Wednesday, December 21, 2016

Ragging may derail Medical Council of India's approval for Manjeri Medical College

DECCAN CHRONICLE.
PublishedDec 21, 2016, 2:26 am I
MALAPPURAM: The ragging incident at the Manjeri Medical College, in which 21 senior students were suspended, may cast a shadow over the Medical Council of India's (MCI) approval for the institution if serious lapses are found on the part of the college administration in tackling the issue. The incident came just a month after the MCI expert panel's inspection of the college and its facilities for the approval of admissions. It was for the first time that ragging was reported in the institution since its establishment in 2013.

However, the college authorities have ruled out any action from the MCI and termed the incident as inconsequential. "The college administration has taken the issue seriously and preliminary actions were taken against the students. The anti-ragging cell at the college is active in making students aware of the repercussions and curbing the menace," said Dr. P.S. Sanjay, the in-charge of the men's hostel where the alleged the ragging took place. The three-member committee of teachers headed by Dr. P.J. Babu, which probes 43 complaints of ragging, would submit the inquiry report on Wednesday.

The anti-ragging committee of the college consisting of police and lawyers would also meet on Wednesday to discuss the probe outcome and decide further action. The incident came to light after a few first-year students were caught sleeping during the class hours a few days ago. The students disclosed to the teachers that the senior students had taken them out of rooms late in the night and forced them to do several activities like singing and some were made to drink water from toilet taps.

"The authorities have swung into action immediately after the issue was divulged. Forty-three students have complained of such minor issues and the college management committee decided to suspend them pending inquiry," Dr. Sanjay said. The Principal had sought an explanation from the parents of the 21 students on Monday. All the suspended students have been directed to stay away from the hostel and college campus until further orders.
'

சசிகலா சோனியா ஆக வேண்டாம்!

By மாலன்  |   Published on : 21st December 2016 02:07 AM 


தாயே தலைமை ஏற்க வருவாயே' என்று வருந்தி அழைத்துக் கொண்டிருந்தன சுவரொட்டிகள். இந்த அழைப்பை ஏற்பாரா? ஏற்பது தகுமா? முறையா? இது தர்மம்தானா என இரவுப் பொழுதுகளில் தொலைக்காட்சிகள் உரக்க விவாதித்துக் கொண்டிருக்கின்றன.
ஏற்றாலும் மறுத்தாலும் என்ன பெரிய மாற்றம் இங்கு நேர்ந்து விடப் போகிறது? ஆட்கள் மாறுவார்கள், அதிகாரங்கள் கை மாறும். ஆனால் அடிப்படைகள் மாறப்போவதில்லை, அதே கூழைக்கும்பிடுகள், ஜாதியையும் பணத்தையும் முன்னிறுத்திய அதே அரசியல், அதே ஆடம்பரப் பதாகைகள், ஒப்புக்கு ஓர் உட்கட்சி ஜனநாயகம்,இதுவரை இருந்த இன்ன பிற லட்சணங்களோடு பயணம் தொடரப் போகிறது என்ற எள்ளலோடு சாதாரண மக்கள் அந்தச் சுவரொட்டிகளையும் விவாதங்களையும் கடந்து போகிறார்கள்.
ஆனால் வரலாறு சிரிக்கிறது. வாய் விட்டல்ல. "இன்னும் என்னவெல்லாம் நடக்கும் என எனக்குத் தெரியாதா' என இதழ்க் கடையில் ஓர் இளநகையை ஒளித்துக் கொண்டு அது ஒதுங்கி நிற்கிறது வேடிக்கை பார்க்க.
பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்த காட்சிகள் படங்களாக அதன் முன் விரிகின்றன. இதே போல் ஒரு டிசம்பர். ஆண்டு 1997. அரசியலுக்கு வரப்போவதில்லை என கணவர் மறைவின்போது அறிவித்திருந்த சோனியா காந்தி, ஆறு ஆண்டு மௌனத்தைக் கலைத்து, அடுத்த ஆண்டு அதாவது 1998 மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்யவிருப்பதாக அறிவிக்கிறார்.
அப்படி அறிவிக்கும்போது அவர் கட்சித் தலைவராகிவிடவில்லை. அப்போது கட்சியின் தலைவர் சீதாராம் கேசரி. கட்சி உறுப்பினர்களால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்.
அவராகப் பதவி விலகினால் நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் ஏதும் புரட்சி செய்து அவரைக் கவிழ்த்து அந்தப் பதவிக்கு வர விரும்பவில்லை என்று சோனியா தன்னைத் தலைமை ஏற்கக் கோருகிறவர்களிடம் சொல்லி விடுகிறார்.
முதலில் கேசரியின் செல்லப் பிள்ளைகள் அகமது படேலும், குலாம் நபி ஆசாத்தும் மெல்ல அவரிடம் விஷயத்தைச் சொல்லி விலகிவிடுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். "அடப் போங்கப்பா அந்த அம்மா என்னைப் பதவி விலகச் சொல்லியிருக்காது. இதெல்லாம் அர்ஜுன் சிங் வேலை. நீங்கள் எல்லாம் அர்ஜுன் சிங் சொல்லித்தான் என்னிடம் வந்து பேசுகிறீர்கள் என எனக்குத் தெரியாதா' என்று சிரித்துக் கொண்டே மறுக்கிறார்.
இது வேலைக்காகாது என்றதும் சீனியர்கள் களம் இறங்குகிறார்கள். பிராணப் முகர்ஜி, ஏ.கே. அந்தோணி, ஜிதேந்திர பிரசாத் மூவரும் "கௌரவமா இறங்கிடுங்க, என்னத்துக்குப் பொல்லாப்பு' என்று கோடிகாட்டிப் பேசுகிறார்கள்.
கேசரி அசைந்து கொடுக்கவில்லை. சோனியா ஆதரவாளர்கள் புரட்சியைத் தொடங்குகிறார்கள். பிரணாப், அந்தோணி, பிரசாத் இவர்களோடு சரத் பவாரும் சேர்ந்து கொள்ள, நால்வரும் கூடிக்கூடிப் பேசுகிறார்கள்.
அதிரடியாக நடவடிக்கை எடுத்து விடலாம் என்ற ஜிதேந்திர பிரசாத், சரத் பவார் யோசனைக்கு பிரணாப் முகர்ஜியும், அந்தோணியும் இணங்கவில்லை. கொஞ்சம் அவகாசம் கொடுத்துப் பார்க்கலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். களத்தில் இறங்கி ஆதரவு திரட்டும் பொறுப்பு அர்ஜுன் சிங்கிடமும் செயலர் வின்சென்ட் ஜார்ஜிடமும் ஒப்படைக்கப்படுகிறது
கேசரியின் ஆதரவாளர்களும் கட்சியின் பொதுச் செயலாளர் தாரிக் அன்வர் தலைமையில் களம் இறங்குகிறார்கள்.
கட்சியின் செயற்குழுவைக் (காங்கிரஸில் அதற்குப் பெயர் காரியக் கமிட்டி) கூட்டுமாறு சீனியர்கள் கேசரியை நெருக்குகிறார்கள். "அப்படி ஏதும் செய்துவிடாதீர்கள், கூட்டினால் அங்கு தீர்மானம் நிறைவேற்றி உங்களைப் பதவியிலிருந்து இறக்கிவிடுவார்கள்' என்று தாரிக் அன்வர் கோஷ்டி கேசரியை எச்சரிக்கிறது. செயற்குழுவைக் கூட்டாமல் காலம் கடத்தி வருகிறார் கேசரி. ஆனால் தள்ளிப்போட முடியாத சூழல் ஏற்படுகிறது.
1998-ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைகிறது. அது குறித்து விவாதிக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகமாக, கேசரி மார்ச் 5, 1998 அன்று செயற்குழுவைக் கூட்டுகிறார். செயற்குழுவில் காங்கிரஸின் நாடாளுமன்றப் பிரிவுக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தடுக்க வேண்டும் என்ற யோசனை முன் மொழியப்படுகிறது (அப்போது அந்தப் பதவியிலும் கேசரிதான் இருந்தார்).
"நாடாளுமன்றப் பிரிவுத் தலைவராக தான் வர வேண்டும் என்பதற்காக பவார் செய்யும் சூழ்ச்சி இது, சோனியா கட்சித் தலைவராக ஆனால் அவரே நாடாளுமன்றப் பிரிவின் தலைவராகவும் ஆக முயற்சிப்பார் என்பது தெரியாமல் பவார் இதைச் செய்கிறார், ஏமாந்து போவார்' என்று தாரிக் அன்வரிடம் கேசரி சொல்கிறார். அதெப்படி முடியும், சோனியா எம்.பி. ஆக இல்லையே என்று தாரிக் குழம்புகிறார்.
ஆனால் கேசரி சொன்னதே நடந்தது. எம்.பி. ஆக இல்லாமலேயே சோனியா நாடாளுமன்றப் பிரிவின் தலைவராக ஆனார். அதற்காக கட்சியின் விதிகள் திருத்தப்பட்டன.
திரைமறைவு வேலைகளின் அழுத்தம் அதிகரித்து நெருக்கடி முற்றியபோது, சோனியாவை சந்திக்கிறார் சீதாராம் கேசரி. "நானே ராஜிநாமா செய்து விடுகிறேன்' என்ற முடிவை அவர் தெரிவித்தபோது சோனியா கேட்ட ஒரே கேள்வி: "எப்போது?'
செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, அதில் தான் ராஜிநாமா செய்யும் விருப்பத்தை அறிவிக்கிறார் கேசரி.
ஆனால் ஒரு நிபந்தனையும் விதிக்கிறார். "நான் அதிகாரபூர்வமாக எனது ராஜிநாமாவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (இதுதான் காங்கிரஸின் பொதுக்குழு) கூட்டத்தில்தான் அறிவிப்பேன்.
அவர்கள் தான் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களிடம் நான் ராஜிநாமாவைக் கொடுப்பதுதான் முறை' என்கிறார். இது காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பாராத திருப்பம். அதிர்ச்சி.
ஒன்பது நாள்களுக்குப் பின் மார்ச் 14 அன்று மறுபடியும் செயற்குழு கூடுகிறது. 11 மணிக்கு கூட்டம். கூட்டம் தொடங்க சிலமணி நேரத்திற்கு முன் பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்கள் பிரணாப் முகர்ஜி வீட்டில் கூடி இரு அறிக்கைகளில் கையெழுத்து இடுகிறார்கள்.
ஒன்று காலதாமதம் செய்யாமல், கேசரி பதவி விலக வேண்டும். இரண்டு, கேசரி விலகுவதால் காலியாகும் கட்சித் தலைவர் பதவிக்கு சோனியா வர வேண்டும்
செயற்குழு கூட்டம் தொடங்கியதும், பிரணாப் முகர்ஜி, சீதாராம் கேசரி ஆற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் உரையைப் படிக்கிறார். "என்ன நடக்கிறது இங்கே? இப்போது எதற்கு இது?' என்கிறார் கேசரி. "காங்கிரஸ் கட்சியின் விதி எண் 19, உட்பிரிவு ஜெ படி எடுக்கப்பட்ட முடிவு' என்கிறார் பிரணாப்.
விசேஷமான தருணங்களில் செயற்குழு அதற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அப்பாலும் முடிவெடுக்கலாம். ஆனால் அந்த முடிவுகளுக்கு ஆறு மாதங்களுக்குள் பொதுக்குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்கிறது விதி.
"விதி வலிது' என விரக்தியும் கோபமுமாக கேசரி கூட்டத்திலிருந்து வெளியேறுகிறார். உள்ளே "எங்கள் புதிய தலைவர் சோனியா வாழ்க' என்று கோஷங்கள் எழுகின்றன.
இவ்வளவு அமர்க்களத்திற்கு நடுவே கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்த சோனியா, 2004-இல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது பிரதமர் பதவியை ஏற்க மறுத்து விட்டார். தியாகி என்ற ஒளிவட்டம் தலைக்குப் பின் சுழன்றது.
அவர் பதவி ஏற்காததற்கான காரணங்கள் பல. அதையடுத்து எழுந்த விமர்சனங்கள் பல. அந்த விமர்சனங்களில் கவனிக்கத்தக்கது இந்தக் கேள்வி: ஆட்சியில் இருந்தால் அதன் செயல்களுக்கு பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்லாமல் அதிகாரத்தை அனுபவிக்கும் வாய்ப்பிருக்கும்போது ஏன் போய் பதவியில் உட்கார்ந்து கொண்டு அல்லல்பட வேண்டும்?
அ.தி.மு.க. காங்கிரஸ் அல்ல. ஆனால் காங்கிரஸுக்கும் அ.தி.மு.க.விற்கும், ஏன் தனி ஒருவரை நம்பி நடத்தப்படுகிற எந்தக் கட்சிக்கும், சில ஒற்றுமைகள் உண்டு.
அவற்றில் ஒன்று, ஒப்புக்கு உட்கட்சி ஜனநாயகம் என்ற நடைமுறை. கட்சி அமைப்புகளின் பதவிக்கு முறையான தேர்தல் மூலம் அல்லாமல் தலைமையின் விருப்பு வெறுப்பின் பேரில் நியமனங்கள் செய்வது.
இரண்டு, அந்தக் கட்சிகள் அடித்தளத்தில் உள்ள தங்களது அமைப்பு பலத்தாலும், தங்கள் வேட்பாளர்களின் சொந்த பணம், தனிப்பட்ட செல்வாக்கு, பலம் ஆகியவற்றாலும், மாறி மாறி வீசுகிறஅரசியல் அலைகளின் காரணத்தினாலும் தேர்தல்களில் வெற்றி பெற்றால்கூட அந்த வெற்றி, கட்சித் தலைவர் என்ற தனிநபரால் கிடைத்த வெற்றி என்ற பிரமையைக் கட்சிக்காரர்களிடம் உருவாக்குவது.
தலைவர்தான் நம்பர் ஒன், மற்றவர்கள் எல்லாம் பூஜ்ஜியங்கள். அந்த ஒன்றின் பின் அணிவகுத்தால்தான் அவர்களுக்கு மதிப்பு என்ற பிம்பத்தைக் கட்டமைத்து அவர்களைத் தன்னம்பிக்கை இழக்கச் செய்வது. அதன் மூலமாக அந்தத் தலைமைக்கு எதிராக மன எழுட்சி கொள்ளாமல் அவர்களை மழுங்கிப்போகச் செய்வது.
இது 90-கள் அல்ல. தொண்ணூறுகளின் இறுதியில் காய் நகர்த்தல்கள் மூலம் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு சோனியா வந்தார் என்றால் தொண்ணூறுகள் தொடங்குவதற்குச் சற்றுமுன் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஜெயலலிதாவும் போராடித்தான் அடைய முடிந்தது. இன்று அந்த நிலை இரண்டு கட்சிகளிலும் இல்லை. உட்காரச் சொன்னால் மண்டியிடத் தயார் நிலையில்தான் கட்சி அமைப்பு இருக்கிறது
அன்றைய சோனியா போல், கட்சிப் பொறுப்பு ஆட்சிப் பொறுப்பு இவற்றிற்கான அழைப்புகளுக்கு பதில் அளிக்காமல் இப்போது அமைதி காத்து வருகிறார் சசிகலா.
இன்று சசிகலா சோனியா அல்ல. ஆனால் நாளை அவர் சோனியா போல, ஆட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்காமல், கட்சியின் தலைமைப் பொறுப்பின் வழி அதிகாரத்தை அடைவது, அனுபவிப்பது, தக்க வைத்துக் கொள்வது என்ற வழியைத் தேர்வு செய்வாரோ?
அப்படி ஒரு முடிவுக்கு அவர் வந்தால், அது சாமானியனுக்கு அபாயகரமானதாக இருக்கும். இரட்டை அதிகார மையங்கள் உருவாகும் என்பதல்ல கவலை. சோனியாவின் வழிகாட்டலில் மன்மோகன் சிங் ஆண்ட ஆண்டுகளில்தான் ஊழல் உச்சம் பெற்றது.
சசிகலா மக்களைச் சந்தித்து வாக்குகள் பெற்று ஆட்சிப் பொறுப்பில் அமரட்டும். ஜெயலலிதாவைப் போல கட்சித் தலைமைப் பொறுப்பிலும் தொடரட்டும்.
ஆனால், இறைவா, அவர் இன்னொரு சோனியாவாக ஆக வேண்டாம்.

Tuesday, December 20, 2016

ஏர் ஏசியா வழங்கும் கோலாலம்பூர் டூர் பேக்கேஜ்: டோண்ட் மிஸ் இட்! By கார்த்திகா வாசுதேவன் | Published on : 15th December 2016 01:50 PM

malasiya_tour

வந்தாச்சு டிசம்பர், நமக்கே நமக்கான புத்தம் புது வருஷத்தைக் கலக்கலாக கொண்டாட, எல்லாருக்குமே ஏதாவதொரு திட்டம் இருக்கும் தானே?!

யோசிச்சுப் பாருங்க, இந்த வருடத்தின் கடைசி நாளுக்கு திருப்தியாக பை, பை சொல்லி வழியனுப்பி விட்டு; வரப்போகும் ஃபிரெஷ்ஷான புது வருஷத்தை மலேசியாவுக்குப் போய் கொண்டாடினால் எப்படி இருக்குமென்று?. சூப்பராக இருக்கும் தானே!

வாழ்க்கைன்னா அப்பப்போ ஒரு மாற்றம் இருக்கணும். அந்த மாற்றத்தை இந்த வருஷம் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து தொடங்கத் திட்டமிடலாமா?!

எதுக்கு கோலாலம்பூரை யோசிக்கணும்? புது வருடக் கொண்டாட்டத்துக்கு வேறு நாடே இல்லையான்னு கூடத் தோணலாம். நாடுகள் நிறைய இருக்கலாம். ஆனால் அங்கே சென்று விடுமுறையைக் கொண்டாடுவதற்கான பயணச் செலவுகளும் நிறையவே ஆகுமே! அதனால் தான் பல ஆண்டுகளாக இந்தியர்களின் விடுமுறைக் கொண்டாட்டத்துக்கான முதல் தேர்வாக மலேசியாவே இருந்து வருகிறது.



உலகெங்கும் இருந்து மலேசியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் என்றென்றும் ஒரு சொர்க்கபூமி. அங்கே சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய எல்லா விசயங்களுமே நமக்கு கிடைக்கும். மலேசியர்கள் பல நாட்டுக் கலாச்சாரங்களில் ஊறித் திளைத்த பண்பட்ட மனிதர்கள், அவர்களின் விருந்தோம்பல் ஒரு முறை அங்கு சென்றவர்களை மீண்டும், மீண்டும் அங்கே செல்லத் தூண்டும் படியிருக்கும். விடுமுறையில் கொண்டாடித் திளைக்கத் தோதான சாகஸங்கள் நிறைந்த நகைச்சுவை நிகழ்ச்சிகள், பரவசப்படுத்தும் சுவையுடன் கூடிய அற்புதமான உணவுகள், இவை அனைத்துமே சிக்கனமான பயணச் செலவில் நமக்குக் கிடைத்தால் யார் தான் மலேசியாவை விரும்ப மாட்டார்கள்! அதுசரி... இப்போது உங்களுக்கும் மலேசியாவுக்குப் போகும் ஆசை வந்து விட்டதா? அடடா இன்னும் டிக்கட் புக் பண்ணவில்லையே என்று வருந்துகிறீர்களா?

கவலையை விடுங்கள்; உங்களுக்காகத் தான் ‘ஏர் ஏசியாக்காரர்கள்’ ராயல் சிட்டி ஹைதராபாத்திலிருந்து கோலாலம்பூருக்கு நேரடி விமானச் சேவை தொடங்கி இருக்கிறார்கள்.

இப்போதும் உங்களுக்கு விடுமுறைக் கொண்டாட்டத்துக்கென கோலாலம்பூரைத் தேர்ந்தெடுப்பதில் ஏதாவது குழப்பமிருக்கிறதா? அப்படியானால் இங்கே கீழே பட்டியலிடப் பட்டிருக்கும் கோலாலம்பூரின் அற்புதங்கள் உங்களுக்காகத் தான். படித்து விட்டு உடனே ‘ஏர் ஏசியாவில்’ கோலாலம்பூர் செல்ல டிக்கெட் புக் பண்ணி விட வேண்டியது தானே!.

அப்படி என்ன தான் இருக்கிறது கோலாலம்பூரில்? இதோ லிஸ்ட்;



1. பெட்ரோனாஸ் கோபுரம் பாருங்கள்...

கோலாலம்பூருக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தங்களது சுற்றுலாப் பயணத்தின் முதலடியை இங்கிருந்து தான் எடுத்து வைக்க வேண்டும். அமெரிக்க டுவின் டவர்களுக்கு இணையாக மற்றுமொரு இரட்டைக் கோபுரம். இப்போதும் இதன் கட்டுமான அமைப்பு உலக அரங்கில் கட்டடவியலாளர்கள் பலராலும் வியந்து போற்றப் பட்டுக் கொண்டிருப்பது தான் இதன் சிறப்பு. இது மொத்தம் 88 மாடி கொண்டது, அதில் இரண்டு வகையான பார்வை தளங்கள் உள்ளன. ஒன்று 41வது மாடியிலும், இரண்டாவது 86வது தளத்திலும் உள்ளது. உள்ளே செல்வதற்கு டிக்கெட் விலை குறைவு தான். மலேசியாவின் எந்த நகரத்திலிருந்தும் இந்த இரட்டைக் கோபுரங்களைக் காணலாம் என்றாலும் கோலாலம்பூரின் மாநாட்டு மையப் பூங்காவிலிருந்து இதைக் கண்டு களிப்பது தான் சாலச் சிறந்தது. இது பகற்பொழுதில் ஒரு விதமான தோற்றம் தரும், ஆனால் இரவுப் பொழுதே இந்த இரட்டைக் கோபுரத்தைக் காணப் மிகப் பொருத்தமான நேரம்.

2. ஜலன் அலரில் சாப்பிடலாம்...

சென்னையின் கையேந்தி பவன்களுக்கு ஈடாக மலேசியாவில் ஜலன் அலர் என்றொரு இடம் இருக்கிறது. இங்கே கிடைக்காத உணவு வகைகளே கிடையாது. மணக்க, மணக்க, கார, சாரமாக, நாவுக்கு ருசியாக தினுசு, தினுசாக தெருவோர உணவுகளை வயிற்றுக்கும், பர்சுக்கும் பழுதில்லாமல் ஒரு கை பார்க்கலாம். இங்கு தயாராகும் உணவுகள் அனைத்தும் மலேசிய அரசின் ‘சுத்தம் மற்றும் சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கு’ உட்பட்டே தயாராகின்றன என்பதால் மக்கள் விரும்பி உண்கிறார்கள். அதனால் இந்தத் தெருக்களில் கூட்டத்திற்கு குறைவில்லை. விதம் விதமான சட்னிகளுக்கு ரசிகர்கள் எனில் உங்களது கோலாலம்பூர் பயணத்தில் நீங்களும் அந்தக் கூட்டத்தில் ஒருவராகி விடுவீர்கள். அங்கு கிடைக்கும் உணவு வகைகள் அனைத்துமே கூட்ட நெரிசலானாலும் காத்திருந்தாவது உண்ணலாம் எனும்படியான அபாரமான சுவை கொண்டவை.

3. உலகின் உயரமான கோபுரத்திலிருக்கிறோம் எனும் உணர்வைத் தரும் மெனாரா கோபுரம்:

உலகின் மிக உயரமான கோபுரங்களில் ஒன்று. மெனாரா அல்லது கே.எல் கோபுரம் என அழைக்கப்படும் இந்த கோபுரத்தின் உச்சியிலிருந்து நீங்கள் மலேசியா நாட்டை முழுவதுமாகக் கண்டு களிக்கலாம். இந்த கோபுரத்தின் கடைசித் தளத்தில் பில்ட் ஆடியோ வசதியுடன் பொருத்தப் பட்டிருக்கும் தொலைநோக்கியால் நீங்கள் மலேசியாவைக் காணும் போது மொத்த மலேசியாவுக்கும் கோபுர உச்சியிலிருந்தவாறே ‘விர்ச்சுவல் சுற்றுலா’ சென்று வந்த உனர்வைப் பெற முடியும். சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய வகையிலான இத்தகைய தொழில் நுட்ப வசதிகள் மலேசியாவில் பல இடங்களிலும் நமக்குக் காணக் கிடைக்கின்றன. இந்தக் கோபுரத்தைப் பற்றிய இன்னொரு சிறப்பான விசயம் என்னவென்றால் ‘புனித ரமதான் மாதங்களில் இதன் உச்சியிலிருந்து பிறை பார்ப்பதை’ இஸ்லாமியர்கள் சிறப்பு மிக்கதாகக் கருதுகிறார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்த மெனாரா கோபுர உச்சியிலிருந்து உலகைக் காண்பது ஏர் ஏசியா விமானத்தில் பறந்தவாறு இந்த உலகைக் காண்பதற்கு ஈடானது.



4. உலகின் மிகப்பெரிய பறவைகள் பூங்கா...

கோலாலம்பூர் செல்பவர்கள் அனைவரும் தவறாமல் சென்று வரக் கூடிய மற்றொரு இடம் இந்த கே எல் பறவைகள் பூங்கா! சுமார் 3000 க்கும் அதிகமான பறவை இனங்களை இங்கே காண முடிகிறது.உலகில் பறவை ரசிகர்களை மிக அதிகமாக ஈர்க்கக் கூடிய வகையில் திறந்த வெளி பறவைகள் பூங்காவாக இது வடிவமைக்கப் பட்டிருப்பதால் உங்களுக்கு மிக அருகே பறவைகள் சிறகு உரசிப் பறந்து செல்வதை நீங்கள் மனப்பூர்வமாக உணர்ந்து அதன் இனிமையை அனுபவிக்கலாம். உள்ளூர் பறவை இனங்கள் மட்டுமல்ல பல வெளி நாட்டு பறவை இனங்களும் இறக்குமதி செய்யப் பட்டு உலக பறவை ஆர்வலர்களைக் கவரும் விதத்தில் இந்தப் பூங்கா உருவாக்கப் பட்டுள்ளது.

5. மலேசியாவைப் பற்றி புதிதாகத் தெரிந்து கொள்ள உதவும் ‘மலேசிய தேசிய அருங்காட்சியகம்’...

மலேசியக் கலாச்சாரத்தையும், வரலாற்றையும், அதன் பண்பாட்டையும் பற்றி நீங்கள் புதிதாகவோ அல்லது அதிகமாகவோ தெரிந்து கொள்ள விரும்பினால் உங்களது சிறப்பான தேர்வாக இருக்கப் போவது அதன் தேசிய அருங்காட்சியகமே! லேக் பூங்காவின் அருகில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் பாரம்பரியம் மிக்க இஸ்லாமியக் கலைகளின் நுட்பமான விவரங்கள் முதல் இன்றைய நவீன இஸ்லாமியக் கலைப் பொருட்கள் வரை காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இது தவிர இங்கே ரயில் அருங்காட்சியகமும் கூட உண்டு. அங்கே இந்நகர் உருவானது முதல் இங்கே மிகச் சிறப்பான முறையில் கட்டமைக்கப் பட்ட ரயில்வே நிர்வாக அமைப்பையும் அதன் வரலாற்றையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

6. ஷாப்பிங் பிரியர்களுக்கென்றே உருவான சூரியா கே எல் சி சி சிட்டி செண்டர் மால்கள்...

ஷாப்பிங் செய்வதில் அதீத ஆர்வமா உங்களுக்கு? அப்படியானால் நீங்கள் நிச்சயம் ‘சூரியா கே எல் சி சி மால்களைத்’ தவற விடவே வாய்ப்பில்லை. இந்த 6 அடுக்கு ஷாப்பிங் மாலில் நீங்கள் வாங்க முடியாத பொருள் என்று ஒன்று இல்லவே இல்லை. சொந்த அம்மா, அப்பாவைத் தவிர மற்ற எல்லாவற்றையுமே இங்கே விலைக்கு வாங்கலாம். அத்தனை பொருட்களையுமே டியூட்டி ஃபிரீ கட்டணச் சலுகையில் பெறலாம் என்பதால் இந்த மால்களில் எப்போதும் கூட்ட நெரிசலுக்குக் குறைவே இருப்பதில்லை. இங்கே நீங்கள் பொருட்கள் வாங்குகிறீர்களோ இல்லையோ, இந்தியாவுக்கு விமானம் ஏறும் முன் நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் இந்த ஷாப்பிங் மாலும் ஒன்று. ஏனெனில் இங்கு குவிக்கப் பட்டுள்ள பொருட்களை நீங்கள் வேறெங்கும் இப்படி மொத்தமாகக் காண்பதென்பது அரிதே!



7.சைனா டவுனுக்கு ஒரு ஹலோ சொல்லுங்கள்...

மலேசியாவுக்குச் செல்லும் போதெல்லாம் அங்கிருக்கும் மக்கள் தொகையில் சீனர்களும் அதிகமிருப்பதை நாம் உணர முடியும். மலேசியத் தெருக்களில் சரிபாதி சீனர்கள் உலவுகிறார்கள். அங்கே குட்டி சைனாவுக்குள் நுழைந்ததைப் போன்ற உணர்வைத் தரும் இடத்தைத் தான் மலேசிய மக்கள் ‘மினி சைனா’ என்றழைக்கிறார்கள். இங்கே சென்றோமெனில் சைனாவுக்கே போய் விட்ட உணர்வு தான். சீனர்களின் பாரம்பரிய உணவு நிலையங்கள், சீனக் கோயில்கள், சைனா பஜார்கள் என அந்த இடம் முழுக்கவே ஒரே சீன மயம். கோலாலம்பூர் செல்பவர்கள் தவற விடாது காண வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

8. பட்ஜெட் ஷாப்பிங் செய்ய புகெட் பிண்டங் ஷாப்பிங்...

கே எல் மோனோ ரயில் நிலையத்திலிருந்து எளிதாகச் செல்லும் தூரத்தில் அமைந்திருக்கிறது இந்த புகெட் ஷாப்பிங் மையம். நாம் வாங்க நினைக்கும் அத்தனை பொருட்களும் தெருவோரங்களில் குவித்து வைக்கப் பட்டு அவற்றை நாம் பேரம் பேசி வாங்க முடியும் என்பது எத்தனை அருமையான விசயம். பலருக்கு பேரம் பேசி ஷாப்பிங் முடித்தால் தான் பொருள் வாங்கிய திருப்தியே கிடைக்கும். அப்படியானவர்கள் நிச்சயம் இந்த ஷாப்பிங் மையத்தை தங்களது மலேசிய சுற்றுலாவில் தவற விட்டு விடவே கூடாது. குறைந்த பட்சம் ஏர் ஏசியா சுற்றுலாப் பயணிகளின் பேக்கேஜ் அலவன்ஸுகளுக்காக அளிக்கும் முன்னுரிமைகளுக்காகவாவது நீங்கள் நிச்சயம் இங்கு ஏதாவது ஷாப்பிங் செய்வீர்கள்!

9. வண்ண மயமான ‘கே எல் பட்டர் ஃபிளை பூங்கா’...

தங்களது கோலாலம்பூர் பயணத்தில் இதுவரை யாருமே தவற விடாத மற்றோர் இடம். 120 வகையான பட்டர் ஃபிளை இனங்களுடன், வண்ண, வண்ணப் பூக்களும், பசுந்தளிர் செடி கொடிகளுமாக பார்க்கவே அந்த இடம் ஒரு மினி காட்டுக்குள் நுழைந்தாற் போன்ற உணர்வைத் தரக்கூடியது. அங்கிருக்கும் பட்டர் ஃபிளை வல்லுனர்கள் அவ்விடத்துக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு பட்டர் ஃபிளை லைஃப் சைக்கிள், அவற்றின் இனப்பெருக்க முறை, உணவு சேகரிப்பு உள்ளிட்ட விவரங்களை எல்லாம் தெளிவாக விவரிக்கிறார்கள். மக்களுக்கு இந்த அபூர்வ உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சி பற்றி போதிக்க நினைக்கும் அவர்களது முயற்சி பாராட்டப் பட வேண்டிய ஒன்று.





10.கோலாலம்பூர் பத்து மலை குகைக் கோயில்...

கோலாலம்பூரை அடுத்து மிகக் குறுகிய தூரம் பயணித்தால் மலை உச்சியில் உள்ள பத்துமலை முருகன் கோயிலை அடையலாம். இது இந்துக்களின் குறிப்பாக மலேசியத் தமிழர்களின் புனிதத் தலமாகக் கொண்டாடப் படுகிறது. இங்கு எங்கு நோக்கினாலும் இந்து பக்தர்கள் கூட்டத்தையும், குட்டி, குட்டியாக இந்துக் கோயில்கலையும் காணலாம். பண்டிகைக் காலங்களில் மலேசியத் தமிழர்களில் பெரும்பான்மையோரை இங்கே தரிசிக்கலாம். மலை மேல் ஏற வெவ்வேறு இடங்களில் இருந்து 150 வழிகள் இருக்கின்றன. வழியெங்கும் குரங்குகளின் வழித் துணையுடன் பத்து மலை குகை காண மலை மேல் ஏறும் பயணம் மேற்கொள்பவர்களுக்கு, பிறகெப்போதும் அது ஓர் இனிய அனுபவமாக மனதில் நிலைத்து விடும். அதைக் காட்டிலும் மலையேறி அலுப்புடன் இறங்கும் போது ஏர் ஏசியாவின் விருந்தோம்பல் உங்களை ஒவ்வொரு முறையும் பத்து மலை குகை காண ஏக்கம் கொள்ள வைத்து விடக் கூடும்.

11.அபூர்வ நீர் வாழ் உயிரிகளின் கண்காட்சியான கே எல் சி சி அக்குவேரியம்...

கோலாலம்பூர் தேசிய அருங்காட்சியகத்தின் மையத்தில் அமைந்துள்ள இதை தனித்த மீன் அருங்காட்சியகம் என்று மட்டுமே சொல்லி விட முடியாது. 5000 விதமான நீர் வாழ் உயிரினங்கள் இங்கே காட்சிப் படுத்தப் பட்டு பராமரிக்கப் படுகின்றன. இதன் பரப்பளவு சுமார் 60,000 சதுர அடிகள். இங்கு தான் தரைப் பகுதியில் இருந்து 100 அடி ஆழத்தில் அமைந்த 300 அடி நீள மீன் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு நீருக்கு அடியிலிருந்து கண்ணாடிக் குகைக்குள் இவற்றைக் கண்டு களிப்பது மிக அருமையான அனுவபமாயிருக்கும்.

12. மலேசிய அரச மாளிகையான இஸ்தானா நெஹாரா...

2011 ல் மலேசிய அரசருக்காக புது அரண்மனை கட்டப் படும் வரை அரச குடும்பத்தினரின் அரண்மனையாக இருந்தது இஸ்தானா நெஹாரா. புது அரண்மனைக்கு அரசர் இடம் பெயர்ந்ததும் இஸ்தானா அரசு ஹெரிடேஜ் அருங்காட்சியகமாகி விட்டது. இங்கே ஒவ்வொரு நாளும் காவலர்களின் பணி நேரம் முடிந்து அவர்கள் பணிமாற்றம் செய்யும் முறை ஒரு சடங்காக பார்வையாளர் முன்னிலையில் நடைபெறுகிறது. அது சுற்றுலாப் பயணிகளுக்கு காணக் கண் கொள்ளாக் காட்சி. அது மட்டுமல்ல மலேசியாவில் அரசு பண்டிகை நாட்களின் போதெல்லாம் இஸ்தானா நெஹாரா முழு விளக்கு அலங்காரத்தில் மின்னும் போது அதைப் பார்க்க தேவலோக மாளிகை போலிருக்கும். அரண்மனைக்குள்ளிருக்கும் சில தனிப்பட்ட அறைகளைப் பார்வையிடும் உரிமையைக் கூட சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கியுள்ளது மலேசிய அரசு.



13.கே எல் சி சி பூங்காவில் செலவிடத் தகுந்த மாலை நேரங்கள்...

கல்லெறியும் தூரத்தில் மெனாரா கோபுரம், மற்றும் தேசிய மாநாட்டுப் பூங்கா இருக்க கோலாலம்பூரில் மாலை நேரங்கள் அனைத்தையும் பிரியமான நண்பர்களுடனும், உறவினர்களுடனும் செலவிடத் தக்க இடம் எனில் அதற்கு உகந்த இடம் கே எல் சி சி பூங்கா தான். அமர்ந்து பேசவும், காலாற நடந்து கொண்டே இளைப்பாற மிகச் சிறந்த இடமிது.

14.கலை நயமிக்க தெருவோர சுவரோவியம் காண ஜாமெக் மசூதிக்குச் செல்லலாம்...

கோலாலம்பூரில் கிழாங் மற்றும் கோம்பெக் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள ஜாமெக் மஸூதி அந்நாட்டிலுள்ள மிகப் பழமையான இடங்களில் ஒன்று. மூரிஷ் கட்டடக் கலைக்கு சான்றாக அங்குள்ள மசூதியக் கொண்டாடுகிறார்கள். மசூதியச் சுற்றியுள்ள சுவர்களில் வரையப் பட்டுள்ள சுவரோவியங்கள் மிகப் பழமையானவை என்பதோடு அழகானவையும் கூட. சுற்றுலாப் பயணிகள் தவற விடக் கூடாத இடங்களில் இதுவும் ஒன்று.

15.சலிப்படைய வாய்ப்பே தராத சன்வே பீச் காயல் தீம் பார்க்...

நீங்கள் குடும்பத்துடன் கோலாலம்பூர் சென்றிருக்கிறீர்கள் என்றால் நிச்சயம் இந்த இடத்தைத் தவற விடவே கூடாது. சாகஸ நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பிடித்தமான கடற்கரை விளையாட்டுகள், நீர் விளையாட்டுகள், மிருகக் காட்சி சாலை, உணவகங்கள் என்று அந்த இடமே ஒட்டுமொத்த பொழுதுபோக்கு திடலாகக் காட்சியளிக்கும். குழந்தைகள் மிக விரும்பி ரசிக்கும் இடங்களில் இதுவும் ஒன்று. உங்களது மொத்த கோலாலம்பூர் பயணத் திட்டத்தையும் நிறைவு செய்வதாக இந்த இடத்தை தேர்வு செய்து கொண்டால் முழுத் திருப்தியுடன் நீங்கள் உங்கள் சுற்றுலாவையும் முடித்துக் கொண்டு மன நிறைவுடன் உங்களது ஏர் ஏசியா கோலாலம்பூர் சுற்றுலாப் பயணத் திட்டத்தையும் நிறைவு செய்யலாம்.

ஏர் ஏசியா மனமுவந்த விருந்தோம்பலுடன் உங்களுக்கு அளிக்கும் அற்புதமான வாய்ப்புகளில் ஒன்று இந்த மலேசியச் சுற்றுப் பயணம். டிசம்பர் தொடங்கி நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன...உடனே உங்களுக்கான டிக்கெட்டுகளை புக் செய்து புத்தாண்டில் உங்கள் உன்னதமான மகிழ்ச்சிக்கு உத்திரவாதம் பெறுங்கள்.

பயணங்கள் சிறக்கட்டும்!

அன்புடன் ஏர் ஏசியா விமான சேவை!

'தமிழ் தெரிஞ்ச பொண்ணையே போடுங்க, கற்பழிக்கிறேன்'

By கார்த்திகேயன் வெங்கட்ராமன்
goundamani
நகைச்சுவை நடிப்பில் தனித்தன்மை வேண்டும் என்கிறார் கவுண்டமணி. நகைச்சுவை வசனங்களில் தங்கவேல். குரலின் விஷேசத்தன்மை எம்.ஆர்.ராதா. கோணங்கி சேஷ்டையில் சந்திர பாபு. இவங்க இந்த மாதிரி தனித்தன்மையிலதான் பிரபலமானங்க. காமெடி கலந்த நல்ல கேரக்டரும், பண்ணனும் என்பது இவரது விருப்பம்.

நகைச்சுவை நடிகரான இவரையே சிரிக்க வைத்த அனுபவங்கள் உண்டு. அவரே கூறுகிறார்.

‘கல்லுக்குள் ஈரம்’ படப்பிடிப்பின் போது நான் குடிச்சிட்டு வீட்டுக்கு வரேன். என் மகளாக நடித்த அருணா நான் குடிச்சிட்டு வந்ததைக்க கண்டுபிடிச்சு , உடனே யார் துட்டு குடுத்தாங்கன்னு கேக்க, 'பாரதிராஜா' ன்னு சொன்னவன், அடப்பாவி எனக்கு குடிக்க காசு கொடுத்திருக்காரேன்னு அவரோடயே சன்டை போட கிளம்புறேன்.

அந்த சமயத்தில் அருணா கதவ சாத்திட்டு 'எங்கேயும் போகாத, இங்கேயே உக்காரு' ன்னு என்னை பாத்து கத்தனும். உணர்ச்சி வேகத்தில தன்னுடைய தாய்மொழியான தெலுங்கிலேயே 'எங்கட போவுன்னு..இக்கட கூசு' ன்னு கத்த எனக்கு ஒரே சிரிப்பு. ஒரு வழியா அந்த காட்சிய படமாக்கி முடிச்சதும் பாரதிராஜா உட்பட எங்க எல்லாருக்குமே ஒரே சிரிப்பு.

'பெண்ணின் வாழ்க்கை' என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதில் நான் அருணாவை கற்பழிக்கிற சீன். அவரைக் கட்டிப்பிடித்தவுடன் உணர்ச்சி வேகத்தில் தமிழில் கத்த வேண்டியவர் தெலுங்கிலேயே வசனம் பேச ஆரம்பிக்க, எனக்கு மூட் அவுட் ஆகி விட்டது. டைரக்டர் விஜயனிடம் உடனே, 'சார், தமிழ் தெரிஞ்ச பொண்ணையே போடுங்க, கற்பழிக்கிறேன்' ன்னு சொல்ல செட்டிலேயே ஒரே சிரிப்புதான்.

தமிழ் சினிமா உலகில் அண்மைக்காலமாக நிறைய பேர் படங்களை தயாரிக்கிறேன் என்று வந்திருப்பதும், நிறைய பேர் நான் நடிக்கிறேன் என்று வந்திருப்பதும் கவுண்டமணியால் வரவேற்க முடியாத விஷயங்கள்.

இந்த அபரிமிதமான வளர்ச்சி தேவையில்லை விஷயம் தெரிந்த அனுபவசாலிகள் உறுதியான திட்டமிட்ட குறிக்கோளுடன் செயல்பட்டால்தான் பட உலகம் முன்னேற முடியும் என்பது இவருடைய அபிப்பிராயம்.



(சினிமா எக்ஸ்பிரஸ் 15.01.83 இதழ்)

சசிகலாவுக்கு கேள்வி எழுப்பும் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.!?

vikatan.com

திருச்சி : "அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதியிருக்கிறது?. ஜெயலலிதாவுக்கு பிறகு ஜனநாயகப்படி ஒரு தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, கொள்ளைபுறமாக ஒருவரை தேர்ந்தெடுக்கக்கூடாது," என திருச்சி முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்திரராஜன் தெரிவித்தார்.

தலைமை ஏற்கச்சொல்லி சசிகலாவை அ.தி.மு.க.வினர் கூட்டம் கூட்டமாக சென்று வரவேற்கிறார்கள். எங்கு பார்த்தாலும் சின்னம்மா என்ற அடைமொழியுடன் சசிகலாவுக்கு அழைப்பு விடுத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் சசிகலா தான் கட்சித்தலைமையை ஏற்க வேண்டும் என அழைப்பது போல ஒரு உணர்வு தமிழகத்தில் வியாபத்திருக்கிறது. ஆனால் சசிகலாவுக்கு எதிர்ப்புகளும் கட்சியில் இருக்கத்தான் செய்கின்றன.

இதனை பிரதிபலிக்கும் வகையில், அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதியிருக்கிறது என கேள்வி எழுப்பி இருகிறார் திருச்சி முன்னாள் எம்.எல்.ஏ. கே.சவுந்திரராஜன். 1977ம் ஆண்டு துவங்கி 1984ம் ஆண்டு வரை எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தொடர்ச்சியாக இரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், இன்று வரை அ.தி.மு.க.வில் இருந்து வருகிறார்.

அவரிடம் பேசினோம். "அம்மாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. இவற்றை தீர்க்க வேண்டியது அவசியமான ஒன்று. அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது வரை நடந்தவை குறித்தும், அவருக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட தகவல்களையும் வெளியிட வேண்டும். இது குறித்து உடனே தமிழக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிடவேண்டும்.

அம்மாவுக்கு பிறகு சின்னம்மா என பதவிக்காக அமைச்சர்கள் கூவுகிறார்கள். இவர்களுக்கு கட்சி மீது அக்கறையில்லை. பதவி கிடைத்துவிட்டது அதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும், அதைவைத்து கொள்ளையடிக்க வேண்டும். அதற்காக அம்மாவுக்கு பிறகு சசிகலா என்கிறார்கள்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதியிருக்கிறது. அம்மா வீட்டில் வேலை செய்தவர்களை எல்லாம் கட்சியின் தலைவராக்கிவிடுவது ஜனநாயகமுள்ள கட்சிக்கு அழகா?. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அ.தி.மு.க.வை சசிகலா வழிநடத்துவது எந்தவிதத்தில் சரி?.

அவர்கள் அடித்த கொள்ளை நாட்டுக்கே தெரியும். அப்படிப்பட்டவரை கட்சி தலைவராக்கினால், தமிழகம் தாங்காது. மக்கள் அம்மாவை நம்பிதான் ஓட்டுப்போட்டார்கள். இப்போது அவருக்கு பிறகு ஜனநாயகப்படி ஒரு தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, கொள்ளைபுறமாக ஒருவரை தேர்ந்தெடுக்கக்கூடாது.

சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவதை எம்.ஜி.ஆரின் விசுவாசிகளும், உண்மையான தொண்டர்களும் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனால் அ.தி.மு.க.வை மக்கள் கைப்பற்றும் நிலை வரக்கூடும்.

இந்தக் கொள்ளை கும்பலுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பரவாயில்லை. ஜனநாயகப்படி நல்ல தலைமையை தேர்த்தெடுக்க வேண்டும் என்பது தான் என் கோரிக்கை. சசிகலா தான் கட்சியை தலைமையேற்று நடத்துவார் என அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க.வின் உண்மை விசுவாசிகள் கூடி முக்கிய முடிவெடுப்பார்கள்," என்றார்.

- சி. ய.ஆனந்தகுமார்,

5 ஆண்டுகளுக்கு முன் விரட்டப்பட்ட சசிகலா குடும்பத்தினர்... இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?



'vikatan.com

கட்சியில் உதவி செய்ய வைத்திருந்தவர்கள், கட்சியிலும், ஆட்சியிலும் உச்சபட்ச அதிகாரத்தை செலுத்துவதா?' என சீறித்தான் சசிகலாவுடன் அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்கள் 13 பேரை, 5 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் வெளியேற்றினார் ஜெயலலிதா. கட்சியை விட்டு நீக்கியதுடன், சிலர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலும் அடைத்தார். இன்று வரையில் சசிகலாவைத்தவிர மற்றவர்கள் யாரும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படவில்லை.

அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இன்றோடு 5 ஆண்டுகள் கடந்து விட்டது. போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்ட இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இன்று போயஸ் தோட்டம் இயங்குவதாக சொல்லப்படுகிறது. அன்று ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர்களின் இன்றைய நிலை என்ன என்பதைத்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.



ம.நடராஜன் (சசிகலாவின் கணவர்)

ஜெயலலிதா அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையை, எண்ணத்தை அவரிடம் விதைத்ததே இவர்தான் என சொல்லப்படுவதுண்டு. ஆரம்ப காலத்தில் சசிகலாவுடன் கார்டனில் ஆளுமையோடு வலம் வந்தவர் நடராஜன். பின்னர் கார்டனை விட்டு வெளியேறினாலும், தனக்கென ஒரு லாபியை உருவாக்கி இயங்க ஆரம்பித்தார். இது ஜெயலலிதாவுக்கு பிடிக்காமல் போக, அவரை விலக்கி வைக்க ஆரம்பித்தார். ஆட்சி அதிகாரத்தில் எல்லை மீறுவதை அறிந்த ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் உள்ளிட்டோரை வெளியேற்றினார். சசிகலாவை மீண்டும் சேர்த்துக்கொண்ட போதும், நடராஜன் மீது கோபத்துடனே இருந்தார். ஆள் கடத்தல், நில அபகரிப்பு வழக்குகள் நடராஜன் மீது பாய்ந்தது. சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் அதிகாரம் செலுத்தத் துவங்கியிருக்கிறார். போயஸ் கார்டனில் இப்போது இல்லை என்றாலும், சசிகலாவுக்கு ஆலோசனை சொல்வது நடராஜன்தானாம். நடராஜனின் மூவ்தான் சசிகலாவின் மூவ் என்கிறார்கள்.

மன்னார்குடி திவாகரன் (சசிகலாவின் தம்பி)

மன்னார்குடி சந்தரகோட்டையில் வசிக்கிறார் திவாகரன். டெல்டா பகுதியில் 'பாஸ்' என்றுதான் இவரை அழைக்கிறார்கள். மன்னார்குடியில் கிளைமேட் சோடா கம்பெனி நடத்தி வந்தவர், இப்போது கல்லூரியை நடத்தி வருகிறார். ஆள் கடத்தல், கொலை முயற்சி, அடிதடி என பல வழக்குகள் இவர் மீது ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சர்வ அதிகாரத்துடன் வலம் வருகிறார். தனது சம்பந்தியான ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரனை உளவுப்பிரிவு அதிகாரியாக நியமித்திருக்கிறார். டெல்டா மாவட்டங்களில் இவருக்குதான் முதல் மரியாதை. அரசியலில் மீண்டும் வலம் வரத்துவங்கி விட்டார்.

வி.என். சுதாகரன்

சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மூன்றாவது மகன்தான் சுதாகரன். சுதாகரனை வளர்ப்பு மகனாக அறிவிக்கும் அளவுக்கு சுதாகரன் மேல் ஜெயலலிதாவுக்கு பிரியம் இருந்தது. வளர்ப்பு மகன் திருமணமும், சசிகலாவுடனான நட்புமே 1996 தேர்தலில் தோல்விக்கு காரணமாக அமைய... சசிகலாவோடு சுதாகரனும் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் சுதாகரனை ஜெயலலிதா கண்டுகொள்ளவே இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராக வந்தபோதுகூட சுதாகரனை ஜெயலலிதா திரும்பிக்கூட பார்த்ததில்லை. ஜெயலலிதாவின் மறைவிற்கு சுதாகரன் வந்திருந்தார். இவருக்கு மிக முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், அதிகாரத்தை செலுத்துவார் என்றே சொல்லப்படுகிறது.



டி.டி.வி. தினகரன்

வனிதாமணியின் மூத்த மகன் டி.டி.வி. தினகரன். ஒருகாலத்தில் அம்மாவின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர். ஆரம்ப காலத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணிகளை இவர்தான் கவனித்து வந்தார். 1999ல் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனவர், அதன் பின்னர் தேனிக்கே குடியேறிவிட்டார். அப்போது அறிமுகமான ஓ.பன்னீர்செல்வம், தினகரனிடம் காட்டி பவ்யத்தால்தான், 2001ல் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார். கட்சியில் ஓரங்கப்பட்டதால் யார் கண்ணிலும் படாமல் புதுச்சேரியில் குடியேறிய தினகரன், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இப்போது மீண்டும் தமிழகம் வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறாது.

வி.பாஸ்கரன்

வனிதாமணியின் இரண்டாவது மகன். ஆரம்பத்தில் இவர்தான் ஜெயா டிவியின் நிர்வாக இயக்குநராக இருந்தார். ஆங்கில சேனல்களுக்கு இணையாக தொழில் நுட்பக் கருவிகளை பயன்படுத்தினார். ஆரம்பத்திலிருந்தே கல்குவாரி பிசினஸ் செய்து வந்தவர். சினிமாவில் ஆர்வம் காட்டினார். சினிமாவெல்லாம் வேண்டாம் என சசிகலா எச்சரிக்கை விடுக்க... அதையும் புறந்தள்ளி, 'தலைவன்' என்ற படத்தில் நடித்தார். மீடியாக்களில் இவர் கொடுத்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்த... இவர் மீது வழக்குகள் பாய்ந்தன. சிறையில் தள்ளப்பட்டார். தற்போது கல்குவாரி பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார் பாஸ்கரன். மீண்டும் கார்டன் பக்கம் தலை காட்டக்கூடும் என்கிறார்கள்.

டாக்டர் வெங்கடேஷ்

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன்தான் டாக்டர் வெங்கடேஷ். நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை, கட்சியின் போஸ்டர்கள், புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகளை கவனித்து வந்தார். ஜெயலலிதா, இவர் திருமணத்தை நடத்தி வைத்தார். ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை மாநிலச் செயலாளராக ஆக்கப்பட்டார். தனக்கு எதிராக சதி செய்தார் என சொல்லப்பட்டு கட்டம் கட்டப்பட்டவர்களில் வெங்கடேஷும் ஒருவர். இவர் மீது பல வழக்குகளை பதிவு செய்த ஜெயலலிதா, சிறையில் தள்ளினார். அதன் பிறகு தனக்கு சொந்தமான ஸ்கேன் சென்டரை கவனிப்பது, கோல்ப் விளையாடுவது என 'தான் உண்டு தன் வேலை உண்டு' என இருந்தவர், ஜெ மறைவிற்கு பிறகு மீண்டும் ஆக்டிவ்வாக செயல்படத்துவங்கி இருக்கிறார். சசிகலா மீதான அதிருப்தியாளர்களை சரிசெய்ய இவருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

இராவணன்

சசிகலாவின் சித்தப்பா கருணாகரனின் மருமகன்தான் ராவணன். மிடாஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர், மெல்ல மெல்ல கார்டனுக்குள் நுழைந்து, மேற்கு மண்டலத்தின் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்டம் போட்டார். ஜெயலலிதாவுக்கும் மேலே சென்று ஆட்டம் போட்டவர் என சொல்லப்பட்ட ராவணன், பல வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டார். எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என தெரியாமல் இருந்த இவர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தலை காட்டத்துவங்கி இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு தன் புகைப்படத்தைப் போட்டு விளம்பரம் கொடுத்தவர், மீண்டும் மேற்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்த துவங்கி இருக்கிறார்.

ராமச்சந்திரன்

நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரனுக்கு தொண்டர்கள் தரும் மனுவை பரிசீலிக்கும் பொறுப்புதான் முன்னர் வழங்கப்பட்டது. கட்சியை விட்டு நீக்கியபிறகு அண்ணன் நடராஜன்தான் எல்லாம். நடராஜன் ஆலோசனைப்படிதான் இயங்குவார். அவர் எதிரில் உட்கார கூட மாட்டார். அந்தளவு மரியாதை. இப்போது சென்னை போயஸ் கார்டனில் இருந்து வரும் உத்தரவுகளை அண்ணன் நடராஜனுக்கு கொண்டு சேர்ப்பது இவர்தான். விரைவில் கட்சியிலும் அதிகாரம் செலுத்துவார் என்கிறார்கள்.

மகாதேவன்

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன். கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரத்தோடு வலம் வந்தவர். ஜெ பேரவை மாநிலச் செயலாளராகவும் இருந்தார். கட்சியை விட்டு விரட்டப்பட்ட பின்னர், வழக்குகள் பாய்ந்தன. எல்லாவற்றையும் சமாளித்து மருத்துவமனை, பேருந்து போக்குவரத்து தொழிலை நடத்தி வந்தவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிகாரம் செலுத்த துவங்கினார். ஜெயலலிதா மறைந்த அன்று, ஜெயலலிதாவின் உடலுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்தார். சசிகலா பொதுச்செயலாளராக ஆக வேண்டுமென தஞ்சை பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், மகாதேவன் படமும் இடம்பெறும் அளவுக்கு, அதிகாரத்துடம் வலம் வரத்துவங்கி விட்டார்.

கலியபெருமாள்

சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்திதான் கலியபெருமாள். திருச்சி. கே.கே. நகரில் வசிக்கும் இவரின் கட்டுப்பாட்டில்தான் மத்திய மண்டல அ.தி.மு.க. இயங்கியது. தனக்கு வேண்டிய உளவுத்துறை அதிகாரி மூலம் கட்சி ஆட்களை உளவு பார்ப்பது இவரது முக்கிய வேலை. இப்போது அமைதியாகவே இருக்கிறார். மீண்டும் மத்திய மண்டல பொறுப்பாளராக வலம் வருவார் என்கிறார்கள்.

பழனிவேலு

நடராஜனின் சகோதரர் பழனிவேலு. நீக்கப்பட்டவர்களில் இவருடைய பெயர் 4வது இடத்தை பிடித்தது. இவர் போலீஸ்துறையில் பணியாற்றியதால், இவரை ஜெயலலிதா தனது பாதுகாப்பு அதிகாரியாக நியமித்துக்கொண்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கார்டனுக்குள் செல்வதும் வருவதுமாக இருந்தவர். தற்போது அண்ணன் நடராஜன் கிழித்த கோட்டை தாண்டுவதில்லை. விரைவில் நடராஜனின் ஆதரவோடு, அதிகாரத்துடன் வலம் வருவார் என சொல்லப்படுகிறது.

தங்கமணி

மகாதேவனின் தம்பி தங்கமணி. கட்சி விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க மாட்டார் என்றாலும், தன்னிடம் வரும் சிபாரிசுகளை செய்து கொடுக்க மட்டும் அதிகாரத்தை பயன்படுத்துவார். கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் இருக்கின்ற இடம் தெரியாமல் இருந்தார். இப்போதும் அப்படித்தான் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறார். சசிகலா ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது, இவர் சீனுக்கு வரலாம் என்கிறார்கள்.

- ஏ. ராம்

நெட் ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார்.. சவால் கொடுக்குமா அமேசான் ப்ரைம் வீடியோ! 

#PlusMinus


ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான அமேசான், அமேசான் ப்ரைம் தனது புதிய சேவையை துவங்கியுள்ளது. இந்த சேவை மூலம் திரைப்படங்களை ஹச்.டி தொழில்நுட்பத்தில் ஆன்லைனிலும், ஆஃப் லைனிலும் பார்க்க முடியும் என்கிறது அமேசான். அமேசான் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தை கடந்த புதன்கிழமை துவங்கியது. இதற்கு இந்தியாவில் மிகுந்த வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தியாவில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் நெட் ப்ளிக்ஸ் ஹாட் ஸ்டார் இணையதளங்கள் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை அளித்து வருகின்றன. ஹாட் ஸ்டார் மற்றும் நெட் ப்ளிக்ஸின் சேவைக்கட்டணம் மாதம் 99 ரூபாயிலிருந்து துவங்குகிறது. வருடத்திற்கு குறைந்தபட்சம் 1200 ரூபாயிலிருந்து சேவைக்கடணம் துவங்குகின்றன. ஆனால் அமேசான் ப்ரை அதிரடியாக வருடத்திற்கு 499 ரூபாய் என்ற ஆஃபரில் வழங்குகிறது. அதுமட்டுமில்லாது முதல் மாதம் இலவச சேவையை வழங்கியுள்ளது. இதற்கு தேவை ஒருவருக்கு அமேசான் தளத்தில் கணக்கு இருந்தாலே போதுமானது,

இந்தியாவில் என்ன சிறப்பு:

அமேசானின் இந்த புதிய சேவையில் இந்தியாவில் பாலிவுட், அமெரிக்க சீரியல்கள், மண்டல மொழி படங்கள் மற்றும் கேம்கள் என சேவையை வழங்கியுள்ளது. 142 நாடுகளில் அமேசான் ப்ரைம் சேவை லைவ்வில் உள்ளது. இதில் இந்தியாவில் சிறப்பு என்னவென்றால் இந்தியாவில் ஆபாசமான காட்சிகள் சென்சார் செய்யப்பட்டு மங்களாக காட்டப்படும். இதனை எந்த வித கோரிக்கையும் இன்றி தானாகவே முன்வந்து அமேசான் செய்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களை நாங்கள் மதிக்கிறோம் அதனால் தான் சென்சார் செய்து வெளியிடுகிறோம் என்கிறது அமேசான். மேலும் குழந்தைகளுக்கான டிவி ஷோக்களையும் வழங்குகிறது. இது தவிர அமேசானின் சொந்த வீடியோக்களையும் வழங்குகிறது.



எதில் பார்க்க முடியும்?

இந்த சேவையை ஆண்ட்ராய்டு , ஐ-ஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப்களில் பெற முடியும். இந்த தளங்களில் லாக் இன் செய்து இந்த சேவையை பெறலாம். க்ரோம்காஸ்டில் இந்த சேவையை பெற முடியவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் கூகுள் க்ரோம்காஸ்ட் செட்டப்பை க்ரோம்காஸ்டில் இன்ஸ்டால் செய்து அதன் மூலம் இந்த‌ சேவையை பெற முடியும்.

விலையில் என்ன மாற்றம்:

அமேசான் ப்ரைம் வீடியோ தற்போது முதற்கட்டமாக வருடத்திற்கு 499 ரூபாய் என்ற அளவிலும், பின்பு வருடத்திற்கு 999 ரூபாயாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் நெட்ப்ளிக்ஸ் பேசிக், ஸ்டாண்டர்டு,ப்ரீமியம் சேவைகளை முறையே ரூ 500, ரூ 650, ரூ 800 ஆகிய விலைகளில் வழங்குகிறது ஆனால் நெட் ப்ளிக்ஸின் கட்டணங்கள் அனைத்தும் மாதத்துக்கான கட்டணங்கள். ப்ரைமின் கட்டணம் வருடத்திற்கான கட்டணமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



தமிழில் என்ன இருக்கிறது?

தமிழின் சமீபத்திய ஹிட்களான கபாலி மற்றும் தெறி தான் அமேசான் ப்ரைமில் தமிழ் ரசிகள்களுக்கான ஸ்பெஷல் வருகைகள். இது தவிர மேலும் பல படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மக்களை கவரும் விதத்தில் இந்த படங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மைனஸ் என்ன?

அதிரடி விலை சலுகையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையில் விலை மட்டுமே கவர்ச்சிகரமானதாக உள்ளது சேவைகளில் வழங்கப்படும் வீடியோக்களின் கலெக்ஷன் சரிவர திருப்திகரமானதாக இல்லை. இணைய வேகம் குறைவாக இருந்தால் போதும் என கூறியுள்ளது ஆனால் இது 4ஜி சேவைகளிலும் கூட நேரம் எடுத்து கொள்வது போன்ற ஆரம்ப சிக்கல்கள் உள்ளன. இவற்றை விரைவில் சரி செய்தால் ஹாட் ஸ்டார், நெட் ப்ளிக்ஸுக்கு டஃப் கொடுக்கலாம்.

அமேசானில் பொருள் வாங்கி கொண்டிருந்த அனைவரும் இந்த சேவையின் இலவச சோதனைக்கு தயார் ஆகி வருகின்றனர். ஒரு மாதம் கட்டாயம் இலவசம் என்பதால் வேகமாக இந்த சேவை பரவி வருகிறது. இந்தியாவில் ப்ரைம் டெலிவரியில் ஏற்கெனவே 7 லசம் வாடிக்கையாளர்கள் இருப்பது இதன் ப்ளஸ். இந்தியா போன்ற நாடுகளில் இப்படிப்பட்ட சேவைகளின் வருகை திரையரங்குகளுக்கு சற்று ஆபத்து தான் என்றால் என்டர்டெயிண்மன்ட் துறையின் வளர்ச்சியாக தான் இதனை அணுக வேண்டும். ப்ரைம் கட்டாயம் இந்த துறையில் பெரிய சாவலை அளிக்கும் என்கிறனர் வாடிக்கையாளர்கள். நிச்சயம் மற்ற ஸ்ட்ரீமிங் நிறுவனங்களும் உத்திகளை மாற்றியமைக்கும் என நம்பலாம்.

ச.ஸ்ரீராம்

NEWS TODAY 08.06.2026