Friday, February 10, 2017

பாதுகாப்பு வாபஸ்.. பதவியேற்பு விழா நடக்குமா?

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் போடப்பட்டிருந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. சசிகலாவின் பதவியேற்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறவிருந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த அதிரடியான செய்தியாளர்கள் சந்திப்பில், சசிகலா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து சசிகலா முதல்வராகப் பதவியேற்பதில் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது, பதவியேற்பு பற்றி ஆளுநரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லாததால் அங்கு பாதுகாப்புப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்த காவல்துறையினர் அனைவரும் திரும்ப பெறப்பட்டனர்.

ஐ விட்னஸ்’ சண்முகநாதன்! - சசிகலாவுக்கு ‘செக்’ வைக்கும் ஆளுநர் #OPSVsSasikala

vikatan.com

தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆளுநரே முடிவு எடுப்பார்' என அறிவித்துவிட்டார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 'அரசியல் சூழல்கள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு ஆளுநர் அறிக்கை அனுப்பினாலும், நேற்றைய சந்திப்பில் ஹைலைட்டே சண்முகநாதனின் ஸ்டேட்மெண்ட்தான்' என்கின்றனர் ஆளுநர் மாளிகை வட்டாரத்தில்.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் நிலை பற்றி, தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் ஆலோசித்து வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். நேற்று மாலை ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் பன்னீர்செல்வம், மிகுந்த உற்சாகத்தோடு வெளியில் வந்தார். 'தர்மம் வெல்லும்' என மீடியாக்களிடம் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டார். அவரது உற்சாகத்திற்கான காரணத்தை விளக்கிய அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், "இந்திய அளவில் சசிகலா மீதான எதிர்ப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களின் நிலைதான் இந்திய அளவில் விவாதிக்கப்படும் விஷயமாக மாறியிருக்கிறது. 'எந்தக் கிரிமினல் வழக்குகளும் இல்லாத பன்னீர்செல்வத்திற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்' என்றுதான் மத்திய அரசு விரும்புகிறது. இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. நேற்று மாலை ஆளுநரை சந்திக்க பன்னீர்செல்வம் சென்றபோது, அவைத் தலைவர் மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோரும் உடன் சென்றனர்.

'எப்படி எல்லாம் மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள்?' என்ற கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார் பன்னீர்செல்வம். அதன்பிறகு, எம்.எல்.ஏக்களில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; அவர்களை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும்' என்ற கோரிக்கை மனுவையும் கொடுத்தார். அப்போது அருகில் இருந்த சண்முகநாதன் எம்.எல்.ஏவை அறிமுகப்படுத்தினார் பன்னீர்செல்வம். 'எம்.எல்.ஏக்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த பேருந்தில் இருந்து தப்பி வந்தது குறித்தும், சசிகலாவின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ள கூலிப்படை பற்றியும்' அதிர்ச்சி விலகாமல் விளக்கினார் சண்முகநாதன். தமிழக அரசியல் சூழல்களுக்கான நேரடி சாட்சியாக சண்முகநாதன் இருக்கிறார். அவர் கூறிய தகவல்களை குறிப்பெடுத்துக் கொண்டார் ஆளுநர். 'மத்திய அரசின் கவனத்திற்கு உண்மை நிலவரத்தைக் கொண்டு செல்ல சண்முகநாதனின் வாக்குமூலமே போதுமானது' என்ற முடிவுக்கு ஆளுநர் மாளிகை வந்துவிட்டது. இப்போது, 'ஆளுநரே அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கலாம்' என மத்திய அரசு கூறிவிட்டது. ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கிறோம்" என்றார் நிதானமாக.



'ஆளுநர் என்ன முடிவை எடுப்பார்?' என பா.ஜ.க வட்டாரங்களில் விசாரித்தோம். "சசிகலாவும் பன்னீர்செல்வமும், 'தங்களுக்குத்தான் எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது' எனக் கூறிவருகின்றனர். நேற்று எம்.எல்.ஏக்களின் ஆதரவுக் கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்கினார் சசிகலா. இவற்றை வாங்கி வைத்துக் கொண்டார் ஆளுநர். தற்போதுள்ள சூழலில், எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றுதான் ஆளுநர் விரும்புகிறார். சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாலும், 'சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து கலவரம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக' தமிழக பா.ஜ.க நிர்வாகிகள், மத்திய அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளனர். சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி, ஆட்சியைக் கலைக்கும் முடிவை காங்கிரஸ் தரப்பில் இருந்தும் வலியுறுத்துகின்றனர்.

புதிதாக தேர்தலை சந்திக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் ஆறு பேர் விரும்பவில்லை. தேர்தல் வந்தால், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் விரும்புகிறார். எனவே, 356-ஐ பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் தரப்பில் எந்த எதிர்ப்பும் இல்லை. அதற்குப் பதிலாக, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 355-ஐ பயன்படுத்தி, சட்டசபையை மௌனமாக்கிவிட்டு, எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக முடிவெடுக்கும் முடிவை ஆளுநர் எடுக்கலாம். இதனால், எம்.எல்.ஏக்களுக்கு பதவி பறிபோவதற்கும் வாய்ப்பில்லை. இதன்பிறகும் தனிப் பெரும்பான்மையை யாரும் நிரூபிக்கவில்லையென்றால், 356 என்ற ஆட்சிக் கலைப்பு அஸ்திரத்தை பா.ஜ.க பயன்படுத்தும். இதை உணர்ந்துதான் குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. ஆளுநர் எந்த சட்டவிதியைப் பயன்படுத்தப் போகிறார் என்பதைப் பொறுத்துத்தான், அ.தி.மு.கவின் எதிர்காலம் இருக்கிறது" என்றார் விரிவாக.

"எம்.எல்.ஏக்களைக் கட்டுப்பாட்டில் இருந்து விட்டுவிட்டால், அவர்களை பன்னீர்செல்வம் தரப்பு வளைத்துவிடும் என்ற அச்சத்தில் இருக்கிறார் சசிகலா. அதற்காகத்தான் எம்.எல்.ஏக்களை பணயக் கைதிகளாக அடைத்து வைத்திருக்கிறார். 'அவர்களை சுதந்திரமாக உலவவிட்டால், ஓ.பி.எஸ் பலம் பெற்றுவிடுவார்' என உறுதியாக நம்புகிறார். தங்கள் நிலையை எண்ணிக் கதறும் எம்.எல்.ஏக்கள், ' இதற்குத் தேர்தலில் ஜெயிக்காமலேயே இருந்திருக்கலாம்' என வேதனையில் குமுறுகின்றனர். 'அரசியமைப்புச் சட்டப் பிரிவு 355-ஐ பயன்படுத்துதே சரியானதாக இருக்கும்' என உறுதியாக நம்புகிறது பா.ஜ.க. 'சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு திங்கள்கிழமை வரலாம்' என்ற தகவலால் அச்சத்தில் உறைந்திருக்கிறார் சசிகலா. அரசியல் சூழல்களை உணர்ந்து அப்போலோவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக இருக்கிறார் ம.நடராசன். கட்சித் தொண்டர்களின் நிலைதான் கவலை அளிக்கிறது" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

உள்நாட்டுப் பிரச்னைகளில் இருந்து ஒரு மாநிலத்தை, மத்திய அரசு காப்பதற்கு அரசியமைப்புச் சட்டப் பிரிவு 355 வகை செய்கிறது. ' மாகாணங்களின் குரல் வளையை நெரிக்கும் விதி' என அரசியல் வல்லுநர்கள் காலம்காலமாக எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர். அ.தி.மு.கவின் குரல் வளையை நெரிக்கும் அதிகார சத்தத்தில், இந்த விதிகளைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்?

- ஆ.விஜயானந்த்

'ஆஸ்பத்திரியைவிடக் கொடுமையா இருக்கு!' - ரிசார்ட் உற்சாகத்தில் உதறும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்  #VikatanExclusive


தமிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்டப் பதற்றத்தில் இருக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப் பாய்ந்து கொண்டிருக்க, அரசியல் ஜல்லிக்கட்டை முடிவுக்குக் கொண்டு வராமல் தவித்துக்கொண்டிருக்கிறார் சசிகலா. 'பீச் ரிசாட்டில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தனி வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. பல எம்.எல்.ஏக்கள் கதறியடியே கடற்கரையில் காற்று வாங்கிக்கொண்டிருக்கின்றனர்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனி ஆவர்த்தனத்தைத் தொடங்கிய கணத்தில் இருந்து, அவருக்கான ஆதரவுக் கரங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. நேற்று மதியம் அவைத் தலைவர் மதுசூதனன் ஆதரவு கொடுத்ததை கார்டன் நிர்வாகிகளால் நம்ப முடியவில்லை. தமிழக அரசியல் சூழல் குறித்து, குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். கட்சி அதிகாரமும் கையை விட்டுப் போகும் பதற்றத்தில் இருக்கும் மன்னார்குடி உறவுகள், எம்.எல்.ஏக்களைக் குளிர்விக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் ‘கோல்டன் பே பீச் ரிசாட்டில்’ நடக்கும் காட்சிகளை கலவரத்தோடு கவனித்து வருகின்றனர் அப்பகுதி பொதுமக்கள். "கோல்டன் பே ரிசார்ட் அமைந்துள்ள கூவத்தூரைச் சுற்றிலும், வயல் வெளிகளுக்கு வேலைக்குப் போகும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணிக்குச் செல்லும் மக்களை மன்னார்குடி முகாம் நியமித்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்துகின்றனர். கூவத்தூரைச் சுற்றியுள்ள 1 கிலோமீட்டர் தூரத்தை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர். இந்த 1 கிலோமீட்டர் எல்லைக்குள் அவர்கள் அனுமதியில்லாமல் யாரும் செல்ல முடியாது. கல்லூரி, பள்ளிக்குச் சென்று வரும் மாணவர்களையும் அச்சுறுத்துகின்றனர். 150 குண்டர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டள்ளனர். பேன்ட், சட்டை அணிந்து நவநாகரிமாக இருந்தாலும், அவர்களின் செயல்பாடுகளே அவர்கள் யார் என்பதைக் காட்டிக் கொடுத்துவிட்டது. ரிசாட்டில் தமிழ்நாட்டுப் பதிவுள்ள வண்டிகளைக் காண முடியவில்லை. ஆந்திரா, கர்நாடகா, கேரள பதிவெண் வண்டிகள்தான் அதிகளவில் சென்று வருகின்றன" என விவரித்த, கூவத்தூர் பகுதி அரசியல் பிரமுகர் ஒருவர்,

"எம்.எல்.ஏக்களின் சத்தமும் ஆட்டம் பாட்டமும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் நேற்று திரண்டு போய், மன்னார்குடி முகாம் ஏற்பாடு செய்திருந்த பாதுகாவலர்களிடம் தகராறு செய்துள்ளனர். ' நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க. அதைப் பத்தி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. உங்க கட்சி விவகாரம். எங்களை ஏன் டார்ச்சர் பண்றீங்க?' எனச் சத்தம் போட்டுள்ளனர். ' இன்னும் இரண்டு மணி நேரத்தில் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். அதன்பிறகு எம்.எல்.ஏக்கள் கிளம்பிவிடுவார்கள்' என சமாதானப்படுத்தியுள்ளனர்.

நேற்று இரவு ஆளுநரை சசிகலா சந்தித்த பிறகும், எம்.எல்.ஏக்கள் கிளம்பவில்லை. மூன்று நாட்களாக ரிசார்ட்டில் இருந்து கிடைக்கும் தகவல்களும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. ரிசார்ட்டில் இருக்கும் எம்.எல்.ஏக்களில் 25 பேர் பன்னீர்செல்வத்தின் ஆதரவு மனநிலையில் உள்ளவர்களாம். தலைமைச் செயலகத்திலும் அவரோடு நெருக்கத்தைக் காட்டி வந்தவர்கள். இவர்களை மட்டும் தனியாகப் பிரித்து, பல மணி நேரம் வகுப்பு எடுத்துள்ளனர்.

'நீங்கள் என்ன மனநிலையில் இருந்தாலும், ஆட்சி கையைவிட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்றால், சின்னம்மாவைத்தான் நீங்கள் ஆதரிக்க வேண்டும். நீங்கள் ஆதரவு கொடுக்கவில்லையென்றால், ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள். மறுபடியும் நீங்கள் போட்டியிட்டாலும், வெற்றி பெற வாய்ப்பில்லை. இப்படியொரு நிலைமைக்கு ஆளாக வேண்டாம். உங்களுக்கு வேண்டியதைத் தருகிறோம்' என அன்பான குரலில் அதட்டியுள்ளனர். இதை ஏற்காத சில எம்.எல்.ஏக்கள், 'எங்களை ஏன் அடைச்சு வச்சு அடிமை மாதிரி நடத்தறீங்க. ஆஸ்பத்திரியைவிட மோசமா இருக்கு. யார்கிட்டயும் பேச முடியல. வெளியில என்ன நடக்குதுன்னே தெரியலை' எனக் கதறியுள்ளனர். 'நிலைமை சுமூகமாகற வரைக்கும் நீங்க இங்கதான் இருக்கணும்' என மிரட்டியுள்ளனர் மன்னார்குடி கோஷ்டியினர். ரிசார்ட்டில் இருந்து அமைச்சர்கள் ஜெயக்குமார், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டவர்கள் அடிக்கடி வெளியில் போய் வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கட்டுப்பாட்டில்தான் அனைத்தும் நடக்கின்றன" என விவரித்து முடித்தார்.

"நேற்று எம்.எல்.ஏக்களில் சிலர் அதீத உற்சாகத்தில் ஆட்டம் போட்டுள்ளனர். ரிசார்ட்டில் நீச்சல் குளத்தில் குதித்து ஆட்டம் போட்டதில், இரண்டு எம்.எல்.ஏக்கள் தவறி விழுந்துவிட்டனர். அவர்களின் நிலையைப் பார்த்துப் பதறிப் போய், நடிகர் கருணாஸ் தண்ணீரில் குதித்து அவர்களைக் காப்பாற்றியுள்ளார். அவரோடு சில எம்.எல்.ஏக்களும் குதித்து அவர்களைக் காப்பாற்றியுள்ளனர். அளவுக்கு அதிகமாக நீச்சல் குளத்துத் தண்ணீரை அவர்கள் குடித்துவிட்டனர். விடிந்தும் பல எம்.எல்.ஏக்களுக்கு உற்சாகம் குறையவில்லை. நேற்று இரவே ஊருக்குக் கிளம்பும் மனநிலையில் பல எம்.எல்.ஏக்கள் இருந்துள்ளனர். ஆனால், சுமூக சூழ்நிலை திரும்ப இன்னும் ஒரு வாரம் ஆகும் என்ற தகவல் கிடைத்துள்ளதால், அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நேற்று இரவு நண்பர் ஒருவருக்குப் போன் செய்த எம்.எல்.ஏ, 'மிக சந்தோஷமாக இருக்கிறோம்' எனப் பேசிக் கொண்டிருந்தபோதே கதறி அழுதிருக்கிறார். மன்னார்குடி டீம் இங்கிருந்து செல்லும் வரையில் கூவத்தூர் மக்களுக்கும் விடுதலை இல்லை" என ஆதங்கத்தோடு பேசினார் ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர்.

-ஆ.விஜயானந்த்

வானவில் பெண்கள்: பல்துறை வித்தகி!

வா.ரவிக்குமார்

இளமைப் பருவம் கற்பதற்கு ஏற்றது. பல கலைகளிலும் திறமைகளை வளர்த்துக்கொள்ள உகந்த பருவம். பலரும் பத்தாம் வகுப்புக்கு வந்ததுமே, இந்தக் கற்றுக் கொள்ளும் பழக்கத்துக்குத் தடைபோட்டுவிடுவார்கள். ஆனால், இப்படிப்பட்ட தடை எதுவும் இல்லாமல் நடனம், படிப்பு, நாடகம் எனப் பல துறைகளில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார் அர்ச்சனா சர்மா. காரணம் கேட்டால், “பல துறைகளிலும் நான் முறையான பயிற்சிபெற்றதும் பட்டை தீட்டப்பட்டதும் என்னுடைய பள்ளி இறுதியாண்டுக்குப் பிறகுதான். அதிலும் பிஹாரின் குக்கிராமத்தைச் சேர்ந்த என்னுடைய தந்தையின் கல்வி அறிவும், தன்னம்பிக்கையும்தான் பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் என்னுடைய படிப்பைத் தொடரவைத்தது” என்கிறார் அர்ச்சனா.

பஞ்ச பாண்டவிகள்

பிஹாரின் உள்ளொடுங்கிய கிராமம் ஹஸிபூர். இந்த ஊரில் இன்றைக்கும் ஒரு பெண்ணுக்கு ஆண் வாரிசு இல்லை என்றால், அந்தப் பெண்ணின் கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்துவிடுவார்களாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பஞ்ச பாண்டவிகளாக, அர்ச்சனாவும் அவருடைய சகோதரிகளும் பிறந்தனர். ஹஸிபூரில் ஆட்டோ மெக்கானிக் தொழில்நுட்பம் படித்து, பிரபல மோட்டார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த அர்ச்சனாவின் தந்தை பல ஆண்டுகள் அனுபவத்துடன் மத்தியப் பிரதேசம், பெங்களூரு எனப் பயணித்து இறுதியாக சென்னையில் குடும்பத்துடன் குடியேறினார். சென்னை செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்தவுடன் கணினி அறிவியலில் பொறியாளர் பட்டத்தையும் எம்.பி.ஏ. பட்டத்தையும் பெற்றார் அர்ச்சனா.

சில்லு முதல் அவுரங்கசீப்வரை

“என்னுடைய தேடலுக்கும் முடிவுக்கும் என்றைக்குமே என் பெற்றோர் குறுக்கே நின்றதில்லை. அதனாலேயே பல துறைகளிலும் முழு மனதோடு என்னால் ஈடுபட முடிந்தது. படித்து முடித்தவுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. ஆனால் என்னால் அதில் முழுதாக ஈடுபட முடியவில்லை; விலகிவிட்டேன்.

நூற்றுக்கணக்கான முன்னணி நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடித்தேன். இப்படி ஒரு டிவி கமர்ஷியலில் நடிக்கும்போதுதான், தீபா ராமானுஜம் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவரது முயற்சியால்தான் இரா.முருகன் எழுதிய ‘சில்லு’ என்னும் அறிவியல் நாடகத்தில் நடித்தேன். இந்த நாடகத்தில் நடித்த சில நாட்களில் ஆனந்த் ராகவின் ‘சதுரங்கம்’ நாடகத்தில் முக்கிய வேடத்தில் நடித்தேன். இந்த நாடகம் பல மேடைகளைக் கண்டது.

நடித்துக்கொண்டிருக்கும் போதே, மூன்றாண்டுகளுக்கும் மேலாக தனஞ்ஜெயன், சாந்தா தனஞ்ஜெயன் இவர்களிடம் பரதநாட்டியம் கற்றுக் கொண்டேன். என்னுடைய பரதநாட்டிய அரங்கேற்றத்தையும் கடந்த ஆண்டு நடத்தினேன். எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்திலும் நடித்திருக்கிறேன்.

ஷ்ரத்தா அரங்கேற்றிய இந்திரா பார்த்தசாரதியின் ‘அவுரங்கசீப்’ நாடகத்தில் நான் ஏற்ற ரோஷனாரா பேகம் எனும் எதிர்மறை பாத்திரம் எனக்குப் பாராட்டை பெற்றுத் தந்தது. தற்போது அரசியல் அறிவியல் துறையில் ஆய்வு மாணவியாக இருக்கிறேன். படிப்பு, நடனம், நாடகம் எதுவாக இருந்தாலும், அதில் என்னுடைய நூறு சதவீத உழைப்பு இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.
உன்னுடைய துறை எது என்பதை முடிவு செய்துகொள்… இரண்டு குதிரையில் சவாரி செய்ய முடியாது என்று என்னிடம் சிலர் அறிவுரை சொல்வார்கள். அவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான். என்னைப் பொறுத்தவரை இரண்டு அல்ல, அதற்கும் மேற்பட்ட குதிரைகளிலும்கூட சவாரி செய்யலாம். நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான், எல்லாக் குதிரைகளையும் ஒரே வண்டியில் பூட்ட வேண்டும். அவற்றின் லகான் நம் கையில் இருக்க வேண்டும்” என்கிறார் வெற்றிப் புன்னகையோடு!

எண்ணெய்க் கசிவு விபத்து கற்றுத்தருமா பாடம்?


சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தைத் தொடர்ந்து, எண்ணெய் கசிந்து கடலில் கலந்ததும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த அழிவுகளும் மிகுந்த கவலை அளிக்கின்றன. கப்பலிலிருந்து பெரிய அளவில் வெளியேறிய கச்சா எண்ணெய், கடல்வாழ் உயிரினங்களைக் கடுமையாகப் பாதித்திருப்பதுடன், கரையோரப் பகுதி மக்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜிபிஎஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் துணையுடன் பாதுகாப்பான பயணங்கள் சாத்தியப்பட்டிருக்கும் இன்றைய சூழலில், துறைமுகத்துக்கு இவ்வளவு அருகில் இரு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுவது ஆச்சரியம் தருகிறது. விபத்தில் சிக்கிய கப்பல்களில் ஒன்று, திரவ பெட்ரோலிய வாயு சுமந்துவந்தது. மற்றொரு கப்பலில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் இருந்தன.

ஆபத்து மிக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்த விபத்து தொடர்பாக, முதல்கட்டமாக வந்த எதிர்வினைகள் மிக மோசமானவை. இந்த விபத்தால் சுற்றுச்சூழலில் குறிப்பிடும்படியான எந்த சேதமும் ஏற்படவில்லை என்றே தொடக்கத்தில் துறைமுகத்தின் சார்பில் சொல்லப்பட்டது. ஆனால், ஏராளமான ஆமைகளும், மீன்களும் செத்துக் கரையொதுங்கிய பின்னர்தான், ஒரு பேரழிவே நிகழ்ந்தது தெரியவந்தது. இத்தனை சேதம் விளைவதற்கு முன்னரே அதைத் தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்பதோடு, அபாயத்தின் தீவிரத்தை மக்களிடமிருந்து மறைக்க முயன்ற நடவடிக்கைகளும் மிகுந்த கண்டனத்துக்கு உரியவை. தேசிய எண்ணெய்க் கசிவு பேரழிவு எச்சரிக்கைத் திட்டத்தின்படி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலில், கடலிலும் கடற்கரையிலும் படிந்திருக்கும் எண்ணெய்ப் படலத்தை நீக்கும் பணியில் தன்னார்வலர்கள் பலர் வாளிகள் மூலம் ஈடுபட்டதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. இதுபோன்ற சூழலில் பயன்படுத்த வேண்டிய உபகரணங்கள், சம்பந்தப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சிகள் ஆகியவை முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து தனியே விசாரணை நடத்தப்பட வேண்டும். தவறிழைத்தோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற விபத்துகள் முக்கியமாகச் சுட்டிக்காட்டுவது எதை என்றால், பிரம்மாண்ட திட்டங்களுக்குத் தயாராக இருக்கும் அளவுக்கு, இடர்களை எதிர்கொள்ளும் திறனுக்கு மூன்றாம் உலக நாடுகள் என்றைக்கும் தயாராக இருப்பது இல்லை என்பதையே. மேலும், எளிய மக்களின் வாழ்வாதாரம் எவ்வளவு துச்சமாக அணுகப்படுகிறது என்பதையும் இது காட்டுகிறது. விபத்தின் தொடர்ச்சியாக, ஒரு வாரத்துக்கும் மேலாகக் கடல் உணவு வியாபாரம் முற்றிலுமாக முடங்கியிருப்பதும் கடலோடிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதும் அதிகாரத் தரப்பு உட்பட, எவரையும் உலுக்காதது கவனிக்க வேண்டியது. உண்மையில், பேரிடர்களுக்கு நாம் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோம் எனும் கேள்விக்கான பதிலும் இது தொடர்பில் நம்முடைய அரசின் அமைப்புகள் காட்டும் அக்கறையின்மையும் நம்மை மிகுந்த அச்சத்திலும் ஆயாசத்திலுமே ஆழ்த்துகின்றன.

Teacher thrashes students for poo r show in class test

By Express News Service  |   Published: 10th February 2017 02:20 AM

BENGALURU: An English teacher at a government school in the city  allegedly beat up Class 10 students after they failed to do well in a class test. One girl student had to visit the doctor for swelling in the hands. Karnataka State Commission for Protection of Child Rights (KSCPCR) has filed a case in this connection and issued notice to the teacher.
Kantharaj allegedly caned six of his Class 10 students on Tuesday. The incident came to light after parents approached the school headmaster and complained to him about the caning. Students say the incident took place on Tuesday and Kantharaj was absent from school on Wednesday.
Students told Express, “Most of us in the class did not fare well in the test. This infuriated our sir and he started beating us using a cane. While caning six of us, he said he would punish the entire class, including students from another section.”
The Block Education Officer (BEO) has ordered an inquiry and directed the headmaster to submit a detailed report.
However, when contacted, Kantharaj denied the allegations. He said, “I was upset as they were not performing. We work for better results of the students and the school and it hurts when our efforts go in vain. But the allegation of beating the children is false. I did not hit any of them.”
“One girl complained of swollen hand after she accidentally hit the desk. It was I who sent her to the doctor. I did not punish any student.”
The teacher also feels political parties may be behind the issue. “There is a dispute between Congress and BJP over running the school. They may be making it an issue with vested interests,” he claimed.

Can sleep help overcome tiredness and other health issues?

By Rajyogi Brahmakumar Nikunj  |  Express News Service  |   Published: 08th February 2017 10:27 PM  |  
Last Updated: 09th February 2017 05:34 AM  | 


Sleep is the best form of relaxation, it is close to meditation, that’s why those who sleep well always feel good. However in today’s world getting a sound sleep has become a rare thing, because today millions of people suffer from sleep disorders like sleep apnea, insomnia, restless leg syndrome, narcolepsy etc. Sadly, many of these individuals resort to sleeping pills and drugs which ultimately worsens the problem. Sleep is considered to be the greatest remedy to overcome tiredness.
Healthful soothing slumber that reactivates the muscles, nerves and brain cells is one of nature’s greatest rejuvenators, therefore it is absolutely essential to life like air, water and food. Medical science has acknowledged several causes that lead to sleep disorders. The biggest hindrance of all that contributes to sleeplessness is bad mental health which his caused by repeated suppression of voice of one’s conscience, thereby resulting in negative personality traits and insomnia.
Another important factor that affects our sleep is the food we eat. It’s a medically proven fact that mental ill health adversely affects one’s eating habits, which in turn, drastically influences our sleep and health. For instance, those who have several cups of tea, coffee and colas, intake lots of caffeine which contributes to their inability to sleep. Under such a medical condition, proper meditation technique can be of great help if practiced regularly. There have been a lot of deliberations and debates over the hours of sleep that one should ideally have.
After all how much sleep does one need? Under the best of conditions in terms of sleep, fresh air, water, food, physical work or exercise and positive influences,one would stay asleep as long as one’s system needs them to; then they will wake up automatically. Hence there is really no such thing as oversleeping. However, there is certainly a phenomenon as undersleeping, because for some reason or the other, our sleep does get sacrificed in pursuing other pleasures of life. But in this whole hustle and bustle, we tend to forget that it is the quality of life which matters the most and not the quantity. It is better to be wise for our own health benefit and make a habit to mediate daily before going to bed to disengage the mind from thoughts to give it sleep inducing relaxation.

NEWS TODAY 15.08.2026