Wednesday, October 12, 2016

இளைஞர்களை சீரழிக்கும் போதை மேஜிக் காளான் ஆம்லேட்!

Return to frontpage

'சுற்றுலா'வில் இருந்து விலகி தனித்தீவாக மாறும் கொடைக்கானல்

ரம்மியான பள்ளத்தாக்குகள், மனதை மயக்கும் பனி மூட்டம், குளுகுளு சீதோஷ்ண நிலை. இதுதான் கடவுளின் கொடையான கொடக்கானலின் வசீகர அடையாளங்களாக இருந்தன.

கோடை காலம் வந்தவுடனேயே கொடைக்கானலை நோக்கி பலரையும் ஈர்க்கும் காந்த சக்தியாக திகழ்ந்த இந்த சுற்றுலா தலம், தற்போது வேறொரு விதத்தில் இளைஞர்களை கவரத் தொடங்கியுள்ளது. அது அவர்களின் வாழ்க்கையின் வீழ்ச்சிக்கு வித்திடுவதுதான் பெரும் சோகம்.

இயற்கை அழகைக் கண்டு ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள், தற்போது போதைப் பொருட்களுக்காக இங்கு வரத் தொடங்கியுள்ளனர். போதைப் பொருள் விற்பனைக்கான சர்வதேச சுற்றுலா தலமாக கொடைக்கானல் அவப்பெயரை பெறத் தொடங்கியுள்ளது.



மனதைக் கொள்ளை கொள்ளும் மலைகளின் இளவரசி | படம்: பி.டி.ரவிச்சந்திரன்

இந்த மோசமான கலாச்சார மாற்றத் தால் குடும்பத்துடன் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. சுற்றுலாவை நம்பியிருந்த உள்ளூர் மக்கள், வியாபாரிகள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

தமிழகத்தின் முக்கிய கோடைவாஸ் தலமான இங்கு, முந்தைய ஆண்டுகளில் சராசரியாக 60 லட்சம் உள்நாட்டுப் பயணிகளும், 60 ஆயிரம் வெளிநாட்டுப் பயணிகளும், வந்து சென்றனர்.

2014-ம் ஆண்டில் கொடைக்கான லுக்கு 54,35,469 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 51,376 பேர். 2015-ம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை 42 லட்சம் பேராகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை 30 ஆயிரமாகவும் குறைந்தது. 2014-ம் ஆண்டை ஒப்பிடும்போது 2015-ம் ஆண்டு சுற்றுலாப் பயணிகள் வருகை 22 சதவீதம் குறைந்துள்ளது. நடப்பு ஆண்டிலும் தொடக்கம் முதலே சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாகவே இருக்கிறது.

இளைஞர்கள் வருகை அதிகரிப்பு

இந்நிலையில், சமீபகாலமாக வார விடுமுறை நாட்களில் கர்நாடகா, கேரளா மற்றும் வடமாநிலங்களில் இருந்து ஆம்னி பஸ், கார், இருசக்கர வாகனங் களில் இளைஞர்கள், இளம்பெண்களின் வருகை அதிகரித்து வருகிறது. இவர்கள் கொடைக்கானலில் வந்து இறங்கியதும் கொடைக்கானலில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும் வட்டகானல் பகுதியை தேடிச் செல்கின்றனர். வட்ட கானலில் ரசிக்கும்படியான சுற்றுலா தலம் எதுவும் இல்லை. வழிநெடுக குண்டும் குழியுமாக வளைந்து நெளிந்து செல்லும் மண் சாலை, எதிரே வரும் வாகனங் களுக்கு வழிவிடுவதற்குக்கூட இடமில் லாத குறுகலான பாதையில் அங்கு செல்ல வேண்டும். அப்படியிருந்தும் இளைஞர்களும், வெளிநாட்டினரும் வட்டகானலுக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத அங்கு உள்ள ரிசார்ட், லாட்ஜ், காட்டேஜ் அறைகளில் தங்குகின்றனர்.

இதன் பின்னணியை விசாரித்தபோது அதிர்ச்சியளிக்கும் தகவல் தெரியவந்தது. இங்கு எளிதாக கிடைக்கும் போதைப் பொருட்களை நாடியே இளைஞர் அதிக அளவில் வருகின்றனர். விடுமுறையை கொண்டாட கொடைக்கானல் வரும் இளைஞர்கள், இங்கு போதைப்பொருட் களுக்கு அடிமையாகி தடம் மாறிச் செல்கின்றனர். இதன் காரணமாக கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலம் என்ற அந்தஸ்தை இழந்து போதை நகரம் என்ற பெயரை பெற்றுவிடுமோ என்று உள்ளூர்வாசிகள் ஆதங்கப்படுகின்றனர்.

இதுகுறித்து உள்ளூர்வாசிகள் சிலர் கூறியதாவது: இவர்கள் தங்குவதற்காக இப்பகுதிகளில் காட்டேஜ்கள், மர வீடு கள், சாதாரண வீடுகள் கட்டி சட்டத்துக்கு புறம்பாக சிலர் வாடகைக்கு விட்டுள்ளனர். அங்கேயே உணவுகள் சமைத்து வழங்க ஆட்கள் இருக்கிறார்கள்.

இந்த போதை விவகாரம் பற்றி அறியாமல், சுற்றுலாவுக்கென வரும் இளைஞர்களையும் வசீகர வார்த்தை களைப் பேசி, தங்களது வாடிக்கை யாளர்களாக போதைப்பொருள் விற்பனை கும்பல் மாற்றிவிடுகிறது.

வீட்டுச் சமையல், குறைவான வாடகை என்று சொல்லி இளைஞர்களை அழைத்துச் செல்லும் இந்த கும்பல், போதை மேஜிக் காளான் ஆம்லேட், சூப் ஆகியவற்றை அளிக்கின்றனர். ஒரு முறை வந்தவர்கள், பின் தானாகவே வாரந்தோறும் இங்கு வர ஆரம்பிக்கின்றனர். தற்போது வட்டகானலில் இது குடிசைத் தொழில்போல பெருகிவிட்டது.

மேலும், சில குறிப்பிட்ட இணைய தளங்களில் விடுமுறை கொண்டாட் டங்கள்’ என்ற பெயரில் விளம்பரம் வெளி யிட்டு சர்வதேச அளவில் இளைஞர்களை ஈர்க்கும் அளவுக்கு போதை கலாச்சாரம் கொடைக்கானலில் கொடிகட்டி பறக்கிறது.

கஞ்சாவும்...

பெங்களூருவில் இருந்து வாகனங் களில் மறைத்து வைத்து கொடைக் கானலுக்கு கஞ்சா கொண்டுவரப்படு கிறது. இது தொடர்பாகவும், போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத மாக செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்தும் போலீஸார், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். ஆனால், அவர்கள் எதுவும் தெரியாததுபோல் காட்டிக்கொள்கின்றனர். போதைப் பொருள் தொழிலில் ஈடுபடுவோரை நாங்கள் பிடித்துக் கொடுத்தாலும், அவர் களை உள்ளூர் போலீஸார் விட்டுவிடு கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதுகாப்பு இல்லை

சமூக ஆர்வலர் எபெக்ட் வீரா கூறியதாவது: சுற்றுலா வழிகாட்டிகளாக செயல்படுவோருக்கு பணம்தான் முக்கியம். சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து முடிந்த அளவு பணத்தை சுரண்டுகின்றனர். வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆரம்பித்து, கொடைக்கானல் வரை வாடகைக்கு கார் பிடிப்பது முதல் அறை வாடகை, சாப்பாடு என ஒவ்வொரு விஷயத்திலும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றப்படுகின்றனர்.



வட்டகானலுக்குச் செல்லும் சாலை.





வட்டகானலில் குறுகலான சாலையில் காணப்படும் போக்குவரத்து நெரிசல்.

இந்நிலையில், வழிகாட்டிகள் என்ற போர்வையில் போதை கும்பல் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளிடம், இங்கு ஹோட்டல் வாடகை அதிகமாக இருக்கும், வட்டகானல், மன்னவனூரில் குறைந்த வாடகைக்கு ரிசார்ட்கள், வீடுகள் கிடைக்கும் என்று கூறி அங்கே அழைத்துச் செல்கின்றனர். அங்கு வரும் ஆண்களுக்கு இருக்கும் பலவீனத்தைக் கண்டுபிடித்து அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப சிலருக்கு போதைப் பொருட்கள், சிலருக்கு வேறுவிதமான பலவீனங்கள் என அவர்களை ஒரு இடத்தில் முடக்கிவிடுகின்றனர். அவர்களுடன் வந்த பெண்களையும், கட்டாயப்படுத்தி தவறான செயலுக்கு உள்ளாக்கி நாசப்படுத்துகின்றனர். அவர்களை வீடியோ எடுத்து வெளியே சொன்னால் இணையத்தில் வெளியிடுவோம் என்று கூறி மிரட்டும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதனால், பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸில் புகார் அளிக்கச் செல்வதில்லை.

இந்த போதை கும்பலுக்கும், பாலியல் தொழில் கும்பலுக்கும் சர்வதேச அளவில் நெட்வொர்க் இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்.

கொடைக்கானலில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் சிலர், மேற்கொண்டு படிக்காமல் தடம்புரண்டு போதை கும்பலுக்கு ஆள்பிடித்து கொடுக்கும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த இளைஞர்களை அழிவிலிருந்து மீட்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கைவிரிக்கும் போலீஸ், வனத்துறை

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் கூறியதாவது: ஆரம்பத்தில் போதை காளான் விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்து அவர்களுக்கு 10 ஆண்டு தண்டனை கிடைக்கும் வகையில் முன்மாதிரி வழக்காக எடுத்து நடத்தினோம். ஆனால், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பட்டியலில், இந்த காளான் வரவில்லை என்பதால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். எனினும், தொடர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். அது சாதாரண வழக்குகள் என்பதால், சிறையிலிருந்து வெளியே வரும் நபர்கள் மீண்டும் இதே தொழிலில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் முருகன் கூறும்போது, “போதை காளானை வைத்திருப்பவர்களை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை. அதிலுள்ள போதை தரும் ரசாயனப் பொருளை தனியே எடுத்து விற்பவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்க முடியும். இருந்தபோதும் இந்த காளானை பறித்து வருபவர்கள் குறித்து தெரியவந்தால், தவறான நடவடிக்கையில ஈடுபடுவதாக அவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

உடல், மன நலனுக்கு ஆபத்து

மனநல மருத்துவர் ஆ.காட்சன் கூறும்போது, “மருத்துவத் துறையில் தீவிரமான போதைப் பொருளாக இந்த காளான் கருதப்படுகிறது. மேஜிக் காளானில் ஹாலுசிநோஜன் (Hallucinojen) வகையை சார்ந்த சீலோசைபின் என்ற போதையூட்டும் வேதியியல் பொருள் உள்ளது. இந்த போதைப் பொருள் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. இதை பயன்படுத்தும்போது அளவு கடந்த உற்சாகம், தன் உணர்வை மறந்து கிளர்ச்சி நிலைக்கு செல்வார்கள். புலன் உணர்வுகளில் தாறுமாறான மாற்றங்கள் ஏற்படும். ஒருமுறை பயன்படுத்திவிட்டால், மீண்டும் மீண்டும் பயன்படுத்த தூண்டப்படும் அளவுக்கு அடிமையாகிவிடுவார்கள்.



இது, கசப்பான சுவையாக இருப்பதால், காயவைத்து முட்டையில் கலந்து ஆம்லேட்டாகவும், சாக்லெட்டில் கலந்தும் சாப்பிடுகின்றனர். 8 முதல் 10 கிராம் காளானை பயன்படுத்தினால், 8 மணி நேரத்துக்கு உடலில் போதை மயக்கம் இருக்கும். ஆபத்தை ஏற்படுத்தும் இந்த காளானை தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு, மனச்சிதைவு நோய், வெறித்தனமான செயல்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இளைஞர்கள் கையில் பணப் புழக்கம் அதிகமாக இருப்பது, மது, சிகரெட் பழக்கம் உள்ளோருக்கு புதிய போதைப் பொருட்களை பரிசோதித்து பார்ப்பதில் ஏற்படும் ஆர்வம் ஆகியவையே இந்த போதை காளான் பயன்பாடு அதிகரிப்புக்கு காரணம். போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்க மேற்கத்திய நாடுகளில் போதிய மறுவாழ்வு மையங்களை அங்கு உள்ள அரசுகளே அமைத்துள்ளன. ஆனால், நம் நாட்டில் அதுபோன்ற வசதிகள் போதுமானதாக இல்லை. அப்படியே சிகிச்சை பெற்றாலும், மீண்டும் பாதை மாறாமல் இருக்க தொடர் கண்காணிப்பு இல்லை.

இந்த பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால், அதிலிருந்து மீள்வதற்கு தனிப் பட்ட மருந்து வகைகளோ, சிகிச்சைகளோ கிடையாது. எனவே, போதைப் பொருளுக்கு அடிமையாவதை தடுப்பதே சிறந்த வழியாகும்” என்றார்.

போதை காளானின் பின்னணி

1970-களில் ஹிப்பி கலாச்சாரத்தைப் பின்பற்றிய வெளிநாட்டினர் சிலர், கொடைக்கானலில் உள்ள வட்டகானல் பகுதியில் தங்கினர். இவர்கள்தான், இந்த மேஜிக் காளானை கண்டுபிடித்து போதைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். அதன்பின் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வந்து, இதை பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் அடையாளமாக இன்றும்கூட வட்டகானல் பகுதியில் உள்ள சில பெட்டிக்கடைகளில் ஹீப்ரு எழுத்துகளில் ‘மெனு’ அறிவிப்பு பலகைகள் காணப்படுகின்றன. இவர்களிடம் ஆரம்பித்த இந்த போதை காளான் பழக்கம், தற்போது உள்ளூர் போதை கும்பல் மூலம், சுற்றுலாவுக்கு வரும் இளைஞர்களிடம் பரவி வருகிறது.

போதை தரும் இந்த மேஜிக் காளான்கள் கொடைக்கானலில் அடர்ந்த வனப்பகுதிக்குள் இயற்கையாக வளர்கின்றன. இதை பறித்து வருமாறு வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்க செல்லும் பெண்களிடம் முன்பணம் கொடுத்து போதை கும்பல் அனுப்புகிறது. ஒரு காளானுக்கு ரூ.20 கூலி கொடுக்கின்றனர். இதற்கு வனத்துறையினர் சிலர் உடந்தையாக இருப்பதாக புகார் கூறப்படுகிறது.

MCI calls city hospital’s PG course in emergency medicine illegal


The Medical Council of India has issued a circular declaring the post-graduate course inemergency medicine offered by Kokilaben Dhirubhai Ambani Hospital in Andheriand AMRI Hospital inBhubaneshwar "illegal" and advised all concerned "not to enrol themselves in such courses" which were not accorded permission by Centre.

The circular said the PG diploma in HIV Medicine, Health Management, Maternal and Child Health and Geriatric Medicine offered by the Indira Gandhi Open University was also illegal.

According to the circular, these courses "have not been accorded permission by the central government as required under the Indian Medical Council Act 1956".

"Consequently, such qualifications are non-recognised and the holders thereof are not entitled to seek registration of additional qualification with the concerned medical council. Thus the offering of such post-graduate courses in modern medicine are illegal and void ab initio," it stated.

Under the provisions of the Indian Medical Council Act 1956, prior permission of the central government is required to establish a new medical college and impart courses in modern medicine. Such permission is granted on the recommendation of the MCI.


"The admissions made by any institution that imparts courses in modern medicine, namely MBBS or Diploma in various streams of medicine; MD/MS/DM/M.Ch without the prior of the central government is illegal," stated the circular dated September 28 and signed by MCI secretary Dr Reena Nayyar.

'WE HAVE US TIE-UP, DIDN'T CLAIM MCI NOD'

Dr Ram Narain, executive director of Kokilaben Hospital, Andheri, said the prospectus for the PG course in emergency medicine does not mention that it hasMCI recognition. "We take 12 students every year who are awarded a certificate of completion of training," said Dr Narain. He added that the students were aware about the course having an association with an American medical school and not the MCI.

Similarly, Dr Salil Mohanty, vice-president, AMRI, Bhubaneshwar, said, "Doctors who have taken admission in our PG course in emergency medicine know it is not recognised by the MCI. At the time of admission, they are clearly told about this. Such a course does not need the MCI's recognition."

நெட் தேர்வு: விண்ணப்பிக்க நவ.16 கடைசி நாள்: முதல்முறையாக"யோகா' பாடம் சேர்ப்பு


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் நடத்தப்படும் தேசிய அளவிலான "நெட்' தகுதித் தேர்வு, வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு வரும் 17 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள அறிவிப்பு:
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது. தற்போது வரும் டிசம்பர் மாதத்துக்கானத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு எப்போது?: இந்தத் தேர்வானது 2017 ஜனவரி 22 -ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
இதற்கு http://cbsenet.nic.in/cms/public/home.aspx என்ற இணையதளம் மூலம் வரும் 17-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க நவம்பர் 16 -ஆம் தேதி கடைசித் தேதியாகும். தேர்வுக் கட்டணத்தை நவம்பர் 17 -ஆம் தேதி வரை செலுத்த முடியும். தேர்வு தொடர்பான முழு விவரங்கள் சிபிஎஸ்இ இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
முதன் முறையாக யோகா பாடம்: வழக்கமாக பொருளாதாரம், அரசியல் அறிவியல், தத்துவம், சமூகவியல், வரலாறு, ஆங்கிலம், கணினி அறிவியல் என 80 -க்கும் அதிகமான பாடப் பிரிவுகளின் கீழ் நெட் தேர்வு நடத்தப்படும். இந்த முறை 100 பாடப் பிரிவுகளின் கீழ் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் யோகா பாடம் இம்முறை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
யோகா பாடத் திட்டமும், அதிலுள்ள முக்கிய அம்சங்களும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

Monday, October 10, 2016

Inline image 1



ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே - 8 எம்ஜிஆர்.. மனிதப் பறவைகளின் சரணாலயம்!

Read more at: http://tamil.filmibeat.com/anandha-then-kaatru-thalattudhe/anandha-then-kaatru-thalattudhe-8-042518.html


கவிஞர் முத்துலிங்கம்

 திரைப்படப் பாடலாசிரியர் மேனாள் அரசவைக் கவிஞர் இது - நாட்டைக் காக்கும் கை உன் - வீட்டைக் காக்கும் கை... 'அன்புக்கு நானடிமை...' என்ற பாடல் இடம்பெற்ற "இன்று போல் என்றும் வாழ்க" என்ற படத்தில் நான் இன்னொரு பாடலையும் எழுதினேன். "இது - நாட்டைக் காக்கும் கை உன் - வீட்டைக் காக்கும் கை இந்தக் கை நாட்டின் நம்பிக்கை இது - எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை" இதுதான் அந்தப் பாடல். இது - எதிர்காலப் பாரதத்தின் வாழ்க்கை என்றுதான் எழுதினேன். பாரதத்தின் என்ற வார்த்தையை நீக்கிவிட்டுத் தாயகத்தின் என்று மாற்றியவர் எம்.ஜி.ஆர்.தான். "அன்புக்கை இது ஆக்கும் கை - இது அழிக்கும் கையல்ல சின்னக்கை ஏர் தூக்கும்கை - இது திருடும் கையல்ல நேர்மை காக்கும்கை - நல்ல நெஞ்சை வாழ்த்தும்கை - இது ஊழல் நீக்கித் தாழ்வைப் போக்கிப் பேரெடுக்கும்கை" இப்படி எல்லா சரணங்களிலும் 'கை' 'கை' என்றுதான் வரும். நான் எம்.ஜி.ஆர் கையைப் பற்றித்தான் எழுதினேன். 

ஆனால் இன்று வேறொரு கைக்குப் (காங்கிரஸ்) பிரச்சாரப் பாட்டாக ஆகிவிட்டது.என்றாலும், அன்புக்கு நானடிமை, இது நாட்டைக் காக்கும் கை என்ற இரண்டு பாடலையும்தான் எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார்.

 இப்போது போல அப்போது சி.டி.யோ கேஸட்டோ இல்லாத காலம். எந்தப் பாடலாக இருந்தாலும் அதாவது சினிமாப் பாடலாக இருந்தாலும், கட்சிப் பாடலாக இருந்தாலும், பக்திப் பாடலாக இருந்தாலும் எல்லாம் கல்கத்தாவுக்கு அனுப்பி இசைத்தட்டாக வெளிவரச் செய்த பிறகுதான் பயன்படுத்துவார்கள். அதற்கான வசதி அப்போது சென்னையில் கிடையாது. Trending Ads by Revcontent Want To Burn 20 Kgs Of Weight In A Month? Use This Trick Garcinia Cambogia Herbs Mama June is Skinny Now and Looks Gorgeous! Celebrity Weight Loss அதனால் கல்கத்தாவுக்கு அனுப்பி ஒரே வாரத்தில் இசைத்தட்டாக வெளிவரச் செய்து தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார். அப்போது அமெரிக்காவிலிருந்து வெளிவந்த 'வாஷிங்டன் போஸ்ட்' என்ற பத்திரிகை நான் எழுதிய இந்த இரண்டு பாடல்களையும் குறிப்பிட்டு என் பெயரையும் குறிப்பிட்டு இதைப் போன்ற கவிஞர்கள் எழுதிய கருத்துள்ள பாடல்களைப் பாடி மக்களைக் கவர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார் என்று எழுதியிருந்தது. டைரக்டர் சங்கர்தான்

 அந்தப் பத்திரிகையை என்னிடம் காட்டினார். படிப்பதற்கு அது மகிழ்ச்சியாக இருந்தாலும் இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அவர் ஆட்சிக்கு வரவில்லை. மக்களுக்கு அவர் செய்த நன்மைகள், ஏழை எளியவர்களுக்கு அவர் செய்த உதவிகள், மக்களிடம் அவருக்கிருந்த அணுகுமுறை எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் அவர்மீது வைத்த நம்பிக்கை இதெல்லாம் சேர்ந்துதான் அவரை ஆட்சிக்குக் கொண்டுவந்ததே தவிர இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அல்ல. ஏன்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களில் இதைப்போல் நல்ல பாடல்கள் இல்லையா? எத்தனையோ கவிஞர்கள் இதைவிடச் சிறந்த கருத்துள்ள பாடல்களை சிவாஜி படங்களில் எழுதியிருக்கிறார்களே. நான் கூட சிவாஜி படங்களுக்கு எழுதியிருக்கிறேனே. சிவாஜி ஒரு கட்சி கூட ஆரம்பித்தாரே. ஒரு தொகுதியில் கூட அவராலே ஜெயிக்க முடியவில்லையே. அதற்கு என்ன காரணம்? சினிமா பிரபலம் என்பது வேறு. அரசியலில் வெற்றி பெறுவது என்பது வேறு.

 எல்லா நடிகர்களும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. கதர்ச்சட்டை அணிந்தவர்கள் எல்லாம் காமராஜர் ஆகிவிட முடியுமா? சினிமா என்பது பிரபலத்திற்கும் விளம்பரத்திற்கும் பயன்படுமே தவிர அதை வைத்து எல்லாரும் ஆட்சியைப் பிடித்துவிட முடியாது. நான்கு படங்களில் கதாநாயகனாக நடித்து அவை நூறு நாட்கள் ஓடிவிட்டால் எல்லா நடிகர்களும் முதலமைச்சர் கனவில் மிதக்கத் தொடங்கிவிடுகிறார்கள். 

அந்தக் கனவு மாயக் கனவு என்பதை நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்ற தேர்தல் பல நடிகர்களுக்கு உணர்த்திவிட்டது. வானத்தில் ஒரு நிலவுதான் இருக்கமுடியும். இன்னொரு நிலவு இருக்காது. அதுபோல் எம்.ஜி.ஆர் ஒருவர்தான் இருக்க முடியும். இன்னொரு எம்.ஜி.ஆர் இருக்க முடியாது. சாதாரண நாடக நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தபோது பத்து ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் தர்மத்திற்கு இரண்டு ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவாராம். சினிமாவில் துணை நடிகராக நடித்தபோது நூறு ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் பத்து ரூபாய் தர்மத்திற்கு ஒதுக்கிவிடுவாராம். 'மந்திரி குமாரி' படத்தில் கதாநாயகனாக நடித்தபோது அவருக்கு மாதச் சம்பளம் ஆயிரம் ரூபாயாம். அந்த ஆயிரம் ரூபாயில் தர்மத்திற்காக நூறு ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவாராம். அவர் படங்களுக்குப் பாடல் எழுதும்போது எங்களிடம் இதைச் சொல்லி நீங்களும் இப்படி உதவுகின்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

 அவரை நாடி யாரேனும் ஒருவர் உதவி கேட்டுச் சென்றால், இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும் வந்தவர் வெறுங்கையோடு திரும்பமாட்டார். அந்த வகையில் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுவதில் அன்னையாகவும், அவர்களை மேலேற்றி வைக்கும் திண்ணையாகவும் பலன் தரக்கூடிய தென்னையாகவும் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். சுருக்கமாகச் சொன்னால் மனிதப் பறவைகளின் சரணாலயம் அவர். எம்.ஜி.ஆரை நம்பியவர்கள் எவரும் கெட்டதும் இல்லை. அவர் வழியில் செல்பவர்கள் தோல்வியைத் தொட்டதும் இல்லை!

Read more at: http://tamil.filmibeat.com/anandha-then-kaatru-thalattudhe/anandha-then-kaatru-thalattudhe-8/gallery-cl8-042518.html

அட...தூக்கம் இவ்வளவு அவசியமா..! #SleepDeep

vikatan.com


மகிழ்ச்சியான ஒரு மனநிலையில், சாலையில் நடந்து செல்லும் பெயர் அறியா மனிதர்கள் மீதும் பிரியம் ததும்புகிறது. திடிரென நம் வண்டியின் குறுக்கே யாரேனும் ஓடிவந்தாலும் “இது சகஜம்தானே” எனப் புன்முறுவலுடன் கடந்து செல்ல முடிகிறது.நண்பர்களின் அழகு ரசனையை ரசிக்கவும், உணவின் சுவையை ருசிக்கவும் முடிகிறது.அன்றைய தினம் மகிழ்ச்சியால் நிரம்புவதற்கான தொடக்கப்புள்ளியாக ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அது நம்மை அடுத்தடுத்த நல்விளைவுகளை நோக்கித் தள்ளிச் செல்கிறது. இப்படி நம் மனதையும் உடலையும் நல்லனவற்றை நோக்கி செலுத்துவது ஏதோ ஒரு மாயசக்தி அல்ல; அது ஒரு பயிற்சி

தீப்பெட்டியில் தூக்குச்சியை உரசிப் பற்றவைப்பதற்கே நேர்த்தியான பயிற்சி தேவைப்படுமெனில், மனதில் மகிழ்ச்சியைப் பற்ற வைக்கவும் பயிற்சி தேவைதானே!

நம் உடலையும் மனதையும் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள அடிப்படையான சில வாழ்முறை மாற்றங்கள் அவசியம். நாம் ஆரோக்கியமாக இருந்தால் பார்க்கும் எல்லோமும் ஆரோக்கியமாக தெரியும். எப்போதும் வேலை,டென்ஷன், பரப்பரப்பு என அலைந்துக்கொண்டே இருந்தால்,அந்த அலுப்பும் சலிப்புமே நம் இயல்பிலும் பிரதிபலிக்கும். ஆரோக்கியம் என்பது மனிதனுக்கு இயல்பான ஒன்று.அந்த இயல்பை மீட்டெடுப்பது அத்தனை சிரமம் அல்ல. சற்றே மெனக்கெட்டால் சாத்தியமே!

உணவு ,தூக்கம், உடற்பயிற்சி, மன அழுத்தம்..இந்த நான்கையும் திறம்பட நிர்வகிப்பதுதான் “லைஃப்ஸ்டைல் மேனேஜ்மெண்ட்” என்கிற வாழ்க்கைமுறை திட்டமிடல். தினமும் நேரம் ஒதுக்கி, அக்கறையுடன் இதை முறையாகச் செய்தாலே ஆரோக்கியம் மிளிரும்.

முன்பெல்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல் உழைப்பு என்பது பிரதானமாக இருந்தது. ஆனால், இப்போது அனைத்து வேலைகளையும் இயந்திரமயமாக்கி,எல்லாமே ஒரு “டச்”சில் வந்து நிற்கின்றன. ஆனால் மனித உடலோ இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக உழைத்து உழைத்து உழைப்புக்குப் பழக்கப்பட்டிருக்கிறது.உழைத்துக்கொண்டே இருந்தால், அதன் இயங்குதன்மை சீரான ஒழுங்குடன் இருக்கிறது. அதுவே உடலுக்கு வேலையே கொடுக்காமல் இருந்தால், அதில் சிக்கல் உண்டாகிறது. கொழுப்பு, தசை, எலும்பு எல்லாமே சேர்ந்ததுதான் மனித உடல்.வெளியேற்றுவதற்கான வேலையே கொடுக்காத போது உடம்பில் கொழுப்பு சேர்ந்துக்கொண்டே இருக்கிறது. இயக்கமே இல்லாமல் தசைகள் தளர்ச்சி அடைகின்றன. வெயிலில் கூட செல்லாமல் ஏசியிலும், அலுவலகத்தின் உள்ளேயும் அமர்ந்திருப்பதால் எலும்புகளின் அடர்த்தி குறைகிறது.

இளம் பருவத்தில் ஆரோக்கியமான ஓர் இளைஞனுக்கு, உடலில் 20 சதவிகிதம் கொழுப்பு இருக்க வேண்டும். அதுவே ஒரு பெண்ணுக்கு, அது 25-30 சதவிகிதமாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது ஆண் உடலில் 40 சதவிகிதம் கொழுப்பும், பெண் உடலில் 50 சதவிகிதம் கொழுப்பும் இருக்கிறது. மனித உடலுக்கு கொழுப்பு அத்தியாவசியம்தான். ஆனாலும், அதன் பணி மிகவும் வரம்புக்கு உட்பட்டது. அது,குளிரில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். உடலின் வைட்டமின்களை பாதுகாக்கும்.முக்கியமாக உடம்பில் ஏதேனும் நச்சுப்பொருட்கள் இருந்தால், அது வேறு உறுப்புகளை பாதிக்காதவாறு, கொழுப்பு தன்னுடன் சேர்த்துக்கொள்ளும். ஆக, உடம்பில் ஏராளமான கொழுப்பு இருந்தால், அது அந்தளவுக்கு நச்சுப்பொருட்களை உடலுக்குள் அடைத்து வைத்திருக்கிறது எனப் பொருள்.

நவீன நகர வாழ்வில் மண், நீர், காற்று..என சுற்றுப்புறம் முழுவதையும் நச்சாக்கி வைத்திருக்கிறோம். பாக்கெட் உணவுகள், வினோத சுவையூட்டிகள், பிராய்லர் சிக்கன்,அழகுச் சாதன பொருட்கள்..என உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் வேதிப் பொருட்களை சேர்த்துக்கொண்டே இருக்கிறோம். இவைதான் நச்சாக மாறி, உடலின் கொழுப்புடன் சேர்ந்துக் கொள்கின்றன. பிறகு அவை ஒவ்வொரு நோயாக உருவாக்கி நம் வாழ்க்கையை நரகம் ஆக்குக்கின்றன. பதற வேண்டாம்..! வாழ்க்கை முறையில் எளிய மாற்றங்கள் சிலவற்றை செய்வதன் மூலம் இந்த சூழலை எளிதாக கடந்து வர முடியும்!





தூக்கத்தில் தொடங்குவோம்

பகலில் நாம் எப்படி உணர்கிறோம் என்பது இரவில் நம் தூக்கம் எப்படி இருந்தது என்பதை பொறுத்துதான் அமையும். போலவே, தூக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வும் பகலில் நாம் என்ன செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. நிம்மதியான தூக்கம் மூளையை மிரட்டி ஓய்வெடுக்க சொல்லும். இதனால் மன அழுத்தம் தீரும். தூங்கும் நேரம், தூங்கும் முறைகள் ஆகியவை தூக்கத்தை அதிகம் பாதிக்கும். ஒவ்வொருவருக்கும், அவர் உடல் மற்றும் செய்யும் வேலையின் தன்மை பொறுத்து தேவையான தூங்கும் நேரம் மாறுபடும்.எந்த முறை உங்களுக்கு ஒத்து வருகிறது என்பதை நீங்கள்தான் அனுபவத்தின் மூலம் கண்டறிய வேண்டும். உங்கள் தூக்கத்தை செறிவூட்டி, பகல் நேரத்தில் நிம்மதியாக இருக்க வழிவகுக்க சில டிப்ஸ் இதோ:


முறையான தூங்கும் நேரம்:

எதிலுமே ஒரு ஒழுங்கு இருந்தால் அதன் விளைவுகள் சாதகமாக இருக்குமென்பது அடிப்படை. அது போல தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழுவது, உடலுக்கு பல வகையில் நல்லது. வார இறுதிகளில் இதை பின்பற்றுவது கடினம் என்பவர்கள் அதற்கேற்றது போல நேரத்தை சற்று மாற்றி அமைக்கலாம்.. இரவில் ஏதேனும் வேலை வந்து தூங்குவதற்கு தாமதமானால் பகலில் தூங்கி அதை சமன் செய்யலாம்.எழுந்திருக்கும் நேரத்தை மாற்றாமலிருக்கவும், அதே சமயம் போதுமான நேரம் தூங்கவும் இது உதவும். ஆனால் மற்ற நாட்களிலும் பகலில் தூங்குவது, இரவு தூக்கத்தை பாதிக்கும் என்பதை மறக்க கூடாது. சில சமயம் இரவு உணவுக்கு பின் உடனே தூக்கம் வரலாம். அப்போது எதாவது உடற்பயிற்சிகள் செய்து, நண்பர்களுக்கு ஃபோன் செய்து, தூக்கத்தை விரட்டவும். சீக்கிரம் தூங்கிவிட்டால் நள்ளிரவில் முழிப்பு வந்து மொத்த சிஸ்டமும் குலைந்து போகும்.






மெலட்டனின் ஹார்மோன்:

இயற்கை ஒளியால் உற்பத்தியாகும் இந்த ஹார்மோன் தான் நம் தூக்கத்தை முடிவு செய்கிறது. சூரியனை பார்க்காமல் அலுவலகத்திலே வேலை செய்பவர்களுக்கு பகலிலே தூக்கம் அதிகமாக வரக்காரணம் மெலட்டனின் தான்.. போலவே, இரவு நேரத்தில் டிவி, கம்ப்யூட்டர் என தேவைக்கு அதிகமான வெளிச்சத்தால் தூக்கம் போவதற்கும் இந்த ஹார்மோனே காரணம். வேலை இடத்தில் வெளிச்சம் அதிகம் வருமாறு அமைப்பது, வேலை இடைவெளியில் சூரிய ஒளியில் நடப்பது போன்றவை பகலில் நம்மை உற்சாகமாக வைக்கும்.

இரவு தூங்குவதற்கு முன் டிவி பார்ப்பது தூக்கத்தை கெடுக்கும். ஐபேட், கிண்டில் போன்ற கருவிகளை இரவில் தவிர்க்கலாம். அறையில் இருக்கும் விளக்குகள் பிரகாசமான ஒளியமைப்பு கொண்டதாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.வெளியில் இருந்து விழும் நிழல்கள் தெரியாதவண்ணம் திரைச்சீலைகள் அமைத்துக்கொள்ளுங்கள். இரவு தண்ணீர் குடிக்க, பாத்ரூம் செல்ல எழுந்தாலும் உடனே விளக்குகளை போடாமல் ஃப்ளாஷ் லைட் போன்றவற்றை பயன்படுத்துங்கள். மீண்டும் விரைவில் உறங்க செல்வதற்கு இது உதவும்.


படுக்கையறை:

படுக்கயறையை அழகாக டெகரெட் செய்வதை விட தூங்குவதற்கு ஏற்ற இடமாக வைத்து கொள்வதுதான் முக்கியம்., அண்டை வீட்டில் இருந்து வரும் சத்தம் போன்ற இரவு நேர சத்தங்கள் அறைக்குள் கேட்காத வண்ணம் கதவுகளை அமைத்துக் கொள்ளுங்கள். மெல்லிய ஒலியில் இசை ஒலிப்பது இந்த சத்தங்களில் இருந்து நம்மை காப்பாற்றும். அதிக சத்தமெனில் இயர் ப்ளக் பயன்படுத்துங்கள். ஒலியை போலவே அறையின் வெப்பநிலையும் மிக முக்கியமானது. அடிக்கடி ஏசியை அணைத்து பின் மீண்டும் போடுவது என்றில்லாமல் சீரான வெப்பநிலை இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். மெத்தை மற்றும் தலையணை விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்யவே கூடாது. உங்களுக்கு ஏற்றவாறு பார்த்து வாங்குங்கள். ஏதேனும் பிரச்சினை எனில் மாற்றுவதற்கு தயங்காதீர்கள். பெரும்பாலானவர்களின் நிம்மதியற்ற தூக்கத்திற்கு இவைதான் காரணமென மருத்துவர்கள் சொல்கிறார்கள். படுக்கையை தூங்குவதற்கு மட்டும் பயன்படுத்துங்கள். அங்கேயே அமர்ந்து வேலை செய்வதை தவிருங்கள். மெத்தைக்கு வந்த உடனே தூங்க வேண்டும் என உடல் தானாக தயாராகி விடும்.





இந்த மூன்று விஷயங்கள் இல்லாமல் இன்னும் சில காரணிகளும் நம் தூக்கத்தை மேம்படுத்த உதவும். அளவான இரவு உணவு, காஃபியை தவிர்ப்பது, புகையை தவிர்ப்பது.. இவையெல்லாம் நம் தூக்கத்தை நேரிடையாக பாதிக்கும் விஷயங்கள்.இரவில் அதிக திரவ உணவு எடுத்துக்கொள்வதும் தூக்கத்தை நள்ளிரவில் பாதிக்கும்.தூக்கம் வரவில்லையெனில் மூச்சை நன்றாக இழுத்து பின் விடவும். இது நம் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக உதவும்.

நல்லா தூங்குங்க பாஸ்.
முன்பெல்லாம் வீட்டுக்குப் பெரியவர்கள் வந்தால் குழந்தைகள் இரு கரம் கூப்பி, வாய் நிறைய வணக்கம் என்று உறவுமுறையுடன் அழைப்பது கேட்பதற்கே இனிமையாக இருக்கும். நல்ல நாள், பெரிய நாள் என்றால் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவார்கள். அப்பா, அம்மாவை எதிர்த்துப் பேசியதாகவோ, கேலி செய்ததாகவோ நினைவில்லை!
ஆனால் இன்றைய நிலையை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. தப்பித் தவறி வணக்கம் சொல்லும் குழந்தைகள் நூறில் ஒன்றுகூட தேறாது. சட்டென்று ஹாய், ஹலோதான் வந்து விழுகிறது. அதுவும் கையில் அலைபேசியோ, மடிக்கணினியோ இருந்தால் கண்கள் அவற்றிலிருந்து அகல்வதே கடினம்தான். தாத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கோ என்று சொல்லிப் பாருங்கள். எகத்தாளமாக நம்மை ஒரு பார்வை பார்த்தபடி நழுவி விடுவார்கள்.
சர்வ சாதாரணமாகப் பிள்ளைகள் அப்பாக்களை, ‘லூசாப்பா நீ?’ என்கிறார்கள். அறிவுரை சொல்லும் அம்மாக்களை, ‘மொக்கை போடாதம்மா’ என்று எளிதாகத் தட்டிக்கழித்துச் செல்கிறார்கள். சாலையில் போகும் பெரியவரை தாத்தா என்று அழைக்காமல் பெருசு என்று அழைக்கும் பள்ளி மாணவனைப் பார்க்க, கவலையாக இருக்கிறது. திரைப்படங்களின் எதிர்மறைத் தாக்கம். திரையில் கதாநாயகனும் நண்பனும் அடிக்கும் கூத்தையெல்லாம் தங்களுக்குள் இழுத்துப் போட்டுக்கொள்ளும் பேரார்வம்.
பல நேரங்களில் ஆயாசமாகத்தான் இருக்கிறது. எங்கு தவறுகிறோம் என்பது புரிபடுவதில்லை. நிச்சயமாக குழந்தைகள் மீது தவறில்லை. அவர்கள் நாம் பிடிக்கும் களிமண். கூட்டுக் குடும்பமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை இத்தகைய சமயங்களில் தவிர்க்க இயலாது.
அதற்காகப் பிள்ளைகள் பெற்றோருக்கு அடிமையாக இருக்க வேண்டுமா? அவர்களுக்கென்று எந்த சுதந்திரமும் இல்லையா? என்று சிலர் கேட்கமால். பெற்றோரிடம் தோழமை உணர்வோடு பழகுவதில் தவறில்லை. ஆனால் ஆங்கே மருந்துக்குக்கூட மரியாதை உணர்வு இல்லை என்பதுதான் வருத்தத்தைக் கூட்டுகிறது.
சிறு வயதிலேயே பெற்றோர்களைத் தூக்கியெறிந்து பேசிப் பழகும் பிள்ளைகளின் குணம் பின்னாட்களில் மட்டும் எப்படி மாறும்? பழக்கமே செயலாகும். செயலே குணமாகும். சிறு வயது முதலே பெரியவர்களையும், பெற்றோர்களையும் மதித்து நடப்பது மிக முக்கியம் என்பதை சொல்லிச் சொல்லி வளர்க்க வேண்டும். முன்பு பள்ளிகளில் இருந்த நன்னெறி வகுப்புகள் இத்தகைய ஒழுக்கங்களை மாணவர்களிடம் கொண்டு செல்வதில் பெருந்துணையாக இருந்தன. இன்றைய நிலையில் பள்ளிகளில் மீண்டும் அந்தப் பாடத் திட்டங்களைச் சேர்ப்பது அனைவருக்கும் நன்மை பயப்பதாக இருக்கும்.
- இரா. பொன்னரசி, சத்துவாச்சாரி.

தஞ்சாவூர் தட்டு எப்படி தயாராகிறது தெரியுமா?

Inline image 1

தலையாட்டிப் பொம்மை, வீணை வரிசையில் தஞ்சாவூரின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று கலைத்தட்டு. கௌரவம், உபசரிப்பு, மரியாதையின் வெளிப்பாடாக கருதப்படும் இந்த கலைத்தட்டில் தஞ்சைக்கே உரித்தான நுண்கலையும், கைத்திறனும், கற்பனையும், தெய்வீக அம்சமும் நிறைந்திருக்கிறது. சுவரை அலங்கரிக்கும் தனித் தட்டாகவும், பூஜையறைகளில் வைத்து வணங்கப்படும் இறை உருவாகவும், கேடங்களாகவும், நினைவுப்பரிசுகளாகவும், சின்னங்களாகவும் உருவாக்கப்படுகிற இந்தக் கலைத்தட்டுக்கு புவிசார் காப்பீட்டு உரிமையையும் கிடைத்துள்ளது.

ராஜராஜ சோழன் காலத்தில் போர் வெற்றிச் செய்திகளையும், மெய்க்கீர்த்திகளையும் தாமிரப் பட்டயங்களில் எழுதும் வழக்கம் இருந்தது. அதன் தொடர்ச்சி தான் இந்தக்கலை.

கோவில்களில் வழிபாட்டுக்குப் பயன்படுத்தும் தட்டுக்கள், குடங்களில் சோழ மரபு சார்ந்த சிற்பங்களை புடைப்பு வடிவத்தில் செய்து. பொருத்துவது வழக்கம். அந்தக் கலையில் மயங்கிய ராஜராஜ சோழன், தட்டுக்களில் தங்களின் சின்னத்தையும், செய்திகளையும் பொதிக்கச் செய்து, சீனாவுக்கும் பிற நாட்டு தோழமை மன்னர்களுக்கும் நினைவுப்பரிசுகளாக அனுப்பினான். ராஜராஜனுக்குப் பிறகு அவருடைய மகன் ராஜேந்திரனும் இந்தக் கலையை உற்சாகப்படுத்தி வளர்த்தான். சோழர்களுக்குப் பிறகு வந்த விஜய நகரத்து மன்னர்களும், மராட்டியர்களும் கூட தஞ்சாவூர் தட்டு உற்பத்தியை தங்கள் பெருமிதமாகக் கருதி வளர்த்தார்கள். அதன்பிறகு இக்கலை பெரும் நசிவைச் சந்தித்தது. தஞ்சாவூர் தட்டு தயாரிக்கும் தொழில் செய்த பலர் அக்கலையை விட்டு விலகி வேறு தொழிலுக்கு சென்று விட்டார்கள்.

கைவினைப் பொருட்களுக்காகவே உருவாக்கப்பட்ட பூம்புகார் நிறுவனம், கலைத்தொட்டு தொழிலின் கொஞ்ச நஞ்ச உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அந்நிறுவனத்தில் 10க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலைத்தட்டு செய்கிறார்கள். தெற்கு வீதி, கம்மாளர் தெரு, சீனிவாச நகர் போன்ற பகுதிகளில் சிலர் தனித்தனியாக இத்தட்டுக்களை உருவாக்கி விற்பனை செய்கிறார்கள். கல்வி நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் வழங்கும் நினைவுப்பரிசுக்கான ஆர்டர்களே இப்போது அதிகம் கிடைக்கிறது.

கலைத்தட்டு என்பது அழகு செய்யப்பட்ட ஒரு பித்தளைத் தட்டு. நடுவில், தூய வெள்ளியில் செய்யப்பட்ட வட்டமான ஒரு தெய்வ உருவம். சுற்றிலும் வெள்ளியும் செம்பும் கலந்த உலோகத்தில் வார்க்கப்பட்ட அலங்கார வளைவுகள். மொத்தமாக அலுமினியத் தகடுகளை வாங்கி, தேவையான சைஸ்க்கு வட்டம் இழுத்து வெட்டி சமப்படுத்திக் கொள்கிறார்கள். பிறகு, டிசைனிங் ஒர்க். பொதுவாக தஞ்சாவூர் தட்டு என்றால் மயில், நடராஜர் உருவம் தான் இருக்கும். இப்போது லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார் என எல்லா சாமிகளையும் வைக்கிறார்கள். ஏன்? தலைவர்கள், நடிகர்கள் படங்கள் கூட வைப்பதுண்டு. எல்லாவற்றுக்கும் அச்சுகள் உண்டு.

300 ரூபாயில் இருந்து 30 ஆயிரம் வரைக்கும் தஞ்சாவூர் கலைத்தட்டு கிடைக்கிறது. வெளிமார்க்கெட்டில் விலை அதிகமிருந்தாலும், தயாரிக்கும் கலைஞர்களுக்குக் கிடைக்கும் கூலி என்னவோ குறைவு தான். ஒரு தட்டுக்கு 30 ரூபாய் கூலி. ஒரு நாளைக்கு 5 தட்டுக்கள் செய்ய முடியும். ஒரு அற்புதமான கலையை கட்டிக்காப்பாற்றும் கலைஞனுக்குக் கிடைக்கும் அதிகப்பட்ச கூலி 150 ரூபாய்.

கலையை மேம்படுத்தவும், பொருளுக்கு விற்பனை வாய்ப்புகளை உருவாக்கித் தரவும், உற்பத்திக்கு தகுந்த விலை பெற்றுத்தரவும் கோருகிறார்கள் கலைத்தட்டு கலைஞர்கள். பெரும்பாலானவர்கள் பொன் வேலைக்குப் போய்விட்டார்கள். சிலர் தொழிலை விட்டே அகன்று தொடர்பில்லாத வேலையைச் செய்கிறார்கள்.

அரசர்கள் பொன்னும் பொருளும் அள்ளிக்கொடுத்து காப்பாற்றிய கலை, காப்பார் இன்றி நசிந்து கொண்டே வருகிறது. கைவினைத் தொழில்களுக்காகவும், கலைக்காகவும் இயங்கும் அமைப்புகளும், நிறுவனங்களும் இக்கலைஞர்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும்!

NEWS TODAY 25.12.2025