Tuesday, October 25, 2016

கொண்டாடவிருப்பது ஹெல்தி தீபாவளியா? கொலஸ்டிரால் தீபாவளியா?!

healthy_diwali
தீபாவளி வந்தாலும் வந்தது ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், பெரியவர்களும் கூட்டம், கூட்டமாக புத்தாடை பர்சேஸ், பண்டிகைப் பலகாரங்கள், ரிடர்ன் கிஃப்ட்ஸ், விழாக்கால சொந்த ஊர் பயணங்களுக்கான திட்டமிடல் என்று ஒரே பிஸியோ பிஸி! இதற்கு நடுவில் தான் வீட்டு வேலைகளையும், அலுவலக வேலைகளையும்கலந்து கட்டிப் பார்க்க வேண்டி இருப்பதால் அவரவர் உடல் நலன்களை பராமரிப்பதில் தீபாவளி முடியும் வரை பலதரப்பினரும் மெத்தனமாகத் தான் இருக்கிறார்கள் என்றால் அது பொய்யில்லை.
உடல் நலனுக்கென்று ஸ்பெஷலாக எதுவும் செய்யாவிட்டாலும் கூட குறைந்த பட்சம் நிறைய தண்ணீர் அருந்துங்கள், தினமும் அரைமணி நேரம் வாக்கிங் செல்லுங்கள், அது கூடப் போதுமானது என்கிறார் ஓரிஃபிளேம் இந்தியாவின் நியூட்ரிசன் எக்ஸ்பர்ட் 'சோனியா நரங்'. இதைக் கூட கடைபிடிக்கா விட்டால் பிறகு தீபாவளி முடிந்ததும் டாக்டர்களைத் தேடிக் கொண்டு ஓட வேண்டியது தான்.
ஹெல்தி தீபாவளி கொண்டாட ’சோனிய நரங்’ தரும் ஹெல்த் டிப்ஸ்கள்:
கவனம் செலுத்த வேண்டியவை:
தீபாவளி முடியும் வரை உணவுக்கு ரெஸ்டாரெண்டுகளை நம்பியிருக்கும் பெண்களின் கவனத்துக்கு:
தீபாவளியை எப்படியெல்லாம் சிறப்பாகக் கொண்டாடுவது என்று திட்டமிடுவது தொடங்கி தீபாவளி முடியும் வரை யாருக்கும் யோசிக்கக் கூட நேரமிருக்காது. முக்கியமான விசயம் வீட்டுச் சாப்பாடு என்பது தொல்லை மிகுந்த விசயமாக மாறி மூன்று வேலைக்கும் ரெஸ்டாரெண்டுகளில் சாப்பிடத் தொடங்குவீர்கள். இதில் குழந்தைகள், பெரியவர்கள் பேதமெல்லாம் கிடையாது, பெண்கள், அவர்கள் இல்லத்தரசிகளானாலும் சரி, வேலைக்குப் போகும் பெண்களானாலும் சரி பர்சேஸ், பலகாரங்கள் தயாரித்தல் அதோடு கூடிய அலுவலக வேலைகள் போன்ற அலுப்புகளில் முறையாக சாப்பிடுவதிலிருந்து விலகி எளிதாக சாப்பாட்டை முடிப்பதாக எண்ணிக் கொண்டு நேரம் கெட்ட நேரத்தில் பீட்ஸா, பர்கர், சமோசா, பிரெட் ஜாம் என்று சாப்பிடத் தொடங்குவோம். குழந்தைகளுக்கும் அதையே தான் சாப்பிடத் தருவோம். இதெல்லாம் எதில் போய் முடியும்? அதிக்கப்படியான கொழுப்பு மிக்க உணவுகலை எரித்து மாளாமல் உடல் அவற்றை கொலஸ்டிரால்களாக திசுக்க ஒல்லி பெல்லிகளை ஃபேட்டி ஆன்ட்டிகளாக மாற்றத் தொடங்கும்.
ஆகவே தீபாவளி என்றில்லை எந்த விழாவுக்காக திட்டமிடுவதாக இருந்தாலும் பெண்களே முதலில் உங்கள் வீட்டு ஃப்ரிஜ்ஜில் நிறைய ஃப்ரெஷ் காய்கறிகள் மற்றும் பழங்களை நிரப்பிக் கொள்ளுங்கள், பிறகு எங்கே வேண்டுமானாலும் நேரம் செலவழித்து விட்டு சாப்பிட வீட்டுக்கே திரும்புங்கள். சமைக்க சோம்பலாக இருந்தால் தயவு செய்து பழங்களையும், காய்கறிகளையும் மட்டுமே கூட சாப்பிட்டு விட்டு மறக்காமல் வாக்கிங் செல்லுங்கள். முடிந்த வரை அதிகமாக தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள் என்கிறார் சோனியா நரங்.
ஆல்கஹாலால் விழாவைச் சிறப்பிக்க காத்திருக்கும் ஆண்களின் கவனத்துக்கு:
குடியில் விருப்பமே இல்லாத ஆண்கள் மேலே பெண்களுக்குச் சொன்ன ஹெல்த் டிப்ஸ்ஸையே பின்பற்றிக் கொள்ளலாம். கூடுதலாக ஸ்பெஷல் கேட்டகிரி லிஸ்டில் வரத் தகுதியான இந்த எக்ஸ்ட்ரா பத்தியை வாசிக்காமல் தவிர்த்தும் விடலாம். ஆல்கஹாலில் விருப்பமுள்ள ஆண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம், விழாக்கால சிறப்புச் சலுகையாக ஆல்கஹாலில் பெரு விருப்பம் கொண்ட பேரின்பவாதிகள் தங்களுடைய ”குடி” படைக் கூட்டாளிகளுடன் இணைந்து எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகக் குடித்து தீபாவளிக்கு சிறப்புச் செய்யலாம் என்று முன்பே திட்டமிடத் தொடங்கி இருப்பார்கள். இதுவும் தான் எதில் போய் முடியும்? தீபாவளி குடிக் கொண்டாட்டத்தில் நண்பர்களோடு கூடி ரகளையாக ட்ரிங் செய்கிறேன் பேர்வழியென்று முதலில் முட்டக் குடித்து விட்டு பிறகு சைட் டிஷ்களை மொக்குவோர் இருப்பார்கள், அவர்களுக்கு ஒரு முக்கியச் செய்தி, குடிப்பது என்று முடிவு செய்து விட்டால் முதலில் ஹெல்தியாக சாப்பிட்டு விட்டுப் பிறகு குடிப்பீர்களாம். ஏனெனில் இரைப்பையில் இருக்கும் என்ஸைம்கள் குடித்து விட்டு எத்தனை ஆரோக்கியமான உணவுகளை உண்டாலும் கூட ஆல்கஹாலைத் தான் முதலில் எரிக்கத் தொடங்குமாம். பிறகு நீங்கள் உண்பதெல்லாம் என்ன ஆகக் கூடும்?! காக்கா தூக்கிச் செல்ல அதென்ன பாட்டி சுட்ட வடையா? வயிற்றுக்குள் போன வஸ்துக்களாயிற்றே... ஆகவே கொழுப்பாக மாறி திசுக்களில் சேகரிக்கப் படும். இது தொடர்கதையானால் பின் நாட்களில் பைபாஸ், ஆஞ்சியோ என்று அவலாஞ்சிக்கு உள்ளாக்கும். எனவே குடிப்பதில் ஆர்வமுள்ள குடிமகன்களே கவனமாக இருப்பீர்களாக. என்று சொல்கிறார் சோனியா நரங்.
ஒரு நியூட்ரிசனிஸ்ட்டால் என்ன செய்ய முடியும்? ஆலோசனை மட்டுமே தர முடியும். அதைப் பின்பற்றி நம்மையும் நம் உடல் நலனையும் பாதுகாக்க வேண்டிய வேலை இனி நம்முடையது.  அவர் சொல்வதைச் சொல்லி விட்டார். போதுமான அளவு தண்ணீர் அருந்துவதும், குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது வாக்கிங் செல்வதும் அப்படியொன்றும் கஷ்டமான பராமரிப்பு வேலையில்லை தானே!  சரி...சரி  இனி வரப்போவது  தீபாவளியா? இல்லை தீபா’வலியா’? என்று  நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

ஒருநாள் மன்னன்

By சி.வ.சு. ஜெகஜோதி  |

ஒரு கோயிலுக்குள் மூன்று மூலவர்கள் தனித்தனி சந்நிதிகளாக அமைக்கப்பட்ட பெருமைக்குரிய கோயில் காளையார்கோயிலில் அமைந்துள்ள சொர்ண காளீஸ்வரர் கோயில். இக்கோயிலின் ராஜகோபுரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருத்தேர் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மருது சகோதரர்களுக்கு எண்ணம் ஏற்பட்டது.
தைப்பூசத் திருவிழாவின்போது தேர்த் திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டு தேர் உருவாக்கும் பொறுப்பு மாலகண்டான் கிராமத்தைச் சேர்ந்த குப்பமுத்து ஆசாரி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பொறுப்பை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டார் சிற்பி.
புதிதாக வடிவமைக்கப்பட்டு வரும் தேரின் சக்கரங்களை இணைக்க மருதமரங்கள் தேர்வு செய்யப்பட்டன. தேர் செய்வதற்காக முதல் முதலாக சிற்பி உளியை எடுத்து விநாயகர் சிலை செய்ய முற்பட்டபோது விநாயகரின் துதிக்கை சிதைந்து விட்டது.

இதனால் கவலையடைந்த சிற்பி, உடனடியாக பெரிய மருதுவை சந்தித்து "தேர் செய்யக் கூடிய கூலியை உடனுக்குடன் வழங்கி விட வேண்டும். எனது தலைமையில் தேர் செய்யப்படுவதால் எனக்குத் தர வேண்டிய தட்சிணையை மட்டும் முதல் முதலாக தேரோடும் நாளில் கேட்டு பெற்றுக் கொள்கிறேன்' என்று கூறி விட்டார்.

தேர் செய்யும் தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் கூலித் தொகை வழங்கப்பட்டது. தலைமைச் சிற்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்குரிய தட்சிணை தொகை மட்டும் வழங்கப்படாமலேயே இருந்து வந்தது. தேரும் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டு தைப்பூசத் திருநாளில் முதல் முதலாக தேர் ஓடத் தொடங்கியது.

தேருக்கு பலி பூஜை செய்ய சென்ற குப்பமுத்து ஆசாரி தேருக்கு அடியில் சென்று தேர் ஓட முடியாத வகையில் ரகசியமாக ஆப்பு ஒன்றை வைத்து விட்டு வந்து விட்டார். இது தெரியாத மருது சகோதரர்கள் இருவரும் ஆர்வத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரின் மீதேறி தேரை கொடியசைத்து துவக்கி வைக்க முற்பட்டனர்.

ஊர் மக்கள் ஆர்வத்துடன் தேரை இழுக்கத் தொடங்கியபோது தேர் அசைய மறுத்து விட்டது. அப்போது தான் பெரிய மருதுவுக்கு சிற்பியின் நினைவு வந்தது. தேரை வடிவமைத்தமைக்காக சிற்பிக்கு தட்சிணை கொடுக்க மறந்து விட்டோமே என்பதை உணர்ந்தார். இதன்பின் அவரை அழைத்தனர்.
பெரிய மருது "தேர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் என்ன வேண்டுமோ, கேளுங்கள் தருகிறேன்' என்றார். அதற்கு சிற்பி "உங்களது கிரீடம், உடைவாள், செங்கோல் இவை மூன்றையும் என்னிடம் தாருங்கள் அவற்றை நான் அணிந்து கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் தேரில் வர வேண்டும். அதுவே எனது தட்சிணையுமாகும்' என்றார்.

சிற்பி இவ்வாறு கூறக் கேட்டதுமே அருகில் இருந்த சின்ன மருது ஆத்திரத்துடன் தனது உடைவாளை ஓங்கியபோது, பெரிய மருது குறுக்கிட்டு "சிற்பி ஏற்கெனவே என்னிடம் சொல்லியிருந்தார். தேரோடும் நாளில் அவர் கேட்கும் தட்சிணையை தருவதாகவும் சொல்லியிருந்தேன். இன்று ஒருநாள் தானே கேட்கிறார். அவரது ஆசையை பூர்த்தி செய்வோம்' என்று கூறிக் கொண்டே தான் அணிந்திருந்த கிரீடம் மற்றும் உடைவாள், செங்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்தார்.
மன்னர் வழங்கியவற்றை சிற்பி அணி
ந்து கொண்டு தேருக்கடியில் சென்று தேரை வணங்குவது போன்று அவர் ஏற்கெனவே வைத்த ஆப்பினை எடுத்து விட்ட பிறகு தேரின் மேலேறி கொடியசைக்க தேர் புறப்பட்டது.

பொதுமக்களும் ஆரவாரத்துடன் தேரை இழுத்தனர். தேர் நிலைக்கு திரும்பும் சமயத்தில் வீதியில் கிடந்த ஒரு கல் மீது ஏறி இறங்க தேரின் மீதிருந்த சிற்பி நிலைகுலைந்து தடுமாறி சற்றும் எதிர்பாராமல் தலைகுப்புற கீழே விழுந்தார். தேர்ச் சக்கரம் அவர் மீது ஏறியதால் சிற்பியின் உயிரும் பிரிந்தது.
"பேராசைக்காரன் இறந்து விட்டான்' என்று பலரும் சொல்லிக் கொண்டே இறந்து கிடந்த சிற்பியை உற்றுப் பார்த்த போது அவரது வலது கை அவரது இடுப்பில் அணிந்திருந்த பட்டு வஸ்திரத்தை பிடித்துக் கொண்டிருந்தது.
அந்த பட்டு வஸ்திரத்தைப் பிரித்துப் பார்த்தபோது அதில் பனை ஓலை ஒன்று இருந்தது. அதை எடுத்து அதிலிருந்த எழுத்துக்களை மருதுபாண்டியர்கள் படித்துப் பார்த்தனர்.

"மன்னா, நான் தேர் செய்யத் தொடங்கியபோது விநாயகரின் துதிக்கை சிதைந்ததால் எனது வம்சாவளியாக வானசாஸ்திரம் தெரிந்த நான் முத்துப் போட்டு பார்த்த போது இத்தேர் ஓடத் தொடங்கும் நாளில் மன்னருக்கு மரணம் நிகழும் எனத் தெரிந்து கொண்டேன்.

ஏராளமான கோயில்களை கட்டியும், ஏழை மக்களின் காவலராகவும் இருந்து வரும் எங்கள் சிறுவயது மன்னர் பல நூறு ஆண்டுகள் நீடூழி வாழ வேண்டும். வயதான நான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று கருதியே தங்களின் கிரீடத்தையும், செங்கோலையும் வாங்கினேன்.

எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவார்கள் எங்கள் மன்னர்கள் என்ற எண்ணத்தில் தான் இந்தச் செய்தியையும் ஓலையில் எழுதிக் கொண்டு வந்தேன். மருது பாண்டியர்கள் வாழ்க, சிவகங்கைச் சீமை வாழ்க' என்று எழுதப்பட்டிருந்தது.

சிற்பியின் தியாகச் செயலுக்காக காளையார்கோயிலுக்கு வெளியே, கோயிலைப் பார்த்தவாறு சிற்பி குப்பமுத்து இறைவனை வணங்கி நிற்பது போன்ற சிலையையும் அமைத்தார்கள்.

போரில் சரணடையா விட்டால் நீங்கள் கட்டிய காளையார்கோயிலை இடித்து விடுவோம் என்று ஆங்கிலேயர்கள் கூறியதால் தங்களது உயிரை விட கோயிலே முக்கியம் என்று ஆங்கிலேயரிடம் பிடிபட்டு தூக்கிலிடப்பட்டவர்கள் மருது சகோதரர்கள்.

நாட்டுக்காகவும், கோயில்களுக்காகவும் வாழ்ந்த மருதுபாண்டியர்கள் 24.10.1801-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.
தொழில்நுட்ப புரட்சியால் தீபாவளி வாழ்த்து அட்டை வாங்க ஆள் இல்லை வாட்ஸ்–அப், எஸ்.எம்.எஸ்.சில் வாழ்த்து பரிமாற்றம்

சென்னை,

தொழில்நுட்ப புரட்சியால் தீபாவளி வாழ்த்து அட்டை வாங்க ஆள் இல்லை. மாறாக வாட்ஸ்–அப், எஸ்.எம்.எஸ். மூலம் வாழ்த்துகள் பரிமாற்றம் நடந்து வருகிறது.

தீபாவளி வாழ்த்து அட்டை

அன்னையர் தினம், தந்தையர் தினம், ஆசிரியர் தினம், மற்றும் பண்டிகைகள், பிறந்தநாட்களில் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் தங்களுடைய அன்பையும், மரியாதையையும் தெரிவிக்கும் வகையில் வாழ்த்து அட்டைகளை அனுப்பும் பழக்கம் இருந்து வருகிறது.

தொழில்நுட்ப புரட்சியால் வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் வழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் இருந்து மறைந்து வருகிறது. வாழ்த்து அட்டைகளை வாங்கி அவற்றுக்கான தபால் தலைகளை ஒட்டி அனுப்பி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட காலம் போய், தற்போது செல்போன் மூலம் வாழ்த்துகளை பதிவு செய்து, யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுடைய செல்போன் எண்களுக்கு வாழ்த்துகளை விரைவாக அனுப்பும் பழக்கம் வந்து விட்டது.

வாழ்த்துக்காக ரீசார்ஜ்

தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் வாட்ஸ்–அப், குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலமாக வாழ்த்துகளை அனுப்பும் பரிமாற்றம் அதிகரித்து வருகிறது. வாழ்த்து அனுப்புவதற்கு தபால் உறைகள், தபால் தலைகள் வாங்குவதற்கு தபால் துறைக்கு செலவழிக்கும் தொகை தற்போது செல்போன் ரீசார்ஜ் செய்ய தொலைபேசி துறைக்கு செலவழிக்கும் நிலைக்கு மாறி உள்ளோம்.

வாழ்த்துகள் அனுப்புவதற்கு செலவிடப்படும் துறைகள் தான் மாறி உள்ளதே தவிர வாழ்த்துகளில் எந்த மாற்றமும் இல்லை. தபால் அலுவலகங்களில் கூடிய கூட்டம் தற்போது தொலைபேசி துறை அலுவலகங்களில் காணப்படுகிறது. மாறாக வாழ்த்து அட்டை கடைகளில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

சிக்கனமான நடைமுறை

வாழ்த்து அட்டை அனுப்புபவர்கள் பண்டிகை மற்றும் முக்கிய தினங்களுக்கு முன்பாக 3 நாட்களுக்கு முன்பாகவே அதற்கான வேலைகளில் ஈடுபட வேண்டும். ஆனால் தற்போது செல்போன் மூலம் அனுப்பப்படும் வாழ்த்துகள், பண்டிகை மற்றும் முக்கிய தினங்களில் அன்றைய தினமே அனுப்பப்படுகிறது.

இதன் மூலம் விரைவாகவும், சிக்கனமாகவும் அனுப்பப்படுவதுடன், நேரமும் மிச்சப்படுத்தப்படுகிறது.

10 சதவீதம் பயன்பாடு

இதுகுறித்து சென்னை பாரிமுனையில் வாழ்த்து அட்டை விற்பனை செய்யும் என்.முகமது பைசல் கூறியதாவது:–

தொழில்நுட்ப புரட்சி காரணமாக வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் மக்களிடம் இருந்து படிப்படியாக அதனுடைய மவுசு குறைந்து வருகிறது. தற்போது 10 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் தான் வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கத்தை கொண்டு உள்ளனர். ஆசிரியர் தினத்துக்கு தான் அதிக வாழ்த்து அட்டைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் தற்போது அந்த தினத்திலும் வாழ்த்து அட்டை வாங்க ஆள் இல்லாமல் விற்பனை குறைந்துவிட்டது. பண்டிகை, அன்னையர் தினம் போன்றவை சீசனில் மட்டுமே விற்கப்படுகிறது. ஆனால் பிறந்தநாள் வாழ்த்து அட்டை ஆண்டு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. வாழ்த்து அட்டைகளின் தேவை குறைந்ததால் விற்பனை முற்றிலும் சரிந்து உள்ளது.

தீபாவளி பண்டிகை கால வாழ்த்து அட்டை விற்பனை வெகுவாக குறைந்து உள்ளது. இதேபோன்று கடந்த ஆண்டு மழை பெய்ததால் கடந்த ஆண்டும் விற்பனை இல்லாத நிலை இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
திருவனந்தபுரம்,



சவுமியா கொலை வழக்கில் தவறு ஏற்பட்டதற்கு அதிகப்படியான வேலைப்பளு காரணமாக இருக்கலாம்: கட்ஜூ மீண்டும் விமர்சனம்

சவுமியா கொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் தவறு ஏற்பட்டதற்கு நீதிபதிகளின் அதிகப்படியான வேலைப்பளு காரணமாக இருக்கலாம் என்று மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.


கேரளாவை சேர்ந்த சவுமியா என்ற இளம்பெண் கடந்த 2011–ம் ஆண்டு திருச்சூரில் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டு, கோவிந்தசாமிக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜூ, இந்த உத்தரவு குறித்து திறந்த கோர்ட்டில் மீண்டும் விசாரிக்க வேண்டியது அவசியம் என்று கூறியிருந்தார்.


கட்ஜூவின் இந்த விமர்சனத்துக்கு அதிருப்தி வெளியிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் (நவம்பர்) 11–ந்தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கட்ஜூவுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இது நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு சம்மன் அனுப்பியிருப்பது இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறையாகும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தான் நவம்பர் 11–ந்தேதி நேரில் ஆஜராக இருப்பதாக கட்ஜூ தனது பேஸ்புக் வலைத்தளத்தில் கூறியிருந்தார்.


இந்த நிலையில், அதிகப்படியான வேலைப்பளு காரணமாக சவுமியா வழக்கில் நீதிமன்றம் தவறு இழைத்திருக்க கூடும் என்று மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளது மீண்டும் நீதிமன்ற வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. தனது பேஸ்புக் பக்கத்தில் மார்கண்டேய கட்ஜூ இன்று இது குறித்து கூறியிருப்பதாவது:- “ கேரள நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை மறு ஆய்வு செய்து உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பு தவறானது என்று நான் நம்புகிறேன்.அதிகப்படியான பணிச்சுமை காரணமாக இந்த தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


மேலும், தனக்கு சம்மன் அனுப்பட்டு இருப்பதாக முதலில் தகவல் கிடைத்ததும் மிகவும் அதிருப்தி அடைந்ததாகவும் தன்னை அவமதிக்கும் நோக்கில் சம்மன் அனுப்பட்டிருக்கலாம் என்று கருதியதாகவும் தெரிவித்துள்ள அவர், உச்ச நீதிமன்றம் அளித்த நோட்டீஸை படித்து பார்த்த பிறகு மிகவும் மரியாதைக்குரிய வார்த்தையை பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. எனக்கு உத்தரவு போடப்படவில்லை. வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. எனவே நான் வரும் 11 ஆம் தேதி ஆஜராக முடிவு எடுத்துள்ளேன்” என்றார்.


தொடர்ந்து தனது பதிவில், பிரபலமான பிரிட்டிஷ் நீதிபதி லார்டு டென்னிங் கூறிய கருத்துக்களை மேற்கோள் காட்டியுள்ள கட்ஜூ, “ தவறுகளே செய்யாத ஒரு நபராக நீதிபதிகள் பிறக்கவில்லை. நாம் அனைவரும் மனிதர்கள். அனைவரும் தவறுகள் செய்வோம். ஆனால், பண்புள்ள ஒருவர் தனது தவறை புரிந்து கொண்டு திருத்தம் செய்ய முற்படுவார்” என்று தெரிவித்தார்.

Running clinics is not a commercial activity: HC

A clinic run of a private doctor or their partnership firm can't come under the definition of 'commercial establishment' as per the Bombay Shops and Establishments Act, 1948, the Nagpur bench of Bombay High Court has held. Pronouncing the verdict on the plea filed by the Indian Medical Association(IMA) challenging the validity of Section 2 (7) of the Act, a division bench comprising justice Vasanti Naik and justice Indira Jain, made it clear that doctors or their partnership firms come under the category of 'professionals'.

While quashing an amendment of 1977 carried out in the Bombay Shops and Establishments Act, 1948, the judges termed it as ultra vires (beyond the powers). The Maharashtra government through an amendment had brought all these professionals under the Act's ambit through an amendment and issued notices to them in 2005. They were threatened with imposition of fine which will increase with each passing day.

In 2005, the Indian Medical Association (IMA), through counsel Bhanudas Kulkarni, challenged this amendment of inclusion of doctors contending that since they are governed by different Acts and even statutory bodies like Medical Council of India(MCI), and hence they are professionals.

Citing Supreme Court's 1968 verdict and one more by the high court while hearing a criminal appeal, Kulkarni argued that the maternity home/clinic run by the doctor can't be termed as a commercial activity, as doctors provide service to patients. He pointed out that chains of hospitals can be termed as commercial activity, as doctors were paid for rendering their service.

The government opposed his contentions, stating that similar plea by Matru Seva Sangh (MSS) was dismissed by the court earlier, but it failed cut ice with judges.

Saturday, October 22, 2016

தமிழகத்தில் முதன் முறையாக வண்டலூரில் 6 வழிப்பாதை உயர்நிலை மேம்பாலம்: ரூ.55 கோடியில் அமைக்கப்படுகிறது; 2018-ல் பயன்பாட்டுக்கு வரும்


வண்டலூரில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், தமிழ கத்திலேயே முதன்முறையாக ரூ.55 கோடியில் 6 வழிப்பாதைகள் கொண்ட உயர்நிலை மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் முதல் திருச்சி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்-45) தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் பிரதான நெடுஞ் சாலையாக விளங்குகிறது. தினசரி பல்லாயிரக்கணக்கான வாக னங்கள் இந்த தேசிய நெடுஞ் சாலையை பயன்படுத்துகின்றன.

எனினும், வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரை உள்ள பகுதிகளில் தினசரி குறைந்தது ஒரு வாகன விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்துகளில் கடந்த சில ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வாகனங்கள் மோதலால், அடிக்கடி போக்குவரத்தும் ஸ்தம்பிக்கிறது.

பொதுமக்கள் சாலையை கடப்பதற்காக ஆங்காங்கே அமைக் கப்பட்டுள்ள சிக்னல்களால், சீரான போக்குவரத்து இல்லாமல் நெரிசல் அதிகரிக்கிறது. குறிப்பாக பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வாக வண்டலூர் சந்திப்பில் ரூ.55 கோடியில் உயர் நிலை மேம்பாலம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 6 வழிப்பாதையுடன் கூடிய உயர்நிலை மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

வண்டலூர் முதல் ஊரப்பாக்கம் மற்றும் கிளம்பாக்கம் வரை சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெறு கின்றன. மேம்பாலம் கட்டுவதற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இந்த விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படுகிறது. முதல் கட்டமாக சாலையை சமன்படுத்தும் பணி நடைபெறுகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: வண்டலூர் - கேளம்பாக்கம் சந்திப்பில் ரூ.55 கோடியில் மேம் பாலம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. மேம்பாலம் 6 வழிகளைக் கொண்டதாக அமைக்கப்படும். மேம்பாலத்தின் நீளம் 700 மீட்டர், அகலம் 24 மீட்டர் மற்றும் தற்போதைய சாலையின் நடுவே 9 தூண்கள் அமைக்கப்படும். இந்த மேம்பாலம் 2018-ல் பயன்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலுக்கு முதலில் தீர்வு காணும் வகையில், தற்போது வண்டலூர் சந்திப்பு முதல் ஊரப்பாக்கம் வரை சாலை அகலப்படுத்தப்படு கிறது.

தமிழகத்தில் வேறு எங்கும் 6 வழிப்பாதையாக உயர்நிலை மேம்பாலம் இதுவரை அமைக்கப் படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொண்டுள்ள மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள், ‘2 ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க அரசு தரப்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறை வடையும் வகையில் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள் ளன’ என்று தெரிவித்தனர்.

G.O. comes to rescue of Good Samaritans

In order to encourage more people to come forward to help people injured in road accidents, the Tamil Nadu government has issued directions that Good Samaritans or bystanders in case of road accidents shall not be liable for any civil or criminal liability or be coerced into revealing their names or personal information.

The State government on Friday issued directions with regard to protection of Good Samaritans or bystanders especially in road accidents in a G.O.

The Central government had earlier issued such directions based on an order of the Supreme Court.

As per the directions, Good Samaritans or bystanders, including an eyewitness of a road accident, “may take an injured person to the nearest hospital, and…should be allowed to leave immediately, except after furnishing address by the eyewitness only and no question shall be asked to such bystander or the Good Samaritan”.

The order also makes it clear that lack of response by a doctor in an emergency situation in road accident cases, where he or she is required to provide care, will constitute “professional misconduct” under Chapter 7 of the Indian Medical Council Regulation, 2002, and disciplinary action shall be taken against such doctor under Chapter 8.

Says those who come forward to help the injured in road accidents should not be harassed or intimidated





×

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...