம் மாறிவிட்டது

By வாதூலன் | Last Updated on : 29th September 2016 01:00 AM | அ+அ அ- |

ஆறு மாதம் முன்பு, என் உறவினரின் பேரன் திருமணம் நடந்தது. இந்தச் சுப நிகழ்வையொட்டி, எல்லாரையும் சந்தித்துப் பேசலாமென்று நினைத்திருந்தேன். ஆனால், குறிப்பிட்ட நாளன்று உடல்நலக் குறைவால், அந்தத் திருமணத்துக்குப் போக முடியவில்லை.
அன்பளிப்பாக ரூ.500 அனுப்பி வைத்தேன். இரண்டு நாள் கழித்து போனில் பேசினேன். "உங்கள் செக் கிடைத்தது. நீங்கள் எல்லாரும் வருவீர்கள் என்று ரொம்ப எதிர்பார்த்தேன்' என்று உளமாரச் சொன்னது, எனக்குத் திருப்தியாக இருந்தது.
ஆனால் அந்தக் காசோலை கணக்கில் பற்று ஆகவேயில்லை. மூன்று மாதக் காலக் கெடு நெருங்கிக் கொண்டிருந்தது.
உறவுக்காரப் பெண்மணியிடம் விசாரித்தபோது, "பையனிடம் கொடுத்தேன். இப்போது அவன் வீட்டிலில்லை, போன வாரம்தான் அவர்கள் இலங்கையிலிருந்து வந்தார்கள்!' என்றார். குரலில் அலுப்பு தொனித்த மாதிரி இருந்தது.
ஒரு வழியாகக் காலாவதி தேதிக்கு மூன்று நாள் முன் காசோலை பற்று ஆகியது. கிரிக்கெட் பந்தயத்து ஆட்டக்காரர் கோட்டைக் கடைசி நிமிடத்தில் தொடுவது போல.
இதேபோல வேறொரு நிகழ்ச்சி. என் நெருங்கிய பள்ளி நண்பனின் தம்பி இல்லத்தில் ஒரு விழா. அதற்கான அழைப்பிதழ் வந்த அன்றே, போக இயலாதென்று புரிந்துவிட்டது. ஏனெனில் வேறு ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம். வழக்கம்போல, கடிதத்துடன் காசோலையும் அனுப்பினேன்.
விழா முடிந்த மறுநாள் அவனே தொலைபேசியில் பேசினான். "என்ன? வராமலே இருந்து விட்டீர்கள்? பழைய எம்.ஸிடி. ஸ்கூல் சினேகிதர்களை பார்த்திருக்கலாமே? எழும்பூர் "ப்ரெண்ட்ஸ்' நிறைய பேர் வந்திருந்தார்கள்' என்று சொல்லிக் கொண்டே போனவன், பேச்சோடு பேச்சாகக் காசோலை கிடைத்த விஷயத்தையும் தெரிவித்தான்.
ஆனால், இங்கு என்ன ஆயிற்றென்றால், காசோலை பற்று ஆகவே இல்லை. அதாவது வங்கியில் சேர்க்கப்படவேயில்லை! என் மனக்குறையை நண்பனிடம் புலம்பித் தீர்த்தேன்.
"உன் தம்பி அடிக்கடி அமெரிக்கா போய் விட்டு வருகிறவன். என், 500 ரூபாய் அற்பமாகத் தோன்றியிருக்கும்! அதனால்தான்' என்று கூறினேன். நண்பன் என்னைச் சமாதானம் செய்தான். "சே! அப்படி நினைக்காதே. சோம்பேறித்தனமாயிருக்கும். நீ தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது' என்று தம்பிக்குப் பரிந்து பேசினான்.
அலுவலக நண்பனிடம் ஏதோ சந்தர்ப்பம் வரும்போது இதைப் பகிர்ந்து கொண்டேன். அவனுடைய பார்வை கொஞ்சம் வேறு விதமாக இருந்தது.
"அன்பளிப்பாகச் செக்கோ, பொருளோ தந்துவிட்டால், அதோடு நம் பங்கு முடிந்துவிட்டது. அதை எப்படிப் பயன்படுத்துகிறார்களென்று கவனிப்பது நம் வேலை இல்லை!' என்றான்.
முற்றிலும் உண்மைதான். ஆனால் என் சினேகிதனின் தம்பி காசோலையை ஒரு பொருட்டாகவே கருதவில்லையே? அலட்சியமாக இருந்ததால்தானே சாவகாசமாய் வங்கியை அணுகியிருக்கிறான். "இதே செக் 50 டாலராயிருந்தால் இது போலிருந்திருப்பானா?' என்ற கேள்வியும் என்னுள் எழாமலில்லை.
என் மனைவி ஆறுதலாகச் சொன்னாள், "இப்போதெல்லாம் கல்யாணமானவுடன் மணமக்கள் வெளிநாட்டுக்கு தேனிலவுக்காக போகிறார்கள். கிரகப்பிரவேசம் செய்தால், புது வீட்டுக்கு பர்னிச்சர் வாங்க அலைகிறார்கள்! அந்த நாள் மாதிரியா?' என்று ஏக்கப் பெருமூச்சுவிட்டாள்.
அதன் அர்த்தம் எனக்குப் புரிந்தது. 40 வருடம் முன்பு புதுமனை புகுவிழா கொண்டாடியபோது, என் சித்தி அளித்த "மில்க் குக்க'ரை ரொம்ப வருடம் பயன்படுத்தி வந்தோம்.
இன்று காலம் மிகவும் மாறிவிட்டது. எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும், பளபளக்கும் விளக்குகள், வண்ணமயமான அலங்காரங்கள், விடியோ வெளிச்சம் போன்றவை நீக்கமற நிறைந்திருக்கின்றன.
நிதானமான கனிவான விசாரிப்புக்குப் பதில், அவசர கை குலுக்கல்கள்; தம்பதிகளை மனமாரப் பாராட்டுவதற்குப் பதில் அவர்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது. இடையிடையே வரும் செல்லிடப்பேசி அழைப்புகள்.
பரிசுப் பொருள்கள் மேடையில் ஒரு மூலையில் குவிகின்றன. காசோலையோ வேறு உறையோ பெறுகிறவர்கள் விரைவாகக் குறித்துக் கொள்கிறார்கள்.
ஆக சகல மதிப்பீடுகளும் மாறிவிட்டன. இது குடும்பத்தில் மாத்திரமல்ல. அரசியல், திரைப்படம், விளையாட்டு போன்ற பிற துறைகளிலும்தான்.
ஒரு சின்ன உதாரணம். சில நாள் முன்பு பிரபல ஆங்கில நாளேட்டில், கிரிக்கெட் ஆட்டக்காரர் ஸி.டி. கோபிநாத் (86 வயது), 1952-இல் தாங்கள் முதன் முதலாக இங்கிலாந்தை வெற்றி கொண்டதை நினைவுகூர்ந்த கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.
"வெற்றி பெற்றவுடன் மாற்றுக் கட்சியிடம் கைகுலுக்கி விட்டு ஓட்டலுக்குத் திரும்பி விட்டோம். மேலே குதிப்பது, கீழே புரள்வது போன்ற செய்கைகள் இல்லை.
"விருந்து உண்டா?' என்று யாரோ கேட்டார்கள். அன்று, எங்களிடமும் சரி, வாரியத்திடமும் சரி அதற்குச் செலவு செய்ய தொகை இல்லை!' என்று கூறியிருக்கிறார். அந்த வெற்றியில் கோபிநாத்துக்கு முக்கிய பங்களிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன், 33 ஆண்டுகளுக்கு பின், கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பை வென்றபோது, பெரும் ஆர்ப்பாட்டம் இருக்கவில்லை.
இன்று, கணினியும், நவீன ஊடக வசதிகளும் அனைவரது வாழ்க்கையையும் ஒரு புரட்டு புரட்டியிருக்கிறது. "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்' என்ற குறள் ஓரளவுக்குப் பொருந்தும்தான்.
வயதானவர்கள் சில தன்மைகளை அனுசரித்துச் சகித்துக் கொள்ளும் பக்குவம் பெற வேண்டியதுதான். அதேபோல், இளைஞர்களும் பழைய உயர் பண்புகளையும் நல் மதிப்பீடுகளையும் பேணிப் போற்றக் கற்றுக்கொள்வது உசிதம்.

மரத்துப் போயிற்றா மனிதம்?

By தி. இராசகோபாலன்  |   Last Updated on : 29th September 2016 01:01 AM  |

அடிமைப்பட்டிருந்த இந்தியாவில் வாழ்வதற்குத் தான் வழி தெரியவில்லை. ஆனால், விடுதலை பெற்ற நாட்டில் சாவதற்கும் வழி தெரியவில்லையே? சாரிசாரியாகச் செல்லுகின்ற எறும்புகளில் ஒரு எறும்பு செத்துப் போய்விட்டால், மற்ற எறும்புகள் செத்த எறும்பை எடுத்துக்கொண்டு செல்கின்றன. காக்கைக் கூட்டத்தில் ஒரு காக்கை மின்சாரக் கம்பியில் அடிபட்டு விழுந்தால், உடனே மற்ற காக்கைகள் எல்லாம் கரைந்து கூடி, அடிபட்ட காக்கையை உயிர்ப்பிக்க முயலுகின்றன.
ஆனால், ஒடிஸா மாநிலத்தில் ஆதிவாசி ஒருவருடைய மனைவி மருத்துவமனையில் மாண்டால், அவரே தன் தோளில் தூக்கிப் போக வேண்டியிருக்கிறது.
அண்மையில் கான்பூரிலும் நபரங்காபூரிலும் மருத்துவமனைகளில் செத்த பிணங்களுக்கு வாகன வசதி செய்து தரப்படாமல், உரியவர்களே தோளிலும், சைக்கிளிலும் தூக்கிக்கொண்டு போன நிகழ்ச்சிகள், மனித வர்க்கத்தின் மேல் படிந்த கரும்புள்ளிகள் எனலாம்.
"கத்தும் பறவை கனிமரத்தில் வந்து, ஒற்றுமை காட்டிடுதே - தலைப்பித்தம் பிடித்தொரு கூட்டம் தனித்தனி பேதம் வளர்த்திடுதே' எனும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடிய பாடல், சாகாவரம் பெற்றதாகும்.
கான்பூரில் தரித்திரத்தோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் ஏழைத் தொழிலாளி, சுனில்குமார். அவருடைய 12 வயது மகன் அம்ஷ பிறவி நோயாளி. 26.08.2016 அன்று அம்ஷ உயிருக்குப் போராடும் நிலைமை ஏற்படவே, சுனில்குமார் அவனைக் கான்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்.
அங்கிருந்த அரசு ஊழியர்கள் நிலைமையின் விபரீதத்தை உணராமல், அடுத்திருந்த குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துப் போகும்படி பணித்தனர். குழந்தைள் நல மருத்துவமனையில் உடனடி சிகிச்சை தராமையால், அச்சிறுவன் அங்கேயே இறக்க நேர்ந்தது. அக்குழந்தையை எடுத்துச் செல்ல ஆம்புலன்சும் தர மறுத்தனர். அதனால், அம்மகனை அத்தந்தை தம் தோளில் சுமந்துகொண்டே வீடு சென்றிருக்கின்றார்.
ஊடகங்களில் செய்தி பரவிவிடவே, மாநிலமே அதிர்வலைகளைச் சந்தித்தது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், அம்மருத்துவமனையின் தலைமை அதிகாரியை இடைநீக்கம் செய்தார். என்றாலும், மனிதம் மரத்துவிட்டதே!
மரித்த உடலை எப்படி மதிப்பது என்பதை உலகிற்குச் சொல்லிக் கொடுத்த நாடு, நம் நாடு. இராவணன் மாண்டவுடன், இராமபிரான் வீடணனை அழைத்து, "வீடணா! "நீ என் தம்பிதான் என்றாலும் வன்மத்தை விட்டுவிட்டு, விதி நூல்களில் என்னென்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அவற்றின்படி போர்க்களத்தில் மாண்டு கிடக்கின்ற உன் அண்ணனாகிய இராவணனுக்கு ஈமக்கடன்களைச் செய்வாயாக' எனக் கட்டளையிடுகிறான். வான்மீகியும், "பகைமைகள் மரணத்தை முடிவாக உடையன' என வீடணனை நோக்கி மொழிகிறார்.
உயிரற்றவர்களின் உடலை மதிக்க வேண்டும், மரியாதை செய்ய வேண்டும் என அழுத்தமாக வற்புறுத்த நினைத்த ஈட்டுரையாசிரியர் நம்பிள்ளை ஓர் அற்புதம் செய்தார்.
இராவணன் அண்ணன் இல்லை இராமன்தான் அண்ணன் என்பதை வீடணன் "களவியல் அரக்கன் பின்னோ தோன்றிய கடன்மை தீர்ந்தது' (பாடல்: கம்பன், 6506) எனும் வாக்குமூலத்தின் மூலம் புலப்படுத்துகின்றான். இராவணன் அண்ணன் இல்லை என்றாகிவிட்டபிறகு எப்படி ஈமக்கடன் செய்வது எனத் தயங்குகின்றான் வீடணன்.
"வீடணா, இராவணனுக்குக் கைங்கர்யத்தை நீ செய்கிறாயா அல்லது நான் செய்யட்டுமா நீ என் தம்பி இவன் உன் அண்ணன் ஆகவே இவன் எனக்கும் உறவினன் ஆவான்' எனச் சொல்லி இராமபிரான் எழுந்தபோது, பதறிப்போன வீடணன் நீர்க்கடனை நிறைவேற்ற எழுந்தானாம். இது நம்பிள்ளையின் ஈட்டுரை.
இவர்கள் எல்லாம் மனிதம் உரத்துப் போன மாமனிதர்கள்; மரத்துப்போன மனிதர்கள் அல்லர்.
இராமாயணத்தைப் போலவே மகாபாரதமும் நீத்தார்க் கடனாற்றுவதை நேர்த்தியாக எடுத்துரைக்கின்றது. பத்தாம் நாள் போரின்போது, பீஷ்மருக்கு இவ்வுலக வாழ்வை நீக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து, வில்லைக் கீழே போடுகிறார்.
அர்ச்சுனனுடைய அம்புகள் ஒன்றன்மேல் ஒன்றாக அவர்மேல் தைக்கவே, "அர்ச்சுனா என்னுடல் மண்மகள் மீது படக்கூடாது. அதனால் சரப்படுக்கை அமைத்து, அதன்மேல் கிடத்துவாய் மேலும் இது தட்சணாயணம் உத்தராயணத்தில்தான் நான் மோட்சத்திற்குச் செல்ல வேண்டும்' எனப் பணிக்கின்றார்.
பீஷ்மர் பகைவர்களின் கூடாரத்தைப் சேர்ந்தவர் என்றாலும், அர்ச்சுனன் ஆச்சாரியன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுச் சரப்படுக்கை (அம்புப் படுக்கை) அமைக்கிறான். சரப்படுக்கையில் நினைவற்று இருக்கும் உடலைப் பஞ்சபாண்டவர்கள் மாற்றி மாற்றிக் காவல் காக்கின்றனர்.
அந்நேரத்தில் பீஷ்மர் "விஷ்ணு சகஸ்ரநாம'த்தை வாய்விட்டு ஓதத் தொடங்குகிறார். அதனை கண்ணன் சரப்படுக்கைக்குக் கீழே கைகட்டி அமர்ந்து கேட்கத் தொடங்குகிறான். கண்ணன் அமர்ந்தவுடன் தருமன் உட்பட அனைவரும் கீழே அமர்ந்து செவிமடுக்கின்றனர்.
இதனால், உயிர்நீத்துக் கொண்டிருக்கும் உடலை, நம் மூதாதையர் மதிக்கக் கற்றதோடு, துதிக்கவும் கற்றவர் என்பது வெளிப்படுகின்றது.
இந்திய மரபினரைப் போலவே அயல்மரபினரும்கூட புகழுடம்புகளை மதித்தவர்கள்தாம்.
ஒருமுறை நபிகள் நாயகம் தம் சீடர்களோடு திண்ணையில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அவ்வழியே ஒரு யூதருடைய இறுதி யாத்திரை போய்க் கொண்டிருக்கிறது. அதனைக் கண்ட நபிகள் நாயகம் எழுந்து நின்று, தலை குனிந்து மெளனம் கடைப்பிடிக்கின்றார்.
அந்த ஊர்வலம் கடந்தவுடன் சீடர்கள், "பெருமானே அது நம்முடைய ஜென்மப் பகைவன் யூதனுடைய பிணமாயிற்றே அதற்கு எதற்கு மரியாதை' என்றனர். அதற்குப் பெருமானார், "பிணத்தையே மதிக்கத் தெரியாத நீங்கள் எப்படி மனிதனை மதிக்கப் போகிறீர்கள்' எனக் கடிந்து கொள்கிறார்.
இரண்டாம் உலகப் போரின்போது, இங்கிலாந்தில் இனம் தெரியாதவன் இறந்து கிடந்தால்கூட ஆங்கிலேயர்கள் அவ்வுடலைச் சகல மரியாதைகளோடு, "பெயர் தெரியாத வீரனுக்கு' என்று மலர்வளையம் வைத்து அடக்கம் செய்தனர்.
ஆனால், நம்முடைய புண்ணிய பாரதத்தில், ஒடிஸாவில் இரண்டு ஏழை இளைஞர்கள் இறந்துபோன தங்கள் குடும்பத்துப் பெண்ணை மருத்துவமனையிலிருந்து பருயமுண்டா கிராமத்திற்கு ஏற்றிக் கொண்டு போக ஆம்புலன்ஸ் வசதி கேட்டிருக்கின்றனர்.
அதற்கென விதிக்கப்பட்ட தொகையினைக் கேட்டு, ஏதுமில்லாத அந்த ஏழை இளைஞர்கள், சைக்கிளில் அவ்வுடலைக் கிடத்தி, 30 கி.மீட்டர் தொலைவுக்கு எடுத்துக்கொண்டு போயிருக்கின்றனர்.
இத்தனைக்கும் அம்மாநில முதல்வர் 'மஹாபிரயாணா' எனும் பெயரில் 40 ஆம்புலன்ஸ் வேன்களை வாங்கி, பெரிய மருத்துவமனைகளில் நிறுத்தியிருக்கிறார்.
இதயத்தை முள்ளின் முனையில் நிறுத்தக்கூடிய ஒரு கொடூரம், அதே ஒடிஸா மாநிலத்தின், நெடுவழிச்சாலையில் நிகழ்ந்தேறியிருக்கிறது.
ஒடிஸா மாநிலத்தில் கலாஹண்டி மாவட்டம், மெல்காரா கிராமத்தில் தனா மஜி எனும் ஆதிவாசி வாழ்ந்து வருகிறார். அவருடைய மனைவி அமாங்தீ ஒரு காசநோயாளி.
காசநோயால் கடும் பாதிப்புக்குள்ளான தம் மனைவியை 60 கி.மீ. தொலைவிலுள்ள பவானி பட்னா மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார், தனா மஜி. அன்று இரவு அமாங்தீ, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்துவிட்டார்.
கலாஹண்டி மாவட்டம் வறண்ட பூமியில்லை என்றாலும், வாங்கும் சக்தியில்லாத காரணத்தால், அங்குள்ள பழங்குடியினர் கடந்த இருபதாண்டுகளாகப் பசி, பட்டினியில் மடிந்து வருகின்றனர்.
அத்தகைய பழங்குடியினத்தைச் சேர்ந்த தனா மஜி கையில் காசு கிடையாது. தம்மனைவியை 60 கி.மீ. தொலைவுக்கு எடுத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் வேண்டியிருக்கிறார். ஆனால், செக்யூரிட்டிகளும், ஆண் செவிலியரும் அவ்வசதியை மறுத்ததோடு, இரவோடு இரவாகப் பிணத்தை அப்புறப்படுத்தும்படியும் கட்டாயப்படுத்தியிருக்கின்றனர்.
வேறு வழி தெரியாத அந்த ஏழை அபலை, மனைவியின் உடலை ஒரு லுங்கியில் சுற்றி எடுத்துக்கொண்டு, தம்முடைய 12 வயது மகள் சானடெய் மன்கி பின்தொடர தம் கிராமத்தை நோக்கி இரவோடு இரவாக நடக்கத் தொடங்கிவிட்டார்.
அப்படி அவர் நடந்து 16 கி.மீட்டரைத் தாண்டிய பின், அந்த வட்டாரத்தைச் சேர்ந்த பத்திரிகை நிருபர்கள் அவரைப் பார்க்க நேர்ந்தது. அவர்கள் அதனை சட்டப்பேரவை உறுப்பினர் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றனர். அவர் உடனடியாக ஓர் ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்து, மெல்காரா கிராமத்திற்குப் பயணப்பட ஏற்பாடு செய்திருக்கிறார்.
மறுநாள் அச்சோகக் காட்சியைப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன. என்றாலும், செக்யூரிட்டிகளுக்கும் மருத்துவமனைச் சிப்பந்திகளுக்கும் மனிதநேயம் எங்கே போயிற்று? மரத்துப் போயிற்றா மனிதம்?

Wednesday, September 28, 2016


NEET: Supreme Court orders combined counselling in Maharashtra

The court also said the admissions already made would not get affected


NEET: Supreme Court orders combined counselling in Maharashtra

The court also said the admissions already made would not get affected

In a major relief to the students, the Supreme Court today ordered for combined counselling for all unfilled medical seats in Maharashtra.

The court also said the admissions already made would not get affected. Thousands of medical students, who cleared National Eligibility-cum-Entrance Test (NEET) this year, have already got seats in various colleges.

The apex court also said the admission process have to be completed by October 7.

With this decision, confusion over admission to private and deemed universities in the state is cleared. The deemed universities argued the state government is violating their fundamental right to administer their own institutions and hold individual counselling for students.

As per reports, 85 per cent of seats was already filled.

In another case, the apex court refused to interfere in any admissions already made by the medical colleges in Kerala
மணமான பெண் வீட்டுக்கு பெற்றோர் போகலாமா?

புதுடில்லி: திருமணமான பெண் குடியிருக்கும் கணவரின் வீட்டுக்கு, அந்தப் பெண்ணின் பெற்றோர் செல்ல முடியுமா என்பது குறித்து, டில்லி கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், டில்லி செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, விகாஸ் தல் அளித்த தீர்ப்பு: கணவன் மற்றும் அவருடைய குடும்பத்தாருடன் இந்தப் பெண்ணுக்கு பிரச்னை உள்ளது; அதே நேரத்தில், அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். 'பெண்ணின் பெற்றோர், எங்கள் வீட்டுக்கு வரக் கூடாது' என, கணவர் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக விசாரித்த கீழ் கோர்ட், 'திருமணமான பெண்ணின் பெற்றோர், கணவர் வீட்டிற்கு வர உரிமை இல்லை' என, கூறியுள்ளது. இந்த தீர்ப்பை ஏற்க முடியாது. மனிதன் ஒரு சமூக விலங்கு; உறவுகளோடு சேர்ந்து, இணக்கமாக வாழ வேண்டும். திருமணமான பெண் தங்கியிருக்கும் வீட்டுக்கு, அவளது பெற்றோர் செல்வதற்கு தடை விதிக்க முடியாது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

State govt. stand on centralised counselling leaves students in limbo

Battle between deemed universities, Maharashtra government over right to counselsuccessful NEET candidates awaits Supreme Court decision

The fate of thousands of medical students who cleared NEET is in the hands of the Supreme Court, with the Maharashtra government and deemed universities in the State engaging in a tug-of-war over who has the right to hold counselling sessions.

With just a few days left before admissions to medical and dental colleges close for the new academic year, a bench of Justices A.K. Sikri and L. Nageswara Rao has to decide whether Maharashtra has the right to conduct centralised counselling. Deemed universities argue that the State government is stepping on their fundamental right to administer their own institutions and hold individual counselling for students.

To make matters worse, several thousand students in the State have already secured admissions to these deemed universities on the basis of individual counselling done by the varsities, and have already started classes. The State government prefers them to be sent back for a combined re-counselling. Both the Maharashtra government and the Centre termed the admissions of these students as provisional.

“These universities say that 85 per cent of their seats have already been filled up. What will happen to all these students who have already started classes?” a concerned Justice Sikri asked the government.

Senior advocate P. Chidambaram, appearing for one of the deemed universities, said the Narendra Fadnavis government was attempting the “undoable task of unscrambling eggs” by trying to cancel their admissions and send them back for combined re-counselling.

“Centralised counselling is absolutely essential after NEET... otherwise the gains of NEET will disappear. Normally, a centralised exam like NEET should follow with centralised counselling. I am not treading on anybody’s authority,” senior advocate Shyam Divan, appearing for the Maharashtra government, argued.

The State government had come in appeal against a Bombay High Court order quashing its notification to hold combined counselling for all undergraduate medical and dental students who cleared NEET this year. The Supreme Court in April had revived the 2010 NEET regulations to bring transparency in medical and dental admissions across the country.

Mr. Divan argued that private institutions have a duty to admit meritorious students. He claimed that these universities have admitted students from the bottom of the NEET rank list. “There has been a complete rejection of merit,” he said.

With centralised counselling conducted by the State government authorities, Mr. Divan pointed out, students do not have to attend multiple counselling sessions. It would also save them from paying multiple application fees to several colleges, and would also end the practice of blocking seats.


The Centre, represented by Solicitor-General Ranjit Kumar, submitted that a majority of States, like Maharshtra and Kerala, are in favour of combined counselling. “We want counselling to be centralised all over the country. Centralisation guarantees equality of opportunity,” Mr. Kumar submitted.

He argued that the term ‘admission’ in the NEET regulations include the combined entrance exam and the counselling too. Supporting the Maharashtra notification for centralised counselling, the Solicitor-General argued that even the UGC Regulations reserves the right of admissions in deemed universities with the “bodies authorised by the Centre, States or other other State agencies”.

The hearing will continue on Tuesday.

Earlier this month, the Bombay High Court lifted a stay on admissions to various courses through NEET. It asked the State government to prepare a list of candidates from outside the state, but restrained it from making it public till it has reviewed it.

The court was hearing petitions filed by the Mahatma Gandhi Vidyamandir's Karmaveer Bhausaheb Hiray Dental College and Hospital, a private unaided college, and students from other states challenging the rules denying admissions to applicants from outside Maharastra to these courses.



Many students have secured admissions to these deemed universities

சட்டமே துணை: மனதைக் கொல்வதும் குற்றமே

பி.எஸ். அஜிதா

எல்லோருக்கும் பொறுமை அவசியம் தான். ஆனால், பல விதமான குடும்ப வன்முறைகளை ஏற்றுக் கொண்டும் பொறுத்துக்கொண்டும் போவது யாருக்குமே நல்லதல்ல என்பதைப் பெண்கள் உணர வேண்டும்.

நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த சித்ரா, சத்தம் கேட்டுக் கண் விழித்தார். பக்கத்தில் அருள் இல்லை. வெளியே வந்து பார்த்தால் அங்கேயும் இல்லை. இரவு வெகு நேரம் லேப்டாப்பில் வேலை செய்துவிட்டுப் படுத்தவர்தான். இப்போது லேப்டாப் மேஜையில் இல்லை. யோசித்தபடியே நடந்தவரின் காலில் ஏதோ தட்டுப்பட, இதயம் ஒரு கணம் நின்றேவிட்டது.

ஆணி போன்ற கூரான எதையோ வைத்து லேப்டாப் சிதைக்கப்பட்டிருந்தது. கீழ்ப்பகுதியும் மேல் மூடியும் தனித் தனியாக வந்துவிட்டன. அழுகை பீறிட்டு வந்தது.

மகன் விழித்துவிடப் போகிறான் என்று வாயைப் பொத்திக்கொண்டு அழுதார். அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. அலுவலகத்தில் கேட்டால் என்ன பதில் சொல்வது? அதிலிருக்கும் தகவல்களை எடுக்க முடியாதபடி லேப்டாப் முற்றிலும் சிதைந்துவிட்டிருந்தது. ஓட்டை விழுந்து கிடக்கும் லேப்டாப்பை, கைதவறி உடைந்துவிட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்?

சித்ராவுக்கு 12 வருட வாழ்க்கை மனக் கண் முன் ஓடியது. வலிகளை மறந்து மரியாதையாக, நிம்மதியாக, மதிப்புடன் உலாவுகிற ஒரே இடம் அலுவலகம்தான். இதைப் பற்றிச் சொன்னால் என் குடும்ப வாழ்க்கையின் அவல நிலை அலுவலகத்தில் தெரிந்துவிடுமே என்று அஞ்சினார். மூன்று மாதக் கால புராஜெக்டின் மொத்த வேலையும் அந்த லேப்டாப்பில் சிதைந்து கிடந்தது.

காதல் ஒருவனைக் கைப்பிடித்தே

அருளுக்கும் சித்ராவுக்கும் நடந்தது காதல் திருமணம். படிக்கும் காலத்தில் அறிமுகமான நட்பு, வேலைக்குச் சேர்ந்தபோதும் தொடர்ந்தது. மூன்று வருடங்களில் காதலாக மாறியது. அருள் காதலை வெளிப்படுத்தியபோது, வேலையிலும் பொருளாதாரத்திலும் சித்ராவைவிட ஒரு படி கீழே இருந்ததை இருவருமே பொருட்படுத்தவில்லை. எளிமையான மனிதனாக, அனைத்தையும் மென்மையாகச் செய்யும் அவன் சுபாவம் பிடித்திருந்தது.

படிப்பு ஒன்றாக இருந்தாலும், தரமான பொறியியல் கல்லூரிக்கும் கடைநிலை பொறியியல் கல்லூரிக்கும் இருந்த வேறுபாடு, இருவருக்கும் புரிதலையும், அறிவையும், பணியையும் வெவ்வேறு தரத்தில் கொடுத்திருந்தது. பணம் ஒரு பொருட்டே இல்லை சித்ராவுக்கு. அவர் விரும்பியது அமைதியான, எளிமையான வாழ்க்கையைத்தான். பெரியவர்கள் சம்மதத்துடன் திருமணமும் நடந்தது. அண்ணன் மட்டும், “அவனுக்கு உன்னுடைய தகுதியோ, அறிவோ கிடையாது. பின்னால் பிரச்சினை வரும்” என்றான்.

சித்ரா அதைப் பொருட்படுத்தவில்லை. அஸ்வின் பிறந்த பின், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் படும் வேதனைகள் அதிகம். வார்த்தைக்கு வார்த்தை ஒழுக்கம் கெட்டவள் என்ற வசவு. வாரம் ஒருநாள் குடிக்கத் தொடங்கி, வாரம் முழுவதும் என்றானது. அதனால் வேலையும் பறிபோனது.

“ஏன், சம்பாதிக்கத் துப்பில்லாதவன் தின்கிறானே என்று நினைக்கிறீயா? இவனுக்குப் பெண்டாட்டியா இருக்கிறதைவிட நல்லா சம்பாதிக்கிற வேறொருத்தன் பரவாயில்லைன்னு தோணுதா? ஆபீஸில் நடக்கிறது யாருக்கும் தெரியாதா என்ன?” என்றெல்லாம் அருளிடமிருந்து அமில வார்த்தைகள் வந்துவிழும்.

கொட்டும் விஷ வார்த்தைகள்

காதலித்தபோது இருந்த மெல்லிய உணர்வுகள், பாசத்தோடு கழிந்த நாட்கள், குழந்தையைக் கொஞ்சி, அன்பைப் பகிர்ந்துகொண்ட நாட்கள் என்று பலவற்றை நினைத்து ஏங்கினார் சித்ரா. ஒருநாள், “கவுன்சலிங் போலாமா?” என்று அருளிடம் கேட்டபோது, “என்னைப் பைத்தியம் என்று முடிவே பண்ணிட்டியா சபாஷ்! என்னை டாக்டரிடம் கூட்டிப்போய், சர்டிபிகேட் வாங்கி டைவர்ஸ் பண்ணலாம்னு திட்டம் போட்டிருக்கிறாயா?” என்று சண்டை போட்டார்.

வேறு வழியில்லாமல், அண்ணனிடம் சொன்னார் சித்ரா. வருத்தப்பட்டாலும், “அவனுக்கு நல்ல வேலை கிடைத்தால் பொறுப்பு வந்துவிடும்” என்று சொல்லி நிறுத்திக்கொண்டார் அண்ணன்.

அப்பாவை அழைத்துவந்தால் அருளுக்கு நிதானம் வரும் என்று நினைத்தார் சித்ரா. அப்பா வீட்டில் இருந்த ஆறு மாதங்களும் சண்டை தொடர்ந்தது. அப்பா ஒருநாள் அருளிடம், “ஏம்பா, இப்படிப் பேசுற?” என்று கேட்டதற்காக, அவரையும் அநாகரிகமாகத் திட்டிவிட்டார்.

சித்ராவுக்கு நடப்பது ஓர் உளவியல் வன்முறை. நடக்காத ஒன்றை, நியாயமற்ற ஒன்றைப் பேசிப் பேசி மன வலியை, அச்சத்தை, தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்துவது. ஆனால் வன்முறையைச் செலுத்துகிறவர் பாவம் என்று கருதியும், வன்முறை செய்வதற்கான காரணத்தைக் கற்பித்துக்கொண்டும், சித்ரா பொறுத்துப்போனதால், வன்முறை அதிகரித்துக்கொண்டுபோனதே தவிரக்

குறையவில்லை. சித்ரா விடாமுயற்சியுடன் அருளின் மனப் பிரச்சினையைச் சரி செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் அருளுக்கு உணர்த்துவதற்காக வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம். அல்லது அவரை வெளியேற்றியிருக்கலாம். எதுவும் செய்யாமல் வன்முறையைப் பொறுத்துக்கொண்டது இருவருக்கும் எவ்விதப் பயனையும் தரவில்லை.

குழந்தைகளையும் பாதிக்கும் வன்முறை

அஸ்வின் வந்து நின்றதைக் கூட சித்ரா கவனிக்கவில்லை. “ஐயோ, உன் லேப்டாப்பையும் உடைச்சிட்டாரா? அன்னிக்கு உன் செல்போனைக்கூட அவர்தான் தூக்கிப் போட்டு உடைச் சார்மா”என்றான் அஸ்வின். அவனை அணைத்துக்கொண்டு அழுதார்.

சித்ராவின் ‘பொறுமை’ குழந்தையையும் பாதிக்கிறது. இந்த லேப்டாப் உடைப்பு அவனுக்குப் புதிதாக இல்லை. சித்ராவால் அவள் அறியாமலே குழந்தைக்கு வன்முறை பழக்கப்படுத்தப் படுகிறது.

இப்படிபட்ட உளவியல் ரீதியான வன்முறைகளைப் பற்றி, குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் பேசுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதுகாக்கிறது. நிவாரணங்களைப் பெறவும் வழிசெய்கிறது. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இதற்காக ஒரு பாதுகாப்பு அலுவலர் உள்ளார். அவரையோ அல்லது தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீதிமன்ற நடுவர்களையோ அணுகலாம். ஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திலும் உள்ள வட்டார, மாவட்ட, சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களை அணுகி, பெண்கள் இலவசமாகச் சட்ட உதவி பெறுவதுடன் வழக்கறிஞரையும்கூட நியமித்துக்கொள்ளலாம். சித்ராக்கள் தயாரா?

கட்டுரையாளர், வழக்கறிஞர்.
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

NEWS TODAY 18.12.2025