Monday, February 13, 2017

இன்றைக்குள் முடிவெடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம்: சுப்பிரமணியன் சுவாமி

By DIN  |   Published on : 13th February 2017 05:19 AM  |   |  

subramanian swami
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? என்ற விஷயத்தில் திங்கள்கிழமைக்குள் முடிவெடுக்குமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். அப்படி அவர் முடிவெடுக்கா விட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் என்றும் சுவாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாதவது:
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? என்ற விஷயத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் திங்கள்கிழமைக்குள் முடிவெடுக்க வேண்டும். இல்லா விட்டால், அவர் குதிரை பேரத்துக்கு உடந்தையாக இருப்பதாகக் கூறி, அரசியல் சாசனத்தின் 32-ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்ய முடியும்.
இந்த விவகாரத்தில் ஆளுநர் நீண்ட நாட்களுக்கு தாமதம் செய்ய முடியாது என்ற எனது கருத்தையே மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சொலி சொராப்ஜி கருத்து கூறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது மிகப்பெரிய சட்ட நிபுணர்கள் அனைவரும் எனது கருத்தையே கொண்டுள்ளனர் என்று சுவாமி அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
இதனிடையே, செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் "நான் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். இது மிகவும் அபத்தமானது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சசிகலா மீது வழக்குத் தொடுத்தவர்களின் நானும் ஒருவன். அதே நேரத்தில் அரசமைப்புச் சட்டமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கூறுகிறேன். தமிழகத்தில் இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னையைத் தீர்க்க, எம்.எல்.ஏ.க்கள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்திக்க வேண்டும்' என்று சுவாமி தெரிவித்துள்ளார்.

Attorney General doesn't come under RTI: Delhi HC

NEW DELHI, FEB 3
The Delhi High Court on Friday ruled that the office of the Attorney General of India does not come within the ambit of the Right to Infomation Act, saying its "predominant function" is to give advice on legal matters to the government.

A division bench of Chief Justice G. Rohini and Justice Jayant Nath said that the Attorney General appears in court on behalf of the government of India and has fiduciary relationship with the government and his opinions cannot be put in the public domain.

The court set aside a March 2015 verdict by a single judge, which said the office of the top law officer was answerable to public under the transparency law as he performs public functions and his appointment is governed by the Constitution.

"Essentially, the function being that akin to an advocate of the government of India, he is in a fiduciary relationship with the government of India and cannot put in the public domain his opinions or the materials forwarded to him by the government of India," a bench headed by the High Court Chief Justice said while reversing the earlier order.

The judgment added: "The essential services provided by the AG are to advice the government on legal matters and perform other duties such of a legal character as may be assigned. The AG is not a functionary reposed with any administrative or other authority which effect the rights or liabilities of persons."

Under the Right to Information (RTI) Act, any government office or authority or any organisation substantially funded by the government comes under the purview of the transparency law.

No wrong in doctor leaving drill chip in elbow: Forum

TOI CHENNAI

CHENNAI: Instruments break during operations and additional surgery to remove fragments of broken instrument is not justified, a consumer forum here quoted medical texts as saying, while absolving a doctor of medical negligence for inadvertently leaving in the elbow of a patient a small piece of a drill that broke off during an orthopaedic procedure.

Aminjikarai resident V Vasudevan told the district consumer disputes redressal forum, north Chennai, that he received treatment at Dr Rangarajan Memorial Hospital, Anna Nagar West, after an accident on April 21, 2009.

Dr Sudhakar Williams carried out a surgical process to insert steel pins in Vasudevan's right elbow. Four days later, he received a report from the hospital's doctors, saying he had recovered.

Around 30 months later, Vasudevan's consulted another doctor, who wanted to see an X-ray of his right elbow. The X-ray showed a small part of the drill lodged in bone and Vasudevan underwent surgery in another hospital and doctors had it removed.

Vasudevan moved the forum claiming compensation for medical negligence because he had "continuous pain" after his discharge from Dr Rangarajan Memorial Hospital.

In his counter, Dr Williams said Vasudevan experienced pain because of injuries sustained in the accident. According to the hospital's strict policy, doctors discharged Vasudevan only after ensuring he had recovered. They did not negligently leave part of an instrument in Vasudevan's body and he did not consult him for pain after the procedure.

Medical literature said it was common for small pieces of drill to break and stick in the bone, the doctor's counsel said. The piece did not cause any complications and the doctor did not deviate from medical norms.

 bench of the forum's president K Jayabalan and member T Kalaiyarasi noted that Vasudevan did not claim negligence while in hospital, had not provided any evidence to prove that the piece of drill caused him any injury, or that medical negligence had caused him any pain.

Vasudevan failed to provide any medical literature to prove that he was a victim of medical negligence or deficiency in service, the bench said. The doctor and hospital had, however, cited medical texts highlighting the fact that medical instruments occasionally break "during operations... in every surgical discipline".

Stating that the medical texts stated that chips of drill left behind are "well-tolerated by human body" and "additional surgical trauma to remove the fragment is unjustifiable", the bench absolved the doctor of medical negligence.

அமெரிக்காவை திரும்பிப் பார்க்க வைத்த வடகொரியா!


டிரம்ப்

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து சில கருத்துக்கள் தெரிவிப்பதன் மூலம் பலரது எதிர்ப்புக்களை சம்பாதித்து வருகிறார். இப்போது அவர் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக வடகொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அனுப்பி சோதனை நடத்தியது, பலநாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதிலும் ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளை அதிகமாக திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதற்கு ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதுபோலவே, கடந்த ஆண்டிலும் பல ஏவுகணைகளை வடகொரியா அனுப்பி சோதனை செய்தது. அப்போதிருந்தே வடகொரியாவுக்கு எதிராக எச்சரிக்கை குவிந்து வருகிறது. கொரியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு பியாங்யானில் உள்ள பாங்யான் விமான தளத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவப்பட்டது. இந்த ஏவுகணைச் சோதனை கடந்த ஞாயிறு காலை கொரிய நேரப்படி 7.55-க்கு ஏவப்பட்டது.

இதனை குறிக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்,"வட கொரிய ராணுவம் அமெரிக்காவினை அடைந்து அணு ஆயுதப்போர் புரியும் வல்லமை கொண்ட அதிக தூரம் பயணிக்கும் ஏவுகனை சோதிக்கும் திறனை நெருங்கி விட்டோம்" என எச்சரித்திருந்தார். ஆனால் அப்போது ட்வீட் செய்த டிரம்ப், 'இல்லை, அவ்வாறு நடைபெறாது' என சொல்லியிருந்தார். ஆனால் சொன்னவாறு அமெரிக்காவை திரும்பி பார்க்க வைத்துள்ளது வடகொரியா. இதனை தொடர்ந்து அமெரிக்கா வந்த ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவிடம், "ஜப்பானுக்கு அமெரிக்கா 100 சதவிகிதம் துணையாக இருக்கும்" என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணை பற்றி கருத்து தெரிவித்த தென்கொரியா, " ஏவுகணை ஜப்பான் கடல்பகுதியில் கிழக்கு பக்கமாக சுமார் 500 கி.மீ வரைக்கும் பயணம் செய்தது" என தெரிவித்துள்ளது. ஆனால் 'இதனை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது' என ஜப்பான் பிரதமர் அபே மறுத்துள்ளார்.

காதலை சொல்ல புது டெக்னிக்... க்யூபிட் கடவுளாகும் ஃபேஸ்புக்!


பிப்ரவரி 14, காதலர் தினம் உலகமே தனக்கு பிடித்தமானவர்களிடம் காதலை சொல்லப்போகும் நாள். இதயம் முரளி மாதிரி தயங்கி தயங்கி சொன்னவங்க ஆரம்பிச்சு ரெமோ சிவகார்த்திகேயன் மாதிரி பலூன் பறக்க விட்டு ''ஓய் செல்ஃபி எனக்கு எப்போ ஓகே சொல்லுவனு'' விதவிதமா காதல சொல்லப்போறவங்களுக்காக ஒரு புதுமையை அறிமுகப்படுத்திருக்கு ஃபேஸ்புக்.

கடந்த வருடம் முதல் ஸ்டேட்டஸ், ஃபோட்டோ, வீடியோக்களுக்கு ''லைக்'' மட்டுமில்லாம ஹார்ட் எமோஜி போடவும் வழிவகுத்தது ஃபேஸ்புக். அதுல இருந்து தங்களோட காதலன் , காதலி டிபி மாத்துனா, குட் நைட் ஸ்டேட்டஸ் போட்டானு எல்லாத்துக்கும் ஹார்ட் எமோஜிக்கள பறக்க விட்ட ரோமியோ/ஜூலியட்களுக்கு பிப்ரவரி 13ம் தேதி இரவு ''வேலன்டைன் டே'' கார்டுகளை வெளியிட உள்ளது ஃபேஸ்புக். இதனை உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் அவர்களுக்கென பிரத்யேகமாக ஷேர் செய்யும் வசதியை அறிமுகம் செய்யவுள்ளது.

இதேபோல் 2016ம் ஆண்டு முடியும் போது இந்த வருடம் எப்படி இருந்தது என்ற ''இயர் இன் ரிவியூ'' சேவையை அறிமுகம் செய்து இந்த வருடம் நாம் என்ன செய்தோம் என்பதை வீடியோவாக காட்டியது. அது மட்டுமின்றி ஃபேஸ்புக்கின் பிறந்த நாளின் போது ''ஃப்ரெண்ட்ஸ் டே'' வீடியோவாக வெளியிட்டது. அதே மாதிரியான வேலை தான் இந்த முறையும் கையாண்டுள்ளது. வேலன்டைன் டே கார்டை லண்டனில் உள்ள ஃபேஸ்புக் பணியாளர்கள் உருவாக்கியுள்ளனராம்.



ஃபேஸ்புக்கில் தனிமனிதனின் கொண்டாட்டங்களின் போது ஃபேஸ்புக்கின் பயன்பாட்டாளர் பங்கேற்பு 25 சதவிகிதம் அதிகரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மெஸெஞெசர்களிலும் வேலன்டைன் டே ஃபில்டர்களை அறிமுகம் செய்து மாஸ் காட்டுகிற‌து ஃபேஸ்புக்.

எல்லா விஷயங்களுக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கி அதனை உலகின் தொடர்பில் வைத்திருக்க வேண்டும் என்பது தான் ஃபேஸ்புக்கின் நோக்கம். காதல் உலகின் பெரும்பாலான மக்களை இணைக்கும் ஒரு விஷயம் என்பதால் இந்த விஷயத்தை கொஞ்சம் ஸ்பெஷலாக அணுகியுள்ளது ஃபேஸ்புக்.

ஃப்ரெண்ட்ஸ் டேயையே மாற்றிய ஃபேஸ்புக்:

ஃபேஸ்புக் தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 4-ம் தேதியை 'Friends Day' என சொல்லி கொண்டாடி வருகிறது. 2015-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், இது தொடர்பாக தனது பக்கத்தில், ஒரு ஸ்டேட்டஸ் பதிவிட்டிருந்தார். அதில் "இந்த நாள் நண்பர்களை கொண்டாட வேண்டிய நாள். அதுமட்டுமின்றி இன்று ஃபேஸ்புக்கின் பிறந்தநாளும் கூட. ஆனால் நீங்கள் ஃபேஸ்புக்கை கொண்டாட வேண்டாம். நட்பை கொண்டாடுவோம். நண்பனைக் கொண்டாடுவோம்" என அதில் கூறியிருந்தார். அப்போது அந்த ஸ்டேட்டஸில் மார்க் அறிமுகம் செய்ததுதான் இந்த friends day. அதன்பின்பு 2016-ம் ஆண்டும் இதேபோல பிப்ரவரி மாதம் 4-ம் தேதியும் நண்பர்கள் தினம் பற்றி ஸ்டேட்டஸ் போட்டவர், அத்துடன் நண்பர்கள் பற்றிய ஒரு குட்டி வீடியோ ஒன்றையும் சேர்ந்து பகிரும் ஆப்ஷனையும் அறிவித்தார்.

இதுமட்டுமில்லாமல் இயர் ஆஃப் ட்ராவல் என உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களது பயணம் குறித்த அப்டேட்டுகளை அளிக்கும் வசதியை தந்துள்ளது. அதிலும் காதல் படங்கள் வைரல்காட்டும் என்பதில் ஆச்சர்யமில்லை.மார்க் சக்கர்பெர்க் அவரது மனைவி பிரிசில்லாவை காதல் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது. தங்கள் காதல் தருணங்களையும் அவ்வப்போது மார்க் பகிர்வது அனைவரும் அறிந்ததே.

எப்படியோ பாஸ், காதலை கார்டு கொடுக்காம, புது டெக்னிக் மூலம் சொல்ல வைச்சது இதயம் முரளிக்களுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும். ரீயாக்ஷன் மாறினா ''தெரியாம கைபட்டு ஷேர் ஆகிடுச்சுனு சமாளிக்கலாம்னு இப்பவே ஸ்டேட்டஸ் தட்ட ஆரம்பிச்சுட்டாங்க ரோமியோ-ஜூலியட்கள். எப்படியோ பாஸ்..லவ் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்னு எப்படியும் ஸ்டேட்டஸ் தட்டுவார் மார்க் சக்கர்பெர்க்....

பொது » உயிர் மூச்சு

Published: February 11, 2017 09:43 ISTUpdated: February 11, 2017 09:43 IST

3 மாதங்களுக்கு மீன் சாப்பிடக் கூடாது: விஞ்ஞானி எச்சரிக்கை

ஆதி

சென்னையில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட பின்னணியில் எண்ணூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிடிக்கப்பட்ட மீன்களை அடுத்த மூன்று மாதங்களுக்குச் சாப்பிடாமல் இருப்பதே பாதுகாப்பானது என்று புதுடெல்லியைச் சேர்ந்த விஞ்ஞானியும் 'டெரி' (தி எனர்ஜி அண்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட்) நிறுவனத்தின் மூத்த இயக்குநருமான பன்வாரி லால் தெரிவித்தார். சென்னை எண்ணெய்க் கசிவு தொடர்பாக அவர் அளித்த சிறப்பு நேர்காணல்:

எண்ணூர் எண்ணெய்க் கசிவு கடல் வாழ் உயிரினங்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும். எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட பகுதியில் பிடிக்கப்படும் மீன்களைச் சாப்பிடலாமா?

கடல் மீன்கள், கடல் ஆமைகள், கடல் பறவைகளை உள்ளிட்டவற்றை எண்ணெய்க் கசிவு மோசமாகப் பாதிக்கும். எண்ணெய்க் கசிவு காரணமாகக் கடல் வாழ் உயிரினங்களுக்கு உடல் வெப்பநிலை தாழ்வு (hypothermia) ஏற்படலாம். கடல் நீருடன் கச்சா எண்ணெய் கலப்பதால் எண்ணெய்ப்பசையுடன் காற்றுக்குமிழிகள் கலந்து நீரின் தன்மை (mousse) மாறிவிடும். இதனால் கடல் உயிரினங்களின் ரோமம், சிறகுகள் உடலோடு ஒட்டிக்கொள்ளும். இதன்காரணமாகவே உடல் வெப்பநிலைத் தாழ்வு ஏற்பட்டு, உடல் வெப்பநிலையைப் பராமரிக்க முடியாமல் கடல் உயிரினங்கள் மரித்துப்போகும்.

இது மட்டுமல்ல, கடல் வாழ் உயிரினங்கள் எண்ணெய் மாசை விழுங்குவதாலும் சுவாசிப்பதாலும் அல்சர், சிவப்பு ரத்த அணுக்கள் சிதைவு, சிறுநீரகம், கல்லீரல், நோய் தடுப்பாற்றல் போன்றவை பாதிக்கப்படலாம். அது மட்டுமல்லாமல் மீன்கள், கடல் ஆமைகளின் முட்டைகளையும் எண்ணெய்க் கசிவு மோசமாகப் பாதிக்கும்.

உணவுச் சங்கிலியில் இந்த எண்ணெய் மாசு நுழைந்து நம்மை வந்தடையும். இந்தப் பின்னணியில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட கடல் பகுதி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிடிக்கப்பட்ட மீன்களை மூன்று மாதங்களுக்குச் சாப்பிடாமல் இருப்பதே பாதுகாப்பானது.

எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியில் ஏராளமான தன்னார்வலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் பணியை முடித்த பிறகும் எண்ணெய்ப் படலம் அவர்களுடைய உடலில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. இதைத் தூய்மைப்படுத்தாவிட்டால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த மாசை எப்படி அகற்றுவது?

எண்ணெய்ப் படலத்தைத் தூய்மைப்படுத்துபவர்களின் சிறப்பு உடை, கருவிகள் போன்றவற்றில் எண்ணெய் மாசு ஊடுருவி இருக்கும். வெளிப்படையாகத் தெரியும் மாசுபாட்டை கண்டறிந்து அகற்றுவது எளிது. ஆனால், அவர்கள் பயன்படுத்தும் பொருளிலோ, உடலிலோ ஊடுருவி இருக்கும் மாசுபாட்டைக் கண்டறிந்து அகற்றுவது கடினம். இவற்றில் தாழ்நிலை ஹைட்ரோகார்பன் மாசுபாட்டை தண்ணீர் விட்டே கழுவலாம்.

மற்ற நான்-போலார் மாசுபொருட்களை அகற்றுவதற்கு ஆல்கஹால், கீட்டோன், ஈதர், அரோமாட்டிக், ஆல்கேன், மண்ணெண்ணெய் போன்றவற்றைக் கொண்டு தூய்மைப்படுத்தலாம். மாசுபாட்டை முறையாக அகற்றவில்லை என்றால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம்.

இவ்வளவு பெரிய எண்ணெய்க் கசிவைக் கையாளத் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவை (NDRF) அழைத்திருக்க வேண்டுமா?

இது போன்ற பேரிடர்களைக் கையாளத் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவை (NDRF) அழைத்திருக்கலாம். ஏனென்றால் நிலநடுக்கம், வெள்ளம், புயல், ஆழிப்பேரலை போன்ற இயற்கைப் பேரழிவுகள், மனிதர்கள் உருவாக்கிய பேரழிவுகளை அக்குழு சிறப்பாகக் கையாண்டிருக்கிறது. இருந்தபோதும், கடலில் எண்ணெய்க் கசிவைக் கடலோரக் காவல் படை ஏற்கெனவே கையாண்டிருக்கிறது என்பதால், அதை அழைத்திருக்கலாம்.

சரி இப்போது ஏராளமான எண்ணெய்க் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதை எப்படி அகற்றுவது? சேகரிக்கப்பட்ட எண்ணெயை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறதா?

எண்ணெய்க் கசிவை அகற்றுவதற்குப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. எண்ணெய்க் கசிவு கடற்கரையை அடைந்துவிட்டால், அதை இயற்கையாகவே மக்கச் செய்ய முயற்சிக்கலாம். இயற்கையான நைட்ரஜன், பாஸ்பரஸை அவற்றின் மீது தூவுவதன் மூலம் நுண்ணுயிரியை வளரச் செய்து, அவற்றின் பரவலை ஓரளவுக்குத் தடுக்கலாம். சேகரிக்கப்பட்ட எண்ணெய் மக்குவதை விரைவுபடுத்துவதற்கு நுண்ணுயிர்களைப் பயன்படுத்தலாம்.

இதற்குத் தி எனர்ஜி அண்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட் (டெரி) அமைப்பு, மத்திய அரசின் உயிரிதொழில்நுட்பத் துறை ஆதரவுடன் 'ஆயில்ஸாப்பர்' என்ற புதிய தொழில்நுட்பத்துக்குக் காப்புரிமை பெற்றிருக்கிறது. அத்துடன் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்துடன் இணைந்து நாடெங்கும் எண்ணெய்க் கசிவு, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் அகற்றுவதற்குப் பணிபுரிந்து வருகிறது.



இந்தியாவில் உள்ள எண்ணெய் வயல்களில் ஏற்படும் மாசை அகற்ற இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் குவைத் எண்ணெய் வயல் ஒன்றில் 4 சதுரக் கி.மீ. பரப்பில் ஏற்பட்ட மாசு இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘காரட்’ சாப்பிட்டால் கண்ணாடியைக் கழற்றிவிட முடியுமா?

மு. வீராசாமி

காரட் சாப்பிட்டால் கண்ணாடியைக் கழற்றி விடலாம் என்ற நம்பிக்கை நீண்டகாலமாக நிலவிவருகிறது. இன்றும் அது வலுவாக நம்பப்படுவதற்கு என்ன காரணம்?

ராயல் விமானப் படையும் காரட்டும்

ஆப்கானிஸ்தானிலிருந்து உலகின் மற்றப் பகுதிகளுக்குக் காரட் பரவியதாகக் கூறப்படுகிறது. ஆரம்பக் காலத்தில் ஐரோப்பாவில் பாம்புக் கடிக்கும், பால்வினை நோய்க்கும் மருந்தாகக் காரட்டைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போரின்போது ‘பிரிட்டிஷ் ராயல் விமானப் படையினர்’ இரவு நேரத்திலும் சிறப்பாகப் பணியாற்றியதாகவும், இதற்கு அவர்கள் காரட்டை அதிகமாகச் சாப்பிட்டு வந்ததுதான் காரணம் என்றும் ஒரு விமானி தெரிவித்தார். தங்கள் நாட்டு விமானப்படையினரின் ஆற்றலுக்கும் - குறிப்பாக இருட்டில்கூடத் தெளிவாகப் பார்த்து எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதற்கும் தினமும் அவர்கள் காரட்டை அதிகமாகச் சாப்பிட்டதே காரணம் என்றும் பிரிட்டிஷ் ராணுவம் அறிக்கை வெளியிட்டது. அதற்குப் பிறகு காரட் சாப்பிட்டால் பார்வை நன்றாக இருக்கும் என்ற கருத்து வலுவடைய ஆரம்பித்தது.

உண்மையிலேயே காரட் கண் ணுக்கு நல்லதா? கண்ணுக்குத் தேவையான எல்லாச் சத்தும் காரட்டில் இருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழலாம்.

வைட்டமின் ‘ஏ’

பார்வைத் திறனோடு நெருங்கிய தொடர்புகொண்டது வைட்டமின் ‘ஏ’. கீரை, காரட், பால், முட்டை, ஈரல், கறிவேப்பிலை, கொத்துமல்லி, பப்பாளி, மாம்பழம் போன்றவற்றில் வைட்டமின் ‘ஏ’ இருக்கிறது. சாப்பிடும்போது சக்கையென நினைத்துத் தூர எறிகிறோமே அந்தக் கறிவேப்பிலையிலும் கொத்துமல்லியிலும்தான் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம். வைட்டமின் ‘ஏ’ சத்துப் பற்றாக்குறையால் பார்வையிழப்பு ஏற்படுவதைத் தடுக்க, அது நிறைந்துள்ள உணவுகள் உதவும்.

40 ஆண்டுகளுக்கு முன் வைட்டமின் ‘ஏ’ சத்துப் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. சரியான ஊட்டச்சத்து இல்லாததாலும், போதிய அளவு வைட்டமின் ‘ஏ’ சத்து கிடைக்காததாலும் குழந்தைகளுக்கு நிரந்தரப் பார்வையிழப்பு ஏற்பட்டது. குழந்தைக்கு வயிற்றில் புழுத்தொற்று (Worm Infestation) இருந்தால், வைட்டமின் ‘ஏ’ சத்தை உடல் கிரகிக்க முடியாத நிலைமை இருந்தாலும் இப்பிரச்சினை ஏற்படும்.

அரசுத் திட்டம்

வைட்டமின் ‘ஏ’ சத்துப் பற்றாக் குறைக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் வைட்ட மின் ‘ஏ’ அதிகமுள்ள உணவை அதிகம் உட்கொண்டாலே நிரந்தரப் பார்வையிழப்பைத் தடுத்துவிடலாம்.

இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, ‘யுனிசெஃப்’ அமைப்புடன் இணைந்து வைட்டமின் ‘ஏ’ சத்துப் பற்றாக்குறையைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதத்தில் இருந்து, ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் ஐந்து வயதுவரை வைட்டமின் ‘ஏ’ சத்துத் திரவம் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் / துணைச் சுகாதார நிலையங்கள் மூலம் கொடுக்கப்பட்டது. இன்றும் இத்திட்டம் தொடர்கிறது. இதனால் வைட்டமின் ‘ஏ’ பற்றாக்குறையால் குழந்தைகளுக்குப் பார்வையிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

எனவே, வைட்டமின் ‘ஏ’ சத்து திரவத்தைத் தாண்டி காரட், கீரையைத் தொடர்ந்து உண்டுவந்தால், வைட்டமின் ‘ஏ’ பற்றாக்குறையால் பார்வையிழப்பு ஏற்படாது. அப்படி யானால் கண்ணாடிக்கும் வைட்டமின் ‘ஏ’ சத்துக்கும் தொடர்பில்லையா?

இரண்டும் வேறு வேறு

பார்வைக் குறைபாடு என்பது கண்ணின் உருவ அமைப்பில் ஏற்படக்கூடிய பிரச்சினையால் வருவது. வைட்டமின் ‘ஏ’ உள்ள காரட்டையோ, கீரையையோ சாப்பிடுவதன் மூலம் கண்ணின் உருவ அமைப்பைச் சரி செய்ய முடியாது. எனவே காரட், கீரை சாப்பிட்டாலும் உருவ அமைப்புப் பிரச்சினையால் ஏற்படும் பார்வைக் குறைபாட்டைத் தவிர்க்க முடியாது.அதுபோலவே, கண்ணாடி போட்டிருக்கும் ஒரு குழந்தை தொடர்ந்து காரட் சாப்பிடுவதன் மூலம் பார்வைக் குறைபாடு சரியாகிக் கண்ணாடியைக் கழற்றிவிடவும் முடியாது.

கட்டுரையாளர், மதுரை தேசிய கண் மருத்துவ சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com

NEWS TODAY 17.08.2026