Thursday, November 24, 2016

பொறியியல் கல்லூரி மாணவர் ரேங்க் பட்டியல் வெளியீடு: மாநில அளவில் சாய்ராம் கல்லூரி முதலிடம்

பொறியியல் கல்லூரி மாணவர்களின் ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்டது. இதில், அதிக எண்ணிக்கையிலான ரேங்குகள் பெற்று (236 ரேங்குகள்) சென்னை  சாய்ராம் பொறியியல் கல்லூரி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்சிஏ படிப்புகளில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளின் ரேங்க் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த ரேங்க் பட்டியலை பாடப் பிரிவுகள் வாரியாக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu) பார்க்கலாம். இந்த பட்டியலில், வெவ்வேறு படிப்புகள் மற்றும் பாடப்பிரிவுகள் வாரியாக பல்கலைக்கழக அளவில் முதலிடம், 2-ம் இடம் 3-ம் இடம் என்ற வரிசையில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களின் பெயர், அவர்கள் படித்த கல்லூரியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதில், அதிக எண்ணிக்கையிலான ரேங்குகள் பெற்ற கல்லூரி என்ற முறையில் சென்னை  சாய்ராம் பொறியியல் கல்லூரி 236 ரேங்குகள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதுகுறித்து சாய்ராம் கல்வி குழுமங்களின் முதன்மைச் செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து கூறியதாவது:
பி.இ. இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கண்ட்ரோல், மெக்கானிக்கல், புரடக்சன் இன்ஜினியரிங் மற்றும் எம்இ எம்பெடெட் சிஸ்டம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றில் எங்கள் கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். ஒட்டுமொத்த ரேங்க் எண்ணிக்கையில் பிஇ படிப்பில் 172 ரேங்குகள், எம்இ படிப்பில் 64 ரேங்குகள் என மொத்தம் 236 ரேங்குகள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளோம்.
தொடர்ந்து 3 ஆண்டுகள்..
2014-ம் ஆண்டு 154 ரேங்குகள் பெற்றும், 2015-ல் 170 ரேங்குகள் பெற்றும் மாநில அளவில் முதலிடத் தைப் பிடித்தோம். தொடர்ந்து 3 ஆண்டு களாக மாநில அளவில் முதலிடம் பெற்று வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக உழைத்த பேரா சிரியர்களையும், சாதனை படைத்த மாணவர்களையும் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாய்ராம் கல்லூரிக்கு அடுத்தபடியாக ஒட்டுமொத்த ரேங்க் எண்ணிக்கையில் 137 ரேங்குகள் பெற்று சென்னை ஆர்எம்கே பொறியியல் கல்லூரி 2-ம் இடத்தையும், 136 ரேங்குகள் எடுத்து எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.
சான்றிதழில் யார் கையெழுத்து: சென்னை பல்கலையில் குழப்பம்

சென்னை பல்கலையில், நவ., 2ல் பட்டமளிப்பு விழா நடக்க உள்ள நிலையில், பட்ட சான்றிதழில் யார் கையெழுத்திடுவது என, குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
சென்னை பல்கலையின், 159வது பட்டமளிப்பு விழா, டிச., 2ல், பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நடக்கிறது. கவர்னர் வித்யாசாகர் ராவ், பட்டங்களை வழங்க உள்ளார். 

துணைவேந்தர் இல்லாமல், பட்டமளிப்பு விழா நடத்த பேராசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து, பேராசிரியர்கள், உயர் கல்வி அமைச்சரை சந்தித்து முறையிட்டு உள்ளனர். 

இது குறித்து, பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: பட்டமளிப்பு விழா நடத்த, இரு வாரங்களுக்கு முன், அறிவிப்பு வெளியிட வேண்டும். தேர்வுக்குப் பின், மாணவர்கள் எந்த நாட்டிலும் இருக்கலாம். அவர்கள், நேரில் பட்டம் பெற, விசா பெறுவது, டிக்கெட் எடுப்பது என, பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதற்காக, இது போன்ற அவகாசம் வழங்குவது நடைமுறை. தற்போது, ஒரு வார அவகாசத்தில் விழா நடத்தப்படுகிறது. பட்ட சான்றிதழில் துணைவேந்தரும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும், கையெழுத்திட வேண்டும். பட்டங்களை வழங்க, துணைவேந்தர் அதிகாரப்பூர்வ புத்தகத்தில் கையெழுத்திட்டு, உத்தரவு பிறப்பிப்பார். இவை பல்கலை மரபுகள்.

 பத்து மாதங்களாக, துணைவேந்தர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.தற்போது துணைவேந்தருக்கு பதில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் கையெழுத்தை, பட்ட சான்றிதழில் பதிவு செய்ய, உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இது மரபுகளுக்கு முரணானது. எனவே, துணைவேந்தரை நியமித்த பின், பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும். பல்கலை பட்டமளிப்பு விழா மரபுகளை, ஒரே நாளில் உடைக்க நினைப்பது சரியல்ல.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் புதிய ரூ.500 நோட்டு விநியோகம்: மக்கள் ஆறுதல்

தமிழகத்தில் புதிய ரூ.500 நோட்டு விநியோகம் தொடங்கியிருக்கிறது. சேலம் முதல் அக்ரஹாரம் கரூர் வைஸ்யா வங்கியில் இன்று (புதன்கிழமை) பிற்பகலில் ரூ.500 நோட்டு விநியோகிக்கப்பட்டது.

இருப்பினும், தமிழகம் முழுவதும் பரவலாக ரூ.500 விநியோகிக்கப்பட்டுள்ளதா என்ற தகவல் இன்னும் கிடைக்கவில்லை.

ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து நாடு முழுவதும் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய ரூ.2000 நோட்டு தரப்பட்டது. பழைய நோட்டுகளை மாற்றிவிட்டாலும் அதற்கு சில்லறை கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். பெரும்பாலான மக்கள் ரூ.2000-க்கு பதிலாக ரூ.500 நோட்டுகளை முதலில் புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்றனர்.



புதிய ரூ.500 நோட்டு. | படம்: எஸ்.குருபிரசாத்.

இந்நிலையில், ரூபாய் நோட்டு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையிம்போது, "பாதுகாப்பு காரணங்களால், தமிழகத்துக்கு புதிய 500 ரூபாய் நோட்டு எப்போது வரும் என்பதை நேரடியாக இப்போது தெரிவிக்க முடியாது. வேண்டுமென்றால் அதை ரகசிய அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்" என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் சில்லறை தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், சேலம் முதல் அக்ரஹாரம் கரூர் வைஸ்யா வங்கியில் ரூ.500 நோட்டு விநியோகிக்கப்பட்டது. புதிய ரூ.500 நோட்டை மக்கள் ஆறுதல் அடைந்து ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

அரியலூரும் அறுபது ஆண்டுகளும்! - 1956 நவம்பர் 23

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

1956ல் அரியலூர் மருதையாற்றுப் பாலத்தில் நடந்த ரயில் விபத்து. (கோப்புப்படம்)

அரியலூரில் இருந்து 3 கி.மீ. தள்ளி மருதையாற்றுப் பாலம். மழை வெள்ள நீர், பாலத்தை அடித்துச் செல்ல முயன்று கொண்டு இருந்தது. நிரம்பிய பயணிகளுடன், தூத்துக் குடி எக்ஸ்பிரஸ் பாலத்தின் மீது பயணித்தது. சில நொடிகள்தாம். பாலம் நொறுங்கி விழுந்தது. 13 பெட்டிகள் கொண்ட ரயிலின் இஞ்சின் மற்றும் 7 பெட்டிகள் ஆற்று நீரில் விழுந்தன.

விழுந்தும் விழாமலும் 8-வது பெட்டி. இடிபாடுகளில் சிக்கி 128 பேர் பலி. (‘தி இந்து' 25 நவ. 1956). இதுவும் அன்றி, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட பலர் ‘கடைசி வரை காணவில்லை'. இந்த மோசமான விபத்துக்கு 82 நாட் களுக்கு முன்புதான் அதாவது, 1956 செப்.2-ல் ஹைதராபாதில் இருந்து 100 கி.மீ. தொலைவில் மெஹபூப் நகர் - ஜட்சேரியா இடையே, பாலம் உடைந்து விழுந்ததில் 125 ரயில் பயணிகள் இறந்தனர்.

அப்போது மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, மெஹபூப் நகர் விபத் துக்கு தார்மீக பொறுப்பு ஏற்று பதவியை ராஜிநாமா செய்தார். ஆனால், பிரதமர் ஜவஹர்லால் நேரு அதனை நிராகரித்தார். அடுத்த 3 மாதங்களுக்குள் அரியலூர் விபத்து. நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட சாஸ்திரி, எல்லாப் பாலங்களையும் உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்த ரயில்வே வாரியத்தைப் பணித்தார்.

ஆனாலும் மனம் பொறுக்க வில்லை. நவ.26-ம் தேதி பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தார். இம்முறை சாஸ்திரி பிடிவாதமாக இருந்தார்.

இதனால், அவரது கடிதத்தை ஏற்று குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தார் நேரு. நாடாளு மன்றத்தில் இது குறித்துப் பேசினார். “துயரச் சம்பவங்களால் நாம் அனைவரும் வருந்துகிறோம். வேறு எவரையும் விட, ரயில்வே அமைச்சர் மிக அதிக வருத்தத்தில் உள்ளார்” என்றார்.

முன்னதாக நேரு கூறிய மற்றொரு செய்திதான் மிக முக்கியமானது. “விபத்து ஏற்பட்ட அதே இடத்தில் இது போன்ற சம்பவம் ஏற்கெனவே நடந்துள்ளது.” (‘தி இந்து' - 27 நவ.1956).

விபத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையைக் கொண்டுதான், ‘பயங்கர' விபத்து என்று தீர்மானிக்கி றோம் நாம். இப்போ தெல்லாம், ஓரிருவர் மரணம் என்றால் அதனை நாம் விபத்தாகவே ஏற்பதில்லை. இந்தியாவில் ரயில் விபத்து ஒன்றும் அபூர்வம் இல்லை. இயல்புதான் என்றாகி விட்டது.

சுதந்திர இந்தியாவில் நூற்றுக் கணக்கான ரயில் விபத்துகள், ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. கடந்த சுமார் எழுபது ஆண்டுகளில், விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகிய ரயில்வே அமைச்சர்கள், லால் பகதூர் சாஸ்திரி மற்றும் நிதீஷ் குமார்.

1999 ஆக.2-ம் தேதி. அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில், கைசல் என்ற இடத்தில் கோரமான ரயில் விபத்து. ‘அவாத் அசாம்' ரயிலும் பிரம்மபுத்ரா மெயிலும் ஒரே பாதையில் விடப்பட்டு, நேருக்கு நேர் மோதிக் கொண்டன. ‘சிக்னல்' இயக்குவதில் ஏற்பட்ட அசிரத்தை. மனிதத் தவறு. 300 பேருக்கு மேல் பலியாகினர். விபத்துக்குப் பொறுப்பேற்று பதவி விலகினார் அப்போதைய ரயில்வே அமைச்சர் நிதீஷ் குமார்.

இதன் பிறகு, 2000-ல் மம்தா பானர்ஜி ராஜிநாமா கடிதம் கொடுத் தார். ஆனால் அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அதை நிராகரித்தார். ஒரு நியாயமான கேள்வி எழுகிறது. இந்தியா போன்ற மிகப் பரவலான தேசத்தில், பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்துக்கு இருப்புப் பாதையும், நாள்தோறும் பல நூறு ரயில்களும், சுமார் 15 லட்சம் ஊழியர்களும் கொண்டுள்ள ரயில் வேயில், ஒரு விபத்துக்கு அமைச்சர் பொறுப்பாக முடியுமா...?

நேரடிப் பொறுப்பு அல்ல; ‘தார்மீக' பொறுப்பு என்பதே கூட நடைமுறையில் சாத்தியம்தானா? ஒருவரின் பதவி விலகலால் அத்தனையும் மாறி விடப் போகி றதா? இனியொரு விபத்து நடவாது என்பதற்கு, அது உத்தரவாதம் தருமா? நிச்சயமாக இல்லை. ஆனால், ஒரு சாமான்யனின் உணர் வுக்கும் உயிருக்கும் மதிப்பளிக்கும் அடிப்படை நாகரிகம் சார்ந்த ஜனநாயக நடைமுறைதான் இது.



ஓர் ஆச்சரியமான உண்மை. தார்மீகப் பொறுப்பு ஏற்று பதவி விலக முன்வந்த மூவருமே பிற் காலத்தில் உயரிய நிலையை எட்டி இருக்கிறார்கள். பிரதமராக சாஸ்திரி. மீண்டும் மத்திய அமைச்ச ராகவும், பிகார் முதல்வராகவும் நிதீஷ் குமார். மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி. இது முற்றிலும் தற்செயலானதாக இருக்கலாம்.

அதிலும், இந்த நாட்டின் பிரதமராகத் தான் வரப் போவதாக 1956-ல் சாஸ்திரி, கற்பனை கூட செய்து பார்த்து இருக்க முடியாது. நேரு என்ற ஆலமரம், மிக வலுவாக இருந்த காலம் அது. ஆனால் ஒன்று. நேருவுக்குப் பிறகு யார்? என்கிற கேள்வி எழுந்த போது, சாஸ்திரியின் தார்மீக நெறியே காமராஜரை அவர் பக்கம் திருப்பி இருக்கலாம்.

இரண்டு சொற்றொடர்கள் உண்டு. ‘தென்னை மரத்துல தேள் கொட்டினா, பனை மரத்துல நெறி கட்டுச்சாம்..', ‘கால்ல முள்ளு குத்துனாலும், கண்ணுல தண்ணி வரும்..' எங்கேயோ நடந்த ஒன்றுக்கு வேறு யாரோ பலி கடா ஆவதைச் சொல்கிறது முன்னது. எவருக்கோ பாதிப்பு என்றாலும், ‘பிணைப்பு' காரணமாக, அவருக் காக வேறொருவர் வருந்துவதைக் காட்டுகிறது பிந்தையது.

பொது வாழ்வில், குறிப்பாக அரசியலில் அரிதாகிப் போன பல நற்குணங்களில், இந்த ‘தார்மீகப் பொறுப்பு'தான் முதன்முதலில் காணாமல் போனது. எளிமை, தூய்மை, தன்னலமின்மை எல்லாம் பின் தொடர்ந்தன.

ஒரு தாயோ தந்தையோ ஆசிரி யராகப் பணி புரிந்தால், அவரது மகன், மகள் அவரின் கீழ் வராமல், வேறு பிரிவுக்கு அனுப்பப்பட வேண் டும் என்று எழுதப்படாத விதியைக் கடைப்பிடித்தவர்கள் வாழ்ந்த சமுதாயம் இது. தனது உறவினர் கூட அல்ல; நண்பர் அல்லது தெரிந்தவர் தொடர் பான வழக்கு என்றாலும் தாமாக அவ்வழக்கில் இருந்து விலகிக்கொண்ட வழக்கறிஞர்கள், நீதிபதிகள் வாழ்ந்த நாடு இது.

தனது தாயாக இருந்தாலும் பொதுக் குழாயில் சென்றுதான் தண்ணீர் பிடித்து வர வேண்டும் என்று சொன்ன, அதில் இருந்து சற்றும் வழுவாது கடைப்பிடித்த பெருந்தலைவர்கள் ஆண்ட பூமி இது. எதிர்பாராது நிகழ்வதுதான் விபத்து. அரியலூரிலும் அப் படித்தான் நடந்தது. அதில் உயிர் இழந்தவர்களைப் பற்றி, அவர்களின் உறவினர்களே கூட இன்று நினைக்காமல் போகலாம். நாம் ஆனால் கண்ணீருடன் அவர் களுக்கு அஞ்சலி செலுத்துவோம். கூடவே, தார்மீகப் பொறுப்பு குறித்தும் சற்றே அசை போடுவோம். ‘புண்ணியமாப் போகும்'.

PUBLIC NOTICE..DCI website

PUBLIC NOTICE

 It has consistently been observed by the DCI that numerous anonymous/pseudonymous complaints are being received either through emails or by post even without substantiating any allegations leveled therein by any documentary proof or otherwise and as such, it is not feasible for the Council to ascertain the veracity of the facts and credentials of the complainant. 

In order to cope with such situations, the Central Vigilance Commission vide its order dated 26.06.1999 has already taken a decision to not to take any action on such anonymous/pseudonymous petition/complaints in terms of the Resolution No. 371/20/99·AVD.1II dated 04.04.1999 issued by the Department of Personnel & Training.

 In view of the above, and in order to avoid unnecessary correspondences and uncalled for tension to the persons in respect of whom such anonymous/pseudonymous petitions/complaints are made, it is brought to the notice of the public at large that no such anonymous/pseudonymous petition/complaint shall be entertained and considered, nor any action shall be taken by the Dental Council of India on it.

 This issues with the approval of the Executive Committee of the DCI in its meeting (at Agenda No.13(1)) held on 15.10.2015 ~ (M.L. Meena) Secretary Ilc Dental Council of India

செயல்படாத அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது: சம்பளக் கமிஷன் பரிந்துரை ஏற்பு

பிடிஐ

திறம்பட செயல்படாத மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு தரவேண்டாம் என 7-வது சம்பளக் கமிஷன் அளித்த பரிந் துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி, மத்திய அரசுப் ஊழியர்களின் பணித் திறன் குறிப்பிட்ட அளவுகோலை எட்டா மல் போனால், அவர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு நிறுத்திவைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எச்சரித்துள்ளார்.

7-வது சம்பளக் கமிஷன் பரிந் துரைகள் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கடந்த ஜூலை மாதம் அரசிதழில் வெளியிடப்பட்டது. அதில், சிறப்பாக செயல்படாத அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது குறித்தும் சம்பளக் கமிஷன் பரிந்துரை அளித்திருந்தது.

அதாவது, பணியில் சேர்ந்த 20 ஆண்டுகளில் ஓர் ஊழியர் குறிப்பிட்ட அளவுகோலை எட்ட வில்லை என்றால் வருங்காலத் தில் அவருக்கான வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்றவற்றை நிறுத்திவைக்கலாம் என சிபாரிசு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக, அரசுப் பணி யாளர்கள் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

இதன் மூலம், செயல்படாத மத்திய அரசு ஊழியர்கள், வரு டாந்திர ஊதிய உயர்வு உள்ளிட்ட பலன்களைப் பெற முடியாது என, அமைச்சர் ஜிதேந்திர சிங் எச்சரித்துள்ளார்.

Tuesday, November 22, 2016

RAC passengers to get bed kit without making a request
By Venkatesan Parthasarathy  |  Express News Service  |   Published: 22nd November 2016 02:43 AM  |  

CHENNAI: It is often a grouse among passengers of Reservation Against Cancellation (RAC) tickets, travelling in AC classes that they are not given bedroll kit. Unless specifically requested, it is likely the coach attendant gives a cold shoulder to them. But by failing to provide the bed kit, it is conveniently forgotten that affected passengers have already paid for it and are rightly justified in demanding the service.

Recently, Saran Raj, 28, travelled on a 3-AC coach to Kolkata by the Coromandel Express from Chennai. He narrated his experience of requesting the bedroll on multiple occasions. “I repeatedly requested the coach attendant. I was told the reserved passengers will be catered to first and only then RAC passengers will get served,” Saran recalled.

Having recognised this deficiency in service delivery, the railway board has issued a circular to all zonal railways stating that the bedroll kit may be provided to every RAC passenger in AC classes (except AC chair car). Dated November 16, the circular states that the bedroll charges are included in the fare and charged from passengers. The circular also mentions that zonal railway authorities have been asked to ‘ensure compliance’ with this order.

An RAC ticket permits a passenger to travel on the train, but they are not guaranteed a berth. The Travelling Ticket Examiner (TTE) or train conductor allots such passengers a berth when reserved passengers don’t turn up for the journey or if vacancy arises due to any cancellation. Until that allocation, one berth (side lower) is shared by two RAC passengers. Normally, every 2-tier AC/3 tier AC coach has two berths for RAC passengers.

While denying receiving any complaint from passengers, Senior Southern Railway officials here state the recent circular has only reiterated a similar communication which was first given way back in 2009.
But the content of the recent circular seems not to have penetrated to the TTEs. A couple of TTEs said they haven’t got any official instruction about the provision of bedrolls to RAC passengers and that the provision can’t be ensured until then.

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...