Wednesday, October 19, 2016

Maharashtra University of Health Sciences declares list of affiliated colleges

NASHIK: Maharashtra University of Health Sciences (MUHS) declared an important list of affiliated colleges, (excluding the deemed universities) who have been granted continuation/extension of affiliation for the academic year 2016-17 on Wednesday.

Aspirants trying for admissions in private medical colleges in the state should go through the list before confirmation of admission in respective institutions.

MUHS public relation officer Dr Swapnil Torne said, "This list has been published at the university's website which shows the availability of courses and seats in medical colleges across the state. The Medical Council of India (MCI) changes accreditation and number of seats available in colleges every year after reviewing the infrastructure of respective colleges. But, there are many colleges who continue admitting students without informing them about the latest change made by MCI. This creates a problem for students who get admission at college level, but are prohibited to appear for examination on MUHS level. To avoid this, the university has declared the colleges, and the available number of seats."


Last year, there were cases across the state where students were admitted in MBBS, Dental Ayurvedic, Homoeopathy and Unani courses. As their seats were not approved by MCI, the MUHS could not conduct their exams. This invited anger among the students who held MUHS responsible.

"To avoid confusion, students still seeking admission, especially for nursing and Ayurvedic colleges across the state should go through the list and confirm whether the seats are authorized or not," Torne added.

The updated list has has 38 MBBS colleges, 28 dental colleges, 35 Ayurvedic and Unani colleges, six homoeopathy colleges, 23 physiotherapy colleges, 21 BPMT Colleges, six colleges of Optometry and Ophthalmic Sciences, one college of para medical course and 56 nursing colleges.

Currently, the admissions to MBBS/BDS All India Return Seats for the 2016-2017 are under way through Personal Counseling Round. Directorate of Medical Education and Research has announced that selected Candidates should report to the College with original documents and pay the Fees upto October 19.

சமத்துவம் பயில்வோம்: ஞாயிற்றுக்கிழமையும் நங்கைக்கு இல்லை

இரா.பிரேமா

‘பெண் பிறப்பு ஆணுக்கானது’என்பது எழுதப்படாத சமூகச் சட்டம். அதனால், பெண்ணின் பிறப்பு திருமணத்தில்தான் நிறைவு பெறுகிறது என இந்தச் சமூகம் நம்புகிறது. ‘ஒருவன் கையில் பிடித்துக் கொடுப்பது’, ‘இன்னொரு வீட்டுக்குப் போகப் போகிறவள்தானே’, ‘வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறேன்’, ‘எப்படா கட்டிக் கொடுத்துச் சுமையை இறக்கப் போறேனோ’போன்ற சொல்லாடல்கள், பெண்ணை அடுத்த வீட்டுக்குரிய வளாகவே வளர்க்கும் பெற்றோர்களின் மனப் பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.


குழந்தை வளர்ப்பில் உணவு, உடை, வாய்ப்பு, அந்தஸ்து, அதிகாரம் என அனைத்து நிலைகளிலும் ஆணுக்கு முதலிடம், பெண்ணுக்கு இரண்டாம் இடம். ஆண், பெண் என இரு குழந்தைகள் இருக்கும் வீட்டில், பொருளாதார நலிவு இருக்கும்பட்சத்தில், ஒப்பீட்டளவில் ஆண் குழந்தைக்கு உணவு, உடை, கல்வி ஆகியவை தரத்திலும் அளவிலும் கூடுதலாகத் தரப்படுகின்றன. அதன் காரணமாக அவன் உரிய பருவத்தில் அந்தஸ்து உடையவனாகவும் அதிகாரம் உடையவனாகவும் உருவாகிறான். பெண் குழந்தை இந்த வாய்ப்பு கிடைக்கப் பெறாததால், எல்லா விதத்திலும் பின்தங்கிவிடுகிறாள்.

மேலும், குடும்பத் தளத்தில் பெண்ணுக்குச் சமையல், குழந்தைப் பராமரிப்பு, வீட்டுப் பராமரிப்பு போன்றவை விதிக்கப்பட்ட பொறுப்புகள். ஆணின் மீது இந்தப் பொறுப்புகள் சுமத்தப்படுவதில்லை. காலம் காலமாக, தலைமுறை தலைமுறைகளாகப் பெண்களுக்கான பணிகளாக இவை பாவிக்கப் படுவதால்,பெண்ணுக்கு இல்லம் சுமையாகிப் போய்விடுகிறது. இதனால், குழந்தையை மட்டுமல்ல, குடும்பத்தையும் சுமக்கிறாள் பெண்.

ஆணுக்கு வீட்டு வேலைகளிலிருந்து முழுமையான விடுதலை என்பதால் அவன் பொருளாதார ரீதியாகக் குடும்பத்தைப் பராமரிக்க விதிக்கப்பட்டான். ஆனால், இன்று பெண்கள் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைத் தாங்களும் பகிர்ந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர் என்றாலும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட வீட்டுப் பராமரிப்புப் பணிகளிலிருந்து விடுதலை இல்லை. அதனால் பெண்கள் இன்று இரட்டைச் சுமைகளில் அல்லாடுகிறார்கள்.

வீட்டு வேலை என்பது குறிப்பிட்ட நேரத்தோடு முடிந்துவிடுவதல்ல. விடுமுறை இல்லாத வேலையும்கூட. இதைத்தான் தமிழ்க் கவிஞர் ஒருவர்,

நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை
ஞாயிற்றுக்கிழமையும் நங்கைக்கு இல்லை

என்று குறிப்பிட்டுள்ளார். ஒரே மாதிரியான வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது அலுப்பும் சலிப்பும் ஏற்படுவது உண்டு. தலைமுறை தலைமுறையாக பெண்கள் வீட்டு வேலை செய்துவருவதால் எந்தப் பெண்ணும் அதை மறுப்பதில்லை, ஏன் என்று கேள்வி கேட்பதும் இல்லை.

பாட்டிக்குப் பிறந்த அம்மாவும்
அம்மாவுக்குப் பிறந்த தங்கையும்
பாட்டியைப் போலவும்
அம்மாவைப் போலவும்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
போலவே வாழாமல்
புதிதாக வாழ வேண்டும்

என்று ஒரு கவிஞர், பாலினப் பாகுபாடுகள் எந்தவொரு கேள்விக்கும் உட்படுத்தப்படுத்தப்படாது தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுவருகின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளார். சமூக மதிப்பில்லாத வீட்டு வேலைக்கு ஒவ்வொரு பெண்ணும் பத்து முதல் பன்னிரண்டு மணி நேரம்வரை செலவிடுகிறார். பெண்ணின் பெரும்பாலான பொழுதுகள் குடும்பப் பொறுப்பிலும் வீட்டுப் பராமரிப்பிலும் கழிந்து விடுவதால் பெண்கள் சமூகக் கடமையாற்றுவதும், சமூகப் பணி செய்வதும் இயலாமல் போய்விடுகிறது. இனிவரும் தலைமுறைகளாவது வீட்டு வேலை என்ற இடைவிடாத பணியிலிருந்து விடுபட்டுச் சிறக்க வேண்டும். ஆண், பெண் சமத்துவத்தில், மனிதாபிமானமும் இணைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அனைவரும் முன்வர வேண்டும்.

- கட்டுரையாளர், பேராசிரியர்
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com

எதற்காக இப்படி ஓடுகிறோம்?

இமையம்

சிறுநீர், மலம் கழிக்க உரிய நேரம் தராமல் குழந்தைகளை நோயாளிகளாக்குகின்றன பள்ளிகள்

நம் எல்லோருக்குமே வாரிசு நலன் முக்கியமானதாக இருக்கிறது. எல்லோருடைய உயர்ந்தபட்ச ஆசை, கனவு, நோக்கம், லட்சியம் எல்லாவற்றிலும் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் உட்கார்ந்திருக்கிறது. இதற்காக எந்த விலை கொடுக்கவும் தயாராகவும் இருக்கிறோம். குழந்தைகளின் எதிர்காலத்துக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிந்திக்கிறோம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஆனால், அடிப்படையான அம்சங்களில் கோட்டை விடுகிறோம்.

சென்னையிலுள்ள பிரபலமான ஒரு மருத்துவமனைக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். அங்குள்ள ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை மையம் (டயாலிஸிஸ் சென்டர்) பக்கம் சென்றபோது, நான் பார்த்த காட்சி அதிரவைத்தது. அந்த மையத்தில் சுத்திகரிப்பு செய்துகொண்டிருந்தவர்களில் கணிசமானவர்கள் குழந்தைகள். பள்ளி செல்லும் வயதுடையவர்கள். பின்னர், மருத்துவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

நிலைகுலைய வைத்த சூழல்

நவீன வாழ்க்கைச் சூழல், உணவுக் கலாச்சாரம் என்று சிறுநீரகச் செயலிழப்புக் கான காரணங்களைப் பட்டியலிட்டவர், குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கான கார ணங்களில் ஒன்றாக நம்முடைய பள்ளி களில் உள்ள கழிப்பறைச் சூழலைக் குறிப்பிட்டார். “குழந்தைகள் கேட்கும் உணவு வகைகளையெல்லாம் வாங்கித் தரும் பெற்றோர், அவர்கள் உண்ணும் உணவும் பானங்களும் கழிவாக வெளியேறுவதில் எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள்?” என்று கேட்டபோதுகூட இந்தப் பிரச்சினையின் முழு உக்கிரத்தை நான் உணரவில்லை. பின் இதுபற்றி சிறுபிள்ளைகள் பலரிடமும் பேசினேன். பள்ளிச் சூழலை அவர்கள் சொன்ன விதம், ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரான என்னையே நிலைகுலையச் செய்தது. பல பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் சிறுநீர், மலத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளப் பழகியிருக்கிறார்கள். ஆசிரியர்களுக்குப் பயந்து, வெட்கப்பட்டு, நடுங்கி!

ஒரு நாள் சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு நல்லது. ஒரு வாரம்கூட உண்ணாவிரதம் இருக்கலாம். உடல் அதை ஏற்றுக்கொள்கிறது. ஆனால், ஒரு மணி நேரம் சிறுநீர் / மலம் கழிப்பதைத் தள்ளிப்போடுவதுகூட நல்லதல்ல. அன்றாடம் இதை மணிக்கணக்கில் செய்யும்போது உடல் சித்ரவதைக்குள்ளாகிறது. உடல் உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகின்றன.

குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினை

எனக்குத் தெரிந்து, காலையில் ஏழு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பும் மழலைகள் இருக்கிறார்கள். அவர்கள் கே.ஜி. வகுப்புகள் படிக்கிற பள்ளிக்கூடங்களுக்கு ஐந்து, பத்து கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்களில் செல்ல வேண்டும். அந்தப் பள்ளி வாகனங்கள், வழியில் உள்ள ஏனைய கிராமங்களுக்கும் சென்று குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்குச் செல்லும். பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் பதற்றத்துடன் வீட்டிலிருந்து ஓடிவந்து வாகனங்களில் ஏறும் குழந்தைகள் பள்ளிக்கு வந்தவுடனேயே சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க என்று கழிப்பறைக்கு ஓட முடியுமா? ஆசிரியர்கள் அனுமதிப்பார்களா?

இது அன்றாடம் குழந்தைகள் எதிர்கொள் ளும் பிரச்சினை. ஆனால், அன்றாடம் இப்படிக் கழிப்பறைக்கு ஒரு குழந்தை அனுமதி கேட்டால், அதை நொறுக்கியேவிடுவார்கள் ஆசிரியர்கள். வளர்ந்த பிள்ளைகளேகூட கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்கத் தயங்கும் சூழலே பள்ளியில் இருக்கிறது. அப்படிக் கேட்பதைக் கேலிக்குரியதாக, ஏளனத்துக்குரியதாகவே நாம் கட்டமைத்து வைத்திருக்கிறோம். உயர் வகுப்பு படிக்கிற பிள்ளைகளுக்கே இந்த நிலை என்றால், கே.ஜி. படிக்கிற சிறு குழந்தைகளின் நிலை என்ன?

பயமின்றிச் சொல்ல முடியுமா?

ஆசிரியர் என்ற சொல்லும், ஆசிரியர் என்ற பிம்பமும் சாதாரணமானதா அல்லது எளிதில் அணுகக் கூடிய சினேகம் மிக்கதா? ஒரு நாளில் வகுப்பறையில் ஆசிரியர்கள் அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய வார்த்தை ‘பேசாத!’ என்பதுதான். அதற்கடுத்த சொல் ‘வாய மூடு!’ என்பது. ‘எனக்குச் சிறுநீர், மலம் வருகிறது’ என்று எத்தனை பிள்ளைகளால் பயமின்றிச் சொல்ல முடியும்? தவறி வகுப்பறையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிற குழந்தைகள் எப்படியான கேலிக்கும் அவமதிப்புக்கும் ஆளாகிறார்கள் என்பதை ஏனைய குழந்தைகள் பார்த்துக்கொண்டேதானே வளருகிறார்கள்!

யோசித்துப்பார்த்தால், நம்முடைய ஒட்டுமொத்தக் கல்வி அமைப்புக்குமே இதுகுறித்து இன்னும் பிரக்ஞை வரவில்லை என்ற முடிவை நோக்கித்தான் நகர வேண்டியிருக்கிறது. நம்மூரில் எத்தனை பள்ளிகளில் போதுமான அளவுக்குக் கழிப்பறைகள் இருக்கின்றன? இரண்டாயிரம் பேர் படிக்கிற பள்ளிக்கூடத்தில் இடைவேளையின்போது ஐந்து, பத்து நிமிடங்களுக்குள் அத்தனை பிள்ளைகளும் கழிப்பறையைப் பயன்படுத்திவிட முடியுமா? அந்த அளவுக்கு வசதிகொண்ட பள்ளி என்று தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகளைக் காட்ட முடியும்? கூட்டத்தில், வரிசையில் நின்று சிறுநீர் கழிக்க, மலம் கழிக்கக் கூச்சப்படுகிற குழந்தைகள் உண்டு. கூட்டமாக இருக்கிறது, வரிசையில் நிற்க வேண்டும் என்பதற்காகவே சிறுநீர் கழிக்காமல் திரும்பி வந்துவிடுகிற பிள்ளைகள் உண்டு. சிறுநீர் கழிப்பதற்காக, மலம் கழிப்பதற்காகக் காத்திருந்த நேரத்தில் மணி அடித்துவிட்டது, நேரமாகிவிட்டது ‘மிஸ் திட்டுவார்கள்’ என்று கழிவை வெளியேற்றாமல், அடக்கிக்கொண்டு அப்படியே ஓடிவந்துவிடுகிற பிள்ளைகளும் உண்டு. குழந்தைகள் பள்ளி செல்லும் காலத்தில் மதிப்பெண்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் வேறு எதற்கும் கொடுப்பதில்லை.

அரை லிட்டர் போதாது

பள்ளிக்குச் செல்கிற குழந்தைகளில் அநேகம் பேர் அரை லிட்டர் தண்ணீருக்கு மேல் எடுத்துச்செல்வதில்லை. ஒரு பகல் முழுவதும் ஒரு குழந்தைக்கு அரை லிட்டர் தண்ணீர் போதாது. ஆனாலும், ஏன் கொஞ்சம் தண்ணீரையே எடுத்துச் செல்கிறார்கள்? காரணம் இதுதான். காலை ஏழு மணிக்கு வீட்டைவிட்டுச் செல்கிற பல குழந்தைகள், பள்ளியிலிருந்து திரும்பி வீட்டுக்கு வந்தவுடனேயே கழிப்பறைக்கு ஓடுவதைப் பார்க்கலாம். இது ஒரு சமூகம் நிகழ்த்தும் வன்முறையின் குறியீடுகளில் ஒன்று. ஒருபுறம், கழிவுகளை உரிய நேரத்தில் வெளியேற்றாததால், இன்னொருபுறம் தேவையான நேரத்தில் தண்ணீர் குடிக்காததால் உடல் பாதிப்புக் குள்ளாகிறது. இதனால், பல நோய்களுக்குக் குழந்தைகள் ஆளாகின்றனர்.

இப்படித்தான் சிறுநீரகப் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள் என்பதை மருத்துவர் என்னிடம் விளக்கினார். “மூன்று வயதிலேயே பள்ளிக்கு அனுப்பிவிடுகிறார்கள். சிறுநீரை அடக்கி அடக்கி வைப்பதால், சிறுநீர் வெளியேற வேண்டிய பாதையில் கழிவுகள் அடைப்புகளாக மாறி, நெஃப்ரான்களைச் செயலிழக்க வைத்து, சிறுநீரகத்தைச் சுருங்கவைக்கின்றன. சிறுநீரகம் செயல்படாததால் செயற்கை முறையில் டயாலிசிஸ் மேற்கொள்ள வேண்டிய நிலை. சிறுநீரகம் செயலிழந்தால், மாற்று சிறுநீரக அறுவைச் சிகிச்சை, டயாலிசிஸ் சிகிச்சை இரண்டுதான் தற்போதிருக்கும் வழிகள். இவை இரண்டுமே முழு ஆயுள் உத்தரவாதம் இல்லாதவை. எதற்காக ஓடுகிறோம் என்பதையே உணராமல் ஓடிக்கொண்டிருக்கும் தலைமுறை நம்முடையது” என்றார் மருத்துவர்.

ஆமாம், எதற்காக இப்படி ஓடுகிறோம்?

இமையம்,

எழுத்தாளர், ‘கோவேறுக் கழுதைகள்’, ‘செடல்’ நாவல்கள் உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு:imayam.annamalai@gmail.com

Monday, October 17, 2016


Once accepted, degree equivalence cannot be altered, rules high court

NEW INDIAN EXPRESS

By A M Vinodh | ENS | Published: 17th October 2013 03:28 PM |

Last Updated: 17th October 2013 03:28 PM | A+A A- |


In a significant judgment, the Madurai Bench has ruled that once a degree is held to be equivalent to another degree, its equivalence shall take force since the inception of the degree.

The court was allowing a petition from Uma Mohanraj, an assistant professor at the Madurai Medical College, to include her name in the promotion panel for the post of associate professor.

According to Uma, after completing MBBS in 2001 she obtained a Diploma in Obstetrics & Gynaecology (O&G) in 2001 with the nomenclature Diplomate of the National Board (DNB). Subsequently, she obtained a MD degree in paediatrics and was working in the Department of O&G for over nine years.

On Sept 24 this year, the DME published a panel of assistant professors eligible for promotion as Associate Professor. Uma’s name was not included in the panel on the grounds that she did not possess a MD or MS degree in O&G.

However, Uma contended that the DNB obtained by her is considered equivalent to MD in O&G. On May 16, 2012, the State Health Department had issued an order stating that DNB qualification may be considered equivalent to MD/MS degree (including for promotion) with effect from the date of issue of the order.

Countering, the Government Advocate said that from the date of issue of the Government Order, if the service of the petitioner as assistant professor is taken into account she has not completed the minimum 5-year service, and she was ineligible for promotion.

Rejecting the argument, Justice S Nagamuthu said that if a degree is found equivalent to the other, then it shall be deemed that they are always equivalent from inception. It is not as though DNB takes a different shape and becomes equivalent to MD degree in O&G only by the issuance of the GO.









மனைவி தனியுரிமை கோருவது கணவர் மீதான கொடுமை அல்ல: தில்லி உயர் நீதிமன்றம்


திருமணமான ஒரு பெண், தன்னுடைய புகுந்த வீட்டில் தனியுரிமையை (பிரைவசி) கோருவதை, கணவரைக் கொடுமைப்படுத்துவதாகக் கருத முடியாது. எனவே இதன் அடிப்படையில் கணவருக்கு விவாகரத்து வழங்க முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த 2003-இல் திருமணம் செய்து கொண்ட ஒருவர், தன் மனைவி கூட்டுக் குடும்பத்தில் வாழ விருப்பம் இல்லாததால் தனிக் குடித்தனம் நடத்த வற்புறுத்துவதாகவும் அதற்காக தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி தில்லி கீழமை நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி 2010-ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, தனிமை என்பது அவரவரது அடிப்படை உரிமை என்பதால் தனிக் குடித்தனம் செல்ல மனைவி கோரியது நியாயமற்றதாக தெரியவில்லை என்று கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.
கீழமை நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து பெண்ணின் கணவர், தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியதாவது:
தனிக் குடித்தனத்துக்கு அழைத்து அவ்வப்போது தன்னை தன் மனைவி கொடுமைப்படுத்துவதாகவும், அதுமட்டுமல்லாது, கடந்த 12 ஆண்டுகளாக இருவரும் தனியாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாலும், இனி ஒன்று சேர வாய்ப்பில்லாததாலும், "மீண்டும் இணைய முடியாத திருமண முறிவு' என்ற அடிப்படையில் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மனுவானது நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், தீபா சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: திருமணமாகி தங்கள் வீட்டுக்கு வரும் பெண்ணுக்கு மணமகன் வீட்டார் தனியுரிமைகளை வழங்க வேண்டியது அவர்களது கடமை. இந்த வழக்கைப் பொறுத்தவரை அதுபோன்று வழங்கியதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. மேலும் இந்த விவாகரத்து வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியே.மேலும் ஹிந்து திருமணச் சட்டத்தில் "மீண்டும் இணைய முடியாத திருமண முறிவு' என்ற சட்டத் திருத்தத்தை இதுவரை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
துணையை நம்பாததும் சித்ரவதையே:41 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து

புதுடில்லி:'கணவன், மனைவிக்குள் பரஸ்பரம் நம்பிக்கை, மரியாதை, புரிந்து கொள்ளும் குணம் போன்றவை இருக்க வேண்டும்; அவ்வாறு இல்லாததும் சித்ரவதையே' என, ராணுவ அதிகாரிக்கு, 41 ஆண்டுகளுக்குப் பின் விவாகரத்து வழங்கி, டில்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
துணை ராணுவப் படையான, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தொடர்ந்த வழக்கில், டில்லி ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பு:ஆண், பெண் இடையே, அனைத்து விஷயங்களிலும் மன ஒற்றுமை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. திருமணமான தம்பதி இடையே, பரஸ்பரம் நம்பிக்கை, மரியாதை அளிப்பது, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் குணம் இருக்க வேண்டும்; அவ்வாறு இருந்தால் தான் திருமண வாழ்க்கை இனிக்கும்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு, 1975ல் திருமணம் நடந்துள்ளது. சி.ஆர்.பி.எப்., உயரதிகாரியான கணவன், ஜம்மு - காஷ்மீரில் பணியாற்றி உள்ளார். அவருக்கு, வேறொரு பெண்ணுடன் தொடர்புள்ளதாக, சி.ஆர்.பி.எப்., தலைமைக்கு, மனைவி புகார் கொடுத்து உள்ளார்.சரியாக விசாரிக்காமல், மனைவி அளித்த இந்த புகாரால், அவமானம், பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கை போன்றவற்றை கணவன் சந்திக்க நேர்ந்துள்ளது. 
இந்த புகாரால், உயர் அதிகாரிகள் மற்றும் தனக்கு கீழுள்ளவர்கள் இதுவரை அளித்து வந்த மரியாதை குறைந்து விட்டதாக கணவன் கூறியுள்ளார்.இவ்வாறு பரஸ்பரம் நம்பிக்கையில்லாமல் சந்தேகப்படுவதும், அதனால் அவமானம் ஏற்படுவதும், ஒருவகையில் சித்ரவதையே. அதன்படி, இந்த வழக்கில், கீழ்க் கோர்ட் அளித்த விவாகரத்தை உறுதி செய்கிறோம்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Sunday, October 16, 2016

கூகுள் தேடல் - மொபைல் , டெஸ்க்டாப் எதில் தேடுவது பெஸ்ட்?

நமக்குத் தெரியாத விஷயத்தை யாராவது நம்மிடம் கேட்டால் உடனே கைகள் கூகுளை தேடி பதிலைச் சொல்லும். அந்த அளவுக்கு நம்மை பழக்கப்படுத்தியுள்ளது கூகுள். இதில் கூகுள் புதுமைகளை புகுத்தியுள்ளது. ஒரு வார்த்தையை தேடினால் ட்ரில்லியன் பக்கங்களை தேடி பதில் சொல்லும் அளவுக்கு கூகுள் தேடல் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்போது கூகுள் தேடலில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதுமை மேலும் ஆச்சர்யத்தை அளிக்கும் விதமாக உள்ளது. கூகுள் தேடலை டெக்ஸ்டாப்பில் செய்கிறீர்களா? இல்லை மொபைல் போனில் செய்கிறீர்களா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பது தான் அது.
கூகுள் தேடல் என்பது ஒரு குறிப்பிட்ட தேடலுக்கு 60 ட்ரில்லியன் பக்கங்களை தேடி அதன் பிரிவுகளின் அடைப்படையில் ஒரு வரிசையை உண்டாக்கி அதனை தரவரிசை, அல்காரிதம், வார்த்தையோடு பொருந்திய கீ-வேர்டுகள் என அனைத்து வழிகளிலும் மைக்ரோ செகண்டில் தேடி நமக்கு வரிசைப்படுத்தும்.

தற்போது மொபைலில் புதுவிதமான தேடலை அறிமுகம் செய்துள்ளது கூகுள். மொபைல் போன்களுக்கு ஏற்றவாறு தனது தேடல் அல்காரிதம்களை மாற்றியமைத்துள்ளது. இதன்மூலம் தேடும் வார்த்தைகளுக்கு மிகத்துல்லியமான தேடல் முடிவுகளை டெஸ்க்டாப்களை காட்டிலும் மொபைல்களில் பெற முடியும் என்பது தான் அது.
அடுத்தக் கட்டமாக மொபைல்-ஒன்லி வரிசையை உருவாக்கி மொபைல் போன்களில் தேடும் கூகுள் தேடல்களுக்கு துல்லியமான முடிவுகளை வழங்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் டெஸ்க்டாப் தேடல்களின் துல்லியம் மொபைல் தேடல்களின் துல்லியத்தைவிட குறைவாக இருக்கும் என்கிறது கூகுள்.
இதற்கு இரண்டு முக்கியமான காரணங்களை முன் வைக்கிறது கூகுள். முதல் காரணம் கூகுள் தேடல்களில் மொபைல் தேடல்கள் முன்னிலை வகிக்கிறது என்பதும், அதிகப்படியான பயன்பாட்டாளர்கள் மொபைல் தேடலை பெறவே அதிகம் விரும்புவதையும் காரணமாக கூறுகிறது கூகுள்.
மேலும் மொபைல் போன்களுக்காக புதிய AMP (Accelerated Mobile Pages) பக்கங்களை அறிமுகம் செய்துள்ளது. இவை சிறப்பான முடிவுகள் கொண்ட பக்கங்களை தேடுதல் பக்கத்தின் மேல் பகுதியில் காட்டும், மேலும் இந்த பக்கங்கள் அதிவேகமாக படிக்கும் வகையில் லோட் ஆகும். ஃபேஸ்புக் இன்ஸ்டன்ட் பதிவுகளைப் போன்ற பக்கமாக இவை இருக்கும்.
செல்போன்கள் தான் எதிர்காலம் என்பதை உணர்ந்துள்ள கூகுள் தனது முழு கவனத்தையும் மொபைல் ஒன்லி சேவைகளில் செலுத்தியுள்ளது. அனைத்து நிறுவனங்களும் மொபைல் ஒன்லியை நோக்கியே பயணிக்கின்றன. இனி நீங்களே சோதித்து பாருங்கள் உங்கள் டெஸ்க்டாப் கூகுள் தேடலுக்கும், மொபைல் கூகுள் தேடலுக்கும் அவ்வளவு வித்தியாசம் உள்ளது என்று, ஆச்சர்யப்படுவீர்கள். மொபைல் ஒன்லி சர்ச் சேவையை இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. கமான் லெட்ஸ் சர்ஃப் இன் மொபைல்!!!
- ச.ஸ்ரீராம்
Dailyhunt

NEWS TODAY 25.12.2025