Saturday, November 5, 2016


துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழாவா? சென்னைப் பல்கலை. பேராசிரியர்கள் எதிர்ப்பு
By DIN | Last Updated on : 05th November 2016 02:44 AM | அ+அ அ- |


சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் பட்டச் சான்றிதழில் துணைவேந்தர்தான் கையெழுத்திட வேண்டும், அதற்கு மாறாக பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திடக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஆர்.தாண்டவன் பதவிக் காலம் கடந்த ஜனவரியோடு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு 9 மாதங்களுக்கு மேலாகியும் துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. உயர்கல்வித் துறைச் செயலர் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுதான் பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருகிறது. துணைவேந்தர் இல்லாததால் பட்டமளிப்பு விழா நடத்துவது இழுபறியில் இருந்து வருகிறது.

இதன் காரணமாக, துணைவேந்தர் எப்போது நியமிக்கப்படுவார், பட்டமளிப்பு விழா எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையேயும், மாணவர்களிடையேயும் எழுந்தது. இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், துணைவேந்தர் இல்லாமலேயே பட்டமளிப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, விழா தேதிக்கு ஒப்புதல் பெறுவதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஆட்சிக் குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆட்சிக் குழு உறுப்பினர் ஒருவர் கூறியது:

பட்டச் சான்றிதழில் துணைவேந்தர் கையெழுத்திடுவதே மரபு. அதை மாற்றி, பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் தாற்காலிக ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக சட்ட ஆலோசனை பெற்று முடிவு எடுக்கலாம் என்று கூறி அந்தத் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்துக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இடிபாடுகளுக்கு இடையில்...


இடிபாடுகளுக்கு இடையில்...

By ஆசிரியர் | Last Updated on : 04th November 2016 12:55 AM | அ+அ அ- |

சென்னை மெளலிவாக்கத்தில் புதன்கிழமை தகர்க்கப்பட்ட 11 மாடிக் கட்டடத்தின் இடிபாடுகள் அகற்றப்பட்ட பிறகு, அந்த நிலம் நீதிமன்ற உத்தரவின்படி, அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டும் நிறுவனத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தவறான இடத்தில் கட்டப்பட்டதால்தான் அந்தக் கட்டடம் தகர்க்கப்பட்டது. அந்த இடத்தை மீண்டும் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுநரிடம் கொடுப்பானேன்?

இரண்டு கேள்விகள் எழுகின்றன. இந்த இடம் நீர்நிலைப் பகுதிக்கு உட்பட்டது என்றால் இதனைக் கட்டுமான நிறுவனத்துக்கு ஏன் திரும்ப அளிக்க வேண்டும், அரசே எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே என்பது முதல் கேள்வி.

இந்த இடத்தை அரசு திரும்ப எடுத்துக்கொள்ள முடியாது என்கிற பட்சத்தில் இந்த இடத்தில் வீடு வாங்குவதற்காக ரூ.20 கோடி செலுத்திய 48 பேர் அத்தொகையை திரும்பப் பெற முடியாத நிலையில், இந்த இடத்தை கட்டுமான நிறுவனத்துக்கு திரும்ப அளிக்காமல் அரசே விற்பதன் மூலம், இந்த 48 பேருக்கு இழப்பீடு வழங்கலாகாதா என்பது அடுத்த கேள்வி.

மெளலிவாக்கத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து 61 பேர் இறந்த சம்பவத்தில் விசாரணை நடத்திய நீதிபதி ரகுபதி தனது அறிக்கையை ஆகஸ்ட் 2015-இல் அளித்தபோது, அந்த நிறுவனத்தில் வீடு வாங்கப் பணம் செலுத்தியவர்களுக்கும், கட்டடம் சரிந்தபோது பாதிப்படைந்தவர்களுக்கும் நியாயமான இழப்பீடு வழங்க, ஒரு குழுவை அமைக்கலாம் என்று பரிந்துரைத்திருந்தார். இன்னும் அத்தகைய ஒரு குழு அமைக்கப்படவில்லை. ஒருவேளை, இனி அமைக்கப்படக்கூடும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
நீதிபதி ரகுபதி தனது பரிந்துரையில் முக்கியமானதாக, கட்டுநர், வீடு வாங்குவோர், வங்கி மூன்று தரப்பினரும் இணைந்ததான ஒரு காப்பீட்டு முறை ஏற்படுவதற்கு தற்போதைய சட்டத்தை வலுப்படுத்த அல்லது புதிய சட்டத்தை பிறப்பிக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார். அப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டாக வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மனைவணிக ஒழுங்காற்றுச் சட்டத்திலும்கூட இதுபற்றிய தெளிவு காணப்படவில்லை.

மத்திய வீட்டுவசதி மற்றும் ஊரக ஏழ்மை ஒழிப்பு அமைச்சகம் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி, வீடு கட்டுநர் மற்றும் வீடு வாங்குபவர் செய்துகொள்ள வேண்டிய விற்பனை ஒப்பந்த விதிமுறைகளை (அஞ்ழ்ங்ங்ம்ங்ய்ற் ச்ர்ழ் ள்ஹப்ங் தன்ப்ங்ள் 2016) வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்த விதிமுறையில், கட்டுநர் அல்லது வீடு வாங்குபவர் இருவரில் யார் வேண்டுமானாலும், வாக்கு தவறும் நிலையில் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள முடியும். வீடு வாங்குபவர் தனது ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள விரும்பாவிட்டால், கட்டுமான நிறுவனம் அவருக்கு வீட்டைக் கட்டி ஒப்படைக்கும்வரை வட்டிப் பணம் அளிக்க வேண்டும். ஆனால், கட்டுநரின் சக்திக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளால், அதாவது போர், வெள்ளம், புயல், வறட்சி போன்றவற்றால் ஒரு கட்டடம் கட்டுவதற்கு தாமதமானால், இந்த விதி பொருந்தாது. அவர் வீடு வாங்குபவருக்கு காலதாமதத்துக்காக எந்தத் தொகையும் தர வேண்டியதில்லை என்கிறது அந்த விதிமுறை.
கட்டுநரின் ச
க்திக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளால் தாமதமானால் அவருக்கு எந்தப் பொறுப்பேற்பும் கிடையாது. ஆனால் காலதாமதமாகும் ஆண்டுகளுக்கு வீடு வாங்குபவர் வங்கியில் வட்டிப் பணம் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இது எந்த வகையில் சரி? வங்கிகளால் கட்டுநர்களுக்குத் தரப்படும் அதே விதிமுறைத் தளர்வு கடன் பெற்றவர்களுக்கும் தரப்படுவதுதானே நியாயம்?

மத்திய அரசு குறிப்பிடும் இந்த விற்பனை ஒப்பந்த விதிமுறைகள், வீடு வாங்குபவருக்கு கடன் வழங்கும் வங்கிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. ஆனால் நீதிபதி ரகுபதி விசாரணைக் கமிஷன் தனது பரிந்துரையில் வங்கியையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்கிறது. இதுவே சரியான அணுகுமுறை என்பது தற்போது மெளலிவாக்கம் விவகாரத்தில் வெளிப்படையாகத் தெரிகிறது.

மெளலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு விவகாரத்தில் சிருஷ்டி ஹவுஸிங் பிரைவேட் லிட். நிறுவனக் கணக்கில் வீடுவாங்கியவர்கள் கோரிய கடன் தொகையை நேரடியாக வங்கியே காசோலை அல்லது பணப்பரிமாற்றம் மூலம் வழங்கியுள்ளது. கடன் வாங்கியவர் அந்தத் தொகையை வேறு பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டார் என்கிற பேச்சுக்கே இடமில்லை.
2014 ஜூன் மாதம், இரு கட்டடங்களில் ஒன்று இடிந்து விழுந்தவுடன் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. இருந்தும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக, வீடு வாங்க பணம் செலுத்தியோர் அனைவரும் அவர்கள் வாங்காத பணத்துக்கான வட்டியை, எந்தப் பயனுமின்றி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் வீடு வாங்கிய 48 பேருக்கும் நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பு அளிக்கும் என்பது தெரியாது. எத்தகைய இழப்பீடு கிடைக்கும் என்பதும் தெரியாது. இந்நிலையில், இந்த இடத்தில் வீடு வாங்கக் கடன் பெற்ற அனைவருக்கும், நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் வரை, வட்டி விலக்கு அளிக்கும் குறைந்தபட்ச சலுகையையாவது வங்கிகள் வழங்க வேண்டும்.

இந்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த கட்டுமானத் துறை சார்ந்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என்பது உறுதி. ஆனால், 48 வீடுகளுக்கு பணம் செலுத்தியவர்கள் நிலை என்ன? இவர்களுக்கான இழப்பீடாக, குறைந்தது 50% தொகையை அளித்து, மீதித் தொகையை நீதிமன்றத் தீர்ப்பின் முடிவில் கணக்குப் பார்ப்பதுதான் மனிதாபிமான செயல்பாடாக இருக்கும்!

நோயின்றி வாழ்வோம்!

நோயின்றி வாழ்வோம்!

By ஆர்.எஸ். நாராயணன்  |   Last Updated on : 05th November 2016 01:33 AM

நலம் விசாரிப்பது மனித மரபு. இதில் பல பாணிகள் உண்டு. "செளக்கியமா?'"நல்லாயிருக்கீங்களா?' "நலந்தனா?' இதற்கெல்லாம் வரக்கூடிய பதில் பொய்யானது. நலந்தானா என்று கைபேசியில் விசாரிக்கும்போது, மூன்று விதமான மாத்திரைகளை உள்ளே தள்ளியபடி ரொம்ப நல்லாருக்கேன் என்பார்.

தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தால் நூறு சேனல்கள் வருகின்றன. ஐம்பது சேனல்களில் மருத்துவ விளம்பரம். விதவிதமானவை. சிறப்பாக சித்த - ஆயுர்வேத மருத்துவர்கள் உலகத்தில் உள்ள சகல நோய்களுக்கும் தீர்வு கண்டு விட்டதாகக் கூறுவார்கள்.

இவர்கள் மருந்துகளை உண்டு நோய் குணமானதாக நோயாளிகளிடமே சான்றிதழ் பெறுவார்கள். இன்னாரின் மருந்தை உட்கொண்டு, சிகிச்சை பெற்று மூட்டுவலி நீங்கியது, முதுகு வலி பறந்தது, மூக்கில் நீர்வடிவது நின்றது, முகம் பிரகாசமானது, என்றெல்லாம் நோயாளிகளாக நடிப்பவர்கள் பேசுவார்கள். காண்பவர்கள் நிஜமென்று நம்பி ஏமாந்து போவதுண்டு.
மற்றொரு வகையான விளம்பரம். வெள்ளைக்காரப்பெண் அல்லது வெள்ளையான இந்திய இளம் பெண் கூச்சமின்றி அங்க அவயங்களைக் காட்டுவாள். குண்டாயிருந்த ஆண் - பெண் பெல்ட் அணிந்து மெலிந்து விடுவார்கள். இக்கால ஜங்க் உணவால் பலருக்கு உடம்பே மலைபோல் ஆகிவிடுவது உண்மைதான். இதைக் குணப்படுத்துவதாகக் கூறும் பொய்யான விளம்பரங்களும் உண்மைதான்.

இரவு பதினோரு மணியிலிருந்து மன்மத விளம்பரங்கள் தொடங்கும். ஆண்மைத் தன்மை பெற விதம் விதமான சிட்டுக்குருவி லேகியங்கள், டானிக்குகள், விளம்பரமாகும். இதில் ரகசியம் எதுவுமில்லை. அப்படிப்பட்ட மருந்துகளைச் சோதித்துப்பார்த்தால் அபினியையோ கஞ்சாவையோ கலந்திருப்பார்கள்.

உண்மையில் அப்படிப்பட்ட மருந்துகளைத் தொடர்ந்து உண்பவர்கள் நாளைடைவில் நரம்புத்தளர்ச்சி, மூளைச்சிதைவு நோய்களுக்கு ஆளாகலாம் என்கிறது ஒரு மருத்துவ புள்ளிவிவரம்.
தொலைக்காட்சிகளில் நீண்ட தொட ரோ, திரைப்படமோ ஒளிபரப்பு செய்யும் போது எத்தனை நோய் விளம்பரங்கள்? அவற்றில் கிரிக்கெட் நட்சத்திரங்கள், நடிகர், நடிகைகள் பங்கேற்று, மூக்கடைப்பு நின்றது, இருமல் நின்றது, சக்தி வந்தது என்றெல்லாம் கூறி குறிப்பிட்ட மருந்துக் கம்பெனிக்கு விளம்பரம் தேடுவார்கள்.

இன்று ஒரு யோகாகுரு பெரிய பெரிய மருந்து நிறுவனங்களுக்கு சவால்விடுகிறார். இருமல் மருந்து. தேன், நூடுல்ஸ், ஆட்டா, சக்திபானம் என்றெல்லாம் விளம்பரங்கள். நோய்க்கு மருந்து யோகாசனங்கள் மட்டுமல்ல, குடல் பசிக்கும் உணவு, மருந்து வழங்குகிறார்.

பிணிதீர்க்கும் பெரிய பெரிய மருத்துவ நிபுணர்களின் மருத்துவ விளம்பரங்கள் நாளிதழ்களிலும் வாரப்பத்திரிகைகளிலும் அடிக்கடி வருவதுண்டு.

ஒவ்வோர் ஊரிலும் புதிய புதிய மருத்துவ மனைகள் திறக்கப்படும் போது விளம்பரங்கள். இதயத்தில் பிரச்னையா வருகை தாருங்கள். சிறுநீரகப் பிரச்சினையா? புற்றுநோயா? வயிற்றுவலியா? குடல்நோயா? கால்வலி, கைவலி, இடுப்புவலி போன்ற சகல வலிகளுக்கும் நரம்பியல் நிபுணர்களும், மூட்டு இயல் எலும்பு வைத்தியர்களும் தத்தம் மருத்துவனைகளுக்கு வருமாறு அழைப்பு விடுப்பார்கள்.

முன்பெல்லாம் ஒவ்வொரு நகரத்திலும் நான்கு தங்கும் விடுதிகள் இருந்தால் ஒன்று அல்லது இரண்டு தனியார் மருத்துவ மனைகள் இருக்கும். இன்று அப்படி இல்லை. தங்கும் விடுதிகள் நான்கு எட்டானால், மருத்துவமனைகள் இரண்டு என்பது இருபதாக உயர்ந்து கொண்டு வருகிறது. இதன் காரணம் நோய்ப் பெருக்கம் மட்டுமல்ல, மருந்து மாத்திரை உற்பத்தியிலும் இந்தியா ஒரு முன்னணி நாடுதான்.
இந்திய மக்கள்தொகையில் 20 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிப்பு அடைந்து தினமும் மாத்திரைகள் உண்ண வேண்டிய நிலையில் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் எட்டு சதவீதம் பேர் சர்க்கரை நோயால் தாக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 சதவீதம் மக்கள் அளவு மீறிய எடை போட்டுள்ளனர். எடைக்குறைவான மக்களை விட எடைபோட்ட மக்களே அதிகம்.சிறார் இறப்பு வீதம் 27 சதவீதம்.
இந்தியாவில் மாநில வாரியாக நோய்களின் புள்ளிவிவரங்களை (2015-16) ஐ.நா. உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள அடிப்படையில் சராசரி கணக்கிடப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளின் கணக்கில் முதலிடம் மேற்கு வங்கம். ரசகுல்லா வேலை செய்துள்ளது. இரண்டாவது இடம் தமிழ்நாடு. திருநெல்வேலி அல்வா, தெருக்கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்கள், லாலா மிட்டாய்க்கடைகளில் வழங்கப்படும் இனிப்புகளுக்கு அளவே இல்லை.

தமிழ் நாட்டில் 11 சதவீதம் மக்கள் சர்க்கரை நோயாளிகள். அதே சமயம் குண்டு - தொப்பையர்கள் மேற்கு வங்கத்தில் குறைவு. தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிகம். குறிப்பாக தமிழர்களில் ஆண்களை விடப் பெண்களே அதிகம் குண்டு (31%) ஆண்கள் 28 சதவீதம் குண்டு - தொப்பை போட்டவர்கள். இந்தப் பட்டியலில் தமிழன் முதலிடம் வகிக்கிறான்.

பட்டி தொட்டிவரை தமிழ்நாட்டில் ஜங்க் உணவு விற்பனையிலும் தமிழ்நாடே முதல் நிலையில் உள்ளது. இது ஐ.நா. உலக சுகாதாரப் புள்ளிவிவர மதிப்பீடு.

ஒரு காலத்தில் இந்தியாவில் புற்றுநோய் அபூர்வமாயிருந்தது. புகை பிடிப்போருக்கு மட்டுமே புற்றுநோய் ஏற்படும் என்பது உண்மையின் ஒரு பக்கமே. முன்னைவிட இப்போது புகையிலைப் பயன் குறைந்துவிட்டது. இந்தியப் புகையிலை நிறுவனம் புகையிலை பயிரிட்ட இடங்களில் இன்று காகிதப் பயன் கருதி மரவளர்ப்பு செய்து வருகிறது.

புகையிலைப் பயன் குறைந்தாலும் புற்றுநோய் வளர்வது ஏன்? குறிப்பாகப் புகையிலைப் பயன்படுத்தாமல் வாழும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும், கருப்பையில் புற்றுநோயும் வருவது எப்படி?
விஷமான பூச்சி மருந்து அமோனியா தெளித்த விளைபொருள்களை உண்ணுவது, ஜங்க் உணவு, மரபணு மாற்றிய விதைகளிலிருந்து பெறும் உணவு, நிறத்திற்காகவும், உணவு கெடாமல் பாதுகாக்கவும் பயன்படும் பல்வேறு ரசாயனப் பொருள்கள் இவற்றால் புற்றுநோய் ஏற்படுகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் (Indian Council Of Medical Research)  வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் சுமார் 30 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், நாளுக்கு நாள் புற்றுநோய் சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை கூடிவ ருவதாகவும், 2020-ஐ நெருங்கும் போது 50 லட்சம் மக்கள் புற்றுநோய் சிகிச்சைக்கு வருவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.
14 வயதுக்குட்பட்ட மாணவ - மாணவிகளுக்குப் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போவதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. பெண்களுக்கு மார்பகம், கருப்பை, தொண்டைக் குழாய் போன்றவை புற்றுநோய்க்கு இலக்காகின்றன. ஆண்களுக்கு சுவாசப்பை, தொண்டை, வாய், வயிறு, சிறுநீரகம், பெருங்குடல் போன்றவை பாதிப்புறுகின்றன. புற்றுநோயிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலம் என்பது கவலை தருகிறது.

நோய்களில் பலவகை உண்டு. சிறுநீரகம், இதயம், மூளை, நரம்பு மண்டலம், சுவாசப்பை ஆகியவை பாதிக்கப்பட்டால் அவை தீராத பெருநோய்கள். ஜலதோஷம், காய்ச்சல், வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு ஆகியவை தீரும் என்றாலும் தொடரும் சிறுநோய்கள். மஞ்சள் காமாலை, டைஃபாய்டு, பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா போன்றவை பாக்டீரியா, வைரஸ் மூலம் ஏற்படும் அபாயகரமான நோய்கள் - சுகாதாரக் கேடுகளினாலும் அசுத்தநீர் பருகுவதாலும் தொற்றும் இயல்புள்ளவை.

பாக்டீரியா வைரஸ் தொற்றுநோய்களுக்கு "பென்சிலின்' ஒரு தீர்வாயிருந்த காலம் போய் "டெட்ராசைக்ளின்' வந்தது. அதன்பின் "ஆம்பிசிலின்'. அதுவும் போய் "அமாக்ளீன்' என்கிறார்கள். இந்த "ஆண்டிபயாட்டிக்'கில் எவ்வளவோ மருந்துகள் உண்டு. சில நோயாளிகளுக்கு எந்த ஆண்டிபயாட்டிக்கும் வேலை செய்யவில்லையாம்.

குறிப்பாக கோழிக்கறி உண்பவர்கள், தேன் பருகுவோர் ஆகியோருக்கு இப்படிப் பிரச்னை வரலாம். ஏனெனில் கோழிவளர்க்கும்போது அதற்கு நோய் வராமல் இருக்க கோழித் தீவனத்தில் "ஆக்சிடெட்ராசைக்ளின்', "குளோர் டெட்ராசைக்ளின்', "டாக்சி சைக்ளின்', "என்ரோஃப்ளாக்சாசின்', "சிப்ரோஃப்ளாக்சாசின்' ஆகிய ஆண்டிபயாட்டிக் மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. இம்மருந்துகளின் எச்சம் கோழிக்கறியில் எஞ்சி அதை உண்ணும் மனிதனுக்குத் தேவையில்லாமல் ரத்தத்தில் எதிர்விஷம் சேர்ந்து விடுகிறது.

இப்படிப்பட்டவர்களுக்கு நோய் வந்தால் எந்த ஆண்டிபயாட்டிக்கும் வேலை செய்யாது. அதை "சூப்பர் பக்'(Super Bug) என்கிறார்கள். தேனீ வளர்ப்பிலும் இவ்வாறே மேற்கூறிய அதே ஆண்டிபயாட்டிக் மருந்துகள் தேனீக்கள் மீது தெளிக்கப்படுகின்றன. ஆகவே தேனில் ஆண்டிபயாட்டிக் எஞ்சியுள்ளது.

தேன் குறைவாக சாப்பிடுவார்கள். கோழிக்கறி அதிகம் சாப்பிடுவார்கள். ஆகவே, தேனைவிட கோழிக்கறியில் சூப்பர் பக் நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

குழந்தையிலிருந்தே ஐஸ்கிரீம், சாக்லேட்டுகளை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டதால் குழந்தைகள் குண்டாகிவிட்டன. பெரும்பாலான மாணவமணிகள் கைபேசியில் அல்லது கணினி முன் உட்காந்தபடி செட் செய்யப்பட்ட விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்களே தவிர, உடல் வியர்க்கும் படியான விளையாட்டுகளில் ஈடுபடுவது இல்லை.

எவ்வளவு நோய்வந்தாலும் துரிதமான எதிர்ப்பு சக்தியை உடல் பயிற்சி மூலம் பெற்றுவிடலாம். "நலந்தானா' என்று நண்பர்கள் கேட்கும்போது "நலமே' என்று பொய் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது!

Friday, November 4, 2016

Allowance scam: Railway union men among 13 TTEs suspended

TOI

CHENNAI: Thirteen travelling ticket examiners (TTEs) of Southern Railway were suspended on Tuesday after officials busted a scam in the commercial department where the TTEs were claiming travel allowance without being on duty.

The suspended TTEs of Trichy division include S Veerasekaran and P Anthonysamy, assistant general secretary and assistant divisional secretary of Southern Railway Mazdoor Union (SRMU) the sole recognised union in the zone.

Revealing the details, a senior railway official said the TTEs were claiming travel allowance (TA) for the entire month without setting foot on the trains concerned. "One of these 13 worked only five days, but claimed TA for 27 days. This not only causes a loss of revenue to the railways, but passengers are inconvenienced as passengers with unreserved tickets can enter and travel freely," he said.

The TA claims of each TTE were in the range of 15,000- 20,000 a month, officials said. "This would translate into a notional loss of around 15 lakh a year for the 13 TTEs," the official said.

The racket was allegedly flourishing for years, but the officers concerned continued to approve the TA as a majority of the offenders are key office-bearers of SRMU, officials said. It was thoroughly investigated after chief commercial manager Ajeet Saxena ordered an inquiry last month.

Latest Commentvery good initiative. negligence of duty is not tolerable and that too claiming TA. these type of checking is must throughout india by authorities in all type of duties.Radhakrishnan Mm

Veerasekaran was always available at the SRMU leadership's beck and call at the Golden Rock Workshop in Trichy, observers say. "It was always a mystery as to how he found time for carrying out his duties as a TTE," said A Janakiraman, working president of Dakshin Railway Employees Union (DREU), a rival to SRMU.

A similar scam had been busted in mid-2015 by officials in the Chennai division after it was found that TTEs were employing porters and other proxies to fine ticket-less passengers at railway stations like Chennai Central. Though they were immediately transferred, SRMU intervened to stop their transfer. The other TTEs suspended on Thursday are F M A Jayaraj, M Thamaraiselvan, S Muruganandam, M Raja, E Manohar, H Abdul Sirajudeen, A Periyanan, S Durairaj, A Nazeer Ahmed, R Ravi and Jermiah Melvin.

பியூன் அம்மாவின் பணி நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த கலெக்டர், டாக்டர், எஞ்சினியர் மகன்கள்!

By DIN  |   Last Updated on : 03rd November 2016 

ஜார்கண்ட் மாநிலத்தின் ராம்கார்க் நகரில் பியூனாகப் பணியாற்றி பணி நிறைவு பெறவிருந்த சுமித்ரா தேவியின் வாழ்வில் கடந்த திங்கள் (1.10.2016) ஒரு உன்னதமான நாளாகி விட்டது. பணி நிறைவு பெறுவதென்பது அரசுத் துறை, தனியார் துறை எனும் வேறுபாடுகளின்றி எல்லோருக்கும் பொதுவான விசயம் தானே! இதிலென்ன உன்னதம் வந்தது? என்று கேட்கலாம். சுமித்ரா தேவியால் மட்டும் தான் அந்த நாளின் பரிபூரணத்துவத்தை முற்றிலுமாக உணர முடியும். ஏனெனில் சுமித்ரா ஏனைய பியூன்களைப் போல சாதரணமானவர் அல்லவே! பியூனாக ஒரு பெண் பணி நிறைவு பெறுவதென்பது மிக மிகச் சாதாரணமான விசயம் தான்.

ஆனால் கடின உழைப்பும், போராட்ட வாழ்வும் கொண்ட சுமித்ராவை நன்கறிந்த ராம்கார்க் வாசிகளுக்கு அது ஒரு சாதாரண நாளாகத் தெரியவில்லை தான். ஏனெனில் அந்த நாள் அந்தத் தாயின் பல வருடக் கனவு நனவான தருணம் ஆயிற்றே! பியூன் சுமித்ராவின் மூன்று மகன்களும் கலெக்டராகவும், டாக்டராகவும், எஞ்சினியராகவும் வெற்றிகரமாகப் படித்துப் பட்டம் பெற்று பணி புரிவதோடு, தங்களது தாயின் பணி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு அம்மாவைக் கவுரவப் படுத்தி இருக்கிறார்கள்.

மூத்த மகன் வீரேந்திரக் குமார் ரயில்வே எஞ்சினியர்., இரண்டாவது மகன் தீரேந்திர குமார் ஒரு டாக்டர், கடைக்குட்டி மகேந்திர குமார் பிகார் சிவான் மாவட்ட கலெக்டர். மகன்கள் இப்படி குரூப் ஒன் அலுவலர்களாக கடின உழைப்பில் கலக்கிக் கொண்டிருந்த போதும் சுமித்ரா தேவி தனது பியூன் உத்யோகத்தை கைவிடவில்லை. பணி நிறைவு பெறும் கடைசி நாள் வரை பொறுப்பாகவும், பொறுமையாகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு உழைத்து பிற பெண்களுக்கு நல்ல முன்மாதிரியாகவே செயல்பட்டுள்ளார் என ’டைனிக் ஜகரான்’ ஹிந்தி தினசரிப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

திங்கள் அன்று தனது மூன்று மகன்களும் கலந்து கொண்டு சிறப்பித்த பணி நிறைவு விழாவில் சுமித்ரா தேவி மிகவும் நெகிழ்ந்து காணப்பட்டார். அம்மாவுக்கு பொன்னாடை போர்த்தி மலர் செண்டு அளித்து பாராட்டிப் பேசிய மூத்த மகன் வீரேந்திர குமார், ‘தனது தாயின் கடின உழைப்புக்கும், போராட்ட குணத்துக்கும் கிடைத்த வெற்றியே தங்களது சிறப்பான கல்வி மற்றும் உயர்பதவிகள்’ என்று குறிப்பிட்டார். மேலும் தங்களது தாயாரின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பார்த்து தான் மகன்களான தாங்கள் மூவரும் குடும்ப நிலையை உணர்ந்து கொண்டதாகவும், அந்த உணர்வுகளே தங்களது சிறப்பான கல்விக்கு மிகுந்த உத்வேகமாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மனித வாழ்வில் செய்ய முடியாத கடுமையான வேலை என்று எதுவும் இல்லையென்றும், முயற்சியும் தொடர்ந்த பயிற்சியும் இருந்தால் எல்லாமே எளிதான வேலை தான். இதை உணர்ந்து செயல்பட்டதே தங்களது குடும்பத்தின் வெற்றி என்றும் அவர் தெரிவித்தார்.

கெளரவப் பிரச்னை!
By ஆசிரியர் | Last Updated on : 03rd November 2016 12:48 AM | அ+அ அ- |


டாடா குழும நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி திடீரென அகற்றப்பட்டது, கார்ப்பரேட் உலகில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சாமானிய நடுத்தர வர்க்கத்தினர்கூடப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது வழக்கமாகிவிட்ட சூழலில், இந்தியாவின் தலைசிறந்த, கெளரவமான மூத்த கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை.

இதன் பின்னணியில், மிகப்பெரிய நிர்வாகக் குழப்பமோ, சைரஸ் மிஸ்திரியின் செயல்பாட்டில் குறைபாடோ காரணமாக இருப்பதாகத் தெரியவில்லை. டாடா குழுமத்தின் தலைவர் என்கிற முறையில், எதிர்பார்த்ததுபோல செயல்படாத சில குழும நிறுவனங்களைக் கைகழுவிவிடலாம் என்கிற சைரஸ் மிஸ்திரியின் சிந்தனைதான் அவரைப் பதவியிலிருந்து அகற்றும் முடிவுக்கு முன்னாள் தலைவரும் "டாடா' குடும்பத்து வாரிசுமான ரத்தன் டாடாவைத் தூண்டியது என்று கூறப்படுகிறது. தனது கெளரவப் பிரச்னையாக அதை அவர் எடுத்துக் கொண்டார் என்றும், குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் லாபத்தில் மட்டுமே இயங்க வேண்டும் என்கிற சைரஸ் மிஸ்திரியின் கொள்கையில் அவர் உடன்படவில்லை என்றும் தெரிகிறது.

பழைய இரும்புகளைத் தெருத் தெருவாகச் சென்று வாங்கி விற்றுக் கொண்டிருந்த ஜாம்ஷெட்ஜி டாடாவால் 1868-இல் தொடங்கப்பட்ட டாடா நிறுவனம், தனது 148 ஆண்டு பயணத்தில் அடைந்திருக்கும் அபார வளர்ச்சியைப் பார்த்து மேலைநாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களே ஆச்சரியப்படுகின்றன. சர்வதேச அளவில் முதன்மையான இடத்தை வகிக்கும் இந்தியப் பன்னாட்டு வணிகக் குழுமமாக டாடா நிறுவனம்தான் இருந்து வருகிறது.

கடந்த நிதியாண்டின் புள்ளிவிவரப்படி டாடா நிறுவனத்தின் மொத்த வியாபார அளவு 103 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6 லட்சத்து 90 ஆயிரம் கோடி). ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் டாடா நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். நூற்றுக்கும் அதிகமான நாடுகள், ஆறு கண்டங்கள் என்று வியாபித்திருக்கும் இந்தியாவின் பெருமைக்குரிய டாடா நிறுவனம், இப்போதும் டாடா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்.

டாடா குழும நிறுவனங்கள் அனைத்தின் உடைமையும் டாடா சன்ஸ் என்கிற தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது. இந்த டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் 66% தர்ம அறக்கட்டளைகளைச் சார்ந்தவை. இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்கள் தனித்தனி இயக்குநர்கள் குழுவால் சுதந்திரமாக நிர்வகிக்கப்படுகின்றன. 29 நிறுவனங்களை உள்ளடக்கியதுதான் டாடா குழுமம். டாடா ஸ்டீல்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா பவர், டாடா கெமிகல்ஸ், டாடா க்ளோபல் பெவரேஜஸ், டாடா டெலி சர்வீசஸ், டைட்டன் வாட்ச், டாடா கம்யூனிகேஷன்ஸ், இந்தியன் ஹோட்டல்ஸ் என்று இந்தக் குழும நிறுவனங்களின் பட்டியல் நீளுகிறது.

டாடா கம்யூனிகேஷன்ஸ்தான் உலக அளவிலான முதன்மையான "வாய்ஸ் ப்ரொவைடர்'; டாடா மோட்டார்ஸ், உலகின் முதல் பத்து சரக்கு வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று; உலகின் 15 சிறந்த இரும்பு உருக்குத் தயாரிப்புகளில் டாடா ஸ்டீல்ஸ் ஒன்று; லாப அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்; டாடா க்ளோபல் பெவரேஜஸ்தான் உலகின் இரண்டாவது பெரிய தேயிலை தயாரிப்பாளர்கள்; மனித வாழ்வில் எந்தவொரு செயல்பாட்டை எடுத்துக் கொண்டாலும் அதில் டாடா நிறுவனத்தின் முத்திரை இல்லாமல் இருக்காது என்கிற அளவில் புகழ்பெற்ற நிறுவனம் டாடா குழுமம்.
ரத்தன் டாடா இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது எடுத்த சில முடிவுகள் லாபகரமாக இல்லை என்பதுதான் உண்மை. அதற்கு சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தேக்கமும் ஒரு காரணம். பிரிட்டிஷ்காரர்களே அதிர்ச்சி அடையும் விதத்தில் ஜாக்குவார் லாண்ட்ரோவர் மோட்டார் நிறுவனத்தை டாடா குழுமம் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து சர்வதேச இரும்பு உருக்கு நிறுவனமான "கோரஸ்' நிறுவனத்தையும் கைப்பற்றியது. இந்த இரண்டாவது முடிவு லாபகரமானதாக இல்லை. அதேபோல, மிகப்பெரிய விளம்பரத்துடன் உருவாக்கப்பட்ட லட்சம் ரூபாய் கார்களான "நானோ' வெற்றி பெறவும் இல்லை, லட்ச ரூபாயில் தயாரிக்கவும் இயலவில்லை.

இதன் பின்னணியில் இன்னொரு உண்மையும் இருக்கிறது. 2008-க்கு முன்பு வெளிநாடுகளில் தங்களது நிறுவனங்களை ஏற்படுத்திப் பன்னாட்டு நிறுவனங்களாக முற்பட்ட "டாடா'வைப் போன்ற பல முக்கிய நிறுவனங்களும், சர்வதேச பொருளாதாரத் தேக்கத்தாலும், பின்னடைவாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் சைரஸ் மிஸ்திரி நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களைக் கை கழுவ முற்பட்டதும், அது "டாடா' குழுமத்தின் கெளரவத்தை பாதிக்கும் என்பதால் ரத்தன் டாடா அவரைத் தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றியதும் நிகழ்ந்திருக்கிறது.
லட்சக்கணக்கானவர்களின் பங்குகள் முதலீடாக இருப்பதால், கார்ப்பரேட் நிறுவன நிகழ்வுகளைத் தனியார் நிறுவன நிகழ்வுகளாக நாம் ஒதுக்கிவிட முடியாது. இதில் சராசரி இந்தியனின் சேமிப்பு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. "டாடா' குழுமத்தின் பிரச்னைகள் பொது வெளியில் விவாதமாகாமல் பாதுகாத்துத் தலைமை மாற்றம் நிகழ வேண்டும். இந்தப் பிரச்னை தெருச் சண்டையாகவோ, நீதிமன்ற வழக்காகவோ மாறாமல் இருப்பதுதான் முதலீட்டாளர்களுக்கு நல்லது!

அழைப்பு வாகன ஆபத்து

By எஸ். ரவீந்திரன் 

அண்மைக்காலமாக வாடகைக் கார்களை இயக்கும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இத்தனை அழைப்பு வாகனச் சேவை நிறுவனங்கள் இல்லை. இப்போதுதான் அவை பெருகியுள்ளன.
போட்டி போட்டுக்கொண்டு இவர்கள் பண்ணும் களேபரம் ஏராளம். கிலோமீட்டருக்கு ரூ.7 முதல் ரூ.10 வரையில் வரம்பு வைத்துக் கொண்டு வரம்பு மீறிச் செயல்படுவதைப் பார்க்கிறோம்.
அழைத்த சில நிமிடங்களில் இவர்களின் வாகனங்கள் வந்துவிடும் என்பதால் தற்போது சொந்த வாகனங்கள் வைத்திருக்கும் பலர்கூட இவர்களை அணுகுகின்றனர்.

இப்படி வாடிக்கையாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ள அழைப்பு வாகனச் சேவை நிறுவனங்களின் குளறுபடிகள் அவற்றின் மீது நம்பிக்கை இழக்க வைக்கின்றன.

குறிப்பாக இரவு நேரங்களில் இது போன்ற அழைப்பு வாகனங்களை நம்பி பயணிப்பதை பெரும்பாலோர் தவிர்த்து வருகின்றனர். காரணம் தில்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் அழைப்பு வாகன ஓட்டுநர்கள் சிலர், பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானதுதான்.

ஒரு சிறந்த நிறுவனத்தின் வாகனத்தை இயக்குபவர்கள் முழு நம்பிக்கையுடனும், பயணிகளின் பாதுகாவலனாகவும் இருக்க வேண்டும். ஆனால் இதை மறந்து விட்டு தவறான வழிகளைப் பின்பற்றி இத் தொழிலுக்கே கேடு விளைவித்து வருகின்றனர்.
சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை முடித்துவிட்டு பாதுகாப்பாக வீட்டுக்குச் செல்வதற்காக இந்த நிறுவன வாகனத்தைத் தொடர்புகொண்ட பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட திகில் அனுபவத்தை முகநூலில் பதிவிட்டார்.

அதன்பிறகே வாகன ஓட்டுநர்களின் வக்கிரபுத்தி பற்றி ஊடகங்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டன. இதேபோல பல சம்பவங்கள் கவனத்துக்கு வராமலேயே நடந்துள்ளன.

பொதுவாக வாடகைக்கு வாகனங்களை அமர்த்துவது என்பது ரொம்பவும் கவனமாகக் கையாளவேண்டிய விஷயமாகும். கிராமப்புறங்களில் இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்பார்கள். கோயில் விழாக்கள், சுற்றுலா செல்லும்போது பாதுகாப்பு அவசியம் என்பதைக் கருத்தில் கொள்வார்கள்.
தமக்கு வரும் ஓட்டுநர் நம்பிக்கையானவராக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.

பொதுவாக தனியார் வாடகை வாகனங்களை இயக்கும் நிறுவனங்கள் தமக்கென பிரத்யேக வாடிக்கையாளர்களை வைத்திருப்பார்கள். அவர்களுக்கு சிறந்த முறையில் சேவை அளித்து நற்பெயரைச் சம்பாதித்திருப்பார்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் அந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது எனலாம். இத்தனைக்கும் ஊழியர்களின் பின்புலம், செயல்பாட்டை நன்கு அறிந்த பின்பே நிர்வாகம் அவர்களை வேலைக்கு அமர்த்துகிறது. அப்படி இருந்தும் இது போன்ற தவறுகள் நிகழ்கின்றன.

மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமை, வாகன விதிகளை மீறல்,விபத்துகளை ஏற்படுத்தல் போன்றவற்றை மனதில் வைத்தே இந் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

வாடகைக்கு வாகனங்களை ஓட்டும் நபர்கள் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு அவ்வப்போது மாட்டிக் கொள்கின்றனர். போதை மருந்து, மது வகைகள் கடத்துதல், வன்முறை, பயங்கரவாதம் போன்றவற்றுக்கும் இவ்வாகனங்களை சிலர் பயன்படுத்தி அவர்கள் காவல்துறையினரிடம் பிடிபட்டிருப்பதையும் காண்கிறோம்.

இது ஒருபுறமிருக்க சவாரிக்கு அழைத்துச் செல்லப்படும் வாகனங்கள் கடத்தப்படுவதும், ஓட்டுநரை கொலை செய்வதும் நடந்து வருகின்றன. எனவே இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அதிரடி நடவடிக்கைகள் அவசியம்.
இரவில் சவாரிக்குச் செல்லும் வாகனங்களைக் கண்காணிக்க வேண்டியது அந்நிறுவனத்தின் கடமை. இதற்காக நவீன கருவிகள் வந்துள்ளன. அதை கட்டாயம் வாகனத்தில் பொருத்துவதுடன் பயணி இறங்கும் வரையில் திரையில் நடவடிக்கைகளை கண்காணிப்பதன் மூலம் குற்றச் செயல்களைத் தடுக்கலாம்.

மேலும் அவசர அழைப்புக்காக வாகனத்திலேயே வசதிகள் செய்யப்பட வேண்டும். ஆளில்லாமலே வாகனங்கள் இயக்கப்படும் இக் காலகட்டத்தில் இவையெல்லாம் சாதாரண விஷயங்கள்தான்.
வாகனம் ஓட்டுபவருடன் ஒரு உதவியாளரையும் நிறுவனங்கள் அனுப்ப வேண்டும். வாகனங்கள் செல்லும் இடம், நபர்களின் விவரத்தை மின்அஞ்சல் வழியாக காவல்துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இரவில் அழைப்பு வாகனங்களை நம்பி நீண்ட தொலைவு பயணிப்பதையும், தனியாக செல்வதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வேறு வழியின்றி அவசரமாக செல்ல நேரிட்டால் காவல்துறை உதவியை நாடுவதும் நலமே.
வாகனத்தை இயக்குவோர் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பதை மறு பரிசீலனை செய்யலாம். அழைப்பு வாகனச் சேவை மூலம் குற்றச் செயல்கள் நடைபெறுவதைத் தடுக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...