Thursday, February 2, 2017

பயன்படுத்து; பின் கசக்கி எறி!’ - ஓரங்கட்டப்பட்ட நினைவாற்றல்... துணைநின்ற துரித கலாசாரம்! நலம் நல்லது-61 #DailyHealthDose

நினைவாற்றல்  -நலம் நல்லது

இதைப்போல அற்புதமான ஒன்று வேறு இருக்க முடியாது... எது? நினைவாற்றல். ‘மறதிகூட ஞாபங்களில்தான் கட்டமைக்கப்படுகின்றன’ என்கிற சு.வெங்கடேசனின் வரிகளுக்குப் பின்னே, கவிதையைத் தாண்டி அறிவியலும் ஒளிந்து நிற்பதுதான் விசேஷம்.







‘தேவை இல்லாம இதை எடுத்து கையையோ, காலையோ காயப்படுத்திடக் கூடாது’ என்று சில விளையாட்டுச் சாமான்களை நம் பாட்டி பரணில் ஒளித்துவைத்திருப்பார். அதுபோல நம்மைச் சங்கடப்படுத்தும் சில விஷயங்களை அழகாக என்கோடிங் (Encoding) செய்து, ஹிப்போகேம்பளின் (Hippocampus) ஓரத்தில் மூளை ஒளித்துவைப்பதால்தான், நிறையப் பேர் முதல் காதலைச் சௌகரியமாக மறந்துவிடுகிறார்கள். ஆனால், நினைவுகள் குறித்த அறிவியல், பிரமிக்கவைக்கும் புதிர்முடிச்சுகளைக்கொண்டது.

மூன்று வயதில் 300 திருக்குறள்களைச் சொல்லும் குழந்தை, 11 வயதில் மனப்பாடப் பகுதியைப் படிக்க முடியாமல் கடைசி பெஞ்சுக்கு மாறுகிறது... 17 வருடங்களுக்கு முன் மனதுக்குப் பிடித்தவள் அணிந்திருந்த ஆரஞ்சு நிற ரிப்பன் ஞாபகத்தில் இருக்கும்போது, 15 நிமிடங்களுக்கு முன் எங்கேயோ வைத்த வண்டிச்சாவியை மறந்துவிட்டு வீட்டையே தலைகீழாகப் புரட்டுகிறார் ஒருவர்... இவை எல்லாமே மூளையின் ரசவாதம்தான்.

முளை, தனக்குள் சேரும் புதுப்புதுத் தகவல்களை என்கோடிங் செய்து, சரியான இடத்தில் சேமித்து (Storage) வைத்து, பின்னர் டிகோடிங் (Decoding) செய்துகாட்டும் வித்தையில்தான் நம் நினைவாற்றல் ஒளிந்திருக்கிறது. இந்தச் சூத்திரத்தின் நெளிவு சுளிவைக் கற்றவர்கள்தான் விஸ்வநாதன் ஆனந்தாகவோ, அஸ்டாவதானியாகவோ உருவாகிறார்கள்.

பிறந்த குழந்தையை, தாயின் மடியில் வைத்தால் அதுவாகவே தாயின் மார்புக் காம்பைப் பற்றி பால் அருந்துவதை அறிவியலே வியந்து பார்த்திருக்கிறது. குழந்தைக்கு இந்த அறிவு பிறக்கும்போதே ப்ரீ லோடடு (Pre loaded) ஆக மூளையில் பதியப்பட்டிருக்கிறது போலும்.



செய்திகளை, தற்காலிக நினைவு, நீடித்த நினைவு என மூளை வேறு வேறு வடிவில் பதிவுசெய்யும். தற்காலிக நினைவு ஒலி வடிவில் (Acoustic) மூளையில் பதியும். ஒரு தொலைபேசி எண்ணை செவி வழியில் கேட்டு டயல் செய்த பிறகான 30 நொடிகளில் அந்த எண்ணை நாம் மறந்துபோவது, அந்த அக்கூஸ்டிக் ஸ்டோரேஜ் (Acoustic Storage) எனும் தற்காலிக நினைவாற்றல் மூலமாகத்தான். மூச்சு முட்டும் பணியில் இருக்கும்போது, `வீட்டுக்கு வரும்போது வெண்டைக்காய் வாங்கிட்டு வாங்க’ என்று மனைவி போனில் சொல்வதை, மூளையின் தற்காலிக ஞாபக டிபார்ட்மென்ட்டில் போடுவதால்தான், அந்தக் கணமே மறந்துவிடுகிறோம்; வீட்டில் போய் திட்டு வாங்குகிறோம்.

நாம் கேள்விப்படும் விஷயம், தற்காலிக ஞாபக டிபார்ட்ட்மென்ட்டா... நாள்பட்ட ஞாபக டிபார்ட்மென்ட்டா என்பதை நாம் தெளிவாக முடிவுசெய்து பதியப் பழகிக்கொண்டால் மட்டுமே நினைவாற்றல் மிளிரும்.

இந்தத் துரித உலகில் தூக்கமின்மை, மன இறுக்கம், இரைச்சலான சுற்றுச்சூழல்... எனப் பல காரணிகள் நம் மறதியை அதிகரிக்கின்றன. பள்ளி, பரீட்சை சார்ந்த பணி சார்ந்த, பயன் சார்ந்த விஷயங்களைத் தவிர பிறவற்றை எல்லாம் தற்காலிக ஞாபகப் பதிவில் வைத்துக்கொள்ள நவீனம் கற்றுக்கொடுப்பதில்தான் மனித மூளை கொஞ்சம் மங்க ஆரம்பித்துவிட்டது.

சாதாரணமாக, 150 தொலைபேசி எண்களை மூளையில் பதிந்து வைத்திருக்கும் நாம் செல்போனில் கணக்கில் அடங்கா எண்களைப் பதியத் தொடங்கியதும், `டேய் மாப்ள... என் சொல்போன் நம்பரை உன் போன் புக்ல பார்த்துச் சொல்லேன்...’ எனக் கேட்கத் தொடங்கிவிட்டோம். நினைவாற்றல் மங்கிப்போவதற்கு எலெக்ட்ரானிக் உபகரணங்களை அதிகமாகப் பயன்படுத்துவதும் ஒரு காரணம்.

அந்தக் காலத்தில் சந்தம் மாறாமல், ஆயிரக்கணக்கில் பதியம் பாடியதற்கு அன்றைய சலனமற்ற நுண்ணறிவும், சிதைவு பெறாத பாரம்பர்ய உணவும், அதிகம் ஆர்ப்பரிக்காத மனமும் முக்கியக் காரணிகள். தவிர, நினைவாற்றல் கூட்டும் எளிய தாவரங்களை உணவாக உட்கொண்டதும் ஒரு காரணம்.





நினைவாற்றல் மேம்பட உதவுபவை...

* வல்லாரைக் கீரை நினைவாற்றல் மேம்பட உதவுவது. வெளி உபயோகமாக நாள்பட்ட புண்களை ஆற்றுவதில் பயன் தரும் இந்தக் கீரையின் தாதுச்சத்துகள், மனதைச் செம்மையாக்கி நல்ல உறக்கத்தையும், தீர்க்கமான நினைவாற்றலையும் தரக்கூடியது. நினைவாற்றலை அதிகரிக்க விரும்புகிறவர்கள், வல்லாரைக் கீரை தோசை சாப்பிடலாம். வலிப்பு நோய்க்கு இதைப் பயன்படுத்தலாமா என்கிற ஆய்வுகள்கூட நடைபெற்றிருக்கின்றன.

* சங்கு வடிவில் பூக்கும் `சங்குப் பூ’ எனும் மூலிகையும், `நீர்ப்பிரமி’ எனும் பிரமிச் செடியும் நினைவாற்றல் திறனை அதிகரிக்கும் நுண் தாவரக்கூறுகள் கொண்டவை.

* இயல்பாகவே டி.ஹெச்.ஏ (DHA) அதிகம் உள்ள மீன்கள், பாலிபினால்கள், ட்ரைடெர்பெனாய்ட்ஸ் (Triterpenodis) அதிகம் உள்ள வண்ணக் கனிகள், சிறு தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டாலே போதும், நினைவாற்றல் திறன் கூடும்.

* நடைப்பயிற்சிக்குக் கிடைத்த அலாதியான வரவேற்பு இன்னும் மூச்சுப்பயிற்சிக்குக் கிடைக்கவில்லை. பலர் நினைப்பதுபோல இது ஆக்சிஜன் அள்ளும் விஷயம் மட்டுமல்ல; நுரையீரலின் துணைகொண்டு மூளைச் சுரப்பிகளை, நரம்புகளை, திசுக்களை, நிணநீர் ஓட்டத்தை ஆளும் விஷயம். எனவே, ஞாபகசக்திக்கு மூச்சுப்பயிற்சி நல்லது.

`பயன்படுத்து; பின் கசக்கி எறி’ - சித்தாந்தம்கொண்ட துரித நவீன கலாசாரம், நாம் அன்றாடம் கடக்கும் அன்பு, காதல், கரிசனம், மெனக்கெடல், அரவணைப்பு, மரபு பழக்கம்... என எல்லாவற்றையும் மூளையின் தற்காலிகப் பதிவில் மட்டுமே கட்டமைத்துள்ளது. இவற்றை நீடித்த நினைவுக்கு மாற்ற வேண்டும் என்று மனது வைத்தாலே போதும்... நினைவாற்றலை மேம்படுத்திவிடலாம்.

திமுகவின் பாராட்டு மழையில் ஓபிஎஸ்: சட்டசபை ருசிகரம்!

திமுகவின் பாராட்டு மழையில் ஓபிஎஸ்: சட்டசபை ருசிகரம்!
வியாழன், 2 பிப்ரவரி 2017 (09:36 IST)
தமிழக அரசியல் கலாச்சாரம் மாறி வருவது. ஆரோக்கியமான அரசியலை தமிழக அரசியல் களம் பார்க்க ஆரம்பித்துள்ளது. வட மாநிலங்களில் அரசியல் கட்சிகள் வெளியில் நட்பு பாராட்டிக்கொள்ளும் ஆனால் தமிழகத்தில் எலியும், பூனையுமாக முறைத்துக்கொண்டு செல்வார்கள்.


 
 
இந்நிலையில் தற்போது அந்த சரித்திர நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. தமிழக சட்டசபையில் ஒரு எதிர்கட்சி முதல்வரை பாராட்டுவது அவருக்கு ஆதரவளிப்பது என்பது மிகவும் எதிர்பார்க்ககூடாத ஒன்று. ஆனால் அது நடந்துகொண்டிருக்கிறது.
 
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் தொடர்ந்து முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மரியாதையும், ஆதரவும் அளித்து வருகிறது எதிர்க்கட்சியான திமுக. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கூட இந்த அளவுக்கு மரியாதை கொடுத்ததில்லை திமுக.
 
இந்நிலையில் நேற்று சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் திமுகவின் துரைமுருகன் முதல்வர் பன்னீர்செல்வத்தை வெகுவாக பாராட்டினார்.
 
"நன்றாக பாராட்டுகிறோம்...
 
நீங்களே தொடர்ந்து முதலமைச்சராக இருக்க பாராட்டுகிறோம்...
 
5 ஆண்டுகளும் நீங்களே முதல்வராக இருக்க பாராட்டுகிறோம்...
 
அதற்கான சக்திகளை நாங்கள் தருகிறோம்...
 
அதற்கு எதிராக உங்கள் பின்னால் இருப்பவர்கள் போகாமல் பார்த்து கொள்ளுங்கள்..
 
மனப்பூர்வமாக பாராட்டுகிறோம்..." என துரைமுருகன் பாராட்டியது ஆச்சரியமாக இருந்தது.

தமிழகத்துக்குத் தேவை நுழைவுத் தேர்வற்ற சூழலா, தரமான பொதுக் கல்வியா?

கே.சந்துரு
Return to frontpage

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர கட்டாய நுழைவுத் தேர்வு (நீட்) கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் எதிர்ப்பு உருவானது. விளைவாக, இந்தத் தேர்விலிருந்து தமிழகத்தை விடுவித்துக்கொள்ளும் வகையில், ஒரு சட்ட முயற்சியையும் எடுத்திருக்கிறது தமிழக அரசு. மேலோட்டமாகப் பார்க்கும்போது, அரசுப் பள்ளி மாணவர்களைக் காப்பதைப் போன்று தோற்றமளிக்கும் இந்நடவடிக்கை, உண்மையில் தமிழகக் கல்வித் துறையின் தோல்வியை மறைக்க முயலும், பொதுச் சமூகத்தை ஏமாற்றும் ஒரு உத்தி என்று சொல்லலாம். தமிழகக் கல்வித் துறையின் உண்மையான கள நிலவரமும் இதுவரையிலான சட்டப் போராட்டங்களும் இதையே சொல்கின்றன.

தமிழகத்தில் 1978-ல் பள்ளிக் கல்வியில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, 10, +2 முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் ஆங்கிலவழிக் கல்விமுறையில் அமைந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பெருக்கத்துக்கும் வழிவகுக்கப்பட்டது. மேலும், மத்திய அரசின் முயற்சியில், மத்திய இடைக்கல்வி வாரிய (CBSE) அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தன. இந்த மூன்று நீரோட்டங்களிலிருந்தும் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடையே மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான போட்டிகளும் அதிகரித்தன.

தனியார் பள்ளிகளின் வருகை அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த உதவவில்லை. மாறாக, கீழே கொண்டுசென்றன. மேலும், மத்தியக் கல்வி முறையின் தரத்துக்கு ஈடுகொடுக்கும் நடவடிக்கைகளும் இங்கு எடுக்கப்படவில்லை. விளைவாக, ஒவ்வொரு முறையும் மேல்நிலைக் கல்வித் தேர்வுகளில் வெற்றிபெறும் மாணவர்களின் எண்ணிக்கைக்கான இலக்கை அரசே நிர்ணயம் செய்தது. அதன் மூலம் அதிக அளவிலான மாணவர்களைத் தேர்வுகளில் வெற்றிபெற்றதாக அறிவிப்பதற்காக மதிப்பெண்களைச் சமன்செய்யும் உத்திகள் கையாளப்பட்டன.

கல்விச் சீரழிவும் போலி மதிப்பெண்களும்

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் +2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 11% கூடியுள்ளது: 2012 - 80.23%; 2013 - 84.44%; 2014 - 87.71%; 2015 - 90.06%; 2016 - 91.79%. கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் கூறிய தகவலின்படி, இன்றைய மாணவர்களுக்கு அவர்களது விடைத்தாள்களில் அளிக்கப்பட்ட மதிப்பெண்களின்படி தேர்ச்சி பெற்றவர்களின் விழுக்காட்டை கணித்தோமானால் அது 52%-ஐத் தாண்டாது என்பதே உண்மை நிலவரம்.
முதல் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது அவசியமில்லை. பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இல்லை. பல பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்படுவதில்லை. பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு நடத்தப்படும் பொதுத்தேர்வில், பதினொன்றாம் வகுப்பு பாடங்களிலிருந்து எவ்விதக் கேள்விகளும் கேட்கப்படுவதில்லை. ஆனால், பன்னிரண்டாம் வகுப்பு இறுதி பொதுத்தேர்வில் அநேகமாக 92% மாணவர்கள் (சுமார் 8.78 லட்சம்) தேறுகிறார்கள். இது எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது?
சென்னைப் பள்ளியொன்றில் 6 மற்றும் 7 வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், தமிழ், மற்றும் ஆங்கிலப் பாடங்களில் சமீபத்தில் திறனறிச் சோதனைகள் மேற்கொண்டதில், பெரும்பான்மையான மாணவர்களுக்குக் கணிதத்தில் இரண்டு இலக்கங்களுக்கு மேல் கணக்குகள் போட முடியவில்லை. ஆங்கிலத்தில் அகரமுதலியும், தமிழ் மொழிகளில் உயிர் மெய் எழுத்துகள் முழுமையாகவும் அறிந்திருக்கவில்லை என்ற உண்மையை அறிய முடிந்தது. தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மையான பள்ளிகளில் இதுதான் நிலைமை.

மத்திய - மாநில அரசுகளின் கல்வி வாரியங்கள் போட்டி போட்டுக்கொண்டு பள்ளி இறுதித் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து வருவதுபற்றி 1992-ல் ஒருமுறை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த ஆண்டு பள்ளி இறுதித்தேர்வில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அதிக மதிப்பெண்களை வழங்கியதாக தமிழ்நாடு புகார் கூறியது. எனவே, அவ்வருட தொழில்கல்வித் தேர்வுகளுக்கான சேர்க்கைகளில் சி.பி.எஸ்.இ. தேர்வு மதிப்பெண்களை எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து, தமிழ்நாட்டிலுள்ள மொத்த இடங்களில் 2% சி.பி.எஸ்.இ தேர்வில் பயிற்சி பெற்றவர்களுக்கும், 98% தமிழ்நாடு மாநில இடைக்கல்வி வாரியம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஒதுக்கப்படும் என்று அரசாணை பிறப்பித்தது. சமனப்படுத்தும் முறைப்படி கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட மதிப்பெண்களை சி.பி.எஸ்.இ. வெளியிட மறுத்துவிட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் வைத்து மாணவர் சேர்க்கைப் பட்டியலைத் தயாரிக்குமாறு உத்தரவிட்டதை எதிர்த்து, தமிழகம் உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்றது.

தொழில் கல்விக்கான படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள் (குறிப்பாக, அரசு மற்றும் உள்ளாட்சிப் பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்கள்) அதிக எண்ணிக்கையில் சேர முடியவில்லை என்பது தமிழக அரசு அறியாதது அல்ல. ஆனால், பள்ளிகளைத் தரம் உயர்த்துதல், பாடத்திட்டத்தை மேம்படுத்துதல், ஆசிரியர்களை மேம்படுத்துதல் என நேர்வழியில் செல்வதில் அது ஒருபோதும் அக்கறை காட்டவில்லை.

1996-ல் கிராமப்புற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு செய்யும் திட்டத்தை திமுக அரசு அறிவித்தது. அடுத்து 2001-ல் ஆட்சியைப் பிடித்த அதிமுக இந்த ஒதுக்கீட்டை 25% ஆக உயர்த்தியது. உண்மையில், இந்த ஒதுக்கீடுகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவவில்லை. மாறாக, கோழிப் பண்ணைகளைப் போலத் தொடங்கப்பட்ட ‘கல்விப் பண்ணைப் பள்ளிகள்’ பல்வேறு சலுகைகளுக்காக ஊராட்சி எல்லைகளுக்குள் தொடங்கப்பட்டன. அவையே பயன் அடைந்தன. கடைசியில், இதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்குகளை ஏற்றுக்கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் கிராமப்புற மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டையே ரத்துசெய்துவிட்டது.

நுழைவுத் தேர்வின் வரலாறு

1984-85 முதல் பொது நுழைவுத் தேர்வு மற்றும் +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் தொழில்கல்விக்கான சேர்க்கை நடைபெற்றன. அப்படிப்பட்ட நுழைவுத் தேர்வுகளில் கணிசமாக வென்றவர்கள் ஆங்கிலப் பயிற்றுமொழி மூலம் பயின்றவர்களே. எனவே, கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய அரசு மற்றும் உள்ளாட்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தொழில்கல்வி படிப்புகளில் பங்குபெறும் வாய்ப்புகள் குறைந்துவருவதைக் கருத்தில்கொண்டு, 2005-ல் தமிழக அரசு பொது நுழைவுத் தேர்வு மூலம் அனுமதி என்ற முறையையே ரத்துசெய்தது.
சென்னை உயர் நீதிமன்றம் இது செல்லாது என்று அறிவித்தது. 2006-ல் பொது நுழைவுத்தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கையை அனுமதிப்பது பற்றிய உத்தரவை மீண்டும் தமிழக அரசு ரத்துசெய்தது. விசித்திரமாக தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியத் தேர்வுகள் எழுதிய மாணவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் மற்ற வாரியங்களில் படிப்பவர்கள் தேர்வில் பங்கு பெறுபவர்கள் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்த உத்தரவையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது.

இதன் பின்னர், தமிழ்நாடு தொழில்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பற்றிய சட்டம் 2006-ல் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் 2007-ல் பெறப்பட்டது. அச்சட்டத்தின்படி, பொது நுழைவுத்தேர்வின் மூலமே மாணவர் சேர்க்கைகள் நடைபெற வேண்டும் என்ற முடிவு கைவிடப்பட்டது. இப்படிக் காலம் முழுவதும் நுழைவுத் தேர்வை மறுப்பதன் வாயிலாகத் தமிழகக் கல்வித் துறையில் நிலவும் ஓட்டைகளை மறைக்க முயன்றதே தவிர, ஓட்டைகளை அடைக்கவோ குறைகளைக் களையவோ நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

மத்திய அரசு பறித்துக்கொண்ட கல்வி உரிமை

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, கல்வி பற்றிய அதிகாரம் மாநிலங்களின் பட்டியலில்தான் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனாலும், மத்திய அரசு பள்ளிக் கல்விக்கான வாரியம் ஒன்றைத் தன்னிச்சையாக அமைத்துக்கொண்டது. அதுதான் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ). இந்தியாவின் கல்விமுறைகள் பற்றி ஆராய முற்பட்ட கோத்தாரி கமிஷன் தனது அறிக்கையில், மத்திய அரசு பள்ளிக் கல்வியில் தலையிடுவது அவசியமற்ற செயல் என்று ஆரம்ப காலங்களிலேயே குறிப்பிட்டது இங்கு குறிப்பிட வேண்டியது.

1976-ல் நாடு முழுதும் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி அரசமைப்புச் சட்டத்தில், பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 42-வது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி அட்டவணை 7-ல் திருத்தங்களைச் செய்து கல்வி பற்றிய சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் மாநிலப் பட்டியலிலிருந்து பறிக்கப்பட்டு பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் கல்வி தொடர்பாகச் சட்டமியற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு மட்டுமின்றி மத்திய அரசுக்கும் உண்டு என்றானது.

நெருக்கடிநிலையின்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்துவிட்டு, தமிழ்நாட்டில் கல்வி பயிற்றுவிக்கும் மொழிபற்றிய கொள்கை முடிவுகளை அன்றைக்கிருந்த ஆளுநரின் ஆலோசகர்கள் எடுத்தனர். தமிழ்நாட்டில் 1976-க்கு முன்பு இரு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மட்டுமே இருந்தன. மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் தேர்வுகளை சென்னைப் பல்கலைக்கழகம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து நடத்திவந்தது. இதனிடையே, பள்ளிக் கல்வி நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள பல்கலைக்கழக ஆட்சிக் குழு முடிவெடுத்தது.

அதன்படி, அன்றைக்கிருந்த இரண்டு பள்ளிகளையும் மாநில இடைக்கல்வி வாரியத்தின் கீழ் கொண்டுவந்திருக்கலாம். மாறாக, ஆங்கில மொழியைப் பள்ளிக் கல்வியிலேயே பயிற்றுமொழியாக்கும் வண்ணம் அன்றைக்கிருந்த அதிகாரமட்டம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான தனியொரு அமைப்பை உருவாக்கும்படி உத்தரவிட்டது. நெருக்கடிநிலைக்குப் பின் ஆட்சியைப் பிடித்த அதிமுகவும், பின்னாளில் திமுகவும் இதை வாய்ப்பாக்கிக்கொண்டு, அதிக அளவில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளைத் துவக்குவதற்கான அனுமதிகளை வழங்கின.
இப்படித்தான் தமிழகத்தின் கல்வி தனியார்வசமானது; ஆங்கிலவழிக் கல்வியின் ஆக்கிரமிப்புக்குள்ளானது. விளைவாக, இன்றைக்கு 42% மாணவர்கள் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.

கல்வியைக் கை கழுவுதல்

மத்திய அரசு 1980 முதல் கல்வியளிக்கும் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளத் தொடங்கியது. ராஜீவ் காந்தி அரசு 1986-ல் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியது. அதன் மூலம், அரசே கல்விச் சுமையை ஏற்க முடியாதென்றும், தனிநபர்களும் பங்கேற்கும் வண்ணம் உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதே அவரது லட்சியமென்றும் கூறப்பட்டது. இது கல்விக் கட்டணக் கொள்ளைக்குக் கூடுதலான ஒரு பாதையை வகுத்தது.
முன்னதாக, 1984-ல் அகில இந்திய தொழில்நுட்பக் குழு (AICTE) உருவாக்கப்பட்டு, பொறியியல் கல்வி முழுமையாக அதன் கீழ் கொண்டுவரப்பட்டது. அடுத்து, மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மாநில அரசுகள் அதிகாரம் வழங்குவதைத் தடுக்கும் வண்ணம், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், பல் மருத்துவ கவுன்சில் சட்டம் இவற்றில் எல்லாம் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இது தவிர, மாநில அரசின் அதிகார வரையறைக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கி செவிலியர் பயிற்சிப் பள்ளிகள் வரை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.

இதன் விளைவாகவே, மாட்டுத்தொழுவம் அமைப்பதற்குக்கூட லாயக்கில்லாத இடங்களில் எல்லாம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும், செவிலியர் பயிற்சிப் பள்ளிகளும் காளான்களைப் போல முளைத்தன. இதற்கு மத்திய அரசு சொன்ன நியாயங்களில் ஒன்று, "மாநில அரசுகள் இஷ்டத்துக்கு அனுமதியளித்து சம்பாதிக்கின்றன” என்பது. ஆனால், இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர் கேதன் தேசாய், ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காகக் கைதுசெய்யப்பட்டபோது, கல்விக் கொள்ளையில் மத்திய அரசு - மாநில அரசு என்ற வேறுபாடெல்லாம் இல்லை என்பது அம்பலமானது. அவரது வீட்டிலிருந்து 1.5 கிலோ தங்கம், 80 கிலோ வெள்ளியுடன், பல கோடி ரூபாய்களுக்கான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

தடுக்க முடியாத நீதிமன்றங்கள்

கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் வண்ணம் போடப்பட்ட வழக்கொன்று, 1993-ல் உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் வழங்கிய தீர்ப்பில் "உயர் கல்வி தனியார்வசம் செல்வதை 1986-ம் வருடத்திய புதிய கல்விக் கொள்கை அனுமதிக்கிறது” என்று கூறினர் நீதிபதிகள். அதேசமயத்தில், தனியார் தொழில் கல்லூரிகள் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் வண்ணம், அக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குக் கட்டுப்பாடுகளை விதித்தனர். அதன்படி, தனியார் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 50% தகுதி அடிப்படையிலும் மீதி 50% கட்டண அடிப்படையிலும் என்று நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
தகுதி அடிப்படையிலான இடங்கள் இலவச இடங்கள் என்று கூறப்பட்டாலும் அவற்றுக்கும் கட்டணங்கள் உண்டு என்பதே உண்மை. தமிழக அரசு அமைத்த கட்டணக் குழு மருத்துவப் படிப்புக்குச் சில ஆயிரங்கள் கட்டணம் என்று நிர்ணயித்தபோது, உச்ச நீதிமன்றம் அக்கட்டணத்தை ரத்துசெய்து மருத்துவப் படிப்புக்கான கட்டணங்களை லட்சத்துக்கு மேல் உயர்த்தியது.

அரைக் கிணறு தாண்டாத சமச்சீர்க் கல்வி

இதனிடையே, சமூக நீதிக்குக் குரல் கொடுக்கும் அமைப்புகள் "மெட்ரிகுலேஷன் பள்ளிக்கான தேர்வுமுறையை ரத்துசெய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் பயிற்றுமொழி தமிழ் மொழியாகத்தான் இருக்க வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தின. ஆரம்பப் பள்ளி வகுப்புகளில் பயிற்றுமொழி தமிழ் மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்று திமுக அரசு கொண்டுவந்த உத்தரவையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2000-ல் ரத்துசெய்துவிட்டது.

தமிழ்நாட்டில் ஐந்து விதமான பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டுவருவதையும், அதில் மூன்று விதமான பள்ளிகளுக்கு தமிழக அரசின் கல்வித் துறையே தேர்வுகள் நடத்திவருவதையும், அதனால் ஏற்படும் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விழுக்காடு குழப்பங் களை மாற்றியமைத்து, பள்ளிப் பாடத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பாடத் திட்டத்தில் உள்ள வேறுபாடுகள் ஓரளவுக்குக் களையப்பட்டிருப்பினும், பள்ளிக் கல்வியில் பயிற்றுமொழி பிரச்சினை தீரவில்லை.

இத்தகைய பின்னணியில்தான், இந்திய மருத்துவ கவுன்சில் 21.12.2010 அன்று மருத்துவப் பட்டப்படிப்புக்கான ஒழுங்கு விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி மருத்துவப் பட்டப் படிப்புக்குச் சேர விரும்பும் மாணவர்கள் ‘தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு’(நீட்) எழுத வேண்டும் என்றது. ஆனால், இதை எதிர்த்துப் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளைக் கையில் எடுத்த உச்ச நீதிமன்றம், 18.7.2013 அன்று "மருத்துவ கவுன்சில் அறிவிப்பு செல்லாது” என்று அறிவித்தது. தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று சீராய்வு மனுக்கள் தொடுக்கப்பட்டன. அவற்றை ஏற்ற உச்ச நீதிமன்றம், மறு விசாரணைக்குப் பிறகு, "நீட் தேர்வு ஒழுங்குமுறை விதிகள் சட்டப்படி செல்லும்” என்று அறிவித்தது.

இந்த உத்தரவை அமல்படுத்த 24.5.2016 அன்று ஒரு அவசரச் சட்டம் இயற்றியது மத்திய அரசு. தொடர்ந்து, அவசரச் சட்டத்துக்கு உயிர் கொடுக்கும் வகையில் புதிய சட்ட விதிகளை நாடாளுமன்றம் இயற்றியது. இதன் தொடர்ச்சியாகவே, 2017-18 கல்வியாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழக அரசின் பொதுச்சேர்க்கை முறைக்குள் வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 85% இடங்களான 2,172 இடங்களுக்கும், அரசுப் பொது சேர்க்கைக்குள் வரும் சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டின் மூலம் நிர்ணயிக்கப்படும் 50% இடமான 1,250 இடங்களுக்கும் மட்டும் தனது பள்ளி இறுதித் தேர்வு மதிப்பெண் தகுதி மூலம் இடங்களை அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். இது தவிர, அகில இந்திய ஒதுக்கீடு செய்யப்பட்ட 15% இடங்களுக்கு அகில இந்தியத் தேர்வில் போட்டியிட வேண்டும்.

எதிர்ப்பு நியாயம்தானா?

இதை எதிர்கொள்ளத்தான் தமிழகத்தில் பலரும் எதிர்க்குரல் எழுப்பினர். விளைவாக, தமிழக அரசு ஒரு சட்டமும் இயற்றியுள்ளது. "சமூகநீதிக்கு இது புறம்பானது. இடஒதுக்கீடுகள் புறந்தள்ளப்படும்; தமிழைப் பயிற்றுமொழியாகப் பயிலும் மாணவர்களை ஆங்கிலம் / இந்தியில் நுழைவுத் தேர்வு எழுதச் சொல்வது அநீதி இழைப்பதாகும். ‘நீட் தேர்வு’ சி.பி.எஸ்.இ. வகுத்துள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் இருக்கப்போவதால், தமிழகப் பள்ளி மாணவர்கள் அத்தேர்வில் மதிப்பெண்கள் பெறுவது கடினம்” என்பவை எதிர்ப்பாளர்கள் சொல்லும் பிரதானமான மூன்று நியாயங்கள்.
இவற்றில் ஒன்றில்கூடச் சாரம் கிடையாது. ஏனென்றால், அந்தந்த மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படும் இடஒதுக்கீட்டுக்கு எவ்விதத்திலும் ஊறு விளைவிக்காது என்று இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகள் தெளிவுபடுத்துகின்றன. இந்தி, ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, வங்காளம், அசாமி ஆகிய 8 மொழிகளில் இத்தேர்வுகளை நடத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதால் இரண்டாவது காரணமும் அடிபடுகிறது. மூன்றாவது காரணம் நியாயமானதாக இருக்கலாம்; ஆனால், அதற்கான பரிகாரம் பொதுத் தேர்விலிருந்து தப்பிப்பது அல்ல. நம்முடைய பள்ளிக்கூடங்களையும் கல்விமுறையையும் மேம்படுத்துவதே.

தமிழகத்தில் பள்ளி இறுதித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களில் 50% பேர் கல்லூரியில் முதலாம் ஆண்டுத் தேர்வுகளில் தோல்வியடைகின்றனர். 5 ஆண்டுகளாக இந்தக் கதை நடக்கிறது என்பது எதைக் காட்டுகிறது?
தமிழகத்தில் உயர்கல்வி தோல்வியுற்றதற்குக் காரணம், பள்ளிக் கல்விமுறை நொறுங்கிவிட்டதே என்று கல்வியாளர் பாலாஜி சம்பத் முகநூலில் பதிவிட்டுள்ளதை இங்கே நினைவுகூர வேண்டும். மாணவர்கள் சேர்க்கைக்கு அகில இந்தியரீதியில் நடத்தப்படும் ஒரே தேர்வு என்பதோடு, மாணவர் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் இருக்கப்போவதில்லை என்பதையும் இடஒதுக்கீட்டுக்குக் குந்தகம் ஏதும் விளையாது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்!

- கே.சந்துருநீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்.
NEET-SASIKALA

Ruling AIADMK party chief V K Sasikala today sought the support of Prime Minister Narendra Modi on exempting the state from the National Eligibility-cum -Entrance Test.

"We need your support in the matter of Tamil Nadu seeking exemption from NEET. The people and students of Tamil Nadu, specially the medical aspirants would thank you immensely for your support," she said in a letter to him.

Apprising him that the state assembly has adopted two bills in this regard today, she requested the Prime Minister's support "in this matter of crucial importance." Recalling that her mentor 'Amma' (late CM Jayalalithaa) had persistently sought exemption from NEET for Tamil Nadu in the interests of students from poor economic background, she said the bills have been passed to protect the students.

Stating that aspirants hailing from rural areas have no access to coaching classes like the urbanites, she also pointed out that NEET syllabus was based on CBSE content and not state curriculum, adding, "here is the crux of the disadvantage for the students from Tamil Nadu." She also drew his attention to the present parameters for admission to PG courses in medicine and dentistry followed in Tamil Nadu like preference to those who served in rural areas and indicated that the system could not be followed if a common test was to be adopted.

(This article has not been edited by DNA's editorial team and is auto-generated from an agency feed.)

CBSE Introduces New Rules For NEET 2017

Bhubaneswar: The Central Board of Secondary Education (CBSE) has introduced new rules for the National Eligibility cum Entrance Test (NEET) scheduled to be held on May 7 this year.
Talking to media persons here today, chairman of Odisha Joint Entrance Examination (OJEE) Tushar Kumar Nath said the students can apply online on the newly created website cbseneet.nic.in.
“Apart from this, the students must have the Aadhaar card which is mandatory. CBSE has already made it compulsory for the students about the date, name and gender in the Aadhaar card during the JEE Mains examination. After completing these formalities, students can move forward for registration,” he added.
The other rule to be applied for this entrance test is the age limit. While the maximum age limit for the general category candidates to appear in the test is 25, for the reserve category students the age limit is 30.
To give more opportunity to the students to clear NEET, CBSE has said candidates would be given three chances.
Apart from this, considering the request of the Odisha government, CBSE has allowed the students from Odisha to appear in the test in Odia language. It has allowed the students to appear in 10 languages including English and Hindi. However, the CBSE has said if there is any doubt in the minds of the students about the meaning of any question put in other language, the question papers set in English language would be considered as final.
However, the academicians in Odisha have said the question papers set by the CBSE in Odia language would not benefit the students of Odisha as the medium of language in Plus Two Science syllabus is English.
The last date of application is on March 1.
The test would be conducted at 1500 centres in 80 cities across the country.

டாஸ்மாக் பக்கம் ஒதுங்குகிறவர்களின் கவனத்துக்கு..! நலம் நல்லது-52 #DailyHealthDose



டாலர் மதிப்பு சரிந்தாலும், ஏ.டி.எம் வாசல்களில் வரிசையில் நிற்பது தொடர்ந்தாலும் ஆண்டுக்கு 20 சதவிகித வியாபார வளர்ச்சியுடன் கொடிகட்டிப் பறக்கிறது அரசு நடத்தும் மது வணிகம்... டாஸ்மாக்! குடிப்பவர்களில் 40-50 சதவிகிதம் பேர்களை கிட்டத்தட்ட நிரந்தரக் குடி அடிமைகளாக மாற்றிவரும் இந்தத் தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான், அரசு பல நலத் திட்டங்களை நடத்துவதாகச் சொல்கிறது. இந்த அவலம், உலகில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.



‘கொஞ்சமாக் குடிச்சா தப்பில்லையாமே...’, `இதயத்துக்கு நல்லதாமே...’, `ஹார்ட் அட்டாக் வராதாமே...’, `கொஞ்சமே கொஞ்சமா ஆல்கஹால் இருக்கும் பீர், ஒயின் சாபிடலாம்ல?’... என சப்பைக்கட்டு கட்டி ஆல்கஹால் சுவைக்கும் சகோதர-சகோதரிகளுக்கு ஒரு முக்கியமான செய்தி... ஆல்கஹால் விகிதம் 40 சதவிகிதத்துக்கு அதிகமான விஸ்கி, பிராந்தி போன்ற ஹாட் டிரிங்க்ஸ் என்றால் `பெக்’ கணக்கு, 6.8 சதவிகிதம் ஆல்கஹால் உள்ள பீர்/ஒயின் என்றால் `மக்’ கணக்கு... இதைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், வயிற்றுக்குள் செல்லும் ஆல்கஹாலுக்கும் அது நடத்தும் அட்டூழியத்தும் எந்த வித்தியாசமும் இல்லை.

`திராட்சை ஒயினில் நிறைய பாலிஃபீனால் இருக்கிறது... அது இதயத்துக்கு நல்லதாமே’ என படித்தவர்கள்கூட சில வாதத்தை முன்வைப்பார்கள். சில உணவியல் வல்லுநர்கள் இதை ஆதரிக்கவும் செய்யலாம். ஆனால், அவர்களுக்கு எல்லாம் அதே பாலிஃபீனால்கள் பச்சைத் தேயிலையில் இருந்து கத்திரிக்காய் வரைக்கும் எத்தனையோ பொருட்களில் இருக்கிறது என்பதும் தெரியும்தானே? அதற்கெல்லாம் குரல் கொடுக்காதவர்கள், ஒயின் மீது காட்டும் கரிசனத்துக்கு, இதயம் மீதான அக்கறையா காரணம்?



`ஒயினை உணவுப் பட்டியலோடு சேர்க்க வேண்டும். உயர்தர சைவ உணவகம் தொடங்கி, கையேந்தி பவன் வரைக்கும் அனைத்து உணவகங்களிலும் அதை வழங்க அனுமதி வேண்டும்’ என ஒரு பெரும் வணிகக் கூட்டம் தொடர்ந்து அரசை வற்புறுத்திவருகிறது. அதாவது, பெண்களும் மது அருந்தும் பழக்கத்தை ஊக்குவித்தால், குடும்பத்தோடு குடிக்கவைத்து, மாதாந்திர மளிகைக்கடைப் பட்டியலில் ஒயினையும் இடம்பெறச் செய்யலாம் என்கிற சந்தை உத்தி. அது சரிதான் என்பதுபோல நகர்ப்புற இளம் பெண்களில் குடிப்பழக்கம் கணிசமாகப் பெருகிவருவதும் வருத்தம்தரக்கூடிய ஒன்று. ஆண்களைவிட பெண்களுக்கு மதுவினால் வரும் நோய்க் கூட்டம் 100 சதவிகிதம் அதிகம்.

`கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் ஈரல் சிர்ரோசிஸ் (Liver Cirrhoosis) நோயாளிகள் இந்தியாவில் இருக்கிறார்கள்’ என்கிறது சமீபத்திய நடத்தப்பட்ட ஓர் ஆய்வு விவரம். இதற்கு முக்கியக் காரணம் குடி. சில பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஈரல் (கல்லீரல்) துறைக்காகத் தனிப் பிரிவுகளையே உருவாக்கிவைத்திருக்கின்றன. ஏனெனில், ஈரல் பாதிப்படைந்தவர்களில் சரி பாதிப்பேர் ஈரல் புற்றுநோய்க்கும் ஆளாவார்களாம். தொடர்ச்சியாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், சிர்ரோசிஸ் நோய்க்கு `காத்திருப்பு நிலை’யில் உள்ளவர்கள்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.



`நீங்கள் குடிப் பழக்கம் உள்ளவராக இருப்பதால், உங்கள் பிள்ளை ஈரல் வியாதியாலோ அல்லது வேறு புற்றுநோய்க்கோ அல்லது சர்க்கரை முதலான பல வியாதிகளுக்கோ ஆளாகலாம்’ என எச்சரிக்கிறது எபிஜெனிடிக்ஸ் (Epigenetics) துறையின் ஆய்வு ஒன்று. குடி போதையில் ஒரு நபர் தள்ளாடுவதுபோல, அந்த நபரின் மரபணுக்களும் தள்ளாடி, மரபணுத் தகவல்களை மிகத் துல்லியமாகப் பிரதியெடுக்கவேண்டிய பணியை மறந்துவிடுகின்றன. தன் செல்களைப் படியெடுக்கும்போது, சந்திப் பிழை, கமா, ஃபுல்ஸ்டாப் எல்லாம் வைப்பதற்கு மறந்ததில் `டி.என்.ஏ டிமெத்திலேஷன் (DNA Demethylation) நடந்து, அது குடித்தவருக்கோ, குடித்தவரின் பிள்ளைகளுக்கோ சிர்ரோசிஸ் முதல் பல வியாதிகளை வரவழைக்கக்கூடும்’ என்கிறது எபிஜெனிடிக்ஸ் துறை ஆய்வு.

‘சங்ககாலத்திலேயே கள் அருந்தியிருக்கிறார்களே!’ எனச் சிலர் கேட்கலாம். கள் வேறு; எத்தனால் கலந்து விற்கப்படும் சாராயம் வேறு. கள்ளைவிட நவீன சாராயத்தில் 10 மடங்கு எத்தனால் அதிகம். அதற்காக அந்த காலக் கள் குடிக்கலாமா என நினைப்பதும் தவறு. சங்க காலத்தில் கல் தூக்கி, காதலித்து, குமரியில் இருந்து மதுரைக்கு குதிரையில் பயணிக்க உடல் வலிமை தேவையாக இருந்தது. இப்போது பஸ்ஸில் போகவே, `ஸ்லீப்பர் ஸீட் இருக்கா?’ எனக் கேட்கும், சொகுசு தேடுபவர்களுக்கு கள் அவசியமே இல்லை.

இன்றைக்கு, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கு ஆகும் செலவு பல லட்ச ரூபாய். பழுதடைந்த ஈரலைப் பராமரிக்க ஆகும் செலவு பல பத்தாயிரங்கள். குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி, மரணத் தறுவாயில் பெரிய மருத்துவமனைக்குள் நுழையவே முடியாத பாமர, ஏழை மக்கள் கூட்டம்தான் 98 சதவிகிதம். எனவே நினைவில் கொள்வோம்... குடி குடியை மட்டுமல்ல... குலத்தையே கெடுக்கும்!

தொகுப்பு: பாலு சத்யா

விளக்கெண்ணெய்... விலக்கக் கூடாத எண்ணெய்! நலம் நல்லது-57 #DailyHealthDose





“அந்த ஆளு ஒரு விளக்கெண்ணெய் சார்...” என்று யாராவது, யாரையாவது சொல்லக் கேட்டிருப்போம். ஒருவரைக் குறைத்துச் சொல்வதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும், விளக்கெண்ணெய் விசேஷமானது. விளக்கெண்ணெயை, ‘ஆமணக்கின் குருதி’ என்றுகூடச் சொல்லலாம். ஆமணக்குச் செடி மண்ணின் நுட்பமானக் கூறுகளை உறிஞ்சி, உழைத்துச் சேமித்த நுண் மருந்துகள்தான் விளக்கெண்ணெயில் கொட்டிக்கிடக்கின்றன. சுருக்கமாக, விளக்கெண்ணெய் ஒரு நலப்பொக்கிஷம்!



கிறிஸ்து பிறப்பதற்கு முன்னதாகவே இந்தியரிடம் மட்டும் அல்லாமல், சீனர்களிடமும், ரோமானியர்களிடமும், கிரேக்கர்களிடமும்கூட விளக்கெண்ணெயின் பயன்பாடு இருந்திருக்கிறது.

ஆமணக்கின் இலை, விதை, எண்ணெய் என அனைத்துமே மருத்துவக் குணம் நிரம்பியவை. ஆமணக்கு மற்றும் விளக்கெண்ணெயின் பலன்களைப் பார்ப்போம்...

* ஆமணக்கு இலை, வாத நோயாளிகளுக்குச் சிறப்பான மருந்து. ஆமணக்கு இலையை, விளக்கெண்ணெயிலேயே லேசாக வதக்கி, மூட்டுகளின் வீக்கம், வலிக்கு ஒத்தடம் இட்டால் வலி நீங்கும்; வீக்கம் வடியும்.

* பிரசவித்த பெண்ணுக்கு பால் கட்டிக்கொண்டாலோ, சரியாகப் பால் சுரக்கவில்லை என்றாலோ ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, ஒத்தடம் இடலாம்.

* சமீபத்திய ஆய்வுகள் ஆமணக்கு இலை, கல்லீரல் நோய்க்கு எதிராகச் செயல்படுவதை உறுதிப்படுத்தியுள்ளன. காமாலை, கல்லீரல் சுருக்க நோய், கல்லீரல் செயல்திறன் குறைவுக்கு ஆமணக்கு இலையின் உலர்ந்த பொடி பயனளிக்கும்.



* கீழாநெல்லி இலையுடன் ஆமணக்கு, கொழுஞ்சி இலை, கடுகு, ரோகிணி, கரிசாலையைச் சேர்த்து உலர்த்த வேண்டும். பிறகு, இதைப் பொடியாக்கி, காலையிலும் மாலையிலும் அரை டீஸ்பூன் அளவுக்குக் கொடுத்துவந்தால் காமாலை குணமாகும் என, சித்த மருத்துவ அனுபவங்கள் கூறுகின்றன.

* ஆமணக்கு விதையில் இருந்து மருந்து செய்ய அந்தக் காலத்தில் அதன் பருப்பை அரைத்து, அதற்கு நான்கு மடங்கு இளநீர் அல்லது தண்ணீரைவிட்டுக் காய்ச்சுவார்கள். இப்போது பிற எண்ணெய்களைப்போல பிழிந்துதான் விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது.

* நோய் குணமாக்கலில் `நிணநீர் கழிவு ஓட்டம்’ (Lymphatic drainage) மிகமிக முக்கியமானது. உடலில் இந்த ஓட்டத்தைச் சீராக நடத்தி, எங்கும் வீக்கத்தைக் (Inflammation) கட்டுப்படுத்துவதில் விளக்கெண்ணெய்க்கு நிகர் ஏதும் இல்லை. வெள்ளை அணுக்களை ஊக்குவிக்கும் தன்னிகரற்றச் செயலை இந்த எண்ணெய் செய்கிறது.

* மூலிகை மருந்தறிவியலில், அமெரிக்காவின் எஃப்.டி.ஏ (The Food and Drung Administration - FDA)-வின் அங்கீகாரம் பெறுவது மிக கஷ்டமான காரியம். அந்தப் பெரும் அமைப்பே, `விளக்கெண்ணெய் பொதுவாகப் பாதுகாப்பானது’ (GRAS - Grossly recognized as Safe) எனச் சான்று தந்துள்ளது.

* தென் தமிழகத்தில் பருப்பு குழைவாக வர அதனுடன் இரு துளி விளக்கெண்ணெயைவிட்டு வேகவிடுவது மரபு. ஆரோக்கியம் தரக்கூடிய உணவு எனப்படும் ஒரு ஃபங்ஷனல் ஃபுட். ஆகவே, விளக்கெண்ணெய் நம் மரபில் இருந்து வந்தது என்பதை இதன் மூலம் உணர முடியும். `விரேசனத்தால் வாதம் தாழும்’ என்கிறது சித்த மருத்துவம். நன்கு மலம் கழிந்தால் வாத நோய்களாகிய மூட்டுவலி முதல் ஆஸ்துமா வரை பயன் கிடைக்கும் என்பதுதான் அதன் பொருள். அதற்கு விளக்கெண்ணெய் உதவும்.



* பிரசவித்த பெண்களுக்கு மலம் எளிதில் கழிய, ஆமணக்கு எண்ணெயை 10 - 20 மி.லி வரை உடல் எடை, ஆரோக்கிய நிலையைப் பொறுத்து அளவாகக் கொடுக்கலாம். சளி, இருமல், கோழைக்கட்டு உடைய நபருக்கு 20 மி.லி விளக்கெண்ணெயில், 10 மி.லி தேன் சேர்த்துக் கொடுத்தால், மலம் கழிவதுடன் மந்த வயிற்றுடன் இருப்போருக்கு விளக்கெண்ணெயை ஓமத்தீ நீர் அல்லது சுக்குக் கஷாயத்தில் இதைக் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கி, பசி உண்டாகும்.

* சாப்பிட மறுக்கும் குழந்தை, மந்தம் உள்ள குழந்தை, அடிக்கடி வாய்ப்புண்ணுடன் உள்ள குழந்தை ஆகியோருக்கு விளக்கெண்ணெயில் செய்த மருந்துகளைத்தான் சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. இருந்தாலும், சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் இந்த எண்ணெயைப் பயன்படுத்தக் கூடாது. இதன் மலமிளக்கும் தன்மையைச் சீராக அளவறிந்து பயன்படுத்த வேண்டும் என்பதால், விளக்கெண்ணெய் விஷயத்தில் சுயவைத்தியம் சரிவராது.

* விளக்கெண்ணெய், புண்களை ஆற்றவும், பல்வேறு நரம்பு மூட்டுவலிகளுக்கான மூலிகைத் தைலம் காய்ச்சவும் அதன் அடிப்படைத் தைலமாகப் பயன்படுகிறது.

மொத்தத்தில் விளக்கெண்ணெய் விலக்கக் கூடாத எண்ணெய்!

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...