Saturday, November 5, 2016

டிரைவருக்கு கார் ஓட்டிய கலெக்டர்



அகோலா: தனக்கு டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவருக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், அவருக்கு டிரைவராக சேவகம் செய்த, மாவட்ட கலெக்டரை பொதுமக்கள் பாராட்டினர்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்ன விஸ் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஒருவர் ஓய்வு பெறும் போதும், அவரது பதவிக்கேற்ப, உடன் பணிபுரிவர்கள் பிரியாவிடை அளிப்பது வழக்கம். அகோலா மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்துக்கு, டிரைவராக பணிபுரிந்த, திகம்பர், 58, சமீபத்தில் ஓய்வு பெற்றார். இவரது பணிக்காலத்தில், 18 கலெக்டர்களுக்கு டிரைவராக இருந்தார்.

ஓய்வு பெறும் நாளில், திகம்பருக்கு வித்தியாசமான பரிசளிக்க, கலெக்டர் முடிவு செய்தார். அதன்படி, பணி நிறைவு நாளன்று, திகம்பரை, காரின் பின் சீட்டில் அமர வைத்து, அவரது வீடு வரை, கார் ஓட்டி சென்றார், கலெக்டர். ''திகம்பர், அரசு பணியில், 35 ஆண்டுகள் டிரைவராக பணிபுரிந்து உள்ளார். அவரது சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவருக்காக கார் ஓட்டிச் சென்றேன்,'' என, கலெக்டர் ஸ்ரீகாந்த் கூறினார்.



ஓய்வு பெறும் போது கலெக்டர் அளித்த பரிசை, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்று கூறிய திகம்பர், கலெக்டருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். டிரைவருக்கு, டிரைவராக சிறிது நேரம் சேவகம் செய்த கலெக்டரை, அப்பகுதிமக்கள் பாராட்டினர்.

Excess admissions in MBBS course due to human error, High Court told Court extends hearing


Indore: On a petition challenging cancellation of some admissions in private medical colleges, the director medical education on Thursday informed Indore bench of Madhya Pradesh High Court that excess admissions in MBBS course had taken place due to human error so the same were cancelled.

In its reply to division bench, the DME stated that excess admission were granted in some private medical colleges due to human error while compiling computer admission sheets. “Later, the mistake was detected and additional admission were cancelled,” he said.

Admissions of as many as 37 students were cancelled by the DME after which they moved court. The court had sought the DME reply on the petition.
Objecting to the DME’s reply, the petitioners argued that it was not their mistake if any human error had taken place on government’s side and their admissions should be validated.

After hearing both the parties, the court extended the date of hearing in the case.

Now, Yoga becomes part of nursing curriculum

Lessons to focus on the therapeutic potential of the practice that targets body-mind harmony

Yoga has now become part of the nursing curriculum at the Mahatma Gandhi Medical College and Research Institute (MGMCRI) under the Sri Balaji Vidyapeeth (SBV).

The Centre for Yoga Therapy, Education and Research (CYTER), SBV, which had pioneered the incorporation of Yoga concepts in the MBBS curriculum two years ago and later for dental education, has now introduced slightly modified modules on the therapeutic potential of the practice of attaining body-mind harmony for nursing students.

Ananda Balayogi Bhavanani, CYTER Deputy Director, said that although the curriculum content was largely similar for all streams, there were minor modifications.

If MBBS students were taught about how Yoga could complement modern medicinal interventions in the management of lifestyle disorders such as diabetes or hypertension, nurses would learn more about those aspects of yoga that help patients recuperate from illness.

Students of dental sciences are exposed to Yoga concepts more as a self-care tool in addressing postural problems, he added.

The Nursing College has included Yoga Therapy in the BSc Nursing curriculum with students receiving 90 hours of Yoga Therapy training through CYTER during the three-year course.

The first batch of 100 nursing students are due to complete the 45 hours of Yoga classes during their first year. The batches would undergo 30 hours of Yoga classes in their second year and 15 hours of exposure in the final year, Professor Bhavanani said.

K. Renuka, Dean, Nursing Faculty and Principal of Kasturba Gandhi Nursing College, stated that it was a first that all medical, dental and nursing students of a medical university were receiving regular training in Yoga.

In fact, CYTER hosted the 6th Foundation Day on the theme of ‘Introducing Yoga in Nursing Education’.

Addressing the meet, SBV Vice Chancellor Professor K.R. Sethuraman reminded nursing students of their vital role in healthcare as the primary caregivers for patients and stressed the importance of Yoga in their personal and professional lives.

Professor N. Ananthakrishnan, Dean, Allied Health Sciences, Professor A.R. Srinivasan, SBV Registrar, Vijaya, Yoga educator from Gitananda Yoga Society of Berlin, Germany, Professor VN Mahalakshmi, Vice Principal, MGMCRI, Professor Madanmohan, CYTER Director and Meena Ramanathan, Yoga therapist were among those who took part in the event.

A book on ‘Yoga Practical Notes’, compiled and edited by Sri G Dayanidy, lecturer at CYTER, was released on the occasion.

The staff and students of KGNC and CYTER gave a special performance that included poetry, singing, dancing and demonstrations of advanced Yogasana to mark the occasion.

Educators from MGMC&RI, KGNC, CMTER, ICYER at Ananda Ashram, Yoganjali Natyalayam and Pondicherry Yogasana Association also attended the events.

Professor Bhavanani pointed to the need for a holistic integration of modern and traditional systems for the best possible outcomes in patient care.

“It is imperative that advances in medicine include the holistic approach of Yoga to face the current challenges in healthcare. The antiquity of Yoga must be united with the innovations of modern medicine to improve quality of life throughout the world,” he said.

தோல்விப் படத்திலிருந்து ஒரு வெற்றி

ராமு (1966) - 50 ஆண்டுகள் நிறைவு

தோல்விப் படத்திலிருந்து ஒரு வெற்றி

எத்தனை பெரிய நட்சத்திரம் என்றாலும் ஒருநாள் தோல்வியையும் ருசி பார்க்க வேண்டியிருக்கும். வரிசையாகத் தோல்விகள் என்றால் வெளியே தலைகாட்ட முடியாது. தமிழ் சினிமாவின் இரண்டாவது ‘காதல் மன்னன்’ என்று புகழப்பட்ட ஜெமினி கணேசனுக்கும் இது நடந்தது. ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘தேன்நிலவு’ என்று சூப்பர் டூப்பர் வெற்றிகளைக் கொடுத்தவர், காதல் கதைகளை அதிகம் நம்பியதால் மூன்று பாதாளத் தோல்விப் படங்களைக் கொடுத்தார். அதுவும் அடுத்தடுத்து. அது கோடம்பாக்கத்தின் வாய்க்கு அவல் கிடைத்ததுபோல் ஆகிவிட்டது. ‘ஜெமினியின் சுக்ரதசை ஸ்வாகா’ என்று பேச ஆரம்பித்தார்கள்.
இனியும் தாமதம் கூடாது என்று நினைத்த ஜெமினி, தனது கீரிடத்தைக் கழற்றி வீட்டில் வைத்துவிட்டு மெய்யப்பச் செட்டியாரைக் காண ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்குள் நுழைந்தார். “சார்… நீங்க அனவுன்ஸ் பண்ணியிருக்கற ‘ராமு’ படத்துல எனக்கு வாய்ப்பு கொடுங்க. ராஜா கேரக்டர் எனக்கு பர்ஃபெக்டா ஃபிட் ஆகும். இது என் உள்மனசோட ஆரூடம்” – ஜெமினி இப்படிக் கேட்டதும் ‘‘ராஜா கேரக்டர் உங்க காது வரைக்கும் எப்படி வந்துச்சு” என்று செட்டியார் கேட்கவில்லை.
ஏனென்றால் ‘ராமு’ படத்துக்குத் திரைக்கதை எழுதியவர் ஜெமினியுடன் திரையுலகில் ஒன்றாகப் பயணித்த ஜாவர் சீதாராமன். ஜெமினியும் அவரும் நல்ல சிநேகிதர்கள். “இந்த சிச்சுவேஷன்ல உனக்கு ‘ராமு’தான்டா சரியான ஸ்கிரிப்ட். வெட்கத்தை விட்டு செட்டியார்கிட்டே கேட்டுடு. ரெமுனரேஷன் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்னு சொல்லிடு” என்று அட்வைஸ் கொடுத்தார்.
பிள்ளைகளின் பிடிவாதம் தந்தையின் தீர்மானம்
செட்டியாரின் பிள்ளைகள் தலையெடுத்து திரைப்படத் தயாரிப்பு நிர்வாகத்தில் அட்டகாசமாகப் பங்கெடுத்துக்கொண்டிருந்த அறுபதுகளின் மையப் பகுதி. ‘ராமு’ படத்துக்கு ஜெய்சங்கரை ஹீரோவாக அமர்த்துவது என்று முடிவு செய்து அதை தங்கள் அப்பச்சியிடம் சொல்லி சம்மதம் பெற்று வைத்திருந்தார்கள். ஆனால் ஜெமினி போல் ஜனங்களின் அபிமானம் பெற்ற ஒரு மெகா ஸ்டார் வந்து கேட்டால் செட்டியாரால் முடியாது என்று மறுக்க முடியுமா? மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் செட்டியார் அமைதி காத்த அந்த சில விநாடிகளின் மவுனத்தைத் தனதாக்கிக்கொண்டார் ஜெமினி.
“இந்தப் படத்துக்கு நீங்க என்ன சம்பளம் கொடுத்தாலும் வாங்கிக்கிறேன். இந்தப் படத்தை முடிச்சுக்கொடுத்துட்டு அடுத்த படத்துக்குப் போறேன்” என்றார். ‘களத்தூர் கண்ணம்மா’ எனும் ஏ.வி.எம்முக்கு புகழ்சேர்த்த காவியத்தில் நடித்தவர், இவ்வளவு பெரிய நடிகர் இத்தனை இறங்கி வருகிறாரே என்று இதயம் இளகியது செட்டியாருக்கு. என்றாலும் “ பிள்ளைகள்கிட்ட கொஞ்சம் கலந்துக்கிறேன். நாளைக்கு நல்ல பதில் சொல்றேன்” என்று நம்பிக்கையோடு அனுப்பி வைத்தார்.
ஏ.வி.எம். தயாரிப்பில் அப்போது தயாராகிக் கொண்டிருந்த ‘குழந்தையும் தெய்வமும்’ படத்திலும் ஜெய்சங்கர்தான் நாயகன். எனவே குழந்தையை மையப்படுத்திய இந்தக் குடும்பப் படத்திலும் ஜெய்சங்கரையே ஒப்பந்தம் செய்துவிடுவது சரியாக இருக்கும் என்று நினைத்தார்கள் பிள்ளைகள். அதனால் தந்தையுடன் விவாதித்தார்கள். “கதையில் வரும் கொள்ளைக்காரர்களையும் கதாநாயகியை அழிக்க நினைக்கும் வில்லன் அசோகனையும் அடக்கச் சரியான ஆள் ஜெய்சங்கர்தான்” என்றார்கள்.
ஆனால், செட்டியாரின் சிந்தனை வேறு விதமாக இருந்தது. “சம்சாரத்தை இழந்து, மகனும் வாய்பேச முடியாம போயிடுற சோகத்தை தாங்கணும். அதுக்கு ஜெமினிதான் என்னோட சாய்ஸ்” என்றார். அப்பச்சியின் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? பிள்ளைகளின் பிடிவாதம், தந்தையின் தீர்மானத்தால் தளர்ந்தது. ஏ.சி. திருலோகச்சந்தரின் இயக்கத்தில் படம் விறுவிறுவென்று வளர்ந்தது. ஜெமினி கணேசன், கே.ஆர். விஜயா, மாஸ்டர் ராஜ்குமார், எஸ்.ஏ. அசோகன், ஓ.ஏ.கே. தேவர்,
வி. நாகையா, வி.கே. ராமசாமி, வி.எஸ். ராகவன், சி.எஸ். புஷ்பலதா எனப் பல புகழ்பெற்ற நட்சத்திரங்கள் நடித்த இந்தப் படம் 10.06.1966ல் வெளியாகிப் பல திரையரங்குகளில் 100 நாள் கொண்டாடியது. முதலில் ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தைப் போலவே அந்த ஆண்டின் சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருதை ’ராமு’ தட்டிக்கொண்டு வந்தது.
கதையின் கதை
அப்படிப்பட்ட இந்தப் படத்தின் கதை ஒரு படுதோல்வியடைந்த இந்திப் படத்தின் கதையை ஆதாரமாகக் கொண்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ‘குழந்தையும் தெய்வமும்' படத்தை இந்தியிலும் தயாரித்துக்கொண்டிருந்தது ஏ.வி. நிறுவனம். பாம்பேயில் நடந்து வந்த அந்தப் படத்தின் படப்பிடிப்புக்குச் சென்றார் செட்டியாரின் புதல்வர் சரவணன். விமானத்திலிருந்து இறங்கி காரில் ஸ்டூடியோ நோக்கிப் போய்க்கொண்டிருந்தவரை ஈர்த்தது ஒரு சினிமா சுவரொட்டி.
ஒரு சிறுவனுடன் அந்நாளின் முன்னணி இந்திப் பட நாயகன் கிஷோர் குமார் சோகம் கவியும் முகத்துடன் அந்தச் சினிமா சுவரொட்டியில் நிற்க, காரை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவரிடம் “இது என்ன படம்? பெரிய ஹிட்டா?” என்றார். கிஷோர் குமாருக்காக அந்தப் படத்தை ஏற்கெனவே பார்த்து நொந்துபோயிருந்த டிரைவர் “இதுவொரு மொக்க ‘மூங்கா’ படம். வாய்பேச முடியாத ஒரு சிறுவனைப் பற்றிய கதை. கடைசிவரைக்கும் அழுவாச்சி காவியம்” என்று அலுத்துக்கொண்டார். அந்தப் படம்தான் “தூர் ககன் கி சாவோன் மேயின்' (Door Gagan Ki Chhaon Mein) என்ற இந்திப் படம்.
தலையெழுத்தை மாற்றிய திரைக்கதை
படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பதினைந்தாயிரம் ரூபாய்க்கு (இன்றைய பணத்துக்கு அது பதினைந்து லட்சம் என்று கூடக் கொள்ளலாம்) வாங்கிய பின் அந்தப் படத்தை இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு, திருலோகச் சந்தர், கதை-வசனகர்த்தா ஜாவர் சீதாராமன் ஆகியோருக்குப் போட்டுக்காட்டியிருக்கிறார்கள்.
படம் முடிந்ததும் “இது சுத்த வேஸ்ட்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்களாம் கிருஷ்ணனும் பஞ்சுவும். அவர்கள் மிகவும் நம்பும் எழுத்தாளர் ஜாவர் சீதாராமனோ, “பிறவியிலேயே வாய் பேச முடியாத சிறுவனின் கதையான இதைத் தேற்றுவது கல்லில் நார் உரிப்பது போல” என்று நழுவ, அவரைப் பிடித்து நிறுத்திய சரவணன், “அந்தச் சிறுவன் பிறவியிலேயே வாய் பேச முடியாதவன் இல்லை. இடையில் ஏற்பட்ட ஒரு விபத்தினால் ஊமையானவன். அது எப்படிப்பட்ட விபத்து, அந்த விபத்து யாருக்கு நடந்தது என்று திரைக்கதையில் அவனுக்கு நடந்த விபத்தை ஃப்ளாஷ் பேக்காக மாற்றி எழுதிப் பாருங்கள்” என்று சொல்ல “எனக்கு இப்படி ஒரு ஐடியா தோன்றாமல் போய்விட்டதே?” என்று வியந்து, ஒரு தோல்விப் படத்தின் கதையை ஆதாரமாகக் கொண்டு அதன் தலையெழுத்தை ஐந்தே நாட்களில் மாற்றிப் புதிய திரைக்கதையை எழுதி முடித்தார் சீதாராமன்.
கிஷோர் குமாரின் பாராட்டு
இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில் கலந்துகொள்ள செட்டியாரின் அழைப்பை ஏற்று மெட்ராஸ் வந்தார் இந்திப் படத்தின் கதாநாயகனான கிஷோர்குமார். விழாவில் கலந்துகொள்ளும் முன் அவருக்கு படத்தைத் திரையிட்டுக் காட்டப்பட்டது. வெற்றி விழாவில் பேசிய கிஷோர் குமார் “ தமிழ் ரீமேக்கை பார்த்ததும் நாங்கள் கதையை எத்தனை பலவீனமாக அமைத்திருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். திரைக்கதையாசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்” என்றார்.
இசையமுதம்
இந்தப் படத்தின் வெற்றிக்குத் திரைக்கதை முதல் காரணம் என்றால் இசை இரண்டாவது காரணம். மெல்லிசை மன்னரின் இசையில் வெண்பனிக்குரலோன் பி.பி. நிவாஸ் பாடிய ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடல் இன்றளவும் புதுமையோடு ஒலிக்கிறது. அதேபோல ‘பச்சைமரம் ஒன்று இச்சைக்கிளி ரெண்டு’ பாடலும் இன்றும் நம் நினைவுகளைக் கிளறக்கூடியது. இந்தப் படத்தில் ‘ராமு’வாக நடித்திருந்த மாஸ்டர் ராஜ்குமாரின் நடிப்பையும், படத்தில் தோன்றும் அவனது அன்புக்குரிய நாயின் உயிர்காக்கும் தோழமையும் தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாதவை.
'கத்தி சண்டை' இசை வெளியீட்டு விழாவில் வடிவேலு பேசிய போது...

வாய்ப்பில்லாமல் முடங்கவில்லை: மனம் திறந்த வடிவேலு


எனக்கு வாய்ப்பு இல்லாமல் வீட்டில் உட்காரவில்லை என்று 'கத்தி சண்டை' இசை வெளியீட்டு விழாவில் வடிவேலு தெரிவித்தார்.

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, ஜெகபதிபாபு, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கத்தி சண்டை'. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார். கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை விநியோகம் செய்கிறது. நவம்பர் 18ம் தேதி வெளியீடாக இப்படம் திரைக்கும் வரவிருக்கிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விஷால், வடிவேலும், இயக்குநர் சுராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தமன்னா, சூரி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

இவ்விழாவில் வடிவேலு பேசியது, "ரொம்ப இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடித்திருப்பதாக பலரும் சொன்னார்கள். உண்மையில் எனக்கு கேப்பே கிடையாது. எனக்கு கேப்பும் கிடையாது; ஆப்பும் கிடையாது. எப்போதுமே இந்த வடிவேலு டாப்பு தான். அதற்கு காரணம் மக்கள் தான்.

எந்தப் பேப்பர், வாட்ஸ்- அப் எடுத்தாலும் நான் தான் கார்டூம் பொம்மையாக வருகிறேன். அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூட என்னை வைத்து தான் காமெடி பண்ணிப் போடுகிறார்கள். இதற்கு என்னுடைய உழைப்பு தான் காரணம். 24 மணி நேரமும் சினிமாவைப் பற்றி மட்டும் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

'கத்தி சண்டை' என்றவுடன் கத்தி எடுத்துக் கொண்டு சண்டைப் போடும் படம் கிடையாது. இந்தப் படம் ஒரு புத்தி சண்டை. இக்கதையைக் கேட்டவுடன், என்னுடைய கதாபாத்திரம் என்ன எனக் கேட்டேன். டூபாக்கூர் மருத்துவரா எனக் கேட்டேன். டூபாக்கூர் மாதிரியே இருக்கும், ஆனால் டூபாக்கூர் மருத்துவர் கிடையாது என்று சொன்னார் சுராஜ்.

கதை சரியில்லாமல் தான், நிறைய படங்களை வேண்டாம் என்று சொன்னேன். உண்மையில், எனக்கு வாய்ப்பு இல்லாமல் வீட்டில் உட்காரவில்லை. நிறைய கதைகளைக் கேட்டேன், அப்படிக் கேட்ட கதைகளில் பிடித்த கதை இந்த 'கத்தி சண்டை'. படம் பார்க்கும் மக்கள், முழுமையாக சிரித்துக் கொண்டே பார்ப்பது போன்று ரொம்ப அற்புதமாக இயக்கியிருக்கிறார் சுராஜ்.

மக்களிடையே நடக்கும் விஷயங்களை எடுத்து தான், தங்கம் மூலாம் பேசி காமெடியாக மக்களிடையே கொடுத்துவிடுவேன். சில நாட்களுக்கு முன்பு எனது அப்பத்தா இறந்துவிட்டது. நான் ஊருக்கு சென்ற போது "ஏம்ப்பா வடிவேலு... எதுல வந்த" என கேட்டது. "ப்ளைட்ல வந்தேன்" என்றேன். "டிக்கெட் எவ்வளவு வாங்குறாய்ங்க" எனக் கேட்டவுடன் "4000 ரூபாய் வாங்குறாங்க" என்றேன். "எவ்வளவு நேரத்துல வந்த" என்ற போது "அரை மணி நேரத்துல வந்தேன்" என்றேன். உடனே "4000 ரூபாய் வாங்கிவிட்டு, அரை மணி நேரத்துல கொண்டு வந்து விடுறானா. ஏண்டா 180 ரூபாய் வாங்கிட்டு ரயிலில் இரவு முழுவதும் படுக்கப் போட்டு கூட்டிட்டு வர்றான். உன்னை ஏமாத்திட்டாங்கடா.. நாலு பெரிய மனுஷங்களை வைத்துப் பேசி காசு வாங்கப் பாருடா" என்று சொன்னது என் அப்பத்தா. கொஞ்சம் நேரம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் சொன்ன விஷயத்தில் அவ்வளவு காமெடி இருக்கிறது. இப்படித்தான் சில காமெடிகளை எடுத்துக் கொள்கிறேன்.

மக்களிடையே என்ன நடக்கிறதோ, அதை தான் அப்படியே என் காமெடிக்குள் வைத்துக் கொள்வேன். நான் இந்தளவுக்கு வளர்ந்ததிற்கு காரணம் மக்கள் தான். அவர்களுடைய ஆசிர்வாதம் என்றைக்குமே இருப்பதால் மட்டுமே எனக்கு இந்த புகழ். அனைவருமே என்னை LEGEND என்கிறார்கள். அப்படியென்றால் என்னவென்று கூட எனக்கு தெரியாது. என்னுடைய வலு என்ன என்பது எனக்கு தெரியாது. யானைக்கு தன்னுடைய பலம் தெரிந்துவிட்டால், வேறு மாதிரி ஆகிவிடும்.

விஷாலுடன் திரையில் எனது முதல் படம் 'திமிரு'. அது வெற்றி. ஜனாதிபதி தேர்தல் மாதிரி ஒரு தேர்தல் நடந்தது. அதிலும் வெற்றி. அது தான் 'நடிகர் சங்கத்தைக் காணவில்லை'. அவரோடு இணையும் மூன்றாவது படம் 'கத்தி சண்டை'. கண்டிப்பாக இதுவும் வெற்றி தான். அதற்கு காரணம் விஷாலுடைய நல்ல மனது" என்று பேசினார் வடிவேலு.

A day after protests, Madras University confirms faculty probation orders

CHENNAI: University of Madras confirmed the probation orders of 87 of the 94 faculty members belonging to the Madras University Teachers Association (MUTA) during its syndicate meeting on Friday.

This comes a day after MUTA members staged protests regarding the issue.

University registrar David Jawahar, whose tenure ends on March 6 next year, confirmed the declaration of the probation orders, and said it was one of the key outcomes of the syndicate meeting held after a period of five months. The meeting had 85 items on the agenda including routine administrative matters.

During the meet, syndicate members raised the 'precarious' financial issue of the Madras University, following which secretary of higher education department, A Karthik, instructed for white paper to be issued regarding the varsity's funds.

During the protest on Thursday, general secretary of MUTA and syndicate member G Ravindran had demanded white paper on the University's financial position and asked that an inquiry committee be constituted probe into possible misappropriation and diversion of funds during the previous Vice Chancellor R Thandavan's term in office.

However, senior UoM officials maintained that these records were already presented in the budget book.

A 3-member heritage restoration committee was formed during the syndicate meeting. The committee is to make recommendations regarding the restoration of the senate house.

However, the scope and powers of the committee is yet to be specified. It comprises of syndicate members G Ravindran, head of ancient history and archaeology department P D Balaji and Principal of KCS Nadar College Murugesan.

Another issue raised during the meeting was regarding the 15 students of AM Jain College who were not allowed to attend exams due to delay in paying fee.

A request was made to allow these students to attend exams. Madras University officials too said that students could not be blamed as there is no fixed deadline for paying exam fee.

"Since there is no last date of payment, the college has to accordingly update payment records until the last few students have submitted their fee. However this was not done," said a Madras University official.

The college has made the same mistake twice earlier and had levied a fine of 10,000 earlier, the oficial added.


ஓட்டு போட ரெடியா? வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் 'சர்வே' எடுக்கும் தேர்தல் ஆணையம்

புதுதில்லி: இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் பங்கேற்று ஓட்டுப் போடுவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உள்ள விருப்பத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையமானது வெள்ளிக்கிழமை முதல் 'ஆன்லைன் சர்வே' ஒன்றைத் துவக்கி இருக்கிறது.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய தேர்தல் நடைமுறைகள் குறித்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்ளுதல், அவர்கள் வாக்களிப்பிற்கு பதிவு செய்து கொள்ளுதலை உறுதி செய்தல் மற்றும் அவர்கள் எந்த அளவுக்கு ஆர்வமாக இருக்கிறார்கள் ஆகியவற்றை அறிந்து கொள்வதே இந்த சர்வேயின் நோக்கமாகும்.

அத்துடன் அவர்கள் எந்த முறையில் வாக்களிக்க விரும்புகிறார்கள் மற்றும் அதில் அவர்களுக்கு உள்ள சவால்கள் குறித்து அறிந்து கொள்வதற்கு இந்த சர்வே பயன்படும்.

இந்த சர்வே மூலம் கிடைக்கும் தகவல்கள் அரசு மற்றும் சட்டம் இயற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

மக்களுக்காக நடைபெறும் நமது அரசாங்கத்தில் ஒவ்வொருவரின் குரலும் ஒவ்வொரு வாக்கும் முக்கியம்.அந்த வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர்கொள்ள இந்த சர்வே உதவும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் சைதி இந்த அறிக்கையில் செய்தி வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...