Wednesday, November 30, 2016

நோ..முழு சம்பளம்: இந்தா பிடி...பத்தாயிரம் ரூபாய் - தலைமைச் செயலக காட்சிகள்..

சென்னை தலைமைச் செயலகத்தில் 5500 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களுக்காகவே, தலைமைச் செயலக வளாகத்தில் சில வங்கிகள் இயங்கிவருகின்றன. இன்று சம்பள நாள். தற்போதைய சூழ்நிலைலயில், வங்கி ஏ.டி.எம்-களில் ரூ. 2000 மட்டுமே எடுக்க முடியும் என்பதால், ஊழியர்கள் நேராக வங்கிகளுக்குப் போய் பணத்தை எடுக்க முயன்றனர்.
ஆனால், அங்கே சம்பளப் பணம் முழுவதையும் எடுக்க முடியவில்லை. தலைக்கு ரூ. 10 ஆயிரம்தான் தரமுடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சி. தலைமைச் செயலக ஊழியர் சங்க செயலாளர் கணேசனிடம் முறையிட்டனர். அவரும் வங்கித்தரப்பினருடன் பேசியிருக்கிறார்.
வங்கி தரப்பில் சொன்ன தகவல் என்னவென்றால்... "எங்களுக்கு ரிசர்வ் வங்கி தந்ததே...முப்பது லட்சம்தான். நாங்கள்தான், கூடுதலாக வேண்டும் என்று சொல்லி அறுபது லட்ச ரூபாயை வரவழைத்திருக்கிறோம். இந்தப் பணத்தை வைத்து இன்றைய தேதியில் பகிர்ந்துதான் தரமுடியும். 
மேலும் பணம் வந்தால், நிச்சியமாக மீதிப் பணத்தை தருவோம். அதுவும் தவணை முறையாக கூட இருக்கலாம்"  என்று சொல்லிவிட்டர்களாம். பிரதமர் மோடி அரசு மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் தலைமைச் செயலக ஊழியர்கள்.

பென்‌ஷன் பணத்தை எடுக்க முடியாமல் வயதானவர்கள் பரிதவிப்பு


சென்னை:
வங்கிகளில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பென்‌ஷன்தாரர்களுக்கு இன்று சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்பட்டன.
அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்ட சம்பளத்தை பெறுவதற்காக வங்கிகளில் அரசு ஊழியர்கள் இன்று காத்து நின்றனர்.
ஏ.டி.எம். மையங்களில் ரூ.2 ஆயிரம் மட்டுமே நாள் ஒன்றுக்கு எடுக்க முடியும் என்பதால் பலரும் வங்கிகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏ.டி.எம்.களும் பணம் இல்லாமல் பெரும் அளவில் செயலிழந்து கிடப்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
இதற்கிடையில் ஓய்வூதியம் பெறக்கூடிய வயதானவர்கள் வங்கி வாசலில் காத்து கிடப்பது பரிதாபமாக இருந்தது. 60 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் ஓய்வூதியதாரர்கள் தங்கள் கணக்கில் போடப்பட்ட பென்‌ஷன் பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வங்கிகளில் பணம் இல்லாததால் தங்களின் சொந்த பணத்தை எடுக்க முடியாமல் மனவேதனையுடன் ஓய்வூதியதாரர்கள் குமுறினார்கள்.
சின்னகோவிந்தன் (வயது 93):- சென்னை மாநகராட்சியில் லாரி டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். எனக்கு மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் பென்‌ஷன் வருகிறது. இன்று பென்‌ஷன் பணம் போடப்பட்டதால் வண்ணாரப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கிக்கு காலை 7 மணிக்கே வந்து விட்டேன்.
பணத்தை எடுப்பதற்காக எனது பேரன் மணிகண்டனும் வங்கி வாசலில் காத்து நின்றேன். என்னால் நிற்க முடியாததால் கீழே அமர்ந்து விட்டேன். மதியம் 12 மணிக்கு பிறகு பணம் இல்லை என்று கூறி விட்டனர்.
இந்த பென்‌ஷன் பணத்தை வைத்து என் செலவுகளை செய்வேன். பணம் இல்லாததால் மீண்டும் நாளை வரவேண்டிய நிலை உள்ளது. எங்களை போன்ற வயதானவர்களுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கூறிய போதிலும் வங்கிக்குள் விடவில்லை.
பர்வதம்மாள்:- அரசு ஊழியரான எனது கணவர் இறந்து விட்டதால் அவரது பென்‌ஷன் பணத்தை நான் மாதந்தோறும் பெற்று வருகிறேன். இந்த பணத்தை நம்பிதான் என் வாழ்க்கை உள்ளது. அக்டோபர் மாத பென்‌ஷன் பணத்தை என்னால் எடுக்க முடியவில்லை.
வங்கிக்கு பலமுறை வந்தும் பணம் இல்லாததால் திரும்பி செல்கிறேன். இன்றாவது பணம் கிடைக்கும் என்று நம்பி வந்தேன். ஆனால் பணம் இல்லை என்று கூறி விட்டார்கள். எங்களை போன்ற வயதானவர்களை அலை கழிக்காமல் முன்னுரிமை கொடுத்து பென்‌ஷன் பணத்தை வழங்க உதவ வேண்டும்.
முசலையா:- கொருக்குப்பேட்டையில் வசித்து வரும் நான் மாநகராட்சியில் மேஸ்திரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். பென்‌ஷன் பணம் ரூ.9,500 இன்று போடப்பட்டதால் அதனை எடுக்க வந்தேன். ஆனால் வங்கியில் பணம் இல்லை என்று கூறி எங்களை வெளியில் நிறுத்தி விட்டார்கள்.
ஒவ்வொரு நாளும் இங்குள்ள கூட்டத்தை பார்க்கும் போது இதில் நின்று எப்படி பணத்தை எடுப்பேன் என்று நினைத்து திரும்பி சென்று விடுவேன்.
எந்த வருமானமும் இல்லாத என்னை போன்றவர்கள் பென்‌ஷனை நம்பி வாழ்கிறார்கள். இந்த பணமும் சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது? பென்‌ஷன்தாரர்களுக்கு பணம் இல்லை என்று கூறாமல் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் இங்கலாம் பிரியாணி சாப்ட்டிருக்கீங்களா?

#FoodGuide

பிரியாணி பிடிக்காதவர்கள் யாராவது இருப்போமா!?. நல்ல சுவையுடனும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் நியாயமான விலையுடனும் இருக்க வேண்டும் என தேடிப்பிடித்து சாப்பிட்டிருப்போம். முகலாய மன்னர்களின் ஆட்சியில் இந்தியாவுக்குள் பிரியாணி என்ற உணவு வகை நுழைந்ததாக தகவல்கள் இருக்கின்றன. சென்னையில் உள்ள டாப் பிரியாணி கடைகளுக்கு ஒரு ரவுண்டு போய் வரலாமா..,

கல்யாண பவன் - எழும்பூர் :

இஸ்லாமிய திருமணங்களில் சாப்பிடுவதைப் போல பிரியாணி சாப்பிட ஆசையா?. உங்களுக்காகவே இருக்கிறது 'கல்யாண பவன் பிரியாணி கடை'. எழும்பூரில் மதிமுக தலைமைக்கழகமான தாயகத்தை ஒட்டியே இருக்கிறது ஹோட்டல் கல்யாண பவன் . சிக்கன் பிரியாணி 160 ரூபாயிலிருந்தும், மட்டன் 180 ரூபாய்க்கும் வயிறு நிறைய சாப்பிடலாம்.

அல் தாஜ் - ராயபேட்டை :
ராயப்பேட்டை, பெசன்ட் சாலையில் இருக்கிறது அல் தாஜ் பிரியாணி கடை. சிக்கன் 80 ரூபாயிலிருந்து, 130 ரூபாய் வரையில் கிடைக்கிறது. மாலை நேரங்களில் கூட்டம் அலைமோதும் என்பதால் முந்திக் கொள்வது நல்லது. வாணியம்பாடி பிரியாணியை டேஸ்ட் செய்ய நினைப்பவர்கள் அல் தாஜுக்கு ஒரு ரவுண்ட் போய் வரலாம். "சென்னையிலேயே நாங்க மட்டும் தான் குறைவான விலைக்கு கொடுக்குறோம்" என்கிறார் கடையின் உரிமையாளர்.





ஆற்காடு பிரியாணி - போரூர் :
இந்தியாவிலேயே ஆற்காடு பிரியாணி ரொம்ப ஸ்பெஷல். ஆற்காடு வரைக்கும் போய் சாப்பிட முடியாதே என வருந்துபவர்களுக்காகவே இருக்கிறது போரூர் ஆற்காடு பிரியாணி. சிக்கன் பிரியாணி 110 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. "20 வருடங்களாக நடத்தி வருகிறோம். இந்த பகுதியில யாரை கேட்டாலும் எங்க கடை பேரை தான் சொல்லுவாங்க." என பூரிக்கிறார் கடையின் உரிமையாளர்.

பாரடைஸ் - பெருங்குடி :
ஓ எம் ஆர் ரோட்டில் இருக்கும் ஐ.டி பார்க் இளசுகளின் பேவரைட் பிரியாணி ஸ்பாட் பாரடைஸ். கிட்டத்தட்ட 63 வருட பாரம்பரிய சுவையை கொண்டது பாரடைஸ் ,பெருங்குடியில் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது.இருந்தாலும் கூட்டம் அள்ளுகிறது. சிக்கன் பிரியாணி 170 ரூபாயிலிருந்தும், மட்டன் 180 ரூபாயிலிருந்தும் விலை ஆரம்பிக்கிறது.

உமர் பிரியாணி - கிரீம்ஸ் சாலை :
அண்ணா சாலையிலிருந்து கிரீம்ஸ் சாலைக்குள் நுழைந்தால் அஜீஸ் முல்க் முதல் தெருவில் இருக்கிறது உமர் பிரியாணி. குறைந்த விலையில் சுவையான சிக்கன் பிரியாணிக்கு பெஸ்ட் சாய்ஸ் உமர் பிரியாணி கடை.

அக்பர் பிரியாணி கடை - பெரியமேடு :
பெரியமேடு சாமி தெருவில் அமைந்திருக்கிறது அக்பர் பிரியாணி கடை. 1978 லிருந்து அக்பர் என்பவரால் இந்த கடை நடத்தப்பட்டு வருகிறது. தினமும் காலை 11 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில் ஃபுல் கட்டு கட்டலாம். இரண்டு பிளேட்களில் வைத்து தருகிறார்கள். சிக்கன் பிரியாணி 100 ரூபாய்க்கும், மட்டன் பிரியாணி 120 ரூபாய்க்கும் கிடைக்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4 மணி வரைதான் பிரியாணி கிடைக்கும் மக்கா..!!

யா - முஹைய்யதின் பிரியாணி - பல்லாவரம் :

பல்லாவரம் சுற்றுவட்டாரத்தில் யாரைக் கேட்டாலும் வழி காட்டுகிறார்கள் யா- முஹைய்யதின் கடைக்கு. டோக்கன் வாங்கிக் கொண்டு வரிசையில் நின்றால் சுடச் சுட ஒரு பிடி பிடிக்கலாம். மட்டன் பிரியாணி 160 ரூபாய்க்கும், சிக்கன் பிரியாணி 120 ரூபாய்க்கும் கிடைக்கிறது.

ஆசிப் அண்ட் பிரதர்ஸ் - ஆலந்தூர் :
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தை தாண்டி தாம்பரம் செல்லும் வழியில் திரும்பினாள் சில நூறு அடிகளிலேயே வரவேற்கிறது ஹாசிப் அண்ட் பிரதர்ஸ். சென்னையின் பல பகுதிகளிலும் இதன் கிளைகள் இருக்கிறது. வழக்கமாக சாப்பிடும் பிரியாணியை தாண்டி ஸ்பெஷலாக ஏதாவது சாப்பிட நினைப்பவர்கள் முஹல் பிரியாணியை டேஸ்ட் பண்ணலாம். பிரியாணியின் விலை 160 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது.

சார்மினார் பிரியாணி - ராயபேட்டை :

ராயப்பேட்டை பெசன்ட் சாலையிலேயே அமைந்திருக்கிறது சார்மினார் . நின்று கொண்டு தான் சாப்பிட முடியும் என்றாலும் டேஸ்ட் அந்த சிரமத்தை மறக்கச் செய்யும். அரை பிளேட் சிக்கன் பிரியாணி 60 ருபாய் தான். போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதி என்பதால் வாகனங்களை நிறுத்துவதில் மட்டும் கொஞ்சம் சிரமம் இருக்கிறது.

தலப்பாக்கட்டி - ராமாபுரம் :
திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணியை தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் எனச் சொல்லலாம். திண்டுக்கல்லில் நாகசாமி நாயுடு என்பவரால் 1957ல் ஆரம்பிக்கப்பட்டது தலப்பாக்கட்டி பிரியாணி. அதன் தனித்த சுவையால் இன்றும் பலரை ஈர்த்து கொண்டிருக்கிறது. ராமாபுரத்தை ஒட்டி இருக்கும் பல ஐடி ஊழியர்களுக்கு தலப்பாக்கட்டி தான் வீக்எண்ட் ஸ்பெஷல்.



புகாரி - ராமாபுரம் :
சென்னையில் பிரியாணிக்கு பிரபலம் என்றால் அது புகாரி தான். புகாரி பிரியாணிக்கான ரசிகர் பட்டாளம் ஏராளம். சென்னையின் பல பகுதிகளிலும் புகாரியின் கிளைகள் இருக்கின்றன.

ஐலாபுரம் பிரியாணி - போரூர் :
போரூர் கோபால கிருஷ்ணா திரையரங்கத்துக்கு அருகே இருக்கிறது . சிக்கன் பிரியாணி 170 ரூபாய்க்கும், சிக்கன் பாட் பிரியாணி 230 ரூபாய்க்கும் கிடைக்கிறது. மட்டன் பிரியாணி 260 ரூபாய்க்கும் கிடைக்கிறது. காரசாரமான ஆந்திரா சுவைக்கு ஐலாபுரம் பிரியாணியை நாடலாம்.

வங்கிகளோடு மோதும் அரசு ஊழியர்கள்!  - 60 ஆயிரம் கோடி சம்பளப் பணம்


மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கான சம்பளப் பணம் இன்று மாலை முதல் வழங்கப்பட இருக்கிறது. 'அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன்தாரர்களுக்கு விநியோகிக்கும் அளவுக்கு வங்கிகளில் போதிய பணம் இல்லை. வங்கி ஊழியர்களோடு மோதும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்" எனக் கொந்தளிக்கின்றன அரசு ஊழியர் சங்கங்கள். 

மத்திய அரசின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம், ஒட்டுமொத்த வணிகம் முடங்கியுள்ளது. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. அதேநேரம், அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சம்பளப் பட்டுவாடா தொடங்கினால், ஒரேநாளில் நான்கு கோடிப் பேர் வரையில் வங்கி ஏ.டி.எம்களை முற்றுகையிடுவார்கள். இதனால் தேவையற்ற சம்பவங்கள் நிகழலாம்' என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வந்தனர். இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் 'சி' பிரிவுஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பணம் அளிக்கப்பட்டது.

தமிழக அரசின் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு மூன்றாயிரம் ரூபாய் பணத்தை ரொக்கமாக அளித்தனர். இதனால் அரசின் இதர பிரிவு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் கடை நிலை ஊழியர்கள் அனைவரும் மளிகை, பால், அன்றாட செலவுகள் என அனைத்துக்கும் சம்பளத்தை மட்டுமே நம்பியுள்ளனர். நாளை காலை முதல் வங்கிகளின் பண விநியோகம் சீராக இல்லாவிட்டால், மிகப் பெரும் மோதல் வெடிக்கக் கூடிய அபாயம் உள்ளதாகவும் வங்கி ஊழியர்கள் அச்சப்படுகின்றனர். 

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் (தமிழ்நாடு) சி.பி.கிருஷ்ணனிடம் பேசினோம். “நாளை காலை முதல் சம்பளப் பணத்தை எடுப்பதற்காக அரசு ஊழியர்கள் வங்கிக்குப் படையெடுப்பார்கள். மத்திய அரசில் பணியாற்றும் 33 லட்சம் ஊழியர்களின் மொத்த சம்பளம் 15,500 கோடி ரூபாய். இதில் 14 லட்சம் பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளனர்.

மத்திய அரசிடம் பென்சன் பெறுபவர்கள் 52 லட்சம் பேர் உள்ளனர். அதேநேரம், மாநில அரசில் பென்சன் பெறுபவர்கள் கிட்டத்தட்ட 1 கோடிப் பேர் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 80 லட்சம் பேர். தவிர, மாநில அரசில் பென்சன் பெறுபவர்கள் மட்டும் 70 லட்சம் பேர். ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால், இரண்டரை கோடிப் பேர் வருகின்றனர். இதுதவிர, தனியார் நிறுவனங்களில் பணிபுரியக் கூடியவர்கள் இரண்டு கோடிப் பேர் உள்ளனர். இன்றிலிருந்து மூன்று நாட்கள் சம்பளப் பட்டுவாடா நடக்கும்.

மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன்தாரர்களுக்கு மட்டும் 60 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இவர்களுடைய கணக்கில் சம்பளமாகவோ பென்சனாகவோ நாளை காலைக்குள் பணம் போடப்பட்டுவிடும். இந்தப் பணத்தில் முதல் மூன்று நாட்களுக்குள் 25 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்துவிடுவார்கள்.

அதற்கேற்ப ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.  பண விநியோகம் பாதிக்கப்பட்டால், அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும். எனவே, தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு கூடுதலான 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஆர்.பி.ஐ வழங்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், வங்கி ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையில் மோதலாக மாறக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது” என்கிறார் ஆதங்கத்தோடு. 

“ஊழியர்களின் சம்பளத்தை ரொக்கமாக கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்டங்களை நடத்தினோம். குறிப்பாக, நிலைமை சீரடைவதற்கு 50 நாட்கள் ஆகும் என பிரதமர் சொல்கிறார். எனவே, இரண்டு மாத சம்பளத்தை ரொக்கமாகக் கொடுத்துவிடுங்கள் என்றோம். மத்திய அரசின் 'சி' பிரிவு ஊழியர்களுக்கு மட்டும் ரொக்கமாக பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். 'டி' பிரிவு ஊழியர்களுக்கு அப்படி எதுவும் கொடுக்கவில்லை. வாடகை வீட்டில் வசிப்பவர்கள் செக் கொடுத்தால், வீட்டின் உரிமையாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாடு முழுவதும் உள்ள 10 கோடி கடைகளில் கார்டு பயன்படுத்தும் வசதி 2 சதவீத கடைகளில்கூட இல்லை.

காய்கறி, பால் என வீட்டிற்குத் தேவையான பொருட்களை ரொக்கம் கொடுத்துத்தான் வாங்க முடியும். நாளை முதல் அரசு அலுவலை விட்டுவிட்டு வங்கிகளுக்குச் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலை அரசு உருவாக்கிவிட்டது. ரொக்கமாக பணத்தைக் கொடுத்தால், பணச் சுழற்சிக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும். ஏ.டி.எம்களில் இரண்டாயிரம் ரூபாயை எடுத்தாலும், அதை சில்லறையாக மாற்றுவது அவ்வளவு எளிதானதல்ல. நாளை முதல் ஏற்படப் போகும் அசாதாரண சூழலுக்கு ஏற்ப எந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் அரசு செய்யவில்லை” என வெடிக்கிறார் மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன். 

தமிழக அரசில் 14 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளையும் அரசு செய்யவில்லை. வங்கிகளில் போடப்பட்ட சம்பளப் பணத்தைக் கையில் எடுப்பது எப்படி என்ற விவாதமே அரசு அலுவலகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

Singapore students top in maths and science

Amelia Teng
The Straits Times
30 November 2016

Students here have been ranked the world's best in mathematics and science by a key global study.

The Trends in International Mathematics and Science Study (TIMSS) also showed improvements by Singapore students in reasoning and applied learning, and progress made by weaker students.

The results, said the Education Ministry, show that moves to trim syllabuses in 1998 and 2003, and give more time to higher-order thinking skills are paying off. Programmes that cater to students' different learning needs are also bearing fruit, it said.

This is the second time that students here outdid those from all other countries across all four categories in TIMSS, which takes place every four years. The last time this happened was in 2003.

The latest test was conducted here in 2014.

A total of 12,600 Primary 4 and Secondary 2 students across all 179 primary schools and 167 secondary schools, and academic streams, were included in the sample. They were among over 582,000 students from 64 education systems tested.

Primary 4 pupils here had the highest mean score of 618 in maths, with those in Hong Kong coming in second with a score of 615. The same pupils also attained the best score of 590 in science, beating those in South Korea, which had 589.

Sec 2 students who sat the test were also ranked first with top scores of 621 and 597 for mathematics and science respectively, beating students in South Korea and Japan which came in second.

The proportion of students with the lowest score of below 400 was also much smaller than the international average. Just 1 per cent of Singapore students scored below 400 for Primary 4 maths, for instance. The global average was 7 per cent.

The test was administered by the International Association for the Evaluation of Educational Achievement, a non-profit research cooperative based in Amsterdam.

A further analysis of the scores showed that Singapore students are getting better in tackling non-routine questions and those requiring them to apply knowledge. For instance, Sec 2 students scored 616 in reasoning for maths, up from 589 scored by the 2007 batch.

Educators attributed these improvements to schools focusing more on inquiry-based teaching and learning over the last decade.

Dr Ridzuan Abd Rahim, a lead curriculum specialist in maths, said: "Today, you'll see in our maths classroom children talking and reasoning a lot more. They are asked to explain their statements and conclusions.

"When students speak up more, teachers can also see what level of understanding they are at."

Dr Chin Tan Ying, a lead curriculum specialist in science, noted that there has been a gradual shift towards encouraging students to "ask questions, collect evidence, explain things".

"This allows students to play a very active role in the learning process," she said, adding that there is also less need to memorise facts.

"Some of these facts can even be presented in exam questions, just like how you can Google for information these days... So, instead, we encourage students to think deeper based on the information given."

ரகசியத்தால் வந்த வெற்றி!

By எஸ். ராமன்  |   Published on : 30th November 2016 01:15 AM
நவம்பர் 8, 2016-ஆம் நாளுக்கு இந்திய பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கிய இடம் உண்டு. 8-ஆம் தேதி, இரவு எட்டு மணிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்ற பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு, பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது. உலக நாணய விலக்கு வரலாற்றில் இது ஒரு பெரும் நிகழ்வு என பொருளாதார வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கத்தை கட்டுப்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத்தான், அறிவிப்பில் கடைசிவரை ரகசியம் காக்கப்பட்டது.
செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை, குறிப்பிட்ட காலத்திற்குள், 4,000 ரூபாய் வரை, வங்கிகளில் உடனடியாக மாற்றிக் கொள்ளலாம் மீதி தொகையை, டிசம்பர் 31-க்குள் வங்கி கணக்குகளில் செலுத்தலாம் என்ற திட்டத்தில் அடங்கிய சலுகையை உற்று நோக்கினால், சாதாரண குடிமகனை பொருளாதார இழப்புகளுக்கு உட்படுத்தக்கூடாது என்ற அரசாங்கத்தின் நுண்ணிய நோக்கம் புரியும்.
எதிரி எதிர்பார்க்காத தருணத்தில், தொடுக்கப்படும் திடீர் தாக்குதல்கள்தான், வெற்றிக்கு வழிகாட்டும் சிறந்த போர் தந்திரமாகும். அந்த போர் தந்திரம்தான் உயர்மதிப்பு நோட்டு விலக்கு அறிவிப்பில் பின்பற்றப்பட்டிருக்கிறது.
எனவே, முன் எச்சரிக்கை இன்றி வெளியான திட்ட அறிவிப்பு தவறானது என்ற வாதம் ஏற்க கூடியது அல்ல. முன் அறிவிப்புகள், திட்டத்தின் முக்கிய நோக்கத்தை முற்றிலும் முறியடித்திருக்கும் என்பதுதான் உண்மை நிலவரம்.
அதிக மதிப்புள்ள நாணயங்களை புழக்கத்திலிருந்து நீக்குவது ஒன்றும் நம் நாட்டிற்கு புதிதல்ல. இந்திய சுதந்திரத்திற்கு முன்னால், 1946-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், புழக்கத்திலிருந்த 1000, 5000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதே மதிப்பு நோட்டுகள், 1954-ஆம் ஆண்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன.
1978-ஆம் ஆண்டு, கருப்பு பண பதுக்கலை கட்டுப்படுத்த, இந்திய அரசாங்கம், 1000, 5000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து விலக்கியது. அந்த சமயத்தில், மொத்த பணப் புழக்கத்தில் அந்த நோட்டுகள் 1.4 சதவீதம் வரைதான் அங்கம் வகித்தன.
அந்த காலக்கட்டத்தில், ஒரு 1000 ரூபாய் நோட்டு, மும்பையின் முக்கிய பகுதியில் 5 சதுர அடி நிலத்தையோ, சென்னை புறநகர் பகுதியில் 600 சதுரஅடி நிலத்தையோ வாங்கும் அளவுக்கு மதிப்பு உடையதாக திகழ்ந்தது. எனவே, அந்த உயர் மதிப்புள்ள நோட்டுகளின் விலக்கலின் தாக்கம், அந்த தருணத்தில் சாதாரண மக்களால் அதிகம் உணரப்படவில்லை.
1978-ஆம் ஆண்டு நிகழ்வின்போது, ரிசர்வ் வங்கியின் கவர்னர், அரசின் கொள்கை முடிவை "இது அரசியல் எதிரிகளை முடக்க இயற்றப்பட்ட திட்டம் போல் தெரிகிறது' என்று வெளிப்படையாக விமர்சித்தார். ஆனால், தற்சமயம், ரிசர்வ் வங்கி, அரசின் கொள்கை முடிவில் முழுவதும் ஒத்துப்போயிருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
புழக்கத்தில் இருக்கும் நாணய விலக்கல் முறை (Demonetization of currency) வெவ்வேறு தருணங்களில் பல நாட்டு அரசாங்களால் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக பின்பற்றப்பட்டு வந்திருப்பதை சர்வதேச நாணய வரலாற்றை புரட்டுவதன் மூலம் அறியலாம்.
1969-இல் 10,000 மற்றும் 1,000 டாலர் நோட்டுகள், கருப்புப் பண புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்க அரசால் விலக்கப்பட்டது. திட்டத்தின் வெற்றியால், விலக்கப்பட்ட அதிக மதிப்பு நோட்டுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படவில்லை.
1982-இல், ஆப்பிரிக்க நாடான கானா, வரி ஏய்ப்பையும், கள்ளப் பணத்தையும் கட்டுப்படுத்த, உயர்மதிப்பு நாணயத்தை புழக்கத்திலிருந்து விலக்கியது. திட்டத்தின் தொலைநோக்கு நலன்களை மக்கள் புரிந்துகொள்ளாததால், அந்த திட்டத்தின் நோக்கம் தோல்வியை தழுவியது.
1984-இல், நைஜீரிய அரசு புழக்கத்திலிருந்த பழைய நோட்டுகளுக்கு தடை விதித்து, புதிய நோட்டுகளை அறிமுகம் செய்தது. ஏற்கெனவே அயல் நாட்டு கடன்களிலும், பணவீக்கத்திலும் மிதந்து கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரம், அந்த அதிர்ச்சியை உள்ளிழுக்க முடியாமல் பலவீனம் அடைந்தது. திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய தருணம் சரியாக கணிக்கப்படாதது, திட்ட நோக்கு தோல்விக்கு காரணமாக அமைந்தது.
1996-இல் ஆஸ்திரேலிய அரசு, புழக்கத்தில் இருந்த அனைத்து காகித நாணயங்களையும் விலக்கி, கள்ளத்தனமாக அச்சடிக்க முடியாத பிளாஸ்டிக் நோட்டுகளை (counterfeit-resistant polymer plastic bank notes)   அறிமுகப்படுத்தியது, மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னோடியாக திகழ்கிறது.
2002-இல், ஐரோப்பிய கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் தனி நாணயங்கள் புழக்கத்திலிருந்து விலக்கப்பட்டு, அனைவருக்கும் பொதுவான யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1999 லிருந்து 2002 வரை இந்த நடவடிக்கைகள் பல கட்டங்களில் நிகழ்ந்து முழுமை பெற்றன.
ஐரோப்பியக் கூட்டமைப்பு உருவான பல வருடங்களுக்கு பிறகுதான், பொது நாணயமுறை அமல்படுத்தப்பட்டது.
2010-இல் வடகொரிய அரசு, கள்ளச் சந்தையின் தாக்கத்தை குறைக்க புழக்கத்திலிருந்த நாணயங்களின் மதிப்பிலிருந்து கடைசி இரண்டு பூஜ்யங்களை அதிரடியாக நீக்கி, நாணயங்களின் மதிப்பைக் குறைத்தது.
சாதாரண குடிமகன்களின் நலனை மனதில் கொள்ளாமல் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டதால், அந்நாட்டு நடுத்தர வர்க்கத்தை இத் திட்டம் பெருமளவில் பாதித்தது.
திட்டங்களின் நோக்கம் எவ்வளவு வலுவாக இருந்தாலும், அவற்றை அமல்படுத்தும் நடைமுறைகளும் மக்களிடையே குழப்பம் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை முந்தைய பொருளாதார வரலாறுகளிலிருந்து அறியலாம்.
4,000 ரூபாய் வரை, பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்ற அறிவிப்பிற்கு பிறகு, ஏராளமான மக்கள் தங்கள் அடையாள ஆவணங்களின் நகல்களை வங்கிகளில் கொடுத்து, நோட்டுகளை மாற்றினர்.
ஒருவரே, பலமுறை மாற்றுவதை தடுக்க, மாற்றியவர்களின் விவரங்களை வங்கி பதிவேடுகளில்(computer system)   பதிய வேண்டியது அவசியம். ஆனால், வங்கிகளால் அம்மாதிரி நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதுவே, பல முறைகேடுகளுக்கு வித்திட்டது. இதற்கு பிறகுதான் மை இடும் யோசனை அரசுக்கு வந்தது.
மை தீட்டும் திட்டத்திற்கு பிறகு, வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற காத்திருந்த பெரும் கூட்டம் குறைந்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது. இம்மாதிரி நுண்ணிய விவரங்கள் அதிகார வர்க்கத்தினால் முன்கூட்டியே கணிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.
அறிவிப்புக்கு முன்பு, புழக்கத்தில் இருந்த நாணயங்களில், 500, 1000 ரூபாய் நோட்டுகள் 86 சதவீதம் பங்கு வகித்தன. அவை முற்றும் அகற்றப்பட்ட நிலையில், அதிக மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் முதலில் புழக்கத்திற்கு விடப்பட்டன.
அதற்கு பதிலாக, புதிய 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டிருந்தால், தற்போது நிலவும் குழப்பங்களை ஓரளவு குறைத்திருக்கலாம். 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுக்கு நடுவில் பெரும் இடைவெளி நிலவுவதால், அந்த இடைவெளியை நிரப்ப புதிய 200 ரூபாய் நோட்டுகளையும் அறிமுகப்படுத்தி இருக்கலாம். ஏனோ அறிமுகப்படுத்தவில்லை. பரவாயில்லை, இனியாவது அறிமுகப்படுத்த வேண்டும்.
ஏ.டி.எம். மெஷின்களின் மூலம் பணம் பெறமுடியாததற்கு ஒரு காரணம் அவற்றை புதிய நோட்டுகளின் வடிவமைப்புக்கு ஏற்றபடி, சீரமைப்பு செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும், தற்போதைய முறைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு வாடிக்கையாளர் கணக்கிலிருந்தும் எடுக்கப்படும் தொகைக்கான அளவு மாற்றி அமைக்கப்படவேண்டும்.
ஏ.டி.எம்.களின் சீரமைப்புக்குத் தேவையான சில உதிரி பாகங்கள் சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் கசிந்துள்ளது. பிரதமரின் "மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், மற்ற நாடுகளைச் சாராமல், சிறிய உதிரி பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்க முற்பட்டால், இம்மாதிரி முக்கிய தருணங்களில் கால தாமதம் ஏற்படாது அல்லவா?
அதை தவிர, வங்கிகளில் போதிய பண இருப்பு இல்லாதது, வாடிக்கையாளர் பணம் பெற முடியாததற்கு மற்றொரு முக்கிய காரணமாகும்.
நாடு சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த கடினமான தருணத்தில், வங்கி ஊழியர்களின் அயராத சேவை அனைவராலும் போற்றப்பட வேண்டியதாகும். அதேசமயத்தில், பணம் மாற்றுவதில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், பிரதமரின் விருப்பத் திட்டமான "ஜன் தன்' கணக்குகளில், நவம்பர் 9-ஆம் தேதிக்கு பிறகு 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் பணம் செலுத்தப்பட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். சாமானிய மக்களின் அறியாமையையும், வறுமையையும் கருவியாக்கி இந்த கணக்குகள், கருப்பு பண மாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
இந்த கணக்குகளிலிருந்து பணத்தை திரும்ப கொடுப்பதற்கு முன்பு, அந்த பணத்தின் உண்மையான உரிமையாளர்கள் கண்டறியப்பட வேண்டும். இதற்கு ஒத்துழைத்து உதவி செய்ய முன்வரும் "ஜன் தன்' வாடிக்கையாளர்களுக்கு அரசு தகுந்த வெகுமதி திட்டத்தை அறிமுகப்படுத்தலாம்.
"இந்திரா காந்தி இந்திய மேம்பாட்டு ஆய்வக'த்தின் சமீபத்திய அறிக்கையின்படி, பணப்புழக்கக் குறைவினால் சந்தைகளில் விவசாயப் பொருள்களின் வரத்து பெருமளவில் குறைந்து வருகிறது. இதனால், விவசாய கூலி தொழிலாளிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியப் பொருளாதாரத்தில், நீண்ட காலமாக புரையோடி போயிருக்கும் கருப்புப் பண நடவடிக்கைகளை ஒடுக்க, உயர்மதிப்பு நாணய விலக்கல் திட்டம் மட்டும் போதாது. அம்மாதிரி நடவடிக்கைகளின் அடித்தள காரணங்களை ஆராய்ந்து, அவை முற்றிலும் அகற்றப்பட்டால்தான், இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறியதாக கருதமுடியும்.
பொருளாதார முன்னேற்றத்தில் ஓட்டமெடுக்க ஆரம்பித்திருக்கும் தருணத்தில், நாட்டின் பல்வேறு துறைகளை தாற்காலிகமாக முடக்க வல்ல நாணய விலக்கு திட்டம், ஓடும் வண்டியின் சக்கரத்தில் சுடுவதுபோல் ஆகும். பஞ்சர் ஆன சக்கரத்தை தாமதமின்றி செப்பனிட்டு, வண்டியை மீண்டும் ஓட வைக்கும் முயற்சியில், அரசு ஈடுபட வேண்டும்.
கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).

Madras university circular irks section of profs

CHENNAI: The registrar of Madras University has issued a circular instructing all heads of departments and faculties to get prior approval from him for conducting any seminar, conference, workshop or any other programme on the university premises.

The circular, dated November 23, has not gone down well among a section of professors, who say that this is a move to curb their academic freedom, which is unwarranted as a university should be open for public debate and exchange of ideas.

"The circular states that this is an instruction by the authorities. As far as the university is concerned, the authorities are the syndicate, senate and academic council. But no such resolution has been passed in these bodies. This circular is illegal," said G Ravindran, general secretary of Madras University Teachers Association (MUTA) and head of the journalism department. Observers say that the decision was prompted by two specific incidents. Last week, around 30 students of the journalism department had conducted a programme protesting against the new education policy of the Centre using traditional music instruments. Some professors reportedly complained to the registrar that the drumbeats had disturbed their classes.

Secondly, a conference hosted by the university around two weeks ago had invited foreign experts without the necessary clearances from central intelligence agencies. Sources indicated that higher-ups in the education department were questioned by the Central government regarding the event. The circular was issued to avoid a repeat of such an incident, the sources added. Another professor recalled the delay in getting permission for a seminar in the aftermath of the Rohit Vemula suicide last year and said that such a circular would allow the authorities to curb voices of dissent in the university.

The registrar David Jawahar told TOI that there was no specific reason for the circular. "We need to make sure that in case of any political event, we get police protection if there is any agitation. In case of certain functions, there is a protocol involved where the governor has to be invited," he said.

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...