Thursday, November 10, 2016



ரூ.2.5 லட்சத்துக்கு மேல் மாற்ற போகிறீர்களா?

பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக் களை, வங்கியில் கொடுத்து மாற்றும் திட்டத் தில், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்து வோரை, வருமான வரித் துறை கண்காணிக்க உள்ளது. தவறு செய்திருந்தால், 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.




இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டு வரவும், கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காகவுமே, பழைய ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்தியர்களை, நியாயமாக வரி கட்டுபவர் களாக மாற்றுவதே, இதன் மற்றொரு நோக்கம். அதனால், வருமானத்திற்கு அதிகமாக சொத்து வைத்திருப்போருக்கு, இந்த திட்டத்தை பயன்படுத்தி, அபராதம் விதிக்கப்படும்.

நாட்டில், புழக்கத்தில் உள்ள, 17 லட்சம் கோடி ரூபாய் கரன்சியில், 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் பங்கு, 88 சதவீதம் ஆகும். எனவே, கணிசமான தொகை பதுக்கி வைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.

வங்கிகளுடன்தொடர்பு கொண்டு, இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், பழைய நோட்டுகளை கொடுத்து, புதிய நோட்டு பெறுவோர்; இரண்டு லட்சலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக, 'டெபாசிட்' செய்வோரின்விபரங்களை கேட்டுப் பெற,மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அவர்களின் விபரங்கள், வருமான வரிக் கணக் குடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். வரி செலுத்தா மல் போயிருந்தால்,தவறுக்கேற்ப,200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

-- நமது நிருபர் -

மக்கள் நினைப்பது என்ன? : கருத்து கேட்கும் பிரதமர்

நாட்டில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற மத்திய அரசின் நடவடிக்கை குறித்து, மக்களின் கருத்துகளை, பிரதமர் மோடிக்கு, 'ஆப்' வாயிலாக தெரிவிக்கலாம்.நாட்டில் கறுப்புப் பண புழக்கத்தையும், கள்ள நோட்டு புழக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், யாரும் எதிர்பார்க்காத வகையில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் நரேந்திர மோடி துணிச்சலாக அறிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து, பல துறைகளைச் சேர்ந்தவர்கள், ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்நட வடிக்கை குறித்து மக்களின் எண்ணத்தை நேரடியாக அறிய, பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்தார். இதற்காக, 'ஸ்மார்ட் போன்'களில், 'ஆப்' வாயிலாக, பிரதமருக்கு, மக்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம். இதற்கு, கூகுள் பிளே ஸ்டோரில் சென்று, 'நரேந்திர மோடி' என, ஆங்கிலத்தில் டைப் செய்து, டவுண்லோடு செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்நடவடிக்கை குறித்து, மக்களின் கருத்துக்களை பிரதமர் நேரடியாக அறிந்து கொள்ள எடுத்துள்ள முயற்சி, பல தரப்பிலும் பாராட்டை பெற்றுள்ளது.
- நமது நிருபர் -

மத்திய அரசு செல்லாது என அறிவித்த, பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, இன்று முதல், வங்கிகள், தபால் அலுவலகங்களில் புதிய நோட்டுகளாக மாற்றலாம்.




மத்திய அரசு செல்லாது என அறிவித்த, பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, இன்று முதல், வங்கிகள், தபால் அலுவலகங்களில் புதிய நோட்டுகளாக மாற்றலாம்.

சில்லரை கிடைக்காமல் தவிக்கும் நிலையில், நோட்டுகளை மாற்ற ஏராளமான மக்கள் குவிவர் என்பதால், மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மக்கள் நலன் கருதி, சனி, ஞாயிறு, வங்கிகள் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில், கறுப்பு பணத்தை ஒடுக்கும் வகை யிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி நேற்று முன்தினம், அதிரடியாக அறிவித்தார். இதனால், நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு, ஏ.டி.எம்., மையங்களை நோக்கி பொதுமக்கள்விரைந்தனர். ஆனால், பெரும்பாலானோரால் பணம் எடுக்க முடியவில்லை.

அலைச்சல்

இந்நிலையில் நேற்று, ஏ.டி.எம்., மையங்களும், வங்கிகளும் மூடப்பட்டிருந்ததால், கையில் பணம் இல்லாமல் பொதுமக்கள், அன்றாட தேவைக்கான பொருட்களைக் கூட வாங்க முடியாமல், கடுமையாக அவதிப்பட்டனர். நுாறு ரூபாய் நோட்டுகளைத் தேடி, கடை கடையாக மக்கள் அலைந்தும், ஏமாற்றமே மிஞ்சியது.

பெரும்பாலான கடைக்காரர்கள்,500,1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தனர். சில இடங்க ளில்,அவற்றை வாங்கினாலும், முழுத் தொகை க்கு பொருட்களை வாங்க கட்டாயப் படுத்தினர். இந்த புதிய அறிவிப்புபற்றி அறியாத ஏழை மக்கள், அடுத்து என்ன செய்வது எனக் கேட்டு அலைந்ததை பார்க்க, பரிதாபமாக இருந்தது.

இந்நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் வகையில், வங்கிகள், தபால் நிலையங்களிலும், இன்று முதல், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது; புதிய, 500, 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும். இதற்காக, போதுமான அளவிற்கு, புதிய கரன்சி நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அச்சிட்டு, வினியோகித்துள்ளது.


பழைய நோட்டுகளை மாற்றுவதற்கும், பணம் எடுப்பதற்கும், பொதுமக்கள் அதிக அளவில் குவிவர் என்பதால், வங்கிகளில் கூடுதல் கவுன்டர்கள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன; போலீஸ் பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளது.

ஆறுதல்

'இப்பிரச்னை தற்காலிகமானது தான். டிச., 30 வரை, நோட்டுகளை மாற்றலாம். டெபிட் கார்டு
பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடு இல்லை; பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

'இப்பிரச்னை தீர சிலநாட்கள் ஆகும் என்பதால், வழக்கமாக விடுமுறை தினங்களான,
இரண்டாவது சனி, ஞாயிறு அன்றும், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும்' என, ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களும், அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் செயல்படும்.

வங்கி ஏ.டி.எம்., மையங்களில், 50, 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே தரும் வகையில் மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளதால், வெள்ளிக்கிழமை காலை வரை செயல்படாது. அனைத்து, ஏ.டி.எம்., மைய பரிவர்த்தனைகளு க்கும், டிச., 30 வரை, கட்டணம் வசூலிக்கப் படாது என்பதும், பொதுமக்களுக்கு ஆறுதலான அறிவிப்பு.

ரிசர்வ் வங்கியில்உதவி மையம்

பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்று வது மற்றும் வங்கிகளில் பணம் எடுப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு, சென்னை, ரிசர்வ் வங்கி கிளையில்,உதவி மையம் செயல் பட துவங்கியுள்ளது. பொதுமக்கள், 044 - 2538 1390 மற்றும் 044 - 2538 1392 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு,சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.

- நமது நிருபர் -

அதிக பணம் டெபாசிட்டா: வரி, அபராதம் விதிக்கப்படும்

புதுடில்லி: 'காலாவதியான, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை, அதிக அளவில் வங்கி கணக்கில் செலுத்துபவர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்திருந்தால், அவர்களுக்கு வரியுடன், 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
ரூ. 2.5 லட்சம் : இது குறித்து, மத்திய வருவாய் துறைச் செயலர் ஹஸ்முக் ஆதியா கூறியதாவது: காலாவதியான, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிக் கணக்கில் செலுத்த, டிசம்பர், 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், வங்கியில் அதிக அளவு தொகையை டெபாசிட் செய்பவர்கள் குறித்து ஆராயப்படும். குறிப்பாக, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் அனைத்து டெபாசிட்கள் குறித்தும் வருமான வரித்துறை ஆய்வு செய்யும். அவ்வாறு டெபாசிட் செய்பவர்களின் வருமான வரி கணக்கு தாக்கலுடன் ஒப்பிட்டு, வருவாய்க்கு அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதை வரி ஏய்ப்பாக கருதி, அதற்கு வரியும், 200 சதவீத அபராதமும் விதிக்கப்படும். இதனால், சிறு வணிகர்கள், குடும்பத் தலைவிகள், தொழிலாளர்கள் போன்றவர்கள் பீதியடைய வேண்டாம். அவர்கள், இரண்டு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்தாலும், வருமான வரி வரம்புக்குள் வராத நிலையில், அவர்களுக்கு பாதிப்பு இருக்காது.
தங்கம் காப்பாற்றுமா? : கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, பலரும், தங்கத்தை வாங்கி குவிப்பதாக கூறப்படுகிறது. தங்கம் வாங்குபவர்களின், 'பான்' எண்களை பெற வேண்டும் என, அனைத்து தங்க நகை வியாபாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது கடைபிடிக்கப்படுகிறதா என, வருமான வரித்துறை சோதனைகளை மேற்கொள்ளும். அதனால், ஏமாற்றுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, November 9, 2016

செல்லாது செல்லாது .. ரூ. 500 செல்லாது… ஈ ஓட்டும் ஓட்டல்கள்

சென்னை: நள்ளிரவு 12 மணியில் இருந்து ரூ. 500 செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது மக்கள் மத்தியில் ஒரே களேபரம் உருவாகிவிட்டது. கை உள்ள பணத்தை செலவு செய்ய முடியாததால் ஒரு ஓட்டலுக்கு போய் 2 இட்லி சாப்பிடக் கூட முடியாதவர்களாகிவிட்டனர் மக்கள்.


50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் சில்லரைகளாக மாறிப் போய் ரொம்ப நாள் ஆச்சி. 500 ரூபாய் நோட்டு என்பது எல்லோரின் பாக்கெட்டுகளிலும் கட்டாயம் இருக்கும் பணமாகிவிட்டதால், மத்திய அரசின் அறிவிப்பால் எந்த வேலையும் செய்ய முடியாமல் போய்விட்டது. இன்று உணவு விடுதிகள், டீக்கடைகள், மளிகைக் கடைகள், என எல்லா இடத்திலும் மக்களின் நடமாட்டம் குறைந்துவிட்டது.


இதனால் உணவு விடுதிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் நிர்வாகத்தினர் கூறுகினார். அவசரத்திற்கு சாப்பிட முடியவில்லை என்று மக்கள் புலம்புகிறார்கள். மக்கள் மத்தியில் ஒரு நெருக்கடி நிலைக்கான மன நிலையை மத்திய அரசின் அறிவிப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

ஈ ஓடும் உணவகங்கள் இன்று சென்னையில் உள்ள உணவகங்களுக்கு சென்று சாப்பிட உட்காரும் வாடிக்கையாளர்களிடம் சர்வர்கள் வந்து என்ன சாப்பிடுரீங்க என்று கேட்பதில்லை. அதற்கு முன்பாக 500 ரூபாய் நோட்டை வாங்க மாட்டோம் என்றுதான் சொல்கிறார்கள். இதனால் கையில் 100 ரூபாய் நோட்டு இருப்பவர்கள் மட்டுமே உணவகங்களில் சாப்பிட முடிகிறது. அதுவும் 100 ரூபாய்க்கு ஏற்றபடி டீயோ, காபியோ, இட்லியோ சாப்பிட்டுவிட்டு செல்ல வேண்டியதுதான். மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் எல்லா உணவகங்களில் கூட்டம் மிகக் மிகக் குறைவாகவே இருக்கிறது. வருபவர்கள் டீ அருந்துவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். காலை 8 மணிக்கு கூட்டம் அலை மோதும், திருவல்லிக்கேணி ரத்னா கேப் ஹோட்டலிலும், பீட்டர்ஸ் சாலை சரவண பவனிலும் வாடிக்கையாளர்கள் வராமல் வெறிச்சோடியே காணப்பட்டன. புலம்பும் மக்கள் இதுகுறித்து, வாடிக்கையாளர் ஒருவர், திடீர்னு சொன்னா நாங்க என்ன செய்ய முடியும். நாங்க ரெண்டு பேரும் வேலைக்கு போறவங்க. காலையில பிள்ளைங்க பள்ளிக் கூடம் போறாங்க. அதனால் ஓட்டலுக்கு வந்து குழந்தைகளுக்கு காலை டிபன் வாங்கி கொடுத்துட்டு நானும் சாப்பிடலாம்ன்னு வந்தா 500 ரூபாய் இருந்தா சாப்பிடாதீங்கன்னு சொல்லுகிறார்கள். என்ன செய்றதுன்னு தெரியல என்று புலம்பினார்.

கை பிசையும் ஓட்டல் நிர்வாகம்

 இதுகுறித்து ரத்னா கேப் காசாளரிடம் கேட்ட போது, பாதி வியாபாரம் கூட இன்னிக்கு இல்லிங்க. மக்கள் வரமாட்டேங்குறாங்க. நாங்களும் சில்லரைக்கு எங்கு போறது. போற வரைக்கும் போகட்டும் என்று ஓட்டலை திறந்து வைத்துக் கொண்டு இருக்கிறோம். இன்னும், ரெண்டு மூனு நாளைக்கு இப்படித்தான் இருக்கும் போல. அட்ஜஸ்ட் பண்ண வேண்டியதுதான் என்றார் விரக்தியாக மூடப்பட்ட பெட்ரோல் பங்க் சென்னையில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சில பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளன. சில்லரை கொடுக்க முடியாததாலும், வரும் வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல முடியாத சூழல் உள்ளதாலும் முடிவிட்டால் நல்லது என்று ராயப்பேட்டை மருத்துவமனை எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் மூடப்பட்டது.

அலைமோதும் பெட்ரோல் பங்க் சில பெட்ரோல் பங்க் மூடப்பட்டுள்ளதால், திறந்திருக்கும் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலை மோதுகிறது. திறந்திருக்கும் பெட்ரோல் பங்க்குகளிலும் பெட்ரோல் போட்டால் 500 ரூபாய்க்கு போடுங்கள். சில்லரை கிடையாது என்று வாடிக்கையாளர்களிடம் சொல்லி வருகின்றனர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சொல்லி வருகிறார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கூச்சலும் குழப்பமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவுகிறது. சில பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாடிக்கையாளர் சண்டையில் ஈடுபடுகின்றனர். மூடப்பட்ட ஏடிஎம் மையங்கள் சென்னை ராயப்பேட்டை, கோபாலபுரம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்கள், ஐடிபிஐ ஏடிஎம்கள், விஜயா பேங்க், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி என அரசு வங்கிகளின் ஏடிம்களும், தனியார் வங்கிகளின் ஏடிஎம்களும் மூடப்பட்டுள்ளன.

இதனால் 500 ரூபாய் நோட்டு செல்லாது என்ற செய்தி தெரியாத முதியவர்கள் சிலர் ஏடிஎம் மையங்களுக்கு வந்து பணம் எடுக்க முடியாமல் புலம்பிக் கொண்டே விரக்தியில் நடந்து போவதை பார்க்க முடிந்தது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/no-500-s-no-customers-hotels/slider-pf214304-266765.html

Chaos and mad rush in petrol bunks across Chennai By Express News Service |

CHENNAI: With the Modi government’s sudden decision to demonitise larger banknotes, chaos and mad rush prevailed in most of the petrol bunks in Chennai on Wednesday morning; them being one of the few places which the Central government had announced can accept the demonetised Rs 500 and Rs 1000 currencies.

The salesmen in the petrol bunks turned out to be the most sought after men since this morning with people queuing up at the bunks for their turn. In some places, policemen had to be posted to regulate the large crowd.

With a sudden escalation in the demands for Rs 100 notes, some petrol bunk sales men are also placing a weird precondition - sales for only Rs 400 and nothing less. “I have run out of Rs 100 notes. I can afford only one note per customer," says a petrol bunk salesmen giving the rationale behind his demand.

In a few other bunks, the petrol salesmen ask their customers to pool in together the bills so that one person can pay them Rs 500 currencies and he would get the share from others who have Rs 100 notes.

But the most sought after customers in the bunks were those who have Rs 100 note with them. "I give preference to them so that I can pay the change to others," says a salesman.

KP Murali, president of Tamil Nadu Petroleum Dealers Association said that petrol bunks are facing a crisis in providing change and are facing tense moments as large crowds are flocking the bunks most to get their currencies exchanged. “They are not genuine petrol buyers,” he said.

“Police bandobust is being provided at few petrol bunks. The government while announcing that bigger notes could be exchanged in petrol bunks till November 11, should have made some arrangements to provide them with the change,” he said.

Petrol bunks have been instructed to take these currencies until November 11. Murali added that all the petrol bunks in the state are working. However, some were reported to have remained closed since last night.

மோடியின் அதிரடி அறிவிப்பு - பணக்கார பிச்சைக்காரன்!


மோடியின் அதிரடி அறிவிப்பு - பணக்கார பிச்சைக்காரன்!

By சாது ஸ்ரீராம் | Published on : 09th November 2016 01:17 PM |






ஒரு பிச்சைக்காரன். கோவில் வாசலில் பிச்சையெடுப்பது அவனது வழக்கம். நல்ல குரல் வளத்துடன் பாடுவான்.

ஒரு நாள். பக்திப் பாடல்களை உருக்கமாக பாடிக்கொண்டிருந்தான். மகிழ்ந்துபோன கடவுள் அவன் முன் தோன்றினார். பிச்சைக்காரன் மகிழ்ந்துபோனான். வணங்கினான். கடவுள் பேசினார்.

‘பக்தா! உன் பக்தி என்னை கவர்ந்தது. உனக்கு ஏதாவது வரம் தர விரும்புகிறேன். என்ன வேண்டும் என்று கேள்!' என்றார் கடவுள்

பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி.

‘கடவுளே மிக்க நன்றி. என்னுடைய வேண்டுதல் இன்றுதான் பலித்திருக்கிறது. நீங்கள் இரண்டு வரங்கள் அளிக்க வேண்டும்' என்று வேண்டினான் பிச்சைக்காரன்.

‘சரி. தருகிறேன்' என்றார் கடவுள்

‘எனக்கு இந்த பிச்சைக்கார வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டது. அதனால், முதலாவது வரத்தினால் என்னை இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரனாக மாற்றிவிடுங்கள்' என்று கேட்டான்.

‘அப்படியே ஆகட்டும். இரண்டாவது வரத்தை கேள்' என்றார் கடவுள்.

‘கடவுளே! இத்தனை காலம் எல்லோரும் பணக்காரர்களாக இருந்தார்கள். நான் ஏழையாக இருந்தேன். அதனால், இரண்டாவது வரத்தினால், இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஏழையாக்கிவிடுங்கள்' என்று கேட்டான்.

கடவுள் சிரித்துக்கொண்டே, ‘அப்படியே ஆகட்டும்' என்று சொன்னார்.

பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி. கடவுளுக்கு நன்றி தெரிவித்தான்.

‘பக்தா! நீ கேட்ட வரங்களை வழங்கிவிட்டேன். ஆனால் ஒரு நிபந்தனை. இந்த வரங்கள் பத்து நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். நாளை காலை விடியும்போது நீதான் இந்த நாட்டின் பெரிய பணக்காரன்' என்று சொல்லிவிட்டு மறைந்தார் கடவுள்.

‘பத்து நாட்களுக்கு மட்டும் வரம் கொடுக்கும் இவரெல்லாம் ஒரு கடவுளா' என்று வருத்தப்பட்டுக்கொண்டே நகர்ந்தான். இருந்தாலும் அவனுக்கு மகிழ்ச்சி.

அன்று இரவு முழுவதும் தூங்கவேயில்லை. சில்லறைக் காசுகளை சேமித்துவைக்கும் பெட்டியை திறந்து பார்த்தான். பத்து செப்புக்காசுகளே இருந்தது.

‘இன்றோடு நம் பிரச்னைகள் தீர்ந்தது. விடிந்ததும் பெட்டி நிறைய தங்கக் காசுகள் நிரம்பி வழியப்போகிறது. வசதியான வீடு ஒன்று வாங்க வேண்டும். குதிரையும், தேரும் வாங்க வேண்டும்' என்றெல்லாம் கணக்குப் போட்டான். எப்பொழுது விடியும் என்று காத்திருந்தான்.

பொழுது விடிந்தது.

வேகமாக எழுந்து பெட்டியை திறந்து பார்த்தான். அதிர்ந்துபோனான். பெட்டியில் முதல் நாள் இருந்த அதே பத்து செப்புக்காசுகளே இருந்தது.

‘கடவுள் நம்மை ஏமாற்றிவிட்டாரா?' என்று யோசித்தவாறு வீட்டுக்கு வெளியே வந்தான். நாடெங்கும் ஒரே பரபரப்பு. காரணம், ஒரே நேரத்தில் நாட்டில் இருந்த அனைவரின் பணம், ஆபரணங்கள் ஆகியவை காணாமல் போயிருந்தன. பிச்சைக்காரனுக்கு விஷயம் புரிந்தது. ‘நாட்டில் இருப்பவர்களிடம் ஒரு பைசாகூட இல்லை. அதனால், பத்து செப்புக்காசுகள் வைத்திருக்கும் தானே பணக்காரன்'.

ஆம், பிச்சைக்காரன் பணக்காரன் ஆனான்.

விடிந்ததும் வீட்டில் பணமழை பெய்யும் என்று நினைத்த பிச்சைகாரனுக்கு வருத்தமே மிஞ்சியது. தற்போது கிடைத்திருக்கும் இந்த பணக்கார பட்டத்தால் அவனுக்கு எந்த உபயோகமும் இல்லை. கோவில் வாசலுக்கு சென்று பிச்சை எடுக்கவும் வழியில்லை. காரணம் மக்களிடம் பணம் இல்லை.

அவன் யோசிக்கத் தொடங்கினான்.

‘நல்ல வேளை பத்து நாட்களில் மக்களிடம் பணம் வந்துவிடும். பிறகு நமக்கு பிச்சை கிடைக்கும். ஒருவேளை இதுவே நிரந்தரமாக இருந்தால் நம் நிலை என்னவாகும்? தப்பித்தேன். கடவுளுக்கு நன்றி' என்றவாறு பத்து நாட்கள் முடியட்டும் என்று காத்திருந்தான்.

இந்தப் பிச்சைக்காரனின் நிலையில்தான் நாம் இப்போது இருக்கிறோம்.

‘இனி 500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாது', என்று பாரதப் பிரதமர் மரியாதைக்குரிய மோடி அவர்கள் நேற்று இரவு அறிவித்தார். ஒரே நிமிடத்தில் பெரிய கோடீஸ்வரர்களின் பண மெத்தைகள் குப்பை மேடாக மாறிவிட்டது. இது எந்த வகையில் அரசுக்கு உதவும்?

இப்படி அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீரென்று அறிவிக்கப்படுவது இது முதன் முறையல்ல. இதற்கு முன், 1979-ம் ஆண்டு இதேபோல மத்திய அரசு அறிவித்தது. அப்போது புழக்கத்தில் இருந்த ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை மூலம் ஏராளமானோர் கடும் சிக்கலுக்கு உள்ளாகினர். அப்போது மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது. அதன்பிறகு தற்போது, பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சியில் இந்த துணிச்சலான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த அரசியல்வாதி வீட்டில் 1000 கோடி பதுக்கிவைத்திருக்கிறார்கள் தெரியுமா! மொரீஷியஸ் தீவில், மாலத்தீவில் இந்தியப் பணமாகவே பூட்டி வைத்திருக்கிறார்கள் என்ற வதந்திகள் நம்மைச் சுற்றி பலமுறை வட்டமிட்டிருக்கிறது. அரசியல்வாதிகளின் பணம் கட்டடங்களாகவும், வீட்டு மனைகளாகவும் உருமாறியிருப்பதும் நமக்குத் தெரியும். எதற்கும் உதவாத உதவாக்கரை என்று கிண்டல் செய்யப்பட்ட பலர், இன்று அரசியல் கட்சிகளின் கரை வேட்டியுடன் கோடீஸ்வர வண்டுமுருகனாக ஒய்யார கார்களில் பவனி வருவதையும் பார்க்க முடிகிறது. இந்த அதிசயங்களை நிகழ்த்தியது கருப்புப்பணம். இந்த அவல நிலையை ஒரே ஒரு உத்தரவினால் சாய்த்துவிட்டார் நமது பாரதப் பிரதமர் மரியாதைக்குரிய நரேந்திர மோடி.



இதன்மூலம், பாகிஸ்தானிலிருந்து அச்சடிக்கப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுக்கள் இனி பயனற்றுப் போகும். பெருமளவில் பணப்பறிமாற்றம் நிகழ்த்தி ஆயுதக்கடத்தல், உளவு பார்த்தல், தீவிரவாதம் ஆகியவற்றுக்கான நிதி உதவி தடுக்கப்பட்டுவிட்டது.

இந்த நடவடிக்கைகள் மூலம் அரசுக்கு எவ்வளவு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதை தற்போதே சொல்வது கடினம். மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தத்தை இதன்மூலம் கொண்டுவரலாம் என்பது மட்டும் புரிகிறது.

மருந்து என்பது நோயைத் தீர்ப்பதற்கு என்றாலும், சில நேரங்களில் அதன் பக்கவிளைவுகள் தரும் பாதிப்பு அதிகமாகத்தான் இருக்கும். பொருளாதார ரீதியாக கருப்புப் பண முதலைகளுக்கு ‘செக்' வைக்கப்பட்டிருந்தாலும், அன்றாட பணப்புழக்கத்துக்கு இந்த அறிவிப்பு சில சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இன்று வங்கிகளுக்கு விடுமுறை. இரண்டு நாட்களுக்கு ஏ.டி.எம்.கள் செயல்படாது என்று அறிவித்திருப்பது நிச்சயமாக எரிச்சலூட்டுகிறது. மக்களிடையே பீதியைக் கிளப்பியிருக்கிறது. திருட்டுச் சம்பவத்துக்காக திருடனைப் பிடித்து சிறையில் அடைப்பது ஒருவிதம். அப்படியில்லாமல், எல்லோரையும் சிறையில் அடைத்துவிட்டு, நல்லவர்களை தவணை முறையில் விடுவிப்பது மற்றொரு விதம். இந்த இரண்டாவது நிலையைத்தான் மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. செல்லாமல் போனது கருப்புப்பணம் மட்டுமல்ல; நியாயமாகச் சம்பாதிக்கும் மக்களிடம் இருக்கும் நல்லப்பணமும்தான்.

வங்கிக் கணக்கு ஏதுமில்லாமல் கிடைத்த பணத்தை சுருட்டி பானைக்குள் வைக்கும் கிராமத்துப் பாட்டிகளை யார் வழி நடத்தப் போகிறார்கள்?

நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சம் ஏடிஎம் மையங்களில் தினசரி ரூ. 16 ஆயிரம் கோடி பணப் பரிமாற்றம் நடந்து வருகிறது. இதை அரசு எப்படி கையாளப்போகிறது?

டிசம்பர் 30-ம் தேதிவரை பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வந்துள்ளது. அதுவரை வங்கியில் கூட்டம் அலை மோதும். பாமர மக்களுக்கு எப்படி இதை புரியவைக்கப்போகிறீர்கள்? ஏற்கெனவே நூறு நாள் வேலை திட்டத்தினால், தேசிய வங்கிகள் விழிபிதுங்கி நிற்கின்றன. இதை எப்படி வங்கிகள் சமாளிக்கப் போகிறார்கள்?

பெட்ரோல் பங்க்கில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். ‘எங்களிடம் சில்லறை இல்லை. வேண்டுமானால், 500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக் கொள்ளுங்கள்' என்று ஒரு பங்க்கில் சொல்வதை கேட்கவும் முடிகிறது.

நாட்டில் கருப்பு பணத்தை குவித்து வைத்திருப்பவர்கள் யார் என்பது அரசுக்குத் தெரியாதா? அப்படித் தெரியாது என்று சொன்னால், அது கையாலாகாத அரசு. அத்தகைய கருப்புப் பண முதலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாமல், சாதாரண மக்களுக்கு சிரமங்களை அளிப்பது மிகச்சிறந்த அரசு செய்யும் செயல் அல்ல.

மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதில் குற்றம் குறை கண்டுபிடித்து ஊதிப் பெரிதாக்கும் எதிர்கட்சிகள், பிரதமரின் நடவடிக்கையை வரவேற்றிருப்பது கொஞ்சம் வித்தியாசமானது. ‘இதை எதிர்த்தால் நம்மிடம் கருப்பு பணம் இருக்கிறது என்று மக்கள் நினைத்துவிடுவார்கள்' என்ற பயத்தினால் பிரதமரின் நடவடிக்கையை ஆதரித்தார்களா? யாருக்கு தெரியும்.

இந்த நேரத்தில் அரசுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நாம் நினைத்தால், நமது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். அதே நேரத்தில், கருப்புப் பணத்தை சேமித்து வைத்திருக்கும் நண்பர்களுக்கு நம் பெயரில் பணம் மாற்றிக் கொடுக்கும் செயலை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.



எது எப்படியிருந்தாலும், டாஸ்மாக் கடையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் எவ்வித தடையுமின்றி தாராளமாக வாங்கிக்கொள்ளப்பட்டது என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இதுவும் ஒரு சர்ஜிகள் ஆபரேஷனா அல்லது மயக்க மருந்து கொடுக்கப்படாமல் செய்யப்படும் அறுவை சிகிச்சையா என்பதை காலம் மட்டுமே உணர்த்தும்.

பிரதமர் மோடியின் துணிச்சலான முயற்சிக்குப் பாராட்டுகள். எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் சுமூகமாக பிரதமரின் முயற்சி வெற்றி பெற பிரார்த்திக்கிறோம்.

சாது ஸ்ரீராம் (saadhusriram@gmail.com)

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...