Sunday, October 16, 2016

ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கை!


நன்றி குங்குமம் தோழி

மோட்டுவளைச் சிந்தனை - விக்னேஸ்வரி சுரேஷ்

நடந்துகொண்டே மெசேஜ் அனுப்புவது, அலுவலக மீட்டிங் நடக்கையில் நைசாக டேபிளுக்கு அடியில் மின்னஞ்சல் அனுப்புவது, கரண்டியை ஒரு கைக்கும், அலைபேசியை மற்றொரு கைக்கும் தருவது என அன்றாட வாழ்வில் நாம் செய்யும் பெரும்பாலானவை ‘மல்ட்டிடாஸ்கிங்’தான். அதாவது, ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வது. குழந்தையாக இருக்கும் போதே இதை தொடங்கி வைத்துவிடுகிறோம். ‘கார்ட்டூன் போட்டு விட்டா போதும், ஈஸியா சாப்பாட்டை ஊட்டி விட்றலாம்’ என்பதில் தொடங்கி, பெரியவர்களும் உணவை சீரியல் அல்லது மேட்ச் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது வரை எல்லாமே மல்ட்டிடாஸ்கிங்தானே!

ஒரே வேளையில் குக்கர், தொலைபேசி, கழிவறையிலிருக்கும் குழந்தை, காலிங் பெல் என பல (ஒன்றிரண்டு குறையும்) என்னை அழைக்கும் காலை வேளைகள் உண்டு. இவற்றையெல்லாம் ஏதோ அஷ்டாவதானி போல சமாளித்துப் பார்த்ததில் ‘சகல வேலைகளையும் சொதப்புவது எப்படி?’ என்று கட்டுரை எழுதும் அளவுக்கு விஷயம் வைத்திருக்கிறேன். வாசலில் தலையை சொரிந்து கொண்டு நிற்கும் கூர்காவிடம், ‘திரும்ப எப்போ வருவீங்க? உங்கள பார்க்கணும் போல இருக்கு’ என்றும், போனில் காத்திருக்கும் மாமியாரிடம் ‘போன வாரம்தான வந்தீங்க?

அதுக்குள்ள என்ன?’என்றும் கேட்கும் அளவுக்கு நிலைமை சிக்கலாகிப் போனது. அதன் பின் ஒரு சுபயோக சுபதினத்தில், மின்விசிறிக்கு அடியில் கிடைத்த ஞானம் என்னவென்றால், ‘மல்ட்டி டாஸ்கிங் மண்ணாங்கட்டியெல்லாம் எனக்குச் சரி வராது’ என்பதுதான். அதிக பட்சம் இரண்டு வேலைகளையே ஒரு நேரத்தில் ஒழுங்காக செய்ய வருகிறது!
‘ஒரு நேரத்தில் ஒரு வேளை’ என்பதை வாழ்வின் வழக்கமாகக் கொண்டு வர கொஞ்சம் மெனக்கெடலும், கொஞ்சம் திட்டமிடலும் போதுமானதாக இருக்கிறது.

உதாரணமாக காலையில் 7 மணிக்கு பிறகுதான் நிறைய வேலைகள் குவிகிறதென்றால், அதற்கு முன் செய்துவிடக்கூடியதாக சமையல் இருந்தது. ஆரம்பத்தில் 5 மணிக்கு எழுவதென்பது கருடபுராண தண்டனை போலிருந்ததை மறுக்க முடியாதுதான். போர்வை துணையை விட்டு பிரிய மனசேயில்லை. ஆனால், எம்.எஸ். அம்மாவையோ இளைய
ராஜாவையோ சேர்த்துக்கொண்டபின், வேறு யாருமற்ற 5 மணி இனிமையாகிவிட்டது. முடிவில், குழந்தைகளை அதட்டாமல் கிளப்ப முடிகிறது. நேரம் தெரியாமல் வாசலில் நின்று மொக்கை போடுபவருக்கு கூட புன்னகையை தர முடிகிறது.

எல்லாவற்றையும் விட, கணவருக்கான நைட்டி, பரட்டை தலை தரிசனத்தைத்தவிர்க்க முடிகிறது!
பல ஆராய்ச்சிகள் இந்த தலைப்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதன் முடிவில், ‘மல்ட்டிடாஸ்கிங்’ என்பது உங்கள் நேரத்தை சேமிக்கவில்லை... மாறாக அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதுடன், உங்கள் உடல்நலத்தையும் பாதிக்கிறது என்று வெளியிட்டிருக்கிறார்கள்.ஏனெனில், நம் மனது ஒரு வேலையில் மட்டும் ஒருங்கிணைந்து இருக்கையில், அந்த வேலையை கவனமாக இசைவுடன் செய்கிறோம். அதில் பிழை ஏற்படுவதோ, மீண்டும் மீண்டும் செய்வதற்கான வாய்ப்போ குறைகிறது.

கணினியில் செய்யக்கூடிய வேலைகளையே எடுத்துக்கொள்ளலாம். அவற்றில் எதையெல்லாம் ஒன்றிணைக்க முடியுமோ, அவற்றை ஒன்றாக முடிக்கலாம். ஒரே நேரத்தில் பல வேலைகள் என்பதை தவிர்க்க முடியாத சூழலில், ஒரே மாதிரியான வேலைகளை தொகுத்துக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் Batching என்பார்கள். இதில் நம் செயல் திறனும் அதிகரிப்பதை காணலாம்.அதே போல ‘ஸ்ட்ரெஸ்’ எனப்படும் வேலைசார் மனஅழுத்தமும் இவ்வாறு மல்ட்டிடாஸ்கிங் செய்பவர்களாலேயே உணரப்படுகிறது. நிறைய வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் போது, இதயத் துடிப்பு அதிகரிப்பதால் எப்போதும் பதற்றமாக உணர்கிறோம் (அதாவது, மற்றவர் கண்களுக்கு ‘சிடுசிடு’).

உணவுக்கான நேரத்தை பல வேலைகளுக்கு பகுத்து வழங்கும் போது, நாம் அளவுக்கு அதிகமாக உண்ணும் வாய்ப்புண்டு. என்ன சாப்பிட்டோம் என்பதையே உணராமல் தட்டு நிறைய சாப்பிடுவதை விட, ஒரு கவளமானாலும் ரசித்து ருசித்து சாப்பிடுவதில்தான் ஆரோக்கியத்தின் ரகசியம் இருக்கிறது. சில மாணவர்கள் நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் படிப்புக்காக செலவிட மாட்டார்கள். ஆனால், அந்த நேரம் படிப்புக்காக மட்டும்தான். வேறு சிலரோ சாப்பிடும் போதும், தொலைக்காட்சி பார்க்கும் போதும் கூட கையில் புத்தகத்துடனே காட்சியளிப்பார்கள்.

இருவகையினரும் ஒரே அளவு மதிப்பெண் பெற்றாலும், முன்னவர்களிடம் எப்போதும் ஓர் உற்சாகத்தை பார்க்கலாம். இதையே நம் எல்லா வேலைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஜென் துறவிகள், தேனீர் அருந்தும் முறையில் வாழ்க்கை தத்துவத்தை போதிப்பார்கள். ஒவ்வொரு துளியையும் ரசித்துக் குடிப்பது ஒரு ஜென் முறை. அதில் அவர்கள் சொல்ல வருவது, வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் பிரக்ஞையுடன் வாழ்வதை பற்றியே. தினம் தினம் செல்போனில் பேசிக்கொண்டே நீங்கள் கடக்கும் சாலையில் அழகிய பூக்கள் மலர்ந்திருக்கக்கூடும்.

நேசத்தோடு எதிர்படுபவரின் கண்களை பார்த்து புன்னகைக்கும் நொடியில் வாழ்நாளுக்கான ஒரு நட்பு அமையலாம். கவனமாக பதில் சொல்ல முயன்றால், உங்கள் குழந்தை நாளை அறிவியலையே கூட தன் வாழ்க்கை என தீர்மானிக்கலாம். கூடுதலாக உறவுகள் மேம்படும் என்பதை சொல்லவே தேவையில்லை. அலுவலகமோ, வீடோ, உறவினரோ, மனிதர்களோடு செலவிடும் நேரத்தில் அவர்களை முழுமையாக உள்வாங்கிக்கொண்டால், அவர்கள் பேச்சால் வெளிப்படுத்தாத பல விஷயங்களையும் சேர்த்தே கண்டுகொள்வீர்கள்.

மனைவியின் புது ஹேர்ஸ்டைலை அன்றே பாராட்டும் கணவர்கள் மிக எளிதாக நல்ல பெயரை தட்டிப்போகிறார்கள். சினிமாவில் வேண்டுமானால், நடிகர் பாடிக்கொண்டே ஆடட்டும். பத்தி பத்தியாக பேசிக்கொண்டே சண்டையிடட்டும். அந்த சினிமாவை வீட்டை விட திரை அரங்கில் பார்ப்பது பெரும்பாலானவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறதென்றால், காரணம், அங்கே குவியும் நம் கவனம். வேறு தொந்தரவுகள் அற்ற சூழல்.

பறவைகளோ, மீன்களோ, வேறு எந்த இயற்கையோடு இசைந்து வாழும் உயிரினமோ மல்ட்டிடாஸ்கிங் செய்வதில்லை. மரங்கொத்தியின் முயற்சியை, கொக்கின் கவனத்தை, பசுவின் நிதானத்தைத்தான் நாமும் செயல்களுக்கு தர வேண்டும். அதுவே இயற்கை. அந்த வாழ்க்கைமுறை நம்மை ஒருபோதும் கைவிடாது.

(சிந்திப்போம்!)

சந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்!


நன்றி குங்குமம் தோழி

இனிது இனிது வாழ்தல் இனிது  பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ்

உங்கள் திருமண உறவு அற்புதமாகவும் ஆரோக்கியமாகவும் அமைய வேண்டுமா? அப்போது சண்டை போடுங்கள்! என்ன இது? சந்தோஷமாக வாழ சண்டையைத் தவிருங்கள் என்றுதானே அறிவுறுத்துவார்கள்? சண்டை போடச் சொன்னால்?  ஏனென்றால், Sometimes a fight saves a relationship என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!

கணவனும் மனைவியும் சண்டையே போடாமல் வாழ்வதென்பது சாத்தியமும் இல்லை. சண்டைகள் இல்லாத வாழ்க்கையில் சுவாரஸ்யங்களும் இருக்காது. சண்டை போடும்போது சில விதிமுறைகளை மட்டும் கவனத்தில் கொண்டால், அந்தச் சண்டை நல்ல பலனைத் தரும் என்பதே எங்கள் கோரிக்கை.

இருவருக்கும் இடையில் உருவாகும் சண்டைக்கான பொறுப்பை ஏற்கத் தவறாதீர்கள். சண்டைக்கான காரணத்தைத் துணையின் மீது போட்டுவிட்டு நீங்கள் தப்பிக்க நினைக்காதீர்கள்.

கோபம் உச்சத்தில் இருக்கும் போது சண்டையைத் தவிருங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டு, ரிலாக்ஸ் செய்து, சண்டையின் வேகத்தைக் குறையுங்கள். கோபமான, வேகமான பேச்சு, சண்டையின் போது நீங்கள் முன் வைக்கிற வாதத்தைக் காணாமல் போகச் செய்து, துணையைக் காயப்படுத்தும்.

நீங்கள் போடுகிற சண்டை அர்த்தமுள்ளதாக  இருக்கட்டும். ஆக்கபூர்வமான விஷயங்களுக்காக இருக்கட்டும். சண்டையின் போக்கு அழிவை நோக்கிப் போவதாக இல்லாமல் கவனமாகக் கையாளுங்கள்.

சண்டையின் போது துணையிடம் கடுமையாக நடந்து கொள்ள, தகாத வார்த்தைகளை உபயோகிக்க, அவமானப்படுத்த, மோசமாக  நடத்த காரணங்களைத் தேடாதீர்கள். அப்படி நடந்து கொள்ளாமல் இருப்பதே நாகரிகம்.

கோபத்தையும் சண்டையின் தீவிரத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லையா? துணையிடம் எக்ஸ்கியூஸ் கேட்டுக் கொண்டு, அந்த இடத்தைவிட்டுத் தற்காலிகமாக  நகருங்கள். இருவருக்குமான சண்டைகள் ஒரு எல்லையைத் தாண்டும்போது, இருவரில் ஒருவரோ, இருவருமோ இப்படி அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவது என்பதை ஒரு
ஒப்பந்தமாகவே பின்பற்றுங்கள்.

சில வேளைகளில் உங்களையும் அறியாமல் சண்டை எக்கச்சக்க சூடுபிடிக்கும். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்கிற மாதிரி அந்த நேரத்தில் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியாமல் போகும். எனவே, கோபம் கொப்பளிக்கிற போது, அதைச் சற்றே தணியச் செய்யுங்கள். இன்றைய சண்டையை நாளைக்கு ஒத்தி வைக்கலாம். தவறில்லை.

துணையை முட்டாள் என்பது மாதிரி மட்டம் தட்டிப் பேசுவது, பட்டப் பெயர் சொல்லித் திட்டுவது, நல்லாவே
இருக்கமாட்டே... நாசமாப் போயிடுவே’ என்கிற மாதிரி சாபம் விடுவது, அவமானப்படுத்துவது போன்றவற்றைச் சண்டையின் போது செய்யவே கூடாது.

சண்டையின் போது உங்கள் துணை பேசும்போது குறுக்கிடாதீர்கள். அவரை முழுமையாகப் பேசவிட்டுக் கேளுங்கள்.

பொதுவாக நாம் யாருமே எதிராளியின் பேச்சை 18 நொடிகளுக்கு மேல் பொறுமையாகக் கேட்பதில்லை என்பதுதான் உண்மை. துணையின் வாதத்தைக் கேட்டாலே அவரது கொந்தளிப்பு சற்று தணியும்.

சண்டையின் போது உங்களை முன்னிலைப்படுத்தி சுயநலமாகப் பேசுவதைத் தவிர்த்து, துணையையும் அவரது உணர்வுகளையும் முன்னிலைப்படுத்திப் பேசுங்கள்.

நான் பேசறது தப்பா இருக்கலாம். ஆனா, நான் இப்படித்தான் ஃபீல் பண்றேன்... இந்தப் பிரச்னையை நான் இப்படித்தான் பார்க்கறேன்’எனப் பேசுங்கள். அதாவது, உங்கள் மீது தவறு இருக்கலாம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதைத் துணைக்குத் தெரியப்படுத்துங்கள்.

உங்கள் சண்டையின் நோக்கம் உங்களுக்கிடையிலான கருத்து வேறுபாட்டை  எப்படி  முடிக்கலாம் என்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.

சண்டையின்போது எக்காரணம் கொண்டும் குரலை உயர்த்திப் பேசக்கூடாது. என்னதான் கோபம் தலைக்கேறினாலும் அமைதியாக, குரலை உயர்த்தாமல் சண்டையிடுவதை ஒரு கொள்கையாகவே கடைபிடியுங்கள்.

உங்கள் துணையின் மனதைப் படிக்க முயற்சிக்க வேண்டாம். அவர் என்ன நினைத்திருப்பார்... அவரது
வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இதுதான் அர்த்தமாக இருக்க வேண்டும் என்கிற மாதிரியான தீர்மானங்களை நீங்களாகவே கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை.

துணையின் செயல்களுக்கு நீங்களாக நெகட்டிவ் சாயம் பூசாதீர்கள். ஒருவேளை உங்களுக்கு அப்படித் தோன்றினால் துணையிடமே அதைச் சொல்லுங்கள். நீ பண்றது எனக்கு இப்படி நினைக்க வைக்குது? அது சரியா?’ எனக் கேட்டுத் தெளிவு பெறுங்கள். துணையின் உடல் மொழிகளுக்கும் நீங்களாக ஒரு அர்த்தம் கற்பிக்காதீர்கள்.

துணை, மிகவும் மூர்க்கத்தனத்துடன், நெகட்டிவாக பேசினால், உங்கள் சண்டைக்கு சட்டென ஒரு பிரேக் விடுங்கள்.

அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் எனக் காரணம் கேளுங்கள். கோபத்தின் வீரியம் சற்றே அடங்கியதும், அவரது பேச்சு முறையில் மாற்றம் இருக்கலாம் என்றும், உடல்மொழியைக்கூட மாற்றிக் கொள்ளலாம் என்றும் சொல்லுங்கள்.

சண்டையின் போது அப்போதைய மனத்தாங்கலுக்கான விஷயத்தைப் பற்றி மட்டுமே விவாதியுங்கள். கடந்த கால சண்டைகளையும் பிரச்னைகளையும் சுமந்து கொண்டு வந்து தற்போதைய சண்டையில் சேர்க்காதீர்கள்.

அவர்/அவள் எப்போதுமே இப்படித்தான்... மோசமாத்தான் நடந்துப்பார்(ள்)’என்கிற மாதிரியான வார்த்தைகளையும், பழசை எல்லாம் நான் மறக்கவே மாட்டேன்...’என்பது போன்றும் பேசாதீர்கள். அவை ஆரோக்கியமான சண்டையை திசைத் திருப்பி விடும்.

இடம், பொருள், ஏவல் அறிந்து சண்டை போடுங்கள். சந்தோஷமான தருணங்களில் பழைய மனஸ்தாபத்துக்குக் காரணமான ஏதோ ஒரு விஷயத்தைக் கிளற வேண்டாம்.

இருவரில் ஒருவருக்கு ஒரு விஷயம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், இன்னொருவருக்கும் அது அப்படித்தான் இருந்தாக வேண்டும். 'இதெல்லாம் ஒரு மேட்டரா..?’என்கிற மாதிரி துணையின் பார்வையை அணுகாதீர்கள்.

சண்டையின்போது உங்கள் துணை, தவறான புள்ளிவிவரங்களையும் தகவல்களையும் வைத்துக் கொண்டு பேசலாம். முதலில் அவரது பேச்சுக்கு மதிப்பளியுங்கள். பிறகு அவரது தகவல்களை சரிசெய்யுங்கள். மாறாக அவரது உணர்வுகளை சரி செய்ய முனையாதீர்கள்.

(வாழ்வோம்!)

எழுத்து வடிவம்: மனஸ்வினி

Saturday, October 15, 2016

என்னது ..!!! ஆன்லைன்ல புக் பண்ணா ....வீடு தேடி வருதா “ஜியோ சிம்“ ......!!!

ஜியோவின்  சலுகையை  பார்த்து  வாய்பிளந்து பார்த்த  வாடிக்கையாளர்கள்,ஜியோ சிம்  வாங்குவதற்கு ....ரிலையன்ஸ்  ஷோ ரூம்  ஏறி ஏறி .....திரும்பி  வந்ததுதான்  மிச்சம்  என்ற  அளவுக்கு......நிறைய பேருக்கு  ஜியோ    சிம்  கிடைக்காமல்  இருப்பீங்க தானே ....! சோ  உங்களுக்காக , இப்ப  ஆன்லைன்  மூலமாகவே  புக்  செய்து  ஜியோ  சிம்  பெற கூடிய  ஒரு அற்புதமான  வாய்ப்பை கொடுத்து  இருக்கு.
'aonebiz.in' இந்த  வெப்சைட்  மூலமா  ஜியோ  சிம்  பெறலாம்  என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு  நீங்க  செய்ய வேண்டியது என்னவென்றால்,  அதில் கொடுக்கப்பட்டுள்ள  விவரத்தை  சரியாக  பூர்த்தி செய்து,   சப்மிட் பண்ணுங்க போதும்.
ஆர்டர்  செய்த  நாளிலிருந்து பத்து நாட்களுக்குள்  நம்  வீடு தேடி வரும்  ஜியோ சிம்.......
மேலும்,  டெலிவரி  சார்ஜ்  மட்டும்  199    ரூபாய்  கொடுத்தால் போதும்.
அதே சமயத்தில்,  சிம் டெலிவரி  செய்யும் போது, உங்களுடைய அட்ரஸ் ப்ரூப், id  ப்ரூப் , போட்டோ கொடுக்க வேண்டும்.
அப்புறம்  என்ன   யோசனை.......இப்பவே  புக்  பண்ணிகோங்க.........
இந்த  செய்தியை , ஜியோ சிம்  விற்பனை செய்யும்  'aonebiz.in இந்த  வெப்சைட்   வெளியிட்டு இருக்கு.
http://www.newsfast.in/news/online-booking-jio-sim

Friday, October 14, 2016

சமூக வலைதளங்களில் 'நீங்கள்' யார்?- ஒரு ஜாலி பட்டியல்


சமூக வலைதளங்களில் 'நீங்கள்' யார்?- ஒரு ஜாலி பட்டியல்

சமூக வலைதளங்கள் பலதரப்பட்ட மக்களைக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலானோர் நினைவுகளையும் நனவுகளையும் பகிர்கின்றனர். ஆனால், அங்கே இயங்குபவர்கள் அனைவரும் ஒரேமாதிரியான மனநிலையில் இருப்பதில்லை. வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் முதலானவற்றைப் பயன்படுத்துபவர்களில் சுவாரசியமான பயனர்கள் பலர் உண்டு. அவர்களைப் பற்றிய சிறு - குறு தகவல் குறிப்புகள் இவை:


புகைப்பட பிரபலங்கள்:

நின்றால் புகைப்படம், நடந்தால் புகைப்படம், அமர்ந்தால், ஊர் சுற்றினால் படம் என்று புகைப்படங்களாகப் போட்டு பிரபலம் ஆனவர்கள் இவர்கள். அவர்களின் புகைப்படத்துக்கு குவிந்திருக்கும் லைக், கமெண்டுகளைப் பார்க்கும்போதுதான் நமக்கு காதில் புகை வரும். சரி பிரபலமானவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக செல்ஃபியைப் பதிவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரைத் தூக்கத்தில் ஒரு செல்ஃபி, தூங்கி எழுந்தவுடன் செல்ஃபி, பல் விளக்கும்போது செல்ஃபி என்று இவர்களின் செல்ஃபி பட்டியல் சென்று கொண்டே இருக்கிறது. ஆணாதிக்கம் நசுக்கப்படுவதும் இங்கேதான். ஆம், இந்த வகைப் பிரபலங்களில் பெண்களுக்கே அதிக மவுசு.

'வணக்க' வல்லுநர்கள்:

இவர்களின் தினசரி வேலைகளில் முக்கியமானது வணக்கம் என்று சொ(கொ)ல்லும் நிலைத்தகவலை மறக்காமல் பதிவேற்றுவது!

காலை எழுந்தவுடன் படிப்பு என்று பாரதியார் சொன்னதைத் தவறாகப் புரிந்துகொண்டு ஃபேஸ்புக்கைப் படிப்பார்கள். அதோடு மறக்காமல் 'காலை வணக்கம்' என்று ஸ்டேட்டஸ் போட்டுவிடுவார்கள். மதிய வேளையில் 'மதிய வணக்கம்' என்ற ஸ்டேட்டஸும், இரவில் 'இரவு வணக்கம் நண்பர்களே, உறவுகளே, சொந்தங்களே!' ஸ்டேட்டஸும் போடப்படும். வணக்கம் சொல்லியே வதக்கி எடுப்பவர்கள் இவர்கள்.

புரியாத புதிர்கள்:

இந்த வகை ஆட்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது அவர்களுக்கே புரியாது. தமிழில் புதிதாக சில வார்த்தைகளைத் தெரிந்து கொண்டு வந்து, பத்துப் பக்கங்களுக்குக் குறையாமல் எழுதி, (படிப்பது ஃபேஸ்புக் நண்பர்களின் கடமை என அவதானிப்பவர்கள்!) சாமான்ய ரசிகர்களைத் திணறடித்தே பிரபலமானவர்கள் இவர்கள்.

ரசிக பிரபலங்கள்:

எப்படியாவது பிரபலம் ஆக வேண்டும் என்று நினைத்து, பிரபலங்களுடன் அடிக்கடி கமெண்டில் கதைப்பது, அவர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துத் தன் பக்கத்தில் பதிவது, அவர்களின் எல்லாப் பதிவுகளுக்கும் சூப்பர், செம்ம சொல்லிக் கொண்டே இருப்பது போன்ற காரியங்களில் கர்மசிரத்தையாய் இருப்பவர்கள்.

ஃபீலிங்ஸ் பறவைகள்:

காதல் மற்றும் காதல் சார்ந்த இடங்களில் / தளங்களில் மட்டும் ஈடுபாட்டுடன் இயங்குபவர்கள்; காதல், பிரிவு ஆகியவற்றைத் தவிர வேறெதுவும் அவர்களுக்குத் தெரியாது.

'புஜ்ஜிமா'க்கள்:

இவர்கள் எப்போதும் குழந்தைப் படங்கள், பூக்கள், இயற்கை ஆகியவற்றை மட்டுமே ஷேருபவர்கள்; லைக்குபவர்கள். அடுத்தவர்கள், அழகான குழந்தைப் படங்களைப் பதிவேற்றினால் மட்டும்தான் ச்ச்சோ ஸ்வீட், லவ்லி, கியூட் சொல்வார்கள்.

தொழில் முறை பதிவர்கள்:

மாதக்கணக்காக அமைதியாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் பொருட்களை விளம்பரப்படுத்தும் வேலை வந்துவிட்டால் மட்டும், தீயாய் வேலை செய்வார்கள்.

கடவுள் பற்றாளர்கள்:

பண்டிகைக் காலங்கள், விழாக் காலங்களில் மட்டும் சுறுசுறுப்பாக கடவுள்களின் வரலாறு, தோற்றம், விழாக்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.

காப்பி பேஸ்டாளர்கள்:

நன்றாக இருக்கும் பதிவுகளை, காப்பியடித்து தன் பக்கத்தில் போட்டு, 'அட, இந்தப் பையனுக்குள்ள இம்புட்டு அறிவா?!' என்று புருவம் உயர்த்த வைக்கும் காப்பி பேஸ்டாளர்கள். இந்தப் பதிவுகளில் பெரும்பாலானவை பத்திரிகைகளில் தொகுக்கப்படுவதும் கவனிக்கத்தக்க கொடுமை.

ஃபேக் ஐடி பிரபலங்கள்:

தன் சுய அடையாளம் மறைத்து, பெயர் விடுத்து, நச் கருத்துகளைப் போட்டே பிரபலம் ஆனவர்கள்.

ஜென் நிலையாளர்கள்:

24 மணி நேரமும் ஆன்லைனில் இருந்துகொண்டே / பார்த்துக்கொண்டே / படித்துக்கொண்டே, யாருடைய பதிவுக்கும், லைக்கோ, கமெண்டோ போடாமல் ஜென் நிலையிலேயே வாழ்பவர்கள்.

தகவல் சொல்லிகள்:

2 நிமிடத்தில் சமைப்பது எப்படி, அழகாவது எப்படி, இயற்கை விவசாயம் செய்வது எப்படி, தகவல் பெறும் உரிமைச்சட்டத்தைக் கையாள்வது எப்படி என்று தடுக்கி விழுந்தால் கூட தகவல் சொல்லிக் கொண்டே இருப்பது இவர்களின் ஸ்பெஷாலிட்டி. எப்படிங்க இப்படி?

'கோட்'டீஸ்வரர்கள்:

கருத்து சொல்லி, கைகாலை புண்ணாக்கிக் கொள்ளாமல், கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்து பேர் வாங்குபவர்கள். தெளிவாக தத்துவங்களை (மற்றவர்களின்) மட்டுமே பகிர்வார்கள். பிரபல கோட்ஸ் சைட்டுகளின் கோட் இமேஜ்களைப் பகிர்ந்து உலகத்துக்கு ஏதாவது சொல்லிக்கொண்டு தங்கள் இருப்பை நிலை நிறுத்துபவர்கள்.

சமூக சேவையாளர்கள்:

சமூக ஊடகங்களை, சமூக சேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் குறைந்த லைக்குகளுக்கு சொந்தக்காரர்கள்.

சினிமா ஆர்வக்கோளாறாய்ச்சியாளர்கள்:

வெள்ளிக்கிழமை படம் ரிலீஸுக்கு முன்பே டீசர் ரிவியூ பகிர்ந்து பகீரிடச் செய்வார்கள். படம் தொடங்கி அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அனுபவத்தைப் பகிர்வார்கள். இடைவேளையில் முக்கால் விமர்சனமும், முடிந்தவுடன் முழு விமர்சனமும், படத்துக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸை பொருத்து முழுமையான அலசல்களையும் வெளியிட்டு தங்கள் சினிமா அறிவை பறைசாற்றுவார்கள். உலக சினிமாவை உள்ளூருக்குக் கொண்டு வந்ததில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு.

மீம் மக்கள்:

சினிமா, அரசியல், விளையாட்டு என்று எந்த துறையாக இருந்தாலும் கவலையே படாமல், இல்லாத மூளையைப் போட்டுக் கசக்கி ஸ்டேட்டஸ் யோசிக்காமல், அழகாய் ஒரு படத்தையும், அதற்கேற்ற பன்ச்சையும் சேர்த்துப் போட்டு, பெயர் வாங்குபவர்கள். ஒரே படத்தை வெவ்வேறு மீம்களுக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள். ஆகவே என்னதான் சுட்டாலும் மீம் மக்கள், மீம் மக்களே!

ஃபேஸ்புக் போராளிகள்:

முழுமையான செய்திக்கு முந்தைய நியூஸ் ஃபளாஷ் வந்த அடுத்த நொடியில் தங்கள் உக்கிரக் கருத்துகளைப் பகிர்ந்து லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளுவார்கள். ஆர்வமிகுதியில் தப்பான செய்திக்கு ரைட்டான கருத்துச் சொல்லிவிட்டு, பின்னர் அந்தச் செய்தியே தப்பு என்று உணரும்போது பகிரங்க மன்னிப்புக் கேட்கத் தயங்காத மானஸ்தர்கள்.

இவர்களுக்கு நாட்டில் என்ன நடந்தாலும் கருத்து சொல்லியே ஆகவேண்டும். தக்காளி விலை ஏறினாலும் கருத்து சொல்வார்கள். தங்கம் விலை ஏறினாலும் கருத்து சொல்வார்கள். சிந்தாதிரிப்பேட்டை முதல் சிரியா வரை இவர்களின் கருத்துக்கு சிக்காத இடங்களே உலக வரைபடத்தில் இல்லை. கருத்து சொல்வது குறித்தும் கருத்து சொல்வதுதான் ஹைலைட். மார்க் ஸக்கர்பெர்க்குக்கு பேஜ்வியூஸ் வாங்கித் தருவதில் முன்னிலை வகிப்பதே இந்தப் போராளிகள்தான் என்றால் அது நகையில்லை.

கடைசியாக... தல - தளபதி ரசிகர்கள் படை:

இவர்களுக்கு அறிமுகக் குறிப்பு தேவையில்லை.

சரி... நீங்கள் எந்த வகை?




All the qualifying examinations and degrees are public information and every member of public shall have access to it:
If educational details are protected as personal information, it leaves lot of scope for manipulation, corruption and misrepresentation, the Commission observed.

The Central Information Commission has categorically held that academic/educational qualifications at land mark stages like 10th class, Intermediate, Graduation, Post-Graduation or Ph.D. and clearing of every annual examination, which promotes the student into next year, arepublic documents and every member of public shall have access to it

. The Information Commissioner Prof. M. Sridhar Acharyulu has held that, if the information being sought is about passing/failure/clearance of examinations or possession of the Degrees/ certificates after passing the examinations, such details need to be provided under RTI Act. But if the information sought is about failures, such as memorandum of marks or details of about number of appearances, the PIO can straight away reject the same, unless the applicant pleads and establishes larger public interest or comparative public interest.

 This observation by the Commission is on an appeal by one Subhash Chandra Tyagi whose application seeking information relating to candidate Mr. Kamal Tyagi was rejected by CBSE stating that that the information pertains to third party and is personal information of third party, without whose consent it could be given

. DEGREES ARE NOT PRIVATE OR THIRD PARTY INFORMATION

The Commission observed: “Once a student passes an examination and qualifies to secure a degree, the degree and passing details cannot be treated as private or third party information.Passing an examination is a qualification and awarding the degree such as 10thClass, 12thClass or Intermediate, graduation or post-graduation, is a public document generated by a public institution.The academic institutions awarding such degrees underastatutoryauthorityaredischargingtheirstatutorydutiessuchasregisteringthe qualification details and degree related information. “

 ‘IN LARGER PUBLIC INTEREST’

 The Commission also observed: “When there is an apprehension or doubt about validity or existence of a qualification, it is necessary to verify genuineness of the same.If verification proves that it is a genuine degree, it vindicates the qualification of the candidate.If it is proved to be a wrong degree, it will serve a larger public interest.Hence the degree or academic-qualification-related-information need to be accessible to the citizen.

” ‘To prevent cheating, the transparency is the proper method’ The Commission held: “academic/educational qualifications at land mark stages like 10th class, Intermediate, Graduation, Post-Graduation or Ph.D. and clearing of every annual examination, which promotes the student into next year, are the public documents.If a student is suspected to have manipulated his promotion from one to next year, another has every right to seek its verification and it is the duty of the public academic body to clear the apprehension and take necessary action, if apprehension is proved correct.If educational details are protected as personal information, it leaves lot of scope for manipulation, corruption and misrepresentation. It is in larger public interest, we need to avoid it. To prevent cheating, the transparency is the proper method.

 “ EVERY MEMBER OF PUBLIC SHALL HAVE RIGHT TO KNOW GENUINENESS OF DEGREE

 The commission further observed: “How can a graduate consider his degree as private and personal information, and why it should be considered as someone’s personal data. There is no basis for such understanding. If BA degree is a requirement for studying MA, the student who wants to study MA has to prove that he graduated. If he does not have that qualifying degree and manipulates to secure admission MA, every genuine graduate has a right to doubt the admission and to demand the disclosure of graduation details.For higher education or employment, he has to reveal his details of education details. If a candidate wants to treat the patients as doctor he has to prove medical graduation. Every person has a right to know genuineness of his degree or education. Hence, all the qualifying examinations and degrees are public information and every member of public shall have access to it.

” Disposing of the appeal, the Commission held: “The Public Authority/CBSE and its PIO is directed to take guidance from the above   reasoningandverifywhetherappellantisseekingtheinformationaboutpassingofthe candidate or failure, and if the information being sought is about clearance of examinations or possession of the 10th and 12th class certificates after passing the examinations, such details need to be provided under RTI Act, to the appellant.If he is seeking information about failures, such as memorandum of marks or details of about number of appearances, the PIO can straight away reject the same, unless the appellant pleads and establishes larger public interest, as required u/s 8(1) (j) or comparative public interest, as mandated under section 8(2) of RTI Act. “

Read more at: http://www.livelaw.in/qualifying-examinations-degrees-public-information-every-member-public-shall-access-cic/

கிண்டி தண்ணீர் லாரி விபத்து, கற்றுத் தரும் பாடம்!

சென்னை கிண்டி கத்திப்பாரா அருகே, இன்று தண்ணீர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவிகள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வழக்கம் போல லாரியை ஓட்டிய ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

கிண்டி- கத்திபாரா மேம்பாலத்திற்கு அருகே உள்ளது செல்லம்மாள் மகளிர் கல்லூரி. இந்தக் கல்லூரி அருகே சாலையைக் கடக்க முயன்ற போதுதான் அந்த மாணவிகள் மீது தண்ணீர் லாரி மோதியது. விபத்தில் சிக்கி இறந்த மாணவிகள் சித்ரா, ஆயிஷா, காயத்ரி என்று தெரிய வந்துள்ளது. இவர்களின் உடல்கள், உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

இந்த விபத்தில் மாணவிகள் 3 பேர் உயிரிழந்தது தவிர, மேலும் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

விபத்தும், போக்குவரத்து சிக்னலும்...!

விபத்து நடந்த இடம், கிண்டி - கத்திப்பாரா சந்திப்புக்கு அருகே உள்ள ஸ்பிக் நிறுவனத்தை ஒட்டிய பகுதி. செல்லம்மாள் கல்லூரியில் இருந்து சரியாக 50- மீட்டர் தூரத்தில்தான் அந்த மாணவியர் விபத்தில் சிக்கி இறந்துள்ளனர். காலை எட்டுமணியளவில் தொடங்கும் செல்லம்மாள் கல்லூரிக்கு மாணவியர் ஏழுமணியில் இருந்தே வரத் தொடங்கி விடுவார்கள். அதே போன்று காலை நேரக் கல்லூரி மதிய வேளையில் முடிந்து விடும்.

மாணவியர் கல்லூரிக்கு வரும் போதும், திரும்பிச் செல்லும் போதும் கூட்டமாக சாலையைக் கடப்பது அன்றாட நிகழ்வாகும். ஆனால், இந்தப் பகுதியில் அந்தளவுக்கு உரிய போக்குவரத்துப் போலீசார் பணியில் உள்ளனரா என்பதே கேள்விக் குறிதான். சம்பவ இடமான 'ஸ்பிக்' நிறுவனத்தை ஒட்டிய பாதை, மேம்பால முடிவில் வருகிறது. இந்த பாதைக்கு எதிர்புறம் ஒரு பாதையும், மற்ற இரு பாதைகளில் ஒன்று கிண்டி -சின்ன மலை, சைதாப் பேட்டை கோர்ட், ஆளுநர் மாளிகை, அடையார் என பிரியும் ஆறு வழிப் பாதையாகும். செல்லம்மாள் கல்லூரிக்குச் செல்லவோ, கல்லூரியில் இருந்து வெளியே வரவோ முயலும் மாணவிகள், அதற்கான போக்குவரத்து சிக்னல்கள் அருகில் இல்லாமையால், சிறிது தூரம் நடந்து சென்றே சாலையைக் கடக்கின்றனர், போக்குவரத்து சிக்னல் உதவியைப் பெறுகின்றனர். தற்போது, மூன்று உயிர்கள் அநியாயமாக பறி போய் இருக்கின்றன.

இனி போக்குவரத்து போலீசார் அங்கே எந்நேரமும் விறைப்பாக நின்று பணியை மேற்கொள்வர். சீறிவரும் தண்ணீர் லாரிகளைத் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்வர். சிக்னல் விளக்குகள் சரியாக வேலை செய்யும். வேகத்தடை, கல்லூரி அருகே உயரமாக அமைக்கப்பட்டு விடும்.மூன்று மாதமோ, ஆறு மாதமோ கழித்து அந்த தண்ணீர் லாரி ஓட்டுநரின், 'ஹெவி' ஓட்டுநர் உரிமம் திரும்ப அவரிடமே ஒப்படைக்கப்பட்டு விடும்.

தண்ணீர் லாரிகளால் விபத்து எப்படி நேர்கிறது?

தண்ணீர் லாரியை வேகமாக ஓட்டிக் கொண்டு வரும் போது, அவசரமாக பிரேக் பிடித்தால், லாரியில் இருக்கும் தண்ணீர், லாரியின் முன்னும், பின்னும் சென்று மோதிய பின்னரே நிற்கும். தண்ணீர் தளும்பும் போதுதான் விபத்து நேரிடுகிறது. அனுபவம் வாய்ந்த ஓட்டுநரே, தண்ணீர் லாரிகளில் பிரேக் பிடிக்கும் போது எப்படி பிடிக்க வேண்டும் என்ற பக்குவம் நிறைந்தவர்களாக இருப்பர்.

தண்ணீர் லாரிகளில் தண்ணீரை எடுத்துச் செல்வது போன்றதுதான் டேங்கர் லாரிகளில் திரவப் பொருளான ஆயில் மற்றும் பெட்ரோலியம் போன்றவற்றை கொண்டு செல்வதும். எண்ணெய் கொண்டுசெல்லும் இதுபோன்ற லாரிகள் பெருமளவில் விபத்தை ஏற்படுத்தி உயிர்களைப் பறிப்பதில்லை. இதற்குக் காரணம், அனுபவம் இல்லாத ஓட்டுநர்கள், ஆயில் டேங்கர் லாரிகளை ஓட்டுவதற்கு அனுமதிக்கப் படுவதில்லை என்பதே. ஆனால், ,தண்ணீர் லாரிகளை ஓட்டுபவர்களின், வயதோ, அனுபவமோ, கல்வியறிவோ ஏன் ஓட்டுநர் உரிமம் உள்ளதா என்பது பற்றி கூடத் கவலைப்படுவதில்லை ' என்ற நிலையை உடனடியாக மாற்ற உயிர்போகும் அவசரம்.

எந்த குற்றமும் செய்திராத மாணவிகளின் உயிரைப் பறித்தது யார் செய்த குற்றம் ?

தண்ணீர் லாரிகள் - ஒரு பார்வை

குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக தண்ணீர் லாரிகளின் பயன்பாடு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்காக இயக்கப் படும் அரசு 'வாரிய' லாரிகள், தனியார் லாரிகள் என இரண்டாயிரம் லாரிகள் வரையில் சென்னையில் மட்டுமே இயக்கப் படுகின்றன.தென் சென்னை வாழ் மக்களுக்கான தண்ணீரை மேடவாக்கம் முதல் திருப்போரூர் வரையில் உள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் வழியாக எடுத்து வருவது இந்த லாரிகளின் மூலம்தான்.

வட சென்னை வாழ் மக்களுக்கான தண்ணீரை செந்நீர்குப்பம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளின் நிலத்தடி நீர் வழியாக எடுத்து வருவது இந்த லாரிகளின் மூலம்தான்.தண்ணீருக்காக தினமும் பத்து ட்ரிப் (சவாரி) களை அடிக்கும் லாரிகள், சென்னையிலிருந்து, காஞ்சிபுரத்தின் வெண்பேடு, ஈச்சங்காடு, காயாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளிலிருந்தும் நீரை உறிஞ்சிக் கொண்டு சென்னைக்கு வருகின்றன.புறநகர் சென்னையில் வருகிற திருமழிசை, காரனோடை போன்ற பகுதிகளில் இருந்தும் உரிய கட்டணம் செலுத்தி நீர் எடுக்கும் லாரிகள், ஓட்டுநர் கூலி, வண்டியின் டீசல், லாரி முதலாளிக்கான லாபம் என அனைத்தையும் கூட்டிக் கழித்து தண்ணீர் விற்பனையில் இறங்கியுள்ளன.

சென்னை குடிநீர் வாரியம், 20 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.2,200 மற்றும் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.1,200 மட்டும் வசூலிக்க அறிவுறுத்தியது.இந்த கட்டணம் மிகவும் குறைவு என்கிற லாரி உரிமையாளர்கள், "விவசாயிகளுக்கு தர வேண்டிய தொகை அதிகரித்துள்ளது, மேலும் அதிக தூரத்திலிருந்து தண்ணீரை எடுத்து வருவதால், வாடிக்கை யாளர்களிடம் அதிக பணம் வசூலிக்க வேண்டியுள்ளது"என்று எதிர்ப்பைத் தெரிவித்தனர்.பல்லாவரம் -துரைப்பாக்கம் ரேடியல் சாலை, ஜி.எஸ்.டி சாலைகளில் தண்ணீர் லாரிகளின் "சவாரி -டிரிப்" வேகத்தால் பொதுமக்கள் அலறுகிற நிலையை அந்தப் பகுதிகளில் அன்றாடம் காண முடியும்.

- ந.பா.சேதுராமன்

Dailyhunt
பாதுகாப்பற்ற பயணங்கள், பறிபோகும் உயிர்கள்- யார் காரணம் ?

சென்னை கிண்டியில், தண்ணீர் லாரி மோதி மூன்று கல்லூரி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ஒருவழிப்பாதையான அந்த சாலையில் வளைவுப் பகுதியில், பிரேக் பிடிக்காத நிலையில் தண்ணீர் லாரியை அவ்வளவு வேகமாகக் கடக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? எவ்வளவு கனவுகளோடு கல்லூரிக்கு பிள்ளைகளைப் பெற்றோர்கள் அனுப்பியிருப்பார்கள்?

இந்த விபத்து, சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய விஷயம் இல்லை. ஏனெனில் உலகிலேயே அதிக சாலை விபத்துகள் ஏற்படும் நகரங்களில் சென்னை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக சாலை விபத்துகள் நடக்கின்றன. மக்கள் தொகை, நெருக்கடி எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பெரும்பாலும் அலட்சியத்தாலும், கவனக் குறைவாலும், மது போதையினாலும் தான் சாலை விபத்துகள் நடக்கின்றன.

தமிழக சாலைப் போக்குவரத்து புள்ளிவிவரங்களின் படி, இரண்டு சக்கர வாகனங்களால் நடக்கும் விபத்துகள்தான் அதிகமாக உள்ளன. அடுத்ததாக கார், லாரிகளால் நடக்கும் விபத்துகள் அதிகம் உள்ளன. பேருந்துகளைப் பொருத்தவரையில், அரசுப் பேருந்துகள் தனியார் பேருந்துகளைக் காட்டிலும் அதிக விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

சாலையைப் பொறுத்தமட்டில், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை ஆகியவற்றைக் காட்டிலும் நகரின் உட்புற சாலைகளில்தான் அதிக அளவிலான விபத்துகள் நடக்கின்றன. மிக முக்கியமாக அதிக அளவிலான விபத்துகள், அதாவது கிட்டத்தட்ட 95 சதவிகித விபத்துகள் ஓட்டுநரின் தவறுதலால்தான் நடப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

திட்டமிடப்படாத சாலைகள் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமாக இருக்கிறது. உட்கட்டமைப்புகள் அடிக்கடி மாறுதலுக்குட்படுவது வழக்கமானதுதான். ஆனால் பெரும்பாலும் சாலைகள் விசாலமானதாகவும், போக்குவரத்து நெருக்கடி இல்லாத வகையிலும் அமைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சாலைகள் திட்டமிடப்படாதவையாகவே இருக்கின்றன.

அலட்சியமும் உயிரிழப்பும்!

அவசர கதியில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் சாலையில் செல்லும்போது அதிவேகத்தில் பயணிப்பது நமக்கும் ஆபத்து, மற்றவர்களுக்கும் ஆபத்து என்பதை உணர வேண்டும்.

வாகனத்தை எடுக்கும்போதே பிரேக் பிடிக்கிறதா, பெட்ரோல் இருக்கிறதா, டயர் சரியாகப் பொருத்தப்பட்டிருக்கிறதா, டயரில் காற்று இருக்கிறதா போன்ற அத்தியாவசிய விஷயங்களைக் கவனிக்க வேண்டும். பின்னரே வண்டியை எடுக்க வேண்டும்.

மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது. செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது. இரவில் சரியாக உறங்காமல் பகலில் வாகனத்தை ஓட்டுவது. சிக்னல்களை மீறி வாகனத்தை செலுத்துவது போன்றவையும் விபத்துக்கான மிக முக்கிய காரணங்கள்.

சாலை விபத்துகளைத் தவிர்க்க எத்தனை விழிப்புணர்வு வாசகங்களை வாகனங்களிலும் சாலைகளிலும் பார்க்கிறோம். ஆனால் அவற்றை கடைபிடிக்க ஏன் தயங்குகிறோம்?

- ஜெ.சரவணன்

Dailyhunt


NEWS TODAY 25.12.2025