Monday, October 3, 2016

Return to frontpage

Annamalai varsity not a government institution, can fix its own fees: HC

DENNIS S. JESUDASAN

Upholding a single judge’s order, a Division Bench of the Madras High Court has held that Annamalai University near Chidambaram, which came under the control of the State government by an Act in 2013, is “not a government university” and would not come under the purview of the Fee Fixation Committee.

Dismissing a batch of appeals filed by medical students challenging collection of higher fees for various courses than what was collected in other State-run medical colleges, the Bench comprising Justices Huluvadi G. Ramesh and M.V. Muralidharan said the Capitation Fee Act, 1992 would not apply to the university and it was also empowered to fix the fees as prescribed by the Syndicate.

When the university was about to be closed due to its financial condition during 2012-13, the government took charge “in order to keep it alive”. The said act of the government “will not make the university a government university. Therefore, it cannot be said that the university is a State-run university,” the judges held.

The batch of pleas was filed by students contending that since the university was under the control of the government, they were required to pay the fees prescribed in the prospectus, which was determined by the Senate, and not as prescribed by the government.

However, the judges observed, “In a situation where the university is under deficit financing, the question of profiteering or commercialising the education by the university will not arise.” They also pointed out that the university or its constituent colleges were not included in the Government Order constituting the Fee Fixation Committee and it showed that the university was “not profiteering or commercialising the education”.

Since the committee never ventured out to fix the fees for the courses run by the university, the judges held that the question of invocation of Capitation Fee Act, 1992 did not arise.

The bench further held that the students, who have accepted the offer made in prospectus, namely the terms and conditions and the fee fixed by the Senate and joined the course, “cannot now turn around the same and contend that charging and demanding the fee prescribed in the prospectus is arbitrary, on the ground that the university is now a State-run university”.

Though it took over the control of Annamalai University, the stand of the government is that the university had not fixed the fee with the object of profiteering and it was only for the purpose of compensating the expenditure involved in running the institutions.

‘Not covered by Act’

When the deemed universities in Tamil Nadu were not covered by Capitation Fee Act, 1992 and were kept out of the purview of the Fee Fixation Committee, Annamalai University “should also be kept out of the purview of the Fee Fixation Committee, since it would inflict double jeopardy upon the government,” the bench held.

Says since the varstiy is under deficit financing, question of commercialising education does not arise

அதிக சப்தம் ஆபத்து

By இரா. இராஜாராம் | Last Updated on : 03rd October 2016 01:56 AM | அ+அ அ- |


மனித உடல் வியக்கத்தக்க ஒன்றாகும். ஐம்புலன்களில் ஒவ்வொன்றும் ஒரு தனித்தன்மை படைத்தது. நவீன கருவிகளை உயர்வாக எண்ணி அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்குக்கூட அற்புதமான இயற்கையான உயிர் ஆற்றல் உடைய உடலை அதன் இடைவிடாத இயக்கத்தை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை.
உடல் உறுப்புகள் பாதிப்படைந்தபின்பே அதன் அருமையையும், தேவையையும் உணர்ந்து பார்க்கின்றோம். சரிசெய்ய மருத்துவத்தின் மூலம் முயல்கிறோம். என்னதான் நவீன மருத்துவம் இருந்தாலும், இயற்கையாய் உள்ள அதன் செயல்பாடுகளை மீண்டும் முழுமையாக உண்டு பண்ணி விட முடியாது.
எத்தனையோ நூற்றாண்டுகளாக மனித சமுதாயம், இப்போதுள்ள நவீன கருவிகள் எதுவுமின்றி மனிதசக்தியால் இயங்கிடும் கருவிகளை மட்டுமே பயன்படுத்திச் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்புமின்றி இயற்கையோடு இயைந்த இனிய வாழ்வை வாழ்ந்திருக்கிறான்.
இன்று அறிவியலில் எவ்வளவோ வளர்ச்சியுற்றுப் பல்வகையான நவீன கருவிகள், போக்குவரத்து வசதிகள், நவீன மருத்துவம், போர்க்கருவிகள், சில நொடிகளில் உலகையே அழிக்கவல்ல அணு ஆயுதங்கள் எனப் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்திட்டாலும் அதோடு சேர்ந்து கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேடுகளும், அதனால் உடலுக்கும், உள்ளத்திற்கும் பாதிப்புகளும் அதிகரித்தே வருகின்றன.
இதற்குச் சரியான தீர்வு இன்று வரை கிடைக்கவில்லை. மாசுபாடுகளைக் குறைக்க எவ்வளவோ முயற்சிகளை மத்திய } மாநில அரசுகள் எடுத்திட்டாலும் அதற்கு மக்களின் ஆதரவு அவசியம் தேவை.
சாலைகள் விரிவாக்கத்தின்போது அதிக அளவில் மரங்கள் வெட்டப்பட்டநிலையில், மரக்கன்றுகளை அதிக அளவில் ஆங்காங்கு நட்டு வளர்த்துப்பெரிதாக்கினால் காற்று மாசைக் குறைப்பது மட்டுமின்றி, ஒலிமாசையும் அவை கட்டுப்படுத்தும்.
சமீப காலமாக ஒலிமாசு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உயிர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பித்தன்னை அடையாளப்படுத்தி வருகின்றன.
மனிதனும் அப்படி இருந்தவன்தான். நவீன கருவிகளின் வருகைக்குப் பின்பு இயல்பான ஒலி அளவைப் பன்மடங்கு பெருக்கி அதுவே பேரிரைச்சலாக மாறிவிட்டது.
தொழிற்சாலைகளிலிருந்து வரும் மிகையான ஒலி, வாகனங்கள் ஏற்படுத்தும் பேரிரைச்சல், ஒலிபெருக்கி பெட்டிகளின் அதிரடி ஓசை, விழா நாட்களில் வெடிகளை வெடித்துக் காற்றை மாசுபடுத்துவது, பேருந்துகளிலும், சிற்றுந்துகளிலும் அதிக ஓசையுடன் ஒலிபரப்பப்படும் பாடல்கள், வீட்டில் அதிக ஒலியுடன் வைத்துப்பார்க்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திருமண மண்டபங்களில் அதிரவைக்கும் பாட்டுக் கச்சேரிகள், திரை அரங்குகளில் அதிரடி ஓசை என ஒலி மாசை உண்டு பண்ணும் காரணிகள் அதிகரித்து வருவது மனிதனின் நுட்பமான செவிப் புலனுக்குச் செய்யும் துரோகமாகும்.
ஒலி அளவு என்பது அதிகபட்சம் 50-லிருந்து 60 டெசிபெல் வரை இருக்கலாம், இந்த ஒலி அளவு வரை செவிகளுக்குக் கேடில்லை.
ஆனால் சாதாரண நாட்களிலேயே நகரங்களில் 90 - 95 டெசிபெல் ஒலிஅளவும், பொதுக்கூட்டங்கள், திருமணம், கோவில் திருவிழா போன்ற நேரங்களில் 110 - 120 டெசிபெல் என்ற ஒலி அளவும், தீபாவளி போன்ற விழாக்களின் போது அதிகளவில் பட்டாசுகளை வெடித்து காற்றையும் மாசுபடுத்தி, ஒலிமாசையும் உண்டுபண்ணும் அந்த ஒலிஅளவு 140 டெசிபெல்லையும் தாண்டி விடுகிறது.
இத்தகைய மிகை ஒலியெல்லாம் செவிப்பறையைத் தாக்கி அதிலிருந்து மூளைக்குச் செல்லும் அதிநுட்பமான ஒலி உணர்நரம்புகளைப் பாதித்துப் படிப்படியாக ஒலி உணர்திறன் குறைவது மட்டுமல்லாமல், உயர் இரத்த அழுத்தம், படபடப்பு, இன்சோம்னியா என்ற தூக்கமின்மை, குடல் அழற்சி, நரம்புத்தளர்ச்சி போன்ற உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.
இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்திடும் ஒலிமாசைக் கட்டுப்படுத்திட சட்டங்கள் இருந்திடினும் அவை வெறும் பெயரளவுக்கே என்றாகிவிட்டன.
மக்களும் ஒலிமாசை உணர்ந்து குறைப்பதாகத் தெரியவில்லை. கடுமையான சட்டங்களை அரசு தீவிரமாகச் செயல்படுத்தினால் அன்றி இதனைக்கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை.
அதிக ஒலி அளவைக் கேட்டுப் பழகியவர்களுக்கு மிகமெல்லிய நுட்பமான ஒலிகளைக் கேட்கும் திறன் இல்லாமல் போய்விடுகிறது. மிகை ஒலி ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே காதுக்காப்பானை வழங்கி ஒலிமாசிலிருந்து அவர்களைக் காத்திட வேண்டும்.
விமானநிலையங்கள், ரயில்வே பாதைகள், தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் ஒலிஅளவு மிக அதிகமாக இருக்கும். அதற்கருகில் மக்கள் குடியிருப்புகள் இல்லாமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.
அப்பகுதிகளில் அதிகளவில் மரங்களை நட்டுவளர்க்கலாம். அப்பகுதியில் குடியிருப்பதை மக்கள் தவிர்க்கவேண்டும். காடுகளில் வாழும் உயிரினங்கள் செயற்கையான ஒலியை முற்றிலும் வெறுக்கின்றன. அவை மிகநுட்பமான ஒலியையும், அதிர்வுகளையும் உணரும் ஆற்றல் படைத்தவை. சுனாமி ஏற்படுவதற்குச் சற்று முன்பாகவே அதனை உணர்ந்து அவை பாதுகாப்பான இடங்களுக்குச்சென்று விட்டன.
ஆனால் அதனை முன்னதாகவே உணர்த்திட எந்த நவீன கருவியும் இன்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சுனாமியால் மடிந்தனர். இயற்கையில் மிகையொலி என்பது இடியோசை மட்டும் தான். அதுவும் சில வினாடிகள் மட்டுமே நிகழ்வது.
பரபரப்பான இயந்திர உலகத்தில் வாழும் மனிதன், தன் நலன் கருதியாவது மாசுகளை உண்டுபண்ணும் எச்செயலிலும் ஈடுபடாமல், இயற்கையில் தான் பெற்ற உடல் என்னும் ஒப்பற்ற, உயிருள்ள கருவியை அலட்சியப்படுத்தாமல், மாசுகளிலிருந்து காத்து ஆரோக்கியமுடன் வாழ்வதே மிகச் சிறந்த செல்வமாகும், அறிவார்ந்த செயலுமாகும்.

ஒருதலை காதலா? தறுதலை காதலா?

By மருத்துவர் ச. இராமதாசு | Last Updated on : 03rd October 2016 01:55 AM | அ+அ அ- |


கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது தமிழ்ச் சமூகம் பல்வேறு களங்களிலும் பின்னடைவுகளைச் சந்திக்கத் தொடங்கி விட்டது. அதிலும் குறிப்பாக வணிகமயமாகிவிட்ட கல்வி, வேலையில்லாத் திண்டாட்டம், திரைப்படம் மற்றும் கிரிக்கெட் போன்றவற்றை மையமாகக் கொண்டு இயங்குகின்ற பொழுதுபோக்கு மனப்பான்மை, தொழில்துறையிலும், வேளாண்மையிலும் அக்கறையே காட்டாத தொலைநோக்குப் பார்வை ஏதுமற்ற அரசுகள் போன்றவை நமது இன்றைய வீழ்ச்சி நிலைக்கான காரணங்களாக அமைந்தன. மிகவும் குறிப்பாக நமது தமிழ்ச் சமூகத்தின் வீழ்ச்சிக்குப் பெருங் காரணமாக அமைந்தது கட்டற்ற மது வணிகம்.
இளைஞர்களுக்கு மது போதையூட்ட தெருக்கள் தோறும் மதுக்கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. காதல் போதையூட்டுவதற்கு திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவர்கள் பெண்களைக் கேலி செய்து பகடிப் பாடல்களைப் பாடுவதற்கு, பாடல்கள் எழுதிப் பதிவு செய்யப்பட்டு சந்து பொந்துகளில் எல்லாம் கூட அவை பெரும் இரைச்சலோடு ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
பொறுக்கியாகவே, போக்கிரியாகவோ இருந்து கொண்டு வெறுமனே ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்ற எவன் ஒருவனும் அவன் பார்க்க நேருகின்ற எந்தப் பெண்ணையும் துரத்தித் துரத்திக் காதலிக்கலாம் என்கிற பொதுக் கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
பல்வேறு வகையான சுய முன்னேற்றச் சிந்தனைகளை மனதிற் கொண்டே நமது தமிழ்நாட்டின் பெண் பிள்ளைகள் மிகவும் குறிப்பாக கிராம, பேரூர், நகரப் பகுதிகளின் பெண் பிள்ளைகள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அவர்களைப் பற்றிய வண்ண வண்ணக் கனவுகளோடு தான், பெற்றோர்களும் அவர்களைக் கல்வி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் ஒருதலைக்காதல் என்ற முகமூடியோடு அத்தகைய பெண்களைச் சுற்றிச் சுற்றி வருகின்ற தறுதலைகளுக்கு, சம்பந்தப்பட்ட மாணவிகளின் லட்சியங்களும், அந்த மாணவிகளைப் பெற்றவர்கள், தங்களது மகளைக் குறித்துக் காண்கின்ற எதிர்காலக் கனவுகளும் ஒரு பொருட்டாகத் தெரிவதேயில்லை.
தறுதலைக் காதலர்களின் நோக்கம் முழுவதும் காமக் குரூரமாகவும், காதல் என்ற பெயரில் பணம் பறிக்கிற கபடத்திட்டமாகவும் இருப்பதால் எத்தகைய இழிவான எல்லைக்கும் அவர்கள் செல்லத் துணிகிறார்கள், மிகவும் கொடூரமான வன்முறைகளால் அவர்கள் அடைய விரும்பிய பெண்களை கொலை செய்கிறார்கள்.
கொஞ்சமும் ஈவு இரக்கமின்றிப் பெண்பிள்ளைகளின் உயிர்களைப் பறிக்கின்ற இத்தகைய போக்கு, ஒட்டுமொத்தச் சமூகத்தையும் நிலைக்குலைய வைத்திருக்கிறது. மிகவும் குறிப்பாகப் பெண்களையும், அதிலும் குறிப்பாக படிப்பதற்கும், வேலை செய்வதற்கும் முன் வருகின்ற இளம் பெண்களையும் அச்சுறுத்தி நடுங்க வைப்பதாக மாறியிருக்கிறது.
இதன் விளைவாக நிகழ்காலத்தில் இளம் தலைமுறைப் பெண்கள் மீண்டும் வீட்டுக்குள்ளேயே தங்களை முடக்கிக் கொள்ள வேண்டியவர்களாக மாறுகின்றனர்.
இளம்பெண்கள், ஒருதலைக் காதல் தறுதலைகளால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக நேரும்போது, அதை அவர்கள் பெரும்பாலும் தங்கள் குடும்ப உறவுகளிடம் தெரிவிக்காமல் மனதுக்குள்ளேயே நினைத்து நினைத்துக் குமைந்து கொண்டு கிடக்கின்றனர்.
அப்படித் தெரிவித்தால் தங்களது படிப்பும், பணி வாய்ப்பும் துண்டிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்க நேரிடும் என்று அவர்கள் எண்ணுவதே அதற்குக் காரணமாகும்.
எந்த நேரமும் தன்னையே பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கின்ற ஒரு தறுதலையை, ஒரு பெண் நிராகரித்தால் அந்த நிராகரிப்பை அந்தத் தறுதலையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் அந்தப் பெண்ணைக் கொலை செய்து விடுகிறான்.
ஓர் ஆணும் பெண்ணும் பழக ஆரம்பித்த பின், அந்த ஆண் ஒரு கேடு கெட்ட தறுதலையாக இருப்பதை உணர்ந்துவிடுகின்ற அந்தப் பெண் அவன் வேண்டாம் என்று நிராகரிக்கும்போதும் அந்த பெண்ணை அவன் கொலை செய்து விடுகிறான். அதிலும் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு பையனைப் பார்த்து நிச்சயம் செய்து விட்டது தெரிந்துவிட்டால் அந்தப் பெண் அவளது பழைய தறுதலையால் உடனடியாகக் கொலை செய்யப்பட்டு விடுகிறாள்.
தன்னை எப்போதும் ஒருவன் பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுப்பதாக ஒரு பெண் காவல் நிலையத்திலோ தனது உறவுக்காரர்களிடமோ புகார் செய்தால், அப்போது அந்தத் தறுதலையின் கோபம் மேலும் அதிகமாகி விடுகிறது.
அந்தப் பெண் மீதும் தேவையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு, பல்வேறு வகையான கேள்விகளுக்கும், அறிவுரைகளுக்கும், அவமானங்களுக்கும் அவள் ஆளாக்கப்படுகிறாள். தான் நம்பிய ஒரு தறுதலை தன்னை ஏமாற்றிச் சுகங்கண்டு விட்டு விலகிப் போகும்போதும் அந்த அவமானம் தாங்காமல் தன்னையே மாய்த்துக் கொண்டு அந்தப் பெண் இறந்து போகிறாள்.
ஆக தறுதலைக் காதலாக இருந்தாலும், இருதலைக் காதலாக இருந்தாலும் அதன் பொருட்டு பாதிக்கப்படுவோரும், கொலை செய்யப்படுவோரும் இளம் பெண்களே ஆவர்.
விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டிப்பாளையத்தில் நவீனா என்ற 15 வயது பெண்ணை 30 வயது குடிகாரன் ஒருவன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தான். அவன் கடைந்தெடுத்த ஒரு போக்கிரி என்பது அவனது ஊராரும், காவல்துறை வட்டாரங்களும் அறிந்த உண்மை.
ஒருமுறை குடிபோதையில் அவன் ரயில் தண்டவாளத்தில் விழுந்துவிட ரயில் சக்கரங்களில் சிதைந்து அவனது வலது கையும், வலது காலும் துண்டிக்கப்பட்டு விட்டன. மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகு அவன் வெளியே வந்தவுடன் அவனைச் சுற்றி வளைத்த ஒரு குழுவினர், அவன் காதலித்த பெண்ணின் சாதிக்காரர்கள் அந்தக் காதலனின் கையையும், காலையும் வெட்டி விட்டதாகக் கதைக் கட்டி அந்தக் கதையை ஊடகங்களுக்குக் கொடுத்து விட்டு காவல் நிலையத்திலும் அதையே புகாராகக் கொடுத்தனர்.
இன்னும் ஒரு படி மேலே சென்று ஒரு தொலைக்காட்சியின் விவாத அரங்கில் அந்தக் காதலனை ஒரு கை ஒரு காலோடு அமர வைத்து சமூக ஆர்வலர்களையும் உடன் அமர வைத்துக் கொண்டு விவாத அரங்கை நடத்தினர்.
அந்த நிகழ்ச்சியைப் பார்த்த பலரும் அடடா இது என்ன கொடுமை இப்படியா சாதி வெறி பிடித்து காதலர்களைப் பிரிப்பது என்றெல்லாம் அநியாயத்துக்கு வருத்தப்பட்டார்கள். ஆனால் அந்த தொலைக்காட்சி நாடகத்திற்குப் பிறகான காவல்துறை விசாரணையிலும், மருத்துவ ஆவணங்களிலும், உண்மை அறியும் குழுவின் அறிக்கையிலும் அவன் குடித்துவிட்டு ரயிலில் விழுந்து தான் தன் கை, காலை இழந்தான் என்பது வெட்ட வெளிச்சமானது.
உண்மை என்னவென்று வெட்ட வெளிச்சமானபின், தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள், தாங்கள் நடத்திய அந்த நயவஞ்சக நாடகத்திற்கு மெல்லிய குரலில் வருத்தப்பட்டுக் கொண்டு அமைதியாகி விட்டனர். பல காதல் ஆதரவு நாடகங்களில் இப்படியெல்லாம் பொய்களும் புரட்டுகளும் கரைபுரண்டு ஓடியுள்ளன.
நீ எனக்கு வேண்டும். நான் உன்னை அடைந்தே தீருவேன். என்னைத் தவிர வேறு யாரும் உன்னை அடைய முடியாது என்றெல்லாம் ஒரு பெண்ணிடம் தொடர்ந்து வம்பு செய்து வருகின்ற ஒரு போக்கிரி, ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணைக் கொலையும் செய்து விடுகிறான்.
ஒரு பெண் தனக்குப் பிடிக்காதவனை நிராகரிக்கும் உரிமையற்றவளாகி உயிரை இழக்கிறாள் என்றால், இது சாதிப் பிரச்னையோ, காதல் பிரச்னையோ, ஒருதலைக் காதல் பிரச்னையோ, ஆண் - பெண் காதல் உரிமை பிரச்னையோ அல்ல.
இது முழுக்க முழுக்க ஒரு சமூகப் பிரச்னை. மகளிர் பாதுகாப்பினை கேலிக்கும், கேள்விக்கும் உள்ளாக்குகின்ற பிரச்னை. மகளிருக்கான கல்வி உரிமைகளையும், வேலை செய்யும் உரிமைகளையும் மறைமுகமாக அச்சுறுத்துகிற பிரச்னை.
இத்தகைய புரிதல்கள் ஏதும் இல்லாமல் போக்கிரிக் கும்பல்களை காதலன்களாகவும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிப் போகிறவர்களாகவும் சித்திரித்து அவர்களுக்கு வக்காலத்து வாங்கி பேசுவது என்பது நாகரிக சமூகத்துக்கும், பெண் இனத்துக்கும் செய்யப்படுகின்ற இழிவானதொரு இரண்டகமாகும்.
இத்தகைய இரண்டகர்களை முறியடித்து அம்பலப்படுத்த வேண்டியது மனச்சாட்சியுள்ள, பெண்களின் மேன்மையை விரும்புகின்ற அனைவரது உரிமையும் கடமையும் ஆகும்.
என்னை நிராகரிப்பவள், எனக்கு கிடைக்காமல் வேறு எவனுக்கோ கிடைக்கப் போகிறவள், இந்த உலகில் வாழவே கூடாது என்றெண்ணிக் கொலை செய்கின்ற, காதல் எனும் பெயரில் பெண்களை கடத்துகின்ற, காதல் கட்டப் பஞ்சாயத்துகளில் பணம் பறிக்கின்ற கும்பல்களுக்கு எப்படிப் பாடம் புகட்டப் போகிறீர்கள் என்று இளம்பெண்களின் கல்லறைகளில் இருந்து கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடை காண வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும்
இருக்கிறது.

Sunday, October 2, 2016

HC rejects plea to ban private practice of government doctors

  • SPECIAL CORRESPONDENT
THE HINDU
Petitioner has not mentioned where there is a legal bar on their pratice in private hospitals’

The Madras High Court Bench here has dismissed a public interest litigation petition seeking a direction to the State government and Tamil Nadu Medical Council to ban private practice of government doctors in all cadres in order to help them concentrate more on treating patients at government hospitals.

A Division Bench of Justices S. Nagamuthu and M.V. Muralidaran rejected the plea on the ground that the petitioner had not mentioned any specific instance of a government doctor involved in private practice of medicine and where there was any legal bar for government doctors to practice in private hospitals and nursing homes.

V Aarthi of North Gandhi Gramam near Karur district had filed the PIL petition in 2012 on the ground that it was not appropriate to permit government doctors alone to take up private practice when all other government servants including the policemen were regulated by a code of conduct which prohibited them from engaging in private businesses for profit.


“All government servants including doctors should be treated alike without any partiality,” she said and claimed that private practice by government doctors was banned in many States including Jammu and Kashmir.

Stating that a government woman doctor was hacked to death in her clinic in Thoothukudi in 2012 by the husband of a pregnant woman who died, the petitioner claimed that the doctor had to face such a serious consequence because of her failure to concentrate on treating the patient due to overwork.

“Government doctors should render their full service to the patients coming to the government hospitals but they unfortunately tended to focus on private practice and hence it should be immediately banned,” she said.



×

Saturday, October 1, 2016

மஹாளய அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியம்?!


மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இன்று காலை புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மறைந்த தங்களது முன்னோர்களை நினைத்து, பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து நீர்நிலைகளில் நீராடி, எள்ளும் தண்ணீரும் அர்ப்பணித்தனர்.

மற்ற அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை, நாம் இந்த மஹாளய அமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான்.

அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.



மஹாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றாகல், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் என்று கூறுகிறோம்.



மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது.

மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.

மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன.

1ம் நாள் - பிரதமை - செல்வம் சேரும்

2ம் நாள் - துவிதியை - பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம்.

3ம் நாள் - திரிதியை - நினைத்த காரியங்கள் நிறைவேறும்

4ம் நாள் - சதுர்த்தி - பகையிலிருந்து எளிதில் விடுபடலாம்.

5ம் நாள் - பஞ்சமி - அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும்.

6ம் நாள் - சஷ்டி - பேரும், புகழும் தேடி வரும்.

7ம்நாள் - சப்தமி - தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும்.

8ம் நாள் - அஷ்டமி -அறிவு கூர்மை பெறும்.

9ம் நாள் நவமி - நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும்.

10ம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும்.

11ம் நாள் - ஏகாதசி - கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும்.

12ம் நாள் - துவாதசி - ஆபரணங்கள் சேரும்.

13ம் நாள் - திரயோதசி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும்.

14ம் நாள் - சதுர்த்தசி - பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும்.

15ம் நாள் - மஹாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.



இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

-ரா.வளன் படம்: உ.பாண்டி

எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு தரவிருந்த பொறுப்பு....அவிழ்க்கப்படாத அரசியல் ரகசியம்! 

vikatan.com


நடிகர் திலகத்தின் 89 வது பிறந்தநாள் இன்று...அவரைப்பற்றிய சுவாரஸ்யங்கள் சில....

நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் எடுத்துக்கொண்டிருந்த அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு ஒருநாள் பங்குதாரரான தயாரிப்பாளரின் நண்பர் அவரைப் பார்க்க வந்திருந்தார். படத்தின் கதாநாயகனுக்கு அதுதான் முதற்படம். படப்பிடிப்பை கொஞ்சநேரம் பார்த்த அவர், 'இந்த குதிரைமூஞ்சிக்காரனையா கதாநாயகனா போட்டிருக்க...வாயை இப்படி பிளக்கிறானேய்யா, படம் விளங்கினாப்லதான்' என அந்த நடிகரின் காதுபடவே பேசிவிட்டுச்சென்றார். அதைக்கேட்டுக்கொண்டிருந்த அந்த அறிமுக நடிகர் நொந்துபோனார். கவலைப்படாதய்யா எனஅவரை தேற்றிய தயாரிப்பாளர், படப்பிடிப்பை அத்துடன் நிறுத்தி அவரை சில மாதங்களுக்கு தனது சொந்த செலவில் சுற்றுலாத்தலம் ஒன்றுக்கு அனுப்பிவைத்தார். எல்லா செலவுகளும் தயாரிப்பாளருடையது.

திரும்பிவந்த சிவாஜியைப்பார்த்த தயாரிப்பாளரின் நண்பர் 'யாருப்பா இது புது கதாநாயகனா என்றார்...விபரத்தைச்சொன்னதும் அந்த தம்பியா இது...'என ஆச்சர்யத்தில் உச்சிக்கே போனார் தயாரிப்பாளர். அந்தளவுக்கு பொலிவாய் மாறியிருந்தார் அந்த அறிமுகநடிகர். நண்பரின் சொன்னதற்காக தன்னை படத்திலிருந்து நீக்காமல் தொடர்ந்து நடிக்க தனக்கு அளித்த அந்த தயாரிப்பாளரை தன் இறுதிக்காலம் வரை ஆண்டுதோறும் பொங்கலன்று அவரது சொந்த ஊரான வேலுாருக்கு சென்று ஆசிர்வாதம் பெற்று திரும்புவதை வழக்கமாக்கிக்கொண்டார் அந்த நடிகர். 1952 ல் வெளியாகி தமிழ்சினிமாவிற்கு புதியதொரு பாதையை வகுத்த அந்த திரைப்படம் பராசக்தி...அந்த கதாநாயகன் பின்னாளில் உலகப்புகழ்பெற்ற சிவாஜிகணேசன்...இப்படி சிவாஜியின் நடிப்பு வாழ்க்கையின் துவக்கமே ஒரு தன்னம்பிக்கைக்கதை...

விழுப்புரம் சின்னய்யா கணேசன் என்பதுதான் வி.சி கணேசன்...அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்துசாம்ராஜயம் என்ற நாடகத்தில் சிவாஜி கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்ததால், நாடகத்தின் நுாறாவது அரங்கேற்றத்தில் பெரியார், கணேசன் இனி சிவாஜி கணேசன் என பட்டம் வழங்கினார் . அந்த நாடகத்தில் நடிக்க தனக்கு வந்த வாய்ப்பை மறுத்து கணேசனுக்கு பரிந்துரைத்தது எம்.ஜி.ஆர் என்பது இன்னொரு சிறப்பு.



தியாகராஜபாகவதர்,பியு சின்னப்பா என சொந்தக்குரலில் பாடி நடிக்கும் நடிகர்களின் காலம் முடிந்தசமயம் சிவாஜி, எம்.ஜி.ஆர் கே.ஆர் ராமசாமி, எஸ்.எஸ்.ஆர் ஜெமினி கணேசன் என அடுத்த தலைமுறை நடிகர்கள் உருவானார்கள். அதில் தெளிவான தமிழ் உச்சரிப்பு, அழுத்தமான பாத்திர வடிவமைப்பு, உருக்கமான நடிப்பு என முதல்வரிசையில் நின்றவர் சிவாஜி.
எம்.ஜி.ஆரைப்போன்றே சிவாஜியும் அண்ணா மீது அளவற்ற காதல் கொண்டவர். ஆனால் அண்ணாவின் மற்ற தம்பிகள் அவருக்கு உரிய இடம் கிடைக்காமல் பார்த்துக்கொண்டனர். பின்னாளில் அவர் திருப்பதி சென்று வந்த விஷயத்தை பெரிதாக்கி மனஉளைச்சலை ஏற்படுத்தினர். நொந்துபோய் திமுகவிலிருந்து வெளியேறினார் சிவாஜி.

திருப்பதி சென்றால் திருப்பம் நேரும் என்பார்கள். சிவாஜிக்கு திருப்பதி 2 விதத்தில் திருப்புமுனையானது. அங்குதான் அவரது திருமணம் நடைபெற்றது. இறுதிவரை தன் மனைவியுடன் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார் சிவாஜி. ஆனால் அரசியலைப்பொறுத்தவரை அவருக்கு வேறு திருப்பம் நிகழ்ந்தது. அண்ணாவிடம் ஈர்ப்பு கொண்டு திமுகவில் இணைந்து பணியாற்றிய சிவாஜி, 50 களின் மத்தியில் திருப்பதி சென்றார். திரும்பிவந்தபோது அரசியல் களம் அதகளப்பட்டது. திருப்பதி கணேசா திரும்பிப்போ கணேசா என அவரது பட பாணியிலேயே போஸ்டர் ஒட்டி திமுகவினர் எதிர்ப்பு கிளப்பினர். நாத்திகக் கட்சியில் இருந்துகொண்டு திருப்பதி போனதால் இந்த எதிர்ப்பு. தியாகி குடும்பத்தை சேர்ந்தவரான அவரை காங்கிரஸ் அணைத்துக்கொண்டது.

திரையுலகிலும் அரசயலிலும், எதிரும் புதிருமாக எம்.ஜி.ஆர்-சிவாஜி விளங்கினாலும் தனிப்பட்ட முறையில் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டிக்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். அமெரிக்கா அரசின் அழைப்பின்பேரில் அஙகு சென்று வந்த சிவாஜிக்கு நடிகர் சங்கம் சார்பில் பெரும் வரவேற்பை நிகழ்த்தினார் எம்.ஜி.ஆர். விமான நிலையத்திலிருந்து அவரை மாலை மரியாதையுடன் சாரட் வண்டியில் அழைத்துவந்தார். சிவாஜி- எம்.ஜி.ஆர் இடையே தொழிற்போட்டி உச்சத்தில் இருப்பதாக பத்திரிகைகள் எழுதிவந்த நேரத்தில் இந்த நிகழ்வு அதற்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தது. இதற்கென ஒரு சிறப்பு மலரை வெளியிட்ட எம்.ஜி.ஆர், அதில் எந்த நடிகனுக்கும் கிடைக்காத பேறு இது என்றும், சிவாஜி ஒரு மகாநடிகன் எனவும் ஈகோ இன்றி பாராட்டித்தள்ளினார். இறுதிக்காலம் வரை ஒருவர் வீட்டு நிகழ்ச்சியில் இன்னொருவர் பங்குகொள்வதை இருவரும் தவறாமல் கடைபிடித்தனர். சிவாஜி வீட்டுப்பிள்ளைகள் எம்.ஜி.ஆரை பெரியப்பா என்றே அழைப்பர். அத்தனை நட்பை பேணிவந்தனர் திரையுலகில்.



படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட மறுநிமிடத்திலிருந்து அந்த கதாபாத்திரதோடு ஒன்றிவிடுவார் சிவாஜி. தன் அருகில் இருப்பவர்களை கண்களால் அளவெடுப்பதுமனிதர்களை அவ்வப்போது உற்று கவனிப்பார். அவர்களுக்கு சிவாஜி ஏன் தன்னை அபபடி கவனிக்கிறார் என குழம்புவார்கள். அவரது திரைப்படம் வெளியாகும்போது அதற்கான விடை கிடைக்கும். ஆம். அவர்களின் உடல்மொழியை படத்தில அற்புதமாக வெளிப்படுத்தி பாத்திரத்துக்கு உயிர்கொடுத்திருப்பார். திருவருட்செல்வர் திரைப்படத்தில் சிவாஜியின் நடிப்புக்கு ஆதாரமானவர் காஞ்சி சங்கராச்சாரியார்.

நடித்துக்கொண்டிருக்கும்போதே தான் இறந்துவிடவேண்டும் என்பது சிவாஜியின் பெரும் ஆசையாக இருந்தது. அப்படி இறப்பதே தனக்கு பெருமையளிப்பதாகும் என தன் நெருங்கிய நண்பர்களிடம் சொல்வார். படப்பிடிப்புக்கு சென்றபோது எதிர்பாராமல் மரணமடைந்த முத்துராமனுக்கு நிகழ்ந்த இரங்கல் கூட்டத்தில் முத்துராமன் நம்மையெல்லாம் விட சிறந்த நடிகன்...அதனால்தான் தொழிலுக்கு சென்ற இடத்தில் இறந்தார் என நெகிழ்ந்தார் சிவாஜி. ஆனால் சிவாஜியின் இந்த ஆசை நிறைவேறாமல் போனது.



குடும்பத்தினர் மேல் அளவற்ற அன்பு கொண்டிருந்தவர் சிவாஜி. தன் 2 சகோதரர்கள் குடும்பங்கள் உட்பட அனைவரும் இறுதிவரை ஒன்றாகவே வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது. மாபெரும் நடிகன் என்றாலும் அவருக்கு கணக்கு வழக்கு தெரியாது. தன் படத்தில் தன் சம்பளம் என்னவென்று கூட கேட்டு அறிந்துகொள்ள மாட்டார். எல்லாவற்றையும் அவர் தம்பி சண்முகம் பார்த்துக்கொள்வார். தன் சகோதரர்கள் மீது அளவற்ற அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தார் சிவாஜி.

சிவாஜி தீவிர வேட்டைப்பிரியர். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சொந்த ஊருக்கு செல்லும்போது தனது நெருங்கிய நண்பர், வேட்டைக்காரன் புதுார் மாணிக்கத்துடன் துப்பாக்கி தோட்டா சகிதம் கம்பீரமாக காட்டுக்கு புறப்படுவது அவருக்கு பிடித்த விஷயம்.
சிவாஜியின் தந்தை காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்று சுதந்திரப்போரில் பங்கேற்ற தியாகி. ஆனால் சிவாஜிக்கு திராவிட இயக்கத்தின் மீதுதான் ஆசை உண்டானது. அண்ணாவின் தலைமை, முரண்பட்டு காமராஜர் தலைமை, காமராஜரின் மரணத்திற்கு பிறகு ஜனதா தளம் என பயணப்பட்டு தன் சேவைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காத விரக்தியில் இறுதியாக தமிழக முன்னேற்ற முன்னணியை துவங்கினார். திரையுலகில் ஈடில்லா புகழ்பெற்ற அவரால் அரசியலில் ஜொலிக்கமுடியவில்லை.



அமெரிக்கா சென்ற சிவாஜி விரும்பி பார்க்க விரும்பியது ஹாலிவுட் மார்லன் பிராண்டோவைத்தான். பார்த்ததும் அவரை பாராட்டித்தள்ளவேண்டும் என்ற கற்பனையுடன் சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி, சந்திப்பின்போது சிவாஜியை மார்லன் பிராண்டோ பாராட்டித்தள்ளிவிட்டார். நெகிழ்ச்சியின் விளிம்பிற்கு போனார் சிவாஜி.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் படத்திற்காக எகிப்து அதிபர் நாசர் கெய்ரோவிக்கு வர சிவாஜிக்கு அழைப்பு விடுத்தார். அங்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் ஒருநாள் மேயராக சிவாஜிக்கு மரியாதை அளிக்கப்பட்டது. அதன் சாட்சியாக அவருக்கு அந்நாட்டின் சின்னம் பொறித்த சாவியை வழங்கினார் எகிப்து அரசு. இந்த கவுரவம் பெற்ற ஒரு திரைக்கலைஞர் சிவாஜி மட்டுமே.



கட்சியிலும் ஆட்சியிலும் தன் கைமீறி நடந்த பல சம்பவங்களால் மனமும் உடலும் தளர்ந்து உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த எம்.ஜி.ஆரை அவரது இறுதிக்காலத்தில் சந்தித்தார் சிவாஜி. அப்போது தம்பி உனக்கு ஒரு பொறுப்பை தரப்போகிறேன். நாளை வா அதுபற்றி பேசலாம் என்றார் எம்.ஜி.ஆர். ஆனால் சிலவேலைகளால் சிவாஜியால் போகமுடியவில்லை. சில நாட்களில் எம்.ஜி.ஆரின் மரணம் நிகழ்ந்தது. எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு என்ன பொறுப்பை தர எண்ணியிருந்திருப்பார் என்ற ரகசியம் அந்த இரு திலகங்களுக்குள் முடிந்துபோனது.

- எஸ்.கிருபாகரன்

புதையல் ஆசை... நிர்வாண பூஜை..! திருச்சி திகில் கொலைகள்


திருச்சி மாவட்டத்தில் புதையல் ஆசை காட்டி 8 பேரை கொலை செய்தவர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிர்வாண பூஜை நடத்தி தந்தை உள்பட 8 பேரை கொலை செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த வேங்கூரைச் சேர்ந்தவர் தங்கதுரை. தி.மு.க பிரமுகர் ஒருவரின் உறவினர். இவர், கடந்த 7ம் தேதி மாயமானார். இவரது உடல் நிர்வாண நிலையில் கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் உள்ள வாய்க்காலில் கிடந்தது. அவரது மரணம் தொடர்பாக திருவெறும்பூர் போலீஸார் விசாரித்தனர். அப்போது தங்கதுரையின் நண்பர் சப்பாணியிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

விசாரணையின் போது சப்பாணி, தங்கதுரையை மட்டுமல்லாமல் தன்னுடைய தந்தை உள்பட 8 பேரை கொலை செய்ததை போலீஸாரிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு சப்பாணியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் சொன்ன இடங்களுக்கு சென்று ஒவ்வொரு உடல்களை தோண்டி போலீஸார் எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், கடந்த 2012ல் திருவெறும்பூர் மேல குமரேசபுரத்தைச் சேர்ந்த கோகிலா (70), பாப்பாக்குறிச்சி அற்புதசாமி (70), 2015ல் கீழ குமரேசபுரம் விஜய் விக்டர் (27), கிருஷ்ணசமுத்திரம் தெக்கன் (75), 2016ல் கூத்தைப்பார் வடக்கு ஹரிஜனத் தெருவைச் சேர்ந்த சத்தியநாதன் (45), உப்பிலியபுரம் வடகாடு குமரேசன் (50) ஆகியோரை சப்பாணி கொலை செய்துள்ளார். அடுத்து சப்பாணி, தன்னுடைய தந்தை தெக்கனையும் (75) கொலை செய்துள்ளார். பணம், நகைகளை கொள்ளையடிக்க சப்பாணி இந்த கொலைகளை செய்துள்ளார்" என்றனர்.

8 பேரையும் சப்பாணி கொலை செய்த ஸ்டைலே தனி என்கிறார் போலீஸ் உயரதிகாரி ஒருவர். "கோயிலுக்கு வரும் நபர்களிடம் சப்பாணி, முதலில் பேச்சுக் கொடுப்பார். அப்போது அவர்களின் வேண்டுதல்களை தெரிந்து கொள்வார். அதில் பணம் தேவைக்காக வருபவர்களிடம் காட்டில் புதையல் இருக்கிறது. பூஜை செய்தால் அதை எடுத்துவிடலாம் என்று ஆசைவார்த்தை கூறுவார். சப்பாணியின் பேச்சை நம்புபவர்கள் அந்த பூஜையில் கலந்து கொள்வார்கள். அவ்வாறு பூஜைக்கு சென்றவர்களை கொன்று நிர்வாணமாக புதைப்பதை சப்பாணி ஒரு வேலையாக வைத்துள்ளார். அவரது பேச்சு, நடவடிக்கை எல்லாம் பார்க்கும் போது சைக்கோ போல தெரிகிறது. சப்பாணி சொன்ன தகவலின்படி கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளோம். பிறகு டி.என்.ஏ பரிசோதனை நடத்தி சம்பந்தப்பட்டவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும். 7 பேரை கொன்ற சப்பாணி, தன்னுடைய தந்தை தெக்கனையும் கொலை செய்துள்ளார். அவரையும் புதையல் ஆசை காட்டி கொலை செய்தாரா என்று விசாரித்து வருகிறோம்" என்றார்.

கொலை செய்வது எப்படி?

புதையல் ஆசையில் சப்பாணியுடன் செல்லுபவர்களிடம் நிர்வாணமாக இருந்து பூஜை செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்று சொல்வார் சப்பாணி. அதன்படி அவர்களும் நிர்வாணமாகவே பூஜையில் கலந்து கொள்வர். மந்திரங்கள் கூறியப்பிறகு சாமி கும்பிட கண்களை அவர்கள் மூடும் போது கல்லை தூக்கிப் போட்டு அவர்களை கொலை செய்துவிடுவாராம் சப்பாணி. இதன்பிறகு அவர்களிடமிருந்த பணம், நகை உள்ளிட்டவைகள் கொள்ளையடித்து விட்டு உடலையும் காட்டுப்பகுதியில் புதைத்து விடுவாராம். இதனால் சப்பாணி செய்த கொலைகள் யாருக்கும் தெரியவில்லை. தங்கதுரை கொலையில் சிக்கியபிறகே அவரது முழு சுயரூபமும் போலீசுக்கு தெரியவந்துள்ளது. சப்பாணிக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். மேலும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

எஸ்.மகேஷ்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...