Friday, October 21, 2016

Ex-IAS officer says sorry for remarks on TV


Retired civil servant R. Christodas Gandhi, who faced criticism from certain religious groups for allegedly making remarks against Lord Ram during a debate on a Tamil television channel on Tuesday, tendered an unconditional apology on Thursday.

No abusive comments

In a statement, Mr Gandhi said he had never in the past, nor would he in the future, make any derogatory or abusive comments against any deity.

“I understand that on social media certain accusations are being levelled against me of making derogatory remarks against a Hindu deity in a public debate on Thanthi TV… All that I mentioned in the debate was that, in a secular country, atheists also have a right to express an opinion. And beyond that, I don't recall making any references to any deity or personality. In the interest of public peace, I have no hesitation in offering a public apology if at all any of my utterances have hurt religious sentiments. I only hope for a peaceful co-existence,” he said.







‘All I said was that




in a secular country, atheists too have




a right to express




an opinion’

Ola Share launched in Coimbatore


COIMBATORE: Ola, a leading transportation platform in the country, announced the launch of Ola Share on its platform in Coimbatore. "Ola Share enables economical fares and reduced congestion since a ride can now be shared by up to three people at any point in time. Customers benefit from up to 50% discount on cabfares," Ola said.

Ola Share appears on the Ola app as a separate category. On sharing the drop location, the Ola app uses advanced algorithms to match users, looking for a cab on the same route, in real time. When additional users are identified en-route, the driver's device gets an alert with navigation to their pick-up location within minutes, to join the ride. Up to three people can share a cab together in Ola Share.

With Ola Share, colleagues from a workplace or friends from a college can come together to share rides among themselves. A user can join multiple groups or simply choose to share a ride with anyone.

"With better utilisation of vehicles on the road, many more cars can be taken off the road every single day. This will go a long way in making our cities cleaner and greener and reducing road congestion. All of Ola's security features like Track Your Ride, Share Ride Details, SOS, Emergency Contacts, 24x7 Customer Support and Number Masking are available for users on Ola Share," it said.

"Coimbatore is a key market for Ola as the city is one of the best emerging cities in the country and is witnessing rapid growth due to industrialisation. Hence, there is a compelling need for shared mobility in the city to enable a sustainable transport solution," Ola said.

"Ola Share has been specially designed to enable citizens to ride together and contribute to reduction in pollution and congestion in their city. In the last 8-10 months, Ola Share has been able to save upwards of 48 lakh kilograms of carbon emissions along with over 20 lakh litres of fuel," it claimed. Launched in October 2015, Ola Share is now available in 15 cities.

கொடுங்குற்றம் புரிந்தாலும் சிறார்களுக்கு கடும் தண்டனை கூடாது: தில்லி உயர் நீதிமன்றம்

By DIN  |   Last Updated on : 14th October 2016 12:42 PM 

கொடுங்குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும், சிறார் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சட்டத்தில் அவர்களுக்கு உள்ள உரிமையை எக்காரணம் கொண்டும் பறிக்கக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொலைக் குற்றத்தில் தொடர்புடைய ஒரு சிறுவனை தில்லி போலீஸார் கடந்த 2007-ஆம் ஆண்டு கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. ஆனால், குற்றச் செயலில் ஈடுபட்டபோது தனக்கு 18 வயது நிரம்பவில்லை என்றும், எனவே சிறார் குற்றவியல் சட்டப்படியே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த அவர், இதுதொடர்பாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு, நீதிபதிகள் கீதா மிட்டல், பி.எஸ்.தேஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
சிறார்கள் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று சட்ட விதிகள் கூறுகின்றன. சிறை என்றால் மற்ற கைதிகளைப் போல அவர்களைக் கொட்டடியில் அடைக்கக் கூடாது. சிறார் குற்றவாளிகளுக்கான கூர்நோக்கு இல்லத்தில்தான் அவர்களை வைத்திருக்க வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிறுத்தியும் சிறார்களுக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கவோ அல்லது அவற்றில் சமரசம் செய்துகொள்ளவோ கூடாது.
மனுதாரர் கைது செய்யப்படும்போது சிறுவனாக இருந்துள்ளார். அதைக் கருத்தில்கொண்டு பார்த்தால், அவரை 9 ஆண்டுகள் சிறையில் அடைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
இத்தகைய வழக்குகளைக் கையாளும் விசாரணை நீதிமன்ற நீதிபதிகளுக்கு உரிய பயிற்சியளிப்பது அவசியம். சிறார் குற்றவியல் சட்டம் தொடர்பான சரியான பார்வை அவர்களுக்கு இருந்தால் உயர் நீதிமன்றங்களின் நேரம் விரயமாகாது. எனவே, கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு இத்தகைய வழக்குகளைக் கையாளுவது தொடர்பான பயிற்சியளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


சிகிச்சைக்கு வந்த பெண்ணுடன் தொடர்பு: மருத்துவர், குழந்தைக்கு மரபணு பரிசோதனை: உயர்நீதிமன்றம் உத்தரவு
By மதுரை | Last Updated on : 21st October 2016 07:39 AM | அ+அ அ- |


சிகிச்சைக்கு வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி மருத்துவர் ஏமாற்றியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பெண் குழந்தை, மருத்துவர் ஆகியோருக்கு மரபணு பரிசோதனை நடத்த, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கமர்நிஷா தாக்கல் செய்த மனு: எனது கணவரின் தோல் நோய்க்கு மருத்துவர் ராஜேந்திரன் சிகிச்சை அளித்தார். அப்போது எனது கணவரும், மருத்துவர் ராஜேந்திரனும் நண்பர்களாகினர். இதன்பிறகு எனக்கும் மருத்துவருக்கும் தகாத உறவு ஏற்பட்டது. இது தெரிந்ததால் எனது கணவர் விலகிச் சென்றார். மருத்துவருடனான உறவு தொடர்ந்ததால் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியபோது என்னை புறக்கணிக்கத் தொடங்கினார். அவரை பார்க்கவோ, பேசவோ முடியவில்லை. இதனால் அவர் மீது பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். அதன்மீது போலீஸார் 2014 ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்தனர். அதற்கு பிறகு மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆகவே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். மேலும் எனது குழந்தை மற்றும் மருத்துவர் ராஜேந்திரனுக்கு மரபணு சோதனை நடத்த உத்தரவிடவேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு நீதிபதி கே.கல்யாண சுந்தரம் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெண் குழந்தை மற்றும் மருத்துவர் ராஜேந்திரன் ஆகியோருக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவம்பர் 1-ஆம் தேதி மரபணு சோதனை நடத்த உத்தரவிட்டார். சோதனை அறிக்கையை பட்டுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் நவம்பர் 25-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

கண்ணிருந்தும் குருடராய்...

By ஆசிரியர்  |   Last Updated on : 20th October 2016 01:32 AM 

மருத்துவமனைகளே அடுமனைகளாக மாறும் அவலம் இந்தியாவில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தீயில் கருகி இறப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது பரபரப்பாகப் பேசப்படுவதும், எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது செய்திகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மறக்கப்படுவதும் மிக இயல்பாக நடந்துகொண்டே இருக்கிறது. இந்த முறை, ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள எஸ்.யு.எம். தனியார் மருத்துவமனை, உலைக்களனாக மாறிப் பலரை பலி கொண்டிருக்கிறது.

அக்டோபர் 17-ஆம் தேதி இரவு அந்த மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் 24 பேர் இறந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வழக்கம்போல், இந்த நிகழ்வுக்கும் விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை கண்காணிப்பாளர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புவனேசுவரம் எஸ்.யு.எம். மருத்துவமனையில் 2013-ஆம் ஆண்டிலேயே தீத்தடுப்பு பாதுகாப்பு ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும், அந்த மருத்துவமனையில் தீத்தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமில்லாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியதாகவும் தீயணைப்புத்துறை உயரதிகாரிகள் ஊடகங்களில் பேட்டியளிக்கிறார்கள். தாங்கள் சுட்டிக் காட்டிய குறைகள்மீது மருத்துவமனை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத போதிலும் அந்த மருத்துவமனை நிர்வாகத்தின் மீது வழக்கு பதியவோ, வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளவோ எங்களுக்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள். அதிகாரம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இவ்வளவு பெரிய மருத்துவமனை தங்கள் அறிவுறுத்தலை அலட்சியம் செய்து வருகிறது என்பதைப் பத்திரிகைகளுக்குச் சொல்லி, அழுத்தம் கொடுத்திருக்கலாமே, அதை ஏன் தீயணைப்புத் துறை அதிகாரிகள் செய்யவில்லை?
காயமடைந்தோரைப் பார்க்க வந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா, மாநில அமைச்சர்கள் எல்லாரும் மருத்துவமனையில் தீத்தடுப்பு நடவடிக்கைகளில் குறைபாடு இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஏன் அந்த மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்படவில்லை? எதற்காக அந்த மருத்துவமனை தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது?

இவை யாவற்றையும் விஞ்சும் அவலம், தீ விபத்து நேரிட்டவுடன் பதறி அடித்து வெளியேறியது நோயாளிகளோ, உறவினர்களோ அல்ல, டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள்தான். நோயாளிகள் படுக்கையில் கிடக்கிறார்கள். அவர்களை விட்டு ஓட மனமில்லாமல் அவர்களின் உறவினர்கள் அல்லாடுகிறார்கள். போதுமான சக்கர நாற்காலிகள் இல்லை. தள்ளுபடுக்கைகள் இல்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளை அகற்ற உறவினர்களும் உள்ளே இல்லை. இதனால் மருத்துவமனைக்கு உள்ளேயே நீண்டநேரம் அல்லாடி, கருகியதைக் காட்டிலும் புகையில் மூச்சுத் திணறி இறந்தவர்களே அதிகம்.

இந்தத் தீ விபத்தின் போதுதான், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 2011 டிசம்பர் மாதம் நடைபெற்ற தீ விபத்தில் 90 பேர் இறந்ததும், அதில் இறந்தவர் குடும்பங்களுக்கும், காயமடைந்தோருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக நீதி கிடைக்காமல் இருப்பதும் தெரியவருகிறது. இந்த விபத்தோடு அதைப்பற்றியும் பேசுகிறார்கள். இப்போதுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருக்கிறது.

சென்னையில் 10 படுக்கை வசதிகள் கொண்டவை முதல் 1000 படுக்கை வசதிகள் கொண்டவை வரை, 1000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் எத்தனை மருத்துவமனைகளில் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் முறையாக உள்ளன? இந்த மருத்துவமனைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவமனை ஊழியர்களுக்குப் பயிற்சி உண்டா? இதுகுறித்து உடனடியாக ஆய்வு நடத்தியாக வேண்டும்.

கடந்த ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின்போது ஒரு தனியார் மருத்துவமனையில் 15-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதற்குக் காரணம், வெள்ளத்தால் மின்வெட்டு. மருத்துவமனையின் அடித்தளத்தில் வெள்ளம் புகுந்ததால் ஜெனரேட்டர்களை இயக்க முடியவில்லை. நோயாளிகளை பிற மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்ல முடியாதபடி சாலைகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுவிட்டன. அது இயற்கைப் பேரிடர். ஆனால் ஒரு வளாகத்தில் தீ விபத்து என்பது அவ்வாறானது அல்லவே.

அரசு மருத்துவமனைகள் தவிர, தனியார் மருத்துவமனைகள் பலவற்றிலும் கட்டடத்தின் அடித்தளம் வாகன நிறுத்தம் மற்றும் ஜெனரேட்டர், பயனிழந்த பொருள்களின் அறை என்பதாக மாற்றப்படுகின்றன. கட்டடத்தின் ஒவ்வொரு தளத்திலிருந்தும் இரண்டு அல்லது மூன்று வழிகளில் வெளியேறவும், கீழே இறங்க அல்லது மேலே ஏறிச்செல்லவுமான வாசல்கள் இருப்பதில்லை. எப்படி இதற்கெல்லாம் அனுமதி அளிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டில் மருத்துவமனைகளைவிட, மிக மோசமான தீ விபத்தை எதிர்நோக்கி இருப்பவை வணிக வளாகங்கள்தான். பல ஆயிரம் பேர் பல தளங்களிலும் குவிந்து கிடக்கும்போது, அவர்கள் வெளியேற கீழ்த்தளம் தவிர வேறு வாசலே கிடையாது. அங்குள்ள ஊழியர்களுக்கு தீ விபத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த பயிற்சியும் கிடையாது. இரண்டு மூன்று விபத்துகள் நடந்தபிறகும் சென்னை ரங்கநாதன் தெரு போன்ற பகுதிகளில் வணிக வளாகங்கள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அதுகுறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. கண்ணிருந்தும் குருடர்களாய் இப்படி எத்தனைக் காலம்தான் பொறுப்பில்லாமல் நாம் இருக்கப் போகிறோமோ தெரியவில்லை!



வலைதள அடிமைகள்
By மன். முருகன் | Last Updated on : 21st October 2016 02:16 AM |

என்னுடைய முகநூல் பக்கத்தில் ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், நான் நோய் வந்து படுத்தபோது, என் மனைவியும் அம்மாவும் மட்டுமே அருகில் இருந்தார்கள்' என்றொரு வாசகத்தை அண்மையில் படிக்க நேர்ந்தது.

உண்மையில் இதுதான் இணைய உலகின் யதார்த்தம். முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல் உள்ளிட்டவற்றில் தினந்தோறும் ஆயிரம் செய்திகள் படிக்கிறோம். நம் பிறந்த நாள் என்றால் முகமறியா யார் யாரோ நம் பக்கத்துக்கு வந்து வாழ்த்துகளைக் குவிக்கிறார்கள்.

யாரவர்கள்? அவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? வருவார்கள், போவார்கள் அவ்வளவுதான். பார்க்காமலே நட்பு பூணுவதற்கு நாமென்ன கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாருமா?

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு - என்கிறார் வள்ளுவர். முகநூல் நட்பு முகநக நட்பதுதானே? அந்த நட்பால் விளைவது என்ன? "டைம் பாஸ்' என்பார்களே அந்தப் பொழுதுபோக்குதானே?

இவ்வாறான நட்புலகில் இருந்து என்னவிதமான படிப்பினைகளைப் பெறுகிறோம்? அதிலுள்ள உண்மைத் தன்மை என்ன? அதனால் பயன்தான் என்ன? எதையும் நாம் எண்ணிப் பார்ப்பதில்லை.

ஒரு குழுவில் பகிரப்படும் செய்தி, பகிரப்பட்டவருக்கே மீண்டும் புதிய செய்தியாக வரும் விசித்திரம் நடந்தேறும் உலகமது.

அதேநேரம் இவையெல்லாம் தவறென்று சொல்ல வரவில்லை. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அது காலத்தின் தேவைதான்.

ஆனால், இந்த சமூக ஊடகங்கள் வழியாக இளைஞர்கள் பெறும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

இந்தியாவில் சுமார் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் தங்கள் அறிதிறன் பேசி (ஸ்மார்ட் போன்) வழியாக இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக முகநூல், கட்செவி அஞ்சல் ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

இதனால் அவர்களுக்குப் பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில் முக்கிய பிரச்னையாக இருப்பது தூக்கமின்மை.

அண்மையில் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் மருத்துவமனையில் ஒரு இளைஞனிடம், "என்ன பிரச்னை?' என நாயகன் கேட்க, "தூக்கம் வராது' என்பான் இளைஞன். "நைட்லையா?' என்றால், "எப்பவுமே' என்பான். அப்போது அந்த இளைஞன் தனது அறிதிறன் பேசியில் மூழ்கியிருப்பதாகக் காட்டப்படும்.

அறிதிறன் பேசிகள் இளைஞர்களின் தூக்கத்தை கெடுப்பதோடு மட்டுமல்ல, இருதயக் கோளாறு, மன ரீதியான பிரச்னைகளை அதிகம் ஏற்படுத்துவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இளைஞர்களைக் குறிவைக்கும் செல்லிடப்பேசி நிறுவனங்கள், அவர்களின் இரவு நேரத்தைத்தான் களவாடுகின்றன. இரவு முழுவதும் அறிதிறன் பேசி வழியாக கருத்து கந்தசாமிகளாக மாறும் இளம் தலைமுறையினர் பகற்

பொழுதைத் தள்ளாட்டத்துடன் கடக்

கிறார்கள்.

மது போதை, தொலைக்காட்சித் தொடர் போதைபோல, இன்றைய இளைஞர்கள் சமூக வலைதள போதைக்கு அடிமையாகியுள்ளனர்.

இரவு எட்டு மணிக்கு உணவுண்டு, கதை பேசிக் கொண்டே தூங்கிப்போன காலம் ஒன்றிருந்தது. கிராமத்தில் இன்றும்கூட அவ்வாறு உறங்கி, காலை 5 மணிக்குள் எழும் வாழ்க்கைமுறை தொடரத்தான் செய்கிறது.

நகரத்தில் அப்படியான வாழ்க்கை முறை இல்லை. நள்ளிரவைத் தாண்டியும் தூங்காமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இணையச் செயல்பாடுகள் எல்லோர் கையிலும் அறிதிறன் பேசி வழியாக வந்தபிறகு, தூக்கம் என்பது குறைந்துவிட்டது.

விடிய விடிய கண் விழித்து கிடக்கும் நிலையை அறிதிறன் பேசிகள் வழங்கியிருக்கின்றன. இதன் விளைவாக கடந்த பத்தாண்டுகளாகப் புதிது புதிதாக நோய்கள் பெருகியிருக்கின்றன. குறிப்பாக, தூக்கமின்மை நோய் அதிக அளவில் இளைஞர்களையும் இளம் பெண்களையும் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது.

இளம் வயதினர் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினரும் அறிதிறன் பேசியில் மூழ்கிக் கிடக்கிறார்கள். சமுக வலைதளங்கள், வலைப்பின்னல்போல அனைவரையும் பின்னிப் பிணைத்துள்ளது.

இயற்கைக்கு மாறாக உடலின் விதிகளை மாற்றுவதால், அதாவது இரவில் தூக்கத்தைத் தொலைப்பதால், மெலட்டோனின் உள்ளிட்ட சில முக்கியமான ஹார்மோன்கள் மனித உடலில் சுரப்பது குறைகிறது. இதனால் உடலின் சீர்நிலை திரிந்து, நோய்கள் வர வாய்ப்பு ஏற்படுகிறது.

இரவில் விளக்குகளை அணைத்துவிட்டு, அறிதிறன் பேசி வெளிச்சத்தில் இணைய உலகில் சரிக்கும்போது, போனில் இருந்து வரும் வெளிச்சம் கண் நரம்புகளையும், மூளையையும் நேரடியாகப் பாதிக்கிறதாம். மேலும் அது, தூக்கத்தைக் கெடுக்கும் என்பதும் ஆய்வுகள் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

தவிர்க்க முடியாமல் இரவு நேரத்தில் வேலை செய்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தேவையில்லாமல் இரவு உறக்கத்தைக் கெடுத்துக் கொண்டு, அறிதிறன் பேசிகளில் மூழ்கியிருப்பது ஆபத்தைத்தான் வரவழைக்கும் என்பதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும்.

மாய உலக இணைய நண்பர்களுக்காக லைக் போடுதலும், கமெண்ட்கள் எழுதுவதும் தேவையற்றது என்பதை உணர வேண்டும். தேவைக்காகப் பயன்படுத்தும்போதுதான் அறிவியல் வரம். இல்லையேல் அதுவே பெருஞ்சாபம்!

Thursday, October 20, 2016

உடனடியாக உங்கள் ஏ.டி.எம். பின் நம்பரை மாற்றுங்கள்? வங்கிகளின் #HighAlert!



சில சமயங்களில் வங்கிகளிடம் இருந்து உங்கள் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். உங்கள் ஏ.டி.எம் பின்கோட் எண்ணை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இந்த செய்தி பாதுகாப்பை மேம்படுத்த மட்டுமே என வந்திருக்கும். நம்மில் பலர் அந்த செய்தியை ''ஜஸ்ட் லைக் தட்'' கடந்து செல்வதையே வாடிக்கையாக வைத்திருப்போம். ஆனால் அதன் விளைவு எவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறது தெரியுமா? 32 லட்சம் டெபிட் கார்டுகளின் பின் நம்பர்கள் களவு போய்யுள்ளதாகவும், இதில் பெருமபாலான கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகள் பின் நம்பரை மாற்ற சொல்வது ஏன்?

இந்தியாவில் 32 லட்சம் டெபிட் கார்டுகளை மாற்றித் தரவோ அல்லது வாடிக்கையாளர்களை பின் நம்பரை மாற்றவோ சொல்ல வங்கிகள் முடிவெடுத்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் சீனாவில் அங்கீகாரமற்ற முறையில் இந்த எண்கள் பயன்படுத்தப்பட்டு கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படுகிற‌து என்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. இந்த பரிமாற்றங்கள் சீனாவில் ஏ.டி.எம், பொருட்களை பர்சேஸ் செய்யும் இடம் போன்ற இடங்களில் பதிவாகியுள்ளது.

வாடிக்கையாளரின் தகவல்கள் திருடப்பட்டு அதே போன்ற கார்டுகள் க்ளோனிங் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. மொத்தமுள்ள 32 லட்சம் கார்டுகளில் 26 லட்சம் கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டு வகைகளை சேர்ந்தது என்றும், மீதமுள்ள 6 லட்சம் கார்டுகள் ரூ-பே கார்டுகள் என்றும் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான கார்டுகள் எஸ்.பி.ஐ மற்றும் ஹச்.டி.எஃப்.சி வங்கிகளைச் சேர்ந்த கார்டுகளாக உள்ளன.

எஸ்.பி,ஐ 6 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இந்த விஷயம் தொடர்பாக புதிய கார்டுகளை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறுகிறது. வங்கிகள் எண்களை மாற்ற சொல்கிறது என்பதை சாதாரண விஷயமாக கருதாமல் அதனைக் கொஞ்சம் சீரியசாக அணுகுங்கள். வங்கிகள் அடிக்கடி பின் நம்பரை மாற்றுவது நினைவில் வைத்துக் கொள்ள கடினமாக தான் இருக்கும் ஆனால் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்றிவிடுங்கள் என்கின்றன வங்கிகள்.

உங்கள் எண்கள் இந்த 32 லட்சம் எண்களில் இருக்கறதோ? இல்லையோ? பாதுகாப்புக்காக உங்கள் ஏ.டி.எம் பின் நம்பரை உடனடியாக மாற்றி விடுங்கள்.

தகவல்கள் எப்படி திருடப்படுகின்றன?

நமக்கு மட்டுமே தெரிந்த நமது பின் நம்பர், கார்டு எண்கள் எப்படி திருடப்படுகின்றன. அதுவும் சீனாவில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்றால் அதற்கு பின்வரும் காரணங்கள் முக்கியமானவையாக கூறப்படுகின்றன.

1. பர்சேஸ் செய்ய ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தும் இடத்தில் ''ஸ்கிம்மர்கள்'' எனும் கருவி ஸ்வைப் செய்யும் கருவியுடன் இணைக்கப்பட்டு மொத்த தகவலும் எடுக்கப்படலாம்.

2. ஏ.டி.எம் நிலையங்களிலேயே ஸ்கிம்மர்கள் பொருத்தப்பட்டு அனுமதியற்ற முறையில் தகவல்கள் திருடப்படலாம்.

3. போலியான இணையதளங்களில் பணப்பரிவர்த்தனை செய்வது முறையற்ற முறையில் ஸ்க்ரீன் கேப்சர் செய்யப்படுவது.

4. அதிகாரபூர்வமற்ற வங்கி ஆப்ஸ்கள் மூலமாகவும் தகவல்கள் திருடப்படுகிறது.

இப்படியெல்லாம் திரட்டப்படும் தகவல்கள் குறிப்பிட்ட பெரிய தொகைக்கு விற்கப்படுகிறது. இப்படித் தான் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு பணம் திருடுபோகிறது.



என்ன செய்ய வேண்டும்?

1. வங்கிகளின் இணையதளங்களை நீங்களே டைப் செய்து செல்லுங்கள். இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்-ல் வரும் லின்க்களை க்ளிக் செய்யாதீர்கள்.

2.வங்கிகளின் முறையான ஆப்ஸை மட்டுமே பயன்படுத்துங்கள்.

3. பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் இங்கெல்லாம் டெபிட் கார்டை பயன்படுத்தும்போது அந்த கருவிகளில் வித்தியாசமாக ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள்.

4. ஆன்லைன் ஆர்டர்களை கூடியமட்டில் கேஷ் ஆன் டெலிவரியாக செய்யுங்கள்

5. ப்ரெளசிங் சென்டர்களில் பணப்பரிவர்த்தனை செய்வதை தவிருங்கள்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்


- ச.ஸ்ரீராம்

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...