Monday, December 19, 2016

527 Days In Hospital To Evade Arrest: SC Holds Doctors Guilty Of Contempt

Hospitals and doctors who give shelter to criminals to escape from arrests will now have to think twice as they can also be held guilty of contempt of court.

 The Supreme Court, in Sita Ram vs. Balbir, has held two medical professionals guilty of contempt for granting medical asylum to an accused, without there being any reason or medical condition justifying his prolonged admission as an indoor patient. However, the court has not yet imposed any punishment on them and has granted them one more opportunity to present their view on the issue. It was revealed in the inquiry that the accused remained admitted in the hospital for 527 days and no laboratory test was conducted during the period of admission. 

“It is inconceivable that in normal circumstances, a man, who has no ailment or a medical condition requiring emergency treatment, would be kept as indoor patient without any laboratory test and without recovering a single paisa for more than 247 days,” the bench headed by the Chief Justice of India observed. The court also considered the question whether a person, who is not bound by a direction issued by the court, could be held guilty for committing contempt of court for his conduct in either directly aiding and abetting violation on part of the person who is bound by such direction. Referring to three English decisions, Seaward v. Paterson, Attorney General v. Times Newspapers Ltd. and another, and Z Ltd. v, the court held that the doctors were guilty for having helped the accused in his attempts to violate the court order and, thereby, obstructing the administration of justice. 

“We have found that the continued admission for such a long period as indoor patient was not justifiable for any reason or medical condition of the respondent. Both these medical professionals are responsible for such prolonged admission, which was actuated by only one reason -which was to extend medical asylum to the respondent as a cover to defeat the orders passed by this court and the trial court,” the court said while directing the doctors to be present in the court on 2nd January.

Read more at: http://www.livelaw.in/527-days-hospital-evade-arrest-sc-holds-doctors-guilty-contempt/

Saturday, December 17, 2016


தரமற்ற உணவகங்கள்

By எஸ். ரவீந்திரன் | Published on : 17th December 2016 01:23 AM | அ+அ அ- |

வாரம் ஒருமுறை குடும்பத்தோடு நல்ல உணவகத்துக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதில் கமகமக்கும் வாசனை, மூக்கைத் துளைக்க வைக்கும் அசைவ உணவகத்தைத் தேடி செல்பவர்கள் பலர். செல்லிடப்பேசி அல்லது குறுஞ்செய்தியை அனுப்பினால் போதும். அடுத்த நிமிடம் உங்கள் வீட்டுக்கே வந்து சுவையான உணவை தர உணவகங்கள் தயார்.
இவர்கள் இயந்திரத்தனமான வாழ்க்கையில் சுழல்வதை காசாக்கிப் பார்க்கிறார்கள். எனவே நம்பிக்கையுடன் அங்கு சென்று விதவிதமாக ருசித்துப் பார்த்து கேட்ட தொகையையும் கொடுத்துவிட்டு வருபவர்களுக்கு அண்மையில் இடிபோல வந்திறங்கியிருக்கிறது ஒரு செய்தி. அது, தரமான அசைவ உணவகங்களில் இறைச்சிகளில் கலப்படம் என்பதுதான்.
மனிதர்களுக்கு முதலில் நம்பிக்கை தேவை. ஆனால் நம்பிக்கை மோசடி செய்து ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சியில் கலப்படம் செய்து இப்படி ஒரு பிழைப்பை நடத்துபவர்களை என்ன செய்வது?
பொதுவாக அசைவம் சாப்பிட விரும்புபவர்கள் உணவகங்களுக்குச் செல்வதை முடிந்தவரையில் தவிர்க்கலாம். ஒரு சில நல்ல உணவகங்கள் இத்தகு இழிசெயலில் இறங்குவதில்லை.
நம்மில் பலருக்கும் விசித்திர குணம் ஒன்று உண்டு. மலிவு என்று கேள்விப்பட்டால் போதும். எப்பேர்ப்பட்ட வேலையையும் விட்டுவிட்டு அங்கு சென்றுவிடுவார்கள்.
மலிவு என்றாலே அது போலி அல்லது திருட்டுத்தனம் செய்வதாகத்தான் அர்த்தம். தரமான பொருள்களின் விலை அதிகமாகத்தான் இருக்கும். அதற்காக மலிவானவற்றை வாங்குவதால் ஆரோக்கியம், செலவு என அனைத்திலுமே கேடுதான் விளையும்.
அதேபோல அசைவ உணவகங்களில் குறைந்த விலையில் உணவை தரும்போது இந்த விலைக்கு இறைச்சி வாங்க முடியுமா என நாம் யோசிக்க வேண்டும். நாய்க்கறி, பூனைக்கறி போன்றவற்றை மனது வந்து எப்படி கலக்கிறார்களோ தெரியவில்லை.
இன்றைய நிலையில் கலப்படமற்ற இறைச்சி என்றால் கோழியைக் கூறலாம். அதுவும் உயிரோடு வாங்கும் வரைதான். இன்னும் ஒரு பொருளில் கலப்படம் செய்ய முடியாது. அது மீன் வகை எனலாம். இந்த காலத்தில் அதிலும் பழைய மீன்களை கலந்து விடுகின்றனர்.
இது தவிர பறவையினங்களில் கலப்படம், மாடு,ஆடு இறைச்சிகளில் நோய் தாக்கிய கால்நடைகள், இறக்கும் தருவாயில் உள்ளவை, இளங்கன்றுகள் என பலதரப்பட்ட இறைச்சிகளைக் கலக்கின்றனர்.
பெரும்பாலான உணவகங்களில் முந்தைய நாளில் மிஞ்சியிருக்கும் இறைச்சிகளை வினிகர் போன்ற ரசாயனங்களைக் கலந்து மறுநாளில் பயன்படுத்துகின்றனர். இவற்றை அத்தனை எளிதில் யாராலும் கண்டறிய முடியாது.
சுவையூட்டிகளில் சுகாதாரத்துறையினரால் அனுமதிக்கப்பட்டவை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை. உதாரணமாக வெள்ளி நிறத்தில் கேக், பிஸ்கெட் போன்றவற்றில் கலக்கப்படுபவை மாட்டு கொழுப்பால் தயாரிக்கப்படுபவையாகும்.
இதேபோல அடர்த்தியான குழம்பு வகைகளிலும் ரசாயனங்கள் கலக்கப்படுவதால் அது பார்த்தாலே ருசியைத் தூண்டும். இவ்விதமாக பல பொருள்கள் உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக சுகாதாரத்துறையினர் பயனுள்ள வழிகாட்டுதல்களை சம்பந்தபட்ட உணவகங்களுக்கு வழங்கியிருந்தாலும் அவை கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே இருக்கின்றன.
இது போன்ற புகார்களுக்காகவே மத்திய அரசு உணவு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி குறைந்தது ரூபாய் ஒரு லட்சமும் அதிகபட்சமாக ரூ.10 லட்சமும் அபராதம் விதிக்கப்படுகிறது. இத்தனை சட்டங்கள் இருந்தபோதிலும் அதை அலட்சியப்படுத்துவதுதான் நடந்து வருகிறது.
இதைத் தடுக்க உணவகங்களுக்கு வாங்கப்படும் இறைச்சிக்கு சுகாதார அதிகாரிகள் சீல் வைத்து தர வேண்டும். இது நடக்குமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் பாதுகாப்பு, சுகாதாரமான இறைச்சிகளை வழங்குவதற்கு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அது இல்லாதவரை கலப்படத்தை ஒழிக்க முடியாது.
மேலும் மசாலா, சுவையூட்டிகள் கலப்பதால் அது எந்த இறைச்சி என கண்டுபிடிப்பதற்கு சிரமமாக இருக்கும். எனவே முடிந்தவரை அசைவ உணவுகளை உணவகங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நம் ஆரோக்கியத்துக்கு ஏற்றது.
சரி அசைவத்துக்கு மட்டும்தான் இந்த கலப்படம் என்றால் இல்லை. ஏனெனில் சைவத்திலும் கைவரிசை காட்டுவோர் உள்ளனர். தரமில்லா மசாலா பொருள்கள். அசுத்தமான குடிநீர், இலைகளுக்குப் பதில் சுற்றுப்புறக்கேடு தரும் பிளாஸ்டிக் தாள்கள், பருப்புகளில் கலப்படம் செய்து சமைக்கப்படும் கூட்டு, சாம்பார்,குழம்பு வகைகள் என சொல்லி மாளாது.
குறிப்பாக மசாலாப் பொருள்களில்தான் அதிகமாக கலப்படம் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்வோருக்கு அதிகபட்ச சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், அவர்கள் விரைவிலேயே வெளியில் வந்து மீண்டும் தங்கள் தொழிலைத் தொடர்கின்றனர்.
பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்டுள்ள சைவ, அசைவ மசாலாக்களை பயன்படுத்தக் கூடாது. இப்படி தொடர்ச்சியாக இப்பொருள்கள் உடலில் சேர்வதால் புற்றுநோய், தோல்நோய், அஜீரணக்கோளாறு, வயிறு உபாதைகள் என ஏற்படுவதுடன் உயிருக்கே ஆபத்தை உண்டாக்குகின்றன.
எனவே கூடிய வரையில் வீடுகளில் கையினால் தயாரிக்கப்படும் மசாலா வகைகளை பயன்படுத்துவதே சிறந்தது. பழங்காலத்தில் தயாரித்த உணவுப் பக்குவத்தை இப்போது யாருமே பின்பற்றுவதில்லை. அவ்வாறு செய்வதால் குழந்தைகளுக்கு எந்தவித நோய்களும் வராமல் தடுக்கலாம்.
மிகவும் இக்கட்டான நிலை ஏற்பட்டால் தவிர மற்ற சமயங்களில் உணவகங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதுதான் ஒரே வழி. ஆகவே கலப்படம் செய்து உணவகம் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து இனி அத் தொழிலை அவர்கள் மீண்டும் நடத்த முடியாதவாறு செய்ய வேண்டும். அதுவரை கலப்படத்தைத் தவிர்க்கவே முடியாது.

மக்கள் நலன் இல்லை

By என். முருகன்  |   Published on : 17th December 2016 01:24 AM  |   அ+அ அ-   |  
murugan


இன்றைய தலையாய பிரச்னையாக நம் நாட்டில் விவாதிக்கப்படுவதும், சராசரி குடிமகனை பாதிப்பதுமான பிரச்னையாக பணத் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நள்ளிரவில், 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது. நாட்டின் மொத்த ரூபாய் நோட்டுகளில் இந்த இரண்டு வகையானவையும் சேர்ந்து 86 சதவீதம் உள்ளன.
இந்த அறிவிப்பின் முக்கிய அம்சாமாக பிரதமர் கூறியது கவனிக்கத்தக்கது.
அரசின் இந்த அதிரடி முடிவிற்கு இரண்டு காரணங்களை கூறினார் பிரதமர். ஒன்று, நாட்டின் எல்லைக்கு வெளியே கள்ள நோட்டுகளை தயாரித்து பயங்கரவாதிகள் நம் நாட்டிற்குள் ஊடுருவி இந்த கள்ள நோட்டுகளை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உபயோகிப்பது. இரண்டாவது, கருப்புப் பணத்தையும், ஊழலையும் இந்த இரண்டு வகை ரூபாய் நோட்டுகள் நிலைப்படுத்துவது.
இந்த இரண்டு காரணங்களும் சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. நம் நாட்டின் தலைசிறந்த பொருளாதார நிபுணரான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்துப்படி, "எல்லா கருப்புப் பணமும் ரொக்கப் பணமாக உள்ளது என்பதும் எல்லா ரொக்கப் பணமும் கருப்புப் பணம் என்பதும் தவறான அனுமானங்கள்.'
இது எப்படி என ஆராய்ந்தால், நம் நாட்டின் 90 சதவீத ஊழியர்கள் தங்கள் ஊதியத்தை ரொக்கமாகவே பெறுகிறார்கள். இவர்களில் பல கோடி பேர் விவசாயத் தொழிலாளிகள், கட்டட வேலை செய்பவர்கள், பல வீடுகளிலும், உணவு விடுதிகளிலும் தினக்கூலி பெறுபவர்கள். நம் நாட்டில் வங்கிகள் பல கிராமங்களுக்குப் பரவிவிட்டபோதிலும், இன்னமும் சுமார் 60 கோடி இந்தியர்கள் வசிக்கும் கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் வங்கிக் கிளைகளே கிடையாது.
அப்படியே வங்கிக் கிளைகள் உள்ள பல இடங்களில் வசிக்கும் தொழிலாளிகளுக்கு வங்கியை உபயோகித்து பணத்தை சேமிக்கவும், அன்றாட தேவைகளுக்கு பணத்தை எடுத்துக் கொள்ளும் பழக்கமும் கிடையாது.
தங்கள் தின வாழ்க்கைக்கு ரொக்கப் பணத்தை செலவிடுவதும், தங்கள் சேமிப்பை அதிக மதிப்புள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக வீட்டில் பத்திரமாக பூட்டி வைத்துக்கொள்ளும் பழக்கமும் பெருவாரியான நமது மக்களுக்கு உண்டு. இந்த பழக்க வழக்கங்களை மறந்துவிட்டு இவர்களது வாழ்க்கையை துயரத்திற்கு தூக்கியடிக்கும் தரமற்ற செயல்தான் இந்த செல்லாத நோட்டு அறிவிப்பு என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சமூகவியல் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் சஞ்சய் ரெட்டி என்பவரின் கருத்தும் இதுதான்.
அவர் கூறுகிறார்: "இந்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டுக்கான திடீர் அறிவிப்பு தவறான ஒன்று. அதன் பின்னணியில் எந்தவிதமான பொருளாதாரக் கோட்பாடும் கிடையாது. ஊழல் மற்றும் கருப்புப் பணத்தை சரியான நடவடிக்கைகளை எடுத்து ஒழிக்க முடியாத ஒரு அரசின் அவசரத்தனத்தை இந்த செல்லாத நோட்டுகளுக்கான அறிவிப்பு பறைசாற்றுகிறது.'
பொதுமக்களில் நிறைய பேர் மிகுந்த நல்லெண்ணத்துடன் தங்கள் சேமிப்புப் பணத்தை ரொக்கமாக சேர்த்து வைக்கிறார்கள். இதில் நடுத்தர வர்க்கத்தினரும், சாதாரண தொழிலாளர்களும் அடக்கம். அவர்களது பணம் செல்லாக் காசாகிவிட்ட காரணத்தால் அவர்களது நடவடிக்கைகள் பல ஸ்தம்பித்துப்போய், பின் இது நாட்டின் பொருளாதாரத்தையே பாதித்து விடும் எனக் கூறிகிறார் சஞ்சய் ரெட்டி.
புதுதில்லியின் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை ஆணையத்தின் பேராசிரியர் கோவிந்த ராவ் ஒரு முதிர்ந்த பொருளாதார நிபுணர். அவரது கருத்துப்படி, நம் நாட்டின் மொத்த ரொக்கப் பணத்தில் 86 சதவீதம் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளே. இவற்றை செல்லாது என்று அறிவித்தபின் நமது பொருளாதாரம் தலைகுப்புற கவிழ்ந்து போனது.
நாட்டின் 96 சதவீத செலவினங்கள் ரொக்கப் பணத்தில்தான் நடைபெறுகின்றன என்பதால் இந்த "செல்லா நோட்டு அறிவிப்பு' எப்படிப்பட்ட சமூக குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது என்பது புரிந்திருக்கும். இது தெரியாதவர்கள்தான் நம்மை ஆளும் பொறுப்பில் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
கருப்புப் பணத்தை ஒழிப்பது, பயங்கரவாதிகளுக்கு பணம் வருவதை தடுப்பது, கள்ள நோட்டுகளைத் தடுப்பது ஆகியவை உடனடியாக செய்யப்பட வேண்டிய வேலைகள் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால், இவற்றை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளினால் மக்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவார்கள் என்பதும், நம் நாட்டின் வங்கிகள் இவற்றை உடனடியாக சரி செய்யும் திறமை கொண்டவையாக உள்ளனவா என்பதும் சரியாக கணிக்கப்பட்டுள்ளனவா எனக் கேட்கிறார் கோவிந்த ராவ்.
கருப்புப் பணம் உருவாக அடிப்படைக் காரணங்கள் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள், தேர்தல் செலவுகள், நிலம் மற்றும் கட்டுமான வணிகங்கள், வரி ஏய்ப்புகள் மற்றும் அரசு ஊழியர்களின் லஞ்ச நடவடிக்கைகளே.
இதனால் உருவாகும் கருப்புப் பணம் ரொக்கமாக வைத்துக் கொள்ளப்படுவதில்லை. வெளிநாடுகளில் தேக்கி வைப்பதும், நிலங்களாகவும் பல கட்டடங்களாகவும், தங்க - வைர நகைகளாகவும் அவை பதுக்கி வைக்கப்படுகின்றன என்பதும் எல்லோருக்கும் தெரிந்த பகிரங்க உண்மைகள். ஆக, கருப்புப் பணத்தை ஒழிக்க ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக அறிவிப்பது சரியல்ல என்கிறார் ராவ்.
இதுபோன்ற கருத்துகளை பல பொருளாதார நிபுணர்கள் எடுத்துக்கூறும் வேளையில், இவற்றிற்கெல்லாம் மேலாக இந்த நடவடிக்கை கருப்புப் பண வளர்ச்சியை நம் நாட்டில் மேலும் அதிகரிக்கும் எனக் கூறுகிறார் மெய்த்ரீஷ் ஃகாதக் எனும் லண்டன் நகரத்து பொருளாதார பேராசிரியர். அவர் இந்திய பொருளாதாரத்தை கூர்ந்து கவனிப்பவர்.
நம் நாட்டின் கருப்புப் பணத்தில் 5 அல்லது 6 சதவீதமே ரொக்கப் பணமாக உள்ளது. நமது பிரதமரின் செல்லா நோட்டு அறிவிப்பால் இந்தப் பணம் முழுவதையும் கைப்பறறிய பின்னரும் பெரிய நன்மைகள் விளையாது. காரணம், இனிவரும் காலங்களில் கருப்புப் பணத்தை பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளையும்விட, புதிய 2000 ரூபாய் நோட்டுகளில் அதிக அளவில் சேமித்து வைக்க முடியும் என்கிறார் ஃகாதக்.
அரசியல் விருப்பு வெறுப்பு இல்லாத பல பொருளாதார ஆய்வாளர்கள் அரசின் இந்த நடவடிக்கை தவறு என சுட்டிக்காட்டியுள்ள நிலையிலும் பல அரசியல் கட்சிகளும் இதை அரசியல் பிரச்னையாக கையிலெடுத்து வாதம் செய்து வருகின்றன.
எனவேதான், இந்த நடவடிக்கை சரியான ஒன்று என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் இன்றைய நிலைமையில் தேசிய வியாபார குறியீடுகள் மிகவும் தாழ்ந்த நிலைக்கு சென்றுவிட்டன. தொழிற்சாலைகளின் உற்பத்திகளும் குறைந்து, வேலைவாய்ப்புகள் உருவாகும் நிலைமையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார உற்பத்திக்கும் மக்களின் கையில் உள்ள ரொக்கப் பணத்திற்கும் உள்ள விகிதம் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதற்குக் காரணம் நமது சமூகக் கட்டமைப்புதான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நமது பொருளாதாரம் மக்களின் கையிலுள்ள ரொக்கப் பணத்தை உபயோகித்துதான் வளர முடியும். மக்கள் தங்கள் வாங்கும் சக்தியை இழந்தால், நமது பொருளாதாரம் கீழ்நோக்கி வீழ்ச்சி அடையும். இது தற்போது நிரூபணம் ஆகிவருகிறது.
கருப்புப் பணத்தை ஒழிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிடவும் அதிக முக்கியம் நல்ல நாணயமான பல குடிமக்களின் தரமான வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு நாம் ஒரு திடீர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என பல தலைவர்கள் எண்ணுகிறார்கள்.
பழைய 500 ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்துவிட்டு,புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வழங்குவோம் என அரசு சொன்னபின்னர், டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி கணக்கீட்டின் படி வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டது ரூபாய் 11 லட்சத்து 50 ஆயிரம் கோடி.
ஆனால், ரிசர்வ் வங்கி வெளியிட முடிந்த புதிய நோட்டுகள் ரூபாய் 5 லட்சத்து 28 ஆயிரம் கோடியே. இது பணப் புழக்கத்தை சரிபாதிக்கு கீழே கொண்டு சென்றதனால் மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தை பாதித்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை.
ஆக மொத்தத்தில், இந்த நடவடிக்கையை நல்ல நோக்கத்தில் செய்திருந்தாலும், அது சரியாக நடந்தேற முடியாத சூழலில் அதை திரும்பப் பெறும் பல மாற்று நடவடிக்கைகளை எடுத்திருந்தால், ஜனநாயகத்தின் அடிப்படை தத்துவமான "மக்கள் நலன்' காக்க எந்த நடவடிக்கைக்கும் தயார் என்ற நல்ல பெயர் இந்த ஆட்சிக்குக் கிடைத்திருக்கும் என நம்மில் பலர் எண்ணுவது சரியே!

கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

இதுவரை கைப்பற்றப்பட்ட கருப்புப் பணம் எவ்வளவு? இளகிய மனம் படைத்தோர் படிக்க வேண்டாம்

By IANS  |   Published on : 17th December 2016 11:04 AM  |  

புது தில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் 586 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.2,900 கோடி கருப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.140 கோடிக்கும் அதிகமான புதிய ரூபாய் நோட்டுகளைக் கைப்பற்றியதாக வருமான வரித் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, ஆங்காங்கே கருப்புப் பணத்தை மாற்றும் நடவடிக்கைகள் ரகசியமாக நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்தது.

இதைத் தவிர்க்க பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தபோதிலும், வங்கி அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடுகள் தொடர்ந்து அரங்கேறி வருவதாகத் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில், சந்தேகத்துக்குரிய நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதுவரை 586 இடங்களில் அவர்கள் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது. அதில் ரூ.300 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகளும், ரூ.2,600 கோடி கணக்கில் வராத பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கணக்கில் வராத பணத்தில் பெரும்பாலானவை புதிய ரூ.2,000 நோட்டுகளாக இருந்தன. ஒரே சோதனையில் அதிகபட்சமாகக் கைப்பற்றப்பட்டது சென்னையில் தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடத்தில் இருந்துதான் என்று வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அங்கு மட்டும் ரூ.140 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் ரூ.52 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதைத் தவிர தில்லியில் உள்ள வழக்குரைஞர் ஒருவரது வீட்டில் ரூ.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், மகாராஷ்டிரத்தில் உள்ள வங்கி அதிகாரிகள் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. உரிய ஆதாரங்களின்றி வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தையும் பறிமுதல் செய்ததாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எய்ம்ஸ்: ஆதார் எண் தெரிவிக்கும் நோயாளிகளுக்கு பதிவு கட்டணம் கிடையாது

By புதுதில்லி  |   Published on : 17th December 2016 07:34 AM  | 
"தில்லி எய்ம்ஸ்மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோர், ஆதார் எண் தெரிவித்தால் அவர்களின் பதிவு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை; அவ்வாறு தெரிவிக்காத பட்சத்தில் ரூ.100 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்' என்ற புதிய நடைமுறை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமலுக்கு வரவுள்ளது.
இதுதொடர்பாக எய்மஸ் மருத்துவமனையின் கணினிமயமாக்கல் பிரிவு தலைவரும், மருத்துவருமான தீபக் அகர்வால் கூறியதாவது:
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோரிடம், தற்போது பதிவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுகாதார அடையாள எண் ஒதுக்கப்படுகிறது. இந்த நடைமுறையில், ஒரே நோயாளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாள எண்கள் ஒதுக்கப்படும் தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன. அதேவேளையில், நோயாளியின் அடையாள எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைத்தால், இந்த தவறுகள் நிகழ வாய்ப்பில்லை.
எனவே, ஆதார் எண்ணை தெரிவிக்கும் நோயாளிகளுக்கு, பதிவுக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யும் புதிய நடைமுறையை விரைவில் செயல்படுத்தவுள்ளோம்.  அவ்வாறு தெரிவிக்காத பட்சத்தில் ரூ.100 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இந்த புதிய நடைமுறையை, அடுத்த ஆண்டு ஜனவரியில் செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பான அறிவிக்கையை வெளியிடும்படி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார் தீபக் அகர்வால்.
ப்ரீ பெய்டு அட்டைகள்
 மின்னணு பணப் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருவதை கருத்தில் கொண்டு, எய்ம்ஸில் ப்ரீ-பெய்டு அட்டையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று தீபக் அகர்வால் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "அந்த அட்டையில் பணத்தை முன்கூட்டியே டெபாசிட் செய்துவிட்டு, பின்னர் சிகிச்சை பெறலாம். சிகிச்சை நிறைவுற்ற பின், அட்டையில் பணம் மிச்சமிருந்தால் அது நோயாளியிடம் திரும்ப வழங்கப்படும்.இதேபோல, எய்ம்ஸில் பணம் செலுத்துமிடங்களில் 100 ஸ்வைப்பிங் மெஷின்கள் வைக்கப்பட உள்ளன. மேலும், மருத்துவ கல்விக் கட்டணங்களை, மாணவர்கள் இணையவழியில் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்காக எய்ம்ஸ் தலைமை கண்காணிப்பாளர் டி.கே.சர்மா தலைமையில் உயர் நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது' என்றார் தீபக் அகர்வால்.  

மார்கழி என்றதுமே நினைவில் வரும் எட்டு காட்சிகள்



மாதங்களில் அவள் மார்கழி' கண்ணதாசனால் புகழப்பட்ட மாதம் மார்கழி. விவசாய நாடான இந்தியாவில் அறுவடையைத் தொடங்கி வைக்கும் மாதம் மார்கழி. மித வெப்ப நாடான இந்தியாவில் குளிரால் போர்த்திய நாட்களை நமக்குத் தரும் மாதம் மார்கழி.

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு இருக்கிறதுதான் என்றாலும் மார்கழி என்றவுடன் நம் மனதிற்குள் சில அடையாளங்கள் சட்டென்று வந்து செல்வதே மார்கழிக்கு கூடுதல் சிறப்பைத் தருகிறது. அப்படி, மார்கழியின் அடையாளங்களாய் எதெல்லாம் நம் கண்முன் வந்து செல்லும் என மனதை கிராமத்திற்குள் ஒரு ரவுண்ட் செல்ல ரெடியா?



குளிர் தரும் பனி
மார்கழியின் முதல் அடையாளம் பனி. மாலை தொடங்கியதுமே மெல்ல ஆரம்பித்து, முன்னிரவில் ஆடை மேல் இன்னோர் ஆடை அணிய வைக்கச் செய்யும். பின் கம்பளிக்குள் ஒளியச் செய்து, ஆழ்ந்த உறக்கத்துக்குள் அனுப்பும் பனி. அதிகாலையில் புகைப் போல படரச் செய்து, சூரியன் வருகையை ஸ்பெஷலான காட்சியாக்கி விடும்.

புனல் செட் பாடல்கள்
'தாயே கருமாரி..." கோவிலில் புனல் ஸ்பீக்கரில், எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் கனவின் எந்த அடுக்கில் இருந்தாலும் உலுக்கி எழுப்பி விடும். எல்.ஆர்.ஈஸ்வரியைத் தொடர்ந்து, சீர்காழி கோவிந்தராஜன், வீரமணி உள்ளிட்டோர் தொண்டையைச் சரிசெய்தப்படி நமக்காக காத்திருப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன், மார்கழி மாதத்தில் ரெக்கார்டு போடுவதற்கு என்றே ஒருவரை நியமித்திருப்பார்கள். அவர் அதிகாலை 4 மணிக்கெல்லாம் டேப் ரெக்கார்ட்டரில் பதிவு செய்யப்பட்ட பக்தி பாடல்களை ஒலிக்கச் செய்து எல்லோரையும் எழுப்புவார். பென் ட்ரைவைச் செருவி விட்டால் நாள் கணக்கில் பாடல்கள் இசைப்பது போல அப்போது கிடையாது. ஆறு பாடல்கள் முடிந்ததும் கேசட்டைத் திருப்பி போட வேண்டும் என்பதால் அவரும் தூங்க முடியாது. அதேபோல மாலை நேரத்தில் பாடல்களைப் போடுவார். அப்போது சினிமா பாடல்களும் ஒலிச்சித்திரங்களும் இடம்பிடிக்கும்.



சிக்கு கோலமா... பூ கோலமா...
எல்.ஆர். ஈஸ்வரி 4 மணிக்கே எழுப்பி விடுவது, தெருவை அடைத்து கோலம் போடுவதற்குதான். 48 புள்ளிகள், 64 புள்ளிகள் என முதல்நாளே இரவில் திண்ணையில் சாக்பீஸில் ஒத்திகைப் பார்த்தாலும் தெருவில் புள்ளி வைத்ததும், தர்மத்தின் தலைவன் ரஜினி வீடு மாறி செல்வதைப் போல, எல்லாம் சரி எங்கு தப்பு வந்தது எனத் தெரியாமல் அரைமணி குழம்பி, பின் அதையே வேறு கோலமாக மாற்றிப் போடுவது ஒரு திறமை. அதை பக்கத்து வீட்டுக் காரப் பெண்களால் கண்டுப் பிடிக்க முடியவில்லை என்றால் அதுவே கலையாகி விடும். கோலம் போடுவதற்கு தம்பிகள், அக்கா இன்னைக்கு சிக்கு கோலமா... பூ கோலமா... என்று கேட்டுக்கொண்டே இருக்கும் தம்பிகளில் கெஞ்சல் ஓர் அழகு என்றால், சொல்றேன்... சொல்றேன் என அக்காக்கள் செய்யும் சஸ்பென்ஸ் இன்னும் பேரழகு. மார்கழியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற சிறப்பு நாட்கள் வரும்போது அதற்கு ஏற்றவாறு கோலங்களில் வித்தியாசம் காட்டி அசத்துவதும் நடக்கும்.

சாணிப் பிள்ளையார் :-
என்ன கோலம் என தம்பிகளை இழுத்தடித்தற்கு பழிவாங்கலாய், பிள்ளையார் செய்ய சாணி எடுத்து வர தம்பிகள் பிகு காட்டுவார்கள். நாளைக்கு உனக்கு பிடித்த கோலம் போடுகிறேன் எனச் சமாதானம் செய்த ஐந்து நிமிடங்களில் சாணி வந்துவிடும். கோலத்தின் நடுவில் சாணிப் பிள்ளையார் வைப்பது வழக்கம் நிறைவேறும்.

கூடுதல் அழகுக்கு பரங்கிப்பூ
கோலம் ரெடி.. நடுவில் பிள்ளையாரும் ஜம்மென்று வீற்றிருக்க... இரண்டையும் அலங்கரிக்க பரங்கிப்பூ அல்லது பூசணி பூ தேவை. மீண்டும் தம்பிகள் தயவு வேண்டும். அல்லது அந்த நேரத்தில் தம்பிகளாக மாறிவிடும் அப்பாவின் உதவியோடு பரங்கி பூ வந்து சேரும். பரங்கி பூ வை வைத்து நிமிர்ந்தால் சூரியன் சோம்பல் முறித்து பகலைத் திறப்பார்.



சுவையான பொங்கல்
கோலம் போட்டு முடிக்கும் நேரத்தில் சரியாக கோவில் மணியோசை கேட்கும், ஓடிச் சென்றால் ஊரில் சிறுவர்கள் குளிரில் நடுங்கிக்கொண்டே வெட, வெட என நிற்பார்கள். அர்ச்சகர் பொங்கல் வாளியின் மூடியைத் திறந்து, ஒரு கைப்பிடி பொங்கலை மட்டும் இலையில் வைத்திருப்பார். ஆனால் அதன் நறுமணம் நாக்கில் எச்சில் ஊற வைக்கும். பூஜை எப்போது முடியுமென காத்திருந்து சுடச் சுட பொங்கலை கையில் வாங்கியதும் சூடு தாங்காமல் இந்தக் கையில் கொஞ்ச நேரம் அந்தக் கையில் கொஞ்ச நேரம் என மாற்றி மாற்றி வைத்துக்கொண்டே வீடு வருவதற்குள் பொங்கலின் சூட்டுக்கு கைப் பழகியிருக்கும்.

பஜனைப் பாடல்கள்
முதல்நாள் இரவே பாடல் புத்தகங்களைப் படித்து பஜனைப் பாடல்களை மனப்பாடம் செய்து, அதிகாலையிலேயே எழுந்து தூங்குமூஞ்சி நண்பன் வீட்டுக்குச் சென்று அவனை எழுப்பி கோவிலுக்குச் செல்வதற்குள் தனக்கு தருவதாக சொல்லியிருந்த ஜிங்க் சாக் கருவி வேறொருவனின் கையில் இருக்கும். அவன் நமக்கு முன்பே வந்து அதைக் கைப்பற்ற்றியிருப்பான். நாளை இன்னும் சீக்கிரமே எழுந்திருக்கனும் எனும் மார்கழி பாடத்தைக் கற்று, குருநாதரின் பாடலுக்கு பின் பாடத் தயாராவோம்.



போகி
பொங்கல் பண்டிகைன்னா... அது தை மாசம் இல்லையான்னு சொல்றீங்களா.. மார்கழியின் கடைசி நாள்தான் போகி. மார்கழியின் குளிருக்கு ஏற்ற பண்டிகைதான் இது. வீட்டில் பயன்படாத பொருட்களை தீ வளர்த்து அதில் போட்டு, சுற்றி உட்கார்ந்து குளிர்காய்வது சுகமான அனுபவம்.


மார்கழியைப் போற்றுவோம்! மார்கழியைக் கொண்டாடுவோம்.

Friday, December 16, 2016

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் விலகாவிட்டால் நீதிமன்றம் செல்வேன்: டெல்லியில் சுப்பிரமணியன் சுவாமி பிரத்யேக பேட்டி

ஆர்.ஷபிமுன்னா
Return to frontpage
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பின் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினருமான அவர் இது குறித்து ‘தி இந்து’வுக்கு விரிவான பேட்டி அளித்தார்.

ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறுவது பற்றி தங்கள் கருத்து?

மர்மம் இருப்பதால் தான் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இது குறித்து ஒரு நல்ல விசாரணை நடத்தப்படும் வரை அது குறித்த பல கேள்விகள் தொடரும். சிகிச்சைக்காக 75 நாட்கள் இருந்தபோது, செவிலியர்களிடம் அவர் பேசியதாக சொல்லப்படுகிறது. இது உண்மை எனில் அவரது குரலை கட்சித் தொண்டர்களுக்காக பதிவு செய்திருக்கலாமே. அமெரிக்க மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் இருந்தபோது செய்ததுபோல், வீடியோ பதிவு கூட வெளியிட்டிருக்கலாம். இதுபோல், அங்கு நடந்த தவறுகளை விசாரித்து, அதற்கான ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு அப்பல்லோ, தமிழக போலீஸ் அதிகாரிகள் என பலதரப்பினரின் தொடர்பு உண்டு. இவர்களிடம் கிடைக்கும் ஆதாரத்தில் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன்.

ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் நிலை என்ன?

இறப்பின் காரணமாக ஜெயலலிதாவின் பெயர் வழக்கில் இருந்து நீக்கப்படாது. அதன் தீர்ப்பில் குற்றங்கள் ஏற்கப்பட்டு, தண்டனை அளிக்கப்பட்டால் அதில், ஜெயலலிதா மறைவு காரணமாக அவருக்கு மட்டும் தண்டனையை செயல்படுத்த முடியாது.

ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளுக்கு இனி யார் வாரிசு?

ஜெயலலிதாவின் குடும்பத்தார் தான் அவரது சொத்துகளுக்கு வாரிசாக முடியும்.

அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிக்க அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆதரித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

ஜனநாயக முறைப்படி கட்சி தான் ஒரு பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும். அதிமுகவினர் அனைவரும் சேர்ந்து அவரை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தால் அதை எதிர்க்க யாருக்கும் சட்டத்தில் இடம் இல்லை.

கடந்த 1999-ல் இருந்த வாஜ்பாய் அரசை கவிழ்த்த ஜெயலலிதாவை காங்கிரஸுடன் பேசி, துணை பிரதமராக்க நீங்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததாகக் கூறப்படுவது குறித்து?

இதுபோல் ஒரு முயற்சி நடைபெற வில்லை. தான் பிரதமர் பதவிக்கு குறைவாக எதையும் ஏற்கக் கூடாது என்ற எண்ணம் ஜெயலலிதாவுக்கு அதிகம் உண்டு. எனவே, அவர் துணை பிரதமர் பதவியை எப்போதும் விரும்பியதில்லை. தன்னை வாஜ்பாய் ஏமாற்றியதால் தான் அவரது ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தார். அப்போது ஜனதா, மதிமுக, பாமக உட்பட ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் அமைந்த கூட்டணியில் 30 எம்.பி.க்கள் இருந்தனர். இது பாஜக ஆட்சி அமைய பெரிய உதவியாகவும் இருந்தது. இதனால், என்னை நிதி அமைச்சராக்க வேண்டும் என வாஜ்பாயிடம் ஜெயலலிதா நிபந்தனை விதித்தார். இதை ஏற்றுக்கொண்டு ஆதரவை பெற்ற வாஜ்பாய் அதை நிறைவேற்றவில்லை. குறைந்தபட்சம் சட்டத்துறை அமைச்சராக அமர்த்த கேட்டமைக்கும் வாஜ்பாய் மறுத்தார்.

இந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த உங்கள் இருவரின் நட்பில் விரிசல் ஏற்பட காரணம்?

இந்த கேள்விக்கான பதில் எனக்கும் இன்றுவரை தெரியவில்லை. வெளியில் எங்காவது பார்த்தால் நல்ல முறையில் பேசுவார். என்னை கொடநாடு எஸ்டேட்டுக்கு காலை உணவுக்கு அழைத்தார். அப்போது அத்வானிக்காக நான் அவரிடம் பேசினேன். இதற்கு அவர்

‘பாஜகவை விட தன்னிடம் இந்து வாக்குகள் அதிகம் உள்ளன. அவருக்காக நான் எதையும் செய்யத் தேவையில்லை’ என மறுத்து விட்டார். தமிழகத்தில் அதிமுகவிடம் இந்து வாக்குகள் அதிகம் உள்ளன என்பது உண்மை தான். கொடநாட்டில் பேசியதுதான் நான் அவருடன் நடத்திய கடைசி சந்திப்பு ஆகும். ஆனால், நிச்சயமாக இதற்கு நான் அவர் மீது தொடுத்த வழக்கு காரணமாக இருக்காது. ஏனெனில். இதை அறிந்த பின் தான் அவர் என்னிடம் கூட்டணியும் வைத்தார்.

ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்த குணம் மற்றும் பிடிக்காதவை?

ஜெயலலிதா பிரமாதமான அறிவு கொண்டவர். அதிக சுயமரியாதை எதிர்பார்ப்பவர். அவருக்கு இருந்த ஞாபக சக்தி அபரீதமானது. 100 பக்கங்கள் கொண்ட கோப்பாக இருந்தாலும் பத்து நிமிடங்களில் படித்து தெளிவாகப் புரிந்து கொள்வார். நாள்தோறும் ஒரு நூல் படிக்கும் பழக்கம் கொண்டவர். பேராசை என்பது அவருக்கு இருந்தது கிடையாது. கல்லூரி, பல்கலைக்கழகம் சென்று படித்திருந்தால் அவர் ஒரு பேராசிரியர் அல்லது வழக்கறிஞராகி இருப்பார்.

இவருக்கு இருந்த அந்த ஆசையை என்னிடம் அடிக்கடி வெளிப்படுத்தி உள்ளார். ஜெயலலிதா தனது தோல்விக்குப் பின் ஒருமுறை என்னை பாபநாசம் சிவன் சாலை வீட்டுக்கு வந்து சந்தித்தார். இருவரும் கூட்டணி சேர்ந்து கருணாநிதியை தோற்கடிக்கலாம் எனக் கூறினார். இதற்கு நான் அவர் மீது தொடுத்துள்ள வழக்குகளை வாபஸ் பெற முடியாது என நிபந்தனை விதித்தேன். இதையும் அவர் பெருந்தன்மையுடன் ஏற்றார். இது, ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் உள்ள பெரிய வித்தியாசம் ஆகும். அவருக்கு திடீர் கோபம், அநாவசியமான சந்தேகம் போன்றவை வந்து புத்தி மாறும். அது எனக்கு பிடிக்காது. திராவிட இயக்கத்தினரிடம் இருந்த சினிமாவில் ஜெயலலிதா ஒரு பிராமணப் பெண் என்பதால் அவரை அதிகமான துஷ்பிரயோகம் செய்திருந்தனர். இவர்களிடம் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தால் சினிமா துறையினர் மீது மிகவும் கோபமாக இருந்தார். இந்த நரகத்தில் தன்னை தாய் வேதவல்லி தள்ளிவிட்டு சென்றுவிட்டதாகவும் கூறி வருந்தியுள்ளார்.

அதிமுகவால் தனி மெஜாரிட்டியுடன் ஆளப்பட்டு வரும் தமிழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

தமிழக கட்சிகளுக்கு தேர்தலில் முன்னிறுத்தி வாக்கு கேட்க ஒரு முகம் அவசியம். பாஜகவுக்கு தமிழகத்தில் தொண்டர்கள் அதிகம். ஆனால், முன்னிறுத்த முகம் இல்லை. நரேந்திர மோடியை மக்களவை தேர்தலில் மட்டுமே ஏற்கும் நிலை உள்ளது. தவிர சட்டப்பேரவை தேர்தலில் இல்லை. இதற்கு ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தால் தான் பாஜகவுக்கு விடிவு கிடைக்கும். தமிழக அரசியல் பொறுப்பு எனக்கு தரப்பட்டு முழு சுதந்திரம் அளித்தால் நான் பாஜகவை ஆட்சியில் அமர வைப்பேன்.

எம்எல்ஏக்களைப் பிரித்து பாஜகவும், காங்கிரஸும் அதிமுகவை உடைக்க முயல்வதாக வெளியாகும் செய்திகள் குறித்து?

இது ஒரு தவறான கருத்து. இருகட்சிகளிடமும் அந்த திறமை இல்லை. இந்த திறமை என்னிடம் உள்ளது. ஆனால், நான் அதை செய்ய மாட்டேன்.

இந்த சூழலில் தமிழக ஆளுநராக நீங்கள் அமர்த்தப்படுவதாக கிளம்பிய செய்திகள் உண்மையா?

ஒரு நண்பர் மூலமாக வந்த இந்த கோரிக்கையை நான் ஏற்க மறுத்து விட்டேன். ஒருமுறை, இந்தியா உட்பட சிலநாடுகள் இணைந்து உருவாக்கும் பிரிக்ஸ் வங்கிக்கு தலைவராக வேண்டும் என்றும் என்னிடம் பிரதமர் கேட்டார். இதற்கும் நான் மறுத்து விட்டேன். ஒரு தமிழனாக தமிழகத்தைச் சீர்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்கப் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவன் நான். மீண்டும் எந்த வெளிநாட்டுக்கும் செல்ல மாட்டேன். இந்தியாவில் இருந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

NEWS TODAY 14.06.2026