Sunday, November 27, 2016

 டாக்டர் காலி பணியிடங்களை நிரப்ப ஜனவரியில் தேர்வு : அமைச்சர் தகவல்

புதுக்கோட்டை, :''தமிழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு, வரும் ஜனவரியில் நடைபெறும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: புதுக்கோட்டையில், 249 கோடி ரூபாய் மதிப்பில், மருத்துவக் கல்லுாரி கட்டடம் கட்டப் பட்டு வருகிறது. பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இந்தாண்டு, இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதலை பெற்று திறக்கப்படும். வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளது.

தமிழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்களின் பணியிடங்கள், அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, வரும் ஜனவரியில் தேர்வு நடத்தப்பட்டு, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.உடன் இருந்த, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைப்பதற்கு, மத்திய குழு, ஐந்து இடங்களை பார்வையிட்டு சென்றுள்ளது. இந்த இடங்களில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளில், மத்திய சுகாதாரத்துறை ஈடுபட்டு வருவதாக, தமிழக அரசிற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
                     
: நாணய மூட்டைகளை காலி செய்யும் ரிசர்வ் வங்கி
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம், தன்னிடமுள்ள நாணய மூட்டைகளை காலி செய்து வருகிறது. சில்லறை நோட்டுகளுக்காக வரும் பொது மக்களிடம் தொடர்ந்து நாணயங்களையே விநியோகம் செய்து வருகிறது.

இதுவும், 100, 50 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட ஒருகாரணம் என புகார் எழுந்துள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலங்களில் மட்டுமே மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு நாள்தோறும் 1,500 முதல் 2,000 பேர் வரை வந்து செல்கின்றனர்.

அவர்களில் பெரும்பாலானோர் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றவே வருகின்றனர். மேலும், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து வருவோரும் இருக்கின்றனர். இந்த நிலையில் அனைவருக்குமே ரிசர்வ் வங்கியானது நாணயங்களை மட்டுமே வழங்கி வருகிறது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் கூறியதாவது:-
ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் எப்போது சில்லறைகள் அதிகளவு கையிருப்பு இருக்கும். செல்லாத ரூபாய் நோட்டு பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு, இந்த சில்லறைகளை வாங்குவதற்கான கூட்டம் குறைவாகவே இருக்கும். குறிப்பாக, மாத ஊதியம், ஓய்வூதியம் வாங்கியவர்களில் சிலரே சில்லறைக்காக ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு வருவர்.
இதனால், சில்லறை நாணயங்கள் எப்போதுமே கையிருப்பில் அதிகமாக இருக்கும். 5, 10 ரூபாய் நாணயங்கள் போதுமானதாக இருந்தாலும், பொது மக்கள் 10, 20 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வாங்கிச் செல்வது வழக்கமாக இருக்கும். இதனால், நாணயங்கள் தேவைக்கு அதிகமாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில், செல்லாத ரூபாய் நோட்டு பிரச்னையைத் தொடர்ந்து அந்த ரூபாய் நோட்டுகளுடனும், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுடனும் வருவோருக்கு சில்லறையாக நாணயங்களே விநியோகம் செய்யப்படுகின்றன என அவர்கள் தெரிவித்தனர்.
 28வது பட்டமளிப்பு விழா, டிச., 3ம் தேதி காலை, 11:30 மணிக்கு நடைபெற உள்ளது.
சென்னை,:தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 28வது பட்டமளிப்பு விழா, டிச., 3ம் தேதி காலை, 11:30 மணிக்கு நடைபெற உள்ளது.

பல்கலை வேந்தர், கவர்னர் வித்யாசாகர் ராவ் தலைமை வகிக்கிறார். சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், மத்திய அரசின் சுகாதாரப் பணிகள் இயக்குனரக தலைமை இயக்குனர், ஜெகதீஷ் பிரசாத் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

விழாவில், மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஓமியோபதி மருத்துவம் சார்ந்த, 20,489 மருத்துவ மாணவ, மாணவியருக்கு, பட்டம் வழங்கப்பட உள்ளது.

மேலும், சாதனை புரிந்த மருத்துவர்களுக்கு, கவுரவ டாக்டர் பட்டம்; வாழ்நாள் சாதனையாளர் விருது; அதிக மதிப்பெண்கள் பெற்ற, 141 மாணவ, மாணவியருக்கு, தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை, கவர்னர் வழங்குகிறார்.
கணேஷ் தைத்த காலணி காசு கொடுத்தது ஸ்மிருதி இராணி!

அரைகுறையாய் காலையில் நிரம்பிய வயிறு, அவசரமாய் மதிய உணவுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தது. இருக்கும் இரண்டு மூன்று செருப்புகளை தைத்து விட்டு, கஞ்சியிலே கை வைக்கலாம் என்பது கணேஷ், 39 எண்ணம். வேகமாய்ப் போனது தையல்.

'சர்'ரென்று புயல் வேகத்தில், அவரது கடைக்கு முன்னால் வந்து நிற்கிறது அந்த பிரமாண்ட வாகனம். பின்னாலேயே சரசரவென பல வாகனங்கள் அணி வகுத்து நின்றன. முதல் வாகனத்திலிருந்து களையும், கம்பீரமுமாக வந்து இறங்குகிறார் அந்த பெண். பின்னாலேயே துப்பாக்கிகள் சகிதமாக படபடவென்று பலரும் இறங்க, அந்த பெண், நடந்து கணேஷ் கடைக்கு வருகிறார்.

அவரது கைகளில் இரண்டு காலணிகள். அதில் ஒன்று அறுந்திருக்க, கணேஷ் கையில் கொடுக்கிறார். உடன் வந்த மற்றொரு பெண், கொஞ்சமும் பிறழாத கொங்கு பாஷையில், கணேஷிடம் பேசுகிறார். கூலி எவ்வளவு என்று கேட்க, பத்து ரூபாய் கேட்கிறார். காலணியைத் தந்தவர், சத்தமின்றி 100 ரூபாயை கணேஷ்க்கு அருகே வைக்கிறார். அவரே, 'சேஞ்ச் வேண்டாம்' என்று தடுமாறும் தமிழில் அழகாகச் சொல்கிறார்.

சில்லரை இல்லை என்பதற்காக, அதே காலணியில் இன்னொரு தையல் போட்டுத்தருவதாக கணேஷ் சொல்ல, 'வேண்டாம்' என்று வாங்கிக் கொண்டு, அணிந்தபடி நகர்கிறார் அந்த பெண்மணி. பின்னாலேயே துப்பாக்கிய ஏந்திய வீரர்களும் வேகமாகச் செல்ல, அந்த வாகன அணி வகுப்பு, புயலாய்ப் புறப்பட்டுச்
செல்கிறது. நடந்தது என்னவென்று புரியாமல் அந்த வாகனங்கள் சென்ற திசையைப் பார்க்கிறார் கணேஷ்.

அவரைப் பார்த்து, 'வந்தது யாருன்னு தெரியுமா' என்று கேட்க, 'தெரியாதுங்க...' என்றவர், நம்மிடம் பேசத்துவங்கினார்...

''எனக்கு, 39 வயசு. இது, பரம்பரைத்தொழிலு. இன்னிக்கு மதியம் கடையில செருப்பு தைச்சுட்டு இருந்தப்போ ஏகப்பட்ட காருக. அதுல இருந்து ஒரு அம்மா இறங்கி வந்தாங்க; கூடவே போலீசு. நான் ஆடிப்போயிட்டேன்.
செருப்பை தைக்கக் கொடுத்தாங்க. கூலியா பத்து ரூபா கேட்டேன். அவுங்க 100 ரூபா கொடுத்துட்டு 'சில்லரை வேண்டாம்'னுட்டு சொல்லீட்டாங்க,'' என்றார்.
வந்தது மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்ம்ருதி இராணி என்றும், அவருடன் வந்தது பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனும் என்றும், பிறர் கூறியே அவருக்கு தெரியவந்தது.

பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'கோவை ஈஷா யோகா மையத்துக்கு வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் காலணி, விமான நிலையத்தில் நடந்து வந்த போது அறுந்துவிட்டது. அதே காலணியுடன் நடந்து காரில் ஏறி பயணித்த அவர், பேரூர் அருகே, செருப்பு தைக்கும் கடையை பார்த்ததும் நிறுத்தி, காலணியைத் தைத்து சரி செய்து கொண்டார்' என்றனர்.

- நமது நிருபர் -
மாத சம்பளத்தை எப்படி கொடுக்கப் போகிறார்கள்?

அடுத்த 4 நாட்களில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் போன்ற கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு மாத சம்பளம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நாடு முழுவதும் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 53 லட்சம் பென்ஷன்தாரர்களும் இருக்கிறார்கள். தமிழக அரசு பணியில் கிட்டத்தட்ட 14 லட்சம் ஊழியர்களும், 7 லட்சம் பென்ஷன்தாரர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்குகளில் தான் அவர்களது மாத சம்பளம் வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள 1 லட்சத்து 34 ஆயிரம் வங்கிக் கிளைகளிலும், ஏ.டி.எம்.களிலும் தான் இவர்கள் பணம் எடுத்துக்கொண்டிருக் கிறார்கள். கடந்த 8–ந் தேதி திடீரென பிரதமர் நரேந்திரமோடி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து விட்டார். இந்தியாவின் மொத்த பணப்புழக்கம் ஏறத்தாழ 17 லட்சம் கோடியாக இருக்கும் நேரத்தில், இந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மட்டுமே ரூ.14 லட்சத்து 18 ஆயிரம் கோடி மதிப்பிலிருக்கிறது. ஏறத்தாழ 86 சதவீதம் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், புதிதாக 2,000 ரூபாய்நோட்டுகள் மட்டும் அச்சடிக்கப்பட்டு புழக் கத்திற்கு வந்துள்ளன. 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் எல்லா இடங்களுக்கும் வரவில்லை.

நாட்டில் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. தற்போது வங்கிகளில் ஏற்கனவே வங்கிக் கணக்கில் போட்டு வைக்கப்பட்டிருக்கும் பணத்தில், வாரந்தோறும் ரூ.24 ஆயிரம் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டாலும், ஒருவங்கியிலும் முழுமையாக இந்த தொகை கிடைப்பதில்லை. ரூ.10 ஆயிரம் எடுக்கப்போனால், ரூ.4,000 அல்லது ரூ.5,000 தான் தருகிறார்கள். ஏ.டி.எம். மெஷினிலும் ஒருநாளைக்கு ரூ.2,000 தான் எடுக்க முடியும். இன்றைய சூழ்நிலையில், 1,570 கோடி எண்ணிக்கையில் பழைய 500 ரூபாய் நோட்டுகளும், 632 கோடி எண்ணிக் கையில் 1,000 ரூபாய்நோட்டுகளும் செல்லாது என்று அறிவித்துவிட்ட நிலையில், இந்த 1,570 கோடி எண்ணிக்கையிலுள்ள 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கவே இன்னும் 6 மாத காலமாகும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சென்னையில் அறிவித்திருக்கிறது. இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் 4 அச்சகங்கள் மத்தியபிரதேசம், மராட்டியம், கர்நாடகம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங் களில் இருக்கிறது. இதில், கர்நாடக மாநிலம், மைசூரிலுள்ள அச்சகத்தில் 2,000 ரூபாய் நோட்டுகளே அச்சடிக்கப்பட்டு வருகின்றன. இரவு, பகலாக வேலை பார்த்தால் கூட பிரதமர் கூறியபடி, டிசம்பர் 31–ந் தேதிக்குள் நிலைமை சீரடையுமா? என்பது ஐயமாகத்தான் இருக்கிறது.

2 லட்சத்து 20 ஆயிரம் ஏ.டி.எம்.களில், எல்லா ஏ.டிஎம்.களிலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள், 2,000 ரூபாய் நோட்டுகள் எடுக்கப்படும் வகையில் வசதிகள் முழுமையாக செய்யப்படவில்லை. இந்த நிலையில், அடுத்த 4 நாட்களில், 1–ந் தேதி முதல் எல்லா மாதசம்பளம் பெறுபவர்களும் தங்கள் சம்பளத்தை எடுக்க வங்கிகளையும், ஏ.டி.எம்.களையும் நாடுவார்கள். வழக்கமாக 1–ந் தேதி முதல்
7–ந் தேதிக்குள் சம்பளப்பணத்தில் ஏறத்தாழ முழுத்தொகையையும் அரசு ஊழியர்கள் ரொக்கமாக எடுத்துக் கொள்வார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் ரூ.15 ஆயிரத்து 350 கோடி வழங்க வேண்டும். இதுதவிர, 29 மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், 40 லட்சம் ஐ.டி. ஊழியர்கள் என இந்த பட்டியல் கோடிக் கணக்கில் நீண்டு கொண்டே இருக்கிறது. இப்போதுள்ள நிலையில், முழு சம்பளப்பணத்தையும் ரொக்கமாக கொடுக்க வங்கி கிளைகளால் முடியுமா? என்பது சந்தேகத்தில் தான் இருக்கிறது. இப்போது ரூபாய் நோட்டு களை எடுப்பதற்கு வங்கிக் கிளைகளிலும், ஏ.டி.எம்.களிலும் எப்படி கூட்டம் இருக்கிறதோ?, அதே கூட்டத்தை வருகிற 1–ந் தேதி முதல் 7–ந் தேதி வரை அரசு ஊழியர்களும் பணம் எடுக்க நின்று கொண்டிருப்பதை பார்க்கலாம். அரசு எப்படி இந்த பிரச்சினையை சமாளிக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Saturday, November 26, 2016

Madras High Court
Bharani Swadi Educational Trust vs The Secretary To Government on 4 August, 2016
         
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED: 04.08.2016
CORAM
THE HONOURABLE MR.JUSTICE M.SATHYANARAYANAN
W.P.No.27136/2016

Bharani Swadi Educational Trust
rep.by its Managing Trustee
Mrs.Lekha Chandrasekar   .. Petitioner

   Versus
 
1.The Secretary to Government
   Health & Family Welfare Department
   Government of Tamil Nadu
   Fort St George, Chennai-9.

2.The Director of Medical Education,
   No.150-151, Periyar EVR High Road
   Kilpauk, Chennai-600010.

3.The Manager
   Indian Bank, Kotturpuram Branch
   Chennai 600 085.   .. Respondents

Prayer: Writ Petition filed under Article 226 of the Constitution of India, seeking for a writ of mandamus directing the 2nd respondent to forthwith release the Endowment Fund of Rs.10 Lakhs made by the petitioner in the form of Fixed Deposits deposited with the 3rd respondent Bank, viz., Indian Bank, Kotturpuram Branch, in the joint names of the petitioner and the 2nd respondent, together with interest payable till the date of payment to the petitioner.

 For Petitioner :    Mr.Arun Anbumani
 For R1 & R2 :    Mr.S.Navaneethan, AGP
 For R3   :    Mr.L.Ramkumar

ORDER
By consent, the writ petition is taken up for final disposal.

2 The petitioner Trust, for the purpose of imparting Bachelor of Physiotheraphy [B.P.T.Degree course], had established a College, viz., Bharani Swadi College of Physiotherapy and necessary permission/approval was granted by the Government of Tamil Nadu as well by the Tamil Nadu Dr.MGR Medical College University, Chennai. The petitioner, in compliance to the terms and conditions for grant of approval/permission/affiliation, was called upon to create and Endowment Fund, for a sum of Rs.20 Lakhs, which was subsequently reduced to Rs.10 Lakhs, in a Nationalised Bank in the joint name of the petitioner and the 2nd respondent and accordingly, the said Endowment Fund was created for a sum of Rs.10 lakhs and it is lying to the credit of the 3rd respondent / Bank.

 The petitioner was also required to deposit a sum of Rs.5 lakhs to the Tamil Nadu Dr.MGR Medical College University towards Security Deposits and it was also deposited. The petitioner would further state that in view of poor response to the admission of the students to the said College, a decision has been taken to close the College and accordingly, the above said University had permitted the petitioner to close the B.P.T. Course, permanently and the Security Deposit of Rs.5 lakhs, deposited with them, was also refunded to the petitioner Trust on 30.05.2008. The grievance expressed by the petitioner is that despite the permanent closure of the College and the submission of very many representations for refund of the Endowment Fund of Rs.10 lakhs, which is lying to the credit of the 3rd respondent, the 2nd respondent did not respond to the same and therefore, it si constrained to approach this Court by filing the present writ petition.

3 Heard the submissions of Mr.Arun Anbumani, learned counsel for the petitioner ; Mr.S.Navaneethan, learned Additional Government Pleader, who accepts notice on behalf of the respondents 1 and 2 and Mr.L.Ramkumar, learned counsel for the 3rd respondent.

4 Though the petitioner has prayed for a larger relief, this Court, in the light of the above facts and circumstances and without going into the merits of the claim projected by the petitioner, directs the 2nd respondent to consider and dispose of the petitioner's representations dated 11.01.2013, 13.11.2013, 28.11.2013, 19.12.2013, 08.12.2014, 04.05.2015 and 27.07.2015 respectively, in accordance with law and pass orders within a period of eight weeks from the date M.SATHYANARAYANAN, J., AP of receipt of a copy of this order and communicate the decision taken, to the petitioner.

5 The writ petition is disposed of accordingly. No costs.

04.08.2016 AP To

1.The Secretary to Government Health & Family Welfare Department Government of Tamil Nadu Fort St George, Chennai-9.
2.The Director of Medical Education, No.150-151, Periyar EVR High Road Kilpauk, Chennai-600010.
3.The Manager Indian Bank, Kotturpuram Branch Chennai 600 085.

W.P.No.27136/2016

SCHEME OF EXAMINATION

  • Allocation of time for the NEET-PG 2017 shall be as follows:

    Forenoon SessionAfternoon Session
    Candidate Entry Time at Reporting Counters9:00 AM2:45 PM
    Reporting Counter Entry Closes9:30 AM3:15 PM
    Check-in Procedure9:00 AM to 10:00 AM2:45 PM TO 3:45 PM
    Exam Start Time*10:00 AM3:45 PM
    Exam End  Time1:45 PM7:30 PM
    *Includes 15 min. of test tutorial.
    Kindly note that the candidates shall be allocated to appear either in FORENOON session or in the AFTERNOON session i.e. NEET-PG 2017 comprises of ONE session/candidate only.
  • Syllabus: The syllabus for the exam shall comprise of subjects/knowledge areas as per the Graduate Medical Education Regulations issued by Medical Council of India with prior approval of Government of India. Kindly refer to the MCI website www.mciindia.org for complete document.

    The syllabus shall be as per the latest Graduate Medical Education Regulations notified by the Medical Council of India with prior approval of the Govt. of India. For Graduate Medical Education Regulations please refer www.mciindia.org
  • The examination shall be a multiple choice questions exam delivered on computer based platform (CBT).
  • The exam comprises of 300 Multiple Choices, single correct response questions in English language only. Time allotted is 3hr. 30 min.
    The weightage of MCQs in each specialty is indicative and purely provisional. NBE reserves its right to alter/vary/amend the same.
  • Negative marking: There shall be no negative marking.
  • SUBJECT-WISE DISTRIBUTION OF QUESTIONS FOR NEET- PG 2017
    S.NOSUBJECTSUBJECT WISE WEIGHTAGE OF QUESTIONS (IN NO.)
    1ANATOMY15
    2PHYSIOLOGY15
    3BIOCHEMISTRY15
    4PHARMACOLOGY20
    5MICROBIOLOGY20
    6PATHOLOGY25
    7FORENSIC MEDICINE10
    8SOCIAL AND PREVENTIVE MEDICINE25
    9MEDICINE DERMATOLOGY AND VENEREOLOGY37
    10SURGERY, ENT, ORTHOPEDICS & ANAESTHESIA46
    11RADIODIAGNOSIS & RADIOTHERAPY12(6+6)
    12OBSTETRICS AND GYNAECOLOGY25
    13PAEDIATRICS15
    14OPHTHALMOLOGY10
    15PSYCHIATRY10
    GRAND TOTAL300
    Note: The syllabus of the above topics shall be as per the latest Graduate Medical Education Regulations notified by the Medical Council of India with prior approval of the Govt. of India.  For Graduate Medical Education Regulations please refer www.mciindia.org.

NEET-PG NOTIFICATION


ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...