Sunday, October 30, 2016

நாட்டாண்மைக்கே' தீர்ப்பு சொன்ன கிராமம்

திருப்புவனம்: சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் குறைவாக இருந்த காலத்தில் கிராமங்களில் பெரும்பாலும் பிரச்னைகளை விசாரித்து தீர்ப்பு சொல்வது நாட்டாண்மை எனப்படும் கிராம தலைவர்கள் தான். அதிலும் தீர்ப்பு சொன்ன நாட்டாண்மைக்கே பிரச்னை வந்த போது கிராமமே சேர்ந்து தீர்ப்பு சொன்னதும் அதை நாட்டாண்மை ஏற்றுக் கொண்ட சம்பவமும் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள ஏனாதி, பூவந்தி, மடப்புரம், செம்பூர், சுண்ணாம்பூர் உள்ளிட்ட ஐந்து கிராமங்கள் 'அஞ்சூர்நாடு' என அழைக்கப்படுகிறது. இதில் தாய் கிராமம் ஏனாதி. ஐந்து கிராமத்திலும் நடைபெறும் சொத்து பிரச்னை, வாய்க்கால் தகராறு,பாதை தகராறு , திருவிழா உள்ளிட்ட எந்த பிரச்னையானாலும் அஞ்சூர் நாட்டு தலைவர் சொல்வது தான் இறுதி தீர்ப்பாக இருக்கும். இந்த ஐந்து கிராமங்களுக்கும் தனித்தனி நாட்டாண்மை உண்டு. இன்றைய கால கட்டத்தில் நாட்டாமை பதவியை ஒழித்து விட்டனர் என்றாலும் கிராமத்தில் பெயரளவில் இன்னமும் நாட்டாண்மை உண்டு. கோவில் திருவிழா உள்ளிட்ட விஷயங்களில் இன்னமும் முதல் மரியாதை நாட்டாமைகளுக்கு உண்டு. நாட்டாண்மைக்கு சொன்ன தீர்ப்பை கோர்ட்டே பாராட்டிய சம்பவமும் நடந்துள்ளது. 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள ஏனாதி கிராம நாட்டாண்மையாக இருந்தவர் கருப்பையா அம்பலம். இவருக்கு திருமணமாகி சிட்டுப்பிள்ளை என்ற மனைவியும்,மூன்று குழந்தைகளும் உண்டு. அந்தக்காலத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால் நாட்டாண்மை கருப்பையா அம்பலம் தட்டு வண்டி எனப்படும் மாட்டு வண்டியில் மற்ற ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். அவ்வாறு நாலுார் நாட்டைச் சேர்ந்த அரசனுார் கிராமத்திற்கு கடந்த 1937ல் செல்கையில் அந்த ஊரைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்பவரை பார்த்து விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டு ஏனாதிக்கு வந்துள்ளார். தகவலறிந்து முதல் மனைவி மற்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிராமங்களில் பிரச்னை என்றால் நாட்டாண்மைக்கு தகவல் சொல்வார்கள். பிரச்னைக்கு காரணமே நாட்டாமை என்பதால் கிராமமே இணைந்து விசாரித்துள்ளது. இரண்டாவது மனைவி பேச்சியம்மாளை கைவிட கருப்பையா அம்பலம் மறுத்துள்ளார். 

இதனையடுத்து கிராமமே இணைந்து ஆலோசனை நடத்தியுள்ளது. முதல் மனைவியிடம் கிடைக்காத சந்தோஷம் இரண்டாவது மனைவியிடம் கிடைத்துள்ளது. எனவே கருப்பையா அம்பலம் இரண்டாவது மனைவியுடன் இருந்து கொள்ளலாம். ஆனால் இதுவரை சம்பாதித்த சொத்துக்கள், பரம்பரை சொத்துக்கள் அனைத்தையும் முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு கொடுத்து விட வேண்டும். இனி சம்பாதிக்கும் சொத்துக்கள் அனைத்தும் இரண்டாவது மனைவிக்கு சொந்தம் என கூறியுள்ளனர். 

அதனைக் கேட்ட நாட்டாண்மை கருப்பையா அம்பலம் கட்டியிருந்த இடுப்புக் கொடியை கூட அறுத்து கொடுத்து விட்டு இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு சென்றுவிட்டார். தொடர்ந்து இரண்டாவது மனைவியுடன் குடும்பம் நடத்தியதில் மலைச்சாமி, ராஜலட்சுமி, பாண்டியம்மாள் என்ற குழந்தைகள் பிறந்துள்ளன. கருப்பையா அம்பலத்திற்கு பின் மலைச்சாமி நாட்டாண்மையாகவும் அஞ்சூர் நாட்டு தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அதன் பின் மலைச்சாமி மகன்கள் முருகானந்தம், வெங்கடேசன், திருமூர்த்தி ஆகியோரில் தற்போது வெங்கடேசன் ஏனாதி நாட்டாண்மையாக உள்ளார். வெங்கடேசனிடம் கேட்ட போது,“எங்கள் ஐயா(தந்தை வழி தாத்தா) விற்கு தான் இந்த தீர்ப்பு சொன்னார்கள். இந்த தீர்ப்பை பாராட்டி அந்த காலத்தில் சென்னை ஐகோர்ட் நீதிபதி மிஸ்ரா பாராட்டு பத்திரம் வழங்கியுள்ளதுடன் இதனை மேற்கோள் காட்டியும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.தீர்ப்புக்கு பின் எங்கள் ஐயாவின் இரு மனைவிகளும் சமாதானமாக இருந்தாலும் எனது தந்தை, அதன் பின் நாங்கள் என பரம்பரை பரம்பரையாக நாட்டாண்மையாக இருந்துள்ளோம். 1989ல் எம்.ஜி.ஆர்.,ஆட்சி காலத்தில் நாட்டாண்மை பதவி ஒழிக்கப்பட்டது. ஏனாதி கிராம பஞ்சாயத்துகள் உள்ளுரில் உள்ள பொது மந்தையில் நடைபெறும். அஞ்சூர் நாட்டு பஞ்சாயத்துகள் தற்போது சிவகங்கை -மதுரை சாலையில் உள்ள தனியார் கல்லுாரி எதிரே உள்ள ஆலமரத்தடியில் நடைபெறும். பஞ்சாயத்து நாளன்று ஆலமரத்தடியில் அஞ்சூர் நாட்டைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கூடுவது வழக்கம்”, என்றார்.நாட்டாண்மை பதவி ஒழிக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில் இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் தான் காரணம் என கூறப்படுகிறது

. எல்லா கிராமங்களிலும் நாட்டாண்மைக்கு முதல் மரியாதை கொடுக்கப்படுவது வழக்கம்.1988ல் அப்போதைய அமைச்சராக இருந்த எஸ்.டி. சோமசுந்தரம் கிராமத்தில் நடந்த அரசு விழாவிற்கு வந்த போது நாட்டாண்மைக்காக காத்திருந்துள்ளார். கோபமடைந்த அவர் எம்.ஜி.ஆரிடம் சொல்லி நாட்டாண்மை பதவியையே காலி செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. கிராமப்புற பஞ்சாயத்துக்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் இன்றளவும் 2வது மனைவி சம்பந்தமான தீர்ப்பு அனைவராலும் ஏற்று கொள்ளக் கூடிய தீர்ப்பாக இருந்துள்ளது. திருமூர்த்தி கூறுகையில்,“ கிராமங்களில் பிரச்னை என்றால் பாதிக்கப்பட்டவர் வெற்றிலை, பாக்கு ஆகியவற்றுடன் நாட்டாண்மையை சந்தித்து பிரச்னையை கூறுவார். எதிர்தரப்பிற்கு ஆளனுப்பிய பின் குறிப்பிட்ட நாளில் இருதரப்பையும் வைத்து விசாரணை ஆரம்பமாகும். நாட்டாண்மை சொல்லும் தீர்ப்பை 95 சதவிகிதம் அனைவரும் ஏற்று கொள்வோம். மீறுபவர்களை ஊரை விட்டு விலக்கி வைக்கும் சம்பவமும் நடைபெறும்.

ஆனால் எனக்கு தெரிந்து யாரும் நாட்டாண்மை தீர்ப்பை எதிர்த்ததில்லை. அனைவரும் ஏற்றுகொள்வார்கள். ஏன் என்றால் எங்கள் ஊர் நாட்டாண்மை அவருக்கு சொன்ன தீர்ப்பை ஏற்று கொண்டு அதன்படி நடந்து கொண்டவர் என்பதால் நீதி தவற மாட்டார் என்பது நம்பிக்கை,” என்றார்.
குரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'

முதல் முறையாக தேர்வு எழுதுவோருக்கு, 3 மணி நேரத்திற்குள் எழுதி முடிப்பது சற்று கடினமாக உள்ளது. இதற்கு தினமும் ஒரு 'மாதிரி தேர்வு' எழுதிப் பழகினால் நேர மேலாண்மையில் வெற்றி பெறலாம். தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்க வேண்டாம். ஏற்கனவே படித்த பாடங்களை நினைவுபடுத்தி திரும்ப படித்தாலே போதுமானது. கீழ்க்கண்ட பாடங்களில் நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை:

பொது அறிவு பகுதி

புதிய தேர்வு முறையில் 25 வினாக்கள் ஆப்டிடியூட் பகுதியில் கேட்கப்படுகிறது. இதில் எண்களின் வகைகள் தொடர்புடைய வினாக்கள், அடிப்படை கணித முறை, கையாளும் முறை, பின்னங்கள், தனிவட்டி, கூட்டுவட்டி பரப்பளவு மற்றும் கனஅளவு பகுதிகளில் உள்ள சூத்திரங்களை நினைவுப்படுத்தவும்.n விபரங்களை கையாளும் முறையில் பட்டை விளக்கப்படம், வட்ட விளக்கப்படம், கோட்டு விளக்கப்படம், அட்டவணைகள் தொடர்பான வினாக்கள்.n பகடை, புதிர், வினாக்கள், எண் தொடர் வரிசை, விடுபட்ட எண், விடுபட்ட படம், படத்தொடரில் அடுத்து இடம் பெறும் படம். நடப்பு நிகழ்வுகள் பகுதியிலிருந்து 10 முதல் 15 வினாக்கள் கேட்கப்படலாம். விண்வெளி நிகழ்வுகள், தேசிய சின்னங்களின் முக்கியத்துவங்கள், சமீபத்திய விருதுகள், உலகின் முக்கிய அமைப்புகளின் சமீபத்திய மாநாடுகள், நடைபெற்ற இடங்கள் (குறிப்பாக ஐ.நா., செய்திகள்) விளையாட்டுச் செய்திகள், புதிய கண்டுபிடிப்புகள், நியமனங்கள், பாதுகாப்பு சிறப்பம்சங்கள்.n வரலாறு பாடத்தில் கால வரிசை, முக்கிய ஆண்டுகள், சங்க காலம் முதல் சுதந்திரம் பெற்றது வரையிலான காலங்களில் நடந்த போர்களின் ஆண்டுகள், இடம், போரிட்ட நபர்கள், போர் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள்.n உலகை வலம் வந்த பயணிகள், அவர்கள் இந்திய வருகையின் போது இருந்த மன்னர்கள்.n வரலாற்று புத்தகங்கள், அதன் ஆசிரியர்கள், பத்திரிகைகள், சமய சீர்திருத்த இயக்கங்கள், இந்திய தேசிய காங்.,தோற்றம், மாநாடுகள், நடந்த இடம், தலைமை வகித்தவர், முக்கிய தீர்மானங்கள்.n இயற்பியலில் அலகுகள், விதிகள், அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள், அளவிடும் கருவிகள், அதன் பயன்கள் மற்றும் அறிவியல் மதிப்புகள்.n வேதியியலில் வேதிப்பெயர்கள், சமன்பாடுகள், முக்கிய அமிலங்கள், தனிம வரிசை அட்டவணையின் சிறப்பு, அன்றாட வாழ்வில் பயன்படும் வேதிச் சேர்மங்கள்.n தாவரவியலில் செல் அமைப்பு, தாவர, விலங்கு செல்களில் உள்ள நுண்ணுருப்பிகளின் பணிகள், தாவர பாகங்கள், வளர்ச்சி காரணிகள், வைரஸ், பாக்டீரியாவால் ஏற்படும் தாவர நோய்களை பட்டியலிடல்.n மனித உடலியியலில் ரத்த வகைகள், ரத்த செல்களின் சிறப்பம்சம், இதய அமைப்பு, செயல்படும் விதம், நாளமிள்ளா சுரப்பிகளின் சிறப்புகள், வைட்டமின், எலும்புகளின் எண்ணிக்கை மற்றும் முக்கிய எலும்புகளின் பெயர்கள், நரம்பு மண்டலத்தில் மூளையின் அமைப்பு, அதன் பணிகள், பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள், அதை ஏற்படுத்தும் கிருமிகள்.n புவியியலில் மாநில தலைநகரங்கள், முக்கிய மலைகளின் அமைவிடம், காடுகளின் சிறப்பு, விலங்கு சரணாலயங்கள், அமைந்துள்ள மாவட்டம், மாநிலங்கள், அங்கு புகழ்பெற்ற விலங்குகள், முக்கிய ஆறுகளின் பிறப்பிடம், சேருமிடம், துணையாறுகள், பயனடையும் மாநிலங்கள், அணைகளை வரிசைப்படுத்தி படிக்கவும். போக்குவரத்து அமைப்பை, உணவு பயிர்களில் முதன்மை வகிக்கும் மாநிலங்கள், தாதுக்கள் காணப்படும் இடங்கள்.n சூரியன் மற்றும் சூரியக் குடும்ப 8 கோள்களின் தனிச்சிறப்புகள், வானிலை, பருவகால காற்றுகள்.n இயற்கை பேரிடர்களான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, பனிப்பாறை வீழ்ச்சி, பாதிப்புகள்.n இந்திய அரசியல் அறிவியலில் அரசியலமைப்பு சட்டத்தின் வளர்ச்சி, அட்டவணைகள், முக்கிய ஷரத்துகள், சமீபத்திய சட்டத் திருத்தங்கள், ஜனாதிபதி, பிரதமர், முக்கிய பதவிகளை பற்றிய சிறப்பம்சங்கள், சமீபத்திய அரசியல் மாற்றம், தேர்தல் கமிஷன்.n பொருளாதார கோட்பாடுகளை கூறியவர்கள், பொருளாதார வார்த்தைகளின் அர்த்தம், ஐந்து ஆண்டு திட்டங்களின் சிறப்பம்சம், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், கமிட்டிகள்.

பொதுத்தமிழ் 

இதுவரை குரூப் - 4 தேர்வில் உள்ள கேள்விகளைப் பார்த்து, அதில் உள்ளவற்றிக்கு விடையளிக்க முயற்சிக்க வேண்டும். இதனால், எவ்வாறு கேள்விகள் கேட்கப்படும் என்ற தெளிவு கிடைக்கும்.
பகுதி (அ) இலக்கணம் : இலக்கணத்தில் முக்கியமானது தொடரும் தொடர்பும், அறிதல், பிழை திருத்தம், பெயர்ச்சொல்லின் வகையறிதல், இலக்கணக் குறிப்பறிதல், எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல், எதுகை, மோனை, இயைபு பகுதியில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு முயற்சியுடன் விடையளிக்க வேண்டும். இதற்கு பயிற்சி மிக முக்கியம். இதனால் அதிக மதிப்பெண் பெற முடியும்.
n பொதுத்தமிழ் பாடப்பகுதிக்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை படிப்பது நல்லது. தமிழ் இலக்கண எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி பகுதிகளில் தற்போது யாப்பு, அணி பகுதிகளில் இருந்து அதிகம் வினாக்கள் கேட்கப்படுகிறது.n துணைப்பாடத்தில் முக்கிய கூற்றுகளை கவனிக்கவும், புணர்ச்சி விதி, சந்திப்பிழைகளை நன்கு படிக்கவும்.n நுாலின் வேறு பெயர்கள், நுாலாசிரியர் பெயர், அவரின் சிறப்பு பெயர், அறிஞர்களின் கூற்றுகள், புகழ் பெற்ற தொடர்களை கூறியவர்கள் மற்றும் இடம்பெற்ற நுால்கள், இலக்கண குறிப்பு.
பகுதி (ஆ) இலக்கியம் : இதிலிருந்து 30 வினாக்களுக்கு மேல் கேட்கப்படும். இதை எளிமை என அலட்சியம் கூடாது. சமயம், பண்பாடு, காலாசாரம், நாகரிகம் இப்பகுதியில் அடங்கியுள்ளது. முக்கியமானது பதிணென் மேற்கணக்கு, பதிணென் கீழ்கணக்கு, பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம். புரிந்து தெளிவாக விடையளிக்க வேண்டும்.

n சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம், புதுக்கவிதை வரை உள்ள நுால்,- நுாலாசிரியர்கள், குறிப்புகள், அவர்களின் பிற இலக்கியப் படைப்புகள்.
பகுதி(இ) தமிழ் அறிஞர்கள், தமிழ் தொண்டு மறுமலர்ச்சிக் காலம் என்பது தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டாற்றியவர்களும் ஆவர். இவர்கள் உலக நாடுகளுக்கு தமிழ் சென்றடைய முக்கியமானவர்கள். இதில் மிக முக்கியமானது பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், மருதகாசி, புதுக்கவிதை கவிஞர்கள், கலைகள், சிற்பம், உரைநடை, உ.வே.சாமிநாத அய்யர், தேவ நேயப்பாவாணர், ஜி.யு. போப் வீரமாமுனிவர், தமிழ் பெண்கள், தமிழர் வணிகம், உணவே மருந்து, திரு.வி.க.,வை மனப்பாடம் செய்யாமல், அவர்களின் வாழ்க்கை சிறப்புகளை வியந்து பார்த்து படித்தால் தெளிவு கிடைக்கும்.

- பெ.வெங்கடாசலம், நிர்வாக இயக்குனர்,நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங்,மதுரை. 90470 34271.

டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ள 5451 குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்ப நவ.,6 ல் தேர்வு நடக்கிறது. இதில் 12 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்விற்காக ஆவலுடன் உள்ளனர். இத்தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் 75 வினாக்கள், அறிவுக்கூர்மை தொடர்பாக 25 வினாக்கள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்கள். ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு மதிப்பெண் பிடித்தம் இல்லை. ஆதலால் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.
தேர்விற்கு செல்லும் முன்... 

* ஹால் டிக்கெட், நீலம் அல்லது கருமை நிற மை கொண்ட “பால் பாயின்ட் பேனா” மூன்று அல்லது நான்கு கொண்டு செல்க.* தேர்வு மையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சென்றால் பதற்றத்தை தவிர்க்கலாம்.* கைக்கடிகாரம் அணிந்து அடிக்கடி நேரத்தை சரிபார்க்கவும்.* தேர்வுக்கு முதல் நாள் இரவு, நன்கு துாங்கவும். துாக்கமின்றி சென்றால், யோசிக்கும் திறன் குறையும்.* கவனச் சிதைவு இன்றி முழு கவனத்துடன் கேள்விகளை படித்து பார்க்கவும்.* தன்னம்பிக்கையுடன் கூடிய பயிற்சி, முயற்சியே போட்டித் தேர்வுகளில் வெற்றியை தேடித்தரும். இதை மனதில் வைத்து படித்து நீங்களும் அரசு ஊழியராக வாழ்த்துகள்!
பண்டிகை நிறைவு; பட்டாசு சத்தம் குறைவு...தித்தித்தது தீபாவளி! தீ விபத்தின்றி இனிதாக கழிந்ததால் மகிழ்ச்சி!
கடந்த சில ஆண்டுகளை விட, இந்த ஆண்டு தீபாவளி கூடுதல் உற்சாகத்துடன் கோவை மக்களால் கொண்டாடப்பட்டது; ஆனால், பட்டாசு வெடிப்பது குறைந்து, தீ விபத்துக்களும் இல்லாமல் இனிதே நிறைவு பெற்றது பண்டிகை.
வழக்கத்துக்கு மாறாக, இந்த ஆண்டில், கோவையிலுள்ள தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து கழகம் போன்றவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, தீபாவளி போனஸ் முன்கூட்டியே வழங்கப்பட்டது. இதனால், தீபாவளி 'பர்சேஸ்' மிக விரைவாகவே துவங்கியது. துணிக்கடை, ஸ்வீட் கடை, எலக்ட்ரானிக் கடைகளில் மக்கள் கூட்டம், அலை அலையாய்த் திரண்டது.
விடிய விடிய கூட்டம்!வியாழக்கிழமை இரவிலிருந்தே, தீபாவளி உற்சாகம், நகரில் களை கட்டத்துவங்கி விட்டது. வெள்ளிக்கிழமை இரவையும் பகலாக்கும் வகையில், வீடுகள் தோறும் வெடி வெடித்தும், வண்ண மயமான பட்டாசுகளை கொளுத்தியும் மகிழ்ந்தனர். இரவு முழுக்க நகருக்குள், மக்கள் நடமாட்டம் இருந்தது. வெளியூர் செல்லும் மக்களின் கூட்டம், வெள்ளிக்கிழமை இரவு வரையிலும் குறையவில்லை.
தீபாவளி பண்டிகையான நேற்று, காலை புத்தாடை அணிந்து, குடும்பம் சகிதமாக கோவில்களுக்கு சென்றனர். கிராமங்களில், கோவில் மற்றும் பொது மைதானங்களில் வெடி வெடித்து ஆரவாரமாய் பண்டிகை கொண்டாடினர். வீட்டில் தயாரித்த இனிப்பு, காரம் வகைகளை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், பக்கத்து வீட்டாருக்கும் பரிமாறி பண்டிகை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடைத்தெருக்களில் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்தன. பேக்கரி, ஓட்டல்கள் செயல்பட்டன. பெரும்பாலான ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டதால், குட்டீஸ்கள் ரோட்டில் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
இணைந்த நட்பும், இனிய உறவும்!ஈச்சனாரி விநாயகர், மகாலட்சுமி மந்திர், மருதமலை, புலியகுளம் விநாயகர் கோவில், கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில், சித்தாபுதுார் ஐயப்பன், ராம் நகர் ராமர் கோவில், உக்கடம் லட்சுமி நரசிம்மன் கோவில், கோட்டை சங்கமேஸ்வரன் கோவில்களில் வழிபாட்டுக்காக மக்கள் குவிந்தனர். இதனால், இந்தப் பகுதிகளில் மட்டும், வாகன போக்குவரத்து நேற்று அதிகமாக இருந்தது.
ஆன்மிக பயணம், உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு பயணம், சினிமா காட்சிகளுக்கு படையெடுப்பு என, குடும்பத்துடன் கிளம்பியதால், ரோடுகளில் வாகன ஓட்டம் ஓயவில்லை. ஆனால், பெரும்பாலான முக்கியச் சாலைகள், பரபரப்பின்றி படு அமைதியாகக் காட்சியளித்தன.

தீ விபத்தில்லா தீபாவளி!கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் பட்டாசு சத்தம் சற்று குறைவாகத் தெரிந்தது. கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீ விபத்தில்லா தீபாவளியாக இருந்தது. இந்தாண்டு, தீயணைப்புத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தீ விபத்தை தவிர்க்க மாவட்டம் முழுவதும், 24 தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருந்தன. ஆனால், இரு நாட்களில் தீ விபத்து ஏதும் இல்லை. அதனால், இந்தாண்டும், தீ விபத்தில்லா தீபாவளியானது.

பசுமைக்கு பச்சைக்கம்பளம்!கோவை மாநகராட்சி சார்பில், பசுமை தீபாவளி கொண்டாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டமொன்று அறிவிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை இயற்கை சூழலுடன் இணைந்து கொண்டாடும் வகையில், மரக்கன்று நட்டு அதனை போட்டோ, வீடியோ எடுத்து, 81900 00200 என்ற எண்ணுக்கு 'வாட்ஸ் ஆப்' அனுப்புமாறு, மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

நாளை (31ம் தேதி) இரவு வரையிலும், பசுமை தீபாவளி கொண்டாட்ட படங்களை அனுப்பலாம். இத்திட்டத்தில் பங்கேற்போருக்கு பரிசு வழங்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார். இத்திட்டத்துக்கு மக்கள் ஏகோபித்த ஆதரவு தெரிவித்து, மரக்கன்று நடுவதையும், பட்டாசு குப்பையை தனியாக குவித்து, சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரிப்பதையும் 'செல்பி' படம் எடுத்து, அனுப்பியுள்ளனர்.
காலையிலேயே 'கலக்கிய' வியாபாரம்!பண்டிகை கொண்டாட்டத்தால், இறைச்சிக்கடைகளில் நேற்று காலை முதலே கூட்டம் அலை மோதியது. ஆட்டிறைச்சி, பிராய்லர் மற்றும் மீன் கடைகளில் மக்கள் அணிவகுத்து நின்று, குடும்பத்தினருக்கு பிடித்த இறைச்சியை வாங்கிச்சென்றனர்.
அதேபோன்று, சினிமா தியேட்டர்களில் இளைஞர்கள் கூட்டம் அள்ளியது. தீபாவளிக்கு வெளியான புதுப்படங்களை முன்பதிவு செய்தவர்களும், காட்சி நேரத்துக்கு சென்று டிக்கெட் எடுப்பவர்கள் என, நாள் முழுக்க கூட்ட நெரிசலாகவே காணப்பட்டது. திரையரங்குகளிலும் காட்சிகள் எண்ணிக்கையை அதிகரித்திருந்தனர்.

பண்டிகை கால கூட்டத்தை போன்று, நேற்று 'டாஸ்மாக்' கடைகள் திறப்பதற்கு முன்பே கூட்டம் கூடி நின்றது. கடை நிறந்ததும் பல இடங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. 'குடி' பிரியர்களை குறி வைத்து, காலை முதலே, பார்களில் 'சரக்கு' விற்பனை சட்ட விரோதமாக கொடி கட்டிப்பறந்தது. போதையில் தள்ளாடி ரோட்டோரத்தில் சரிந்தவர்களும் ஏராளம்.

-நமது நிருபர்-

Saturday, October 29, 2016

சான்றிதழ் வேணும்னா 3 ஆயிரம் ரூபாய் வேணும்; இலஞ்ச கேட்ட அதிகாரி.

சான்றிதழ் கேட்டுவந்த விவசாயியிடம் ரூ.3 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய நகராட்சி உதவியாளரை இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பொடிவைத்து பிடித்துக் கைது செய்தனர்.

கடலூர் பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (53). இவர் ஒரு விவசாயி. இவருடைய மாமனார் தண்டபாணி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் குணசேகரன் தன்னுடைய மாமனார் தண்டபாணி இறப்புச் சான்றிதழ் கேட்டு நீட்திமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இதற்காக கடலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து அவருக்கு இறந்து போன தண்டபாணியின் இறப்பை பதிவு செய்யவில்லை என சான்றிதழ் தேவைப்பட்டது. இதனை அடுத்து குணசேகரன் நகராட்சி பிறப்பு - இறப்பு சான்றிதழ் பிரிவில் உதவியாளராக இருக்கும் கடலூர் அன்னவெளி மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த ராமன் (39) உதவியை நாடினார்.
பின்னர் அவரிடம் என்னுடைய மாமனார் இறப்பை பதிவு செய்யவில்லை என சான்றிதழ் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கு உதவியாளர் ராமன், குணசேகரனிடம் ரூ.3 ஆயிரம் இலஞ்சம் தந்தால் உனக்குச் சான்றிதழ் தருகிறேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் அவருக்கு சான்றிதழ் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். பின்னர் இது பற்றி குணசேகரன் கடலூர் இலஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கூறிய அறிவுரைப்படி, இரசாயன பொடி தடவிய ரூ.3 ஆயிரத்தை கடலூர் நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு - இறப்பு சான்றிதழ் பிரிவில் இருந்த ராமனிடம் வெள்ளிக்கிழமை குணசேகரன் வழங்கினார்.

அப்போது அங்கு மறைந்து இருந்து கண்காணித்த இலஞ்ச ஒழிப்பு காவல்துறை இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், திருவேங்கடம், திருமால் ஆகியோர் ராமனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும், ஏற்கனவே தயாராகி இருந்த 100 பிறப்பு - இறப்பு சான்றிதழ்களையும் இலஞ்ச ஒழிப்பு காவலர்கள் கைப்பற்றினர். அந்த சான்றிதழ்களை ஏன்? இன்னும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கவில்லை என்றும் இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்றும் இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ராமன் மீது ஏற்கனவே நில அளவீடு செய்ததில் இலஞ்சம் பெற்றதாக இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு உள்ளது

குறிப்பிடத்தக்கது. நகராட்சி அலுவலகத்தில் உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

HC rescues woman employee from fraudulent marriage

SPECIAL CORRESPONDENT

The Madras High Court has come to the rescue of a woman who was fraudulently shown as being married to a former colleague.

The court found that a human resources executive in a private firm, in which the woman was employed as an engineer, used documents she had signed for some other purpose to register a fictional marriage between them. The executive had obtained her signatures on some papers in the guise of giving her a transfer from Thoothukudi to Chennai.

Allowing a writ petition filed by the woman, Justice M. Govindaraj quashed the registration of the supposed “marriage” and directed the Marriage Registrar, Chennai North, to “delete, cancel and remove” the entry made on September 15, 2014 in the Marriage Register.

The judge said it would be “unfair” to direct the petitioner to go to a Family Court seeking declaration of the marriage as null and void since it would cause further mental agony to the woman who was already in distress.

He noted that the woman was recruited as a Trainee Engineer in a private power plant in Thoothukudi in 2014 and was desperate to get transferred to its Chennai office. The HR Executive, T. Mohamed Fahmi, took her to the company’s office at Egmore in Chennai and obtained signatures in a couple of papers on the promise of finding a suitable position for her.

Subsequently, he made a volte face, citing lack of vacancies in Chennai. The petitioner left the job in March 2015 as she was unable to cope with the work pressure in Thoothukudi.

It was only before the Assembly elections in May this year that the petitioner found that her name had been included in the voters’ list of Srivaikuntam constituency in Thoothukudi district, mentioning her as the wife of Fahmi.

On enquiry, she came to know that he had included her name as his wife in his passport as well as family card.

Further, probe revealed that such documents had been created on the basis of the registration of a ‘marriage’ that took place between them in the office of Chennai-based advocate K. Ameer Batcha and duly registered with the Registrar of Marriages.

Shocked over such allegations, the High Court on August 2 included the advocate as well as the Bar Council of Tamil Nadu and Puducherry as respondents to the case and ordered notices to them.

The Bar Council rushed to the court to inform that advocate Batcha “was a person known for his chamber activities of solemnizing and registering the marriages and that he had solemnized lot of marriages at the chambers and acted as a priest contrary to the oath taken before the Bar Council.”

However, neither the HR Executive Fahmi nor the lawyer Batcha entered appearance despite the court serving notice on them and the Bar Council contended that they would not appear before the court since the registration was per se illegal.

The petitioner’s counsel brought it to the notice of the court that the marriage had been reported to have been performed under Section 7A of the Hindu Marriage Act, 1955 which was a special provision with respect to solemnisation of self respect marriages between Hindu couples and not applicable to couples professing different religions.

HR executive of a firm she worked for obtained her signatures in a devious way and registered the marriage







×



High Court favours employment of widow of temporary worker

SPECIAL CORRESPONDENT

Empathising with the widow of a temporary municipality employee who died before his services could be regularised, the Madras High Court Bench here has directed the Commissioner of Paramakudi Municipality in Ramanathapuram district to sympathetically consider her plea for accommodating her in some temporary post as expeditiously as possible and communicate the decision to her.

A Division Bench of Justices M. Sathyanarayanan and J. Nisha Banu passed the order while dismissing a writ appeal preferred by the widow J.K. Shanthi challenging the refusal of a single judge to direct the Commissioner of Municipal Administration and that of the Municipality to disburse the terminal benefits due to her husband who had served as Pump Operator, in a temporary post, in the local body since August 16, 1989.

The Bench held that the single judge had rightly refused to issue such a direction since the petitioner’s husband J.R. Kannan had died on January 29, 2006 even before his services were regularised by the State Government on the basis of a proposal forwarded to it by the municipality. They also pointed out that he had lost the chance of regularisation by a whisker since other similarly placed employees got regularised on February 23, 2006.

On October 5, 2006, the petitioner made an application to the Commissioner of Municipal Administration seeking compassionate employment and on March 22, 2007 a petition was submitted to the Commissioner of Paramakudi Municipality demanding the terminal benefits due to her husband. Both the requests were rejected on the ground that those benefits could be accorded only with respect to permanent employees and not temporary staff.

16 cats kept for meat rescued in Chennai

CHENNAI: Police and volunteers of People for Animals (PfA) rescued 16 catsfrom a narikorava settlement in Pallavaram here on Friday. The cats were kept for their meat.

PfA volunteer Sagar Sheth, who was part of the operation, said they received information that pet cats were trapped by the narikorvas, who on weekends skinned them and sold the meat to roadside eateries in and around Pallavaram. The meat was used in biryani.

Two PfA volunteers visited the settlement on Thursday. They befriended a couple of narikorava youths and asked them to demonstrate how the cats are trapped and then skinned. The demonstration was recorded by the volunteers. Later, the footage was shown to the Pallavaram police, who agreed to rescue the cats from the narikoravas.

On Friday morning, the police and PfA volunteers went to the narikorava settlement. All the 16 cats were kept in a single cage, and they were not provided water to drink.

Pallavaram police inspector G Venkatesan said they had received complaints about pet cats being stolen from various residential areas and kept in narikorava settlement. "When the PfA volunteers approached us for help, our team went and rescued the cats," he said.

The rescued cats were sent to in the PfA shelter in Red Hills. PfA co-founder Shiranee Pereira said the rescued cats were visibly shocked and dehydrated. They were not fed regularly. This was evident from their aggressive behaviour. "It will take at least a month for the cats to recover from the shock and behave normally," she said.

NEWS TODAY 18.12.2025