Thursday, January 12, 2017

 வறட்சியால் பறிக்கப்பட்ட வாழ்வாதாரம்: சாகுபடியை இழந்து தவிக்கும் திருவாரூர் விவசாயிகள்

வி.தேவதாசன்

  
2003-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி டெல்டா விவசாயிகளின் வாழ்க்கை அவல நிலை குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்திய நாள். டெல்டா மாவட்டமெங்கும் விவசாயிகள் பெரும் போராட்டத்தில் குதித்த நாள். அந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் வறட்சி வாட்டி யெடுத்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள பாளையக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம், தற்கொலை செய்து கொண்டார். 

ஆனால் அவர் உயிரை துறக்கும் முன், அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனது தற்கொலைக்கான காரணம் குறித்து நீண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, உயிரை விட்டார். வறட்சியும், வறுமையும், அதனால் சேர்ந்த கடனும் ஏற்படுத்திய நெருக் கடி பற்றி கடிதத்தில் விவரித்திருந்த சண்முகம், அப்போதைய மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் வை.சிவபுண்ணியம் மூலம் தமிழக முதல்வரிடம் இந்த கடிதம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற குறிப்பையும் அதில் எழுதியிருந் தார். அன்றைக்கு மக்கள் மன்றத்திலும், தமிழக சட்டப் பேரவையிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய கடிதம் அது. 

இன்று மீண்டும் வறட்சி. ஆனால் 2003-ம் ஆண்டு கண்ட வறட்சி அல்ல; அதை விடவும் மோசமான வறட்சி. 100 ஆண்டுகளில் இல்லாத வறட்சி என்கிறார்கள். சண்முகம் உயிர் துறந்த அதே பாளையக்கோட்டை கிராமத்தில் இந்த ஆண்டு மீண்டும் ஒரு உயிரை காவு வாங்கியிருக்கிறது இந்த ஆண்டின் வறட்சி. 

பாளையக்கோட்டை புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அசோகன். இந்த ஆண்டு 6 ஏக்கர் நிலத்தில் நேரடி விதைப்பு மூலம் நெல் சாகுபடி செய்தார். எதிர்பார்த்தபடி ஆற்றில் தண்ணீர் வரவில்லை. பருவமழையும் பொய்த்தது. பயிரை இனி காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அசோகன் இழந்து விட்டார். இந்நிலையில், திடீரென பெய்த ஒரு சிறுமழையால் பயிருக்கு கொஞ்சம் தண்ணீர் கிடைத்தது. இந்த தண்ணீர் போதாது. ஆனாலும், வயலுக்கு உரம் கொடுத்து பயிரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று அசோகனின் மனம் பதைபதைத்தது. 

கையில் பணம் இல்லை. மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கடன் கொடுக்கக் கூடிய நிலையில் ஊரில் யாரும் இல்லை. வீட்டில் இருந்த சொற்ப அளவு தங்க நகையை எடுத்துக் கொண்டு உள்ளூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ஓடினார் அசோகன்.
உயிரிழந்த விவசாயி அசோகனின் படத்துக்கு அருகே சோகத்துடன் அமர்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர். 

அதன் பிறகு என்ன நடந்தது என்பதை அவரது மூத்த மகன் கலைவாணன் விவரிக்கிறார். “அது டிசம்பர் மாதம் 1-ம் தேதி. அப்பா நகையை எடுத்துச் சென்று இங்குள்ள ஐ.ஓ.பி. வங்கியில் ரூ.14 ஆயிரத்துக்கு அடகு வைத்தார். அந்த பணத்தை கொண்டு வயலுக்கு உரம் வாங்கி வந்து விடலாம் என்ற எண்ணத்தில் நீண்ட நேரம் வங்கியில் வரிசையில் நின்றிருக்கிறார். மாலை வரை பணம் கிடைக்கவில்லை. நகையை அடகு வைத்ததற்கான ரசீது மட்டும் கொடுத்த வங்கி அதிகாரிகள், வங்கியில் பணம் இல்லை என்றும், மறுநாள் வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறும் கூறி விட்டனர்.
ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய அப்பா, இரவு முழுவதும் தூங்காமல் மறுநாளாவது பணம் கிடைத்து விடுமா என்பது பற்றியும், வயலில் ஈரம் காய்வதற்குள் உரம் போட்டுவிட முடியுமா என்பது பற்றியும் கவலையுடன் பேசிக் கொண்டிருந்தார். மறுநாள் காலை சாப்பிட கூட இல்லாமல் 8 மணிக்கெல்லாம் வங்கியின் முன்னே வரிசையில் போய் நின்றார். நீண்ட நேரம் வரிசையிலேயே காத்திருந்தார். சுமார் 10.30 மணி அளவில், நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கமடைந்த அவர் அதே இடத்தில் சரிந்து கீழே விழுந்திருக்கிறார். அந்த இடத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறி விட்டனர். அப்பா சாகுபடி செய்த பயிர்கள் முழுவதும் கருகி, சாகுபடியே அழிந்து விட்டது. பயிர்கள் மட்டும் சாகவில்லை. பயிர்கள் சாகும் முன்னே எங்கள் அப்பாவும் செத்து விட்டார்” என்று கண்ணீருடன் கூறினார் கலைவாணன்.
வறட்சியின் கோரம் 56 வயதில் அசோகனின் உயிரை பறித்து சென்று விட்டது. மூத்த மகன் விவசாயத்தை கவனிக்கிறார். இளைய மகனும், மகளும் கல்லூரியில் படித்து வருகின்றனர். யாருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. அடுத்து என்ன செய்வது என எதுவும் புரியாமல் தவித்து வருகிறார் அசோகனின் மனைவி வேதவல்லி. 

வங்கிக்கு கோரிக்கை
இந்த சம்பவம் பற்றி மேலும் பல தகவல்களை தெரிவித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோட்டூர் ஒன்றிய செயலாளர் பி.பரந்தாமன், “அசோகன் எந்த நோக்கத்துக்காக நகையை அடகு வைத்தாரோ அதற்கு பணம் கிடைக்க வில்லை. இன்று வரை அந்த குடும்பத்துக்கு பணம் கிடைக்காததோடு, நகையும் இப்போது வங்கியில் உள்ளது. இனி இறப்புச் சான்று, வாரிசுச் சான்று என பல சம்பிரதாயங்கள் முடிந்து தான் வங்கியில் இருந்து நகையை பெற முடியும். 

இதற்கிடையே பி.இ. இரண்டாம் ஆண்டு பயிலும் அசோகனின் இளைய மகன் பிரவீனுக்கு கல்விக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. கல்விக் கடன் பெறுவதற்கு உரிய தகுதி இருந்தும், உள்ளூரில் இருக்கும் அதே வங்கியிடம் கல்விக்கடன் கேட்டு எவ்வளவோ மன்றாடியும் கூட கடன் வழங்க மறுத்து விட்டார்கள். தங்கள் வங்கியின் வாசலில் கீழே விழுந்து உயிரை துறந்த ஏழை விவசாயியின் மகன் என்ற மனிதாபி மான அடிப்படையில், இப்போதாவது அசோக னின் மகனுக்கு கல்விக் கடன் வழங்க அந்த வங்கி நிர்வாகம் முன்வர வேண்டும்” என்றார். 

அசோகனின் மரணம் ஒரு உதாரணம் மட்டுமே. திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் இதுபோல தினமும் பல மரண செய்திகள் வந்து கொண்டே இருக் கின்றன. இந்த மாவட்டத்தில் உள்ள கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, திருவாரூர் பகுதிகள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, நீடாமங்கலம், வலங்கைமான், மன்னார்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் இதரப் பகுதிகளிலும் வறட்சி பெருமளவில் பாதித்துள்ளது. 

முத்துப்பேட்டை ஒன்றியம் குன்னலூர் ஊராட்சி தர்க்காஸ் கிராமத்துக்கு சென்றபோது, கண்ணுக்கெட்டிய தூரம் பரந்து விரிந்திருந்த வயல்வெளியில் எங்கும் பச்சை நிறம் தெரிந்தது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது நெற்பயிர்கள் செழித்து வளர்ந்திருப்பது போல இருந்தது. ஆனால் அந்த வயல்களில் கூட்டம் கூட்டமாக கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்தன.
முத்துப்பேட்டை ஒன்றியம் குன்னலூர் ஊராட்சி தர்க்காஸ் கிராமத்தில் வயல்களில் மண்டிக் கிடக்கும் புல், களைகளைக் காட்டும் விவசாயிகள்.
இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த எஸ். இளங்கோவனிடம் கேட்டபோது, “பருவ மழை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் நேரடி விதைப்பில் நெல் விதைகளை தெளித்தோம். விதைத்த நெல் முளைத்து, பயிரும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. 

பிள்ளைகளைப் போல வளர்த்தோம்.. 
 
எங்கள் பகுதியில் நிலத்தடி நீரில் உப்புத் தன்மை அதிகரித்து விட்டது. அந்த நீரை வயலுக்கு இறைத்தால், பயிர்கள் கருகி விடும். ஆகவே, ஆற்று நீர் அல்லது மழை நீர்தான் எங்களுக்கான பாசன ஆதாரம். இந்த சூழலில் ஆற்று நீரும் வராமல், பருவமழையும் பொய்த்ததால், நிலம் வறண்டுபோய் எங்கள் கண்ணெதிரே ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிர்கள் கருகி அழிந்து விட்டன. 

அப்போதெல்லாம் பெய்யாத மழை கடந்த வாரம் திடீரென இரண்டு நாட்கள் கொட்டித் தீர்த்தது. ஏற்கெனவே பயிர்கள் அழிந்து விட்டதால் இந்த மழையால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்த மழையால் வயல்களில் புல்லும், களையும் நன்கு செழித்து வளர்ந்து இப்போது பச்சைப் பசேலென உள்ளது. இந்த புல்தான் தூரத்தில் இருந்து பார்க்கும்போது நெற்பயிர்களைப் போல தெரிகிறது” என்றார். 

அந்த கிராமத்தைச் சேர்ந்த சில பெண்கள், “பிள்ளைகளைப் போல வளர்த்த நெற்பயிர் கண்ணுக்கெதிரே அழியும்போது அதை தாங்கிக் கொள்ள மனதில் பெரும் தெம்பு வேண்டும். அழிந்து போன வயல்களைப் பார்த்து குடும்பம் குடும்பமாக கூடி அழுகிறோம். அழுது புலம்பி எங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறோம். இந்த அளவுக்கு கூட மனத்திடம் இல்லாத பலர் அதிர்ச்சி யாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரை விடுகின்றனர். இந்த நிலைமை இன்னும் எங்கு கொண்டு போய் விடும் என தெரியவில்லை” என்று தங்கள் கவலையை வெளிப்படுத்தினர். 

சாகுபடியே இல்லாத ஆண்டு 
 
“எனக்கு 80 வயதாகிறது. என் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு வறட்சியை பார்த்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை” என்கிறார் காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன். 

“ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டால் டெல்டாவில் குறுவையும், தாளடியும் சாகுபடி நடக்கும். ஒருவேளை அணையில் போதிய நீர் இருப்பு இல்லாமல் தாமதமாகத் திறக்கப்பட்டால் சம்பா நெல் சாகுபடி நடைபெறும். ஆனால் ஒரு பருவம் கூட நெல் சாகுபடி இல்லாத ஒரு ஆண்டை என் வாழ்நாளில் இப்போதுதான் முதல் முறையாக சந்திக்கிறேன். நிலத்தடி நீரை நம்பி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் சாகுபடி செலவை ஈடுகட்டும் அளவுக்கு கூட மகசூல் இல்லை.
இதனால் மனமுடையும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், ‘அய்யோ எல்லாம் போச்சே’ என்ற அதிர்ச்சியில் உயிரைத் துறப்பதும், எங்களை மேலும் மேலும் துக்கத்தில் ஆழ்த்துகிறது. 

உச்ச நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்துங்கள்.. 
 
நம்பிக்கை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அரசு போர்க்கால நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். விவசாயிகளின் மரணங்களை அலட்சி யப்படுத்தாமல், முறைப்படி பதிவு செய்து, உச்ச நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்துக்கு உண்மை நிலைமையை தெரியப்படுத்தினால்தான் எதிர்காலத்திலாவது காவிரியில் உரிய நீர் பெற்று நமது சாகுபடியை உறுதி செய்ய முடியும்” என்றார் ரங்கநாதன். 

மன்னார்குடி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வை.சிவபுண்ணியம் கூறும்போது, “நாட்டுக்கே உணவு படைத்த பெருமை மிக்க மண் இது. ஆனால் இன்று அதே மண்ணில் கவுரத்துடன் வாழ வழியில்லை என்ற மோசமான நிலைமையை தற்போதைய வறட்சி ஏற்படுத்தி விட்டது. இதனால் நம்பிக்கை இழந்த விவசாயிகள் தினமும் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு காலத்தில் ஆற்று நீர் வராவிட்டால் கூட, மழை நீரையும், நிலத்தடி நீரையும் நம்பி சாகுபடி செய்து விட முடியும் என்ற நம்பிக்கை திருவாரூர் மாவட்ட விவசாயிகளிடம் இருந்தது. ஆனால் இன்று மாவட்டத்தின் பெரும்பகுதியில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்து விட்டதால், அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது. 

இந்த மாவட்டத்தில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லை என்ற நிலைமை விரைவிலேயே வரப் போகிறது. ஆகவே, மத்திய, மாநில அரசுகள் உட னடியாக தனி கவனம் செலுத்தி டெல்டா மக்க ளைக் காப்பாற்ற முன்வர வேண்டும்” என்றார். 

தொலைநோக்கு திட்டம் அவசியம் 
 
“டெல்டா மாவட்டங்களை பெரும் அழிவி லிருந்து காப்பாற்ற வேண்டுமானால், தொலை நோக்கு பார்வையிலான திட்டமிடல் அவசியம்” என்கிறார் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன். 

“பாசனம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் வேண்டும். அது மட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளம், ஆறு, கால்வாய்களையும் தூர்வாரி நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கான தனிப்பெரும் திட்டம், மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டுடன் உருவாக்கப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவ செல்வந்தர்களும், பெரும் தொழில் நிறுவனங்களும், சேவை அமைப்புகளும் முன்வர வேண்டும். 

எந்தவொரு விவசாயியும் தனது மனைவி யையும், குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு தற்கொலை செய்து கொள்ள துணிய மாட்டான். ஆனாலும் டெல்டாவில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்துள்ளனர் என்றால் இங்குள்ள நிலைமையின் தீவிரத்தை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் போதிய நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்” என்று வலியுறுத்துகிறார் பாண்டியன். 

இதற்கிடையே உயிரிழந்த விவசாயிகளின் மரணத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் சில அமைச்சர்கள் பேசியுள்ளது விவசாயிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுபற்றி கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன், “வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவசாயிகளின் மரணத்தை கொச்சைப்படுத்திய அமைச்சர்களை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டிக்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்” என்றார். 

ஓரிரு நாளில் வரவுள்ள உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளை வரவேற்க எவ்வித தயாரிப்பும் இன்றி, வாழ்வாதாரத்தையே இழந்த துக்கமான மன நிலையில் டெல்டா விவசாயிகள் உள்ளனர். ஊருக்கெல்லாம் உணவு தந்த அந்த உழவர்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் அரசு தற்போது எடுக்கும் நடவடிக்கைகள், இனி வரும் காலத்தில் உழவுத் தொழிலில் நம்மால் நீடித்திருக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.
வேதனை!
ஜல்லிக்கட்டிலும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்
சொதப்பல் :பிள்ளையாருக்கு
பதிலாக குரங்கை பிடித்த கதை தான்
 DINAMALAR
அரசியலுக்கு அப்பாற்பட்டு, நடுநிலையாக இருக்க வேண்டியவர், எம்.பி.,க்களை திரட்டி வந்து, மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் செயல்படுவது தான், துணை சபாநாயகரின் பணியா' என்ற, பலத்த கேள்வி எழுந்துள்ளது.
ஜல்லிக்கட்டு விஷயத்தில், பிரதமரை சந்திக்க, முறையான அணுகுமுறையை பின்பற்றாமல், தமிழக நலனுக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுவது போன்ற தோற்றத்தை, அ.தி.மு.க.,வினர் ஏற்படுத்தியுள்ளதாகவும், டில்லியில் பேச்சு எழுந்துள்ளது.ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் வலுத்துவரும் நிலை யில், நேற்று, துணை சபாநாயகர், தம்பிதுரை தலைமையில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் குழு, டில்லிக்கு வந்து மனு அளித்தது.

முதலில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், அனில் மாதவ் தவே இல்லத்திற்கு சென்ற அந்தக்குழு, அ.தி.மு.க., பொதுச் செயலர், சசிகலாவின் கடிதத்தையே மனுவாக அளித்தது. இதன்பின், பிரதமர் அலுவலகத்திற்கு சென்று, அங்கும் ஓர் அதிகாரியைச் சந்தித்து, அதே கடிதத்தை மனுவாக அளித்துவிட்டு, பேட்டியும் அளித்தனர்.

மறக்கவில்லை

பிரதமரைச் சந்தித்து, அவசர சட்டம் இயற்ற வலியறுத்தப் போவதாக கூறிவிட்டு, வழக்கம்போல் இந்த முறையும், ஓர் அதிகாரியிடம் தான், இவர்களால் மனு அளிக்க முடிந்துள்ளது. இதுவரை, பல்வேறு பிரச்னைகளுக்காக, 11 முறை நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டும், நெய்வேலி நிறுவனப் பிரச்னைக்காக மட்டுமே, பிரதமரை, அ.தி.மு.க., - எம்.பி.,க்களால் சந்திக்க முடிந்தது. 'பார்லிமென்டில், அதிகம் பலம் உடைய கட்சியான, அ.தி.மு.க.,வுக்கு ஏன் இந்த அவலம்' என்பது குறித்த கேள்விக்கு, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது:

நாட்டின் அரசியல் சாசன உயர் பதவிகளான, ஜனாதிபதி, பிரதமர் என்ற நடைமுறை வரிசை யில், 10வது இடத்தில் வருகிறது, லோக்சபா துணை சபாநாயகர் பதவி.பாரபட்சமின்றி,
அரசியலுக்கு அப்பாற்பட்டு நடப்பதுடன், அரசுக்கு எதிராக, எம்.பி.,க்கள், சபைக்குள் நெருக்கடி தரும்போது, அரணாக நின்று, அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமையும் உடையவர்கள் தான், சபாநாயகரும், துணை சபாநாயகரும்.
ஆனால், தம்பிதுரையோ, எம்.பி.,க்களை குழுவாக திரட்டி, அதற்கு இவரே தலைமையேற்று, பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் நெருக்கடி தருகிறார். கடந்த முறை, பார்லிமென்ட்டில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு, எம்.பி.,க்களை ஊர்வலமாக, அவர் அழைத்து வந்ததை, பிரதமர் மறக்கவில்லை.

கண்ணியம் மிக்க துணை சபாநாயகர் அலுவலக, 'லெட்டர் பேடை' தன், சுய அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தி,
பார்லிமென்ட்டின் மாண்பை குலைத்தார். தற்போது, ஜல்லிக்கட்டு விவகாரத்திலும், இவரது நடவடிக்கை ஆச்சர்யம் அளிக்கிறது.

அதிருப்தி

துணை சபாநாயகர் என்பதால், அவசர சட்டம் குறித்த நடைமுறை, அவருக்கு தெரியும். நினைத்த மாத்திரத்தில், அதை கொண்டு வந்துவிட முடியாது. கடந்த வாரம் தான், அவசர சட்டங்கள் குறித்து, சுப்ரீம் கோர்ட் கடுமையான அதிருப்தியை வெளி யிட்டு இருந்தது.அவசர சட்டம் தான் தீர்வு என்றால், அதற்கு எப்போதிருந்தோ முயற்சி செய்திருக்க லாம். குளிர்கால கூட்டத் தொடரிலேயே ஒப்புதலை வாங்கியிருக்கலாம். அப்போது, பார்லி.,க்கு ஒருவர் கூட
வரவில்லை.

தற்போது கூட, ஜெயலலிதாமறைவு, பொதுக்குழு என பல பிரச்னைகளில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பிசியாக இருந்தாலும், டிசம்பர், 29க்கு பின், பெரிய வேலைகள் எதுவும் அவர்களுக்கு இல்லை. இந்த, 13 நாட்களாக, அவர்கள் என்ன செய்து கொண்டிருந்த னர். பிரச்னைக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென உண்மையிலேயே, தம்பிதுரைக்கு அக்கறை இருந்தால், குறைந்தபட்சம், இரண்டு நாட்களுக்கு முன்பே, முறைப்படி தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

சங்கடம்

பிரதமரின் இருப்பு மற்றும் அலுவல்களை கேட்டறிந்து, அதன் பின், எம்.பி.,க்களை அழைத்து
வந்திருந்தால், அது நியாயம். பிரதமர், கடந்த மூன்று நாட்களாக, குஜராத்தில் நடந்த மாநாட்டில் இருந்தார் என்பதும், அங்கிருந்து வந்ததும், டில்லியில், கென்யா அதிபருடன் அவருக்கு சந்திப்பு உள்ளது என்பதும் தம்பிதுரைக்கு தெரியும்.

ஒரு, 'பேக்ஸை' மட்டும் அனுப்பிவிட்டு, எம்.பி.,க் களை டில்லிக்கு வரச்சொல்வதும், பிரதமரை சந்திக்கப் போவதாக, முதல் நாள் செய்தியாக்கு வதும் ஏற்புடையதல்ல.இதன்மூலம், 'தமிழக நலன் களுக்கு எதிரானவர் மோடி; தமிழக எம்.பி.,க்களை சந்திக்க மறுக்கிறார்' என்பது போன்ற தோற்றத்தை, துணை சபாநாயகரே முன்னின்று செயல்படுத்துவது நியாயமல்ல.

தன் அரசியல் லாபங்களுக்காக, துணை சபாநாயகர் மற்றும் பிரதமர் அலுவலகங்களை கிள்ளுக்கீரை யாக மாற்ற, நினைக்கிறாரே என்ற வேதனை தான் மிஞ்சுகிறது.அரசியல் சாசன பதவியில் இருந்து கொண்டு, பிரதமரின் நடைமுறை அலுவல்களைக் கூட உறுதிபடுத்தாமல், திடீரென டில்லிக்கு வந்து, பேட்டி, ஊர்வலம், செய்தி என, அரசியல் செய்வ தால், மத்திய, மாநில உறவுகளுக்கு ஊறு ஏற்படுவது மட்டுமல்ல; தேவையற்ற அரசியல் சங்கடங்களை யும் ஏற்படுத்தும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நிழல் முதல்வரா?

சசிகலா முதல்வராக வேண்டுமென, முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு எதிராக, தம்பிதுரை தான் அறிக்கை விட்டார். தற்போது, முதல்வரின் கடிதத்துக்கு பதிலாக, சசிகலாவின் கடிதத்தையே, டில்லியில் மனுவாக தந்துள்ளார்.இதைபார்க்கும் போது, 'பன்னீர்செல்வத்துக்கு எதிராக, தம்பிதுரை, மீண்டும் வாள் சுழற்றியுள்ளார். சசிகலா என்ற கேடயத்தை கையில் ஏந்தி, தமிழகத்தின் நிழல் முதல்வராக செயல்படு கிறாரா தம்பிதுரை' என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இது என்ன நியாயம்?

அ.தி.மு.க., பொதுச்செயலர், சசிகலாவின் கடிதம் தான் கோரிக்கை மனு; அதை, அமைச்சர், அனில் மாதவ் தவேவிடம், காலையில் அளித்தனர். பின்,
Advertisement
அதே மனுதான், பிரதமர் அலுவலகத்திலும் அளிக்கப்பட்டது. பிரதமரிடம் அளிக்க வேண்டிய மனுவை, அவருக்குப் போய்ச் சேரும் முன்பே, ஒரு அமைச்சரிடம் எப்படி அளிக்கலாம்? அப்படி யானால், பிரதமருக்கு அளிக்க வேண்டிய மனு பற்றிய விபரங்களை முன் கூட்டியே கசிய விடுகின்றனரா என்பதும் புரியவில்லை.

உடனே வர முடியுமா?

ஜல்லிக்கட்டு தொடர்பாக மனு அளிக்க சென்றபோது, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பலரை பார்க்க முடியவில்லை. ஒரு சிலர், கடைசி நேரத்தில், அடித்துப் பிடித்து ஓடிவந்தனர். விசாரித்தபோது, 'டில்லியில் கடும் குளிர். காலையில் விமான சேவை தினமும் பாதிக் கப்படுகிறது. மேலும், எல்லா எம்.பி.,க் களுமே சென்னையில் இருப்பதில்லை. இவர்கள் எல்லாம் கிளம்பி வர, போதிய அவகாசம் தராமல், உடனே பறந்து வா என்றால், முடியுமா' என, பதில் கேள்வி வருகிறது.

தீர்ப்புக்கு பின் நல்ல முடிவு:மத்திய அரசு உறுதி

'ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., - எம்.பி.,க் கள், மத்திய அமைச்சர் அனில் தவேயை சந்தித்து, கோரிக்கை விடுத்தனர். அதன் பின், நிருபர்களிடம், அனில் தவே கூறியதாவது:

காளைகள் உட்பட, விலங்குகளை எப்படி நடத்த வேண்டும் என்பது நம் பாரம்பரியத்தில் உள்ளது. விலங்குகளை துன்புறுத்தக் கூடாது என்பதை, யாரும் நமக்கு சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டும் அதுபோலத்தான். இதில், காளைகள் எந்த விதத்திலும் துன்புறுத்தப் படுவதில்லை.இந்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய, ஐ.மு., கூட்டணி அரசு செய்த தவறு தான் தற்போதைய பிரச்னைக்கு காரணம். காளைகளை, காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்த்து, காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டது, தற்போது ஜல்லிக்கட்டுக்கு தடையாக அமைந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி களில், காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்றும், அதன் பாரம்பரியம் குறித்தும் மீண்டும் முறையிடுவோம். இவற்றை கோர்ட் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.மற்றபடி, இந்த விவகாரத் தில், மத்திய அரசு தயாராகவே உள்ளது. நடு இரவில் கூட, தேவையான நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காகத் தான் காத்திருக்கிறோம். அதன் பின்னரே, இதில் நல்ல முடிவை எடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

Wednesday, January 11, 2017

  • Spread awarness about digi-payments on youth day: UGC to


  • NEW DELHI  Jan 10 (PTI) The UGC has asked universities and colleges to involve youth to create awareness about digital payments on the occasion of the National Youth Day which is celebrated on January 12 every year.

In a letter to vice chancellors of all central universities, UGC Secretary Jaspal S Sandhu referred to a HRD Ministry letter forwarding a Ministry of Youth Affairs and Sports communication in this regard.

Sandhu said the Youth and Sports Ministry has suggested that all the youth organisations should act in synchronised manner to mobilise people to carry out a chosen activity all over the country on the National Youth Day.

As part of the commemoration the day, each youth who is conversant with digital payments should educate at least ten persons in this regard, the UGC letter said.

It also suggested that each youth who is not conversant with this transaction method must learn at least one mode of digital payments on January 12.

Each youth organisation should organise training programmes across the country to the best of their ability on digital payments.

A section of doctors of modern medicine, AMAI oppose allowing MBBS graduates into Ayurveda PG course

Peethaambaran Kunnathoor, Chennai
Wednesday, January 11, 2017, 08:00 Hrs  [IST]
Even as Ayurveda physicians are up in arms against the Union Ayush ministry’s plan to admit MBBS graduates into Ayurveda PG courses, mixed responses have come from experts in the modern medical system. Some of them have welcomed the decision of the government, some others opposed.

Fully supporting the move of the government, the eminent doctor and medico-legal-consultant in New Delhi, Prof M C Gupta has responded to Pharmabiz that things about efficacy proven medicines and scientifically validated methods of ancient treatment systems can be shared with the students of modern medical science. “Different systems of medicine need not remain opposed to each other. The good and scientifically validated parts of various ancient systems of medicine need to be researched and brought within the fold of holistic modern medicine,” he said.

Another doctor from Haryana said there should be a short crash course for the MBBS graduates to know the basics of Ayurveda before they are admitted to PG courses in the ancient system. According to him it is not easy to learn Ayurveda at PG level without grasping basic knowledge in it.

But, expressing an unfavorable opinion about the Ayush ministry’s plan, the eminent neurosurgeon and the former vice-chancellor of Kerala University, Dr B Eqbal said he does not support the government move in this regard. According to him, if the allopathy medical graduates want to study Ayurveda, they can go for the graduate course first. If they want to do the PG in Ayurveda, they must do the UG also in the same subject. He said the MBBS graduates must avoid trying for Ayurveda PG without achieving a graduation in it.

Meanwhile, the president of the Ayurveda Medical Association of India (AMAI) has written a letter to the Union minister of Ayush requesting him to not go ahead with the move of admitting MBBS graduates into MD and MS courses of Ayurveda. He said, at present a graduate in Ayurveda, who aspires to join the PG course, normally completes his graduation, BAMS, after 5½ years of study. Then, without any basic knowledge in the system if one is admitted into the PG course, it will question the authenticity and significance of Ayurveda system, said Dr G Vinodkumar, president of AMAI.

Further he said in the letter that the government move is a violation of the Indian Medicine Central Council Act of 1970 and the PG Regulations laid down there under by Central Council of Indian Medicine. The Section 6 (1) of the PG Regulations defines the basic qualification for post graduation in Ayurveda as BAMS.

Dr Vinodkumar also wanted the Ayush ministry to stop the plan of conducting separate entrance test for students to join Ayurveda degree course. Currently, the students are selected from the list of common entrance examination and that system should be followed.

Vandalur zoo misses reopening deadline

DECCAN CHRONICLE. | P A JEBARAJ
Chennai: Mauled by cyclone Vardah and closed last month, Arignar Anna Zoological Park at Vandalur which was initially set to be opened by Pongal will now miss its deadline as the restoration of the zoo is consuming more time, informed sources with the Vandalur zoo told DC.

The park authorities have sought compensation to an estimate of Rs 24 crore from the union government. A detailed presentation in this regard was made during the visit of chief minister O. Panneerselvam and the same was also shared to the central team that visited zoo last month, sources said.

The original idea was to throw open the zoo for public during Pongal as the park is a cost effective crowd puller during Pongal Holidays. During the three days of Pongal the park will easily attract a footfall of more than 5 lakh and is always a hit among both the rural and the urban crowd.

When asked about the delay in restoring the zoo, a senior forest official said a lot of safety parameters were involved in the zoo reopening. Timbers from the uprooted trees have been cleared and all the circuit roads in the zoo are ready for visitors. The work is getting delayed, as there is a lot of safety parameters involved in restoring the zoo. Several animal enclosures are old and some of them have been damaged, only after ensuring the safety of public life, the zoo will be opened. Our next deadline is Republic day and we are now working towards the revised schedule, the official added.

"Zoo was a source of entertainment for public and an income for us, but with the park remaining closed our daily collection is badly affected and the foresters should reopen the zoo at the earliest," said S. Arjunan, a local auto driver of Vandalur. Meanwhile the Tourism department eyeing the Pongal season is working round the clock at Island grounds to thrown open the annual exhibition fair.

Jayalalithaa still CM on government websites

DECCAN CHRONICLE. | C S KOTTESWARAN
Chennai: Government websites and portals of state transport corporations have been awaiting updates for the past two months.

According to government portals, Ms Jayalalithaa who passed away last month is still the state chief minister. Public Information and basic government orders are also not updated on various government sites since September.

Screenshots of Tamil Nadu state Transport Corporation website and Arasu cable website showing Jayalalihaa as Chief minister.

Though the state’s primary website (tn.gov.in) carries the portrait of O. Panneerselvam as the state’s CM, other government websites like that of the State Express Transport Corporation, Chennai Corporation, State Industries Promotion Corporation of Tamil Nadu and Tamil Nadu Tourism maintain the portrait of Ms Jayalalithaa along with the department logo, though it is a regular protocol for government sites to have the picture of the incumbent chief minister. Meanwhile, the information department and other government departments are also yet to fix the portraits of Chief Minister O. Pannerselvam at government offices, especially in the state secretariat. It may be noted that Panneerselvam assumed office as chief minister on December 6.

“The video campaigns publicised by the information department at cinema theatres are also old and need a revamp. There is nothing wrong in campaign materials speaking about former CMs like MGR and Jayalalithaa as they were iconic leaders, but the incumbent CM’s portrait should also be there, ” said K G S Vasan, a native of Ernakulam, now settled in Chennai.

When contacted, state information minister M. Manikandan said that the directorate of information and public relations is the department that provides content and photographs to be uploaded for all government websites. Both the non-updates of public information details (on schemes and government orders) and the replacement of pictures will be taken up with the DIPR for further action,” he responded.

தனியார் பஸ்சில் வீடியோ போட்டு கவர்ந்தது அந்தக்காலம்... இப்போ இலவச வைபை வந்தாச்சு!


திருநெல்வேலி: பேருந்துகளில் பயணக்களைப்பு தெரியாமல் பயணிகள் பயணம் செய்வதற்கு வீடியோ ஒளிபரப்பிய காலம் போய் இப்போது இலவச வைபை வசதி செய்து கொடுத்து வருகின்றனர் பேருந்து உரிமையாளர்கள்.
மக்களிடையே இணையதள வசதி உள்ள ஆன்ட்ராய்டு செல்போன்கள் புழக்கம் அதிகரித்து உள்ளது. நெல்லையில் சில தனியார் டவுன் பஸ்சில் இலவச வைபை வசதியை ஏற்படுத்தி இருக்கின்றனர். தனியார் பஸ் கம்பெனி நிர்வாகம், பயணிகளை கவருவதற்காக டி.வி., எப்.எம்.ரேடியோ போன்ற வசதிகளை செய்துள்ளன. இதனால் பெரும்பாலான பயணிகள் அரசு பஸ்சில் பயணம் செய்வதை தவிர்த்து, தனியார் பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே நெல்லையில் உள்ள தனியார் பஸ் கம்பெனி நிர்வாகம், பயணிகளை கவருவதற்காக நெல்லையில் இருந்து கருங்குளத்திற்கு இயக்கப்படும் டவுன் பஸ்சில் இலவச வைபை வசதியை அறிமுகப்படுத்தியது.
இதை தொடர்ந்து நெல்லை டவுணில் இருந்து மேலப்பாளையம் செல்லக்கூடிய மற்றொரு பஸ்சிலும் அந்த தனியார் நிறுவனம் இலவச வைபை வசதி செய்திருக்கிறது. இந்த பஸ்சில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் செல்போனில் இணைய தள சேவை பெற விரும்பும் பட்சத்தில், கண்டக்டரிடம் வைபை செயல்படுவதற்கான பாஸ்வேர்டு கேட்டு, பயன்படுத்திக் கொள்ளலாம். பஸ்சில் இருந்து இறங்கிய சற்றுநேரத்தில் வைபை இணைப்பு தானாக செயல் இழந்து விடும். தனியார் பஸ்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த இலவச வைபை வசதி பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

DM arrives late, sparks min’s fury, reprimand

DM arrives late, sparks min’s fury, reprimand  Neha.Lalchandani@timesofindia.com  28.03.2026 Lucknow : Made to wait for 45 minutes by the di...