Friday, February 10, 2017

ராமேஸ்வரம் விரைவு ரயில் நேரம் இன்று முதல் மாற்றம்

சென்னை எழும்பூர் -ராமேஸ்வரம் (ரயில் எண் 16101) விரைவு ரயில் நேரம் வெள்ளிக்கிழமை (பிப்.10) முதல் மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையடுத்து சென்னை எழும்பூரில் இருந்து வழக்கமாக இரவு 9.40 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் விரைவு ரயில், வெள்ளிக்கிழமை முதல் இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu governor Vidyasagar Rao: A prisoner of 'conscience' many time

HYDERABAD: Those were emergency days. Indira Gandhi as prime minister had clamped a state of emergency in the country from June 25, 1975. It was withdrawn only on March 21, 1977.

Opposing the emergency tooth and nail was a man born in Nagaram village of Konaraopet mandal in Karimnagar district in Telangana.

If it meant going to the jail, he did. Ch Vidyasagar Rao was lodged in the Central Jail, Warangal. But Rao stuck to his conviction. Rao's family was large - he was one of the four boys at home and there were eight sisters. Since a young man, he stuck to what he believed in.

The 'prisoner of conscience' is now caught in a situation now where he has to exercise caution and be judicious. As governor of Tamil Nadu, Vidyasagar Rao is now in the eye of a political storm.

Political developments in Tamil Nadu in the aftermath of former chief minister J Jayalalitha's death, has brought the spotlight on Vidyasagar Rao. Will he invite Jayalalitha's friend Sasikala who has been elected as leader of AIADMK to form the government? Or will Jayalitha's political confidante and chief minister O Pannerselvam will something to cheer about as he plans to upset Sasikala's applecart?

This is not the first time in his life that the 74-year-old has found himself in a piquant situation.

"I cannot never forget this. When I was floor leader of the BJP in the AP assembly, my elder brother Ch Rajeshwara Rao was the CPI floor leader. Both of us had our own set of believes and my brother let me be me," Ch Vidyasagar Rao recollected at a function in the city in July 2015. The occasion was the release of Rao's book in Telugu titled "Uniki" (Existence). In fact, it was a collection of all his writings in jail, and in newspapers, and events in his life.

In the function attended by President Pranab Mukherjee, chief minister K Chandrashekhar Rao and politicians from all parties and his family members, Rao spoke from his heart.

"The last page is important for children. That is why I have dedicated it to my grandchildren who are in the US. They should be aware of it," Rao said.

In the 'Yaksha Prashna' of Aranya Parva in the epic Mahabharata, where Yudisthir answers questions posed by Yaksha. Vidyasagar Rao makes a mention of one particular question that Yaksha poses to Dharmaraju. "What is surprising? The answer that Dharmaraju gives is: "The fact that people thinking themselves as stable and permanent, in spite of seeing several deaths daily is surprising."

Quoting Vivekananda that day, the former union minister and several times legislator and governor of Maharashtra said, "What is important is to lead a purposeful life."

As one who is holding additional charge as Governor of Tamil Nadu at a critical phase, Rao's decision will be under scrutiny.

Law officers don’t know where to take orders from

Chennai: Law officers who represent the Tamil Nadu government before various courts in the state are in a spot, not knowing where to take instructions from to conduct cases.

A habeas corpus proceeding relating to allegations of illegal detention of AIADMK MLAs is a case in point. Though petitioners said the MLAs must be set at liberty to make their free political choice, the additional public prosecutor representing the government told the court that no one was illegally detained and all AIADMK MLAs were staying at the MLAs hostel in Chennai.

"The court was witness to a piquant situation. The petitioners were indirectly siding with the caretaker chief minister, while the prosecutor's stand went against the interests of the head of the state," said a law officer who was watching the proceedings from the sidelines. "I may have to wait for a couple of days more to know where I stand, and which side I should take," he told TOI.

The Madras high now has about 100 law officers, including an advocate-general, seven additional advocates-general, a government pleader and a public prosecutor.

A senior advocate said some senior law officers could be inducted to balance the situation and added, "they would take orders directly from the present chief minister, or an arrangement to which he is part of, till a new dispensation takes charge. The very idea hints the government does not trust its set of law officers totally."

A vast majority of law officers are drawn from the legal wings of parties in power.

Whenever there is a change of government, the ritual of all law officers from the advocate-general up to a juniormost government advocate quitting their posts takes place. This time, though, it is different. "The chief minister is the same, the party is the same, but he has resigned and is continuing only as caretaker chief minister. Also, AIADMK general secretary V K Sasikala is the chief minister-elect. The only issue here is, Panneerselvam no longer enjoys the confidence of his cabinet and support of a majority of his party MLAs," said a senior law officer.

Higher education secretary on leave, Madras university meet agenda undecided

TOI

CHENNAI: Uncertainty prevails a fortnight ahead of University of Madras's key half-yearly academic council meet.

Secretary of higher education A Karthik, who is to chair the meet, has been on leave for more than 10 days. The agenda for the meeting, to be approved by Karthik, remains undecided, a senior official said. Many important academic files too await approval.

The 235-member council, scheduled to meet on February 25, rules on issues like board of studies, introduction of new courses and syllabus, regulations for affiliated colleges and faculty members and plagiarism charges. In normal circumstances, the meet is chaired by the vice-chancellor, but the post has been vacant for more than a year, with a three-member committee headed by Karthik discharging duties.

"Before the academic council meets, a syndicate meeting has to be convened. Many critical issues for the council have to be debated in that syndicate meeting and placed in the agenda. But even that has not been decided due the secretary's absence," he said.

There is also a possibility of the meet being postponed.

"We are examining all possibilities to ensure council meet takes place as planned," registrar David Jawahar said.

Issues resolved at the council meet are taken to the senate.

A few syndicate members said the council met twice since the last VC demitted office. The secretary has not chaired it even once. Even the VC convener committee has not met since being constituted in January last year. "This displays the interest taken by bureaucrats in the academic issues of our higher education institutes," a member said.

The university statute says the agenda for the council meet is to be circulated to members 30 days ahead, but, in reality, it is sent only 15 days before the meeting.

All these 'problems' are to the absence of a vice-chancellor, the official added.

While TOI's attempts to contact Karthik over phone failed, chief secretary V Girija in a text message said Karthik was on personal leave and the school education secretary was in charge.


பலப்பரீட்சையில் சசி தோற்றால் அடுத்தது என்ன?
சட்டசபையை முடக்க கவர்னர் உத்தரவிட வாய்ப்பு


DINAMALAR

தமிழகத்தில், 1988க்குப் பின், தற்போது, ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க, சசி தரப்போ அல்லது பன்னீர்செல்வம் தரப்போ தவறினால், கவர்னர் ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது.





சட்டசபையில், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, 234. ஒருவர் நியமன உறுப்பினர்; அவருக்கு ஓட்டுரிமை இல்லை. ஆட்சி அமைக்க, மொத்த உறுப்பினர் எண்ணிக்கை யில், பாதிக்கும் மேல் ஒரு உறுப்பினரின் ஆதரவு தேவை. அதாவது, 118 எம்.எல்.ஏ.,க் களின் ஆதரவு வேண்டும்.

சசிகலா, தனக்கு, 120க்கும் மேற்பட்ட எம்.எல். ஏ.,க்களின் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளார். ஆனால், ஒவ்வொருவராக அங்கிருந்து சென்று கொண்டிருப்பதால், அதே பலத்தை, அவர் தொடர்ந்து தக்க வைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பி னும், தனக்கு, 120க்கும் மேற்பட்ட, எம்.எல்.ஏ.,க் களின் ஆதரவு இருப்பதாகக் கூறி, ஆட்சி அமைக்க அழைக்கும் படி, கவர்னரை சந்தித்து, சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல, பன்னீர்செல்வமும், தன்னை சசிகலா தரப்பு மிரட்டி ராஜினாமா வாங்கி விட்ட தாகத் தெரிவித்து, தனக்கு வாய்ப்பு அளித்தால்,

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என, உறுதி அளித்துள்ளார். அதனால், இருவரில் ஒருவரை ஆட்சி அமைக்க அழைக் கும் பட்சத்தில், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, கவர்னர் கோரு வார் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, சட்ட சபையில் ஓட்டெடுப்பு நடக்கும் போது, பெரும் பான்மை கிடைக்காவிட்டால், கவர்னரின் அடுத்த கட்ட நடவடிக்கை, என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, ஓய்வுபெற்ற சட்டசபை அதிகாரி கள் சிலர் கூறியதாவது: தற்போது, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளதால், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, 117 ஓட்டுகள் இருந்தால் போதும். முதல்வராக பதவி யேற்பவர், பெரும்பான்மையை நிரூபிக்க, அதிக பட்சம், ஒரு வாரம் வரை கவர்னர் அவகாசம் தருவார்.

அவர் குறிப்பிடும் நாளில், அ.தி.மு.க.,வின் சசிகலா தரப்போ அல்லது பன்னீர்செல்வம் தரப்போ, பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், ஆறு மாதத்திற்கு, சட்டசபையை முடக்கி வைக்க, கவர்னர் உத்தரவிடும் வாய்ப்பு உள்ளது. உடனே, அடுத்த பெரிய கட்சியான, தி.மு.க.,வை ஆட்சி அமைக்க, அவர் அழைக்க மாட்டார்.
ஆறு மாத காலம், தமிழகத்தில் கவர்னர் ஆட்சி அமையும். ஆறு மாதத்திற்குள், சசிகலா தரப்போ அல்லது பன்னீர்செல்வம் தரப்போ, 'எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. அதை, சட்டசபையில் நிரூபிக்க தயார்' என, கூறலாம். அப்போது, பெரும்பான்மையை நிரூபிக்க, கவர்னர் மீண்டும் வாய்ப்பு தருவார்.

ஒருவேளை, தி.மு.க., தங்களுக்கு பெரும்பான்மை உள்ளது என, கூறினால், அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். தி.மு.க.,வும், பலத்தை நிரூபிக்காத

பட்சத்தில், மத்திய அரசுக்கு, அதை கவர்னர் தெரிவிப்பார். பின், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, மீண்டும் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரகசிய ஓட்டெடுப்பு நடக்குமா?

சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கும் நாளில், குறிப்பிட்ட நேரத்திற்கு, சபையின் அனைத்து கதவுகளும் மூடப்படும். அதற்கு மேல், உறுப்பினர்கள் வந்தால் அனுமதி இல்லை. சில முக்கிய அதிகாரிகள் மட்டும் அனுமதிக்கப்படுவர். பார்லிமென்டில், பொத் தானை அழுத்தி, ஓட்டு போடும் வசதி உள்ளது. அதுபோன்ற வசதி இங்கு இல்லை. அதனால், சபாநாயகர், குரல் ஓட்டெடுப்பு தான் கோருவார்.

அது தெளிவாக இல்லாத பட்சத்தில், ரகசிய ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதாவது, யாரை ஆதரிக்கிறோம் என்பதை, சீட்டில் எழுதி, கொடுக்கும்படி கூறுவர். இதில், இரு தரப்புக்கும் சம ஓட்டுகள் கிடைத்தால், சபாநாயகரும் ஓட்டு போடலாம். தற்போதைய, அரசியல் சூழ்நிலை யில், சசி கும்பலின் மிரட்டலால், எம்.எல்.ஏ.,க்கள் பலர் பன்னீருக்கு வெளிப்படை யாக ஆதரவு தெரிவிக்க தயங்கும் நிலை உள்ளது.

அதனால், சட்டபையில், குரல் ஓட்டெடுப்பு நடத்தினால், அது அவருக்கு பாதகமாக அமையலாம். எனவே, ரகசிய ஓட்டெடுப்பை நடத்த வேண்டும். அப்போது தான், எம்.எல்.ஏ.,க்களின் உண்மையான ஆதரவு யாருக்கு உள்ளது என்பது தெரியவரும். இதை நம்பிக்கை ஓட்டு கோர உத்தரவிடும் போது, கவர்னரும் உறுதி செய்ய வேண்டும் என்பதே, பொதுமக்களின் கோரிக்கை.

- நமது சிறப்பு நிருபர் -
ஆட்சி அமைக்க சசிகலாவை அழைக்க மறுப்பு
அறிக்கை அனுப்பினார் கவர்னர்

DINAMALAR
'பெரும்பான்மையை நிரூபிக்க, ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என, முதல்வர் பன்னீர்செல்வமும்; ஆட்சி அமைக்க, அழைப்பு விடும்படி சசிகலா வும், தமிழக கவர்னரை சந்தித்து, மனு கொடுத்தனர்.




இரு தரப்பு கோரிக்கையையும் கேட்ட கவர்னர், மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். அவர் எந்த பதிலும் தெரிவிக்காததால், தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில், 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.இம்மாதம், 5ம் தேதி நடந்த, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டார். மறுநாள், கவர்னர், தமிழகம் வருவார்; அவரை சந்தித்து, கடிதத்தை கொடுத்து, முதல்வராக பொறுப்பேற்கலாம் என, சசிகலா எண்ணினார்.

ஆனால், கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழகம் வருவதை தாமதப்படுத்தினார். பிப்., 7ல், சசிகலாவுக்கு எதிராக, பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கினார். தன்னை கட்டாயப் படுத்தி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்ததாக புகார் தெரிவித்தார். மக்கள் விரும்பினால், ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவேன் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று மாலை, கவர்னர் வித்யாசாகர் ராவ், சென்னை வந்தார். அவரை . சந்திக்க, முதல்வர் பன்னீர்செல்வம், மாலை, 4:40 மணிக்கு சென்றார். அவரை சந்தித்துவிட்டு, மாலை, 5:15 மணிக்கு, வெளியில் வந்தார்அவருடன், அ.தி. மு.க., அவைத் தலைவர் மது சூதனன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வ நாதன், எம்.பி., மைத்ரேயன் உடன் சென்றனர். 'என்னை கட்டாயப்படுத்தி, ராஜினாமா கடிதம் கொடுக்கவைத்தனர்.

எனக்கு, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும், சசிகலா தரப்பினர் கடத்தி சிறை வைத்துள்ளனர். என் ராஜினாமா கடிதத்தை, திரும்ப பெற்றுக் கொள்கிறேன். மெஜாரிட்டியை நிரூபிக்க, எனக்கு வாய்ப்பு அளியுங்கள்' என, கவர்னரிடம், பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். முதல்வரும், கவர்னரும், ஐந்து நிமிடங்கள் தனியாக பேசினர். அதன்பின், முதல்வர் பன்னீர்செல்வம், மகிழ்ச்சியாக வெளியே வந்தார்.

இரவு, 7:20 மணிக்கு, கவர்னரை சந்திக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா வந்தார். அவருடன், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, முன்னாள் எம்.பி., தினகரன் ஆகியோர் சென்றனர்.கவர்னரிடம், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கடிதத்தை கொடுத்து, ஆட்சி அமைக்க, சசிகலா உரிமை கோரினார்.

அப்போது கவர்னர், 'சொத்து குவிப்பு வழக்கில், உங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், என்ன செய்வீர்கள்?' எனக் கேட்டதாக தெரிகிறது. அதற்கு, பதில் கூறாமல், தனக்கு எம்.எல்.ஏ.,க் கள் ஆதரவு அளித்துள்ள விபரத்தை மட்டும், சசிகலா விளக்கி உள்ளதாக கூறப்படுகிறது. சந்திப்பு முடிந்து, இரவு, 8:00 மணிக்கு, அவர் வெளியே வந்தார். இருவர் கூறிய கருத்துக்க ளையும் கேட்ட கவர்னர், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து, ஜனாதி பதி, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர்ருக்கு, அறிக்கை அனுப்பி உள்ளார்.
கவர்னர், சட்ட நிபுணர்களுடன், ஆலோசித்த பிறகே, அடுத்தகட்ட அறிவிப்பை வெளியிடு வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, முதல்வராக பன்னீர் செல்வம் நீடிப்பாரா; அல்லது சசிகலா பதவியேற்க அனுமதிப்பாரா என்ற சஸ்பென்ஸ் தொடர்கிறது.

ஜெ., பாணியில் பன்னீர்!

ஜெயலலிதா, கவர்னரை சந்திக்கவோ, விமான நிலையத்திற்கோ செல்லும்போது, கோட்டூர் புரத்தில் உள்ள, விநாயகர் கோவிலில் வழி பட்டு செல்வது வழக்கம். அதேபோல், நேற்று கவர்னரை சந்திக்க சென்ற, முதல்வர் பன்னீர் செல்வம், கோட்டூர்புரம் விநாயகரை வணங்கிவிட்டு சென்றார்.
சசிகலா, கவர்னர் மாளிகைக்கு செல்வதற்கு முன், மாலை, 6:55 மணிக்கு, ஜெ., நினைவிடம் சென்றார். தனக்கு ஆதரவு அளிக்கும், எம்.எல்.ஏ.,க்கள் பட்டியல் மற்றும் சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்த கடிதம் ஆகியவற்றை, நினைவிடத்தில் வைத்து வணங்கினார். 

- நமது நிருபர் -
சிறை வைக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களை மீட்க ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல்

DINAMALAR
சென்னை: எம்.எல்.ஏ.,க்களை மீட்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

சென்னை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மதிவாணன் ஆகியோர் நேற்று, வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகி, 'குன்னம் தொகுதி எம்.எல்.ஏ., ஆர்.டி.ராமச்சந்திரனை, சட்டவிரோதமாக சிலர் பிடித்து வைத்துள்ளனர்.இவரை போல, 130 எம்.எல்.ஏ.,க்கள், சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மீட்க கோரி, குன்னம் தொகுதியை சேர்ந்த வாக்காளர் இளவரசன் என்பவர், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய உள்ளார். அந்த மனுவை, உடனே விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார். 

இதற்கு நீதிபதிகள், 'ஏற்கெனவே, 'டிராபிக்' ராமசாமி, இதே கோரிக்கையுடன் எங்களது சேம்பரில் முறையிட்டுள்ளதால், முதலில் வழக்கை தாக்கல் செய்யும்படி வலியுறுத்தியுள்ளோம்; நீங்களும், மனு தாக்கல் செய்யுங்கள். மற்ற வழக்குகளுடன், உங்களது வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என்றனர்.அப்போது, அரசு வழக்கறிஞர், ''எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சுதந்திரமாக, எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யாரும் சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்படவில்லை,'' என்றார். இதற்கு, மனுதாரரான வழக்கறிஞர், ''எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பேருந்தில் ஏற்றப்பட்டு, சென்னைக்கு வெளியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சிறைபிடித்த நிலையில் தங்கவைக்கப்பட்டுஉள்ளனர்,'' என்றார். இதையடுத்து, 'வழக்கை முதலில் தாக்கல் செய்யுங்கள்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 மனு தாக்கல்:பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தொகுதியை சேர்ந்த, வாக்காளர் இளவரசன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ள ஆர்.டி.ராமச்சந்திரன், 8ம் தேதி, சென்னையில் நடைபெற்ற, அ.தி.மு.க., கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார்; அதன்பின், அவரை காணவில்லை. ராமச்சந்திரன் உட்பட, 130 எம்.எல்.ஏ.க்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, ஒரு சொகுசு பங்களாவில், தங்க வைக்கப்பட்டுள்ளனர் என, அங்கிருந்து தப்பி வந்த, ஸ்ரீவைகுண்டம் தொகுதி, எம்.எல்.ஏ., சண்முகநாதன் தெரிவித்தார்.எம்.எல்.ஏ.க்கள் கடத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்துார் போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டுள்ள, எங்கள் தொகுதி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் உட்பட, 130 எம்.எல்.ஏ.,க்களையும், உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, கூவத்துார் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதேபோல, கிருஷ்ணராஜபுரம், எம்.எல்.ஏ., கீதாவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி, உறவினர் ஒருவர், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இம்மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மதிவாணன் முன், விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.

NEWS TODAY 15.08.2026