Tuesday, February 14, 2017


Last updated : 10:44 (14/02/2017)

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட 3 பேரும் குற்றவாளி! உச்ச நீதிமன்றம் அதிரடி



சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

1991-1995 வரையிலான காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் பெயர்கள் சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணையை கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. அதன் அடிப்படையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா கடந்த 2015 செப்டம்பர் 27-ம் தேதி அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதாவுக்கு 100 கோடியே 1 லட்ச ரூபாயும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 10 கோடியே 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, கடந்த 2015 மே 11-ம் தேதி அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசும், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் ஆகியோர் முன்னிலையில் கடந்த 2015 பிப்ரவரி 23 முதல் இறுதி வாதம் நடைபெற்று வந்தது. கர்நாடக தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே மற்றுடம் அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே ஆகியோர் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, நீதிபதி பினாகி சந்திரகோஷ் அடங்கிய அமர்வில் ஆஜராகி, சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இதுவரை தீர்ப்பு வெளியிடப்படவில்லை. இந்த வழக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகும் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், ஒரு வாரம் பொறுத்திருங்கள் என்று அறிவித்திருந்தார். அதன்படி ஒரு வாரம் கழித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் இன்று தீர்ப்பளித்தனர்.

சசிகலா குற்றவாளி

DINAMALAR

புதுடில்லி: சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் மீதான தண்டனையை உச்சநீதிமன்றம், இன்று உறுதி செய்தது. பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன் மூலம், சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் சிறைக்கு செல்வது உறதியாகி உள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது, வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, 1996ல் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீதிபதி குன்ஹா, 2014 செப்., 27 ல் தீர்ப்பு அளித்தார். ஜெ.,க்கு 4 ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம்; மற்ற மூன்று பேருக்கு, 4 ஆண்டு சிறை தண்டனை, தலா, 10 கோடி ரூபாய் அபராதம் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. உடனே நான்கு பேரும், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 21 நாட்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தனர்.

 இந்த வழக்கில் ஜெ., உள்ளிட்ட நான்கு பேர் மூலம் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி நான்கு பேரையும் விடுவித்து, 2015 மே, 11ம் தேதி தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தீர்ப்பு அளிப்பதை, 2016 ஜூன், 7 ம் தேதி ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் இன்று, இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு அளித்தனர்.
SC verdict in DA case against Sasikala today; heavy security in TN

Security has been stepped up across Tamil Nadu as a precautionary measure ahead of the verdict in the disproportionate assets case likely to be announced at 10.30 am today.

Additional police has been deployed at the chief ministers Greenways Road residence and Raj Bhavan besides Koovathur resort where All India Anna Dravida Munnetra Kazhagam MLAs supporting party chief V K Sasikala are staying, police said.

Senior AIADMK leader M Thambidurai has reached the Golden Bay Resort to meet Sasikala, who is already present inside.

The fate of Sasikala, fighting a bitter power battle with interim Tamil Nadu Chief Minister O Panneerselvam after the demise of J Jayalithaa, is likely to be decided today as the Supreme Court may deliver the much-awaited verdict in the disproportionate assets case involving her as an accused.

Besides Jayalalithaa, against whom the proceedings would be abated due to her demise on December 5 last year, Sasikala, and the latter's relatives, V N Sudhakaran and Elavarasi, were also acquitted in the assets case by the Karnataka high court. -- Agencies

குறள் இனிது: பிரிக்கணும்.. தடுக்கணும்.. இழுக்கணும்..!

சோம.வீரப்பன்

நீங்க ஜியோ சிம் வாங்கியாச்சா? காசே போடாமல் குஷியாகப் பேசுகிறீர்களா? செலவே இல்லாத இணைய சேவையையும் அனுபவிக்கிறீர்களா? ஜாலிதான்! ஆனால் இது வெகுநாட்கள் தொட ராதே என்கிற கவலையும் இருக்குமே?

அது சரி. ரிலையன்ஸ் நிறுவனம் ஏன் இப்படி வாரி வழங்குகிறது என எண்ணமும் வருமே! இதுவும் ஒரு வியாபார தந்திரம் தானே? சற்றே சிந்திக்கணும்.விற்பனை பெருக முதல் படி என்ன? புதுசு புதுசா வாடிக்கையாளர்களைச் சேர்க்கணுமில்லையா? முதல்ல காசு வாங்காவிட்டாலும், பின்னாடி பார்த்துக்கலாம்ல?

ஜியோ இணைப்பு வாங்காதவர்கள் யாரும் கைபேசி இல்லாமல் இருப்பார்களா என்ன? அவர்களும் ஏதாவது சிம் வாங்கிப் பேசிக் கொண்டுதானே இருப்பார்கள்? அப்ப அவர்களை முதலில் அங்கிருந்து கழட்டிக்க வைக்கணுமில் லையா? அதற்கு எளிதான வழி காசு ஏதும் கேட்காமல் சிம் கொடுத்துப் பேச விடுவதுதானே? எந்த ஒரு விற்பனையிலும் இந்த அணுகுமுறை பலன் தருமல்லவா?

வாடிக்கையாளர்களை அதிகரிக்க மூன்று வழிகள் இருக்குங்க. ஒன்று, அவர்களை போட்டியாளர்களிடமிருந்து பிரித்து நம்மகிட்ட கொண்டு வந்துடணும்!

இரண்டாவது வழி முக்கியமானது. உங்களிடம் ஏற் கெனவே உள்ள வாடிக்கையாளர்களை இழந்து விடாமல் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையா பின்னே? உங்கள் போட்டியாளர்களும் உங்களைப் போலவே மற்ற வங்க மடியில கை வைக்க முயற்சிக்கலாம் இல்லையா? அதனால் தானேங்க ஏர்டெல், வோடபோன் போன்றவர்கள் ஜியோவிற்குப் பின் இப்ப திடீரென்று நிறைய சலுகைகளை அள்ளித் தருகிறார்கள்?

அண்ணே, ஒரு புதிய வாடிக்கையாளரை உருவாக்குவதற்கு, ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளரைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஆகும் செலவைப் போல ஐந்து மடங்கு வரை ஆகலாம் என ஆய்வுகள் சொல்கின்றனவே!

இல்லாததைத் தேடும் முன்பு இருப்பதை விட்டு விடக் கூடாதில்லையா? மூன்றாவது வழி, பலரும் செய்ய மறந்து விடுவது. ஆமாம், ஏற்கெனவே உங்களிடம் இருந்து விட்டு, உங்கள் போட்டியாளர்களிடம் சென்றவர்களை மீண்டும் உங்களிடமே வரவழைப்பது!

வங்கிகளில் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளைப் புரட்டிப் பார்த்து, அந்த வாடிக்கையாளர்களை மீண்டும் தமது சேவைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்வதுண்டே! புதிதாக வாடிக்கையாளரைத் தேடி அலைவதை விட, நமக்குத் தெரிந்தவரை, நம்மைத் தெரிந்தவரை ஈர்ப்பது தானே எளிது, நல்லது?

பகைவருக்குத் துணையானவரைப் பிரித்தலிலும், தம்மிடம் உள்ளவரை தம்மை விட்டுப் போகாமல் காத்தலிலும், பிரிந்தவரை மீண்டும் சேர்த்துக் கொள்வதிலும் வல்லவனே அமைச்சன் என்கிறார் வள்ளுவர்.

வாடிக்கையாளர்களை அதிகரிக்க முயலும் மேலாளர்களுக்கும் இது பொருந்தும்!

- somaiah.veerappan@gmail.com

பொன்னியின் செல்வன்: நாவலும், நாடக வடிவமும்




சிங்கப்பூரில் 2017 ஏப்ரல் மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ் மொழி விழாவின் ஒருபகுதியாக கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாடகம் முதல் முறையாக சர்வதேச அரங்கில், சிங்கப்பூர் Esplanade- இல் நடைபெற உள்ளது.

2014, 2015ஆம் ஆண்டுகளில் இந்தியாவில், தமிழகத்தில் 33 முறைகளுக்கு மேல் 'பொன்னியின் செல்வன்' நாடகத்தை நிகழ்த்திய S.S.இண்டர்நேஷனல் லைவ் இப்போது சிங்கப்பூரில் Arte Compass நிறுவனத்துடன் இணைந்து பொன்னியின் செல்வனை அரங்கேற்ற உள்ளனர்.

தமிழ் நாடக உலகில் தனக்கென ஒரு தனித்தன்மையுடன், உலகமெங்கும் பயணித்து புதிய நாடக வடிவை பறைசாற்றிக் கொண்டிருக்கும் Magic Lantern குழுவினர் பொன்னியின் செல்வன் நாவலை மிக அற்புதமான நாடக வடிவமாக வழங்கி கல்கியின் ரசிகர்களை மட்டுமல்லாமல், நாடக ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி உள்ளனர். இந்த Magic Lantern இன் திறமையான கலைஞர்களுடன், சிங்கப்பூரில் உள்ள திறமையான கலைஞர்களும் நாடகத்தில் பங்கேற்க உள்ளனர்.

இது குறித்து பொன்னியின் செல்வன் நாடக இயக்குனர் Magic Lantern பிரவீன் “தமிழ் மொழி மீது பற்றும், நேசமும் கொண்ட சிங்கப்பூர் கலைஞர்களையும் இந்த நாடகத்தில் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். எனவே இதற்கான கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி 2017 பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி சிங்கப்பூர் உமறுபுலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறவிருக்கின்றது. இந்தத் தேர்வில் சிங்கப்பூரின் சிறந்த கலைஞர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பொன்னியின் செல்வன் நாடகத்தில் பங்கேற்று தங்கள் திறனைக் காண்பிப்பார்கள் என்று தெரிவித்தார்.

பொன்னியின் செல்வன் நாவல் தமிழர்களின் வாழ்வோடு இணைந்திருக்கும் ஓர் உணர்வு என்ற அடிப்படையில் நாடகம் என்பதைத் தாண்டி பொன்னியின் செல்வன் தொடர்பான ஒரு நடிப்பு பயிற்சி பட்டறை, நாடக வரலாறு குறித்த கண்ணோட்டம் என சில முயற்சிகளை உமறுபுலவர் தமிழ் மொழி நிலையம் மற்றும் சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கம் இணைந்து பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி நடத்த உள்ளோம் என்கிறார் S.S.இண்டர்நேஷனல் லைவ் இயக்குனர் இளங்கோகுமணன்.

சிங்கப்பூருக்கு பொன்னியின் செல்வனை அழைத்து வர வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியில் தொடங்கியது எங்களது விருப்பம். இன்று, தமிழ் ஆர்வம் கொண்ட பல அறிஞர்கள், கலைஞர்கள் உறுதுணையுடன், தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளான். வளர்தமிழ் இயக்கம், உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம் என இன்னும் பல புரவலர்கள் பொன்னியின் செல்வனை சிறப்பாக ஆதரிக்கிறார்கள். தமிழ் நாடக ரசிகர்கள் மட்டுமல்ல. அனைவருமே ரசிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத் துணை வரிகளையும் ஏற்பாடு செய்யவிருக்கின்றோம். சிங்கப்பூர், பொன்னியின் செல்வனை இருகரம் நீட்டி வரவேற்கும் என நிச்சயமாய் நம்புகின்றோம் என்கிறார் Arte Compass அகிலா ஐயங்கார் அவர்கள்.

கதைச் சுருக்கம்:

960களில் தஞ்சையை, மன்னன் சுந்தர சோழன் ஆண்டு வந்த போது, அவரின் மகன்கள், ஆதித்ய கரிகாலன் காஞ்சியிலும், அருள் மொழிவர்மன் இலங்கையிலும், மகள் குந்தவை பழையாறையிலும் இருந்து வந்த காலம் அது.

வீர நாராயண ஏரிக்கரை, ஆடி பதினெட்டு கொண்டாட்டங்களில் மூழ்கி கிடந்த போது, ஆதித்ய கரிகாலன் அனுப்பிய இரண்டு செய்திகளுடன் நகரம் நுழைகிறான் வீர இளைஞன் வந்தியத்தேவன். அவன் கொண்டுவந்த இரண்டு செய்திகளில் ஒன்று மன்னன் சுந்தர சோழனுக்கு, மற்றொன்று இளவரசி குந்தவைக்கு. இந்தப் பயணத்தின் போதுதான் சூட்சமமான. நுண்ணறிவு கொண்ட வீர வைஷ்ணவர் ஆழ்வார்க்கடியான் நம்பியைச் சந்திக்கிறான் வந்தியத்தேவன்.

கம்பீரமும், பிரம்மாண்டமும் நிரம்பிய அரண்மனைக்குள் சூதும், வஞ்சகமும் கூடவே நிரம்பியிருக்கிறது. பெரிய பழவேட்டரையர் தனது அளப்பறிய வீரத்துடன், சற்று சூதும் சேர்த்து மண்ணின் மகனான கரிகாலனுக்கு பதில், உறவுக்காரனான மதுராந்தக சோழனுக்கு முடிசூட்ட ரகசியமாய்த் திட்டமிடுகிறார்.

மற்றொரு புறம் அழகும், ஆபத்தும் ஒருங்கே நிரம்பிய நந்தினி, தங்கள் அரசன் வீரபாண்டியனைக் கொன்றதற்காக சோழ சாம்ராஜ்யத்தை வேரறுக்கக் காத்திருக்கும் ரவிதாஸன் தலைமையிலான ஆபத்துதவிகளுடன் சேர்ந்து கரிகாலனை வீழ்த்தத் திட்டம் தீட்டுகின்றாள்.

வந்தியத்தேவன் வழிப்பயணம் ஆபத்து நிறைந்தது என்றால் கூடவே அழகும் நிரம்பியது. அந்த பயணத்தில்தான் இளவரசி குந்தவையைச் சந்திக்கிறான். அவனிடம் மனதை பறிகொடுத்த குந்தவை கூடவே ஒரு கடமையும் கொடுக்கிறாள். குந்தவையின் சகோதரன் அருள்மொழிவர்மனை இலங்கையிலிருந்து மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரும் பொறுப்பை வந்தியதேவன் திறம்பட முடிகின்றான்.

கடம்பூர் மாளிகைக்குத் திரும்பிய கரிகாலன் கால ஒட்டத்தில் தனது பழைய காதலி இப்போது தன் பாட்டனின் மனைவியாகியிருப்பதை அறிகிறான்.

ஒரு புறம் பழைய காதல் துயரம், மறுபுறம் சூழும் சதி. என்னவாயிற்று ஆதித்ய கரிகாலனுக்கு? இலங்கையிலிருந்து நாடு திரும்பிய அருள்மொழிவர்மன் - 'பொன்னியின் செல்வன் மேற்கொண்ட அரசியல் முடிவு என்ன?

பல கேள்விகளுக்கு விடையளித்து, காலம் கடந்த காவியமாய் திகழ்கிறது 'பொன்னியின் செல்வன்’ நாவலும், நாடக வடிவமும்.

அம்பாசிடரை வாங்கிய பியூஜியோ


இந்திய கார் சந்தையில் அம்பாசிடர் காருக்கென்று தனி இடம் உணடு. சில பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டின் பிரதமரும் குடியரசுத் தலைவரும் பயணித்தது அம்பாசிடர் காரில்தான். மூன்று ஆண்டுகளுக்கு முன் கார் உற்பத்தியை சி.கே. பிர்லா குழுமத்தின் அங்கமான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் நிறுத்திவிட்டது இருப்பினும் அம்பாசிடர் என்ற பிராண்டை அந்நிறுவனம் தன்னகத்தே வைத்திருந்தது. 1958-ம் ஆண்டு முதல் அம்பாசிடர் கார் உற்பத்தி செய்யப்பட்டது. புதிய பிராண்டுகளின் வரவு உள்ளிட்ட பல காரணங்களால் அம்பாசிடர் காரின் விற்பனை சரிந்தது. இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு கார் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

தற்போது அம்பாசிடர் பிராண்டை பிரெஞ்சு நிறுவனமான பியூஜியோ வாங்கியுள்ளது. பிராண்டு பெயர் மட்டும் ரூ.80 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அம்பாசிடர் பிராண்டு பெயர் மற்றும் டிரேட் மார்க் ஆகியவற்றையும் பியூஜியோ நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த விற்பனை மூலம் கிடைக்கும் தொகையில் நிறுவனத்தின் கடன் சுமை மற்றும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு ஈடு செய்யப்படும் என்று பிர்லா குழுமம் தெரிவித்துள்ளது.

1960 மற்றும் 1970-களில் அம்பாசிடர் கார் நகர்ப்புற மற்றும் கிராமப் பகுதிகளில் பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே இருக்கும் வாகனமாக இருந்தது. ஏறக் குறைய 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சாலைகளில் கோலோச்சிய அம்பாசிடர் கார், மாறிவரும் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.

நவீன வடிவமைப்பில், மேம்பட்ட தொழில்நுட்பத்தோடு புதிய ரக வாகனங் கள் வந்தபோது, பழைய பாணியிலேயே கார்களைத் தயாரித்தது அம்பாசிடர் நிறுவனம். இதுவும் கார் தயாரிப்பு நிறுத்தப்பட்டதற்கு முக்கியக் காரணமாகும். ஆண்டுக்கு 24 ஆயிரம் கார்கள் வரை விற்பனையான அம்பாசிடர் 2014-ம் ஆண்டில் மொத்தமே 2,400 கார்கள்தான் விற்பனையானது. இதைத் தொடர்ந்து அதன் உற்பத்தியை நிறுத்த பிர்லா குழுமம் முடிவு செய்தது.

இப்போது அம்பாசிடர் பிராண்டை வாங்கியுள்ள பியூஜியோ நிறுவனம் அதே பெயரில் இந்தியச் சந்தையில் காரைத் தயாரிக்கப் போகிறதா என்ற விவரத்தை வெளியிடவில்லை.

அம்பாசிடர் கார் தயாரித்து வந்த உத்தர்பாரா தொழிற்சாலைதான் ஆசிய பிராந்தியத்தில் மிகவும் பழமையான ஆலையாகும். இந்த ஆலை 1942-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

1990களில் பியூஜியோ தயாரிப்புகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன. பியூஜியோ 309 கார்கள் பிஏஎல் நிறுவனத்தில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கார் விற் பனை நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு இந்தியச் சந்தையில் 2018-ம் நுழையத் திட்டமிட்டுள்ளதாக பியூஜியோ நிறு வனம் அறிவித்தது. இதற்காக சென் னையை அடுத்த திருவள்ளூரில் உள்ள ஆலையில் காரைத் தயாரிக்க சிகே பிர்லா குழுமத்துடன் ஒப்பந்தம் செய்தது. திருவள்ளூரில் உள்ள ஆலையில் மிட்சு பிஷி கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலை ஆண்டுக்கு 12 ஆயிரம் கார்களைத் தயாரிக்கிறது.

அம்பாசிடர் பிராண்ட் மீண்டும் இந்தியச் சாலையில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது பியூஜியோ.

Pending civil suit, no reason to quash related criminal case, says High Court

 Observing that an element of civil dispute would always be there in every other criminal case registered on charges of criminal breach of trust and cheating in connection with a transaction of movable or immovable property, the Madras High Court Bench here has held that a criminal case cannot be quashed just because a civil suit is pending before a jurisdictional court in connection with the same dispute.


Justice B. Gokuldas said: “If mere pendency of a civil suit is made a ground for quashing the criminal proceedings, the unscrupulous litigants, apprehending criminal action against them, would be encouraged to frustrate the course of justice and law by filing suits with respect to the documents intended to be used against them after the initiation of criminal proceedings or in anticipation of such proceedings...
“Civil proceedings, as distinguished from the criminal action, have to be adjudicated and concluded by adopting separate yardsticks. The onus of proving the allegations beyond reasonable doubt, in a criminal case, is not applicable in the civil proceedings which can be decided merely on the basis of the probabilities with respect to the acts complained of.”
The order was passed while dismissing a petition filed by A.S. Anwardeen of Dindigul in 2009 to quash a private complaint lodged against him by his brother-in-law for allegedly misappropriating around Rs. 1 crore due to the latter’s wife. The complainant had accused the petitioner of selling a land belonging to his wife for Rs. 65.93 lakh besides misappropriating Rs. 25.54 lakh earned through family business. The petitioner had claimed that the dispute between him and the complainant was a purely civil in nature and no cognisable offence had been made out to initiate criminal proceedings. He also pointed out that Dindigul District Crime Branch police too had not entertained a complaint lodged by his brother-in-law before the institution of the private complaint before a Judicial Magistrate in Dindigul.
Disagreeing with the petitioner’s submissions, the judge said: “In all cases of breach of trust and cheating, in the whole transaction, there is generally some element of civil nature. However, in this case, the allegations were regarding the criminal breach of trust on the basis of power of attorney and acquiring gains on the basis of such power of attorney. The proceedings could not be quashed only because the first respondent had filed a civil suit with respect to the aforesaid power of attorney.
“In a criminal court the allegations made in the complaint have to be established independently... Had the complainant failed to prove the allegations made by him in the complaint, the petitioner was entitled to discharge or acquittal but not otherwise.”

NEWS TODAY 17.08.2026