Thursday, March 2, 2017


மார்ச் 31க்குள் ஆதார் இணைப்பு : எல்லா வங்கி கணக்குகளுக்கும் நெட் பேங்கிங் வசதி கட்டாயம் !!

வங்கிகளில் எல்லா கணக்குகளிலும் நெட் பேங்கிங் வசதி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 வாபஸ் பெற்ற பிறகு கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை சமாளிக்கவும், கருப்பு பணம்

உருவாவதை தடுக்கவும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டியது. இந்த முயற்சியில் ‘பீம் ஆப்’ என ஒரு ஆப்ஸ் உருவாக்கப்பட்டது. அதே போல், பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், வங்கிகளுக்கு மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘அனைத்து வங்கி கணக்குகளிலும் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும். அதே போல், எல்லா கணக்குகளுக்கும் கட்டாயமாக நெட்பேங்கிங் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்’’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘இந்த நடவடிக்கையானது டிஜிட்டல் பரிவர்த்தனையை மேலும் அதிகரிக்கச் செய்யும். அத்துடன் பணபரிமாற்றங்கள் விரைவாக நடக்கும். ஆன்லைன் பரிமாற்றத்திற்கு ஏராளமான புதிய வாடிக்கையாளர்கள் உருவாவதற்கும் வழி ஏற்படும்’’ என்று தெரிவித்தார். வங்கி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது வங்கிகளில் செயல்படும் கணக்குகளில் 35 சதவீத கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளது. அவற்றை ஆன்லைன் சேவைக்கு மாற்றுவதில் சிக்கல் உள்ளது. எனவே, ஆதார் இணைப்பு வேகப்படுத்தப்படுகிறது’’ என்றனர்.

ஜெயலலிதா அபராதம் செலுத்த வேண்டுமா? வேண்டாமா?
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தால் முதல் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபரதாமும் விதிக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டபோது ஜெயலலிதா உயிரோடு இல்லை. எனவே அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டது. அதேபோல் ஜெயலலிதா செலுத்த வேண்டிய 100 கோடி ரூபாய்

அபராதமும் செலுத்த வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. தீர்ப்பு வெளியான அதே தினத்தில் நாம் நமது மின்னம்பலம் இதழில் இது குறித்து மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.

ஆனால் இந்த 100 கோடி ரூபாய் அபராத விஷயத்தில் இன்றுவரை பயங்கர குழப்பம் நீடிக்கிறது. இன்று வரை பல செய்தி ஊடங்கள் ஜெயலலிதாவின் சொத்துக்களை முடக்கி அந்த அபராதம் பறிமுதல் செய்யப்படும் என்னும் விதமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஒரு படி மேலே போய் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், “நான் கடன் வாங்கி அத்தை செலுத்த வேண்டிய 100 கோடி அபராதத்தை நான் செலுத்துவேன்” என்று கூறினார். இந்நிலையில் தந்தி தொலைக்காட்சிக்காக அதன் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே தீபக்கை தொடர்பு கொண்டு, “ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த வேண்டியதில்லை என்பதுதான் தீர்ப்பு. ஆனால் நீங்களோ கடன் வாங்கியாவது அந்த அபராதத்தை செலுத்துவேன் என்று கூறிவருகின்றீர்களே என்ன விஷயம்?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு தீபக்,“நீங்கள் கூறுவது உண்மையென்றால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. குற்றமற்ற எங்கள் அத்தையை நீங்கள் அனைவரும் சேர்ந்து குற்றவாளியாக்கி தண்டனைக்கு ஆளாக்கிவிட்டீர்கள். ஆகவே அவர் சொத்தை முடக்கி அபராத்தை பறிமுதல் செய்வது என் அத்தை ஜெயலலிதாவிற்கு அவமானம். அதனால் அப்படி கூறினேன்” என்றார்.

 மேலும் அவரிடம், “ஜெயலலிதா செலுத்த வேண்டிய அபராதத்தை நீங்கள் எப்படி செலுத்துவீர்கள்?” என்ற கேள்விக்கு, “அத்தையின் போயஸ் தோட்டம் உள்ளிட்ட ஆறு விதமான சொத்துக்களுக்கு. நானும், தீபாவும் மட்டுமே வாரிசு. எனவே அந்த சொத்துகளை கொண்டு அபராதத்தை செலுத்துவேன். அதற்கு ஆறு மாத கால அவகாசம் எனக்கு வேண்டும்” என்று தீபக் கூறினார். இந்நிலையில் இந்த விஷயத்தை தந்தி தொலைக்காட்சி மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜியிடம் கூறி கருத்துக் கேட்டனர். “முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதா இறந்துவிட்டதால் அபராதத் தொகையை செலுத்த வேண்டியதில்லை. அதையும் மீறி ஒருவர் அந்த 100 கோடி ரூபாயை செலுத்துகிறேன் என்றால் நல்ல விஷயம்தான். அரசின் கஜானா நிறையும். அப்படி அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தால் கால அவகாசம் கிடையாது. உச்ச நீதிமன்றம் கால அவகாசம் எதுவும் கொடுக்கவில்லை. உடனே அபராதத்தை செலுத்த வேண்டும்” என்று கூறினார். இதே பிரச்னையை இந்த வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லோர்தாவிடம் முன் வைத்த போது, “முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையும், அபராதமும் ரத்தாகிறது. அதனால் ஏற்கெனவே முடக்கப்பட்ட அவருடைய சொத்துகள் எதுவும் பறிமுதல் செய்யப்பட மாட்டாது. ஜெயலலிதாவிற்காக யாரும் அபராதம் செலுத்தத் தேவையில்லை” என்று கூறினார்.

http://www.sstaweb.in/2017/03/blog-post_94.html

தனியார் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்தாலும் கட்டணம்

By DIN  |   Published on : 02nd March 2017 05:23 AM 
மாதத்துக்கு 4 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தாலோ அல்லது பணத்தை எடுத்தாலோ குறைந்தப்பட்சம் ரூ.150-ஐ கட்டணமாக தனியார் வங்கிகள் வசூலிக்கத் தொடங்கியுள்ளன.
இதுதொடர்பாக ஹெச்.டி.எஃப்.சி. வங்கி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சேமிப்புக் கணக்கு மற்றும் ஊதியக் கணக்குகளுக்கு இந்த கட்டணம் வசூலிப்பு பொருந்தும். சொந்த வங்கிக்குள்ளேயே பிறரது கணக்கு அனுப்பப்படும் பணத்தின் உச்சவரம்பு ரூ.25 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மிகவும் குறைந்தபட்ச இருப்புத் தொகையுடைய சாதாரண சேமிப்பு கணக்குகளுக்கு மாதத்துக்கு 4 முறை இலவசமாக பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். பணத்தை டெபாசிட் செய்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது என்று அந்த அறிவிப்பில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி தெரிவித்துள்ளது.
இதேபோல், ஐசிஐசிஐ, ஆக்சிஸ் ஆகிய தனியார் வங்கிகளும் 4 முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலும், திரும்ப எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன.
ஐசிஐசிஐ வங்கியைப் பொறுத்தமட்டில், நவம்பர் மாதம் 8-ஆம் தேதிக்கு முன்பு அமலில் இருந்த கட்டண வசூலிப்பு நடைமுறை பின்பற்றப்படுகிறது. தேவைப்பட்டால், கட்டணம் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஸ் வங்கியைப் பொறுத்தமட்டில், முதல் 5 ரொக்க பரிவர்த்தனைகள் அல்லது ரூ.10 லட்சத்தை ரொக்கமாக டெபாசிட் செய்தல் அல்லது திருப்பி எடுத்தல் இலவசமாகும். அதன்பிறகு ஆயிரம் ரூபாய்க்கு ரூ. 5 அல்லது ரூ.150-ல், எந்தத் தொகை அதிகமாக உள்ளதோ, அந்தத் தொகை பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறை வங்கிகளும் இந்த நடைமுறையை பின்பற்றத் தொடங்கியுள்ளனவா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து பொதுத் துறை வங்கி மூத்த அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அரசிடம் இருந்து இதுதொடர்பாக எந்த உத்தரவும் வரவில்லை என்று பதிலளித்தார்.

ஏற்க முடியவில்லை!

By ஆசிரியர்  |   Published on : 02nd March 2017 01:49 AM  | 
நீதிமன்றத் தீர்ப்புகள் விமர்சனத்திற்கும் விவாதத்திற்கும் அப்பாற்பட்டவை அல்ல. விமர்சிக்க வைக்கும் தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
1997-இல் தெற்கு தில்லியில் அமைந்த ’உப்ஹார்' திரையரங்கத் தீவிபத்தையும், அதில் புகைக்குள் சிக்கி மூச்சுத் திணறி மரண மடைந்த 59 பார்வையாளர்களையும் நாம் மறந்துவிட முடியாது. இந்த விபத்துத் தொடர்பான வழக்கு 20 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு இப்போதுதான் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு வந்திருக்கிறது. திரையரங்க உரிமையாளர்களின் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு, தண்டனை எதிர்பாராத அளவுக்குக் குறைக்கப்பட்டிருக்கிறது.
புகை மூட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறியதுதான் திரையரங்கில் ’பார்டர்' திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் 59 பேர் மரணமடையக் காரணம். மேலும் பல நூறு பேர் மிகக் கடுமையான நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகிப் பல மாதங்கள் சிரமப்பட்டார்கள். விபத்துக்குக் காரணம் திரையரங்க உரிமையாளர்களான அன்சல் சகோதரர்களின் கவனக்குறைவும், திரையரங்கில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளோ, வெளியேறும் வசதிகளோ செய்யாமல் இருந்ததும்தான் என்பதை விசாரணை உறுதிப்படுத்தி இருக்கிறது.
’உப்ஹார்' திரையரங்கம் 1989-லும் இதேபோலத் தீவிபத்துக்கு உள்ளாகியது. அதைத் தொடர்ந்து அன்சல் சகோதரர்களின் நிர்வாகம் அதிகரித்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச்செய்ய முற்பட்டதா என்றால் இல்லை. போதுமான தீயணைக்கும் கருவிகள்கூட ’உப்ஹார்' திரையரங்கில் இருக்கவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்த்திருக்க வேண்டிய தில்லி பெருநகராட்சி அலுவலர்கள் தங்கள் கடமையைச் செய்யவில்லை என்பதும், அவர்கள் மீது சட்டம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் ஏற்றுக்கொள்ள முடியாத குமுறல்.
1997-இல் ’உப்ஹார்' திரையரங்கில் சிறிதாகத் தீப்பிடித்தவுடன், திரையரங்க ஊழியர்கள் தாங்களே தீயை அணைக்க முற்பட்டபோது கடுமையாகப் புகைய ஆரம்பித்துவிட்டது. அந்தப் புகையை குளிரூட்டும் கருவிகள் (ஏ.சி.) உறிஞ்சி திரையரங்கு முழுவதும் பரவவிட்டு விட்டன. போதுமான கதவுகள் இல்லாததாலும், உடனடியாகக் கதவுகள் திறக்கப்படாததாலும், திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களைப் புகைக்கூண்டில் அடைத்துவிட்ட நிலைமை உருவானது.
தீயணைப்புப் படையினருக்குத் தெரிவிக்க முற்படாமல் ஊழியர்களே தீயை அணைக்கப் போராடியது நிலைமையை மேலும் மோசமாக்கியது. தில்லி தீயணைப்புப் படைக்கு விவரம் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் விரைந்து வந்தார்களா என்றால் அதுவும் இல்லை.
இதுதான் தில்லி ’உப்ஹார்' திரையரங்கில் நிகழ்ந்த தீவிபத்தின் பின்னணி. விபத்தைத் தொடர்ந்து உரிமையாளர்களான அன்சல் சகோதரர்கள் என்று பரவலாக தில்லியில் அறியப்படும் பெரும் பணக்காரர்களான கோபால் அன்சலும், சுஷில் அன்சலும் கைது செய்யப்பட்டனர். பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டனர். வழக்குத் தொடரப்பட்டது. அவசர சிகிச்சை மையம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும், மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் ரூ.30 கோடியை அன்சல் சகோதரர்கள் உடனடி நிவாரணமாக வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.
ஆரம்பம் முதலே, மிகவும் திறமை வாய்ந்த வழக்குரைஞர்களை நியமித்துக் கீழமை நீதிமன்றங்களிலிருந்து, தொடர்ந்து தங்களுக்கு அதிக பாதிப்பில்லாத தீர்ப்புகளைப் பெறுவதில் அன்சல் சகோதரர்கள் கவனம் செலுத்தி வந்தனர். இன்னொருபுறம், தனது இரண்டு குழந்தைகளை ’உப்ஹார்' தீவிபத்தில் பலிகொடுத்த நீலம் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் தலைமையில், விபத்தில் உயிரிழந்தோர் சார்பாக நியாயத்துக்கான போராட்டமும் தொடர்ந்து நடத்தப்பட்டது. இப்போது கடைசியாக உச்சநீதிமன்றத்தில் மூன்று பேர் கொண்ட அமர்வின் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
1997-இல் 59 பேரைப் பலிகொண்ட ’உப்ஹார்' திரையரங்கத் தீவிபத்து வழக்கில் அன்சல் சகோதரர்களுக்கு தலா ஓர் ஆண்டு சிறை தண்டனை என்கிற தீர்ப்புடன் நின்றிருந்தால்கூட பரவாயில்லை. ஏற்கெனவே நான்கு மாதங்களை சிறையில் கழித்துவிட்ட கோபால் அன்சல், மீதமுள்ள எட்டு மாதங்களை சிறையில் கழித்தால் போதும் என்றும், அவரது சகோதரர் சுஷில் அன்சலுக்கு 77 வயதாகி விட்டதால், வயோதிகம் கருதி அவரது சிறைத்தண்டனையை தள்ளுபடி செய்வதாகவும் தீர்ப்பு வழங்கி இருக்கிறது உச்சநீதிமன்றம்.
அவர்கள் இருவரையும் இரண்டாண்டுகள் சிறை தண்டனைக்கு உட்படுத்த முகாந்திரம் இருப்பதாகவும் அவர்களது வயோதிகம் கருதி தண்டனையை ஓர் ஆண்டாகக் குறைத்திருப்பதாகவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருப்பது, பாதிக்கப்பட்டவர்களை நோகடிக்கும் வார்த்தைகள். எதிர்பார்த்தது போலவே, சிறை தண்டனையை அனுபவிக்க சரணடைவதற்கு நான்கு வார அவகாசம் வழங்கப்பட்ட கோபால் அன்சல், தனது உடல்நிலையையும் வயோதிகத்தையும் கருதித் தனது சகோதரரைப் போலவே சிறை தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரும் மனு வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அவருக்கும் விலக்கு அளிக்கப்பட்டால் வியப்படைவதற்கில்லை.
குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டவர்களுக்கு வயோதிகம் காரணமாக விலக்கு அளிக்கப்படுவது என்பதை ஏற்க முடியவில்லை. இதுவே முன்னுதாரணமாகி, குற்றவாளிகள் வழக்குரைஞர்களின் துணையோடு தண்டனையிலிருந்து தப்புவதற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழிகோலி இருக்கிறது.

எல்லாரும் நல்லவரே

By பாறப்புறத் இராதாகிருஷ்ணன்  |   Published on : 02nd March 2017 01:47 AM
இப்போதெல்லாம் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை அறிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான செயலாக உள்ளது. நல்லவர் போல் நடிப்பவர் நல்லவரும் அல்லர். கெட்டவர் போல் பேர் கெட்டவர் கெட்டவரும் அல்லர்.
ஒரு குழந்தை பிறக்கும்போது, நல்ல மனத்துடனும், தூய சிந்தனையுடனும், உண்மை, நேர்மை, ஒழுக்கம் எனும் நன்னடத்தைகளை அணிகலன்களாகக் கொண்டுதான் பிறக்கிறது. ஆனால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும் குழந்தைகள், வீட்டில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வளர்ப்பிலும், பள்ளியில் ஆசிரியர்களின் போதனைகளிலும், வெளியில் சமுதாயத்தின் அரவணைப்பிலும் வளர்ந்து நல்லவனாகவோ, கெட்டவனாகவோ மாறி சமுதாயத்திற்கு நல்லதையோ, கெட்டதையோ செய்கிறார்கள்.
இந்த உலகத்தில் நாம் நுழையும் போது நல்லவராகத் தான் வருகிறோம். அடிப்படை சூழலில் அனைவரும் நல்லவர்களாக இருந்தாலும், சமுதாயச் சூழலால் தீயவர்களாக மாறி, கெட்டவர் என்ற முத்திரையுடன் வெளியேறுகிறோம்.
நாம் நல்லவராக இருந்தால் அனைவரும் நல்லவராகத் தெரிகிறார்கள். நாம் கெட்டவராக இருந்தால் அனைவரும் கெட்டவராகவே தெரிகிறார்கள். ஒருவர் முக அழகுடனும், மிடுக்குடன் உடை அணிந்திருந்தாலோ அவரை நல்லவர் என்றோ, மற்றொருவர் கரடு, முரடமான முகத்துடன் விகாரமாக அழுக்கான உடை அணிந்திருந்தால் அவரை கெட்டவர் என்றோ முடிவுக்கு வந்து விட முடியாது.
நல்லதும், கெட்டதும் கலந்தது தான் மனித குணம். ரோஜா பூவிலும் முட்கள் இருக்கும், கல்லுக்குள்ளும் ஈரமிருக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
கிருஷ்ணரிடம் அடியவர் ஒருவர் வந்தார். அவர், கிருஷ்ணரை வணங்கி, பரந்தாமா, இந்த உலகில் நல்லவர்கள் உள்ளார்களா கெட்டவர்கள் உள்ளார்களா என்று கேட்டார். நான் சொல்வதைவிட நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாமே என்று கூறிய கிருஷ்ணர், அந்த அடியவரை அழைத்துக் கொண்டு அஸ்தினாபுரத்திற்குச் சென்றார்.
அவர்கள் இருவரும் முதலில் தருமனிடம் சென்றனர். கிருஷ்ணன் தருமனிடம், எனக்கு கெட்டவன் ஒருவர் தேவை, எங்கே இருந்தாலும் கண்டுபிடித்து அழைத்து வா என்றார். நீண்ட நேரம் கழித்து வந்த தருமன், இந்த நாட்டில் எல்லோரும் நல்லவர்களாகவே உள்ளனர். கெட்டவர்கள் யாருமே இல்லை. கெட்டவன் ஒருவனையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.
அதன் பிறகு துரியோதனனை அழைத்த கிருஷ்ணர், அஸ்தினாபுரத்தில் உள்ள எல்லோருமே நல்லவர்கள், கெட்டவர் ஒருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றான் தருமன், நீ போய் ஒரு நல்லவரை அழைத்து வா என்றார். வெகு நேரத்திற்குப் பிறகு திரும்பிய துரியோதனன், இந்த நகரத்தில் எல்லோருமே தீயவர்களாக உள்ளனர், நல்லவர் ஒருவனையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றான்.
தன்னுடன் வந்த அடியாரிடம், நீ கேட்ட கேள்விக்கு விடை கிடைத்து விட்டதா என்று கேட்டார் கிருஷ்ணர். நாம் நல்லவர்களாக இருந்தால், இந்த உலகத்தில் உள்ள எல்லோரும் நல்லவர்களாகத் தெரிவார்கள். நாம் கெட்டவர்களாக இருந்தால் எல்லோரும் கெட்டவர்களாகத் தெரிவார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன் என்றார் அந்த அடியார். பார்க்கும் பார்வையில் தான் எல்லாம் அடங்கியிருக்கிறது.
இவ்வுலகம் ஒரு கண்ணாடி போன்றது. நாம் கோபப்பட்டால் பதிலுக்கு கோபம் கிடைக்கும். அன்பு செலுத்தினால் அன்பு கிடைக்கும். ஒருத்தரையொருத்தர் மதிக்கும் பண்பு வந்து விட்டால் பிரச்னை இல்லை.
பெருமாளின் தசாவதாரங்களில் ஒன்றான ஏழாவது அவதாரமான ராமர் அவதாரம், மனித குலத்தின் மாண்பினையும், மானுடம் வெல்லும் என்ற உயரிய தத்துவத்தையும் எடுத்துரைப்பதாகவும் உள்ளது.
இதில், வில்லனாக சித்தரிக்கப்படும் ராவணன் திருநீறு அணிந்த சிறந்த சிவபக்தன், யாராலும் வெல்ல முடியாது என வரத்தை பிரம்மனிடமிருந்து பெற்ற சிறந்த வீரன், வழிபாடுகளில் அக்கறை உள்ளவன், வேத வித்தகன், இசைகள் கற்றவன், கயிலை மலையையே அசைக்கப் பார்த்தவன், வேதங்கள் கற்றவன். அவனை இலங்கேஸ்வரன், என்று, நல்லவன் என்று கூறுபவரும் உளர்.
ஒருவருக்கு நல்லவராக இருப்பவர், மற்றவருக்கு கெட்டவராக இருப்பார். அதாவது, அவர் உதவி தேவைப்படும் ஒருவருக்கு சாதகமான பணியைச் செய்தால் அவர் நல்லவர்.
எதிர்த்தாலோ, மறுத்தாலோ அவர் கெட்டவர். இது தான் சமுதாயத்தின் கண்ணோட்டம். வாழ்க்கையில் மனிதனுக்கு பல சந்தர்ப்பங்கள் வரும். அது நல்லதாகவும் இருக்கும், கெட்டதாகவும் இருக்கும்.
ஒருவருக்கு நல்ல சந்தர்ப்பம் வரும் போது அதை நல்ல வழியில் பயன்படுத்தினால் நல்லவராக இருப்பார். கெட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தினால், அவர் கெட்டவராகத் தெரிவார். ஒருவர் நல்லவர் என்பதை அவரின் பேச்சை வைத்தோ, செயலை வைத்தோ, முக பாவனைகளை வைத்தோ கூறக் கூடாது. கெட்ட சந்தர்ப்பங்கள் தான் அவரை கெட்டவராக்கி சமுதாயத்தின் முன்னே தலை குனிய வைக்கிறது.
’என்னை பொருத்தவரை எல்லோரும் நல்லவரே. நான் யாரிடமும் கெட்டதனத்தை பார்ப்பதில்லை. ஏனெனில், கெட்டத் தன்மை என்பது ஒரு நிழல் போன்றது. மேலும், அது ஒரு தனி மனிதனின் உண்மை தன்மை ஆகாது. கெடுல் உண்டாக்கும் செயல்களை அவன் செய்திருக்கலாம். ஆனால், அது அவனது இருப்பையே கெடுத்திருக்காது.
ஒரு செயல், இரண்டு செயல், மூன்று செயல் ஏன் நூறு செயல் கூட கெட்டதை செய்திருக்கலாம். ஆனால், அவனது இருப்பு எப்போதும் தூய்மையானதாகவே இருக்கிறது' என்கிறார் ஓஷோ.
யார் நல்லவர்கள்? அவர்கள் அமிழ்தமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்ண மாட்டார்கள், காரணம் இல்லாமல் கோபப்பட மாட்டார்கள். தீயச் செயலைச் செய்ய அஞ்சுவார்கள்.
வாழ்க்கையில் நடைபெறுகின்ற ஓரிரு நிகழ்வுகளை வைத்து ஒருவரை நல்லவரா, கெட்டவரா என எடை போடுவது தவறான முடிவாகத்தான் முடியும். காலம் தான் ஒவ்வொருவரின் செயல்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தோலுரித்துக் காட்டக் கூடியது. யாராலும், எப்போதுமே நல்லவராகவோ, கெட்டவராகவோ இருக்க முடியாது. சூழ்நிலைகளே அவற்றைத் தீர்மானிக்கின்றன, அதுவரை எல்லாரும் நல்லவரே.

IRCTC launches package to Thailand


The Indian Railway Catering and Tourism Corporation Ltd. (IRCTC), known for internet ticketing and domestic tourism, has announced an international holiday package in continuation of its travel and tourism promotional activity.

An IRCTC release has stated that it has launched an exclusive international package to Bangkok and Pattaya titled “Thailand Delights” this summer and the duration is for four days and five nights. The date of departure is April 18 and the cost is Rs. 38,550 per person on a twin-sharing basis, the release added.

In tune with the IRCTC tours, which are known for budget holiday, the package includes air tickets, accommodation, all meals, sightseeing and transfers, tour guide, travel insurance, and all taxes.

Reservations for the package has already commenced at IRCTC counters and also online through the official website www.irctctourism.com. For details, contact the tourism facilitation centre at the Mysuru railway station (0821-2426001, 9741421486), Bengaluru railway station (080-22960013, 9741429437) or IRCTC regional office at Rajajinagar, Bengaluru (080-22960014, 9686575201/02/03), the release added.

×

Mar 02 2017 : The Times of India (Chennai)
Expired cough syrup leaves 2-year-old dead

Mandya:
TIMES NEWS NETWORK

A two-year-old boy died after his mother erroneously administered a dose of expired cough syrup in the district's KR Pete taluk on Wednesday morning.

Police said Manasa allegedly took the decision to administer oral drops to her son without medical advice. Sources said the syrup was long past its expiry date, and she allegedly picked the bottle when the boy's cough was persistent. Within minutes, the boy , Dikshit, lost consciousness. Frightened parents rushed the child to taluk hospital where the only duty doctor was away conducting postmortem on a farmer, who committed suicide hours earlier.

Immediately , the parents took the child to a private nursing home where doctors allegedly refused to treat the boy saying he was brought dead. Controlling their grief, the parents brought their boy back to the taluk government hospital. By then, the doctor, Ravi, was back at work. Sources said Dr Ravi conducted a series of tests, including electrocardiogram, to ascertain whether child was alive. The results proved otherwise.

The grief-stricken parents said if the doctor was present at the hospital and treated the child during their first visit, their child would have been alive. They accused the doctor of medical negligence.

Denying the allegation, Dr Ravi said he was busy with another emergency and conducted all possible tests to revive the baby . District health officer Dr Mohan also rejected the family's allegation.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...