Tuesday, February 14, 2017


'ஜெயலலிதா ஆக நினைத்து வளர்மதி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்!' சசிகலாவுக்கு தமிழக பெண்களின் சார்பாக ஒரு கடிதம்!




''தலைவரு இறந்தபோது... அம்மாவ என்ன பாடு படுத்துனாங்க? ஒரு விஷயம் முக்கியமா கவனிக்கணும். ஒரு பெண்ணு... பெண்ணு எப்படி கட்சியில வந்து வர்றது... அப்படீங்கிறத வந்து காமிச்சாங்க. இப்பயும் அதே தோரணதான். அன்னைக்கு எந்தக் கூட்டம் அம்மாவ எதிர்த்துச்சோ... அதே கூட்டம்தான் இன்னைக்கும் செய்யுது'' ஞாயிறு இரவு கூவத்தூரில் நீங்கள் பேசிய பேச்சு இது சசிகலா.

பொட்டு, பிளவுஸில் தொடங்கி உங்கள் பேச்சு வரை அனைத்திலும் உங்களை நீங்கள் ஜெயலலிதாவுக்கான மாற்றாக நிறுவத் துடிக்கிறீர்கள். 30 ஆண்டுகளாக தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ஆளுமைப் பெண் ஜெயலலிதாவுக்கு மாற்றாக, ஒன்றரை மாத அரசியல்வாதியான நீங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லிக் கேட்கிறீர்கள். 'முடியாது' என்பது தமிழகத்தின் பதில். குறிப்பாக, அரசியல் பேச்சுகளில் பெரும்பாலும் ஒதுங்கி இருக்கும் நாங்கள்கூட, இப்போது முழுநேரம் செய்தி சேனல்களை பார்த்தபடி இருக்கிறோம். 'சசிகலா வேண்டாம்' என்ற உறுதி எங்களுக்குள் இறங்கியிருக்கிறது. உபயம், நீங்களேதான் திருமிகு சசிகலா.

1989-ம் ஆண்டில் தமிழக சட்டசபையில், ஆட்சியில் இருந்த தி.மு.க-வினரால் அவைத் தலைவர் முன்னிலையிலேயே அவமானப்படுத்தப்பட்டார் ஜெயலலிதா. தன் கிழிந்த புடவையுடன் அவையைவிட்டு வெளியேறியபோது, இந்த அரசியல் அவருக்கு உட்சபட்ச கண்ணீரைத் தந்தது. பச்சாதாபம் தேடும் தருணத்திலும், 'கருணாநிதி முதல்வராக இருக்கும்வரை இந்த அவைக்கு நான் வரமாட்டேன்' என்ற அவரின் சூளுரையில் இருந்து, 'ஜெ.ஜெயலலிதாவாகிய நான்' என்று அவர் ஆறாவது முறை முதல்வராகப் பதவிப் பிரமாணம்செய்துகொண்டது வரை, தமிழக அரசியலில் மட்டுமல்ல, நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக இந்திய அரசியலில் இடம்பிடித்தது வரை, அவரின் ஆளுமை அண்ணாந்து பார்க்கக்கூடியது. எங்கள் அம்மா தலைமுறைப் பெண்களுக்கும், எங்களுக்கும், இப்போது எங்கள் பெண் பிள்ளைகளுக்கும், அரசியல் சார்பு தாண்டியும் அவரைப் பிடிக்க, வரலாற்றில் பல காரணங்களை விட்டுச் சென்றுள்ளார் ஜெயலலிதா. அவரின் இடத்தில் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்களே சசிகலா... உங்களைப் பற்றி இதுவரை நீங்கள் எங்களுக்குத் தந்துள்ள பிம்பம் என்ன தெரியுமா?

'ஜெயலலிதாவின் தோழி சசிகலா. குடும்பமாக போயஸ் கார்டன் இல்லத்துக்குள் நுழைந்தவர். 'வளர்ப்பு மகனின் ஆடம்பர திருமணம்' என்ற அவப்பெயரை அவருக்கு ஏற்படுத்தியவர். ஜெயலலிதாவின் செல்வாக்கை முன்னிறுத்தி பலரின் நிலங்களை அபகரித்தவர். அந்நிய செலாவணி வழக்கு, சாராய ஆலை உரிமையாளர் என குற்றப் பின்னணி கொண்டவர்.'

இவையெல்லாம் நேற்று. இந்தக் காலகட்டங்களில் எல்லாம், நாட்டில் உள்ள அறத்துக்கு எதிரான அடாவடிக்காரர்களில் ஓர் அடாவடிக்காரராகத்தான் உங்களை நாங்கள் பார்த்தோம். அதனால் ஏழோடு எட்டாக உங்களையும் கடந்தோம்.



ஆனால், ஜெயலலிதாவின் மரணத்தைச் சூழ்ந்த சந்தேகங்களுக்கு மையப்புள்ளியாக நீங்கள் ஆனபோது, உங்களை தமிழகம் தனித்து கவனிக்க ஆரம்பித்தது. அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சையில்(!) இருந்த நாட்களில், 'எங்க அம்மா முகத்தைக் காட்டுங்க' என்று மாரில் அடித்துக்கொண்டு அழுத அடிமட்ட அ.தி.மு.க பெண்கள் முதல், முகம் பார்க்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்ட ஆளுநர் வரை, பார்த்த காட்சிகள் அனைத்திலும் 'இவர் ஆபத்தானவர்' என்ற பிம்பத்தை நாங்கள் உங்கள் மேல் கொள்ளச் செய்தீர்கள். ஜெயலலிதா மறைந்தபோது, கட்சி சார்பு தாண்டியும் தமிழகமே அழுதபோதும், அவர் உடல் பூமிக்குள் இறக்கப்படும் தருணத்திலும்கூட சொட்டுக் கண்ணீர் சிந்தாமல் நின்றிருந்த 'உடன் பிறவா சகோதரி'யான உங்களின் மேல், 'இவரையா அந்த இரும்புப் பெண் நம்பினார்?' என்று ஆற்றாமை கொள்ளவைத்தீர்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க கட்சியில் அரங்கேறிய நாடக மாற்றங்களில், குறிப்பாக 'சின்னம்மா' வசனங்களில், எங்களை இன்னும் முகம் சுழிக்க வைத்தீர்கள் சசிகலா. கழுத்தை ஒட்டிய பிளவுஸ், கொண்டை, பொட்டு, மோதிரம், வாட்ச் என்று உங்களின் 'ஜெயலலிதாவாதல்' முயற்சியை, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுமானால் மாறுவேடப் போட்டியில் பரிசு வென்று வந்த குழந்தையை வரவேற்கும் குதூகலத்துடன் ரசித்திருக்கலாம். ஆனால் எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் வியந்த அந்த ஆளுமையுடன் உங்களை ஒப்பிட்டு கீழிறக்க வேண்டிய அவசியத்தை, நீங்களேதான் எங்களுக்கு ஏற்படுத்தினீர்கள்.

ஜெயலலிதாவின் உறவுகளை அவர் மரணத்திலும் தள்ளிநிற்கவைத்தது, அவரின் சொத்துகள் அனைத்தையும் அபகரித்தது, அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்றியது வரைகூட, படிக்கப் பிடிக்காத மனநிலையுடன்தான் உங்களைப் பற்றிய அந்தச் செய்திகளை நாங்கள் கடந்தோம். ஆனால் உங்களின் அடுத்த காய் நகர்வுகளின் விளைவாக, 'தமிழகத்தின் மூன்றாவது பெண் முதலமைச்சராகிறார் சசிகலா' என்று வந்த செய்தி, ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. 'கடைசியா அது நடக்கவே போகுதா?' என்று நிலைகொள்ளாமல் போனது எங்கள் மனம். அப்போது ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் 'என்னை மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கினார்கள்' என்றதும், அந்தத் திருப்பத்தை நாங்கள் திடுக்கிட்டு வரவேற்றோம். 'ஓ.பி.எஸ் வேண்டுமா என்பது அடுத்த பிரச்னை. ஆனால், சசிகலா வேண்டாம்' என்று எங்கள் மனநிலையை மாற்றுக்கருத்துக்கு இடமில்லாமல் உறுதிப்படுத்தியதும், தொடர்ந்த நாட்களில் தமிழகம் பார்த்த உங்களின் செயல்பாடுகளே.

தேர்தலில் நிற்காமல், மக்களைச் சந்திக்காமல், சட்டமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கி, ரிசார்ட்டில் அடைத்துவைத்து, 'ஓரளவுக்குதான் பொறுமை' என்று பேட்டி கொடுத்து... 'முதலமைச்சர் நாற்காலிக்காக எதுவும் செய்வேன்' என்கிற ரீதியிலான உங்களின் அணுகுமுறைகள் அனைத்தும் எங்களுக்கு அதிர்ச்சியாக, அச்சமாகக்கூட இருக்கிறது. கூவத்தூரில் எம்.ஏல்.ஏக்களை அவர்களின் வீட்டினரிடம்கூட பேச முடியாத கட்டுப்பாட்டில் அடைத்துவைத்துவிட்டு, அங்கிருந்து நீங்கள் அளித்த பேட்டியில், 'குழந்தைகளை வீட்டில்விட்டு வந்திருக்கும் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கு இருக்கிறார்கள். 'பரவாயில்லம்மா... கட்சிக்காக நாங்க அதை செய்றோம்மா' என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்' என்கிறீர்கள். இதை எப்படி உங்களால் மைக்கின் முன் குற்ற உணர்ச்சி இல்லாமல் பெருமையாகச் சொல்ல முடிகிறது? அதிகாரமிக்க அ.தி.மு.க குடும்பப் பெண்கள், குழந்தைகள் நலனிலேயே உங்கள் அக்கறை இது எனில், பாவப்பட்ட தமிழகப் பெண்கள், குழந்தைகள் நலன் குறித்த உங்கள் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டத்தையும் நீங்களே காட்டிவிட்டீர்கள்.

''ஆனா கட்சித் தொண்டன்... ஒவ்வொருத்தரும்... இதவந்து... வேடிக்க பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டாங்க." - கூவத்தூரில் நீங்கள் சொன்ன இந்த வார்த்தைகளில், காவல்துறை தனக்கான குறிப்பை எடுத்துக்கொள்கிறது. நாங்களும் ஒன்றை உணர்ந்தோம். 'ஜெயலலிதாவாதல்' என்ற உங்களின் முயற்சியில் உண்மையில் நீங்கள் இப்போது வளர்மதி வகையறாக்கள் ஆகிக்கொண்டிருக்கிறீர்கள்.

அனுதாபங்கள்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு! #OPSVsSasikala




தமிழகத்தில் அ.தி.மு.க தற்போது இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வில் நீடித்து வந்த மௌனத்தை, ஒரே இரவில் கலைத்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

கடந்த 7-ம் தேதி மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 40 நிமிட தியானத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா மீது அடுக்கடுக்கான புகார்களை எடுத்து வைத்தார். இதையடுத்து, கட்சிக்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்று கூறி, ஓ.பி.எஸ்ஸை கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கினார் சசிகலா.

அடுத்தடுத்து அரங்கேறிய அரசியல் நாடகங்களின் உச்சக்கட்டமாக அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மகாபலிபுரம் அருகேயுள்ள கூவத்தூரில் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள், ஓ.பி.எஸ் பக்கம் சென்றுவிடக்கூடாது என்ற அச்சத்தில், சசிகலா, தினமும் கூவத்தூர் சென்று நம்பிக்கையூட்டி வருகிறார். என்றாலும், 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரிக்கும் மனநிலையிலேயே உள்ளனர் என்று தெரிகிறது.



ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போல, மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வான சரவணன், கடந்த 5 நாட்களாக கூவத்தூர் விடுதியில் சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தங்கியிருந்தார். அவர், இன்று பிற்பகல் அங்கிருந்து வெளியேறி ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அவர் நமது செய்தியாளரிடம் கூறும்போது, "கட்சியும், ஆட்சியும் காப்பாற்றப்பட வேண்டும். ஒரு குடும்பத்தினரின் கையில் புரட்சித்தலைவி அம்மா ஏற்படுத்திய ஆட்சி சென்று விடக்கூடாது என்பதால், ஓ.பி.எஸ்ஸை ஆதரிக்க முன்வந்தேன்" என்று தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்கெனவே 11 எம்.பிக்கள் மற்றும் 7 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு அளித்திருப்பதுடன், வேறு சிலரும் ஓ.பி.எஸ். பக்கம் செல்லக்கூடும் என்பதால். சசிகலா தரப்பு மிகுந்த கலக்கத்தில் உள்ளது.

எம்.எல்.ஏ-வின் உறவினர் மரணத்துக்கு கூட நோ லீவ்..! இது சசிகலாவின் கெடுபிடி..!


திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளரும், செய்யாறு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ-வுமான துசி.கே.மோகன் அவர்களின் மாமா குப்புசாமி, நேற்று காலை இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க மருமகனான மோகனுக்கு தகவல் அனுப்ப வீட்டில் உள்ளவர்கள் முயற்சித்தனர். ஆனால், அ.தி.மு.க., எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் தங்கவைக்கப்பட்டிருக்கும் 'கோல்டன் பே' ரிசார்டில் ஜாமர்கள் பொருத்தப்பட்டிருப்பதால்,எம்.எல்.ஏ., மோகனை தொடர்புகொள்வதில் குடும்பத்தினருக்கு சிக்கல் இருந்தது.





பின், ஒருவழியாக தகவல் அனுப்பப்பட்டு, மதியம் 3 மணியில் இருப்பதுபோல் சொந்த ஊருக்குப்போனார், எம்.எல்.ஏ., மோகன். அங்கு அவருக்கு 40 நிமிடங்களுக்குமேல் இறுதிமரியாதை செலுத்த அனுமதி தரவில்லை சசிகலா தரப்பினர். இதனால் செம அப்செட்டில் இருக்கிறார்கள். எம்.எல்.ஏ. மோகனும், அவரது உறவுக்காரர்களும்.

கூவத்தூர் ரிசார்ட்டில் நள்ளிரவில் அதிகமான போலீஸார் குவிப்பு

சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட்டைச் சுற்றி அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கூவத்தூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக ரிசார்ட்டுக்கு வந்த சசிகலா நேற்று அங்கேயே தங்கினார். கூவத்துாரில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது, அப்பகுதி மக்களிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

The Supreme Court on Monday cancelled the admission of 634 students who got admission to the MBBS course in various medical colleges in Madhya Pradesh between 2008 and 2012 by illegal means.

Satya Prakash

Tribune News Service

New Delhi, February 13

The Supreme Court on Monday cancelled the admission of 634 students who got admission to the MBBS course in various medical colleges in Madhya Pradesh between 2008 and 2012 by illegal means.

These students had cleared the entrance tests for medical colleges conducted by the Madhya Pradesh Vyavasayik Pareeksha Mandal (Vyapam) or Professional Examination Board.

(Follow The Tribune on Facebook ; and Twitter @thetribunechd )

The order came from a three-judge bench headed by Chief Justice JS Khehar who refused to give any relief to the students in question.

Earlier, a two-judge bench had delivered a split verdict and the matter was referred to a larger bench.

Vyapam had cancelled the 634 admissions.

While Justice Chelameswar allowed them to complete their studies on the condition that they serve in the Army or rural areas for five years without salary, Justice Sapre wanted them to be barred.

It was due to the split verdict that the matter was referred to the CJI to constitute a three-judge bench.

The Vyapam scam has been making headlines as at least 34 people linked to it died mysteriously.

The Opposition Congress accused Chief Minister Shivraj Singh Chouhan and his wife of being involved in the scam.

The Vyapam scam was referred to the CBI in July 2015 on the orders of the top court.

Justice Chelameswar said it would not be prudent to let the students waste the knowledge they had acquired so far. He had also said that the students were not criminals as they were juveniles when the incident happened.

But Justice Sapre had said: “Once the cancellation of the examination results is upheld as being just, legal and proper, then its natural consequence must ensue.”

Vyapam is under probe for the alleged scam in college admission and recruitment scam involving politicians, bureaucrats and businessmen

Monday, February 13, 2017

கணவர் வழியில் சகோதரி பெற்ற வாரிசுரிமைக்கு சகோதரர் சொந்தம் கொண்டாட முடியாது: உச்ச நீதிமன்றம்


By DIN  |   Published on : 13th February 2017 04:18 PM  |  
SC

மணமான சகோதரி புகுந்த வீட்டு சொந்தங்கள் மூலம் பெற்ற வாரிசுரிமைக்கு, அவரது சகோதரர் சொந்தம் கொண்டாட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில், லலிதா என்பவரது மாமனார் கடந்த 1940-ஆம் ஆண்டு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். அவரது மறைவுக்குப் பின், அவரது வாரிசான லலிதாவின் கணவர் அந்த வீட்டின் வாடகைதாரர் ஆனார்.
சில ஆண்டுகளில் லலிதாவின் கணவரும் இறந்துவிடவே, அந்த வீட்டின் வாடகைதாரர் என்ற உரிமை லலிதாவுக்குக் கிடைத்தது.
இந்தச் நிலையில், லலிதா குடியிருக்கும் வீட்டை காலி செய்து தர உத்தரவிடுமாறு அந்த வீட்டின் உரிமையாளர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே லலிதாவும் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அந்த வீட்டில் வசித்து வந்த லலிதாவின் சகோதரர் துர்கா பிரசாத், வீட்டை காலி செய்ய மறுத்து வந்தார்.
அதையடுத்து, இதுதொடர்பாக உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் வீட்டு உரிமையாளர் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், லலிதாவுக்கு அடுத்தபடியாக அந்த வீட்டின் வாடகைதாரர் என்ற உரிமையை துர்கா பிரசாத் கோர முடியாது எனக் கூறி, வீட்டை காலி செய்யுமாறு அவருக்கு உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து துர்கா பிரசாத் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஆர். பானுமதி அடங்கிய அமர்வு, தீர்ப்பில் கூறியதாவது:
ஹிந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 15-இல், கணவர் மற்றும் மாமனார் மூலம் ஒரு பெண்ணுக்குக் கிடைத்த வாரிசுரிமை, அந்தப் பெண்ணின் கணவர் அல்லது மாமனாரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மட்டுமே சேர வேண்டும்.
எனினும், இந்த வழக்கில் மனுதாரர் (துர்கா பிரசாத்) சம்பந்தப்பட்ட பெண்ணின் (லலிதா) சகோதரர் என்பதால், குறிப்பிட்ட வீட்டின் வாடகைததாரர் என்ற உரிமையை அவரால் பெற முடியாது.
அந்த வீட்டில் தனது சகோதரியுடன் மனுதாரர் வசித்து வந்ததால் தனக்கு வாடகைதாரர் என்ற உரிமையைத் தரவேண்டும் என்று மனுதாரர் கோரியிருப்பதையும் ஏற்க முடியாது. மணமான சகோதரியுடன் ஒருவர் வசிக்க வேண்டிய அவசியமில்லை என்று தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விஸ்வரூபம் எடுக்கும் சென்னை பல்கலை. விவகாரம்: ஒரே ஒருவரின் ஒப்புதலில் ரூ. 5 கோடி விடுவிப்பு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் உரிய அனுமதியின்றி, விதிகளை மீறி ஆராய்ச்சி நிதி ரூ.5 கோடி வேறு பணிக்கு விடுவிக்கப்பட்ட பிரச்னை இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
துணைவேந்தராக இருந்த தாண்டவனின் பதவிக் காலம் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 17-இல் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு, அப்போதைய உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையில், அப்போதைய கல்லூரி கல்வி இயக்குநர் சேகர், பேராசிரியர் தங்கம் மேனன் ஆகிய 3 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
ரூ.5 கோடி விடுவிப்பு எதற்கு?
இந்த நிலையில், நானோ தொழில்நுட்பத் துறைக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் அளிக்கப்பட்ட ஆராய்ச்சி நிதியிலிருந்து ரூ. 5 கோடி நிதி கட்டட ஒப்பந்ததாரர் ஒருவருக்கு விடுவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் சில நாள்கள் கழித்தே தெரியவந்த நிலையில், நிதியை விடுவிப்பது விதிகளை மீறியது மட்டுமின்றி உரிய ஒப்புதலும் பெறவில்லை என்று ஆட்சிக் குழு உறுப்பினர்களும், பேராசிரியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் பல்கலைக்கழகப் பேராசிரியர் பேரவை சார்பில் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பேராசிரியர்களுக்கு மின்னஞ்சலில் பதிவாளர் டேவிட் ஜவஹர் கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அதில், "ஆராய்ச்சி நிதி ரூ. 5 கோடி விடுவிக்க 2014 ஜூலை 25, 2014 டிசம்பர் 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆட்சிக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிதியை விடுவிக்க பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் ஒருங்கிணைப்புக் குழுவில் இருவர் ஒப்புதல் அளித்துள்ளனர்' என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால், பதிவாளர் தெரிவித்திருக்கும் தகவல் பொய்யானவை என பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒப்புதல் பெறாமலேயே
விடுவிப்பு- பேராசிரியர்கள் புகார்
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஆராய்ச்சிக்கென ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடாது.
நானோ தொழில்நுட்பத் துறை சம்மதம் தெரிவிக்காத நிலையில், இவ்வளவு பெரியத் தொகையை விடுவிக்க ஆட்சிக் குழு ஒப்புதல் பெற வேண்டும். 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக் குழுவில் பெறப்பட்ட ஒப்புதலை வைத்துக்கொண்டு, 2016-இல் நிதியை விடுவிக்க முடியாது. மீண்டும் ஆட்சிக் குழுவில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டு, கட்டடக் குழுவின் ஒப்பதலும் பெறவேண்டும். இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
அதுமட்டுமின்றி, துணைவேந்தர் இல்லாமல் 3 பேர் ஒருங்கிணைப்புக் குழு பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வரும்போது, நிதியை விடுவிக்க இந்த 3 பேரின் ஒப்புதலும் பெறப்படவேண்டும்.
இந்த ரூ. 5 கோடி நிதியை விடுவிக்குமாறு 3.2.2016-இல் பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளருக்கு (நிதி-3) உத்தரவுக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றிருக்கும் 3 பேரின் அலுவலக முத்திரை (சீல்) வைக்கப்பட்டுள்ளபோதும், ஒருங்கிணைப்பாளரான உயர் கல்வித் துறை செயலர் ஆபூர்வா மட்டுமே அவருடைய முத்திரைக்கு மேல் கையெழுத்திட்டுள்ளார்.
மற்ற உறுப்பினர்களான சேகர், தங்கம் மேனன் இருவரும் 3-2-2016 அன்றைய தேதியில் கையெழுத்திடவில்லை.
எனவே, இது முழுக்க முழுக்க பல்கலைக்கழக விதிகளுக்கும், நடைமுறைகளுக்கும் எதிரானது என்றனர்.
உரிய நடவடிக்கை தேவை
"ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தங்கம் மேனன் எதிர்ப்பு தெரிவித்தே கையெழுத்திட மறுத்துவிட்டார். மேலும், பதிவாளர் அனுமதியளித்த உடனேயே பணம் விடுவிக்கப்பட்டுவிடும். எனவே, இதற்கு உறுப்பினர் சேகரும் ஒப்புதல் அளித்திருக்கிறார் என கூறப்படுவது பொய்யானத் தகவல். அது உண்மை என்றால், பிரச்னை எழுப்பப்படுவதன் காரணமாக பணம் விடுவிக்கப்பட்ட பின்னரே, அவரிடம் (சேகரிடம்) கையெழுத்து வாங்கப்பட்டிருக்கும். இதுதொடர்பாக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
வழக்கமான நடைமுறைதான்- பதிவாளர்
இதுகுறித்து பதிவாளர் டேவிட் ஜவஹர் கூறியது:
நிதியை விடுவிக்க, அப்போது ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளராக இருந்த அபூர்வா மட்டும் கையெழுத்திட்டு, அதற்கு நானும் ஒப்புதல் அளித்தது 3-2-2016 அன்றுதான். ஆனால், அந்தத் தொகைக்கான காசோலை விடுவிக்கப்பட்டது. 10-2-2016-ம் அதற்கு முன்னதாக உறுப்பினர் சேகரின் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. மற்றொரு உறுப்பினரின் ஒப்புதல்தான் பெறமுடியவில்லை.
இது புதிய நடைமுறையல்ல. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நடைமுறைதான்.
ஒரு துறையினுடைய பணத்தை, வேறு பணிகளுக்குப் பயன்படுத்துவதும், அவசரத் தேவையின் அடிப்படையில் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஒரு சிலரின் ஒப்புதல் இல்லாமல் திட்டத்துக்கு அனுமதியளிப்பதும் வழக்கமாக நடப்பதுதான். பேராசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியம்கூட, இதுபோல துறைகளுக்கு அளிக்கப்படும் ஆராய்ச்சி நிதி, திட்ட நிதிகளிலிருந்துதான் வழங்கப்படுகிறது.
எனவே, இது முறைகேடு அல்ல. இனி வேறு பணிகளுக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்துதான் யோசிக்க வேண்டும் என்றார் அவர்.
விசாரணை தேவை
சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
துணைவேந்தர் தாண்டவன் ஓய்வு பெற்ற பிறகு நானோ தொழில்நுட்பத் துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியிலிருந்து ரூ.5 கோடி முறைகேடாக எடுக்கப்பட்டு வேறு துறைகளின் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக பேராசிரியர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க துணைவேந்தர் இல்லை. இந்தப் பிரச்னையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தலையிட்டு, நிதிமுறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மேலும் புதிய துணைவேந்தரை இந்த மாத இறுதிக்குள் நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

NEWS TODAY 17.08.2026