Tuesday, November 8, 2016

பற்களைக் காப்போம்!

By மா. ஆறுமுககண்ணன்  |   Published on : 08th November 2016 01:15 AM  |   
முத்துப்போன்ற பற்களை உடைய என் நண்பரை சில நாள்களுக்கு முன்பு சந்தித்தேன். பேசிக்கொண்டிருந்தபோது கடைவாயில் இரண்டு பற்கள் இல்லாதது தெரிந்தது. "என்னாயிற்று?' என்றேன். "பல் விழும் பலன்' என்றார். "பல்லி விழும் பலன் தெரியும், அதென்ன பல் விழும் பலன்?' என்றேன்.
"நெருங்கிய நண்பனுக்கு இருநூறு ரூபாய் கடன் கொடுத்து ஆறு மாசமாயிற்று. பார்க்கும்போதெல்லாம் கேட்பேன். நேற்றும் கேட்டேன். என்ன கோபத்திலிருந்தானோ கைநீட்டிவிட்டான். அதன்விளைவுதான் இந்தப் பல் விழுந்ததால் உண்டான பலன்' என்றார்.
"கோபம் வரவில்லையா' என்றேன். "கோபமில்லை. லாபம்தான் வந்தது' என்றார். "எப்படி?' என்றேன். "மூன்று பற்கள் ஏற்கெனவே ஆடிக்கொண்டிருந்தன. அதில்தான் இரண்டு விழுந்துவிட்டன. மருத்துவரிடம் சென்றிருந்தால் குறைந்தது அறுநூறாவது செலவாகியிருக்கும். இப்போது நானூறு லாபம்தானே' என்றார்.
"எனக்கு ஒரு நூறு ரூபாய் கடன் கிடைக்குமா' என்றேன். மனிதர் காற்றாய்ப் பறந்துவிட்டார். கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டது அவரது நாக்கு; ஆனால் பலன் கிடைத்ததோ பல்லுக்கு!
கை, கால் என எந்த உறுப்புகளில் வலி வந்தாலும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், பல்லில் வலி என்றால் அது பல்லுடன் நின்றுவிடுவதில்லை. கண், காது, கழுத்து, முகம், தலை என பல உறுப்புகளிலும் வலியை உண்டாக்கி பாடாய்ப்படுத்திவிடும்.
எனவே, பல்வேறு உறுப்புகளிலும் வலியைத் தரும் அதைப் "பல் - வலி' எனச் சொல்வது ஒருவகையில் பொருத்தம்தான்!
"பல் போனால் சொல் போச்சு' என்பது பழமொழி. காலையில் எழுந்ததும் காலாற நடந்து சென்று, நீர்நிலைக் கரையோரங்களில் நின்றிருக்கும் வேம்பிலிருந்தோ, ஆலிலிருந்தோ சிறு குச்சியை உடைத்து பல்துலக்கி வளர்ந்தவர்கள் தமிழர்கள். அந்த அனுபவத்தின் வெளிப்பாடுதான் "ஆலும் வேலும் பல்லுக்குறுதி' என்னும் பழமொழி.
நாளடைவில், நீர்நிலைகளும் சுருங்கி, வீட்டிலேயே பற்களைத் துலக்கும் பழக்கம் வந்துவிட்டது. அதனை பற்பசை நிறுவனங்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.
இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை சில நிறுவனங்களின் ஒரே மாதிரியான பற்பசை மட்டுமே விற்பனைக்கு வந்தன. இப்போதோ ஒவ்வொரு நிறுவனமும் விதவிதமான பற்பசைகளை விற்பனை செய்கின்றன. ஒவ்வொரு விளம்பரத்திலும் "இதுதான் சிறந்தது; மற்றவையெல்லாம் சரியல்ல' என்பதுபோல கூறப்படுகிறது.
இதன் மூலம் அவர்கள் மற்ற நிறுவனத்தைக் குறைகூறுகின்றனரா, அல்லது தங்களது நிறுவனத்தின் மற்ற பற்பசைகளையே குறைகூறுகின்றனரா என்பது அவர்களுக்கே வெளிச்சம்!
உங்க பற்பசையில் உப்பு இருக்கிறதா என அக்கறையுடன் வினவுகிறது ஒரு விளம்பரம். உப்புள்ள பற்பசைதான் பல்லுக்கு நன்மை செய்யும் போலிருக்கிறதே என நினைத்து உடனே சென்று வாங்கிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தால், வேம்பு இருக்கிறதா உங்கள் பற்பசையில் என்கிறது அதே நிறுவனத்தின் வேறொரு விளம்பரம்.
சரி, உப்புள்ள பற்பசையை விட்டுவிட்டு வேம்புள்ள பற்பசையை வாங்கிக்கொண்டு வேகமாக வீடு வந்தால், கிராம்பு இல்லையா உங்கள் பற்பசையில் என்று கேட்கிறது மற்றொரு விளம்பரம். நமக்குத்தான் கிறுகிறுத்துப்போய்விடுகிறது!
நாம் பயன்படுத்தும் பற்பசை எத்தகைய பொருள்களால் தயாரிக்கப்பட்டது என்பதை பற்பசை டியூபின் அடிப்புறத்திலிருக்கும் சிறிய கோடுகள் மூலம் அறியலாம்.
நீல வண்ணக் கோடு இருந்தால் இயற்கைப் பொருள்கள் மற்றும் மருத்துவப் பொருள்களாலும், சிவப்பு வண்ணக் கோடு இருந்தால் இயற்கை மற்றும் வேதிப்பொருள்களாலும், கருப்பு வண்ணக் கோடு இருந்தால் முழுவதும் வேதிப்பொருளாலும் தயாரிக்கப்பட்டது எனத் தெரிந்துகொள்ளலாம்.
பல்லில் சொத்தை, பற்சிதைவு, காரை படிதல் போன்ற பிரச்னைகளால் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று.
சிறுவர்களுக்கு ஏற்படும் பல்நோய்க்கு காரணங்களாக பிள்ளைகளுக்கு முறையாக பல் துலக்கக் கற்றுக்கொடுக்காதது, காலையிலேயே பள்ளிக்குப் புறப்பட வேண்டியிருப்பதால் அவசர அவசரமாக பல் துலக்குதல், இரவில் உறங்கச் செல்லும் முன் பல் துலக்காதது போன்ற காரணங்களைக் கூறுகிறது அந்த அறிக்கை.
பல்வேறு வேதிப்பொருள்கள் சேர்க்கப்பட்ட துரித உணவுகளை அடிக்கடியும் அதிகமாகவும் உள்கொள்வதும் இப்பிரச்னைக்குக் காரணமாம்.
பற்களில் சின்னதாய் கருப்புப் புள்ளிகள் தென்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது. பணத்தில் மட்டுமல்ல, பல்லிலும் கருப்பு ஆகாது.
பல் சொத்தையால் வலி ஏற்படும்போது சிலர் பொடி, புகையிலை என கைக்குக் கிடைத்தவற்றை வைக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள். இது நாளடைவில் புற்றுநோய் அபாயத்தை உண்டாக்கிவிடும்.
இதேபோல, பற்களில் நீண்டகாலமாக இருக்கும் பல்சொத்தையால் நெஞ்சுவலி வரும் அபாயம் இருப்பதாக மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.
கண், காது, இதயம் என மனித உடலின் அனைத்து உறுப்புகளையும் ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் படைத்த இயற்கை, பற்களை மட்டும் முப்பத்திரண்டு என படைத்ததால்தானோ என்னவோ அதைப் பேணிக் காக்க பொதுவாக யாரும் அதிக அக்கறை செலுத்துவதில்லை.
ஒன்றிரண்டு போனாலும் இருப்பதை வைத்து சரிக்கட்டிக் கொள்ளலாம் அல்லது மொத்தமாகவே போனாலும் கட்டிக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.
என்னதான் செயற்கை என்றாலும் அது இயற்கையைப்போல வராது. இருக்கின்ற ஒவ்வொரு பல்லையும் முறையாகப் பராமரித்து, வசீகரப் புன்னகையுடன் வாழ்வோம்.

Sunday, November 6, 2016

அனல் பறக்க பேசி எதிர்க் கட்சிகளை தெறிக்கவிட்ட தீப்பொறி ஆறுமுகம் !

மதுரை: மதுரையைச் சேர்ந்தவர் தீப்பொறி ஆறுமுகம். கடந்த தலைமுறையினருக்கு இந்த பெயர் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோருக்கு இணையாக பரிட்சையம்.

தனது அபரீதமான பேச்சாற்றலால் அதிமுக, திமுக தொண்டர்களை கிட்டதட்ட 40 ஆண்டுகளாக கட்டிப்போட்டவர் தீப்பொறி ஆறுமுகம். திமுக சார்பாக உதிர்த்த இவரது பொறி பறக்கும் பேச்சால்தான் இந்த அடைமொழி அவருக்கு கிடைத்தது. 1970களில் திமுகவின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து, நீண்ட காலமாக திமுகவின் தலைமைக் கழக பேச்சாளராக இருந்தார்.

கன்னிப்பேச்சு

பேச்சு மீதான ஆர்வத்தால் பள்ளி காலங்களில் பேச்சு போட்டிகளிலேயே பல பரிசுகளை வென்றுள்ளார்.


ஆரம்ப காலத்தில் பெரியார், அண்ணா பேச்சுக்கள் பிடித்து போனதால் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துகொண்டார். 19 வயதில் இருந்தே பேச ஆரம்பித்த ஆறுமுகம் பிறகு திமுகவில் இணைந்தார்.


எம்ஜிஆர் மீது விமர்சனம்

எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் தாக்கி இவரைப் போல கடுமையாக விமர்சித்தவர்கள் யாரும் இல்லை. அந்த அளவுக்கு சூடு பறக்கப் பேசியவர் தீப்பொறி ஆறுமுகம். இவரது கூட்டங்களுக்கு பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் வருவார்கள். அந்த அளவுக்கு இவரது பேச்சில் இரட்டை அர்த்தங்கள் அதிகம். பச்சை பச்சையாக பேசும் தீப்பொறி ஆறுமுகம், தான் கூட்டங்களில் பேசத் தொடங்குவதற்கு முன்பு பெண்களை போகச் சொல்லி விடுவார். அந்த அளவுக்கு அவரது பேச்சில் ஆபாச அனல் பறக்கும்.

அண்ணா கூட்டத்தில் பேச்சு

1967 தேர்தல்ல விழுப்புரம் தேர்தல் பிரசாரக் கூட்டத்துல பேசுறதுக்கு பேரறிஞர் அண்ணா வந்திருந்தார். இரவு இரண்டரை மணிக்கு அண்ணா வந்தார். ரெண்டு மணிநேரமா அவர் வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் ஆறுமுகம் பேசிட்டு இருந்தார். அண்ணா வந்துட்டாருன்றதுக்காக அவரது பேச்சை நிறுத்தச் சொன்னாங்க. அப்போ அண்ணா அவர்கள் ஆறுமுகத்திடம் சைகையில் எனக்கு சோர்வா இருக்கு டீ குடித்துவிட்டு பேசுகிறேன் என்றார். தொடர்ந்து பேசிமுடித்தார் ஆறுமுகம்.

அண்ணா பேச்சில் உதிர்ந்த அடைமொழி:

கூட்டத்தில் ஒரு முறை அண்ணா பேசும்போது, 'ஆறுமுகம் பேச்சு தீப்பொறியாய் பறந்தது' என்று சொன்னார். இதையடுத்து விழுப்புரம் கண்டமங்கலம் பகுதியில் ஆறுமுகம் பேசப்போகும்போது அங்கிருந்த ஒன்றிய செயலாளர், 'தீப்பொறி' ஆறுமுகம் என்று அடைமொழி வைத்து போஸ்டர் ஒட்டினார். அது அப்படியே பல இடங்களில் தொடர ஆரம்பித்து இன்று வரை 'தீப்பொறி ஆறுமுகம்' என்ற பெயராகவே வலம் வருகிறார் ஆறுமுகம். அதுவே அவரின் மிகப்பெரும் அடையாளமாக மாறியது.

திமுக டூ அதிமுக

கடந்த 2001 ஆம் ஆண்டு கருணாநிதியிடம் மருத்துவ உதவி கேட்டு அது கிடைக்காமல்போனதால் விரக்தியில் இருந்த தீப்பொறியாரை, ரூ. 5 லட்சம் நிதியுதவி கொடுத்து அதிமுகவுக்கு இழுத்துக் கொண்டவர் ஜெயலலிதா. அதிமுகவில் தலைமைக்கழக பேச்சாளராக வலம் வந்த தீப்பொறி ஆறுமுகம், சில காலம் திமுகவினரை ஒரு பிடி பிடித்தார். பின்னர் 2010ல் மதுரையில் மு.க.அழகிரியை சந்தித்து தன்னை மீண்டும் திமுகவில் இணைத்துக் கொண்டார் தீப்பொறி ஆறுமுகம்.

வரவேற்பும், எதிர்ப்பும்

இவரது பேச்சால் எரிச்சலுற்று எதிர்க்கட்சியினர் மேடையிலேயே கற்களை வீசிய சம்பவங்களும், ஜீப்பை விட்டு ஏற்றிய சம்பவங்களுமெல்லாம் நடந்துள்ளன. ஆனாலும் அச்சம் இன்றி அதிரடி, சரவெடியை கொளுத்திபோட இவர் தயங்கியது இல்லை. திமுகவில் இருக்கும் போது அதிமுகவை தாக்கி பேசுவதிலும், அதேபோல் அதிமுகவில் இருந்த போது கருணாநிதி பற்றியும் திமுக பற்றியும் விமர்சனம் செய்வதில் வள்ளவர் ஆறுமுகம்.

ஸ்டாலின் சந்திப்பு

மேடை பேச்சில் தனக்கென தனி முத்திரை பதித்த தீப்பொறி ஆறுமுகம் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவ செலவுகளுக்கு அவர் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதும், அதுகுறித்து அறிந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தீப்பொறி ஆறுமுகத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு முதல்கட்டமாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கி, மருத்துவ செலவீனங்களுக்கு வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் உடல் நலக் குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தீப்பொறி ஆறுமுகம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

Source: tamil.oneindia.com

மனசு போல வாழ்க்கை 32: அமைதி உன் நெஞ்சில் நிலைக்கட்டுமே!


இரவு நேரம் ஒரு அற்புதமான பொழுது.

பகல்நேரம் செயல்படுவதற்கான பொழுது என்றால் இரவுநேரம் ஓய்வுக்கும் உறக்கத்துக்குமானது. பகல்நேரம் உலகுக்கானது என்றால் இரவுப் பொழுது நமக்கும் நமது குடும்பத்தினருக்குமானது. ஒவ்வொரு இரவுத் தூக்கமும் தற்காலிக மரணம் போலத்தான். ஒரு பகலின் பரபரப்பு எல்லாம் முடிந்து மற்றுமொரு பகல் புதிதாய்ப் பிறப்பதற்கு இந்த மோனநிலை நமக்குத் தேவைப்படுகிறது.

நல்ல தூக்கம் இல்லாதபோது உடலும் மனமும் சீர்கெட்டுவிடுகின்றன. இதைக் கண்டுபிடிக்க மருத்துவ அறிவியல் தெரிய வேண்டாம். மூதாதையரின் பாரம்பரிய அறிவே போதும்.

போலிப் பகலாகும் இரவு

இன்றைய தலைமுறையினர் படும் பல அவதிகளுக்குக் காரணம் தூக்கமின்மைதான். வேகமான வாழ்க்கை இரவை விழுங்கிவிட்டது. பகல் முடிந்தும் இரவை ஒரு போலிப் பகலாக உருவாக்குகிறது.

ஐந்து மணிக்கு வேலையை முடித்து ஆறு மணிக்கு வீடு வந்தால் குடும்பத்துடன் உறவாடி உணவருந்தி இரவு பத்துக்குத் தூங்கச்சென்றால் மறு நாள் பளிச்சென்று விடியும்.

இன்று வேலையும் சாலையின் நெரிசலும் எட்டு மணிக்கு முன்பாக வீடு திரும்ப விடுவதில்லை. ஒரு காபி குடித்துவிட்டு டி.வி. சீரியல்களில் உட்கார்ந்தால் பத்து மணிக்குத்தான் தாமதமான, ஆனால் கனமான சாப்பாடு. பிறகு வாட்ஸ் அப் செய்திகளும் கிரிக்கெட்டும் பார்க்கிறோம். ஆடல், பாடல், கேம் ஷோக்களைப் பார்த்து அயர்ந்துபோகிறோம். அதற்குப் பிறகு படுப்பதற்கு செல்கையில் நடுஇரவு ஆகிவிடுகிறது.

படுக்கையில்தான் எல்லா வலிகளும் பெரிதாகத் தெரிகின்றன. சாலை வெளிச்சங்களும் இரைச்சல்களும், அண்டை வீடுகளின் டி.வி சத்தங்களும் தூங்க விடாது. அப்போதுதான் பாக்கி உள்ள அனைத்து வேலைகளையும் மனம் பட்டியல் போடும். கண்ணை மூடியபின் வரும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ் செய்தியையும் பார்க்கத் தூண்டும். வெட்டிச் செய்தி என்று தெரிந்த பின்னும் பதில் போட வைக்கும். பின்பு ஃபேஸ்புக் போகத் தூண்டும். ஃப்ரிட்ஜில் தண்ணீர் குடித்துவிட்டு வருகையில் ‘தூக்கம்தான் வரவில்லையே? ஏதாவது வேலை பார்த்தால் என்ன?” என்று லேப்டாபை எடுக்க வைக்கும். பின் அயர்ச்சியில் படுக்கையில் விழும்போது ‘சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமே!’ என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கும்.

சிந்தனைகளைக் கழட்டுங்கள்

வாழும் முறையில் மாறுதல்களை ஏற்படுத்தாமல் உடலையும் மனதையும் சீராக வைத்துக்கொள்ள முடியாது. இதற்கு என்ன செய்யலாம்?

என் பரிந்துரைகள் இதோ:

ஏ.ஆர். ரஹ்மான் மாதிரியான பிஸியான பிரமுகர்களில் ஒருவராக நீங்கள் இல்லாதவரை பகல் பொழுது வேலைக்கும் இரவுப் பொழுது ஓய்வுக்கும் உறக்கத்துக்கும் என்பதை முதலில் உங்களுக்குச் சொல்லிக்கொள்ளுங்கள். வீட்டுக்கு வந்து செருப்பைக் கழட்டும்போது உங்கள் வேலை பற்றிய சிந்தனைகளையும் கழட்டி வைக்க வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே எச்சரிக்கை கொடுத்துக் கொள்ளுங்கள்.

தாமதமானால் டீ, காபிக்குப் பதிலாக நேராக உணவுக்குச் செல்லுங்கள். நல்ல குளியலுக்கு பிறகு உண்ணும் மென்மையான இரவுச் சாப்பாடு உங்களுக்கு இளைப்பாறுதல் தரும். டி.வியைக் குறைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மன நலம் காக்கப்படும். வீட்டில் உள்ளவர்களிடம் பேசுங்கள். அவசியச் செய்திகள், அழைப்புகள் முடிந்தபின் கைபேசியை தள்ளி வையுங்கள்.

தூக்கத்துக்குத் தயார் செய்தல் முக்கியம். படுத்த பிறகு குடும்பம், அலுவலகம், அக்கம் பக்கம் என செய்திகள் பகிர்வது உங்களை நல்ல உணர்வுகளுடன் தூங்க வைக்காது. குறிப்பாக, தீராத பிரச்சினைகளை விவாதிக்க வேண்டாம். இயலாமை, எரிச்சல், குழப்பம் போன்ற உணர்வுகள் சிந்தனைகளைப் பெருக்கி மனதை அமைதி இழக்கச் செய்யும். மனதைக் காலி செய்து, கழுவித் துடைத்து தூக்கத்துக்குத் தயார் செய்தல் அவசியம். எந்த சிந்தனையும் இல்லாது வரும் அந்த உறக்கம் அவ்வளவு நிர்மலமாக இருக்கும்!

கடவுள் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை நல்லது. அல்லது நல்ல இசை போதும். நன்றி கூறுதல், தியானம், அஃபர்மேஷன் என எது உங்கள் மனதுக்குப் பிடித்ததோ அதைச் செய்து மற்ற சிந்தனைகளை ஓட்டிவிடுங்கள். நீங்கள் எந்த நேரம் தூங்க ஆரம்பித்தீர்கள் என்று தெரியாத அளவுக்கு உறக்கத்துக்குள்ளே நழுவியிருப்பீர்கள்.

நல்ல தூக்கம் மறு நாள் எழும்போது ஒரு சாதனை உணர்வைத் தரும். எழுந்தவுடன் பசியும் புத்துணர்ச்சியும் வர வேண்டும். மனித அத்துமீறல்கள் இல்லாத வனப்பகுதிகளில் வாழும் விலங்குகளில் அவற்றைப் பார்க்கலாம்.

அலாரத்தைப் பார்த்து அலறி எழுந்து, அவசரத்தில், வேகத்தில், கோபத்தில் ஓடும் அட்ரினல் வாழ்க்கை முறை உங்களை விரைவில் வயோதிகத்தில் தள்ளிவிடும். எதிர்மறை எண்ணங்களை எளிதில் கொண்டு வந்துவிடும். வேகம் விவேகம் அல்ல என்பது சாலைகளுக்கு மட்டுமல்ல. நம் வாழ்க்கைக்கும்தான்.

வேகத்தை மட்டுப்படுத்த நம் இரவுகளை சமன்படுத்துவோம். ஆறு முதல் எட்டு மணி நேர அமைதியான இரவுத்தூக்கம் அவசியம். வளர்ந்த நாடுகளை பின்பற்றும் நாம் ஒன்றை மறந்துவிடுகிறோம். தூக்க மாத்திரைகள் அதிகம் நுகரப்படும் தேசங்கள் அவை. ரசாயன மருந்துகளின் துணை இல்லாமல் தூங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் வருங்காலத்தில் நம் பிள்ளைகளுக்கும் வரலாம். மறந்துவிட வேண்டாம்.

என் சிறு பிராயத்தில் சிலோன் ரேடியோ மிகப் பிரபலம். அதில் வரும் ‘இரவின் மடியில்’ நிகழ்ச்சியை நாங்கள் தவற விட மாட்டோம் அதில் அடிக்கடி ஒலிபரப்பாகும் பாடல், “தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே...அமைதி உன் நெஞ்சில் நிலைக்கட்டுமே..!” ஒவ்வொரு முறையும் அந்த பாடல் முடிகையில் தூங்கிப்போன நிலையில் இருக்கும் உடலும் மனமும். இப்படி ஒரு தலைமுறையையே அமைதிப்படுத்தி தூங்க வைத்த பாடல்கள் உண்டு.

நீங்கள் உங்கள் பிள்ளைக்குத் தரும் பெரு வரம் நல்ல தூக்கம். அதற்கான இடையூறுகளைக் களைந்து, நல்ல சூழலை அமைத்து, நல்ல முன்மாதிரிகளாய் நீங்கள் தூங்க ஆரம்பித்தால் உங்கள் பிள்ளைகள் உங்களைப் பின்பற்ற மாட்டார்களா என்ன?

தொகுப்பு: gemba.karthikeyan@gmail.com

கூடா நட்பு கேடாய் முடிந்தது! கொலையில் முடிந்த 23 வயது வித்தியாசம்


vikatan.com

சென்னை மேற்கு மாம்பலத்தில் தனியாக வசித்த பெண் வழக்கறிஞர் லட்சுமிசுதாவும், தனியார் நிறுவன ஊழியர் கார்த்திக்கேயனும் இடையே 23 வயது வித்தியாசம். இவர்கள் இருவரும் வயது வித்தியாசம் இல்லாமல் நெருங்கிப் பழகியதே லட்சுமி சுதாவின் கொலைக்கான காரணம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை மேற்குமாம்பலம், குமரன்நகரில் குடியிருந்தவர் லட்சுமி சுதா. இவர் கணவரைப் பிரிந்து தனியாக வசித்தார். இவரது மகன் திருமணமாகி பெங்களுரூவில் குடியிருக்கிறார். லட்சுமி சுதா, கடந்த 2-ம் தேதி வீட்டின் படுக்கையறையில் கத்திக்குத்து காயங்களுடன் அழுகிய நிலையில் அலங்கோலமாகக் கிடந்தார். இதுதொடர்பாக குமரன்நகர் போலீஸார் விசாரணை நடத்தினர். கொலை தொடர்பாக கார்த்திகேயனை போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில் கார்த்திகேயன், கொலைக்கு சொல்லும் காரணம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "லட்சுமி சுதா கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தினோம். கொலை நடந்த வீட்டிலிருந்து எந்த பொருட்களும் திருட்டுப்போகவில்லை. இதனால் நகை, பணத்துக்காக இந்த கொலை நடக்கவில்லை என்பதை உறுதிசெய்தோம். இதையடுத்து லட்சுமி சுதா எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று விசாரணை நடத்தினோம். லட்சுமி சுதாவின் உடல் படுக்கையறையில் தலைகுப்புறமாக கிடந்தது. மேலும் அவரது முதுகு, கழுத்தின் பின்புறம், இடுப்பு என 10 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததால் சில நாட்களுக்கு முன்பு கொலை நடந்திருக்க வேண்டும் என்று கருதினோம். மேலும், அவருக்கு தெரிந்த நபர்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று சந்தேகித்தோம். இதனால் அவரது வீட்டுக்கு தினமும் வரும் நபர்கள் குறித்து விசாரித்தோம். அப்போது சென்னை நொளம்பூரை சேர்ந்த கார்த்திகேயன் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரித்தபோது லட்சுமி சுதாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமே இந்த கொலைக்கு காரணம் என்றும் கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்" என்றார்.

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கார்த்திகேயன், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்க்கிறார். இவரது சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை. கார்த்திகேயன் பணியாற்றிய நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக லட்சுமி சுதா இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் அடிப்படையில் அடிக்கடி லட்சுமி சுதா வீட்டுக்கு கார்த்திகேயன் வருவதுண்டு. லட்சுமி சுதாவுக்கு 58 வயதாகுகிறது. ஆனால் கார்த்திக்கேயனுக்கு 35 வயதாகுகிறது. இருவருக்கும் இடையே 23 வயது வித்தியாசம். வயது வித்தியாசம் இல்லாமல் இருவரும் பழகியுள்ளனர். இந்த நிலையில் கார்த்திக்கேயனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்துள்ளது. இதன்பிறகு லட்சுமி சுதா வீட்டுக்கு கார்த்திக்கேயன் வருவதை குறைத்துள்ளார். கடந்த 31-ம் தேதி வீட்டிற்கு வந்த கார்த்திக்கேயனிடம், எதற்காக முன்பு போல அடிக்கடி வீட்டுக்கு வருவதில்லை என்று லட்சுமி சுதா கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், லட்சுமி சுதாவை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்" என்றனர்.

கூடா நட்பு மட்டும் கேடாய் முடிவதல்ல.... வயது வித்தியாசம் இல்லாமல் பழகுவது கூட பாதகமாக முடியும் என்பது கார்த்திகேயன், லட்சுமி சுதா சம்பவத்தில் நிரூபணமாகியுள்ளது.

கீழ்த்தர அரசியல்!
By ஆசிரியர் | Last Updated on : 05th November 2016 01:34 AM |

DINAMANI


தில்லியில் முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷண் கிரேவால் (70) தற்கொலையும் அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் ராம் கிஷண் கிரேவால் உடலுக்கு அஞ்சலி செலுத்த முயன்றபோது போலீஸாரால் தடுக்கப்பட்ட சம்பவமும் தேவையே இல்லாமல் அரசியலாகி, நாடு முழுவதும் இன்று கண்டனம் எழுப்பும் நிலை உருவாகியிருக்கிறது.
ராம் கிஷண் கிரேவால் எல்லைப் பாதுகாப்புப் படையில் 30 ஆண்டுகள் பணியாற்றி 2004-இல் ஹவில்தாராக ஓய்வுபெற்றவர். தான் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் குறித்து அவர் எதையும் எழுதி வைக்கவில்லை. அவர் தனது மகனுக்கு தொலைபேசியில் பேசியபோது, "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டத்தில் தனக்கு தொகை குறைந்துவிட்டதாகக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதன் உண்மைத்தன்மையும் கேள்விக்குறியே.
அவருடைய ஓய்வூதியம் எவ்வளவு? அவருக்கு தவறாக கணக்கிடப்பட்டதா அல்லது விடுபட்டுப்போய் தொகை குறைந்துள்ளதா? இது அரசு தற்போது அறிவித்துள்ள திட்டத்தில் ஏற்பட்ட முரணா அல்லது கணக்கில் நேரிட்ட தவறா என்ற எதைப்பற்றியும் ஆராயாமல், அவர் தற்கொலை மட்டுமே நாடு முழுவதும் முன்னிலைப்படுத்தப்படுகிறது. தனிநபர்களின் தற்கொலை முடிவுகளுக்கெல்லாம் அரசைக் குற்றம் கூறுவது, காரணமாக்குவது என்று முற்பட்டால் அதற்கு முடிவே இருக்காது.
"ராகுல் காந்தியை தில்லி போலீஸார் தடுக்காமல் அஞ்சலி செலுத்த அனுமதித்திருந்தால், இந்த பிரச்னை மிகச் சாதாரணமானதாக முடிந்து போயிருக்கும். தேவையே இல்லாமல் தடுத்து நிறுத்தி, கைது செய்து பின்னர் விடுவித்ததன் மூலம், இந்த விவகாரத்தை பூதாகரமாக்கிவிட்டனர்' என்று கூறுவதிலும் அர்த்தம் இல்லை. அந்தப் பகுதியில் இருக்கும் இரண்டு பெரிய மருத்துவமனைகளுக்கும் நோயாளிகள் போய்வர முடியாத அளவுக்குத் தொண்டர்கள் புடைசூழ அரசியல் தலைவர்கள் முற்றுகையிடும்போது, காவல்துறை வாளாவிருந்தால் அதன் விளைவுகள் நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதையும் உணர வேண்டும்.
எல்லையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான துல்லியத் தாக்குதல் மூலம் ஆளும் பா.ஜ.க.வுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் ஆதரவும், ஒரு ராணுவ வீரரின் தற்கொலைக்கு அரசின் செயல்பாடு காரணமாக இருந்தால் மழுங்கடிக்கப்படும் என்கிற எண்ணத்தில், காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் இதில் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றன. போபால் சிறையில் தப்பிய எட்டு சிமி கைதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி பின்னுக்குத் தள்ளப்படுவதற்கு இதுபோன்ற ஒரு சம்பவத்துக்காக பா.ஜ.க. தலைவர்களே காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஹவில்தார் ராம் கிஷண் கிரேவாலின் தற்கொலை உதவியிருக்கிறது. எதுவானபோதிலும், இது மிகவும் கீழ்த்தர அரசியலாக மாறியது என்பதே உண்மை.
இதற்கெல்லாம் ஒருபடி மேலாக, ராம் கிஷண் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் கருணைத்தொகை அளிப்பதாக கேஜரிவால் அறிவித்துள்ளார். இது தற்கொலை அரசியலின் உச்சம். ராம் கிஷண் தற்கொலைக்குக் காரணம் என்ன என்பதே உறுதியாகாத நிலையில், ஓய்வூதிய முரண் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக தற்கொலை செய்துகொள்வோர் அனைவருக்கும் கேஜரிவால் இதுபோல ஒரு கோடி ரூபாய் கருணைத்தொகை அறிவிப்பாரா? அறிவிக்கத்தான் முடியுமா?
இத்தனை ஆண்டு காலமாக நீடித்துவந்த முரண்களைக் களைய, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு முன்னாள் ராணுவத்தினர் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதில் சில குறைபாடுகள் இருப்பதாக முன்னாள் ராணுவத்தினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ராணுவத்திலிருந்து தன்னிச்சையாக விலகியவர்களுக்கு இந்தத் திட்டத்தின் பயன் கிடைக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராணுவத்தினரோ எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். ராம் கிஷண் இந்த வகைப்பாட்டில் எத்தகைய இடத்தில் உள்ளார் என்பதுகூட இந்த தற்கொலை அரசியலில் பேசப்படவில்லை.
ஊதிய ஒப்பந்தம் அல்லது புதிய ஊதிய கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்துதல் எதுவாக இருந்தாலும் சில விடுபடல்கள், சிலர் பாதிக்கப்படுதல், சிலருக்கு சில சலுகைகள் இல்லாமல் போதல் என பல்வேறு முரண்கள் எழுவது இயற்கையே. இத்தகைய முரண்களைக் களைவதற்கென தனி குழுவை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகள் தனியாக பரிசீலிக்கப்படுவதுதான் நடைமுறை.
"ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.5,500 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது. 20.6 கோடி ஓய்வூதியதாரர்களில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஓய்வூதியம் அதிகரிக்கவில்லை அல்லது ஓய்வூதிய பணம் வந்து சேரவில்லை என்ற குறைகள் இருக்கின்றன. இவையும் படிப்படியாக சரி செய்யப்படும் என்பது உறுதி. முன்னாள் ராணுவத்தினர் தங்கள் குறைகளை முறைப்படி அணுகி நியாயம் பெற முடியும். அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
போலீஸார், ராகுல் காந்தியை அஞ்சலி செலுத்த அனுமதித்திருந்தால் இந்த விவகாரம் இவ்வளவு அதிகம் பேசப்பட்டிருக்காதுதான். ஆனால், ராகுல் காந்தியின் நோக்கம் அஞ்சலி செலுத்துவதல்ல, இதில் அரசியல் ஆதாயம் தேடுவது என்பதுதான் உண்மை. ராம் கிஷண் எதற்காக இறந்தார் என்பதே உறுதியாகாத நிலையில், அவரது மரணத்துக்காக குரல் கொடுப்பதும், இந்தப் பிரச்னையை அரசியலாக்குவதும் சரியான அரசியல் அணுகுமுறை அல்ல!

Singapore: Indian national gets 8 yr in jail for slashing ex-wife's throat

UpdatedNov 5, 2016, 6:04 pm IST


Singapore: A 45-year-old Indian man was sentenced to eight years in prison and nine strokes of cane for slashing throat of his estranged Singaporean wife, a media report said on Saturday.

Krishnan Karunakaran had slashed throat of his 38-year-old wife Boomichelvi Ramasamy in October 2013 after she rebuffed his demands to help him stay in Singapore by getting his visa extended and not let him see their one-year-old daughter.

In his mitigation, Krishnan claimed that they separated after his wife had an affair, reported The Straits Times.

Deputy Public Prosecutor Mohamed Faizal took issue with the "false narrative" and rejected the assertion that the separation was victim's fault.

He argued that the attempt to pin the blame on the victim highlighted that Krishnan "absolutely shows no remorse".

In sentencing Krishnan, Justice Chan Seng Onn said-- "There's no reason for you to resort to such violence, even if you desperately wanted to see your daughter. You should have resorted to the legal process and not take matters into your own hands.

"You are lucky that she survived, or you would be facing a far more serious charge," Justice Chan told Krishnan.

On the morning of Oct 27, 2013, Krishnan waited for his wife at the lift lobby of her apartment block in the Hougang housing estate.

Krishnan, who had a knife tucked under his singlet, barged inside the lift when he saw her.

He then made her walk towards her flat before slashing her throat in front of her nine-year-old daughter from a previous marriage and her maid.

The domestic helper opened the gate to help her bleeding employer while her daughter called the police.

Krishnan had pleaded guilty on Tuesday (on November 1) to one charge of attempted culpable homicide and one charge of criminal intimidation. Two other charges - for trying to stab

Boomichelvi's abdomen and for threatening her domestic worker - were taken into consideration.

Krishnan's lawyer Eugene Thuraisingam said his client was frustrated and desperate because his wife refused to help him extend his visa and blocked him from seeing his baby daughter.

He said that Krishnan had bought the knife to threaten, not kill, his wife and that only one cut was inflicted.

Yesterday, the prosecutor told the court that Krishnan's actions were premeditated and that he had no qualms about carrying out the assault in front of the victim's young child.

The couple had married in a temple ceremony in India in 2011 and Krishnan, who ran a herbal medicine business, came to Singapore in July 2012.

They separated less than a year later, according to The Straits Times report.

John Little to close last Singapore store by December

- See more at: http://business.asiaone.com/news/john-little-close-last-singapore-store-december#sthash.Ivp8lZs3.dpuf



After 174 years, John Little is closing its last department store in Singapore. The remaining outlet in Plaza Singapura will shutter by the end of December.

In a statement on Friday (Nov 4), Robinsons Group - which manages John Little, the oldest department store in Singapore - said that the decision was made "after evaluating the relevancy and sustainability of the John Little brick-and-mortar business".

But it does not mark the end of the John Little brand. Robinsons Group said that John Little will instead "evolve as a brand into a pop up format, which is in line with the global trend for retail businesses".

John Little's new format will be revealed next year.

The closure is part of the consolidation efforts to focus on businesses that are growing within the Group, the statement said.

The Al-Futtaim Group - the Dubai-based owner of Robinsons Group, Royal Sporting House and other retail brands - announced plans earlier this year to shut 10 loss-making outlets here under its distribution and retailing arm RSH.

John Little had seven branches in 2002, including its flagship store at Specialists' Shopping Centre, which it vacated in 2007, after more than 20 years.

Its outlet at Jurong Point shopping mall was the penultimate to close, shutting its doors earlier this year.

Staff affected by the closure of John Little have been briefed, and will be deployed to other businesses within the organisation, which includes Robinsons and Marks and Spencer, Robinsons Group's statement said.

John Little Plaza Singapura will be holding a moving out sale offering discounts up to 90 per cent until it shutters.

- See more at: http://business.asiaone.com/news/john-little-close-last-singapore-store-december#sthash.UQBQoG5D.dpuf

NEWS TODAY 24.05.2026