Thursday, December 22, 2016


இருளில் ஓர் ஒளிக்கீற்று

By டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் | Published on : 22nd December 2016 01:40 

| மருத்துவப் பணி, சேவை, அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பணியாகும். மருத்துவர்களுக்கு போதிய ஓய்வு கிட்டுவதில்லை. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிட முடியாத நிலை.சமூக விழாக்களிலும், பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு மருத்துவர்களுக்கு அரிதாகவே கிட்டுகிறது. பொதுமக்களும் மருத்துவர்களை கடவுளுக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றுகின்றனர்.
எல்லா துறைகளிலும் விழுமங்களின் வீழ்ச்சி ஏற்பட்டது போலவே புனிதமான மருத்துவ துறையிலும் நிகழ்ந்தது. மருத்துவம் வணிகமயமாகியது. எண்பதுகளுக்கு பின் அரசு மருத்துவமனைகளின் முக்கியத்துவம் குறைந்து கார்ப்பரேட் மருத்துவமனைகள் உருவாகிய பின்னர் மருத்துவர்களும் கார்ப்பரேட் சிந்தனைகளுக்கு உள்ளாகிவிட்டனர்.
தேவையற்ற பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகள், மருந்துகள், ஒரு புறம். எழுதுகின்ற மருந்துகளுக்கும், பரிசோதனைகளுக்கும், மருத்துவமனை அட்மிஷன்களுக்கும் கமிஷன்கள், உயர்ரக பரிசுகள், வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள் என இன்னொரு புறம். இதன் உச்சகட்டமாக உடல் உறுப்பு தான மோசடியும் நடைபெறுகிறது.
புனிதமான மருத்துவத் தொழிலில் புகுந்துவிட்ட இந்த கருப்பு ஆடுகள் குறித்து, மருத்துவர்கள் நீண்டகாலமாக எழும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பல நல்ல உள்ளங்களை முடக்கிப் போட்டது.
இருள் சூழ்ந்த இந்த நிலையில் ஒரு ஒளிக்கீற்று, கதிர்வீச்சு மருத்துவர்களிடமிருந்து வந்துள்ளது மனதிற்கு இதமாக உள்ளது. இந்திய மருத்துவக் கழகத்தின் (மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா) கீழ் இயங்கும் இந்திய கதிரியக்க கழகத்தின் (Indi​an Radiologists and Im​aging Asso​ci​ation)​​ இயக்கத்தின் தமிழ்நாட்டுக் கிளை சில நல்ல முடிவுகளை எடுத்துள்ளது.
கதிரியக்க மருத்துவர்கள், ஸ்கேன் மைய உரிமையாளர்கள் என 1,300 பேர் பங்கேற்ற இவ்வமைப்பின் பொதுக்குழு,
பரிசோதனைக் கூடங்களில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக சில தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது. கதிரியக்க பரிசோதனைகளுக்கும், ஸ்கேன்களுக்கும் இனி மருத்துவர்களுக்கும், இடைத்தரகர்களுக்கும் கமிஷன்கள் தரப்பட மாட்டாது.
ஒவ்வொரு பரிசோதனைக்கும் அதிகபட்ச கட்டணத்தையும் முடிவு செய்துள்ளது. கட்டுப்பாடுகளை மீறும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அம் மருத்துவர்களின் பெயர்களை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் வருமான வரி துறைக்கும் அனுப்பவும் முடிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு பரிசோதனைக்கும் எவ்வளவு கட்டணம் என்பதை அறிவிப்பு பலகை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர். துணிச்சலான இந்த முடிவுகளை எடுத்த கதிரியக்க மருத்துவர்கள் நமது பாராட்டுக்குரியவர்கள்.
கதிரியக்க மருத்துவக் கழகத்தினர் எடுத்த இந்த முடிவுகள் முறையாக செயல்படுத்தப்பட்டால் நோயுற்றவர்களின் செலவு கணிசமாக குறையும்.
கமிஷன் தருவது நிறுத்தப்பட்டால் ஸ்கேன்களின் கட்டணம் பாதியாக குறைந்துவிடும். கமிஷனுக்கு ஆசைப்பட்டு தேவையற்ற ஸ்கேன்களுக்கும், பரிசோதனைகளுக்கும் சிபாரிசு செய்யும் நிலை மாறும்.
அதிக கட்டணங்களை வசூலிக்கும் மருத்துவர்களும், மருத்துவமனைகளும், ஸ்கேன் சென்டர்களும் தங்களின் செயலை நியாயப்படுத்த சில காரணங்களை கூறுகின்றனர். பல லட்சங்களை செலவிட்டு உபகரணங்களை வாங்கி தொழில் தொடங்குகிறோம். கதிரியக்க படிப்பில் இடம் கிடைப்பதற்காக சில கோடிகளை நன்கொடையாக கொடுத்துள்ளோம்.
எனவே இவற்றைச் சரிகட்ட அதிக கட்டணம் வசூலிக்கும் நிலையில் உள்ளோம் என்று கூறி தமது தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க முயலுகின்றனர்.
நேர்மையான முறையில் சம்பாதித்தாலே நல்ல வருவாயை ஈட்ட முடியும் என்றிருக்கும்போது, குறுக்கு வழிகளை கையாள வேண்டிய அவசியம் என்ன?
மக்களுக்கும் இப்போது ஸ்கேன் மோகம் வந்துவிட்டது. சாதாரண நோய்களுக்கும் ஸ்கேன் எடுக்கச் சொல்லி மருத்துவர்களை வற்புறுத்துகின்றனர். ஸ்கேன் எடுக்கும் மருத்துவரே சிறந்த மருத்துவர் என்ற மனப்பான்மை மக்களிடம் உருவாகிவிட்டது. எதற்கெடுத்தாலும் நிபுணர்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துவிட்டது.
இங்கிலாந்தில் எந்த வியாதியானாலும், முதலில் பொது மருத்துவரைப் (Gener​al Pr​a​ctioner)​​ பார்க்க வேண்டும். அவர் சிபாரிசு செய்தால் மட்டுமே நிபுணர்களை பார்க்க முடியும் என்ற நிலை உள்ளது. நமது நாட்டிலும் இந்த நிலை பின்பற்றப்பட்டால் தேவையற்ற பரிசோதனைகளை தவிர்க்க முடியும்.
அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் குறைந்த செலவில் செய்யப்படுகிறது. ஆனால் சில குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே உள்ள இந்த வசதியை பரவலாக்கினால் மக்களுக்கு சுமை குறையும்.
மருத்துவக் கல்வி திட்டத்தில் நன்னெறி (Ethi​cs) சார்ந்த போதனைகளும் சேர்க்கப்பட்டு அக்கறையுடன் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.
மருத்துவர்கள் நடத்தும் மாநாடுகளில் நன்னெறி பற்றிய உரைகளும் தவறாது இடம் பெற வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை நன்னெறி சார்ந்த வாழ்க்கைக்கு தயார்படுத்த வேண்டும். பணத்தைவிட குணமே முக்கியமானது என்பதை அவர்கள் மனதில் ஆழமாக விதைக்க வேண்டும்.
அரசுத் துறை, நீதித் துறை, ஊடகத் துறை, சேவைத் துறை, ஆன்மிகத் துறை என எல்லா துறைகளிலும் மலிந்துள்ள தவறுகளை அந்த துறைகளைச் சார்ந்தவர்களே வெளிப்படையாக பேசி அவற்றை களையும் முயற்சியில் ஈடுபட்டால் நாடு வளமான எதிர்காலத்தை நோக்கிச் செல்லும்.

Wednesday, December 21, 2016

மம்தா போல் வீறுகொண்டு எழுவாரா ஓ.பன்னீர் செல்வம்


சிலநாட்களுக்கு முன்பு மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்வர் மம்தாவிற்குத் தெரியாமல், கொல்கத்தா மாநில போலீஸின் அனுமதி இல்லாமல் ஏதோ வழக்கமான பயிற்சி என்கிற பெயரில் தலைமைச் செயலகம் அருகில் துணை நிலை ராணுவ வீரர்களை மத்தியஅரசு இறக்கியது.

இந்த தகவல் முதல்வர் மம்தாவுக்கு தெரியவந்ததும், கொதித்து எழுந்துவிட்டார். 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 12 ராஜ்யசபா உறுப்பினர்கள்..என்று 46 பேர்கள் மம்தா கட்சியில் உள்ளனர். இந்த நிலையில், மத்திய அரசு மிரட்டும் பாணியில் மாநில அரசு அதிகாரத்தில் மூக்கை நுழைக்கிறது என்று பிரதமர் மோடிக்கு எதிராக போர்கொடி தூக்கினார். டெல்லியில் உள்ள மேற்கு வங்காள எம்.பி.கள் இதுகுறித்து பாராளுமன்றத்தில் புகார் செய்தனர். அதன்பிறகுதான், மத்திய அரசு பணிந்தது. ஏதேதோ சாக்குப் போக்குகளை சொல்லி சமாளித்தது.





இதேபோல், தமிழகத்திலும் இன்று நடந்துள்ளது. சென்னை அண்ணாநகர் ஏரியாவில் குடியிருக்கும் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில், ஆம் ஆத்மி கட்சியினருக்கும் தெருவில் இருப்பவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தூரத்தில் இருந்து கவனித்த வருமானவரித்துறை அதிகாரிகள், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். தமிழக போலீஸார் சரிவர நடந்துகொள்ளவில்லை. மோதல் சம்பவங்களை வேடிக்கை பார்க்கிறார்கள் என்று டெல்லிக்கு தகவல் சொல்ல...மத்திய ராணுவத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உடனே துணை நிலை ராணுவப்பிரிவை அண்ணாநகருக்கு அனுப்பிவைத்தார்.

தலைமைச் செயலாளர் வீட்டை அந்தப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர். இந்த தகவல் கிடைத்ததும், தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மின்னல்வேகத்தில் தலைமைச் செயலகத்துக்கு வந்து உயர் அதிகாரிகள் அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 37, ராஜ்யசபா உறுப்பினர்கள் 13...என்று 50 பேர்கள் அ.தி.மு.க-வில் இருக்கின்றனர். இருந்தும் கூட, மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்காமல், சென்னை போலீஸ் அனுமதி இல்லாமல் திடீரென துணைநிலை ராணுவப்படையினர் மத்திய அரசு இறக்கியிருப்பது தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், தமிழக நடவடிக்கைக்கு மேற்கு வங்க மம்தாவே கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எப்படி ரியாக்ட் பண்ணப்போகிறார் என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது.

- ஆர்.பி
Posted Date : 12:24 (21/12/2016)
Last updated : 12:33 (21/12/2016)

ராமமோகன் ராவ் வீட்டில் ரெய்டு... பரபர பின்னணி, அதிர்ச்சியில் அ.தி.மு.கவினர்!
vikatan.com



யார் இந்த ராமமோகன ராவ்

ராமமோகன ராவ், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 1985ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர். 2017ம் ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற உள்ளார். கடந்த மே மாதம், நடந்த சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க வெற்றி பெற்றது. அப்போது, கூடுதல் தலைமை செயலாளர் என்ற அந்தஸ்தில் இருந்த அவர், ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார். ஜூன் 8ம் தேதி தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆகிய பொறுப்புக்களை வகித்தவர். இவர் இதுவரை அயல் பணி என்ற வகையில் மத்திய அரசு பணிக்கு செல்ல வில்லை. 2001 முதல் 2003 வரை குஜராத் கடல்சார் வாரிய துணை தலைவராக இருந்துள்ளார். ராமமோகன ராவின் தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாக பேசுவார்.

ராமமோகன ராவ், தமிழக அரசின் தலைமை செயலாளரானதும், அவருக்கு நெருக்கமானவர்களின் ஆதிக்கம் தலைதூக்கியது. தமிழக ஆளுநராக இருந்த ரேசைய்யாவுக்கும் ராமமோகன ராவுக்கும் அரசு பதவிகளை கடந்து நல்ல நட்பு இருந்தது. இவர்கள் இருவருக்கும் தூதுவராக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் இருந்தார். இதனால் அவர் அதிகாரத்தில் கோலோச்சினார்.

இந்த சூழ்நிலையில் தொழிலதிபர் சேகர்ரெட்டியிடம் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைக்குப் பின்னால் பல அரசியல் சதுரங்க வேட்டை உள்ளது. கர்நாடகாவில் நடந்த வருமானவரி சோதனையில் அமைச்சர் எடப்படி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு வருமானவரித்துறை சேகர்ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சேகர்ரெட்டி கொடுத்த தகவலின்படியே ராமமோகன் ராவின் சென்னை அண்ணாநகர் வீடு உள்பட 13 இடங்களில் இன்று காலை வருமானவரியினர் சோதனை நடத்தினர்.

இந்த அதிரடி சோதனையால் ராமமோகன ராவிடம் அதிக நெருக்கம் காட்டிய அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஏற்கனவே வருமான வரித்துறையினரின் சந்தேக வளையத்திலிருக்கும் அமைச்சர் ஒருவரும், முன்னாள் அமைச்சரும் அப்செட் ஆகி இருக்கின்றனர். இந்த சோதனை சங்கிலி தொடர் போல தொடரும் என்கிறது வருமானவரித்துறை. இந்த சோதனை எல்லாம் தமிழக அரசில் ஆட்சி பிடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு சோதனை காலமாக மாறி உள்ளது. சேகர் ரெட்டியிடம் நெருக்கமாக இருந்தவர்கள் பட்டியலில் ஓ.பன்னீர் செல்வமும் ஒருவர் என்கிறார்கள். இருவரும் திருப்பதியில் ஒன்றாக இருந்த புகைப்படமும் வெளியானது.

சோதனை குறித்து வருமான வரித்துறையினர் கூறுகையில், "காலை 7 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது. வீட்டில் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்துள்ளனர். வருமானவரித்துறை அதிகாரிகளைப் பார்த்ததும் ராமமோகன ராவின் முகத்தில் எந்தவித பதற்றமும் இல்லை. சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் முக்கியத் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது" என்றனர்.

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பலரையும் பின்னுக்குத் தள்ளி தலைமை செயலாளர் பதவிக்கு வந்தார் என்ற சர்ச்சையும் ராமமோகன ராவ் மீது உள்ளது. சீனியாரிட்டி அடிப்படையில் ராமமோகன ராவ், 20வது இடத்தில் இருந்தார். அவருக்கு தலைமை செயலாளர் பதவிக்கு கொடுக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இப்போது அந்த ஆச்சரியத்துக்கான விடையும் தெரியவரும்.

KYC account holders exempt from Rs 5000 deposit limit: RBI

DECCAN CHRONICLE   PublishedDec 21, 2016, 12:57 pm IST
 New Delhi: The Reserve Bank of India (RBI) on Thursday issued a notification partly withdrawing its earlier order disallowing deposits of over Rs 5000 to be made into banks more than once till December 30.

Now, such deposits can be made by KYC compliant account holders, without questions being asked, said RBI.

RBI had on Monday imposed stiff restrictions on depositing more than Rs 5,000 in the scrapped Rs 500 and Rs 1,000 notes, mandating that it can be deposited only once per account till December 30, that too after explaining to bank officials the reasons for not having done that so far.

Stipulating that restrictive conditions will also apply on the cumulative deposit of such notes in a single account when it exceeds Rs 5,000, RBI said that defunct currency up to any amount can be deposited under the new black money amnesty PMGKY scheme.

"It has been decided to place certain restrictions on deposits of SBNs into bank accounts while encouraging the deposits of the same under the Taxation and Investment Regime for the Pradhan Mantri Garib Kalyan Yojana, 2016," RBI said in a notification.

Under the PMGKY scheme, black money holders can deposit unaccounted cash in account which will be subject to 50 per cent tax and 4-year interest free lock-in for the remaining 25 per cent of the amount.

RBI said old notes in excess of Rs 5,000 into a bank account will be received for credit only once during the remaining period till December 30, 2016.

Chennai banks follow RBI's latest diktat, but customers unhappy

TOI

CHENNAI: Several city banks are telling customers not to deposit more than Rs 5,000 in their accounts after the Reserve Bank of India on Tuesday said banks could accept any amount in deposits just once, conditionally.

Multiple deposits will not be allowed and anything above `5,000 will be subject to scrutiny by bank officials and fulfillment of mandatory KYC requirements, an RBI circular said. "Deposits of more than `5,000 of demonetised currency notes will be allowed only once, till December 30," it added. But many bank branches in the city on Tuesday stopped accepting all deposits above `5,000 and posted notices to this effect.

Customers are not amused. "The government told us not to rush, so we didn't. We thought we had time till December 30 to exchange and deposit notes.

On November 22, they stopped exchanges. Now, they are asking us why we delayed," said Sujatha Anand, an HDFC Bank customer. An ICICI Bank customer at Thirvuvanmiyur tweeted his problem to the bank's official handle and the bank tweeted back saying it would revert shortly.

A notice outside an SBI branch on Chamiers Road, Nandanam, said, "Old notes deposits above `5,000 will be accepted only once during the remaining pe riod till December 30,2016. A self-explanatory letter to be attached." Many bank officials said it would be very difficult to implement the RBI directive on deputing two officials to scrutinise deposits.

மணல் குவாரியில் பணத்தை அள்ள ஐடியா கொடுத்தவரே ராம மோகன் ராவ்தானாம்!

சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை இன்று காலை 6 மணியளவில் தொடங்கியது. சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன்ராவ் வீடு மற்றும் அவரது உறவினர், நண்பர்களின் வீடுகள் என 10 வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, ராம மோகன் ராவ் குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை அள்ளலாம் என்று ஐடியா கொடுத்தவர் ராம மோகன் ராவ் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
1990ம் ஆண்டுகளில் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆட்சியாளராக ராம மோகன் ராவ் இருந்தார். அப்போது, மணல் எடுக்க அனுமதி கொடுப்பதன் மூலம் கோடிக்கணக்கில் பணத்தைப் பெறலாம் என மற்ற ஆட்சியாளர்களுக்கு ஐடியா கொடுத்திருக்கிறார் ராம மோகன ராவ். இவர் உருவாக்கி தந்த இந்தத் திட்டம் மூலமே மணல் குவாரிகளை அரசு ஏற்றது.
மணலை வியாபார பொருளாக்கி பல்லாயிரம் கோடி புரள செய்த இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்த ராம மோகன் ராவுக்கும் சேகர் ரெட்டிக்கும் இருக்கும் நெருக்கமான உறவு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ராமமோகன ராவ் வீட்டின் முன்பு ஆர்பரிக்கும் தனி ஒருவன்!


தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்டு வரும் சோதனை குறித்து மக்களுக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஒருவர், தலைமைச் செயலாளர் வீடு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளராக இருந்து வருபவர் ராமமோகன ராவ். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் அமர்த்தப்பட்டார். அவருக்கு அடுத்தப்படியாக ராமமோகன ராவ் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அப்போது, புயல் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை முன்வைத்தார். முதல்வர் ஒருபக்கம் இருந்தாலும், அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும் ராமமோகன ராவின் கையே ஓங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை அண்ணாநகரில் உள்ள ராமமோகன ராவ் வீடு, அலுவலகம் மற்றும் அவரது மகனுக்கு தொடர்புடைய 13 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையால் தமிழக அரசு அதிகாரிகள் கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, ராமமோகன ராவ் வீட்டின் முன்பு ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் திடீரென போராட்டத்தில் குதித்துள்ளார். அப்போது, தலைமைச் செயலாளர் வீட்டில் என்ன சோதனை நடைபெறுகிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சோதனையின்போது காவலர்கள் ஏன் நிறுத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பியவாறு இருந்து கொண்டே இருந்தார்.
மேலும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வீட்டில் சோதனை நடத்துங்கள், ஏன் அதிமுகவை மட்டும் குறி வைத்து சோதனை நடத்தி வருகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பினார். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செந்தில்குமார் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். அப்போது, அவர் தலையில் வைத்திருந்த கட்சி தொப்பியை அவர்கள் பிடுங்கிக் கொண்டதோடு மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்தவர்கள், தாக்குதல் நடத்தியவர்களை அங்கிருந்து அனுப்பி விட்டனர். 
ராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்படும் சோதனை குறித்தும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் தனி ஒருவர் கோஷங்கள் எழுப்பியவாறு நின்று கொண்டு இருப்பதால் அந்த இடமே பரபரப்புடன் காணப்படுகிறது.

NEWS TODAY 14.06.2026