Monday, February 13, 2017

ஏழு வயதுச் சிறுமியின் மரணமும் நம்மை உலுக்காதா?

சிந்தனைக் களம் » தலையங்கம்

அரியலூர், சிறுகடம்பூரைச் சேர்ந்த பதினாறு வயதுச் சிறுமி நந்தினி சிந்திய ரத்தக் கறை இன்னும் மறையாத நிலையில், அடுத்த அதிர்ச்சிகரமான பாலியல் கொலை ஒன்றைச் சந்தித்திருக்கிறது தமிழகம். சென்னை, மதநந்தபுரத்தைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுமி ஹாசினி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம், மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

சில நாட்களுக்கு முன்னர், குடியிருப்பில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஹாசினி காணாமல்போயிருக்கிறார். இதுதொடர்பாக விசாரித்துவந்த போலீஸார், அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் தஷ்வந்த்தை விசாரித்தபோது, நடந்து முடிந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அந்தச் சிறுமியைத் தனது வீட்டில் வைத்துப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதுடன், கொன்று, பின் உடலை தாம்பரம் புறவழிச் சாலையோரம் கொண்டுசென்று பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார் தஷ்வந்த். அவர் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்டபோது, அப்பகுதி மக்கள் அவரைச் சுற்றி வளைத்துத் தாக்க முயன்றிருப்பது, மக்களிடத்தில் இது தொடர்பில் உள்ள கொந்தளிப்பான மன வேதனையையும் வலியையும் ஆற்றாமையையும் உணர்த்தக் கூடியது. ஆனால், இந்தக் கொந்தளிப்பும் வலியும் கண நேரத்தில் மறந்துவிடக் கூடாதவை. ஒட்டுமொத்தச் சமூகத்திடமும் அவை தீயாகப் பரவ வேண்டும். இந்தியாவில் 2015-ல் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்ந்த குற்றங்களின் எண்ணிக்கை 94,172. இதில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 3,350. ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

பொதுவாக, பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு அவர்கள் அணியும் உடை, பழக்கவழக்கம் உள்ளிட்ட உளுத்துப்போன, அர்த்தமற்ற விஷயங்களையே காரணங்களாகச் சுட்டிக்காட்டி, தன்னுடைய குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள முற்படும் ஆணாதிக்கச் சிந்தனைச் சமூகம், இந்தத் தருணத்திலேனும் தன்னை ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள முற்பட வேண்டும். ஏழு வயதுக் குழந்தை கொடூரமாகப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்படுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறோம்?

வயது வித்தியாசமின்றிப் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் ஆணாதிக்கம், பெண்ணை ஒரு சகஜீவியாகக் கருதாத துச்சத்தனம், பாலியல் ஆதிக்க உணர்வு என்று பல விஷயங்கள் இருக்கின்றன. இவ்வளவு அசிங்கங்களிலிருந்தும் நாம் விடுதலை அடைய வேண்டியிருக்கிறது. இதில் முதல் மாற்றம் சமூகத்தை வழிநடத்தும் ஆட்சியாளர்கள் தரப்பிலிருந்து தேவைப்படுகிறது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். தமிழகக் காவல் துறை இப்படியான வழக்குகளைப் போகிறபோக்கில் கையாள்வது மிக மோசமான போக்கு. நந்தினி கொலை வழக்கிலேயே கடுமையான அழுத்தங்களுக்குப் பிறகே காவல் துறை தன் நடவடிக்கைகளைத் தொடங்கியது இங்கு குறிப்பிட வேண்டியது. சமூகம் சாதாரணமாகக் கடக்கும் ஒவ்வொரு குற்றமும் அடுத்து நூறு குற்றங்களுக்கான தோற்றுவாயாக அமைந்துவிடும்!

‘Make PG medical courses free of cost for better health care facilities’


By Express News Service  |   Published: 12th February 2017 02:09 AM  |  


CHENNAI: India ranks 112 in WHO ranking of health care systems in the world. “Above us, there is Bangladesh, Iran, Iraq and even Venezuela, where people don’t even have food to eat and sell their children for money.
Yet, we are so low,” said renowned cardiologist, Devi Shetty, founder and Chairman of Narayana Hrudalaya Health care chain.Shetty was speaking at a conclave conducted by the Association of Healthcare Providers (APHI), an organisation of private hospitals working towards improving healthcare and making it cheaper and more accessible to rural areas and those less privileged.

India needs 65 million surgeries per year, but only 26 million are conducted.The doctor said the main problem lay in the fact that MBBS doctors rarely go on to do their postgraduation and therefore fail to specialise in any particular field of medicine.
“If you don’t have a PG in this country, you cannot perform procedures like anaesthesia, cannot perform a caesarian or even an ultrasound, so in lots of rural hospitals, there might be a surgeon, but no anesthesiologist. MBBS students fall short of providing full care,” he said.

While USA has 20,000 seats for undergraduation, they have 40,000 seats for postgraduation because they encourage even experienced MBBS doctors to pursue specialisation.  In India, though 63,985 seats are available for undergraduate students but only a mere 14,500 seats for post graduation.

Shetty cited the example of Maharashtra’s College of Physicians and Surgeons that offers diploma courses, “The State made it mandatory for MBBS doctors to enrol themselves in the college. This one move has brought down deaths in Maharashtra by drastic numbers in just four years since even the rural hospitals became more vibrant,” Shetty said. 

Shetty firmly believes making post-graduate courses completely free will drastically improve the health care in the country, “In the rest of the world, post graduation in medicine is completely free. Here it costs crores, so students don’t opt for it,” he added. 

No V-C, vital appointments on hold at AUBy Ashmita Gupta  |  Express News Service  |   Published: 13th February 2017 01:48 AM  |  


CHENNAI: With the Vice-Chancellor’s post lying vacant in Anna University, many important appointments including heads of departments, directors of centres, dean of colleges have been put on hold and consequently the functioning of various departments and centres of the university  has been affected.
Recently, the Higher Education Department secretary too, who is one of the three members of convener committee, has gone on leave, making the situation only worse. 

A professor of the university, requesting anonymity, said all important appointments like that of directors of centres, deputy directors, additional directors, additional controllers, heads of departments have been put on hold. More than 10 such appointments should have been normally made by now. With the absence of a decision-maker, the appointments are only being delayed. 

Many post-holders have completed more than three years. “Usually the tenure of these posts ends after three years, after which the Vice Chancellor appoints a new person as per the seniority principle. With VC’s absence no new appointments have been made,” he said. 

Further, he said that as V-C is not there, the convener committee is not willing to take any such policy decisions. Currently with Higher Education Secretary on leave, the convener committee was not able to function properly.
“The Director of Technical Education who is also a member of the committee is out of station and a new person has been appointed. The third member who is a senior professor is also new in the committee. They can’t take any crucial decisions like that of appointments,”he said. 

 The heads of department appointments should be based on rotation, said S Chandramohan, secretary of AU Teacher’s Association.”Even in the presence of V-C, the principle of seniority was violated. One of the professors is holding the post of HOD in one department for the past nine years,” he said.
Now with V-C’s absence several others are continuing holding their post despite completing three years. The tenure of the head of the department of Electronic and Electrical Engineering comes to end this March. Preparations for filling the post  has to be done from now itself but nothing has been done so far,he said. 

Accident victim in Chennai alleges denial of treatment in government hospital


By Sathish M  |  Express News Service  |   Published: 13th February 2017 04:15 AM  |  

CHENNAI: A 27-year-old accident victim has claimed that the Chromepet Government Hospital had denied him treatment for not being able to produce a copy of the FIR to the hospital staff “My arm and leg were broken and my nose was bleeding. They refused to provide treatment without the FIR and so I was forced to turn to a private hospital nearby,” he said.

A construction worker, Kumaravel S, was on his way to the construction site at Anakaputhur from Kundrathur on January 31 when his bike collided with a lorry.

“I was lying on the road for half an hour in a pool of blood. No one came to help me,” he said.
Coincidentally, his friend Karthik, who happened to pass through the route, saw him lying on the road and immediately called for the 108 ambulance service and took him to the Chromepet Government Hospital, he added.

“They cleaned the wound and took an x-ray. A few minutes later, they told me they required a FIR for further treatment despite my repeated attempts to point out that the FIR was not needed in the case of an accident,” he said.

Following this, Kumaravel said he approached a private hospital in the vicinity for treatment.
His mother S Manjula (43) told Express, “I am a maid in a temple. My husband is no more. I have two children. I was looking for a  bride for my son. Until now I have spent around `2 lakh for my son’s treatment. All my savings are gone. If the government hospital had treated my son, why would I need to go to a private hospital ?”

When Express contacted the Chromepet Government Hospital, a senior doctor said, “We administered first aid to the patient concerned. For further treatment, we referred him to the RGGH.”

Although denying the patient’s allegation that hospital staff insisted on a FIR copy, the doctor added that an inquiry would be ordered into the allegation and necessary action would be initiated if necessary.

VS Suresh Souli, an advocate, who has specialised in Motor Vehicle Acts, told Express, “As Per Motor Vehicle Act 1988 section 134, unless it is practicable to do so on account of mob fury or any other reason beyond his control, take all reasonable steps to secure medical attention for the injured person, by conveying him to the nearest medical practitioner or hospital, and it shall be the duty of every registered medical practitioner or the doctor on the duty in the hospital immediately to attend to the injured person and render medical aid or treatment without waiting for any procedural formalities.”

Expressing his shock he said, “It is against the law to ask an accident victim for a copy of FIR. When the victim is severely injured, how can he get the copy?” 

அரசு பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை ஓய்வூதியதாரர் மருத்துவ செலவுக்கு காப்பீட்டு பணம் தர வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு.
காப்பீட்டு திட்ட அங்கீகார பட்டியலில் இடம்பெறாத தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஓய்வூதியரின் மருத்துவ செலவுக்கு காப்பீட்டு பணத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ஏ.முனியாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றினேன். 31.5.1996ல் ஓய்வு பெற்றேன். எனது பென்ஷன் பணத்திலிருந்து மாதம் ₹150 புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக பிடித்தம் செய்யப்படுகிறது. நடந்து சென்றபோது திடீெரன மயங்கி விழுந்தேன். நினைவிழந்து சிவகங்கை ரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ₹92,535க்கு மருத்துவ செலவு ஏற்பட்டது. இதை வழங்கக்கோரி விண்ணப்பித்தேன்.நான், சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையில், அங்கீகார பட்டியலில் இல்லையெனக்கூறி என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து மாநில அளவிலான குழுவிடம் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை கடந்த26.10.2016ல் நிராகரித்து நிதித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். அதை ரத்து செய்து, பணத்தை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்து பிறப்பித்தஉத்தரவு:காப்பீட்டு திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி ஊழியர்களுக்கு மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தரப்படுகிறது.

ஆனால், ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்குவதில்லை. காப்பீட்டு திட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் காட்சி பொருளாக இருக்கக்கூடாது. எனவே, மனுதாரரின் மருத்துவ செலவை வழங்க மறுத்த நிதித்துறை (பென்ஷன்) செயலர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கோரும் மருத்துவ செலவுக்கான பணத்தை ஒரு மாதத்திற்குள் வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Gmail Alert - நாளை முதல் இந்த ஃபைல்களை ஜி மெயில் மூலம் அனுப்ப முடியாது!



ஜி-மெயிலில் கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? நாளை முதல் ஒரு சில ஃபைல்களை உங்களால் ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என்று கூகுள் அறிவித்துள்ளது.
இந்த ஃபைல்கள் மட்டுமின்றி ஏற்கெனவே சில ஃபைல்களை ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜி-மெயில் தற்போது .js என்ற அமைப்பில் உள்ள ஃபைல்களை பிப்ரவரி 13ம் தேதி முதல் அனுப்ப முடியாது என தெரிவித்துள்ளது. இந்த ஃபைல்களை அனுப்ப முயற்சித்தால் அதனை அனுப்ப முடியாது என்ற தகவலையும், ஏன் இந்த மெயில் அனுப்ப இயலவில்லை என்ற செய்தியையும் உங்கள் ஜி-மெயிலுக்கு கூகுள் அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏன் அனுப்ப முடியாது?

இந்த ஃபைலை ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஜி-மெயிலில் இருக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காக எளிதில் வைரஸ்களை பரப்பக்கூடிய ஃபைல்களின் வரிசையில் இது இருப்பதால் இந்த வகையான ஃபைல்களை ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என அறிவித்துள்ளது கூகுள்.

இது மட்டுமின்றி சமீபத்தில் கூகுள் .ade, .adp, .bat, .chm, .cmd, .com, .cpl, .exe, .hta, .ins, .isp, .jar, .jse, .lib, .lnk, .mde, .msc, .msp, .mst, .pif, .scr, .sct, .shb, .sys, .vb, .vbe, .vbs, .vxd, .wsc, .wsf மற்றும் .wsh வகை ஃபைல்களையும் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த ஃபைல்களை எப்படி அனுப்பலாம்?

இந்த ஃபைல்களை ஒரு தனிப்பட்ட நபருடைய ஜி மெயில் கணக்கிற்கு தான் மெயில் மூலமாக அனுப்ப முடியாது என கூகுள் அறிவித்துள்ளது. ஆனால் ஒருவருக்கு இதே ஃபைல்களை கூகுள் ட்ரைவ் மற்றும் க்ளவுட் ஸ்டோரேஜ் மூலமாக அனுப்ப முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

அதனால் .js ஃபைல்கள் இருந்தால் அவற்றை இன்றைக்கே யாருக்காவது அனுப்புங்கள். இல்லையெனில் ட்ரைவ் மூலமாக அனுப்புங்கள்.

இது தவிர ஜி-மெயிலில் சில சுவாரஸ்யமான விஷயங்களும் உள்ளன.

1. உங்கள் மெயில் ஐடிக்கு யார் வேண்டுமானாலும் டாட் வைத்தோ அல்லது வைக்காமலோ அல்லது வேறு ஒரு இடத்தில் டாட் வைத்தோ அனுப்ப முடியும். இதில் எப்படி அனுப்பினாலும் உங்கள் மெயிலுக்கு மெயில் வரும் என்பது தான் ஜி மெயிலின் ட்ரிக்.

2. நீங்கள் அனுப்பிய மெயில் ஏதோ தவறுதலாக இருக்கிறது என்றால் அதனை திரும்ப பெறும் வசதியும் ஜி-மெயிலில் உள்ளது. இதற்கு ஒருவர் தனது ஜி-மெயில் செட்டிங்கில் உள்ள அன்டூ ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும்.

3. கூகுளின் பூமராங் எக்ஸ்டென்ஷன் மூலம் ஜி-மெயில்களை ஸ்கெட்யூல் செய்துகொள்ள முடியும்

4. Checker Plus for Gmail என்ற எக்ஸ்டென்ஷன் மூலம் ஜி-மெயில்களை திறக்காமலேயே படிக்க முடியும். சில சமயம் மாஸ் மெயில் அனுப்பும் நிறுவனங்கள் எத்தனை பேர் இந்த மெயிலை திறந்துள்ளார்கள் என்ற டேட்டாவையெல்லாம் எடுக்கும்.

5. உங்கள் ஜி-மெயில் ஓப்பன் செய்து வலது கை ஓரத்தில் இருக்கும் கமென்ட்டை கவனியுங்கள். கடைசியாக எப்போது உங்கள் கணக்கு பயன்படுத்தப்பட்டது என்ற விவரம் இருக்கும் அதன் மூலம் உங்கள் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்துகிறார்களா? என்பதையும் ஆராய முடியும்.

குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் ஆளுநர்!

By பழ. நெடுமாறன்  |   Published on : 13th February 2017 02:00 AM  |   
இந்தியாவின் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் காணாத அரசியல் குழப்பநிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆளுநராக இருந்த ரோசய்யா, பதவிக் காலம் முடிந்து கடந்த 2016 ஆகஸ்டு 30-ஆம் தேதி விலகிச் சென்றார். மராட்டிய மாநில ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் ஆகஸ்டு 31-ஆம் தேதி தமிழக ஆளுநர் பொறுப்பையும் தாற்காலிகமாக ஏற்றார்.
செப்டம்பர் 22-ஆம் தேதி முதல்வர் செயலலிதா உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். டிசம்பர் 5-ஆம் தேதி அவர் காலமாகிறார். முதல்வர் உடல் நலமுடன் இருந்தபோதே நிரந்தர ஆளுநர் தொடர்பாக அவருடன் பேசி நியமித்திருக்
கலாம்.
ஆனால், இந்த சூழ்நிலையை தந்திரமாகப் பயன்படுத்திக்கொண்டு கடந்த 5 மாத காலமாக தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநரை நியமிக்காமல் மத்திய அரசு காலம் கடத்தி வருகிறது. இதன் விளைவாக சட்டப்படி நடக்க வேண்டிய பல வேலைகள் தடைப்பட்டுக் கிடக்கின்றன.
தமிழ்நாட்டில் நான்கு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படுவது தடைபட்டுக் கிடக்கிறது. பல்கலைக்கழக ஆட்சிமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. காலியான பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
நிரந்தர ஆளுநர்தான் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்க முடியும். இதன் விளைவாக நான்கு பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் செயலற்றுக் கிடக்கிறது. தமிழக அரசிலும் பல்வேறு பணிகள் முடங்கிவிட்டன.
உச்சக் கட்டமாக குடியரசு நாளில்கூட தமிழகத் தலைநகரில் கொடியேற்றுவதற்கு ஆளுநர் இல்லை. அவர் மும்பையில் கொடியேற்ற வேண்டிய நிலை இருந்தது. எனவே தமிழகத்தில் கொடியேற்ற வேண்டிய நிலை உருவானது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பன்னீர்செல்வம் தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்புகிறார்.
ஆளுநரும் அதை ஏற்றுக்கொண்டு அடுத்த ஏற்பாடு செய்யப்படும் வரை தாற்காலிக முதலமைச்சராக பதவியில் தொடருமாறு சொல்லிவிட்டு மும்பையிலேயே தங்கியிருக்கிறார்.
பிப்ரவரி 5-ஆம் நாள் அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் 135 பேரும் - தாற்காலிக முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்பட - கையெழுத்திட்டு சசிகலாவை தலைவராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். முறைப்படி இதற்கான கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அவர் சசிகலாவை முதல்வராக பதவியேற்கும்படி கூறியிருக்க வேண்டும்.
ஆனால், அந்தக் கடிதத்தைப் பெறுவதற்குக்கூட ஆளுநர் தமிழ்நாட்டில் இல்லை. மும்பையில் இருந்து தில்லிக்கு பறந்து சென்றுவிடுகிறார். நான்கு நாட்கள் கழித்து பிப்ரவரி 9-ஆம் தேதி அவர் சென்னை திரும்புகிறார்.
தமிழகத்தின் ஆளுங்கட்சியில் முக்கியமான மாறுதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் உடனடியாகச் சென்னைக்குத் திரும்ப வேண்டிய ஆளுநர் திரும்பாமல் திட்டமிட்டே தாமதிக்கிறார்.
இந்த நான்கு நாள்கள் தாமதத்தின் விளைவாக தமிழக அரசியலில் குழப்பம் உருவானது. முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த பன்னீர்செல்வம் மன மாற்றம் அடைகிறார். தனக்கே பெரும்பான்மை இருப்பதாகக் கூறுகிறார்.
தமிழக அரசியலை முன்பு எப்போதுமில்லாத பரபரப்பு கவ்வுகிறது. பன்னீர்செல்வத்தின் மனமாற்றத்திற்கு பின்னணியில் யார் என்ற கேள்வி எழுகிறது. பலவிதமான செய்திகள் பரப்பப்படுகின்றன.
கட்சித் தலைவர்கள், ஆதரவாகவும், எதிராகவும் நிலையெடுக்கிறார்கள். பன்னீர்செல்வம், தான் நிர்பந்தத்திற்கு ஆளாகியதால் பதவி விலகல் கடிதம் கொடுத்ததாகவும் அதை திரும்பப் பெறப் போவதாகவும் கூறியுள்ளதை ஆளுநர் பரிசீலனை செய்வாரேயானால், சட்டப்படி அது செல்லாதது ஆகும்.
பதவி விலகல் கடிதத்தை கொடுத்த நேரத்திலோ அல்லது அக்கடிதத்தின் மீது ஆளுநர் முடிவெடுத்து ஆணைபிறப்பிப்பதற்கு முன்போ பன்னீர்செல்வம் இவ்வாறு கூறியிருந்தால் ஆளுநர் அதை பரிசீலிக்கலாம். ஆனால் அவரின் பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அவர் அதை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது. அதை ஏற்றுக்கொண்ட ஆளுநரும் திரும்பக் கொடுக்க முடியாது.
அத்தகைய முடிவெடுக்கும் அதிகாரமும் ஆளுநருக்குக் கிடையாது. மேலும் தாற்காலிக முதல்வரின் பதவிக்காலத்தை தான் விரும்பும் காலம் வரை நீட்டிக்கும் அதிகாரமும் ஆளுநருக்குக் கிடையாது.
"2016-ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த மக்கள் சசிகலாவிற்காக வாக்களிக்கவில்லை. கொல்லைப்புற வழியில் முதல்வர் பதவியில் அமர்வதற்கு சசிகலா முயலுகிறார்.
ஓராண்டு கழிவதற்குள் மூன்று முதலமைச்சர்களா' என்ற கேள்வியை எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் எழுப்பி இருக்கிறார். சனநாயக முறையில் மக்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். அக்கட்சியில் பெரும்பான்மை ஆதரவு பெறுபவர் முதலமைச்சர் ஆகிறார். இந்த அடிப்படை உண்மையைக்கூட ஸ்டாலின் போன்றவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
1967-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அண்ணா சட்டப்பேரவைக்கே போட்டியிடவில்லை. நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், தி.மு.க. அவரை தலைவராகத் தேர்ந்தெடுத்து முதலமைச்சராக்கியது.
அவரது மறைவிற்குப் பிறகு தாற்காலிக முதலமைச்சராக இரா. நெடுஞ்செழியன் பொறுப்பேற்றார். அவர் அந்தப் பதவியில் தொடர அனுமதிக்கப்படவில்லை. கட்சி மு. கருணாநிதியை தலைவராகத் தேர்ந்தெடுத்தது. எனவே அவர் முதலமைச்சர் பொறுப்பேற்றார்.
கருணாநிதி முதலமைச்சராக ஆவதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. அவர் கொல்லைப்புற வழியில் முதலமைச்சராக முயற்சிக்கிறார் என்று யாராவது கூறியிருந்தால் அது சனநாயக நடைமுறைகளை புரிந்துகொள்ளாத போக்கு ஆகும்.
நாடாளுமன்ற சனநாயகத்தில் மக்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கே வாக்களிக்கிறார்கள். கட்சியினர் கூடி தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அது அக்கட்சியினரின் சனநாயக உரிமையாகும். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அந்தத் தலைவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். அதுதான் நடைமுறை.
இதைப் புரிந்துகொள்ளாமல் குட்டையை குழப்பி மீன்பிடிக்க முயல்வது ஒருபோதும் வெற்றிபெறாது. பெரும்பான்மை உள்ள ஒரு கட்சியின் தலைவரை முதல்வர் பதவியேற்க அழைப்பதும் அவருக்கு பதவி ஏற்பு உறுதிமொழி செய்துவைப்பதும் ஆளுநரின் கடமையாகும். அத்துடன் அவரின் பணி முடிவடைந்துவிடுகிறது.
சட்டப்பேரவையில் தனக்குள்ள பெரும்பான்மையை அக்கட்சித் தலைவர் நிலைநிறுத்திக் காட்ட வேண்டும். அப்போது வாக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் படைத்தவர் பேரவைத் தலைவர் மட்டுமே. குரல் வாக்கெடுப்பா அல்லது கைகளைத் தூக்கி காட்டும் வாக்கெடுப்பா என்பதை பேரவைத் தலைவர் மட்டுமே முடிவு செய்ய முடியும். ஆளுநர் அதில் தலையிட
முடியாது.
இரகசிய வாக்கெடுப்பு என்பது குடியரசுத் தலைவர் தேர்தலின்போதும் நாடாளுமன்ற மேலவைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்போதும் மட்டுமே நடத்தப்படும். சட்டப்பேரவை விதிமுறைகள் இவற்றைத் தெளிவாகக் கூறுகின்றன.
தமிழகத்தில் நிலவும் நிலைமை குறித்து குடியரசுத் தலைவரிடம் ஆளுநர் ஆலோசனை பெறலாமே தவிர பிரதமரிடமோ, உள்துறை அமைச்சரிடமோ ஆலோசனை பெறக்கூடாது.
ஆனால், ஆளுநர் இந்திய அரசிற்கு இது தொடர்பாக தெரிவித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி உண்மையானால் அது அப்பட்டமான தவறாகும். அரசியல் குழப்பத்திற்குத் திட்டமிட்டே வித்திடுவது ஆகும்.
அரசியல் சட்டம் 163 பிரிவு (2)ன் கீழ் ஏதாவது ஒரு பிரச்னை குறித்து ஆளுநர் நிலைமைக்கேற்றபடி முடிவெடுக்க அதிகாரம் உண்டு. அவ்வாறு அவர் எடுக்கும் முடிவே இறுதியானது. அது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது என குறிப்பிடப்பட்டிருப்பதைப் பயன்படுத்தி சட்டப்பேரவையைக் கலைக்கவோ அல்லது செயல்படுவதைத் தாற்காலிகமாக நிறுத்திவைக்கவோ ஆளுநர் முடிவெடுப்பாரேயானால் தேன்கூட்டை கலைத்தவன் கதிபோல் ஆகிவிடும்.
தமிழ்நாட்டு மக்கள் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் பா.ச.க.வை அடியோடு புறக்கணித்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டு அரசியலைக் குழப்பிக் காலூன்றலாம் என பா.ச.க. தலைமை கருதுமானால் அதன் விளைவு மிக மோசமாக இருக்கும்.
ஆளுநர் முடிவெடுப்பதற்குத் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் குதிரைப் பேரத்தை ஊக்குவிக்கவே செய்யும். அரசியலில் நிலையற்ற தன்மையை உருவாக்கிவிடும். அரசு நிர்வாகம் முற்றிலுமாக சீர்குலைந்துவிடும். சட்டம் - ஒழுங்கு கெட்டுவிடும். இப்போக்கு அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும்.
காவிரி, முல்லைப்பெரியாறு, ஈழத்தமிழர் பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னை போன்ற முக்கியப் பிரச்னைகளில் தமிழகத்திற்குத் தொடர்ந்து அநீதி இழைத்து வரும் பா.ச.க. அரசு தமிழ்நாட்டின் அரசியல் நிலைத் தன்மையை சீர்குலைக்க முயலுமானால் தமிழக மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். கொதித்தெழுவார்கள்.
இதற்கு சல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டமே இரு சிறந்த சான்றாகும்.
கட்டுரையாளர்:
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.

NEWS TODAY 17.08.2026