Saturday, February 4, 2017

வாளிகள்தான் நவீன கருவிகளா? உலக நாடுகள் என்ன செய்கின்றன?

 #ChennaiOilspill


எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த 28-ம் தேதி எம்.டி.பி.டபிள்யூ. மேப்பிள், எம்.டி. டான் என்ற இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், எம்.டி. டான் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது.கடலில் கலந்த கச்சா எண்ணெயின் அளவைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தாலும் நிலைமை நினைத்ததை விட மோசம்தான். கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் கடலோர காவல் படையின் மாசு அகற்றும் குழுவினர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், எண்ணூர் துறைமுகம் ஊழியர்கள் என்று அரசுத்துறைகளுடன் இணைந்து மீனவர்களும், தன்னார்வலர்களும் கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் பயன்படுத்தும் நவீன கருவி பக்கெட் என்பது பலரையும் பொதுமக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைப்போன்ற மோசமான சுற்றுச்சூழல் பிரச்னைகளை கையாள அரசிடம் நவீன கருவிகள் இருப்பது அவசியம் இல்லையா என்ற கேள்விகள் அனைவரது மனதிலும் எழுகிறது. கடலில் ஏற்பட்ட ஆயில் கசிவை கையாளவே பக்கெட்டுகளையும், உதவிக்கு தன்னார்வலர்களையும் அழைக்கும் இந்த அரசு நாளை தமிழ்நாட்டில் இருக்கும் அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் அதை கையாள்வதற்கு தயாராக உள்ளதா என்பது அனைவரது மனதிலும் எழக்கூடிய மிகப்பெரிய கேள்வி....

பல நாடுகளில் இதைப்போன்ற சூழ்நிலைகளை கையாள தனியாக ஒரு துறை செயல்படும் அவர்களிடம் நவீன கருவிகள் இருக்கும் சமாளித்துவிடுவார்கள்..நமது அரசு இனிமேல் கருவிகளை வாங்கி அதன் பின்பு கச்சா எண்ணெயை சுத்தம் செய்வது என்பது இயலாத ஒன்று இருந்தாலும் எளிய வழிகள் சில இருக்கின்றன அது என்னவென்று பார்க்கலாம்..

காளான்கள் மற்றும் முடிகள்..



இயற்கையான காளான்கள் மற்றும் முடிகளை பயன்படுத்தி எளிதில் எண்ணெயை அப்புறப்படுத்த முடியும்.சில வகை காளான்கள் எண்ணெய் பொருட்களை உறிஞ்சும் தன்மையுடையவை....முடியை ஒரு விரிப்பு போல பயன்படுத்தினால் அது எண்ணெயை எளிதாக ஈர்த்து விடும்..

பாக்டீரியாக்களை ஊக்குவித்தல்..

ஏற்கனவே கடலில் வாழும் இயற்கையான பாக்டீரியாக்கள் தான் கடலில் கலக்கும் கழிவுகளை உணவாக உட்கொண்டு சுத்தப்படுத்துகின்றன. தற்பொழுது அதன் செயல்திறனை ஊக்குவிப்பதற்காக சல்பேட் அல்லது நைட்ரேட் போன்றவற்றை
பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் பயன்படுத்தினால் போதும் மீதியை பாக்டீரியாக்கள் பார்த்துக் கொள்ளும்.

வைக்கோல்

வைக்கோல் கடலில் கலந்த எண்ணெயை சுத்தம் செய்ய உதவும் எளிதான மற்றும் விலை குறைவான ஒரு பொருளாகும். மேலும் அதிகளவில் கிடைக்கக்கூடியது.வைக்கோல் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது என்பதால் அதை பல நாடுகள் பயன்படுத்துகின்றன.

எண்ணெய் நீக்கிகள்

எண்ணெய்களை நீக்கும் திரவ கரைசல்கள் நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஒன்றுதான்...இயந்திரங்களில் இருக்கும் எண்ணெய் மாசுகளை அகற்ற பல திரவங்கள் பயன்படுகின்றன. அவற்றை பயன்படுத்தினால் அவை எண்ணெய் மூலக்கூறுகளின் வடிவத்தை மாற்றி அகற்றுவதற்கு எளிதாக இருக்கும். இதைக் கடலில் பாதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் பயன்படுத்தலாம்.

திரவ ஜெல்கள்

பல நாடுகள் கடலில் கசிந்திருக்கும் கச்சா எண்ணெயை அதிக பரப்பளவில் பரவாமல் இருப்பதற்காக ஜெல்களை பயன்படுத்துகின்றன. இவை எண்ணையை பரவ விடாமல் தடுத்து பிரிப்பதால் அகற்றுவதற்கு எளிதாக இருக்கும்.

தேங்காய் நார் கூட எண்ணெயை உறிஞ்சும். அதை எப்படி பெரிய அளவில் பயன்படுத்தலாம் எனபதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.



இதைப்போன்ற சுற்றுச்சூழல் விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புகளின் தாக்கம் பல காலத்திற்கு இருக்கும். மேலும் அது கடலின் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது.அரசு அதை உணர்ந்து தற்போது பயன்படுத்தும் நவீன கருவியான "பக்கெட்டுகளை" பயன்படுத்துவதை கைவிட்டுவிட்டு உண்மையாகவே நவீன கருவிகளை பயன்படுத்தி நிரந்தரமாக கச்சா எண்ணெய் பாதிப்பை சரிசெய்ய வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோள்.

கனவிலும் நினைத்துப் பார்க்காத வாழ்க்கை இது: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

By DIN  |   Published on : 04th February 2017 12:11 PM
remo345

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த முதல் படம் மெரினா. அந்தப் படம் வெளியாகி 5 வருடங்கள் ஓடோடிவிட்டன. இதையொட்டி ஒரு பதிவை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அதில் அவர் கூறியதாவது: 
2012, பிப்ரவரி 3 அன்று என்னை முதல்முதலாகப் பெரிய திரையில் பார்த்த நாள். இந்த 5 வருடங்கள் மகத்தான அனுபவங்கள் கிடைத்தன. எனக்கு ரசிகர்கள் அளித்த வாழ்க்கையை நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. என் சகோதரர்கள், சகோதரிகள், என் படக்குழு உறுப்பினர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு அதிபர்கள், எல்லா நடிகர்களின் ரசிகர்கள், ஊடகங்கள், ரசிகர்கள் என அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. 
இந்த வாழ்க்கையைத் தொடங்கிய வைத்த இயக்குநர் பாண்டிராஜுக்கு சிறப்பு நன்றிகள். நான் இன்னும் பல மைல் தூரம் போகவேண்டும் என்று எனக்குத் தெரியும். இன்னமும் நான் இங்கே கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். எப்போதும் கற்றுக்கொண்டே தான் இருப்பேன். பொழுதுபோக்குள்ள படங்களை அளிக்க எப்போதும் முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.

இப்படியும் நடக்கிறது உஷார்: உ.பி.யில் பெண்களின் செல்பேசி எண்களை பேரம் பேசி விற்ற ரீசார்ஜ் கடைகள்

By DIN  |   Published on : 04th February 2017 12:18 PM  |   
which-cell-phone-select

லக்னௌ: கடைக்கு ரீசார்ஜ் செய்ய வரும் பெண்களின் செல்பேசி எண்களை அதிக விலைக்கு விற்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அமைத்த காவல்துறை உதவி எண் 1090க்கு, 24 மணி நேரமும் ஏராளமான பெண்கள், தொடர்ந்து தங்களுக்கு அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
கடந்த 4 ஆண்டுகளில் பெண்கள் அளித்த சுமார் 6 லட்சம் புகார்களில் 90 சதவீதப் புகார்கள் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் குறித்ததாக இருந்தது.
பெண்களை செல்பேசியில் தொடர்பு கொள்ளும் நபர்கள், உங்களிடம் தோழமை கொள்ள விரும்புவதாகக் கூறி பேச்சைத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், ரீசார்ஜ் கடைக்கு ரீசார்ஜ் செய்ய வரும் பெண்களின் எண்களை குறித்து வைத்துக் கொண்டு, அவர்களது எண்களை ஆண்களுக்கு விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. மிக அழகான பெண்களின் செல்பேசி எண்களை ரூ.500க்கும், சாதாரண தோற்றம் கொண்ட பெண்களின் எண்களை ரூ.50க்கும் விற்பனை செய்த விவரமும் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற தொலைபேசி அழைப்புகளால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் கணவன்களால் சந்தேகத்துக்கு ஆளாகி கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், இந்த குற்றத்துக்காக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கழிவு நீர் மேலாண்மை அறிவோம்

By எஸ். சந்திரசேகர்  |   Published on : 04th February 2017 02:25 AM  |
சில ஆண்டுகளுக்கு முன்புவரை தெருக்குழாய்களில் தண்ணீர் பிடித்து குடித்துக் கொண்டிருந்தோம். அந்தத் தண்ணீர் சுத்தமானதா, கழிவுநீர் கலந்திருக்குமா என்றெல்லாம் நாம் கவலைப்பட்டது கிடையாது. அந்தத் தண்ணீரைக் குடித்ததால் நோய் வந்ததும் கிடையாது. இதற்கு முக்கிய காரணம் நிலத்தடி நீர் மாசுபடாமல் இருந்ததுதான்.
ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப நிலத்தடி நீரின் ருசி மாறுபடுமே தவிர நோய் காரணிகள் அதில் இருந்ததில்லை. உதாரணமாக, திருச்செந்தூர் கடலின் அருகில் இருக்கும் நாழிக்கிணற்றுத் தண்ணீர் உப்புக் கரிப்பதில்லை. ராமேசுவரம் கோயிலில் உள்ள தீர்த்தங்களில் தண்ணீர் வெவ்வேறு ருசிகளில் இருக்கின்றன. அதாவது, நிலத்தடி நீர் அந்தந்த இடத்தின் தன்மைக்கேற்ப இருந்து வருகிறது என்பதே உண்மை.
இன்று நகரமாகியிருக்கும் பல கிராமப் பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதாகவே இருந்தது. குடியேற்றம் பெருகப்பெருக நிலத்தடி நீரின் தன்மை மாறியது. அதற்கு முக்கிய காரணம், கழிவுநீர் நிலத்துக்குள் பாய்ந்ததுதான்.
கழிவுநீர் மேலாண்மையை உலகுக்கே எடுத்துக் காட்டிய பெருமைக்கு உரியது மதுரை நகரம். பல ஆண்டுகளுக்கு முன்பே பாதாள சாக்கடை அமைத்து, வீடுகளில் சேரும் கழிவுநீரை குழாய்கள் வழியே சேகரித்தனர். இதற்காக மூன்று அல்லது நான்கு வார்டுகளுக்கு ஒரு இடத்தில் நீரேற்று நிலையங்கள் அமைத்தனர். அங்கு பிரம்மாண்டமான கீழ்நிலைத் தொட்டி
அமைத்து அதில் சேரும் கழிவுநீரை
பம்பிங் செய்து புறநகர்ப் பகுதியான
வெள்ளக்கல் கொண்டு சென்றனர்.
அங்கு மாநகராட்சிக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலத்தில் இந்தத் தண்ணீரை பாய்ச்சி அதில் மாட்டுத்தீவனம் பயிர் செய்தனர். இதன் மூலம் அந்தப் பகுதியில் கூட நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்திலேயே இவ்வளவு சிறப்பாக இந்தத் திட்டத்தை செயலாக்கியுள்ளனர்.
பாதாள சாக்கடை அமைத்தால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தடையற்ற வருமானமும் கிடைக்கும். அதற்கு செலவாகும் நிதியில் பாதியளவுக்கு வீடுகள், வணிக நிறுவனங்களில் பெறும் முன்வைப்புத் தொகை மூலம் ஈடுகட்டிவிடலாம். ஆனால் ஏனோ கழிவுநீர் மேலாண்மையில் தமிழகம் மெத்தனமாகவே உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் புதிதுபுதிதாக கட்டும் கட்டடங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை கழிவுநீர் மேலாண்மைக்குத் தருவதில்லை.
உதாரணமாக விருதுநகரில் சுமார் ஏழு ஆண்டுகளாக பாதாளச்சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பிரச்னை மாநிலத்தின் பல பகுதிகளிலும் உள்ளது. கழிவுநீர் பிரச்னைக்கு எளிதான தீர்வாக திறந்தவெளி கால்வாய்களை அமைத்து விடுகின்றனர். ஆனால், அது தடையின்றி செல்லும் விதத்தில் அமைக்கப்படுவதில்லை. இதனால், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
மேலும் இந்தக் கழிவுநீரை ஏதோ ஒரு கண்மாயில் சென்று கலக்கச் செய்கின்றனர். மதுரையில் செய்தது போன்று மறுசுழற்சி செய்வதில்லை. இதனால் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. நாளடைவில் அந்தப்பகுதியில் குடியிருப்போர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இப்படியாக கழிவுநீர் மேலாண்மையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
பாதாளச் சாக்கடைக்குத் திட்டமிடும்போதே மேடான பகுதி, பள்ளமான
பகுதிகளை வரையறை செய்து பணிகளை மேற்கொண்டால் நீர் தேங்கும் பிரச்னை இருக்காது.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது மதுரைக்கு 2-ஆவது வைகை குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. வைகை அணை அருகே தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, அங்கிருந்து தண்ணீர் மதுரைக்கு பம்புகளின் உதவி இன்றி வந்து சேர்ந்து மேல்நிலைத் தொட்டிகளிலும் ஏறிவிடும். அதற்கேற்ப மேடான பகுதியைத் தேர்ந்தெடுத்து சுத்திகரிப்பு நிலையம் அமைத்தனர். இன்றளவும் அது செயல்பாட்டில் உள்ளது.
இப்போது வீட்டுக்குவீடு கழிப்பறைத் தொட்டிகள் உள்ளன. அவற்றில் சேரும் தண்ணீரை குழிகள் அமைத்து அப்படியே நிலத்துக்குள் விட்டுவிடுகின்றனர். ஒரு
நிலையில் தண்ணீர் உறிஞ்ச முடியாத
அளவுக்கு மாறியபின் கழிவுநீரேற்று
ஊர்திகள் மூலம் தொட்டிகள் சுத்தப்படுத்தப்படுகின்றன.
அந்த வாகனங்கள் கழிவுநீரை என்ன செய்வார்கள்? ஊருக்கு ஒதுக்குப்புறமாகக் கொண்டுசென்று எங்காவது கண்மாய்,
நீர்நிலைகள், ஆளில்லாத பகுதிகளில் கொட்டிவிடுகின்றனர். இதனால் அந்தப் பகுதி மாசுபடுகிறது.
குடிநீர் பிரச்னைக்கு நிகரான சவாலாக உள்ளது, கழிவுநீர் மேலாண்மையும்.
இதற்குத் தீர்வுகாண உள்ளாட்சி அமைப்புகள், பாதாள சாக்கடை திட்டத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும். கழிப்பறைக் கழிவுகள் மட்டுமின்றி, குளியலறை, துணி துவைத்தல் உள்ளிட்ட அன்றாட கழிவுநீரையும் ஒரே குழாய் மூலம் சேகரித்து புறநகர் பகுதிகளுக்கு நீரேற்றம் செய்து மறு சுழற்சி செய்யலாம்.
மேலும் வீடுகளில் கழிப்பறை தண்ணீரை தோட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும். அதுகுறித்து பொதுமக்களை ஊக்குவிக்கலாம். இதன்மூலமும் நிலத்தடிநீர் மாசுபடுவதும் தவிர்க்கப்படும்.
இந்த திட்டங்கள் அனைத்துமே வெற்றிபெறுவது அதிகாரிகள் கையில் மட்டுமின்றி பொதுமக்கள் கையிலும் உள்ளது. வீட்டுக்கு வீடு கழிவுநீரை முறையாக மறுசுழற்சி செய்தும், மழை நீரை முறையாக சேமிக்கவும் செய்தால் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுத்து நிறுத்த முடியும்.

சட்டத்துக்கு ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்: நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பது நல்லது- தமிழக அரசு அதிகாரிகள் தகவல்

சி.கண்ணன்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும் என்பதால், முன்னெச்சரிக்கை யாக நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண் ணப்பிப்பது நல்லது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் போக, மீதமுள்ள 85 சதவீதம் மாநில அரசுக்கு உள்ளது. அதேபோல் தனியார் (சுயநிதி) மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. அரசு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடத்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) இருந்து விலக்கு பெறும் வகையிலான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில், நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல் லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-2018-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும். மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 31-ம் தேதி மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்தது. விண்ணப்பிக்க மார்ச் மாதம் 1-ம் தேதி என்ற காலக் கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பை நம்பி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிடலாமா அல்லது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக் கலாமா என்ற குழப்பமான நிலையில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர்கள் உள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரி களில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங் களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறவே சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப் பட்டால்தான், இந்த சட்டம் செல்லத் தக்கதாக இருக்கும். நீட் தேர்வு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

நீட் தேர்வு நடக்கும் தேதியும், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளையும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கும்போது கிடைக்கட்டும், மாணவர்கள் காலம் தாழ்த்தாமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது நல்லது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்து விட்டால், கடந்த ஆண்டு போலவே பிளஸ் 2 தேர்வு அடைப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
ஒருவேளை, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், நீட் தேர்வு எழுதி அதன் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும். குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டத்திற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைக்காவிட்டாலோ, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிட்டாலோ மாணவர்கள் மருத்துவம் படிப்பது கேள்விக்குறியாகிவிடும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Friday, February 3, 2017

போலீஸ் உடையில் 'பொம்மை' ஆட்சி!


சசிகலா, நடராசன், திவாகரன் மூவருக்கும் இந்த ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையைவிட, ஜார்ஜ், சேஷசாயி, சங்கர் போன்ற காவல் துறை அதிகாரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்புதான் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.

‘இதுதான்டா போலீஸ்’ ராஜசேகர் போல ஜார்ஜும், ‘சாமி’ விக்ரம் போல சேஷசாயியும், ‘சிங்கம்’ சூர்யா போல சங்கரும் பேட்டி மேல் பேட்டி கொடுப்பதைப் பார்த்தால், அரசாங்கமே இவர்களைக் காப்பாற்ற இயங்குவதுபோலத் தெரிகிறது. ஜெயலலிதா வளர்த்துக் கொடுத்த கட்சியையும், கைப்பற்றிக் கொடுத்த ஆட்சியையும் இவர்கள் வைத்துக் காப்பாற்ற மாட்டார்கள் என்பதற்கு, பட்டவர்த்தனமான உதாரணம் ஆகிவிட்டது சென்னை கடற்கரையில் நடந்த காளைப் புரட்சியைக் காக்கிக் களங்கமாக ஆக்கிய நிகழ்ச்சி.

ஆளும் தலைமையும் சரி இல்லை, ஆளும் கட்சியின் தலைமையும் சரி இல்லை என்பது எதிர்க்கட்சிகளைவிட காவல் துறைக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. அதனால்தான் தனது `லத்தி ஆட்சி'யைக் கூச்சமே இல்லாமல் நடத்துகிறது. எல்லா அராஜகங்களையும் செய்துவிட்டு, அதற்குப் பொய்யான ஆதாரங்களைப் புதிது புதிதாக அடுக்குகிறது.

ஒரு நாயைக் கொல்வதாக இருந்தாலும், அதற்கு பைத்தியம் இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்பது பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே பின்பற்றும் நெறிமுறையாக இருக்கிறது. இன்று எந்த மனிதனைக் கொல்வதற்கும் இந்த நெறிமுறை அவசியம் இல்லை. சிட்டுக்குருவிகளைப்போல் இதே சென்னை கடற்கரையில் பலரைச் சுட்டுக் கொன்ற ‘மீசை’ போலீஸ் அதிகாரிதான் ஒருமுறை சொன்னாராம், ‘`நான் யாரையாவது சுட வேண்டும் என முடிவுசெய்தால், சுட மாட்டேன். முதலில் என் கையை வெட்டிக்கொள்வேன். அதன் பிறகுதான் சுடுவேன்'' என்று.

“என்னை வெட்டிவிட்டான். அதனால் சுட்டேன்!” என்பது, அவர் தமிழ்நாடு காவல் துறைக்குக் காட்டிச் சென்ற வழிமுறை.

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாக ஆறு நாட்கள் அமைதியாக நடந்தது சென்னை கடற்கரைப் போராட்டம். ஏழாவது நாள் எப்போது காவல் துறை உள்ளே நுழைந்ததோ, அப்போதே ‘ஏழரை’ விதைக்கப்பட்டுவிட்டது. ‘`அரசாங்கம், ஓர் அவசரச் சட்டம் கொண்டுவருகிறது. எனவே, ஜல்லிக்கட்டு நடத்தத் தடை இல்லை. உங்களது நோக்கம் நிறைவேறிவிட்டது. நீங்கள் கலைந்து செல்லலாம்'' என்று காவல் துறை அதிகாரி பாலகிருஷ்ணன் சொன்னபோது, ‘`எங்களது வழக்குரைஞரை அழைத்துள்ளோம். அவர் வந்ததும் அவசரச் சட்டத்தைப் படித்துப் பார்த்துவிட்டுக் கலைந்துவிடுகிறோம்” என்றுதான் இளைஞர்கள் சொன்னார்கள். நான்கு மணி நேரம் அவகாசம் கேட்டார்கள். தரவில்லை. இரண்டு மணி நேரம் அவகாசம் கேட்டார்கள் தரவில்லை. ஒரு மணி நேரம் கேட்டார்கள். தருகிறோமா... இல்லையா எனச் சொல்லாமலேயே பாலகிருஷ்ணன் போனார்.

எதையுமே சொல்லாமல் பாலகிருஷ்ணனை அழைத்துச் சென்றார் சங்கர். இதை, நேரலையில் லட்சக்கணக்கான மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒவ்வொருவரையும் இழுத்துப் போடத் தொடங்கியது காவல் துறை. `‘சார்... குழந்தைங்க இருக்காங்க, பெண்கள் இருக்காங்க. நாங்க கலைஞ்சுடுறோம் சார்” என்று அப்போதும் குரல் வந்தது. காவல் துறை அதிகாரிகள், அதைக் காதில் வாங்கவே இல்லை. பலப்பிரயோகத்தைப் பயன்படுத்தி, ஒவ்வோர் இளைஞனின் கையையும் ஒடித்து, பூட்ஸ் கால்களால் மிதித்து, பெண்களை நசுக்கி, காட்டுமிராண்டிகளாக நடந்து கொண்டதைப் பார்த்தப் பிறகுதான் பலரும் `கலைய மாட்டோம்' என மறுபடியும் உட்கார்ந்தார்கள்.

“ஒரு மணி நேரம் அவகாசம் கேட்டார்கள். அதன் பிறகும் கலையவில்லை” என்கிறார் சென்னை காவல் துறை கமிஷனர் ஜார்ஜ். ஒரு மணி நேரம் அவர்களுக்கு அவகாசம் தரப்பட வில்லை. சங்கரும் பாலகிருஷ்ணனும் கூட்டத்தை விட்டு வெளியேறியதும் கூட்டத்துக்குள் வேதாளம் புகுந்தது. இருந்த இடத்திலேயே சங்கிலிபோல் கைகோத்துக்கொண்டு சிலர் படுத்துக் கொண்டார்கள்.

பாதிப் பேர், கலைந்து ஓட ஆரம்பித்தார்கள். ஓடியவர்களை விரட்டியது போலீஸ். இவர்கள்தான் மீனவக் குப்பத்துக்குள் அடைக்கலமாக ஓடியவர்கள். சிலர், கடலை நோக்கி ஓடினார்கள். தண்ணீரை நோக்கி பல நூறு பேர் ஓடிவருவதைப் பார்த்து, மீனவர்கள் அந்த இடத்தில் சூழ்ந்தார்கள். போராட்டக் காரர்களுடன் மீனவர்கள் கைகோத்தது, அந்த இடத்தில்தான். காவல் துறையால் போராட்டக்காரர்களை அடிக்க முடியாமல் போனதற்குக் காரணம் மீனவர்கள் அரண் அமைத்து நின்றதுதான். இந்தக் கோபத்தில்தான் குப்பத்துக்குள் போலீஸ் கல் வீசுகிறது. அவர்கள் திருப்பி கல் வீசுகிறார்கள். அகிம்சைப் போராட்டத்தை அராஜகப் போராட்டமாக மாற்றும் வேலை, இரண்டு மணி நேரத்தில் நடந்து முடிந்துவிடுகிறது.

‘`சுடுவதற்கு முன் கையை வெட்டிக் கொள்வேன்!” என்ற விதிப்படி போலீஸாரே ஆங்காங்கே கொளுத்திக்கொண்டார்கள்.

நின்றுகொண்டிருந்த ஆட்டோவுக்குத் தீ வைக்கிறார் காக்கிச் சீருடை அணிந்த சென்னை காவல் துறை நண்பர். குடிசைக்குத் தீ வைத்துவிட்டு, கொக்கோ விளையாட்டில் ஓடுவதைப்போல் ஓடுகிறார் சென்னை காவல் துறை தோழி.
இதுபற்றி கேட்டால் உடனே ‘மார்ஃபிங்’ என்கிறார் ஜார்ஜ். மதியம் நடந்தது சம்பவம். இரவுக்குள் ‘மார்ஃபிங்’ எனக் கண்டுபிடித்து விட்டார். கூடுதல் ஆணையர்கள் சங்கர், சேஷசாயிக்கு மனச்சாட்சி உறுத்துகிறதுபோல. ‘`அந்தக் காட்சியைத் திரும்பத் திரும்பக் காட்டுகிறார்கள். அந்த போலீஸார் மீது நடவடிக்கை எடுப்போம். கமிஷனர் நடவடிக்கை எடுப்பார்” என்று சொல்லியிருக்கிறார்கள். இதைச் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? தீயை முதலில் மூட்டிய சமூக விரோதிகள் யாரெனத் தெரிகிறதா?

“இரண்டு போலீஸாரை மட்டும் வைத்து ஒட்டுமொத்த போலீஸாரையும் மதிப்பிடக் கூடாது” என்று திருவாய் அருள்கிறார் சேஷசாயி. உண்மைதான். இது போராட்டம் நடத்தி யவர்களுக்கும் பொருந்தாதா? யாரோ சிலர், சட்டம் மீறிய முழக்கங்களை எழுப்பியிருக்கலாம். அதற்காக மொத்தக் கூட்டமும் தேச விரோதிகள், சமூக விரோதிகள் ஆகிவிடுவார்களா?

பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். ஜல்லிக்கட்டு விவகாரத்தை இந்த மூன்று பேரும் சரியாகக் கையாளவில்லை. தமிழ்நாடு முழுக்க லட்சக்கணக் கானவர்கள் உட்கார்ந்த பிறகுதான் இந்த மூன்று பேருக்கும் சொரணை வந்தது. அந்தக் கோபத்தை வெளிக்காட்ட மாட்டார்களா?

மத்திய-மாநில அரசுகளுக்கும், உளவுத் துறைக்கும், சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றும் காவல் துறைக்கும் இது என்ன மாதிரியான கூட்டம் என்றே தெரியவில்லை. கடைசி வரை அது புரியவே இல்லை.

ஜல்லிக்கட்டுக்குத் தடை என்றதும், `தமிழர் விளையாட்டுக்குத் தடையா?' என்றவர்கள் முதலில் அணி சேர்ந்தார்கள். ‘நம்முடைய கலாசாரம் அல்லவா?’ என்று சிலர் வந்தார்கள். ‘இதற்குத் தடைபோட இவர்கள் யார்?’ என்று சிலர் வந்தார்கள். பெரியாரிசம், மார்க்ஸியம், தமிழ்த் தேசியம், பற்றிப் படிக்கக்கூடியவர்கள் வந்தார்கள். சிறு சிறு அமைப்புகள், இவற்றோடு இணைந்தன. ‘நாட்டுக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டாமா?’ என்று சிலர் வந்தார்கள். ‘நானும் தமிழன்டா’ எனக் காட்டிக்கொள்ள சிலர் வந்தார்கள்.

பொங்கலை, இந்து பண்டிகையாக சிலர் பார்த்தார்கள். பொங்கலை, தமிழர் திருநாளாக இஸ்லாமியர்கள் சிலர் பார்த்தார்கள். விஷ்ணு புராணத்தில் ஏழு காளைகளை அடக்கித்தான் ருக்மணியைத் திருமணம் செய்தார் கிருஷ்ணர் என வைஷ்ணவர்கள் வந்தார்கள். திருவான்மியூர் பக்கத்து கோயில் ஐயர் ஒருவர், தான் வர முடியவில்லை என தனது மகன்களை அனுப்பி வைத்தார்.

`விவசாயத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மழை இல்லை, வறட்சி' என வேதனைப்படுபவர்கள் வந்தார்கள். மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான சிந்தனை உடையவர்கள் வந்தார்கள். இந்தப் போராட்டக் களத்துக்குப் போகவில்லை என்றால், `தமிழினத் துரோகி' எனச் சொல்லி விடுவார்களோ எனப் பயந்த பல அமைப்பினர், அவசர அவசரமாக வந்தார்கள். கடற்கரை என்பதால் காற்று வாங்க வந்தவர்கள், காதல் செய்ய வந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர்.

சிறு மைதானமாக இருந்தால் இறுக்கமாக இருந்திருக்கும். பரந்துபட்ட இடம். கார் பார்க்கிங் பிரச்னை இல்லை. எனவே, அது சுற்றுலாத் தளம் ஆனது. வெளியூரில் இருந்து பேருந்து எடுத்து இங்கு வந்தார்கள். வெளியூர்க்காரர்கள், சென்னையில் இருப்பவர்களை ‘மெரினாவுக்குப் போகலையா?’ எனக் கேட்பதை வழக்கமாக்கினார்கள்.

மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்குபவர், அங்கு வந்து குப்பைகளை அள்ளிக்கொண்டி ருந்தார். 70 லட்சம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் ஒரு பெண், தனது தோழிகளுடன் வந்து அங்கு முதலுதவி செய்து கொண்டிருந்தார். அரசு வாகனமான ‘G’ பொறிக்கப்பட்ட வாகனம் வருகிறது. போலீஸார் வழி அமைத்துத் தருகிறார்கள், ‘ஏதோ அதிகாரி வருகிறார்’ என்று. நான்கு பையன்கள் கறுப்புச் சட்டையுடன் இறங்கி, கூட்டத்தில் போய் உட்காருகிறார்கள்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம். காவல் துறை அதிகாரிகளுக்கு எரிச்சல் ஏற்படுத்தியதே இதுதான்.

மக்கள் எதன் பொருட்டும் கூட்டம் சேர்ந்தால், இவர்களுக்குப் பிடிக்காது. ‘இன்னொரு முறை இப்படி இவர்கள் கூடிவிடக் கூடாது’ என்பதை உணர்த்த போலீஸ் விரும்பியது. ‘கூட்டத்தோடு சேர்ந்தால் அடி விழும்’ என்ற பயத்தை ஏற்படுத்தி னார்கள். ‘புதிதாக யாராவது போன் செய்து `தோழர்' எனப் பேசினால், `பேச வேண்டாம்’ என நல்ல பிள்ளையாக காவல் துறை அதிகாரி சொல்வதற்குக் காரணம் இதுதான். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலமாக செய்திகள், போராட்டக் களங்கள் உருவாவதை இவர்களால் தடுக்க முடியவில்லை. நாளிதழ்களில் விளம்பரம் காட்டியும், டி.வி சேனல்களை கேபிள் ஆசை காட்டியும் மிரட்டலாம். ஆனால், ஃபேஸ்புக், வாட்ஸ்அப்-க்கு அவனவன் முதலாளி. என்ன செய்ய முடியும்?

`அடுத்த பத்து வருஷங்களுக்கு எவனும் மெரினா பக்கம் வர மாட்டான்’ என்று ஒரு போலீஸ் அதிகாரி சொன்னாராம். போலீஸ் உணர்த்த விரும்பியது இதுதான்.

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பக்கம் போராட்டம் நடந்ததால், அதிகமான இஸ்லாமிய மக்கள் வந்தார்கள். அதற்காக இதை `தேச விரோதிகள்' என போலீஸ் அடையாளம் காட்டுமானால்...

கடற்கரையில் போராட்டம் நடந்ததால், அதிகமான மீனவர்கள் பங்கெடுத்தார்கள். அதற்காக, இதை `சமூக விரோதிகள்' என போலீஸ் அடையாளம் காட்டுமானால்...

இந்தியப் பிரஜைகளை இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது. குறிப்பிட்ட சமூக மக்களை தேச விரோதிகள், சமூக விரோதிகள் எனச் சொல்லும் போலீஸ், ‘பொதுவான போலீஸாக’ எப்படி இருக்க முடியும்?

இந்த மொத்தக் கலவரத்துக்கும் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் காவல் துறையும் காட்டும் முதல் ஆதாரம், ‘ஒசாமா பின்லேடன் படத்தை, கூட்டத்தில் எடுத்து வந்தார்கள்’ என்பது. அப்படி ஒரு காட்சி இந்தப் போராட்டத்தில் நடக்கவே இல்லை. ‘`ஒசாமா பின்லேடன் படத்தை எனது கட்சிக்காரர்கள் எடுத்து வந்தது, பி.ஜே.பி அலுவலகத்துக்கு எதிராக தாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப் போனபோது. அப்போதே அவர்களைக் கண்டித்து, படத்தைக் கிழிக்கச் சொன்னேன். அந்தப் படத்தை மெரினாவில் நடந்ததாகக் காட்டுகிறார்கள்’' என்று ‘தடா’ ரஹீம் சொல்கிறார். இந்த ஆதாரத்தை காவல் துறையின் மேலிடம் வரை அவர் சொல்லிவிட்டார். இதன் பிறகும் அந்தப் படத்தை வைத்துக்கொண்டு பேசுவது உள்நோக்கம்கொண்டது அல்லவா?

போலீஸ் எழுதிக் கொடுத்ததையா சட்டமன்றத்தில் பன்னீர்செல்வம் வாசிக்க வேண்டும்? சுயபுத்தி இருந்திருந்தால், இந்தப் புகைப்படம் எந்தத் தேதியில் எடுக்கப்பட்டது என்ற அறிக்கை கேட்டிருக்க வேண்டாமா? ஜார்ஜ், நான்கு மாதங்களில் ஓய்வுபெற்று போய்விடுவார். உங்களுக்கு நான்கு ஆண்டுகள் இருக்கின்றன.

பன்னீருக்கும், சசிகலாவுக்கும், நடராசனுக்கும், திவாகரனுக்கும் அரசியல்தான் தொழில். ஒரே ஒரு பொய்யால் ஓர் இனத்தையே, ஒரு போராட்டத்தையே தேச விரோத, நாசக்காரச் சக்திகளின் கைவேலையாகச் சித்திரிக்கும் புதைகுழிக்குள் அ.தி.மு.க அரசு அழுத்திக்கொண்டு இருக்கிறது. ‘கடல் மேல் பிறக்கவைத்தான்...’ பாடல் மூலமாக, கடலில் பிறந்த கட்சி நடத்தும் ஆட்சியில், மீனவனைச் `சமூக விரோதி' எனச் சொல்லி அடிப்பது பாவம் அல்லவா?
இப்படி ஒரு புகைப்படத்தைக் கொடுத்து, நிச்சயம் ஜெயலலிதாவை ஏமாற்ற முடியாது. கருணாநிதி ஆட்சியிலும் கலவரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன காவல் துறையால். மிக சாமர்த்தியமாக, ‘நான் இது பற்றி காவல் துறையிடம் அறிக்கை கேட்டேன். அவர்கள் எனக்கு என்ன அறிக்கை அனுப்பியிருக்கிறார்கள் என்றால்...’ என்ற பீடிகை போட்டுத்தான் பதிலை வாசிப்பார் கருணாநிதி.

தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது எனச் சொல்வது, இதை வைத்துத்தான்.தமிழ்நாட்டுக்கு, தலை இல்லை; தலையாட்டி பொம்மை இருக்கிறது. பொம்மை, போலீஸ் யூனிஃபார்ம் போட்டிருப்பதுதான் பயமாக இருக்கிறது.


ப.திருமாவேலன் - ஓவியம்: கார்த்திகேயன் மேடி


கருணாநிதி இன்று..?

vikatan.com

ப.திருமாவேலன் - ஓவியம்: கார்த்திகேயன் மேடி

‘`சார்... தலைவரே!” என்று அழைக்கிறார் ரஜினிகாந்த். அவரை அடையாளம் காண முடியவில்லை கருணாநிதியால்.

‘`ஐயா, வைரமுத்து வந்திருக்கிறேன். உங்கள் கவிஞர் வந்திருக்கிறேன்’’ என்று உரக்கக் குரல்கொடுக்கிறார் வைரமுத்து. குரலோசை, காதுகளுக்குள் போகவில்லை கருணாநிதிக்கு.

“அப்பா, திருவாரூர் போயிட்டு வர்றேன்” - உத்தரவுக்காகக் காத்திருக்கிறார் ஸ்டாலின். உரக்கச் சொல்லியும் உணர்வு இல்லை கருணாநிதியிடம்.

“அண்ணே, அறிவாலயம் போகலாமா?” இது துரைமுருகனின் வெடிக்குரலில் வெளிப்படும் வேதனைக் கேள்வி. சிக்கலான எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் கருணாநிதியிடம் இருந்து வரவில்லை எதிர்க்குரல்.

நாளிதழை வாசிக்கிறார் சண்முகநாதன். சத்தம் இல்லை கருணாநிதியிடம்.

‘நெஞ்சுக்கு நீதி’யில் இருந்து சில பகுதிகளை ராஜமாணிக்கம் படிக்கிறார். பதில் இல்லை கருணாநிதியிடம்.

டி.வி-யில் பழைய பாடல்களை ஓடவிடுகிறார்கள். கேட்பதாக உணர முடியவில்லை.

அவரே முன்னொரு காலத்தில் எழுதிய வசனங்கள் மிக உரத்த ஒளியில் காட்டப்படுகின்றன. கருணாநிதியின் கவனம் அவற்றில் பதியவில்லை.

எப்போதும் தன்னைச் சுற்றியே அரசியல் இருக்க வேண்டும் என நினைத்த, ‘என்னைத் திட்டினாலும் பாராட்டினாலும் அவர்கள் `கருணாநிதி' என்றே சொல்கிறார்கள்’ எனச் சொல்லிக்கொண்ட, புதிய செய்தியை தான் பரப்புவது அல்லது பழைய செய்திக்கு தனது எதிர்வினையை வழங்குவது என எப்போதும் தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியாகவே இருந்த கருணாநிதிக்கு, இப்போது எதையும் உணரும், உள்வாங்கிக்கொள்ளும், வெளிப்படுத்தும் ஆற்றல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகிறது.



கடந்த ஒரு வார காலமாக ஒருவித முன்னேற்றம் இருக்கிறது, வழக்கம்போல் காலையில் தன்னைப் பார்க்க வந்த ஸ்டாலினைப் பார்த்து, புருவங்களை உயர்த்திக் கவனித்திருக்கிறார் கருணாநிதி.

பாசுரம் பாடிய ஜெகத்ரட்சகனைப் பார்த்து, மெள்ளச் சிரித்துள்ளார் கருணாநிதி. இதைப் பார்த்ததும் ஜெகத், ‘`ஐயா, நீங்க ராமானுஜர் மாதிரி 109 வயது வரைக்கும் இருப்பீங்க” என்று சொல்லி, மேலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். சில நிமிடங்கள் கழித்து, கருணாநிதியின் கண்களில் இருந்து இரண்டு மூன்று சொட்டு நீர்த்துளிகள் விழுந்துள்ளன.

தினமும் காலையும் மதியமும் அப்பாவைப் பார்க்க வரும் கனிமொழி, நான்கைந்து நாட்களுக்கு முன்னர் உள்ளே வருகிறார். `ரெண்டு மூணு நாள் வெளியூர் போறேன்' என்கிறார். தன் முகத்துக்கு நெருக்கமாக இருந்த கனிமொழியின் நெற்றியில் முத்தம் இட்டுள்ளார் கருணாநிதி.

உடனே ராசாத்தி அம்மாளுக்குத் தகவல் தருகிறார் கனிமொழி. அவர் அவசரமாக வருகிறார். அவரைப் பார்த்ததும் கண்கள் லேசாகக் கலங்குகின்றன கருணாநிதிக்கு.

ஆட்களைக்கூட அடையாளம் காண முடியாமல் இருந்தவர், குடும்ப உறுப்பினர் முகம் அறிவதும், ஏதோ உள்ளுக்குள் யோசித்து அதை வெளிப்படுத்த வார்த்தைகள் வசப்படாமல் கண்கள் கசிவதும் கோபாலபுரத்துக் காட்சிகளாக இப்போது இருக்கின்றன. இதை வைத்துத்தான், ‘`இன்னும் 15 நாட்களில் தலைவர் கலைஞர், அண்ணா அறிவாலயம் வந்து கட்சிப் பணிகளைக் கவனிப்பார்” என்று அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சொன்னது. தான் பெற்ற உற்சாகத்தை, உடன்பிறப்புகளுக்கு ஊட்டுவதாக டி.கே.எஸ் அறிக்கை அமைந்துள்ளது. ஆனால், உண்மை நிலைமை அப்படி இல்லை.

கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்தே தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார் கருணாநிதி. அதற்குக் காரணம், உடலில் ஏற்பட்ட கொப்புளங்கள். கை, கால், முதுகு, இடுப்பு, கழுத்து என ஏற்பட்டு, ஒவ்வாமை காரணமாக முகத்திலும் கொப்புளங்கள் ஏற்பட்டன. இதனால் முகச்சவரம் செய்ய முடியாமல்போனது. தினமும் இரண்டு வேளை முகச்சவரம் செய்யும் கருணாநிதி, லேசான தாடியுடன் வெளியே மற்றவர் பார்வையில் பட வேண்டாம் எனத் தவிர்த்தார். இந்தக் கொப்புளங்கள் மறைவதற்கான மருந்தை, மருத்துவர்களால் முழுமையான அளவில் தர இயலவில்லை. `தேவையான அளவுக்கு மருந்தைத் தாங்கும் சக்தி, உடலுக்கு இல்லை' என்றனர் மருத்துவர்கள். அதனால் இந்தக் கொப்புளங்கள் மறைய நாள் பிடித்தது. அக்டோபர் மாதம் இதில் துன்பப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக, உணவு உட்கொள்வதிலும் சிரமம் இருந்தது; லேசாக மறதியும் ஏற்பட்டது. கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னரே, உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிவிடுவார் கருணாநிதி. பிரமுகர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே தூங்கியுள்ளார். வீட்டில் இருக்கும்போதே, ‘அறிவாலயத்திலா இருக்கேன்?’ எனக் கேட்டுள்ளார். பழைய நினைவுகள் மறப்பதும், ஆட்களை அடையாளம் காண்பதில் சிரமமும் இருந்த நிலையில்தான், உணவுப் பிரச்னையும் ஏற்பட்டது. எனவே, திரவ உணவை குழாய் மூலமாகச் செலுத்தினார்கள். மூக்கில் குழாய் போனதால் பேச்சும் தடைப்பட்டது.

`ஜெயலலிதா இறந்துவிட்டார்' என்று அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். ‘மூச்சை நல்லா இழுத்து விடுங்க...’ என மருத்துவர் சொன்னபோது, ‘மூச்சை இழுத்து விட்டுடக் கூடாதுன்னுதான் இங்கே வந்திருக்கேன்’ என்று தன் பாணியில் கமென்ட் அடித்தார். அதன் பிறகு தான் பேசும், யோசிக்கும், வெளிப்படுத்தும் தன்மை மெள்ளக் குறைந்துள்ளது.

இரண்டாவது முறை மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டபோது இருந்த நிலைமையே வேறு. அவரது நெஞ்சில் சளி கடுமையாக அடைத்துக்கொண்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக, காவேரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். பனி நேரம் என்பதாலும், சளி அதிகமாக அடைத்ததாலும் ஏற்பட்ட மூச்சுத்திணறல் அது. உடனடியாக நெஞ்சு சளி நீக்கப்பட்டது. மூச்சு விடுதல் இயல்பானது. ஒரு வாரக் காலத்துக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டார்.

மருத்துவமனையில், ராகுல் காந்தியைத் தவிர வேறு எவரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. “சார்... சார்...” என்று அழைத்துப்பார்த்தார். கருணாநிதியால், ராகுலை உணர முடியவில்லை. கோபாலபுரம் வீட்டுக்குக் கொண்டுவந்த பிறகும் கருணாநிதியைப் பார்க்க எவரும் அனுமதிக்கப்பட வில்லை. ஸ்டாலின் செயல் தலைவர் ஆக்கப்பட்டபோது (ஜனவரி-4) க.அன்பழகன், துரைமுருகன் ஆகியோர் வந்திருந்தனர். புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டது.

மற்றபடி செல்வி, ஸ்டாலின், தமிழரசு, ராசாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோர் மட்டுமே கருணாநிதியைப் பார்க்க தின அனுமதி உள்ளவர்கள். பொங்கல் தினத்தன்று வைரமுத்து, சண்முகநாதன், ராஜமாணிக்கம் ஆகியோர் கருணாநிதியைப் பார்த்தனர். மற்றபடி மருத்துவர்கள், ஆண் மருத்துவப் பணியாளர்கள் ஆறு பேர் கருணாநிதியைக் கவனித்துக் கொள்கிறார்கள். நிழலாக இருந்த உதவியாளர் நித்யாவுக்குக்கூட இப்போது அதிக வேலை இல்லை.

தி.மு.க தலைமைக்கழகச் செயலாளர்கள் கு.க.செல்வம், தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் ஆ.த.சதாசிவம், பூச்சிமுருகன் ஆகிய மூவரில் ஒருவர் கோபாலபுரம் வீட்டில் காலையும் மதியமும் இருக்க வேண்டும். கடந்த மூன்று மாதங்களாக இவர்களுக்கு இந்தப் பணி தரப்பட்டுள்ளது.

இரவில் மட்டும் அல்ல, பகலிலும் தூங்கியபடியே இருக்கிறார் கருணாநிதி. குழாய் மூலமாகவே திரவ உணவு செலுத்தப்படுகிறது. மருத்துவர்கள் தொடர்ந்து ஊட்டச்சத்து மருந்தைக் கொடுக்கிறார்கள். சரியான திடஉணவு எடுக்காததால், உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகிறது. முகச்சவரம் செய்யப்படாததால், தாடி வளர்ந்துள்ளது. கறுப்புக் கண்ணாடியை அணிவிப்பது இல்லை. மருத்துவமனைக்கு இரண்டாவது முறை அழைத்துச் செல்லும்போதே மோதிரத்தைக் கழற்றிவிட்டார்கள்.

‘தலைவர் நன்றாக இருக்கிறார்’ என்பது மாதிரியான பொய்யான தகவல் பரப்பப்படுவதை ஸ்டாலின் விரும்பவில்லை. அதனால்தான் அவர் பெயரில் அறிக்கை வெளியிடுவதை ஸ்டாலின் நிறுத்தச் சொன்னார். இந்தப் பொங்கல் தினத்தன்று, கருணாநிதி பெயரில் வாழ்த்து அறிக்கை வெளிவரவில்லை. பொங்கல் அன்று கருணாநிதியைப் பார்த்து ஆசி பெற்று அவர் தரும் பத்து ரூபாயை வாங்கி பத்திரப்படுத்தும் வழக்கம் பலருக்கும் உண்டு. இந்த முறை அவரைப் பார்க்கவும் யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் மாடிக்குச் சென்று கருணாநிதியைப் பார்த்துவிட்டு வர, இந்தத் தகவல் ஸ்டாலினுக்குப் போய், `‘இப்படி ஒவ்வொருத்தராப் போனா `என்னைய விடலை... உன்னைய விடலை'னு பிரச்னை வரும்’' எனக் கோபப்பட்டுள்ளார்.

‘`கொஞ்சம் இடம் மாறுதலுக்காக சி.ஐ.டி காலனி வீட்டில் கொண்டுபோய் வைத்துக்கொள்கிறோம்'' என்று ராசாத்தி அம்மாள் சொன்னதையும் ஸ்டாலின் ஏற்கவில்லை. ‘தலைவர் இங்கே இருப்பதுதான் நல்லது. நீங்க எப்ப வேணும்னாலும் வரலாம், போகலாம். இங்கேயே வேணும்னாலும் இருங்க!' என்று ராசாத்தி அம்மாளுக்குத் தகவல் அனுப்பினாராம் ஸ்டாலின். ‘`கோபாலபுரம் வீட்டுல இருந்தாத்தான் எல்லாரும் வந்து பார்க்க வசதியா இருக்கும்” என்று கனிமொழியும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஸ்டாலினுடன் வரும் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி, பி.கே.சேகர்பாபு போன்றோர் கீழேயே உட்கார்ந்துவிடுகிறார்கள். ஸ்டாலின் மட்டுமே மேலே சென்று பார்க்கிறார். கட்சி முன்னணியினர் அனைவரும் காலையும் மாலையும் இங்கே வந்து ஒரு மணி நேரம் உட்கார்ந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

கருணாநிதிக்கு 93 வயது ஆகிறது. சர்க்கரைச் சத்து, ரத்த அழுத்தம் என நிரந்தர நோய்கள் இல்லை. வயிறு செரிமானப் பிரச்னை உண்டு. கால் மூட்டுவலி எப்போதும் உண்டு. மற்றபடி இன்றைய நினைவிழப்பு, உணர்வுக் குறைவு, பேச்சு எழாமை அனைத்துமே வயது மூப்பின் காரணமாக ஏற்பட்டவை. இதை மீட்டெடுப்பது சிரமம் என்றே சொல்கிறார்கள். அதற்கான சிகிச்சைகள், மருந்துகள்தான் அவருக்குத் தரப்படுகின்றன.

கட்சிக்குள் தான் தனிமைப்படுத்தப்பட்டதும், கட்சி முன்னணியினர்கூட தன்னை வந்து சந்திப்பதைத் தவிர்த்ததும், தனது குரலுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்பு இல்லாமல் போனதுமான மனத்துயரங்களே கருணாநிதியை இந்த நிலைமைக்கு மிக வேகமாக நகர்த்தியுள்ளன. ஒருகாலத்தில் இந்த மாதிரி பிரச்னைகளை துணிந்து எதிர்கொண்டார். ‘பிரச்னை இல்லைன்னா செத்திருவேன்யா’ எனச் சொன்னவரும் அவர்தான். ஆனால் முதுமை, பிரச்னைகளை ரசிக்கவைக்காது; கசக்கவேவைக்கும். ‘`நான் வளர்த்த கட்சியிலா இப்படி நடக்கிறது? நான் பெத்த பிள்ளைகளா இப்படி மோதிக்கொள்கிறார்கள்?” என்று துன்பத் துயரங்கள் முதுமை என்னும் முதுகில் உட்காரும்போது கருணாநிதியாலேயே தாங்க முடியவில்லை.

``பழைய கருணாநிதியாக இன்று அவர் செயல்பட முடியுமானால், `பன்னீர்செல்வத்தின் பாசிச ஆட்சியைப் பாரீர்!' என முழங்கியிருப்பார். கடற்கரையிலும் அவரது முகம் பார்த்திருக்கலாம்; நடுக்குப்பத்திலும் அவரது நடையைப் பார்த்திருக்கலாம். 1965-ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தில் பங்கெடுத்ததாகப் பலரும் கைதானார்கள். ஆனால், மாணவர் போராட்டதைத் தூண்டியவர் என்று பக்தவத்சலம் ஆட்சியால் கைதானவர் கருணாநிதி. பாளையங்கோட்டைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். `என் தம்பி கருணாநிதி சிறையில் இருக்கும் பாளையங்கோட்டை சிறைச்சாலை, கழகத்தவர் யாத்திரை செல்லத்தக்க புண்ணியத்தலம்' என்று அண்ணா சொன்னது அப்போதுதான். ஆட்சிக்கு வந்ததும் உள்துறையைக் கேட்டு கருணாநிதியிடம் அதைத் தர மறுத்தார் அண்ணா. அந்த அளவுக்கு வேகமாக இருந்தார் கருணாநிதி.

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அதை எதிர்த்து தீர்மானம் போட்டதும், ஈழத்தமிழர் பிரச்னைக்காகச் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததும், `மிசாவைக் காட்டி மிரட்டினால், தமிழ்நாட்டுக்குள் வர விசா வாங்கவேண்டி வரும்' எனப் பேசியதும், இந்திய அரசியலைமைப்புச் சட்ட நகலைக் கொளுத்தியதும், `ஈழத்தமிழனைக் கொன்ற ராணுவத்தை வரவேற்கப் போக மாட்டேன்' என்றதும் கருணாநிதியின் கடந்தகாலப் பக்கங்கள்.

பிரச்னைகளைக் கவனித்தால், அவற்றில் தனது எதிர்வினையை எப்படியும் காட்டியாக வேண்டும் எனத் துடிப்பார். அந்த இடத்தில் நாம் இருக்க வேண்டும் என நினைப்பார்.

கடந்த ஆண்டு வெள்ளத்தில் சென்னை மூழ்கியபோது, மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகனை அழைத்து, `உடனே கோட்டூர்புரம் பாலத்தைப் பார்க்க வேண்டும். சைதாப்பேட்டைக்குப் போக வேண்டும்' என்றார் அவர். ஊரே மிதக்கும்போது அவரால் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க முடியாது. ஒருவிதமான பதற்றம் அவருக்குத் தொற்றிக்கொள்ளும். ஜெயலலிதா மரணம், பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சி, ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடை, மாணவர் போராட்டங்கள், போலீஸின் வெறியாட்டம் போன்றவற்றை நேருக்குநேர் எதிர்கொள்ள பழைய கருணாநிதி போன்ற தலைமை, எந்தக் கட்சியிலும் இல்லை. இங்கே வெறும் அறிக்கை அதிபதிகள் கையில் கட்சிகள் போய்விட்டன.

`எங்களுக்கு என்ன செய்வது எனத் தெரியாத சூழ்நிலை இருக்கும். ஆனால், கலைஞர்தான் ஏதோ ஒரு விஷயத்தைக் கண்டுபிடிப்பார். அதை நாங்கள் பார்த்துக்கொள்வோம்' என ரஜினியிடம் பல ஆண்டுகளுக்கு முன்னர் திருநாவுக்கரசர் சொன்னார். ஏனென்றால், கருணாநிதி மட்டும்தான் 24X7 அரசியல்வாதியாக இருந்தார்.

கருணாநிதி மிகவும் திடமான சிந்தனையுடன் கடைசியாகப் பேசியது எப்போது என விசாரித்தபோது, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பற்றி முன்னாள் மத்திய அமைச்சர், ‘மூணு தொகுதிகள்லயும் நாம ஜெயிச்சுடுவோம் தலைவரே!' என்றாராம். அப்போது கருணாநிதி, ‘இப்படித்தான் சட்டமன்றத் தேர்தல்லயும் சொல்லி ஏமாத்துனீங்க. இப்ப இதைச் சொல்லி ஏமாத்துறீங்களா?' என்றாராம். அப்போது அவர் குரல், கோபாலபுரம் முதல் மாடியில் பட்டு எதிரொலித்ததாம். இதன் பிறகு கருணாநிதியின் உணர்ச்சிமயமான குரல் வெளிவரவில்லை.

குரல் வெளிவராவிட்டாலும் தினமும் இரண்டு மணி நேரம் அவரது உடல் உற்சாகம் அடைகிறது. காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் அவரை சூரிய வெளிச்சத்தில் உட்காரவைக்கிறார்கள். அறுபது ஆண்டு காலமாக, ‘வாக்களிப்பீர் உதயசூரியன்’ என்று எந்தச் சின்னத்துக்கு அந்தக் குரல் வாக்குக் கேட்டதோ, அந்த உதயசூரியன் கைமாறு காட்டுகிறது.

சூரியனோடு நடக்கிறது பேச்சு... ஆதவனிடம் இருக்கிறது ஆக்ஸிஜன்!

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...