Monday, October 10, 2016

DU Not At Fault For Denying Admission To Student Not Carrying Required Documents: Delhi HC
The Delhi High Court in Bhim Shankar Thakur vs Delhi University & Anr., rejected the writ petition wherein Bhim Shankar prayed that Delhi University (DU) should take on record his degree certificate and grant him admission to LLB course for academic session 2016-2017.

 The court, through Justice Sanjeev Sachdeva, heard the petitioner but decided against directing the writ of mandamus as prayed. Bhim Shanka appeared for the DU LLB entrance examination and secured rank 767 in the OBC category. As per his rank, he was called for counselling on 22.08.2016, but he could not submit the original degree of his qualifying examination as was required by the university. Bhim Shankar had passed the qualifying examination in 2012, but had not collected the degree from the university.

 After the DU administration refused him admission due to failure to submit the required original documents, Bhim Shankar collected the degree from the university concerned – Chaudhary Charan Singh University, Meerut, on 08.09.2016, and approached Delhi University to submit the same. But, DU did not accept the said degree. Bhim Shankar’s counsel contended that he was not in a position to produce any proof that the degree had not been issued by the university till the date of counselling.

 But he prayed that he should be granted admission according to his rank. The court relied on the judgment in a previous case of Delhi High Court in Rahul Kumar Singh versus University of Delhi & Ors, with identical circumstances wherein it was held that “Degree not collected cannot be equated with Degree not issued.” 

It was also held that it was mandatory for the candidates to report with the documents in original at the specified date and time for counseling, failing which they will forfeit their claim for admission.

 Agreeing that the decision of the judgment in the above mentioned case was applicable in the case concerned as well, the court said: “Since the petitioner failed to appear for counselling in terms of the notification with the original documents, the action of the respondent – university in denying admission to the petitioner and not entertaining the Degree produced at a subsequent date cannot be faulted.”

Read more at: http://www.livelaw.in/du-not-fault-denying-admission-student-not-carrying-required-documents-delhi-hc/
Court Stenographer’s Shorthand Note Book Not Public Record Under RTI: Delhi HC 

The High Court of Delhi on Friday held that the Court stenographer’s Shorthand note book is not a “record” held by a public authority and therefore cannot be sought under the Right to Information Act. 

The Court noted that neither are shorthand books retained, nor can they be equated with a judgment or an order. Justice Sanjeev Sachdeva hence observed, “Shorthand notebook can at best be treated as a memo of what is dictated to a steno to be later transcribed into a draft judgment or an order. When draft judgments and order do not form part of a ‘record’ held by a public authority, a shorthand note book which is memo of what is dictated and which would later be typed to become a draft judgment or an order can certainly not be held to be ‘record’ held by a public authority.”

The Petitioner, Mr. Tapan Choudhury had challenged an order passed by the Central Information Commission in March this year, refusing to provide him copies of the shorthand note book in which the Stenographer takes dictation of the Court. Mr. Choudhary had reportedly sought shorthand notes of the stenographer taken on May 27, 2013, claiming that the Court had passed an order of ex-parte injunction in a suit initiated by a American multinational technology company on the said date, without any party appearing before it. Deciding against the applicant, the Court relied on the decision in the case of Secretary General, Supreme Court of India v. Subhash Chandra Agarwal, AIR 2010 Delhi 159, wherein the Full Bench of the High Court had held that even notes taken by Judges while hearing a case cannot be treated as final views expressed by them on the case, and cannot be held to be a part of a record ‘held’ by the public authority.

Read more at: http://www.livelaw.in/court-stenographers-shorthand-note-book-not-public-record-rti-delhi-hc/

Fate of several foreign students in medical colleges uncertain after SC's ruling on NEET

NEW DELHI: Hundreds of foreign students who had enrolled this year for undergraduate programmes in private medical colleges in India now face an uncertain future due to a "tricky" domestic legislation regarding entrance examination for them.

Foreign students in India come to pursue MBBS or BDS courses either through an institutional quota system, like in government colleges, or by directly applying to private colleges.

But, due to the recent ruling of the Supreme Court on making the National Eligibility-cum-Entrance Test (NEET) mandatory for admission to private and deemed institutes, they are now facing uncertainty as they do not fall under the NEET criteria.

The NEET eligibility criteria says only Indian nationals or Overseas Citizens of India can take the exam. It does not have any mention of foreign nationals.

The colleges have allegedly asked foreign students to leave the campuses by "next week".

Tilak Silva, father of Shenali, who came from Colombo to pursue BDS at Manipal University, said, "My daughter and other foreign students are suffering now only because there is this tricky NEET procedure.

"First foreigners cannot write NEET exam and now these students are being compared with domestic ones. Where should we go now as we have been asked to leave the campus by October 14. The career of our children has been jeopardised."

Silva also alleged that after the apex court's ruling, the Medical Council of India (MCI) and Dental Council of India (DCI) have been "pressurising" colleges to "allow (admission to) only those students who have taken NEET".

"How can the decision be so blanket. I have already intimated the Sri Lankan High Commission in Delhi and the Foreign Office in Colombo about this situation. We also appeal to the authorities and the Indian Prime Minister to allow some stop-gap arrangements for this 2016-17 batch so that their year is not wasted," he said.

When contacted, DCI President Dr Dibyendu Mazumdar said, "It is the verdict of the Supreme Court, what can we do about it. Colleges have to abide by it."

The situation seems anomalous given India's international policy on education and government sources said that they are looking into the matter.

காதல் வழிச் சாலை 03: ‘நோ’ சொன்னால் ஏத்துக்கணும்!


ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகிற ஈர்ப்பு குறித்து நான் எழுதியதைப் படித்த பலரும், “எல்லாமே ஈர்ப்பு என்றால் எது காதல்? ஈர்ப்பு காலப்போக்கில் காதலாக மாறாதா? ஈர்ப்பு வருவதே தவறா, நாங்கள் என்ன செய்வது?” என்று சரமாரியாகக் கேள்விக் கனைகளைத் தொடுத்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே பதில்தான். ஈர்ப்பு என்பது ஒரு கட்டம்தான் என்பதை முதலில் உணர வேண்டும். காலப்போக்கில் அது காதலாக மாறலாம், மாறாமலும் போகலாம்.

அவசரக் காதல் வேண்டாமே

ஒரு பெண்ணையோ, ஆணையோ பார்த்ததும் காற்றில் மிதப்பதுபோல துள்ளலான உணர்வு தோன்றுவதற்குக் காரணம் மூளையில் சுரக்கும் வேதிப்பொருட்கள்தான். ‘டோப்பமைன்’ (Dopamine) என்ற ‘நியூரோ டிரான்ஸ்மிட்டர்’ அவற்றில் முக்கியமானது. காதல் கெமிஸ்ட்ரியின் கேப்டன் இவர். இயல்பாக எழும் இந்த அழகிய உணர்வுகளைக் கட்டுப்படுத்த மெனக்கெட வேண்டாம். ஆரம்பகட்ட உணர்வுப் பிரவாகமான இந்த ஈர்ப்புதான் காதல் என்ற அவசர முடிவுக்கும் வர வேண்டாம்.

ஈர்ப்பின் மறுபக்கம்

அழகான ஈர்ப்பில் ஆபத்துக்களும் இருக்கத்தான் செய்கின்றன. எதிர் பாலினம் மீது ஏற்படும் முதல் கட்ட ஈர்ப்பு உணர்வை ‘க்ரஷ்’ (crush) என்றும் சொல்வார்கள். இந்த உணர்வின் ஆயுட்காலம் ஒன்றரை முதல் மூன்று ஆண்டுகள்வரைதான் என்கின்றன பல உளவியல் ஆய்வுகள். அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த உணர்வுகளின் வீச்சு குறையத் தொடங்கும். அதற்குப் பிறகு பார்ட்னரின் மறுபக்கம் தெரிய ஆரம்பிக்கும். பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தலை தூக்கும்.

நம்மவரைப் பற்றிய எதிர்மறை விஷயங்களை ஈர்ப்பு கட்டத்தில் கவனித்திருக்க மாட்டோம். கவனிக்கவும் முடியாது. ஆனால் உணர்ச்சிகள் அடங்கும் நேரம் வந்தவுடன் உண்மைகள் மேலெழும்பத் தொடங்கும்.

இந்த ஈர்ப்பில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. ஒருவர் மீது அதீத ஈர்ப்பில் இருக்கும்போது, அவரைத் தவிர இந்த உலகில் வேறெதுவுமே நம் கண்களுக்குத் தெரியாது. வீடு, நண்பர்கள், சமூகம் என்று எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம்.

ஈர்ப்பில் விலகல் வந்துவிட்டால் உற்சாகம் வடிந்துபோகும். இந்த உலகமே நிறமிழந்துவிட்டதுபோலத் தோன்றும். யாரையும், எதையும் பிடிக்காது. ஓரளவு தெளிவுடன் இருந்தால் இவற்றையெல்லாம் கடந்து வந்துவிடலாம்.

மறுத்துவிட்டார் தோழி

பலர் தங்களுடைய மனக் குழப்பங்களை என்னிடம் மின்னஞ்சல் வாயிலாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றில் ஒரு மின்னஞ்சலைப் படித்ததும் என்னால் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதை உங்களுடன் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

“நான் பொறியியல் இறுதியாண்டு படிக்கிறேன். நெருங்கிப் பழகிய தோழி ஒருவரை மனதார நேசிக்கிறேன். சமீபத்தில் என் காதலைச் சொன்னேன். மறுத்துவிட்டார். நண்பன் என்ற எல்லைக்கு மேல் உன்னை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்கிறார். என்னால் அப்படி இருக்க முடியவில்லை. படிக்க முடியவில்லை. எதன் மீதும் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த மனச்சோர்விலிருந்து வெளியே வரவும் முடியவில்லை. எல்லோர்

மீதும் எரிந்து விழுகிறேன். சமயங்களில் உலகமே இருண்டு போனது போன்ற மன அழுத்தத்தை உணர்கிறேன். அவர் என் வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு உதவுங்கள் ப்ளீஸ்….”

காதலுக்குத் தோல்வியில்லை

இந்த இளைஞர் மட்டுமல்ல, நம் சமூகத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சினை இது. நம்மில் பலருக்கும் நிராகரிப்புக்கும் தோல்விக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. காதலில் ஒருவரை ஒருவர் நிராகரிக்கலாம், ஆனால் தோற்கடிக்க முடியாது. காரணம் காதலுக்கு எப்போதும் தோல்வியில்லை.

சரி, இந்த இளைஞரின் விஷயத்துக்கு வருவோம். சகோதரா, ‘நான் உன் வாழ்க்கைத் துணை இல்லை’ என்று புரியவைத்ததற்காக உன் தோழிக்கு நன்றி சொல். காதல் என்பது இரு கை ஓசை. ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது மட்டுமல்ல காதல். இருவரும் சேர்ந்து ஒரே திசையில் பார்ப்பதே காதல்.

உங்கள் மீது காதல் இல்லை என்று சொல்லும் பெண்ணின் நிராகரிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். கட்டாயப்படுத்தி மணம் புரிந்தாலும் அன்பு இல்லாமல் தொடங்கும் வாழ்க்கை நிச்சயம் இனிக்காது. ஒவ்வொரு தடங்கலுக்கு அப்பாலும் அதைவிட ஏதோவொன்று பெரிதாக, நல்லதாக நமக்காகக் காத்திருக்கிறது என்று நம்புங்கள்.

என் வலி எனக்குத்தான் புரியும் என்று நீங்கள் புலம்பலாம். மூளையில் நடக்கும் ரத்த ஓட்டம் போன்ற விஷயங்களைப் பதிவு செய்வதற்கு fMRI என்ற பரிசோதனை உதவுகிறது. உடல் வலியால் துடிப்பவர்களுக்கு இந்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அதே போல் காதல் தோல்வியில் சிக்கி, நிராகரிப்பின் வலியில் இருப்பவர்களுக்கும் இதே சோதனை நடத்தப்பட்டது. முடிவு அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. காரணம் உடல், மனம் இரண்டின் பாதிப்புக்கும் மூளை ஒரே விதமாகத்தான் செயல்பட்டிருக்கிறது. அதனால் மன வலி, உடல் வலியைவிட அதிகம் என்ற பிரமையை விட்டுவிடுங்கள்.

நதிபோல ஓடிக்கொண்டிரு

முதலில் கழிவிரக்கத்தை ஒழித்துக் கட்டுங்கள். அடுத்து என்ன, என்று நதிபோல ஓடிக்கொண்டிருக்க வேண்டும். உங்கள் திறமைகள், நண்பர்கள், உறவினர்கள் என்று உங்களைச் சுற்றி நல்ல விஷயங்கள் எத்தனையோ உண்டு. அதையெல்லாம் நினைத்து, நிராகரிப்பை மறந்துவிட்டு மனதை மடைமாற்றுங்கள்.

முடிந்தவரை உங்கள் தோழியைப் பார்ப்பதைத் தவிருங்கள். பார்க்க நேரிட்டாலும் கண்ணியமான இடைவெளியோடு பேசுங்கள். அவர் குறித்த நினைவுகளை உங்கள் மனதிலிருந்து நீக்க முற்படுங்கள். அனைத்துக்கும் மேலாக வாழ்க்கையில் ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அதை நோக்கிப் பயணப்படுங்கள். அந்தப் பாதையில் காதல் தானாகவே வந்து உங்கள் கைகளில் சேரும். வாழ்த்துகள்!

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

உலக மனநல நாள் அக்டோபர் 10

# இந்தியாவில் நான்கில் ஒரு பெண், பத்தில் ஒரு ஆண் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார்.

# இந்தியாவில் 12 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

# இந்தியர்களில் மன அழுத்தத்துக்கான முதல் அறிகுறி வெளிப்படும் சராசரி வயது 31.9. வளர்ந்த நாடுகளில் இது இன்னும் குறைவான வயதாக இருந்தாலும், இந்தியாவில் இந்த சராசரி வயது தற்போது குறைந்துவருவது கவலையளிக்கிறது.

# பதின்பருவ வயதினரில் மன அழுத்த அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்களில் 45 சதவீதத்தினர் மது அல்லது போதைப்பொருளை நாடுகின்றனர்.

# மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் களில் 67 சதவீதத்தினர் தற்கொலை மனப்பான்மையைக் கொண்டிருக்கின் றனர். 17 சதவீதத்தினர் தற்கொலைக்கு முயற்சிக்கவும் செய்கிறார்கள்.

மன அழுத்தத்தால் உயிரை மாய்த்துக்கொண்டவர்கள்:



> பிரிட்டன் பெண் நாவலாசிரியை வர்ஜீனியா ஊல்ஃப்

> பாலிவுட் இயக்குநர் குரு தத்

> ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ்

> பாலிவுட் நடிகை ஜியா கான்

# இந்தியாவில் 2001-2014-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மன அழுத்தத்துக்கு எதிரான சிகிச்சை-மருந்து உள்ளிட்டவற்றின் சந்தை 528 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

# இந்தியாவில் இப்போது 3,500 உளவியல் நிபுணர்களே இருக்கிறார்கள். ஆனால், நம்முடைய மக்கள்தொகைக்கு 11,500 உளவியல் நிபுணர்கள் தேவை.

# இந்தியாவில் 2001-2014-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மன அழுத்தத்துக்கு எதிரான சிகிச்சை-மருந்து உள்ளிட்டவற்றின் சந்தை 528 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

# இந்தியாவில் இப்போது 3,500 உளவியல் நிபுணர்களே இருக்கிறார்கள். ஆனால், நம்முடைய மக்கள்தொகைக்கு 11,500 உளவியல் நிபுணர்கள் தேவை.



மன அழுத்தம் முக்கிய அறிகுறிகள்:

> எதைப் பார்த்தாலும் எதிர்மறை மனோபாவத்தை வெளிப்படுத்துவது

> சோக உணர்வில் மூழ்கிக் கிடப்பது

> எப்போதும் அதிக எரிச்சலுடன் இருப்பது

> எல்லாவற்றின் மீதும் திடீர் ஆர்வக் குறைவு

> மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நடத்தை

> குழு, கூட்டமாக இருக்கும்போதும்கூடத் தனித்திருப்பதாக உணர்வது



மன அழுத்தம் – மூளைக்குள் என்ன நடக்கிறது?

மூளை பின்மேடு (Hippocampus)

மூளையின் இந்தப் பகுதிதான் உணர்ச்சிகள், மனநிலை, நினைவு போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. மன அழுத்த நோயாளிகளிடம் இந்தப் பகுதியின் அளவு சுருங்கியிருக்கிறது.



உச்சித்தலை (Parietal lobe)

உணர்வுகளையும் பார்வை தகவல்கள், மொழி, கணிதம் போன்றவற்றை இப்பகுதியே செயல்படுத்துகிறது. மன அழுத்தத்தால் வளர்சிதை மாற்றத்தின் அளவு குறைவதால், உணர்வுகளை உணர்ந்துகொள்ளும் திறன் பாதிக்கப்படும்.



நார்எபிநெப்ரின் (Norepinephrine)

இது ஒரு நரம்பு கடத்தி ஹார்மோன். இது அதிகமாக இருந்தால் சீஸோஃபிரெனியா (மனச்சிதைவு), குறைவாக இருந்தால் மன அழுத்தம் ஏற்படும்.



செரடோனின்

மன அழுத்தம் சம்பந்தப்பட்ட முக்கிய ஹார்மோன். இது மிகக் குறைவாக இருந்தால் – மன அழுத்தம், மனக்கலக்கக் கோளாறுகள் ஏற்படலாம்.



டோபமைன்

இதுவும் ஒரு நரம்பு கடத்தி (ஒரு நரம்பணுவில் இருந்து மற்றொரு நரம்பணுவுக்கு சமிக்ஞைகளைக் கடத்தும் வேதிப்பொருட்கள்). இது அதிகமானால் – மனச்சிதைவு. குறைந்தால் – மன அழுத்தம்.



முன்தலைப் பெருமூளை (Prefrontal cortex)

மூளையின் முன்பகுதியில் உள்ள இது கருத்து, திட்டமிடுதல், முடிவெடுத்தல் போன்றவற்றில் பங்களிக்கிறது. மன அழுத்தம் கொண்டவர்களிடம் இது இயல்புக்கு மாறாக மிகவும் சோர்வடைந்துவிடுகிறது. முன்தலைப் பெருமூளையின் வலது பாதி, எதிர்மறை உணர்ச்சியை உருவாக்கக் காரணமாக இருக்கிறது. மன அழுத்தம் கொண்டவர்களிடம் இது மிகவும் பலவீனமாக இருக்கிறது.



அமிக்டாலா (Amygdala)

மூளையின் உணர்ச்சிக் கேந்திரமான இது, அளவுக்கு அதிகச் செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.


பல்கலைகளுக்கு சர்வதேச அந்தஸ்து :அக்., 28க்குள் கருத்து தெரிவிக்கலாம்

அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு, சர்வதேச தர அந்தஸ்து வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வரும், 28க்குள் கருத்துகளை அனுப்பலாம்.நாடு முழுவதும், 20 பல்கலைகளை முதலில் தேர்வு செய்து, அவற்றை சர்வதேச அந்தஸ்துக்கு உயர்த்தும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கான செயல் வடிவ அறிக்கையை, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது.

அதில், மத்திய, மாநில அரசுகளின் பல்கலைகள், ஐ.ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில், 20 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச அந்தஸ்து வழங்கப்படும் என்றும், அதற்காக, தனித்தனியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சர்வதேச அந்தஸ்து பெற கல்வி நிறுவனங்கள், சர்வதேச அளவிலான தொழில்நுட்பம், நுாலக வசதி கொண்டிருக்க வேண்டும். மேம்பட்ட உட்கட்டமைப்பு, ஆராய்ச்சி பிரிவுகள் இருக்க வேண்டும். உலக அளவில் பிரசித்தி பெற்ற ஆராய்ச்சி இதழ்களின் தொடர்பும், சர்வதேச அளவில் சிறந்த பேராசிரியர்களின் பயிற்சியும் இருக்க வேண்டும்.

செயல்வடிவ அறிக்கையில் உள்ள அம்சங்களை கல்வியாளர்கள், பொதுமக்கள், கல்வித்துறையினர் படித்து, wci-mhrd@oov.in என்ற இணையதள முகவரியில், வரும், 28க்குள் கருத்துகளை தெரிவிக்கலாம்.- நமது நிருபர் -
வயது, ஆண், பெண் பேதமின்றி குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் யார் மீதும் வழக்குபதிவு செய்யலாம் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

புதுடெல்லி


வயது, ஆண், பெண் என்ற பேதங்கள் இன்றி, குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் யார் மீதும் வழக்கு பதிவு செய்வதற்கு ஏதுவாக சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

குடும்ப வன்முறை சட்டம்

பெண்களை குடும்ப வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்காக குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் இருந்து 2 சிறுமிகள், ஒரு பெண், ஒரு சிறுவன் என 4 பேரை மும்பை ஐகோர்ட்டு விடுவித்து தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், அவர்கள் குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் வருகிற ‘அடல்ட் மேல்’ (வயது வந்த ஆண்) என்ற வரையறைக்குள் வரவில்லை என்பதால் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட பெண், சுப்ரீம் கோர்ட்டில் மேல்–முறையீடு செய்தார். இந்த மேல்–முறையீட்டு வழக்கை நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப். நாரிமன் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது.

2 வார்த்தைகள் நீக்கம்

விசாரணை முடிவில் குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை காக்கும் சட்டத்தின் பிரிவு 2 (கியூ)வில் இருந்து, ‘அடல்ட் மேல்’ (வயது வந்த ஆண்) என்ற வார்த்தைகளை நீக்கி உத்தரவிட்டனர்.

இதன் காரணமாக இனி ஆண், பெண் என்ற பாலின பேதங்களோ, வயது வந்தவர், வயதுக்கு வராதவர் என்ற வயது பேதங்களோ இன்றி யார் மீதும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வழி பிறந்துள்ளது.

தீர்ப்பின் சாராம்சம்

இது தொடர்பாக நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பின் முக்கிய சாராம்சம் வருமாறு:–

குறிப்பிட்ட சட்டப்பிரிவில் ‘அடல்ட் மேல் பெர்சன்’ (வயது வந்த ஆண்) என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பது, எந்த விதமான குடும்ப வன்முறையில் இருந்தும் பெண்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்துக்கு முரணாக அமைந்துள்ளது.

எனவே ‘அடல்ட் மேல் பெர்சன்’ என்றிருப்பதில் ‘அடல்ட் மேல்’ என்ற 2 வார்த்தைகளை நீக்குகிறோம். இந்த வார்த்தைகள் பாரபட்சம் காட்டுவதாக அமைந்துள்ளன. இதனால் எந்த நோக்கத்துக்காக இந்த சட்டம் இயற்றப்பட்டதோ அதுவே பாதிப்புக்குள்ளாகிறது.

எனவே இந்த வழக்கில் மும்பை ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை ரத்து செய்கிறோம்.

‘அடல்ட் மேல்’ என்ற வார்த்தைகள் இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14–உடன் ஒத்துப்போகவில்லை என்பதால் குடும்ப வன்முறை சட்டத்தின் பிரிவு 2 (கியூ)வில் இருந்து நீக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...