Saturday, February 11, 2017

சசி வழக்கில் தீர்ப்பு எப்போது?

புதுடில்லி: அதிமுக., பொதுசெயலர் சசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு, அடுத்த வாரத்தின் புதன் அல்லது வியாழ கிழமைகளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்ப்பு:

அதிமுகவின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டும் சசி முதல்வராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓ.பி.எஸ்., அணியில் சேருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்..,க்கள் பலர் வருவார்கள் என முதல்வர் ஓ.பி.எஸ்., அணியினர் கூறுகின்றனர்.
ஓபிஎஸ் கரம் வலுத்து வருவதால் சசி அணியினர் கலக்கத்தில் உள்ளனர். இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளிவருவதால் அவரது பதவியேற்புக்கு கவர்னர் அழைப்பு விடுக்ககாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தீர்ப்பு வரும் நாள் நோக்கி கட்சியினரும், அரசு நிர்வாகமும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தீர்ப்பை அறிவிக்கும் சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் லிஸ்ட்டில், இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் வரும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ஆம்... எங்கள் ஆதரவு பன்னீர்செல்வத்துக்குத்தான்!” - தமிழிசை செளந்தர்ராஜன் ஒப்புதல்

தமிழிசை
ஆதரவு, எதிர்ப்பு என்று நிமிடத்துக்கு நிமிடம் மாறிவரும் அரசியல் சூழல்களால் தமிழகமே பரபரத்துக் கிடக்கிறது. ''டெல்லி மட்டுமல்ல... ஒட்டுமொத்த இந்தியாவுமே தமிழக அரசியல் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்துவருகிறது'' என்கிறார் தமிழக பி.ஜே.பி தலைவரான தமிழிசை சவுந்தர்ராஜன். தமிழக அரசியல் கள நிலவரம் குறித்து அவரோடு பேசினோம்...

''தமிழக அரசியல் சூழல் உச்சபட்ச குழப்பத்தில் இருக்கிறது. காபந்து முதல்வர் பொறுப்பில் இருக்கிறார். முதல்வர் பதவியை எதிர்பார்த்து ஒருவர் இருக்கிறார். அரசியல் சூழ்நிலை, உணர்வுப்பூர்வமான சூழ்நிலை என இரண்டு நிலைகள் உள்ளன. இதில் அரசியல் சூழ்நிலை என்பது கடந்த இரண்டு மாதங்களாக நிலையான ஆட்சி நடந்துகொண்டிருந்தது. இந்த ஆட்சியில் பெரிய குறைகள் என்று எதையும் சொல்லவும் முடியாது. அதுமட்டுமல்ல, மெரினா போராட்டம், ஜல்லிக்கட்டு பிரச்னை, வர்தா புயல் என்று இந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட சவாலான சூழ்நிலைகளையும்கூட திறம்பட கையாண்ட ஆட்சி நிர்வாகம் என்றே சொல்லவேண்டும். எல்லோரும் எளிதில் சந்தித்து தங்கள் குறைகளைச் சொல்லக்கூடிய இடத்தில் ஓ.பி.எஸ். இருந்தார். ஏற்கெனவே தமிழக அரசியல் பட்டுப்போயிருந்த அரசியல் நாகரிகத்தை மறுபடியும் துளிர்விடச் செய்யும் நம்பிக்கையை ஏற்படுத்தும் தலைவராகவும் இருந்தார்.

இந்த இரண்டு மாதங்களுக்குள் தமிழக முதல் அமைச்சரை மாற்றவேண்டிய அவசியம் என்ன வந்தது? 'எனக்கு அரசியல் ஆசை துளியும் கிடையாது. முதல்வருக்குத் துணையாக மட்டுமே இருந்துவருகிறேன்' என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த ஒருவர் இப்போது இந்த இரண்டு மாதங்களுக்குள் தானே முதல்வராக வந்துவிட வேண்டும் என்று அவசரம் காட்டுவது ஏன்? அதன் உள்நோக்கம் என்ன? இப்போது இவர்கள் காட்டும் அவசரத்தைப் பார்த்தால், இதை நோக்கித்தான் இவர்களது வாழ்நாள் திட்டம் இருந்ததா என்ற கேள்வி அதிகமாக எழுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பொருத்தவரை, ஒருவரை இல்லத்தில் பணியாற்றுவதற்கும் இன்னொருவரை களத்தில் பணியாற்றுவதற்கும் தயார் செய்து வைத்திருந்தார். இதில், இல்லத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் இப்போது களத்தில் பணியாற்றப்போகிறேன் என்று வரும்போதுதான் பிரச்னையே வருகிறது.''

''தங்கள் கட்சியில் இருந்து யாரை முதல்வராகத் தேர்ந்தெடுப்பது என்பது அவர்களது உட்கட்சி பிரச்னைதானே?''

''அப்படியில்லை... ஒரு கட்சியின் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பது வேண்டுமானால், அவர்களது உட்கட்சிப் பிரச்னையாக இருக்கலாம். ஆனால், முதல்வர் என்று வரும்போது வெறுமனே உட்கட்சிப் பிரச்னை என்று சொல்லி புறந்தள்ளிவிட முடியாது. அது ஆறு கோடி தமிழர்களின் பிரச்னை; தமிழக மக்கள் நலனுக்காக அரசியல் செய்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் பிரச்னையாகத்தான் பார்க்கவேண்டும்.

நெடுநாட்களாக தமிழக அரசு முழுமையாக இயங்கமுடியாத சூழல்தான் நிலவிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, கோர்ட் - கேஸ் என்று போய்க்கொண்டிருந்தது; அடுத்ததாக ஜெயலலிதா உடல்நலமின்றி இருந்தார்; அதற்குப்பின் இன்றைய சூழ்நிலை... இப்படியே போய்க்கொண்டிருந்தால், இந்த நிலையற்றத் தன்மை தமிழக மக்கள் நலனுக்கு நல்லதல்ல.
சட்டசபை தேர்தல் முடிந்து ஒருவருடம் கூட முடியவில்லை. அதற்குள் சுயநல அரசியலால் ஏன் இப்படியொரு குழப்பம் விளைவிக்கப்பட்டது? ஏன் இந்த அவசரம்? அதற்கு என்ன அவசியம்? முதல்வர் பதவி என்பது நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்குத்தானே தவிர... ஆட்சி - அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்துக்கொண்டு தனது பலத்தைக் காண்பிப்பதற்கு அல்ல...!''

''ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் பட்டியலை சசிகலா கவர்னரிடம் கொடுத்தபின்னரும், ஆட்சி அமைக்க அழைப்பதில் கவர்னர் தரப்பில் இவ்வளவு காலதாமதம் ஏன்?''

''மிரட்டப்பட்டோம், கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கப்பட்டிருக்கிறது' என்றெல்லாம் ஓ.பி.எஸ் கூறிவருகிறார். அவரோடு அந்தக் கட்சியின் அவைத்தலைவர் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ-க்களும் இதே கருத்தைக் கூறி ஒன்றைணைகிறார்கள். ஒரு முதல்வரே மிரட்டப்பட்டுள்ளார் என்ற நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட்டனரா? என்ற கேள்வி வருகிறது.... இல்லையா? நாட்டு மக்களின் எண்ணம் ஒருபக்கமாக இருக்கும்போது, எண்ணிக்கை இருக்கிறது என்பதற்காக கவர்னர் எப்படி அவசரமாக முடிவெடுக்க முடியும்? முடிவெடுத்த பின்னர் கவர்னரால் பின்வாங்க முடியாது. எனவே, உண்மையான சூழலை ஆராயந்து, அறிந்துதான் முடிவெடுக்க முடியும். அதற்கு காலதாமதம் ஆகத்தான் செய்யும்.''





''ஓ.பி.எஸ் - சசிகலா இருவரில், பி.ஜே.பி ஆதரவு யாருக்கு?''

''இவருக்கு சப்போர்ட், அவருக்கு சப்போர்ட் என்று சொல்வதற்கு நாங்கள் ஒன்றும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஒட்டுமொத்தமாக தமிழக மக்களுக்குத்தான் எங்கள் ஆதரவு. அப்படி மக்களின் நலன் சார்ந்த ஆதரவு என்றால் என்ன...? 'ஒரு நிலையான ஆட்சி வேண்டும்' என்பது மட்டும்தான். அப்படி ஒரு நிலையான ஆட்சியை இவர்கள் இருவரில் யார் கொடுக்கமுடியும்? இவர்களில் ஒருவர், ஏற்கெனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் சுட்டிக்காட்டப்பட்டவர். தான் பிரச்னைக்குள்ளாக இருக்கும்போது, தன்னைப்போலவே திறம்பட செயலாற்றுபவர் இவர்தான் என்று அடையாளம் கண்டே இவரை முதல்வராக முன்னிறுத்தியிருந்தார். ஜெயலலிதா இறந்த பின்னரும்கூட அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்கூட. அடுத்ததாக, நீண்ட நெடுநாட்களாக அரசியலில் தொடர்ந்து இருந்துவருபவர். தற்போதைய சூழலில் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளவர். ஆனால், அந்த இன்னொருவரை ஜெயலலிதா எந்த இடத்திலும் சுட்டிக்காட்டவே இல்லை.

ஜெயலலிதாவின் கொள்கைப்படியே செயல்படுகிறோம் என்று சொல்லும்போது, அந்தம்மாவின் விருப்பத்தைத்தானே இவர்கள் செயல்படுத்த வேண்டும்? மாறாக செயல்படுவது எப்படி ஜெயலலிதாவின் பணியை எடுத்துச்செல்வதாக இருக்கும்? இதில் ஏன் குழப்பம் விளைவிக்கிறார்கள்? என்ற எண்ணம் எல்லோருக்கும் எழுவதுபோல் எங்களுக்கும் எழுந்தது... அவ்வளவுதான். மற்றபடி இவங்களுக்கு ஆதரவு, அவங்களுக்கு ஆதரவு என்பதெல்லாம் இல்லை.''

''ஓ.பன்னீர்செல்வமே தமிழக முதல்வராக நீடிக்கவேண்டும் என்று பி.ஜே.பி ஆதரிப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?''

''ஓ.பி.எஸ்-க்குத்தான் எங்கள் ஆதரவு என்று சொல்வதைவிட, குழப்பம் இல்லாத, நிலையான ஆட்சியாக நன்றாகத்தானே பணியாற்றிக் கொண்டிருந்த அந்த முதல்வருக்கு ஏன் ஆதரவு கொடுக்கக்கூடாது என்பதுதான் என் கேள்வி.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மத்திய அரசு என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைத்தான் ஆதரிக்கும். அந்தவகையில்தான் நாங்களும் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்துக்கொண்டிருந்தோம். இதில், 'ஆதரிப்பது' என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன...? ஒரு முதல் அமைச்சர் என்ற முறையில் அவருக்கு கொடுக்கவேண்டிய மரியாதையையும் ஆதரவையும் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். உதாரணத்துக்கு ஜல்லிக்கட்டு... பிரதமரது வழிகாட்டுதல் செயலாக்கம் பெற்று இன்றைக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஊழலற்ற, நிலையான ஒரு ஆட்சி தமிழகத்துக்கு வேண்டும் என்றுதான் நாங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது, மறுபடியும் ஊழல் கறை படிந்தவர்கள் வருவது நல்லதா? குடும்ப ஆட்சி ஒழியட்டும் என்றுதான் மக்கள் ஓட்டு போட்டிருக்கிறார்கள். மறுபடியும் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்களே ஆட்சிக்கு வரலாமா? நேற்று கவர்னரை சந்திக்கச் சென்றபோதுகூட சசிகலாவோட அவரது குடும்ப உறுப்பினரும் சென்றிருக்கிறார். இதையெல்லாம் மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.!''


-த.கதிரவன்

ஆளுநருக்கு, சசிகலா முக்கிய கடிதம்!



தமிழகத்தின் நலன் கருதி விரைந்து செயல்பட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ளார். ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தி சசிகலா தரப்பினர் ராஜினாமா செய்ய வைத்ததாகவும், ராஜினாமாவை திரும்பப் பெறுவதாகவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநரை, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சந்தித்தார். அப்போது, எம்எல்ஏக்களின் பெரும்பான்மை கடிதத்தை கொடுத்தார். ஆனால், இன்று வரை சசிகலாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இதனிடையே, பன்னீர்செல்வத்துக்கு எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். அதில், "முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதம் அளித்து ஏழு நாட்களாகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பேச விரும்புகிறேன். தமிழகத்தின் நலன் கருதி ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும். அரசியல் சாசன சட்டப்படி ஜனநாயகத்தை காக்க ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

பன்னீர்செல்வத்தை சந்திக்கிறார் மாஃபா பாண்டியன்! அதிமுக தலைமையில் பரபரப்பு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சசிகலா அணியில் உள்ளார். இவர் தொடர்ந்து சசிகலா முதல்வராக ஆதரவு தெரிவித்து வருகிறார்.

Will surely listen to the collective voice of my voters & decide in a way to uphold the dignity of Amma's memory & unity of AIADMK !
இந்நிலையில் பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தொகுதி மக்களின் கருத்துகளை கேட்டு நல்ல முடிவு எடுப்பேன். அம்மாவின் பெருமையை நிலைநிறுத்தும் வகையிலும், அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்கும் வகையிலும், நல்ல முடிவு எடுப்பேன்' எனக்கூறியுள்ளார்.
Mafo Pandiyarajan Tweet

சசிகலாவை முடக்க பன்னீர்செல்வத்தின் வியூகம் இதுதானா?! #OpsVsSasikala

 எஸ்.கிருபாகரன்

சசிகலா ; பன்னீர்செல்வம்

பத்து ஆண்டுகளுக்குப்பின் தமிழக அரசியல் களம் பரபரப்பு அடைந்திருக்கிறது. ஜெயலலிதா இறந்த 60 நாட்களுக்குள் அவரது தோழி என நேற்றுவரை சொல்லப்பட்ட சசிகலா, பொதுச் செயலாளர் பதவியேற்ற கையோடு முதல்வர் பதவிக்கான காய்நகர்த்தல்களை செய்துவருகிறார். நேற்றுவரை அம்பியாக இருந்த பன்னீர்செல்வம் ஒரே நாள் இரவில் அந்நியனாக மாறி அதகளம் செய்துவருகிறார். சசிகலாவுக்கு எதிராக போர்க்கோலம் கொண்டுவிட்ட அவர், காபந்து சர்க்காராக இருக்கும் நிலையிலும் சசிகலாவுக்கு கிலி கொடுக்கிறார்.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, அவரது நினைவு இல்லமாக அரசு பராமரிக்கும் என அறிவிப்பு செய்திருக்கிறார் இப்போது காமராஜரின் இறப்புக்குப்பின் நுங்கம்பாக்கம் திருமலை வீதியில் அவர் வாழ்ந்த வீட்டை வீட்டுக்குரியவரிடமிருந்து விலைக்கு வாங்கி அரசு நினைவு இல்லமாக்கி பராமரித்துவருகிறது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தனது ஆசான் அண்ணாத்துரையின் காஞ்சிபுரம் இல்லத்தை அரசு செலவில் வாங்கி நினைவு இல்லமாக்கினார். சம்பிரதாயமாக இல்லாமல் அன்றைய கவர்னர், மற்றும் வெளிமாநில அமைச்சர்கள் பலரை வரவழைத்து சிறப்பாக அதன் திறப்பு விழாவை நடத்தினார்.

ஆனால் தனக்கு நினைவு இல்லம் அமைக்க அரசுக்கு செலவு வைக்க விரும்பாத எம்.ஜி.ஆர், தனது சொந்த அலுவலகத்தை அதற்காக ஒதுக்கி உயில் எழுதிவைத்தார். அதன்படி தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள அலுவலக கட்டிடம் அவரது காலத்திற்குப்பின் அவரது நினைவு இல்லமானது. அதன் பராமரிப்பு செலவைக்கூட அரசுக்கு உருவாக்கவிரும்பாமல் தனக்கு சொந்தமான ஆலந்துார் மார்க்கெட்டிலிருந்து வரும் வருமானத்தை இதன் பராமரிப்புக்கு உயில் எழுதிவைத்தார் அவர்.

இப்படி அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர் வரிசையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தையும், அரசு அவரது நினைவு இல்லமாக பராமரிக்கும் என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். போயஸ் கார்டன் இல்லம் ஜெயலலிதா புகழ்பெற்ற நடிகையாக இருந்தபோது தன் தாயாருடன் இணைந்து வாங்கிய இடம். சென்னையின் மத்தியில் தனக்கு ஒரு இடம் வேண்டும் என்ற ஆசையில் ஜெயலலிதா வாங்கிய அந்த இடம், அவரது வாழ்வின் ஏற்ற இறக்கங்களுக்கு சாட்சியான இடம். ஜெயலலிதாவுக்கும் அவரது தாயார் சந்தியாவுக்கு சரிபங்கு கொண்ட இந்த வீட்டின் பூமி பூஜை அன்றைய சினிமா பிரபலங்கள் புடை சூழ நடத்தப்பட்டது. சோகம் என்னவென்றால் வீட்டை மகளுக்காக பார்த்துப் பார்த்து கட்டிய சந்தியா, அதன் கிரகப்பிரவேசத்தின்போது உயிருடன் இல்லை. அதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் மரணம் அடைந்தார்.

தாயார் இறந்த சோகத்துடன் வீட்டிற்கு குடிபுகுந்த ஜெயலலிதாவின் மரணமும் அங்கிருந்தபோதுதான் நடந்தது. அதைத்தான் இப்போது நினைவு இல்லமாக்கப்படும் என ஓ.பி.எஸ் அறிவித்திருக்கிறார். ஆனால் மற்ற தலைவர்களைப்போன்று இந்த அறிவிப்பு ஜெயலலிதாவை கவுரவிக்கும் முயற்சி அல்ல; சசிகலாவிற்கு எதிரான பன்னீர்செல்வத்தின் ஆடுபுலி ஆட்டத்தின் முதற்பகுதி என்கிறார்கள். அதிமுகவை கைப்பற்றியிருக்கிற சசிகலா, ஜெயலலிதாவின் நடை உடை பாவனைகளை அப்படியே பின்பற்றிவருகிறார். அந்த வரிசையில் போயஸ் கார்டன் இல்லம் தொண்டர்களுடன் ஒரு உணர்ச்சி பூர்வமான பந்தத்தை ஏற்படுத்தும் என்பதற்காக தொடர்ந்து அங்கேயே குடியிருந்துவருகிறார். எங்குபோய் 1000 ஏக்கரில் நிலம் வாங்கி அரண்மனை கட்டினாலும் தனது அரசியல் செல்வாக்குக்கு போயஸ் கார்டன் வீடே ராசியானது என நினைக்கிறார் சசிகலா.

நெட்டிசன்களில் தொடங்கி நேற்று முளைத்த கட்சிகள் வரை அவர் அங்கு வசிப்பதை கேள்விக்குள்ளாக்கினாலும் ஜென் நிலையில் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் நேற்றுவரை அதே இல்லத்தில்தான் மொத்த மீடியாவையும் அழைத்து பேட்டியளித்துக்கொண்டிருக்க அதுதான் காரணம். ஆச்சர்யம் என்னவென்றால் அதுபற்றி கேள்வி எழுப்பவேண்டிய முழு உரிமையுள்ள ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளும் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை என்பதுதான்.



இந்த நிலையில்தான் ஜெயலலிதா இறப்புக்குப்பின் நேற்றுவரை அந்த வீட்டில் பக்கோடா சாப்பிட்டுவிட்டு பணிவாகக் காட்டிக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் முரண்பட்டதும் இன்று வீட்டை நினைவு இல்லமாக்குவோம் என்கிறார். கோட்டையே குடிமூழ்கப்போகும் இந்த நேரத்திலும் ஆளுநரை சந்தித்து அவர் வைத்த கோரிக்கைப்பட்டியலில் ஆறாவதாக இந்த நினைவு இல்ல விவகாரத்தை செருகி, சசிகலாவுக்கு திகில் கொடுத்திருக்கிறார்.

ஜெயலலிதா என்ற இரும்புப் பெண்மணியின் அதிகார அடையாளமாகவும் தொண்டர்களுடன் உணரவுப்பூர்வமான உறவு கொண்டஅந்த வீட்டை சசிகலாவிடமிருந்து எட்டிப்பறிப்பதன்மூலம் சசிகலாவின் அரசியல் சிறகுகளை வெட்டநினைக்கிறார் ஓ.பி.எஸ் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சசிகலாவை எதிர்ப்பது என முடிவெடுத்துவிட்டபின் அவரை போயஸ் இல்லத்திலேயெ தொடரச்செய்வது சசிகலாவின் மீது ஜெயலலிதாவின் பிம்பத்தை தொண்டர்கள் பொருத்திப்பார்க்கச் செய்துவிடும். மேலும் இது சசிகலாவுக்கு ஒரு பாசிடிவ் எனர்ஜியை தரும். இது தங்களின் எதிர்ப்பு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டயாக இருக்கும் என்பதால் உடனடியாக சசிகலாவை அங்கிருந்து அப்புறப்படுத்துவது நல்லது என நினைக்கிறது ஓ.பி.எஸ் தரப்பு. இதற்காக தீபாவின் மூலம் காய்நகர்த்தினால் அது தனிப்பட்ட சொத்துப்பிரச்னையாக மாறி பல வருடங்கள் வழக்கு நடக்கும். தங்கள் எண்ணம் ஈடேறாது என்பதால் அதிரடியாக இப்படி அறிவிப்பை வெளியிட்டார் என்கிறார்கள். அதேசமயம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவதன்மூலம் ஜெயலலிதா உயில் ஏதாவது எழுதியிருந்தால் அது வெளிவரும் என்பதும் ஓ.பி.எஸ் தரப்பின் எண்ணம் என்கிறார்கள்.



ஓ.பி.எஸ் தனது ஆசையை வெளிப்படுத்திவிட்டாலும் அதன் சட்டப்படியான சாத்தியம் எந்த வகையில் உள்ளது என்பது குறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ் அவர்களிடம் கேட்டோம்.

“பொதுவாக அரசு ஒரு தலைவரை கவுரவிக்க அவர்கள் வாழ்ந்த வீட்டையோ அல்லது அவர்கள் தொடர்பான ஒரு இடத்தையோ நினைவு இல்லமாக்கும். அப்படி அரசு முடிவெடுத்தால் சம்பந்தப்பட்ட சொத்தை நில சுவாதீனம் என்ற பெயரில் அந்த இடத்திற்கு ஒரு மதிப்பை நிர்ணயித்து உரியவர்களிடம் அரசு இழப்பீடு கொடுத்து பெற்றுக்கொள்ளும். இதுதான் நடைமுறை. அரசின் இந்த முடிவிற்கு சம்பந்தப்பட்ட இடத்தை வாரிசு அடிப்படையிலோ அல்லது உயிலின்படியோ பெற்றவர் கேள்வி எழுப்பமுடியாது. உயில் அல்லது மற்ற ஆதாரம் அரசின் இழப்பீடு பெறமட்டுமே அவர்களுக்கு உதவும். அப்படி அரசு எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் குறிப்பிட்ட நாட்களுக்குள் அங்கிருந்தவர் வெளியேறவேண்டும். இது ஒரு அரசியல் மூவ் என்றாலும் வாரிசு இல்லாத சொத்து என்பதால் நினைவு இல்லமாக்குவதையே மக்களும் விரும்புகிறார்கள்.

உண்மையில் ராஜினாமா செய்வதற்கு முன்பு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தால் அது அன்றே அரசாணையாக மாறி நடைமுறைக்கு வந்திருக்கும். ஆனால் காலம் தாழ்த்திய இந்த நடவடிக்கையினால் இப்போது கவர்னர் கையில்தான் இதன் முடிவு இருக்கிறது. காரணம் காபந்து அரசின் முதல்வர் என்ற முறையில் அவரால் வழக்கமான அலுவலகப்பணி தவிர வேறு எதையும் செய்யமுடியாது” என்றார்.

“ ஒருவேளை கவர்னர் ஒப்புதலில் ஓ.பி.எஸ்ஸின் இருக்கும் அறிவிப்பு, அரசாணையானால் சசிகலா தரப்புக்கு பெரும் அரசியல் பின்னடைவாகிவிடும். கவர்னர் உத்தரவின்பேரில் உடனடியாக சசிகலாவை வெளியேறக்கூறி அரசு நோட்டீஸ் அனுப்பும். இதை சசிகலாவால் எதிர்க்கவும் முடியாத தர்மசங்கடம் ஏற்படும். மீறி அரசுடைமை ஆக்குவதை அவர் எதிர்த்தால் சொத்துக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழும். அப்படி தனக்கு உயில் எழுதியிருப்பதாக அவர் சொன்னால் அப்போது பல உண்மைகள் வெளிவரலாம் என்பதோடு எதிர்ப்பு தெரிவிப்பதும் அதிமுக தொண்டர்களிடையே அவர்மீது எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும். இப்படி நினைவு இல்ல அறிவிப்பு மூலம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் விழச்செய்வதே ஓ.பி.எஸ் திட்டம். எப்படியிருந்தாலும் மக்கள் விருப்பப்படி போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக்குவதே இப்போதைக்கு நல்ல முடிவாக இருக்கும்” என்றார் எம்.ஜி.ஆர் கால நிர்வாகி ஒருவர்.

ஓ.பி.எஸ்ஸை 'யு.பி.எஸ்' என்று கலாய்த்தார்கள் நெட்டிசன்கள். 'யு.பி.எஸ்' கூட 'ஷாக்' அடிக்கச் செய்யும் வலிமை உண்டு என காட்ட ஆரம்பித்துவிட்டார் ஓ.பன்னீர்செல்வம்!

Sasikala misconstrued my praise for OPS: Duraimurugan

DMK leader says he would prefer Panneerselvam as Chief Minister

Veteran DMK leader Duraimurugan, who has seen many a battle in his long political career, is no stranger to controversies. But even he would not have expected that his jovial remark praising Chief Minister O. Panneerselvam on the concluding day of the last Assembly session on February would form the crux of the political charge-sheet that the AIADMK would file against Mr. Panneerselvam accusing him of being in cahoots with the DMK and trying to break the party. In an interview with B. Kolappan, Mr. Duraimurugan clarifies that there was no hidden agenda when he said he wanted Mr. Panneerselvam to continue as the Chief Minister for the next four years and how Ms. Sasikala has misconstrued his remarks. Excerpts:
AIADMK leader V.K. Sasikala has cited your speech in the Assembly offering support to O. Panneerselvam to allege that he has revolted at the behest of the DMK. What is your reaction?
While addressing the House, Mr. Panneerselvam said the DMK was opposing his government in spite of the good schemes implemented by it. He complained that we refused to understand his efforts. I responded to him saying that the DMK wished the continuation of his government. I also said we would not disrupt his government and the DMK would not pose any threat to his Chief Ministership.
Whatever I said is in the Assembly records. At that time, we did not know that Mr. Panneerselvam would resign his Chief Minister post and Ms. Sasikala would be elected as the Legislature Party leader of the AIADMK in the place of Mr. Panneerselvam. We have not said anything against Ms. Sasikala since she was not in the picture at all. Who is going to be the Chief Minister is the inner party issue of the AIADMK and we are not bothered about it. But Ms. Sasikala has misconstrued my comments as a threat to the AIADMK and sought to occupy the seat of the Chief Minister.
But it appears as if the DMK has taken a clear stand in favour of Mr. Panneerselvam…
When you compare Mr. Panneerselvam with Ms. Sasikala, he makes a better Chief Minister. Forget my position (as a DMK leader). As a citizen of Tamil Nadu, I would take pride in voting for Mr. Panneerselvam. He has functioned as the Chief Minister of the State thrice; and as Finance Minister, he had presented five budgets and was going to present the sixth one. He has rich experience even in the opposition and handled many important portfolios and gained enormous knowledge about administration. Above all, he is a politician, whereas Ms, Sasikala is not.
As the Deputy Leader of the Opposition in the Assembly, what do you expect from the Tamil Nadu Governor at this juncture?
The Governor should take steps to conduct a floor test in the Assembly to ascertain who has the support of the majority of MLAs. It is immaterial who is going to win the support of majority of the MLAs. Media reports say that many MLAs are being held hostage (by the Sasikala camp). The administration in Tamil Nadu has been totally paralysed. Unless the Governor intervenes and restores normalcy, the crisis will deepen.
There is an allegation that the BJP government at the Centre was behind the political developments in Tamil Nadu…
I have no knowledge about it.

TN Governor likely to await SC ruling in Sasikala case..THE HINDU

Not being an MLA is seen as a ‘restrictive’ factor to her swearing-in

Rival factions of the AIADMK, led by interim general secretary V.K. Sasikala and Chief Minister O. Panneerselvam, may have to wait longer for Governor Ch. Vidyasagar Rao to decide on their claims of majority support in the Assembly. The Governor, in his assessment of the situation, has indicated that he is inclined to wait till the Supreme Court delivers its verdict on the appeals in the disproportionate assets cases against Ms. Sasikala.
Noting that Ms. Sasikala is not a member of the Assembly, the Governor has apparently been advised to consider this as a “restrictive” factor in swearing her in as CM.
Technically, there is no bar on a non-legislator to be sworn in as Minister. Article 164 (4) of the Constitution merely states: “A Minister who for any period of six consecutive months is not a member of the Legislature of the State shall at the expiration of that period cease to be a Minister.”
Not an enabling clause: SC
However, the Supreme Court had in a judgment — B.R. Kapoor Vs State of Tamil Nadu and Others, September 2001 — held: “Article 164 (4) is not a source of power or an enabling provision for appointment of a non-legislator as a Minister even for a short duration. It is actually in the nature of disqualification or restriction for a non-member, who has been appointed as a Chief Minister or a Minister as the case may be, to continue in office, without getting elected within a period of six months.”
Sources said in the backdrop of the Supreme Court indicating that it would deliver the judgement in the assets case against Ms. Sasikala soon, the Governor was wondering whether she would be able to contest an election as legislator within six months (should she be convicted).

NEWS TODAY 15.08.2026