Wednesday, March 8, 2017



ஆசிய பசிபிக் நாடுகளில் அதிக அளவு லஞ்சம் கொடுக்கும் நாடுகளில் முதலிடத்தை இந்தியா பெற்றுள்ளது.
புதுடெல்லி

ஆசிய பசிபிக் நாடுகளில் அதிக அளவு லஞ்சம் கொடுக்கும் நாடுகளில் முதலிடத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவில் 3க்கு 2 பேர் டீ சாப்பிட வைத்துக்கொள் அல்லது  பிறவடிவங்களில் பொது சேவைகளை பெற லஞ்சம் கொடுப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது.

இந்த் கணக்கெடுப்பை சர்வதேச வெளிப்படைத்தன்மை சர்வதேச  ஊழ எதிர்ப்பு குழுக்கள் நடத்தியது. இதில் 69 சதவீதம் பேர்  லஞ்சம் வழங்குவதாக தெரிவித்து உள்ளனர்.தொடர்ந்து வியட்னால் 65 சதவீதம் பேரும், பாகிஸ்தானில் 40 சதவீதம் பேரும், சீனாவில் குறைந்த அளவாக 26 சதவீதம் பேரும் லஞ்சம் வழங்குவதாக தெரிவித்து உள்ளனர்.ஜப்பானில்  மிக குறைந்த அளவாக 0.2 சதவீதத்தினர் மட்டுமே லஞ்சம்  வழங்குவதாக தெரிவித்து உள்ளனர்.  தென் கொரியாவில்  3 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர்.

கடந்த முறை 41 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதாக தெரிவித்து 7 வது இடத்தில் இந்தியா இருந்தது. தற்போது பாகிஸ்தான்,ஆஸ்திரேலியா,ஜப்பான், மியான்மர், இலங்கை நாடுகளை விட அதிகரித்து விட்டது. 

ஆசிய பசிபிக் 16 நாடுகளில் 20 ஆயிரம் பேரிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது.

பொது சேவைகளில் அதிக அளவு லஞ்சம் போலீஸ் துறையில் வாங்கபட்டதாக 36 சதவீதம் ஏழைகள் தெரிவித்து உள்ளனர்.அதிக அளவு பணம் லஞ்சம் வாங்குவது  வருவாய்துறையில் என தெரியவருகிறது.

போலீஸ் உள்பட பொது சேவை நிறுவனங்களுக்கு மக்கள் பணமாகவோ அல்லது பரிசு பொருளாகவோ அல்லது அவர்களுக்கு பிடித்த வகையிலோ கொடுத்து உள்ளனர்.

 நீதிபதிகள் அல்லது நீதிமன்ற அதிகாரிகள், ஆசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் ஆவணங்கள் பெறும் அலுவலகங்களில் இந்த லஞ்சம் கொடுக்கபட்டு உள்ளது. என ஆய்வில் கூறபட்டு உள்ளது

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் ‘வை–பை’ வசதி ரெயில்வே பொதுமேலாளர் தொடங்கி வைத்தார்
செங்கல்பட்டு,
தென்னக ரெயில்வே பொதுமேலாளர் வஷிஷ்ட ஜோரி செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே ஆய்வு பணியில் ஈடுபட்டார். பின்னர் ரெயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை, இருப்புபாதை வசதியில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்த அவர் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த ‘வை–பை’ வசதியை தொடங்கிவைத்தார். பின்னர் 2 குடியிருப்பு பகுதிகளையும் திறந்துவைத்தார்.
இதையடுத்து அவர் கூறியதாவது:–
ராட்டிணக்கிணறு அருகே உள்ள சுரங்கப்பாதை அமைக்கும் பணி தண்ணீர் வசதியில்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த பணி துரிதமாக நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பாலாற்றில் இருந்து குடிநீர் கொண்டு வந்து அந்த தண்ணீரிலேயே ரெயில்களை கழுவுவதும் கழிப்பிடத்திற்கு பயன்படுத்துவது குறித்தும் பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. அதனை தடுக்கும் பொருட்டு அருகில் உள்ள குளவாய் ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து அந்த தண்ணீரை கொண்டு இது போன்ற பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மார்ச் 08, 03:00 AM
தலையங்கம்
ஆகாய தாமரையை அகற்றும் போராட்டம்

தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளில் தாமிரபரணி ஆறு ஒன்றுதான் தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகும் ஆறு. எப்போதும் வற்றாத ஜீவநதியாக அதாவது, கொஞ்சம் தண்ணீராவது ஓடிக்கொண்டிருக்கும் ஆறுதான் தாமிரபரணி. நெல்லைக்கு அருகிலுள்ள ‘சிப்காட்’ வளாகத்தில் அமைந்துள்ள பல தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்துதான் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில், ‘பெப்சி, கோ–கோ கோலா கம்பெனிக்கு மட்டும் தினமும் 24 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.37.50 காசு என்ற விகிதத்தில் வழங்கப்படுவதை குறிப்பிட்டு, சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் 2 பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், இந்த பொதுநல வழக்குகள் பொதுநலத்துக்காக தொடரப்படவில்லை. இதில் ஒருமனுதாரர் பல ஆண்டுகளாக இந்த நிறுவனங்களின் வழக்குகளை நடத்திக்கொண்டிருந்தார். இப்போது அங்கிருந்து பணிநிறுத்தம் செய்யப்பட்டதால், அந்த கோபத்தில் பழிதீர்க்க இந்த வழக்குகளை தொடர்ந்துள்ளார் என்று இந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறியதால், அப்படி இந்த 2 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இதை எதிர்த்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் போராட்டம் தீவிரமாக நடந்துவருகிறது. பல்வேறு வகையான போராட்டங்களை எல்லோரும் நடத்திவந்தாலும், இயற்கை வள பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற சமூகஆர்வலர் அமைப்பை நடத்தியவர்கள் போராட்டம், எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்லாமல், பெரும் ஆதரவையும் தந்துள்ளது. முதலில் ‘பெப்சி, கோ–கோ கோலா கம்பெனிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஆற்றின் கரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். வண்ணாரப்பேட்டை அருகே தாமிரபரணி ஆற்றின் கரையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்குப்பிறகு, இந்த சமூக ஆர்வலர்கள் ஆற்றுக்குள் இறங்கி அங்கு படர்ந்திருந்த ஆகாய தாமரையை அகற்றி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தப்போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார்கள். அரசாங்கமும், அதிகாரிகளும் செய்யவேண்டிய வேலையை, போராட்டம் நடத்தியவர்கள் செய்தது அனைவரையும் பெரிய ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதுபோன்று ஆக்கப்பூர்வமான போராட்டங்கள்தான் இனி பொதுமக்கள் மத்தியில் எடுபடும்.

பொதுவாக, ஜனநாயக நாட்டில் யாரும் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல், தர்ணா, மனிதசங்கிலி போன்ற பலவகையான போராட்டங்கள் நடத்துவதில் தவறே இல்லை. ஆனால், உண்ணாவிரதம் என்பது தங்களை தாங்களே வருத்திக்கொள்வதுதான். மற்ற போராட்டங்கள் எல்லாம் அவர்கள் உணர்வை வெளிகாட்டும் வகையில் அமைந்திருக்கும். அது பொதுமக்களுக்கு பெரும் இடையூறையும் ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, ஒரு இடத்தில் மறியலோ, சாலைமறியலோ, தர்ணாவோ நடந்தால் நிச்சயமாக போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்குள்ளாகும். அவசரத்துக்கு பொதுமக்கள் எங்கேயும் போகமுடியாது. இத்தகைய நேரங்களில் அவர்கள் போராட்டக்காரர்களை குறைப்பட்டுக்கொள்வார்களே தவிர, அந்தப்போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள். இதனால்தான், ஜப்பான் நாட்டில் எந்தப்போராட்டம் என்றாலும், தாங்கள் பார்க்கும் பணியில் கூடுதல்நேரம் பார்த்து உற்பத்தியை பெருக்குவார்கள். சிலபோராட்டங்களில் ரத்ததானம் செய்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். அதுபோல, திருநெல்வேலி இப்போது வழிகாட்டிவிட்டது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் போராட்ட உணர்வோடு அந்தப்பணியை வேகமாக செய்வார்கள் என்பதால், இதையே ஒரு பாடமாகக்கொண்டு, இனிமேல் போராட்டம் நடத்துபவர்கள் எல்லோரும் இதுபோல ஆகாய தாமரையை அகற்றும் பணியில் இறங்கினால், பொதுமக்கள் ஆதரவும் கிடைக்கும். அரசாங்கத்தின் கவனத்தையும் ஈர்க்கும். அரசாங்கமும் தாங்கள் செய்யவேண்டிய வேலையை பொதுமக்கள் கையில் எடுத்துக்கொண்டு செய்கிறார்களே என்று உணர்ந்து, அவர்களையே ஆகாய தாமரையை அகற்றும் பணியில் ஈடுபடவைக்கும்.



PrevNext
March 2017
SuMoTuWeThFrSa26 27 28 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1






Tuesday, March 7, 2017

ஜெர்மனி - சென்னை விமானம் 7 மணி நேரம் தாமதம்




சென்னை: ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்திலிருந்து சென்னை வர வேண்டிய விமானம் 7 மணி நேரம் தாமதமாகியுள்ளது. இதனால், சென்னை விமான நிலையத்தில் 268 பயணிகள் காத்திருக்கின்றனர்.

சென்னை - பெங்களூரு விமானம் ரத்து

பதிவு செய்த நாள்

07மார்
2017 
08:21


சென்னை: சென்னையிலிருந்து இன்று காலை 7.40 மணிக்கு பெங்களூரு செல்ல வேண்டிய ஜெட் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இயந்திர கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.



பதிவு செய்த நாள்

06மார்
2017 
22:32

புதுடில்லி: கழிப்பறை நாற்றம் காரணமாக, தனியார் விமானத்தின் பாதை மாற்றப்பட்டு, ஐதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனத்தின் விமானம், சமீபத்தில், 188 பயணிகளுடன், கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து, டில்லிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், விமானிகள் அமரும் அறையிலிருந்து, கழிப்பறை நாற்றம் வந்ததால், ஐதராபாத் விமான நிலையத்தில், தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். விமானத்தின், கழிப்பறை நன்றாக சுத்தம் செய்யப்பட்டது. ஒரு மணி நேர தாமதத்திற்கு பின், விமானம் டில்லிக்கு புறப்பட்டு சென்றது.
ஜார்ஜியா மாணவன் சிகிச்சைக்கு நிதியுதவி

முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ள அறிக்கை: ஜார்ஜியா நாட்டின் தலைநகரான, திபிலிசியில் உள்ள, ஐரோப்பிய மருத்துவப் பயிற்சி பல்கலையில், மருத்துவம் படிப்பதற்காக, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் விஜயகுமார் சென்றார். அங்கு, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில், டிச., 8 முதல், சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மேல் சிகிச்சைக்காக, இந்தியா அழைத்து வர, 18 லட்சம் ரூபாய் செலவாகும் என, அங்குள்ள இந்திய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது பெற்றோர், அரசின் உதவியை நாடினர். அதன்படி, விஜயகுமாரை, இந்தியா கொண்டு வருவதற்கான செலவு, 18 லட்சம் ரூபாயை, அரசு ஏற்கும்.இவ்வாறு தெரிவித்து உள்ளார்.அங்கு, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில், டிச., 8 முதல், சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மேல் சிகிச்சைக்காக, இந்தியா அழைத்து வர, 18 லட்சம் ரூபாய் செலவாகும் என, அங்குள்ள இந்திய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது பெற்றோர், அரசின் உதவியை நாடினர். அதன்படி, விஜயகுமாரை, இந்தியா கொண்டு வருவதற்கான செலவு, 18 லட்சம் ரூபாயை, அரசு ஏற்கும்.

இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
ஸ்மார்ட் கார்டு' தயாரிப்பு பணி தீவிரம் : புதிய ரேஷன் கார்டு வழங்க தடை

தேனி: 'ஸ்மார்ட் கார்டு' தயாரிப்பு பணி தீவிரமாக நடப்பதால், புதிய ரேஷன் கார்டு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் முதல் ரேஷன் கார்டுக்கு பதிலாக 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது. இதற்காக ரேஷன் கார்டுடன் குடும்ப உறுப்பினர் ஆதார், அலைபேசி எண்கள் இணைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 

ஆதார் எண் இணைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது.

விடுபட்டவர்களுக்கு வாய்ப்பு : ஆதார் இணைக்காத ரேஷன் கார்டுகள் போலியானவை என கண்டறியப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் 20,000 முதல் 50,000 கார்டுகளுக்கு பொருட்கள் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. அக்கார்டுதாரர்களில் சிலர் தற்போது மனுச்செய்து தங்கள் கார்டுகளுடன் ஆதார் எண்ணுடன் இணைக்க வலியுறுத்துகின்றனர்.'பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவியில் மாவட்ட உணவு வழங்கல் அலுவலரின் 'பாஸ்வேர்டு' பயன்படுத்தி விடுபட்ட குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.
புதிய கார்டு நிறுத்தம் : 'ஸ்மார்ட் கார்டு' பணி தீவிரமாக நடப்பதால், கடந்த மாதத்துடன் புதிய ரேஷன் கார்டு வழங்க தடை விதிக்கப்பட்டது. இதனால் புதிய ரேஷன் கார்டு பிரின்ட் செய்யும் பணி நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது புதிய கார்டு கோரி 'ஆன்-லைனில்' மட்டுமே விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் பணி நிறைவடைந்த பின் பரிசீலனைக்குட்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கும் புதிய கார்டு வழங்கப்படும், என,

வழங்கல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மருத்துவ அறிக்கை வெளியீடு ஏன்? : சுகாதாரத்துறை செயலர் விளக்கம்

தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:ஜெயலலிதா மறைவு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அவரது மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளோம். டில்லி, எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை, சென்னை, அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை, அரசு அறிக்கை அனைத்தையும் பார்வையிடும் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது தெளிவாகிறது. தனிப்பட்ட நபரின் சிகிச்சை விபரத்தை வெளியிடக் கூடாது என்ற விதி உள்ள போதிலும், வதந்திகளை தவிர்க்க, பத்திரிகை செய்தி அளித்துள்ளோம். எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அறிக்கையை, முழுமையாக வெளியிட்டுள்ளோம். அரசு டாக்டர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த, சிகிச்சை முறையும் வெளியிடப்பட்டு உள்ளது. மாநில அரசின் கோரிக்கை அடிப்படையில், எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தனர். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் அளித்துள்ளோம்; நீதிமன்றத்திலும் அறிக்கை அளித்துள்ளோம். மறைந்த முதல்வருக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. தேவை அடிப்படையில், மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், சிகிச்சையை பாராட்டி உள்ளனர்; யாரும் குறை கூறவில்லை. நேரடியாக ஜெ.,வை பார்த்து சிகிச்சை அளித்தனர். அறிக்கையை, திருத்தம் செய்யவில்லை. 2016 டிச., 4 மாலை, 4:30 மணிக்கு, ஜெ.,வுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. டிச., 5ல், 'எக்மோ' சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்று எய்ம்ஸ் மருத்துவர்களும் வந்தனர். மருத்துவ முறைப்படி, முடிவுகள் எடுக்கப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நமது நிருபர் -

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...