Tuesday, January 31, 2017

ராஜதந்திரத்தின் வெற்றி!

By ஆசிரியர்  |   Published on : 28th January 2017 01:40 AM  | 
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யன் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதன் பின்னணியில், நரேந்திர மோடி அரசின் மிகப்பெரிய ராஜதந்திரம் அடங்கி இருக்கிறது. மோடி அரசு ஆட்சிக்கு வந்ததுமுதலே இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குமான நெருக்கம் அதிகரித்திருக்கிறது. அந்த நெருக்கத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது அபுதாபி இளவரசர் நமது 68-ஆவது குடியரசு தின விழாவில் பங்கேற்றது.
1991 வரை இந்தியா மேற்கத்திய நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தது. அதை மாற்றி, இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் கிழக்கு நோக்கிய கவனத்தில் முனைப்புக் காட்ட முற்பட்டது நரசிம்ம ராவ் அரசுதான். அதேபோல இப்போது நரேந்திர மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையில் மேற்கு நோக்கிய கவனம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேலைநாடுகள் மட்டுமல்லாமல், மேற்கு ஆசியாவில் கூடுதல் கவனம் செலுத்தும் முனைப்பு காணப்படுகிறது. இந்தியாவைப் போலவே மேற்கு ஆசிய நாடுகளும், அங்கே ஏற்பட்டிருக்கும் நிலையற்ற தன்மையால் பாதிக்கப்பட்டுத் தங்கள் கவனத்தை இந்தியா பக்கம் திருப்ப முற்பட்டிருப்பது நமக்கு சாதகமாகியிருக்கிறது.
இந்திரா காந்திக்குப் பிறகு, ஏறத்தாழ 34 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் அரபு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றது 2015-இல்தான். பிரதமர் நரேந்திர மோடியின் அரபு நாடுகள் விஜயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய - இஸ்ரேல் உறவின் நெருக்கம் மிகவும் அதிகரித்திருந்தும்கூட, அரபு நாடுகளுடனான நமது நெருக்கத்தை அது பாதிக்கவில்லை. அதற்கு சில காரணங்கள் இல்லாமல் இல்லை.
மேற்கு ஆசியாவில் காணப்படும் ஷியா முஸ்லிம்களின் எழுச்சியும், ஈரானும் அமெரிக்காவும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நெருக்கமும் பல அரேபிய சன்னி முஸ்லிம் நாடுகளை, குறிப்பாக, சவூதி அரேபியாவையும் ஐக்கிய அரபு அமீரகத்தையும் கவலைப்பட வைத்திருக்கிறது. நீண்டகாலமாக, இந்த இரண்டு நாடுகளும் பாகிஸ்தானுடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பவை. அப்படி இருந்தும்கூட, யேமனில் ஷியாக்களின் எழுச்சியை அடக்க ராணுவ உதவி கோரப்பட்டபோது, பாகிஸ்தான் மறுத்தது உறவில் விரிசலை ஏற்படுத்தியது. அபுதாபி அரச குடும்பம் இந்தியாவுடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ள அது காரணமாக அமைந்தது.
அதேபோல, தீவிரவாதத்திற்கும், சமூகவிரோத சக்திகளுக்கும் அடைக்கலம் தரப்படும் இடம் என்கிற கண்ணோட்டத்தை மாற்றி, ஐக்கிய அரபு அமீரகத்தை சிங்கப்பூர், ஹாங்காங் போல, ஒரு பொருளாதார மையமாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறது அபுதாபி அரச குடும்பம். குறிப்பாக, துபை வர்த்தக, சுற்றுலா நகரமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.
இந்தியாவுடனான நெருக்கம், பாகிஸ்தானுடனான நெருக்கத்தைவிட சிறந்த பொருளாதார உறவுக்குப் பயன்படும் என்று அமீரகம் கருதுவதற்குக் காரணம் உண்டு. இந்தியக் கோடீஸ்வரர்கள் பலருடைய பணம் துபையில்தான் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானிய கருப்புப் பணத்தைவிட துபையில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் தொழில்துறையினரின் கருப்புப் பணம்தான் அதிகம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளாதாரத் தடைகளால் முடக்கப்பட்டுக் கிடந்த ஈரான் இப்போது அணுஆயுத பலத்துடனும், அமெரிக்க நட்புறவுடனும் பலம் பெற்றிருப்பது மேற்காசிய நாடு
களுக்கு இடையேயான அதிகார சமன்பாட்டை மாற்றியிருக்கிறது. அமீரகம், சவூதி அரேபியா, குவைத் ஆகிய சன்னி முஸ்லிம் நாடுகளால் ஈரான் போன்ற ஷியா முஸ்லிம் நாடு வலிமை பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் சன்னி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்தியாவுடனான நட்புறவு, தங்களுக்கு அதிக வலிமையைத் தரக்கூடும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஒரு காலத்தில் பாகிஸ்தானுடன் மிகவும் நெருக்கமான நட்புறவு பாராட்டி வந்த நாடு அமீரகமாகத்தான் இருந்தது. இஸ்லாமாபாத் அரசியல்வாதிகளின் கருப்புப் பணம் மொத்தமுமே அங்கேதான் முதலீடு செய்யப்பட்டிருந்தது. மும்பை தாக்குதலின் பின்னணியில் உள்ள தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருந்த நாடும் அமீரகம்தான். அப்படிப்பட்ட ஐக்கிய அரபு அமீரகம் இப்போது இந்தியாவுடன் நெருக்கமாகி இருக்கிறது என்றால், அது நிச்சயமாக மிகப்பெரிய ராஜதந்திர வெற்றி என்றுதான் கருத வேண்டும்.
ஏறத்தாழ 26 லட்சம் இந்தியர்கள் அமீரகத்தில் வாழ்கிறார்கள். அதாவது, மொத்த மக்கள்தொகையில் 30%. இந்தியாவுக்கு அதிகமாக கச்சா எண்ணெய் வழங்கும் நான்கு நாடுகளில் அமீரகமும் ஒன்று. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் ஏறத்தாழ 65,000 கோடி டாலர் (சுமார் ரூ.44 லட்சம் கோடி). 2012 நிலவரப்படி, மேற்கு ஆசியாவிலிருந்து மட்டும், அங்கே வேலை செய்யும் இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பிய பணம் 31,000 கோடி டாலர் (சுமார் ரூ.21 லட்சம் கோடி). அதில் அமீரகத்தின் பங்கு 15,700 கோடி டாலர் (சுமார் ரூ.10 லட்சம் கோடி).
ஐக்கிய அரபு அமீரகத்துடனான நட்புறவால், இந்தியாவுக்கு முதலீடுகள் வந்து குவியுமானால் அதைவிடப் பெரிய நன்மை வேறு எதுவும் இருக்க முடியாது. இரண்டு தரப்புக்குமே நன்மை பயக்கும் இந்த நட்புறவை அபுதாபி இளவரசரின் விஜயம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இரு தரப்புக்குமே இது மிகப்பெரிய ராஜதந்திர வெற்றி!

விபரீத விளையாட்டு

By எஸ். கிருஷ்ணசாமி  |   Published on : 31st January 2017 01:54 AM 
மின்னணுயுகம் நம்மை அண்டத்துவங்கி வெறும் இருபது ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனால் இந்தக் குறுகிய காலத்தில் அது நம்மை ஆளத்துவங்கிவிடும் என்றோ, மனித இனம் அதற்கு அடிமையாகிவிடும் என்றோ யாரும் கற்பனைகூட செய்திருக்க முடியாது என்பதுதான் உண்மை.
செல்லிடப்பேசி இல்லாத காதுகள் இல்லை, கைகளும் இல்லை, இணையம் மனித இனத்தின் புதிய இதயம் என்றெல்லாம் ஆகிப்போனது.
எந்த நவீனக் கண்டுபிடிப்பும், கருவியும், சாதனமும் நாம் இடும் கட்டளைக்குப் பணிந்து நடக்குமெனில் பாதகமேதுமில்லை.
எடுத்துக்காட்டாக போக்குவரத்திற்குப் பயன்படும் வாகனங்களை எடுத்துக் கொண்டோமெனில் அவை நம் இலகுவான பயணத்திற்கு மிகவும் உதவுகின்றன. தூரங்களை எளிதில், விரைவில் கடக்க உதவுகின்றன.
விபத்துகள் ஏற்படுவது உண்மை எனினும் அவற்றிற்கான காரணம் அவ்வாகனங்கள் அல்ல. பெரும்பாலும் அவற்றை இயக்கும் மனிதர்கள்தான் என்பது எல்லாருக்கும் தெரியும்.
இன்று நகரங்கள், கிராமங்கள் என வித்தியாசமின்றி அனைத்து பகுதிகளிலும் நீக்கமற நிறைந்துவிட்ட செல்லிடப்பேசிகள், தகவல்தொடர்பு சாதனம் என்பதைத்தாண்டி மிகப்பலவாறான பணிகளைச் செய்யும் ஒரு அற்புத கருவியாக மாறிவிட்டது. மகிழ்ச்சியே!
பேசுவது, பிறரைத் தொடர்பு கொள்வது, நிழற்படங்கள் எடுப்பது, ஒலி - ஒளிப் பதிவுகளை மேற்கொள்வது... ஏன், ஒரு கணினி செய்யும் அத்துணை பணிகளையும் கையடக்கத்தில் செய்வது என்பதில் நமக்கு ஓர் ஆட்சேபணையும் இல்லை.
ஆனால், இந்தக் கணினிகள் மேசையை விட்டு இறங்கி மடிக்கு வந்தன, பொறுத்திருந்தோம். இன்று மடியை விட்டு நமது சட்டைப் பைக்குள் என்றாகி விட்டது. எல்லோரும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால், வீட்டில் இருப்பவர்களுடனோ அல்லது அண்டை வீட்டுக்காரர்களுடனோ அல்லது சக பயணிகளுடனோ என்றால் கிடையாது. எங்கோ இருப்பவருடன் இடைவிடாத பேச்சு - மூச்சு விடாமல் பேச்சு.
பேருந்து ஓட்டுநர்களால் பேருந்தை இயக்க முடியாத அளவுக்குக் கூச்சல், பணியிடங்களில் பணி செய்யாமல் விடாத தொலை பேசித்தொல்லை என இருந்த செல்லிடப்பேசிகள் இன்று ஒரு விளையாட்டுச் சாதனமாக உருவெடுத்து, வயது வரம்பின்றி அனைவரும் தங்களது செல்லிடப்பேசிகளின் தொடுதிரையைத் தொட்ட வண்ணம் உள்ளனர்.
ஆம் செல்லிடப்பேசி, விளையாட்டு என்ற திரையில் இளைஞர்களை, மாணவர்களை மயக்கி மண்டியிடச்செய்து மழுங்கடித்து வருகிறது.
இந்த விளையாட்டுகள் போதாது என சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அறிமுகமாகியுள்ளது "போகிமான் கோ' எனப்படும் செல்லிடப்பேசியில் மூலம் விபரீத விளையாட்டு.
நியாண்டிக் நிறுவனத்தாரின் போகிமான் வரிசை விளையாட்டுகள் ஏற்கெனவே குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. இந்த விளையாட்டுகளை ஆட ஆரம்பித்துவிடின் அவற்றிலிருந்து வெளிவருவது மிகவும் கடினம்.
இப்பொழுது இதே நிறுவனம், போகிமான் கோ என்ற புதிய விளையாட்டை வெறும் ஐந்து நாடுகளில் இந்த மாதம்தான் அறிமுகம் செய்தது.
கடந்த ஆண்டு நிலவரப்படி ஐரோப்பாவில் உள்ள இருபத்து ஆறு நாடுகளிலும் அதிகாரப்பூர்வமாக இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் உலக நாடுகள் அனைத்திலும் இந்த விளையாட்டு இணையம் மூலமாகக் கிடைக்கும்.
இந்தப் புதிய விளையாட்டு செல்லிடப்பேசிகளின் தொடு திரைகளோடு நிற்பதில்லை. விளையாடுபவர் அவருக்குப் பிடித்த அவதார்போகிமானை உருவாக்கிக்கொள்ள இயலும். உண்மையான கட்டடங்கள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், ஏன் தடை செய்யப்பட்ட இடங்கள் என எங்காவது "போகிமான் கோ' தோன்றும்.
அந்த இடத்திற்கு பயணித்து போகிமான் கோவைப் பிடிப்பதே இந்த விளையாட்டின் புதுமை. இதற்கு இணையத்தொடர்புடன் கூடிய ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசிகள் அவசியம்.
அறிமுகப்படுத்தப்பட்ட மாதத்திலேயே விபத்துகளை வரவழைத்துவிட்ட போகிமான் கோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. எனினும் "யூ ட்யூப்' வழியாக பதிவிறக்கம் செய்து பல்லாயிரக்கணக்கானோர் விளையாட ஆரம்பித்து விட்டனர்.
சாலைகளில் வரக்கூடிய வாகனங்கள் இவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆபத்துகளை உணராமல் கைகளில் செல்லிடப்பேசிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் பொது இடங்களில் குழும ஆரம்பித்து விட்டனர்.
மக்களை பைத்தியமாக்கும், அடிமை யாக்கும் இந்த விளையாட்டை தடுக்க - மட்டுப்படுத்த அரசு, கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள், மருத்துவர்கள், மின்னணுப் பொறியாளர்கள் என அனைவரையும் ஆலோசித்து நடவடிக்கை எடுத்தால் நல்லது.

நீட் நுழைவுத் தேர்வின்றி மருத்துவப்படிப்பு: சட்டப்பேரவையில் இன்று சட்டமுன்முடிவு

By DIN  |   Published on : 31st January 2017 10:04 AM  
tngov
சென்னை: தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) இல்லாத மருத்துவப் படிப்புகளுக்கு வழிவகை செய்யும் சட்டமுன்முடிவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் மருத்துவப் பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை தொடர்பாக "நீட்' தேசிய தகுதித் தேர்வை எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசும் இதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பாடப் பிரிவுகளில் சேர கண்டிப்பாக "நீட்' தேர்வை எழுத வேண்டும்.
இந்நிலையில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் பாடப் பிரிவுகளில் சேர நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு நீட் (NEET) நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் சட்ட முன்முடிவை தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறது.
கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு துணைசெய்யும் வகையில் பழைய முறையையே பின்பற்றி மருத்துவப்படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  இந்த சட்ட முன்முடிவை தாக்கல் செய்கிறார். பின்னர், இந்த சட்ட முன்முடிவை அரசு தாக்கல் செய்வதற்கான காரணம் விளக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இது பற்றிய விவாதமும் நடைபெறும் என்று கருதப்படுகிறது.
தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (என்இஇடி) முறையில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் தமிழக உறுப்பினர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
புதுவை மாணவர்கள், தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு கல்வி வாரியப் பாடப் பிரிவுகளைப் படிப்பதால் "நீட்' தகுதித் தேர்வால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால்தான்,  "நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளித்து முதல்வர் வி.நாராயணசாமி தீர்மானம் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

RGUHS students, faculty move HC against shift to Ramanagaram

Bengaluru, Jan 31, 2017, DHNS
 
The High Court of Karnataka has ordered that emergent notices be issued to the state government, the Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) and the Public Works Department on a petition against the gazette notification to shift the varsity’s campus from Bengaluru to Ramanagaram.
The petition, filed by students and faculty at the RGUHS, argues that the government “erred” in its decision to relocate the university without assessing the difficulties that the employees, faculty and students would face. Not only that, the government “disregarded” the fact that the university utilises its own funds to provide the best infrastructure for students and employees, and that the government has not funded any of the activities of the university.

The university will function out of the deputy commissioner’s office in Ramanagaram till it gets a permanent campus.

The petitioners said it would be a burden on the university if it has to spend on the infrastructure in a temporary building and then spend on a permanent campus on the assumption that the acquired land would be free from litigation.

The petitioners told the court they are concerned about the difficulties that would arise from the relocation of the university’s campus, and sought stay on the notification.

MBBS students to protest against NEXT exam tomorrow

Bengaluru, Jan 31, 2017, DHNS
According to the proposal, students are mandated to clear NEXT to obtain licence to practice. File photo
MBBS students from across the state will protest on Wednesday opposing to the proposed National Exit Test (NEXT). The students will be joined by the Indian Medical Association (IMA). NEXT is part of the proposal mooted by the Union Health Ministry as part of the amendments to be introduced in the Indian Medical Council (Amendment) Act. According to the proposal, students are mandated to clear NEXT to obtain licence to practice.

Students believe that taking an entrance exam in addition to their MBBS exams would be taxing. Dr Manoop Kumaraswamy, member, Young Doctors’ Association, IMA, said, “What is the necessity for an exam when we are already preparing for NEET PG? Students will have to clear yet another exam. Instead, the government can just refine the existing system. Besides, we are told that even Ayush doctors clearing this exam will be granted permission to prescribe allopathy medicines after a bridge course.”

Dr Rajashekara Bellary, president, IMA Karnataka, said, “Those who have cleared MBBS are expected to take the exam. What is the use of having studied the course for five-and-a-half years then? It is an unnecessary burden on students. Students will also lose faith in the system of study then.”

In a memorandum, the students have said, “The examinations are conducted by universities which are recognised by the University Grants Commission and MBBS examination is therefore rightfully a qualifying examination for the degree of Modern Medicine. Therefore, introducing NEXT as a qualifying examination is unnecessary and makes the university examination redundant.”

They also say that converting a competitive examination into both a qualifying examination and competitive examination for post graduation is not in the students’ interest as the structure and objective of a qualifying examination for admission to post graduation is different from a qualifying examination that is meant for assessing the minimum qualification required to receive the degree.
ரூ.10 நாணயம் படுத்தும் பாடு: கலெக்டரிடம் வாலிபர் புகார்
சேலம்,:வங்கியில், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக கூறி, கடைக்காரர் ஒருவர், அவற்றை மாலையாக அணிந்து வந்து, சேலம் கலெக்டரிடம் புகார் அளித்தார்.

சில நாட்களாக, 10 ரூபாய் நாணயங்களை, வியாபாரிகள் முதல் வங்கிகள் வரை, வாங்க மறுப்பதால், மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது.சேலத்தைச் சேர்ந்த சேகர், 32, என்பவர், 10 ரூபாய் நாணயங்களை, பிளாஸ்டிக் பைகளில் மாலை போல் தயாரித்து, உடல் முழுவதும் அணிந்தபடி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.சேகர் கூறியதாவது:
கறிக்கடை வைத்துள்ளேன். வியாபாரம் மூலம், 2,000 ரூபாய் வரை, 10 ரூபாய் நாணயங்கள் சேர்ந்தன. அவற்றை, வணிக நிறுவனங்களோ, தனி நபர்களோ வாங்க மறுத்தனர்.
மல்லுார் கனரா வங்கியில், என் வங்கி கணக்கில் டிபாசிட் செய்ய சென்றேன். ஆனால், வங்கியில் வாங்க மறுத்தனர். இது தொடர்பாக, கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் சம்பத் கூறுகையில், ''ரிசர்வ் வங்கி அறிவுரைப்படி, 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என, அறிவிப்பு வெளியிடப்பட்டு
உள்ளது. அவற்றை, வங்கி மற்றும் நிறுவனங்கள் வாங்க மறுக்கக்கூடாது என்பதும், அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.எச்சரிக்கைசேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பாண்டியன் கூறியதாவது:வங்கிகள், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்ததால், வேறு வழியின்றி, நாங்களும் வாங்கவில்லை. தற்போது, அந்த நாணயங்களை, பெற்று கொள்வதாக, வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே, அரசு பஸ்களில், இனி, 10 ரூபாய் நாணயங்கள் ஏற்று கொள்ளப்படும். பயண சீட்டுக்கான முழு தொகையை கூட, 10 ரூபாய் நாணயங்களாக, பயணிகள் வழங்கலாம்.இது தொடர்பாக, 32 கிளை மேலாளர்களுக்கும் தெரியப்படுத்தி, அறிவிப்பு பலகை மூலம், 8,000 கண்டக்டர்களுக்கு தகவல் கொடுக்க,
உத்தரவிடப்பட்டுள்ளது.அதையும் மீறி, 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால், புகார் செய்யலாம். கண்டக்டர்கள் மீது, கடும் நடவடிக்கை பாயும்.
இவ்வாறு அவர் கூறினார்
வெளிநாடு வாழ் இந்தியர் 'நீட்' தேர்வு எழுதலாமா?

'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் பங்கேற்கலாம். அவர்களுக்கு, அரசு கல்லுாரிகளில் தனி இட ஒதுக்கீடு கிடையாது,'' என, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் தெரிவித்து உள்ளார்.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு, அனைத்து மாநிலங்களிலும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில், கடந்த ஆண்டு மட்டும், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல், அனைத்து மாநில மாணவர்களும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்வில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் பங்கேற்க முடியுமா என்பது குறித்து, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் கூறியதாவது: வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், இந்தியாவில் நடக்கும், 'நீட்' தேர்வில் பங்கேற்கலாம். அவர்களுக்கு, வெளிநாடுகளில் தேர்வு மையங்கள் கிடையாது. அதில், மாணவர்கள் தேர்ச்சி பெற்றால், மத்திய அரசின் ஒதுக்கீட்டிலோ, தமிழக ஒதுக்கீட்டிலோ இடங்கள் கிடையாது. ஆனால், அவர்களால், தனியார் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் பெற முடியும். அதற்கு, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

NEWS TODAY 03.07.2026